FTC Forum

Special Category => பொது விவாதம் - General Discussions (Debates) => Topic started by: Yousuf on September 28, 2011, 09:54:44 PM

Title: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on September 28, 2011, 09:54:44 PM
இன்றைய காலகட்டத்தில் சினிமா என்றால் அறியாத சின்ன குழந்தை கூட இல்லை அப்படி பட்ட மிக பெரிய ஊடகமாக விளங்க கூடிய இந்த சினிமாத்துறை இன்று சமுதாயத்தின் முதுகெலும்பாக திகழ கூடிய இளைஞர்களை நல்வழி படுத்த பயன் படுகிறதா அல்லது வழிகெடுக்க பயன் படுகிறதா என்ற உங்கள் கருத்துகளை விவாதங்களை வரவேற்கிறேன். மேலும் இதன் மூலமாக மக்கள் நல்வழி பெறக்கூடும் என்பதற்காகவே இந்த தலைப்பு.

உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப என்னுடைய விவாதம் உங்களுடன் தொடரும் நண்பர்களே.
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Arya on September 29, 2011, 09:47:36 PM
கண்டிப்பா கெடுக்குதுன்னு தான் சொல்லுவேன்
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: thamilan on September 30, 2011, 09:01:19 AM
ஆரியா மாம்ஸ்
ஒரு வார்த்தையில பதில் சொல்லுறதுக்கு பேரு இல்ல.
எப்படி கெடுக்குது, எந்த வகையில கெடுக்குது என்று கொஞ்சம் விரிவா தான் சொல்லுங்களேன். அப்போ தானே எப்படி கெடுறாங்க என்று மத்தவங்களும் புரிஞ்சிக் கொள்ளுவாங்க.
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: ஸ்ருதி on October 01, 2011, 06:15:47 PM
கண்டிப்பா கெடுக்குதுன்னு தான் சொல்லுவேன்


Yea arya ve oru example :D
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on October 01, 2011, 07:00:59 PM
இப்படி ஒரு வரியில் எல்லோரும் முடிக்காமல் ஏன் கெடுக்கிறது எப்படி கெடுக்கிறது என்று விளக்கமா சொன்ன நல்ல இருக்கும் நபர்களே. எல்லா திரைப்படங்களும் இப்படி கேடுப்பதில்லையே நண்பர்களே. ஆகையால் இன்னும் விளக்கமாக நமது விவாதத்தை தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: ஸ்ருதி on October 01, 2011, 08:22:21 PM
சினிமா பார்த்து தான் கெட்டு போகணும் என்று இல்லை
சினிமாவும் ஒரு காரணமாக எடுத்து கொள்ளலாம்
ஒரு வருடத்துல வர100 படம் என்றால் அதுல வர 99 படம் கெட்டு போற போல தான் இருக்கு
படம் பார்க்க செல்வது பொழுது போக்காக மட்டுமே எடுத்துக்கணும்
அதை விட்டு அதையே வாழ்க்கைக்கு பாடமாக எடுக்க கூடாது
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: RemO on October 10, 2011, 03:47:28 AM
கண்டிப்பாக சீர் கெடுக்கிறது.
நமது கலச்சாரம் அழிய சினிமாவும் ஒரு காரணம் தான்.
இந்நாளில் வன்முறை, ஆபாசம் இவற்றை அதிகம் ஊக்குவிப்பது சினிமா தான்.
பள்ளி பருவத்தில் காதலை புகுத்தியதில் அதிக பங்கு சினிமாவிற்குத்தானே உண்டு.
விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்று சிந்தித்து புதுவிதமாக திருட ஆலோசனை தருவது திரைப்படங்கள் தான்.
இப்பொழுதெல்லாம் தவறு செய்பவர்களைத் தானே கதாநாயகனாக காட்டுகிறார்கள் அதை பார்த்து தவறு ஒன்றும் தப்பில்லை என்று எண்ணி பல பிஞ்சு உள்ளங்கள் சீர் கெட்டுகிடக்கிறது

சினிமா இன்றைய இளைஞர்களை மட்டுமல்ல நாளைய இளைஞர்களையும் சேர்ந்து கெடுக்கிறது
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: ஸ்ருதி on October 10, 2011, 07:27:25 PM
Remo

cinema-vum oru Kaaranam endru than sollalam...

cinema matume kaaranam illai enbathu enoda karuthu
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Global Angel on October 10, 2011, 08:23:27 PM
yah suruthiyoda karuththukala naan eettrukolkiren :)
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: RemO on October 11, 2011, 01:45:36 AM
ஸ்ருதி & ரோஸ் நீங்கள் கூறியது போல் சினிமா மட்டும் காரணம் அல்லாமல் இருக்கலாம் , ஆனால் சினிமா தான் முக்கிய காரணம் என்று நான் சொல்கிறேன்.

நீங்கள் மற்ற காரணங்கள் என்னவென்று கூறினால் விவாதிக்கலாம்
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: தாமரை on October 18, 2011, 07:56:06 PM
அட என்ன இப்படி சொல்லிட்டிங்கே  சினிமால உள்ள நல்ல விஷயங்கள ஏன் எடுக்க மாற்றிங்க சினிமால வார வில்லனையே ஏன் பார்க்கணும் ஹீரோ பாருங்க எவ்வளவு நல்லது பண்றார் ரோட்ல ஏதாவது தப்பு நடந்த தட்டிகேட்க்குரர்  அப்பா அம்மா மேல அளவு  கடந்த பாசம் தங்கை மேல அன்பு  இதெல்லாம் பின்பற்றுங்கோ  ;D ;D ;D
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: RemO on October 18, 2011, 08:48:26 PM
தாமரை சினிமாவில் நல்ல விஷயங்கள விட கெட்டவை தானே அதிகம் இருக்கு
நல்ல ஹீரோ எங்க இருக்கார் இப்போதெல்லாம், அடிதடி பண்ணுறதும் ரவுடி மாதிரி நடக்குரவங்க தானே ஹீரோ இப்ப

சினிமா நல்ல கருத்துக்களை தருவதை விட தீயவற்றை கொடுக்கிறது என்பது என் கருத்து
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: ஸ்ருதி on October 29, 2011, 10:30:14 AM
ஸ்ருதி & ரோஸ் நீங்கள் கூறியது போல் சினிமா மட்டும் காரணம் அல்லாமல் இருக்கலாம் , ஆனால் சினிமா தான் முக்கிய காரணம் என்று நான் சொல்கிறேன்.

நீங்கள் மற்ற காரணங்கள் என்னவென்று கூறினால் விவாதிக்கலாம்


கெட்டுப் போகணும் என்று நினைத்துவிட்டால் அதுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம்.

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்காக இருக்கணுமே தவிர அதையே வாழ்க்கையாகக் கொண்டு போகக் கூடாது..
எந்த சினிமாக்காரனும் என் சினிமாவை பார்த்து கெட்டு போ என்றும் இதுல இருப்பது தான் நிஜம் இதையே பின்பற்றுங்க என்று சொல்லலியே



Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on October 29, 2011, 11:23:37 AM
கேட்டுபோவதர்க்கு ஆயிரம் காரணம் இருக்கலாம் சுருதி. ஆனால் இன்று இளைஞர்கள் பெரும்பாலும் எதை மையமாக வைத்து கேட்டு போகிறார்கள் என்று தான் நாம் பார்க்க வேண்டும். இன்று அதிகமான இளைஞர்கள் கேட்டுப் போவதற்கு காரணம் இந்த சினிமா துறை தான் என்று சொன்னால் அது மிகை ஆகாது.

Quote
எந்த சினிமாக்காரனும் என் சினிமாவை பார்த்து கெட்டு போ என்றும் இதுல இருப்பது தான் நிஜம் இதையே பின்பற்றுங்க என்று சொல்லலியே

நீங்கள் சொல்வது நியாயம் தானா சினிமா காரர்கள் தங்களுடைய சுய லாபத்திற்காக சினிமா எடுக்கும்பொழுது எப்படி இந்த படத்தை பார்த்து கெட்டுபோ என்று கூறிவார்கள். அப்படி கூறினால் அவர்களுக்கு லாபம் கிடைக்காதே?

Quote
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்காக இருக்கணுமே தவிர அதையே வாழ்க்கையாகக் கொண்டு போகக் கூடாது..

நீங்கள் சொல்வதை என்றுகொண்டால் பொழுதுபோக்கு என்பதை எந்த அடிபடையில் நீங்கள் சொல்கிறீர்கள்.  அரை நிர்வனத்துடன் பாடல்கள் அமைப்பதும் அதை குடும்பத்தோடு கண்டுகளிப்பதும் தான் பொழுதுபோக்கா?

இப்படி மக்களை ஆபசதிர்ற்கு அடிமையாக்கி அவர்களை சிந்திக்க தூண்டாமல் முட்டாள்கள் ஆக்கும் சினிமாக்கள் தேவைதானா?

மக்களை நல்வழி படுத்த பெரிதும் பயன்படும் இந்த துறையை ஆபாசதிர்க்காக பயன்படுத்தி கொள்ளை லாபம் அடிக்கு சினிமா காரர்களுக்கு நாம் ஏன் ஆதரவு கொடுக்க வேண்டும்?

மது அருந்துவதும் புகை பிடிப்பதும் தான் கவ்ரவம் என்று நினைக்கும் அளவிற்கு இளைஞர்களை மயக்கி இருக்கும் சினிமா ஏன் அது தவறு என்று கூற முன் வர வில்லை? இப்படி பட்ட சுயநல வாதிகளை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்?

எப்படி எப்படி தவறு செய்யலாம்? எப்படி எப்படி திருடலாம்? பெற்றோர்கள் இல்லாத பெண் வீடிற்கு எப்படி போகலாம் என்று கற்றுக்கொடுக்கு கேவலமான இந்த சினிமா துறை தேவைதானா?

இதை விட கொடுமை கதாநாயகனாக இருந்து கொண்டு திருடுவாராம். இதை பார்க்கும் மக்கள் அதை ஆகா ஓகோ என்று பாரட்ட்வர்கலாம். என்ன ஒரு சிந்தனை வாய்ந்த மக்கள் நம் மக்கள். இவர்களின் சிந்தனையை மழுங்கடித்த இந்த சினிமா துறை தேவைதானா?

என்னுடைய கேள்விகளுக்கு பதிலை எதிர் பார்கிறேன் சுருதி உங்களிடம் மட்டும் அல்ல சினிமா பொழுது போக்கு என்று கூறுபவர்கள் அனைவரிடமும் இருந்து...!!!
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: ஸ்ருதி on November 09, 2011, 07:37:12 AM
inum mudiyalaiyaaaaaaaaaaaaaa
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on November 09, 2011, 09:51:18 AM
பதில் தருவீர்கள் என்று எதிர்பார்த்தால் இன்னும் முடியலையா என்று கேட்கிறீர்கள் சுருதி!
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: ஸ்ருதி on November 09, 2011, 09:48:57 PM
Niraiya sonna pola iruke
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on November 10, 2011, 12:20:28 PM
நீங்கள் நிறைய சொல்வீர்கள் என்று நாள் எதிர்பார்க்கிறேன்  சுருதி!
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Charu on November 11, 2011, 12:32:46 AM
kandippa  சீர்படுத்துகிறthu, eg last 2yrs movie la budget movies like glammour based and modern based movies vida low budget and real facts solra movies than hit.. ithula irundhe therila makkal(youngsters)nalla movies than ethirpakaranga and virumbaranganu...idhu kandippa valarchi than
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: RemO on November 11, 2011, 01:01:09 AM
Low budget padangala makkal rasikuranga charu ana athu avarkala nal vali paduthutha??
utharanama "subramaniyaburam" low budget padam than ana athula athikam kaatinathu vanmurai thana??

ipa vara entha padathula nal vali paduthuramari karuthu iruku ??
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Charu on November 11, 2011, 01:05:26 AM
 3 idiots,engeum eppothum,deiva thirumagan ,vagai sudava , angaditheru,madarasapatinam .................................innum neraiya irukku and present 7am arivu idhuku mela enna venum.... idhu ellamee unnakum pidikum nu ennaku therium so unnoda opinionah change pannnu
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: RemO on November 11, 2011, 01:44:09 AM
ha ha
ama enaku pidikum
aana athula 3idiots, vaagai suda vaa thavira matha padangal la ena karuthu iruku
nala padama athu enaku pidikum ana namai nalvali paduthutha

varusathula 2 nala padam vantha 200 mosamana padangal varuthey
apa athuku ena sola
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: ஸ்ருதி on November 11, 2011, 07:01:44 AM
haha charu cinema pathi start....so again continue----
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: RemO on November 11, 2011, 01:50:47 PM
Shur neenga continue nu solama neengaley continue panina nalarukum
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on November 11, 2011, 03:27:47 PM
புதிதாக மீண்டும் விவாதத்தை தொடங்காமல் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் தந்தால் விவாதம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்!

அதோடு இந்த விவாதத்தை நகைச்சுவை ஆக்காமல் சமுதாயத்துக்கு பயனுள்ளதாக அக்க முயற்சி செய்வோம்!
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Charu on November 12, 2011, 12:39:32 PM
ellathulaum nallathum irukku ketatum irukku remo nee en kettadha pakra... varushathula 2 padam vandhalum andha 2 padam thane unnaku pudichi irukku ....bhothidarman na pathi cinema thane solluchi athunaladhane namakku ellam therinjudhu ellana eppadi therium...
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: செல்வன் on November 15, 2011, 08:21:15 AM
சினிமா ஒரு சமூக எதிரி என சொல்லலாம்.

சினிமாவில் வரும் பெரும்பாலான காட்சிகள் இளைஞர்கள் மனதில் கேடுகளையே உண்டாகுகிறது. முக்கியமாக இளைஞர்களை கவரும்வகையில் எராளமான பாலியல் காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரு தவறை எப்படி மாட்டிகொள்ளாமல்  செய்ய வேண்டும் என்பதையும் சினிமா அழகான முறையிலே சித்தரித்து காட்டுகிறது. பாலியல் மற்றும் வன்முறை காட்சிகள் சிறார்களின் உள்ளதை பாழ்படுத்துகிறது என்றே கூறலாம்.இன்று உலகலவில் இயற்றப்படும், திரையிடப்பதும் சினிமாப் படங்கள், சின்னத்திரை தொடர் நாடங்கள், பாடல்கள் அனைத்தும் சமூகத்தின் கலாச்சாரங்களையும் நாகரிகங்களையும் அழித்தொழிக்க பிறந்த ஒரு ஊடகமாகும்.சமூகத்தை வழிகாட்ட மதங்கள், மார்க்கங்கள் பிறந்தது என்று சொல்லுவது போன்று அதே சமூகத்தை வழிகெடுத்த வந்தது தான் சினிமாத்துறை என்றால் அது 100 சதவீதம் உண்மையாகும்.

மக்கள் மனதை சீர்கெடுக்கும் காட்சிகளில் சில ...

எல்லா சினிமாப் படஙகளிலும் காமத்தைத் தூண்டும் அல்லது காதலைத் தூண்டும் பாடல் வரிகள் இருக்க வேண்டும். அந்த பாடல் வரிகளை செயலுருவில் காண்பிக்கும் காட்சிகளை நடிகனும் நடிகையும் நடித்துக் காண்பிப்பார்கள்.அதில் காட்சி தரும் நடிகை அல்லது நடிகைகள் முழு ஆபாசமாக, வெரும் இரண்டு பீஸ்களுடன் மட்டும் வருவார்கள்.
ஒரு பணக்காரனை அச்சுறுத்தி, பிலக்மைல் பண்ணி அவனது பணங்களை கொள்ளையடிப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கும் காட்சி

போதை பொருட்கள் பாவணை, புகைத்தல், மது அருந்துதல்.அந்த போதையில் பெண்களை கற்பழித்தல், பிறரை துன்புறுத்தல், கண்ணில் படும் மனிதர்களுடன் வீணாக சண்டையில் ஈடுபடுவது .
சினிமா பெரும்பாலும் கதாநாயகனை மையப்படுத்தியே எடுக்கப்படுகிறது. கதாநாயகன் எந்த குற்றம் செய்தலும் அது ரசிக்கப்படுகிறது.

இவைகளுக்கும் மேலாக கதாநயகன், கதாநாயகியாக நடிக்கும் வாலிபனும் யுவதியும் எப்படி ஒருவரை ஒருவர் கட்டியணைப்பது, முத்தமிடுவது, ஓரே போர்வையில் உறங்குவது போன்று காட்சிப் படுவது, நிர்வாணமாக குளிப்பது அனைத்தும் எந்த வகையில், எந்த மததில் அனுமதிக்கப் பட்டது? எந்த பெற்றோர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது?

சினிமாவின் பயன் என்று சொல்லவேண்டுமேயானால் , எந்த ஒரு கருத்தையும் மக்களிடத்தில் எளிதில் எடுத்து செல்லக் கூடிய ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக திகழ்கிறது.நல்ல கருத்துகள் சினிமாவில் சொல்லப்படும்பொழுது அது எளிதில் மக்களை சென்று அடையும்.ஆனால்  இன்றைய சினிமா  பணம் மற்றும் புகழுகாகவே எடுக்கப்படுகிறது . ஆகையால் நல்ல கருத்துக்கள் வர வாய்புகள் குறைவே. இதுதான் எனது கருத்து.

அன்புடன் செல்வன்.
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on November 15, 2011, 05:54:31 PM
நீங்கள் சொல்லும் அனைத்து கருத்துகளையும் நான் ஏற்றுகொள்கிறேன் செல்வன்!

நிச்சயமாக மக்களை நல்வழி படுத்த வேண்டிய இந்த திரைப்பட துறை வழி கெடுத்து அவர்களை சிந்திக்க விடாமல் தடுக்க கூடிய ஊடகமாகவே இருக்கிறது!

எதுவரை இந்த சினிமா சதையை நம்பி இருக்கிறதோ, ஆபாசத்தை காட்டுகிறதோ, வக்கிரங்களை ஊக்குவிக்கிறதோ, கலாசார சீரழிவை உண்டுபண்ணுகிறதோ, வன்முறைக்கு வித்திட்டுகிறதோ, அதுவரை இந்த சினிமாவை புறம் தள்ளிவிடுவோம்.

ஆகவே நிச்சயமாக சினிமா இன்றைய இளைஞர்களை வழி கெடுக்கத்தான் பயன்படுகிறது என்று கூறி நிறைவு செய்கிறேன்!


அன்புடன் யூசுப்!
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Global Angel on November 16, 2011, 02:50:47 PM
ipdi  solravangathan athikama film paarpaangalam  ;) :D ;D :D ;D

selvan  unga karuthukkal nanru....10 per antha filma paartha athula 4 peru kettu porangana micham 6 peru kedamathane irukaanga... appo thiraipadam avangalla thaakkatha undu panalya?... ethayum paarkur konathula iruku....

irunthaalum unga klaruthukal erkka kodiyavayagave irukirathu ... ;D
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: shaM on November 16, 2011, 06:56:09 PM
  chinima parkiravankalai poruthu than erukku  atha avanka   just   time   pass  sa eduthu kondal    athula  onum   nadakathu atha than life la  kondu  varappo  than  ethavathu  nadakirathu  .   kandippa  eppo   niraiya peru chinima la vara pola than panurankal   inraiya   izainjarkalai  chinima  seerkedukirathu nu  than sollalam
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: செல்வன் on November 17, 2011, 04:33:51 AM
ipdi  solravangathan athikama film paarpaangalam  ;) :D ;D :D ;D

selvan  unga karuthukkal nanru....10 per antha filma paartha athula 4 peru kettu porangana micham 6 peru kedamathane irukaanga... appo thiraipadam avangalla thaakkatha undu panalya?... ethayum paarkur konathula iruku....

irunthaalum unga klaruthukal erkka kodiyavayagave irukirathu ... ;D



இந்த விவாதத்தின் தலைப்பை சரியாக பார்ப்பது நன்று.
” இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?”

10 பேரில் 4  இளைஞர்கள் கெட்டு போகிறார்கள் . 6 இளைஞர்களை சினிமா சீர்படுத்துகிறதா ?6 இளைஞர்கள் சினிமாவால் உண்டாகும் சீர்கேட்டிலிருந்து தப்பித்து இருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டு என்ன இருக்கிறது ?.ஒட்டு மொத்தமாக பார்த்தால் இளைஞர்கள் சீர்கெட இந்த சினிமா காரணமாக இருக்கிறது. 10%கூட இளைஞர்களை சீர்படுத்த உதவியாய் சினிமா இல்லை.

Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Global Angel on November 17, 2011, 03:38:12 PM
neenal film paarkurathe ilaya.... paartha neenga kettu poitingala?....

kedanumnu ninaikuravanga filma paarthunnu illa etha paarthuvena kettu povanga  :)
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on November 17, 2011, 03:46:01 PM
எஞ்சேல்இங்கு கொடுக்க பட்டுள்ள தலைப்பிற்கேற்ப விவாதிக்கலாம் சினிமாவால்  இளைஞர்கள் சீர்கேடுகிரார்களா என்பது தான் தலைப்பு இதை தவிர்த்து இன்னும் எத்தனையோ வழிகளில் கேட்டுதான் போகிறார்கள் இல்லை என்று மறுக்க முடியாது ஆனால் கொடுக்க பட்டுள்ள தலைப்பின் படி விவாதத்தை தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

கொடுக்க பட்டுள்ள தலைப்பின் படி இளைஞர்கள் சீர்கேடுகிரார்கள இல்லையா என்பதை பேசுங்கள் எஞ்சேல்!
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Global Angel on November 17, 2011, 03:50:11 PM
yousuf nenga muthal naan sonatha sariya kavaninga... :)

naan koduka patta thalaipilathan nikkuren...

kettu poganumnu ninaikuravanga cinima (film) paarthuthan kettu poanumnu illai yetha paarthu venumnaalum kettu povargall..<<<<< ithu cinima pathi ilama pakatu veetu paati pathiya pesi iruken ::)

yethavathu solrathuku muthal nanraga padichutu comment panunga yosuf  :D
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on November 17, 2011, 04:00:46 PM
நீங்கள் இப்படி கூறினால் சினிமாவால் யாரும் கேட்டுபோகவில்லை என்று கூற முடியுமா அல்லது சினிமா யாரையும் கெடுக்க வில்லை என்று கூற முடியுமா எஞ்சேல்?

இருதிகாய உங்கள் கறுத்து என்ன சினிமாவால் இளைஞர்கள் சீர்கேடுகிரார்கள இல்லை சீர்படுத்த படுகிறார்களா?

முடிவை சொல்லுங்களேன்!

Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: செல்வன் on November 17, 2011, 04:06:46 PM
மறுபடியும் இந்த விவாதத்தின் தலைப்பை சரியாக பார்ப்பது நன்று.
” இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?”

இன்றைய இளைஞர்கள் "சினிமாவால் மட்டுமே கெட்டு போகிறார்கள் "என்று தலைப்பு கொடுக்கப்படவும் இல்லை , அதற்கேற்ப நான் என் கருத்தை சொல்லவும் இல்லை.

” இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?” என்ற தலைப்பிற்கு எனது கருத்து   சினிமா இளைஞர்களை சீர்கெடுக்கிறது என்பதாகும்.

தலைப்பை விட்டு விலகி செல்லும் கருத்துக்களும்,விவாதங்களும் இந்த விவாத மேடையை அர்த்தமற்றதாக ஆக்கி பலவீனமாக்கும் என்பது எனது கருத்து.
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Global Angel on November 17, 2011, 04:12:30 PM
cinim seer kedukinrathu enbatharku ungal vaatham ok...  cinima paarthu kettu poovargal enraal paarkathavargal kettu pogamala irukirarkal enbathu en vatham....

ithu epadi vera oru vaathathukul naan povathaga solukinrergal  ::)
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: செல்வன் on November 17, 2011, 04:44:06 PM
” இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?” இது தலைப்பு . இளைஞர்களை சினிமா  சீர்படுத்தவில்லை , சீர்கெடுக்கிறது என்று நான் கருத்து தெரிவித்து இருக்கிறேன்.


சினிமா என்ற வார்த்தையை வைத்து மட்டும் வாதிட கூடாது.  இளைஞர்களை சினிமாசீர்கெடுக்கவில்லை,சீர்படுத்துகிறது என்று கருத்துகளை ஆதாரத்துடன் கூறி வாதிடுங்கள் அல்லது இளைஞர்களை சினிமா சீர்படுத்தவில்லை , சீர்கெடுக்கிறது என்று வாதிடுங்கள் .

இதற்கு மாற்றமாக சினிமாவால்தான் இளைஞர்கள் கெடனும் என்று இல்லை எப்படி வேண்டுமென்றாலும் கெட்டு போகலாம் என்று வாதிடுவது எப்போது சரியாகும் ?( இன்றைய இளைஞர்கள் "சினிமாவால் மட்டுமே கெட்டு போகிறார்கள் "என்று என் கருத்தை சொல்லி இருந்தால் மட்டுமே இது சரி.)

கண்டிப்பாக விவாதத்தின் தலைப்பை விட்டுச்செல்லும் விவாதங்கள் இந்த விவாதத்தின் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கும். விவாதம் என்றால் எப்படிவேண்டுமென்றாலும் விவாதம் செய்வது மட்டுமே அல்ல. கொடுக்கப்பட்ட தலைப்புக்கு ஏற்றபடி விவாதம் செய்வதே சரி. இரண்டு முரணான கருத்துக்களில் ஒன்றை சரி என்ன சொல்ல உதாரணங்கள் வேண்டுமானால் எப்படியும் கொடுக்கலாம். ஆனால் விவாதத்தின் தலைப்பை விட்டு செல்வது முறையல்ல.
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Global Angel on November 17, 2011, 05:34:33 PM
Quote
இன்றைய இளைஞர்கள் "சினிமாவால் மட்டுமே கெட்டு போகிறார்கள் "என்று என் கருத்தை சொல்லி இருந்தால் மட்டுமே இது சரி.)

ungal vaathathai solrathuku naanga pathivukalai merkolla venduma... suthanthiramana karuthukalaithan veliyida mudiyum unkal karuthukalai epadi naan solla mudiyum  ;D ;D

cinimâ enrathu poluthu pokku amsam athai verum poluthu pokkaga paarthittu ponaal thapilaye... athil keduthal irukuthendu nenga solrenga.. athu pol namayum irukinrathe... thaai paasam thangai paasam family kooda anbu... samuga sinthanai ether neechal ipdi yevalavo nalla karuththukal irukkum pothu yen kuripaaga padathil vara koodiya 2 nimidam kooda needikatha kavarchi kaadchikalil kavanam seluththa veendum...?

sila palankal migavum suvayaaga irukkum athan vithai thol ponravai paarka menmayaga irukkumaanal avai saapda thagunthavai alla... naanal antha vithai tholai agatrivittu antha sathai paguthiyai saapduvathilaya rasiththu... apdi saapdalame... athai vittu tholaithan saapduven vithaiyaithan saapduven enru saaptu athanal varakoodiya theenkinai avarkalagave iluththu kondaal athu yaar thappu....?

poluthu pokukaaga kaattapadum intha thiraipadangal ... sila thevaiyatra kaadsip pathivukalai inaipaga kondu irupathu thavirka mudiyatha onraagi poi vidathu  athai othukki vittu athai polupokkagaa paarthaal entha seerkedum nerunkaathu enbathu en karuththu...

kaathalai katru kodukinrathu enkinreerkal .... kaathal enna ketta seyala?
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: RemO on November 18, 2011, 12:34:56 AM
Rose kaathal thavaru ila ana palliparuvaththil kaathal thavaruthaaney??
verum kaathal matumila inum pala kutrangala seiya cinime thoonduthu

ungal karuthu sari than thiruvaluvar sonathu pola kaniyiruka kaaiyai thernthedupathu pola than nala visayangalai vitu vitu ketathai thervu seivathu
aanal athu manitha iyalputhaana, kavarchiya nokithana manam sellum
neenga sonathu polavey nanum ketkuren makkaluku sola nalavisayangal pala irukurapa avarkal verum kavarchiyayum keta visayangalayum koduka vendiya avasiyam ena???

cinema la nala visayangal iruku nan ilanu solala ana keta visayankal atha vida athikama iruku
perumbanmaiya ketathu irukurapa atha nalathunu solalama??
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Global Angel on November 18, 2011, 01:35:22 AM
kaalaththin theevai athu remo....  viyabaram ... ellam nokaa kondu avanga panranga.... namakku thereyatha pala visayangal theriyapaduthum pothu intha thevayilatha vidayanalai othukalame... :)
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: RemO on November 18, 2011, 02:18:23 AM
kaalathin thevai nu makkala keta valila kondu polama
theriyatha katurathu ok ana therunchaka kudathathayum katurangaley

nan nala visayam ilanu solala ketathu athikama irukunu soluren
athai neenga oththukuringala ??
ketatha ethukuranga ila nalatha ethukuranga athu apuram parklam ipa itharku pathil solunga ketathu athikama iruka ila nalathu athikama iruka??
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Global Angel on November 18, 2011, 03:32:35 AM
kettathu nu unkaluku padurathu nallathaga enakku patta atha epdi eduthukurathu... ::)
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: செல்வன் on November 18, 2011, 04:14:58 AM
"குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்"
ஒருவனுடைய நல்ல குணத்தை ஆராய்ந்து அவனுடைய கெட்ட குணத்தையும் ஆராய்ந்து அவற்றுள் எது அதிகம் என்பதை அறிந்து எது அதிகமோ அதைக்கொண்டு நல்லவன் , கெட்டவன் என தீர்மானிக்க வேண்டும்.  இது வள்ளுவனின் வாய்மொழி .

அதே போல இங்கே கொடுக்கப்பட்ட தலைப்பான "இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?”  என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது இளைஞர்களை, சினிமா சீர்படுத்துவதை காட்டிலும் சீர்கெடுக்கிறது என்பது எனது கருத்து. இன்றைய இளைஞர்கள் "சினிமாவால் மட்டுமே கெட்டு போகிறார்கள் என்றோ அல்லது சீர்கெடுக்க மட்டுமே செய்கிறது என்றோ நன் இங்கே எந்த பகுதியிலும் குறிப்பிடவில்லை.

குறிப்பு :
முதலில் விவாத மேடையின் நியதிகளை அனைவரும் முழுமையாக தெரிந்து கொண்டு வாதிடுவது இந்த விவாதப்பகுதியை சிறப்பானதாக்கி வைக்கும் என்பது எனது கருத்து.கனிவான முறையில் கருத்துக்களை  தெரிவிக்கும் நற்பண்பு அனைவருக்கும் கிடைக்க கடவுள் அருள் புரியவேண்டும்.   மேலதிகமாக விதண்டாவாதமாக செய்யப்படும்,தலைப்புக்கு சம்பந்தமில்லாத  விவாதங்களின் தரத்தை தீர்மானம் செய்யும் பொறுப்பை இந்த விவாதப்பகுதிக்கு வந்து வாசிக்கும் வாசகர்கள் & விவாதம் என்றால் என்ன என்று முழுமையாக உணர்ந்த நண்பர்களிடமே ஒப்படைத்து இந்த தலைப்பில் என் விவாதத்தை இத்தோடு நிறைவு செய்கிறேன்.
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: thamilan on November 19, 2011, 12:30:34 AM
நானும் வரலாமா?
முதலில் விவாதம் என்பது தன் கருத்தை மட்டும் சொல்வது அல்ல. எதிரான கருத்தில், அதில் உள்ள பிழைகளை விலக்கிச் சொல்வதுமே விவாதமாகும். நான் எனது கருத்தை மட்டுமே சொன்னால் அது மேடைபேச்சாகி விடும்.
அடுத்தது,இந்த தலைப்பு ஒரு மனிதனையோ அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளையோ பற்றியது அல்ல.இது ஒட்டு மொத்த மனிதர்களை பற்றியது. ஆகவே, இதில் ஒரு சிலர் கெடுவதை வைத்தோ அல்லது ஒரு சிலர் திருந்துவதை வைத்தோ நியாயத்தை கூற முடியாது. எந்த பக்கம் அதிகம் பாதிப்பு இருக்கிறதோ, அந்த பக்கம் தான் தீர்ப்பு சொல்லப்பட வேண்டும்.

இந்த தலைப்பு சினிமா இளைஞர்களை சீர்படுத்துகிறதா இல்லை
சீரழிக்கிறதா? இளைஞர்கள் சீரழிய வேறு காரணங்கள் இருக்கலாம். அதற்கும் இந்த தலைப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.சினிமா சீரழிக்கிறதா இல்லயா. அதை மட்டும் வாதிடுங்கள்.

என‌து க‌ருத்தை சொல்லுகிறேன்.சினிமாவை பார்த்து சீர‌ழிப‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள் இருக்கிறார்க‌ள். சீர்ப‌ட்ட‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள். இதில் எது அதிக‌ம் என்று பார்த்தால் சீர்ப‌ட்ட‌வ‌ர்க‌ளே அதிக‌ம். சீர‌ழிப‌வ‌ர்க‌ள் ஒரு சில‌ர் தான்,

சாரு சொன்ன‌து போல‌ நிற‌ய‌ ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ள் வ‌ர‌த்தான் செய்கின்ற‌ன‌. அனேக‌ம் பேர் ப‌ட‌ம் பார்ப்ப‌து பொழுது போக‌. அந்த‌ 21/2 ம‌ணி நேர‌ம் ஜாலியா ப‌ட‌த்தை பார்த்து, விசிலடித்து விட்டு வெளியே வ‌ந்து அடுத்த‌ நாள் அந்த‌ ப‌ட‌த்தை ம‌ற‌ந்து விடுவார்க‌ள். இது தான் இய‌ற்கை. நான் ஒன்று கேட்கிறேன்,
இப்போ இங்கே யூசுப், ரெமோ,செல்வ‌ன், நான் த‌மிழ‌ன், ரோஸ், சாரு எல்லோரும் ப‌ட‌ம் பார்க்கிற‌வ‌ர்க‌ள் தான். இதில் யாராவ‌து ப‌ட‌த்தை பார்த்து சீர‌ழிந்த‌வ‌ர்க‌ள் இருக்கிறீர்க‌ளா? இல்லை என்றே நினைக்கிறேன்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு ப‌த‌ம்.
ஒரு சில‌ர் கெடுப‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள். அந்த‌ ஒரு சில‌ரை ப‌ற்றி நாம் விவாதிக்க‌ வேண்டிய‌தில்லை. எல்லா ப‌த‌த்திற்கும் எதிர்ப‌த‌ம் உண்டு.ஆக‌வே நாம் ஒரு சில‌ரை விட்டு விட்டு ப‌ல‌ரை ப‌ற்றி ம‌ட்டும் பேசுவோம்.
சாரு சொன்ன‌து போல‌ 3 idots நட்பின் அருமையை அழ‌காக‌ சொன்ன‌ ஒரு ப‌ட‌ம். இப்ப‌டி தான் ந‌ட்பு இருக்க‌ வேண்டும் என‌ எடுத்துக் காட்டிய‌ ப‌ட‌ம். இப்போதும் எப்போதும் ப‌ட‌ம் பார்த்த‌வ‌ன் வாக‌ன‌த்தை வேக‌மாக‌ ஓட்ட அஞ்சுவான். தெய்வ‌த்திரும‌க‌ன் ப‌ட‌ம் பாச‌த்தின் பிர‌திப‌லிப்பு.ஒரு ஆபாச‌மில்லலாத‌,ம‌ன‌தை நெகிழ‌ வைத்த‌ ப‌ட‌ம்.
செல்வ‌ன் இப்ப‌டி ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ளை பார்ப்ப‌தில்லை போல‌ தெரிகிற‌து. இப்போது வ‌ரும் ப‌ட‌ங‌ளில் 10ல் 1 ப‌ட‌ம் தான் நீங்க‌ள் கூறுவ‌து போல‌ ஆபாச‌ ந‌ட‌ன‌ங்க‌ளும் ஆபாச‌க் காட்சிக‌ளும் நிறைந்த‌ ப‌ட‌மாக‌ இருக்கும். அந்த‌ப் ப‌ட‌ங்க‌ள் ஒரு வார‌ம் கூட‌ திரையில் த‌ங்குவ‌தில்லை. இதில் இருந்து மோச‌மான‌ ப‌ட‌ங்க‌ளை பார்ப்ப‌தை ம‌க்கள் விரும்ப‌வில்லை என்று புரிய‌வில்ல‌யா?
ம‌ற்ற‌து, இந்த‌ சினிமாவால் இன்னும் ப‌ல‌ ந‌ன்மைக‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌. ப‌ட‌த்தில் ந‌டிக்கும் ந‌டிக‌ர்க‌ளின் ர‌சிக‌ர் ம‌ன்ற‌ங்க‌ளால் ர‌த்த‌தான‌ முகாம்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. நிறைய‌ ர‌சிக‌ர்க‌ள் ர‌த்த‌தான‌ம் செய்கிறார்க‌ள். இது சீர‌ழிவா?
ர‌சிக‌ர் ம‌ன்ற‌ங்க‌ள‌ல் கிராம‌ங்க‌ளில் சிர‌ம‌தான‌ வேலைக‌ள் ந‌டாத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌.இது நல்ல‌ விச‌ய‌ம் தானே.

ரெமோ, நீங்க‌ள் சொல்வ‌து போல‌ க‌தாநாய‌க‌ன் ச‌ண்டை போடுவ‌து யாரோடு? கெட்ட‌வ‌ர்க‌ளோடு தானே. கெட்ட‌வ‌ர்க‌ளை எதிர்க்க‌ வேண்டும் என்ப‌தை தானே அது உண‌ர்த்துகிற‌து.
எந்த‌ ப‌ட‌த்திலாவ‌து க‌தாநாய‌க‌ன் நல்ல‌வ‌ர்க‌ளுட‌ன் ச‌ண்டை போடுகிறானா?
அப்ப‌டி க‌தாநாய‌க‌ன் கெட்ட‌வ‌னாக‌ இருந்தாலும் அதுவும் ம‌னித‌ருக்கு ஒரு க‌ருத்தை சொல்லும் பாட‌மாக‌வே அமையும்.
சினிமாவால் சீர‌ழிவ‌தை சீர்ப‌டுவ‌தே அதிக‌ம். இந்த‌ அதிக‌ம் என்ற‌ வார்த்தை தான் தீர்ப்பு.
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on November 19, 2011, 07:35:51 AM
தமிழன் உங்கள் கருத்தை சிறப்பாகவும் தெளிவ்கவும் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்!

தமிழன் நீங்க எந்த அடிப்படையில் சினிமா இளைஞர்களை சீற்படுத்துகிறது என்று கூறுகிறீர்கள்? சீர்பெற்றவர்களின் புள்ளி விவரத்தை நீங்கள் எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?

நல்ல படங்கள் வரத்தான் செய்கிறது தமிழன் நான் இல்லை என்று ஒரு போதும் மறுக்க வில்லை. ஆனால் நல்ல படங்களை எத்தனை பேர் ரசிக்கிறார்கள் என்பதுதான் என் கேள்வி? உதரனத்திற்க்கு தமிழில் நிறைய நல்ல படங்களை சொல்லலாம் ஆனால் அந்த படங்களை எத்தனை பேர் ரசிக்கிறார்கள்?


Quote
நான் ஒன்று கேட்கிறேன்,
இப்போ இங்கே யூசுப், ரெமோ,செல்வ‌ன், நான் த‌மிழ‌ன், ரோஸ், சாரு எல்லோரும் ப‌ட‌ம் பார்க்கிற‌வ‌ர்க‌ள் தான். இதில் யாராவ‌து ப‌ட‌த்தை பார்த்து சீர‌ழிந்த‌வ‌ர்க‌ள் இருக்கிறீர்க‌ளா? இல்லை என்றே நினைக்கிறேன்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு ப‌த‌ம்.

இந்த இடத்தில் ஒரு திருத்தம் தமிழன். நான் படம் பார்கிறேன் என்று என்றாவது உங்களிடம் சொன்னேனா? நீங்கலாக  ஒரு அனுமானம் செய்ய கூடாது தமிழன். எனக்கு விவரம் தெரிந்து சிந்திக்க ஆரம்பித்ததில் இருந்து நான் திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் தமிழன். அதே போன்று நீங்கள் எடுத்த உடன் எல்லாரும் படம் பார்க்க கூடியவர்கள் தான் என்று கூற கூடாது அது உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.

Quote
இப்போது வ‌ரும் ப‌ட‌ங‌ளில் 10ல் 1 ப‌ட‌ம் தான் நீங்க‌ள் கூறுவ‌து போல‌ ஆபாச‌ ந‌ட‌ன‌ங்க‌ளும் ஆபாச‌க் காட்சிக‌ளும் நிறைந்த‌ ப‌ட‌மாக‌ இருக்கும்.

நீங்கள் கூறுவது போல் உங்களால் இதை ஆதரபூரவமாக நிரூபிக்க இல்யளுமா! ஆபாசம் இல்லாத ஆபாச பேச்சு இல்லாத 9 படங்களை உங்களால் சொல்ல முடியுமா அதாவது 10 -இல் 9 படங்களை கூற இயலுமா?

Quote
இதில் இருந்து மோச‌மான‌ ப‌ட‌ங்க‌ளை பார்ப்ப‌தை ம‌க்கள் விரும்ப‌வில்லை என்று புரிய‌வில்ல‌யா?

இப்படி நீங்கள் சொல்வதால் உண்மை ஆகிவிடுமா? நீங்கள் எந்த படத்தை மோசமான படம் என்று கூறுகிறீர்கள் கொஞ்சம் விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும்.

Quote
ம‌ற்ற‌து, இந்த‌ சினிமாவால் இன்னும் ப‌ல‌ ந‌ன்மைக‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌. ப‌ட‌த்தில் ந‌டிக்கும் ந‌டிக‌ர்க‌ளின் ர‌சிக‌ர் ம‌ன்ற‌ங்க‌ளால் ர‌த்த‌தான‌ முகாம்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. நிறைய‌ ர‌சிக‌ர்க‌ள் ர‌த்த‌தான‌ம் செய்கிறார்க‌ள். இது சீர‌ழிவா?

இது எங்கு நடக்கிறது என்று எனக்கு தெளிவாக கூறுங்கள். ரத்த தானம் நடக்கிறதா இல்லை அவர்களின் பெயரால் கூத்துகள் நடக்கிறதா என்று ஆதர பூர்வமாக நிருபியிங்கள்.

Quote
ர‌சிக‌ர் ம‌ன்ற‌ங்க‌ள‌ல் கிராம‌ங்க‌ளில் சிர‌ம‌தான‌ வேலைக‌ள் ந‌டாத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌.இது நல்ல‌ விச‌ய‌ம் தானே.

இப்படி சொல்வதால் நீங்க சொல்வது எல்லாம் உண்மையாக ஆகிவிட முடியாது தமிழன். எந்த கிராமத்தில் ரசிகர் மன்றங்கள் நல்ல செயல்களை செய்கிறார்கள் எனக்கு தெரிய வில்லை நானோ அல்லது என்னை சுற்றி இருபாவர்களோ அறியாத ஒன்றாக உள்ளது நீங்கள் கூறுவது.

Quote
ரெமோ, நீங்க‌ள் சொல்வ‌து போல‌ க‌தாநாய‌க‌ன் ச‌ண்டை போடுவ‌து யாரோடு? கெட்ட‌வ‌ர்க‌ளோடு தானே. கெட்ட‌வ‌ர்க‌ளை எதிர்க்க‌ வேண்டும் என்ப‌தை தானே அது உண‌ர்த்துகிற‌து.

கெட்டவர்களோடு கதா நாயகன் சண்டை போடுவது நல்லது என்று நீங்கள் கூறுகிறீர்கள் இப்படி ஒவ்வொருவரும் சட்டத்தை கையில் எடுத்தால் பிறகு எதற்கு ஒரு அரசாங்கம் காவல் துறை எல்லாம்? நீங்கள் கூறுவது நன்றாக இருக்கிறது ஆனால் நடை முறை சாத்தியம்மில்லை தமிழன்!

நீங்கள் சொல்லும் அணைத்து கருத்தும் நடை முறை சாத்தியம் இல்லாததாகவும் இன்றைய காலகட்டத்துக்கு பொருந்தாதாகவும் உள்ளது தமிழன். உங்கள் கருத்துகளை மறுபரிசீலனை செய்யுங்கள்.

உங்கள் பதிலை தொடர்ந்தது என் விவாதத்தை நான் மீண்டும் இறைவன் நாடினால் தொடர்கிறேன்!
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: thamilan on November 19, 2011, 09:25:39 AM
தமிழன் நீங்க எந்த அடிப்படையில் சினிமா இளைஞர்களை சீற்படுத்துகிறது என்று கூறுகிறீர்கள்? சீர்பெற்றவர்களின் புள்ளி விவரத்தை நீங்கள் எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?

யுசூப்
இதையே நான் உங்க‌ கிட்ட திருப்பி கேட்கிறேன். சீர்கெட்டவவர்களின் பெயர்களை புள்ளி விபரத்துடன் அவர்கள் பெயர் விலாசம் எல்லாம் உங்களால் தர முடியுமா?
நம்ப க்கு வரவங்க‌ கிட்டயே கேட்டுப்பாருங்க,எத்தனை பேர் சீரழிந்து போனாங்க என்று. பதில் பூச்சியமாக தான் இருக்கும்.

 ப‌ட‌ம் என்ப‌து ஒரு பொழுதுபோக்கு சாத‌ன‌ம்.அதால‌ திருந்திர‌வ‌ங்க‌ள‌ விட‌ கெட்டுப் போர‌வ‌ங்க‌ குறைவு.
எந்த‌ ப‌ட‌த்தை பார்த்துவிடாவ‌து அதை பார்த்த‌ ப‌ச‌ங்க‌ அதில் வ‌ர‌து போல‌ வீதியில‌ ச‌ண்டை போடுறாங்க‌ளா?
கொள்ளை அடிப்ப‌வ‌ர்க‌ள். அடாவ‌டித்த‌ன‌ம் ப‌ண்ணுவ‌வ‌ர்க‌ள், க‌ற்ப‌ழிப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் ப‌ட‌த்தை பார்த்து விட்டு தானா ப‌ண்ணுகிறார்க‌ள்?


இந்த இடத்தில் ஒரு திருத்தம் தமிழன். நான் படம் பார்கிறேன் என்று என்றாவது உங்களிடம் சொன்னேனா? நீங்கலாக  ஒரு அனுமானம் செய்ய கூடாது தமிழன். எனக்கு விவரம் தெரிந்து சிந்திக்க ஆரம்பித்ததில் இருந்து நான் திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் தமிழன். அதே போன்று நீங்கள் எடுத்த உடன் எல்லாரும் படம் பார்க்க கூடியவர்கள் தான் என்று கூற கூடாது



படமே பார்க்காம அது சரி இல்லை அதால இளைஞர்கள் கெட்டுப் போராங்க என்று எப்படி சொல்லுறீங்க யூசுப்?
முதலில் உங்களுக்கு இந்த விவாதத்துல பங்கேற்கும் அடிப்படை தகுதியே இல்ல.ஒன்றை பார்க்காம‌ல் அனுப‌விக்காம‌ல் அது ச‌ரியில்லை என்று எப்ப‌டி உங்களால‌ சொல்ல‌ முடியும்?




நீங்கள் கூறுவது போல் உங்களால் இதை ஆதரபூரவமாக நிரூபிக்க இல்யளுமா! ஆபாசம் இல்லாத ஆபாச பேச்சு இல்லாத 9 படங்களை உங்களால் சொல்ல முடியுமா அதாவது 10 -இல் 9 படங்களை கூற இயலுமா?


யூசுப் உங்க‌ கேள்வி வேடிக்கையா இருக்கு.ப‌ட‌மே பார்க்காத‌ உங்க‌ளுக்கு நான் ப‌ட‌ங்க‌ளின் பெய‌ர்க‌ளை சொல்லி என்ன‌ ப‌ய‌ன்?இருந்தாலும் சொல்கிறேன்.

1) தெய்வ‌த்திரும‌க‌ன்
2) இப்போதும் எப்போதும்
3) 7ம் அறிவு
4) 3 இடிய‌ட்ஸ்
5) வாகை சூட‌ வா
6) ச‌துர‌ங்க‌ம்
7) ப‌ச‌ங்க‌
8)பேராண்மை
9)சிங்க‌ம்

நான் 9 ப‌ட‌ங்க‌ளை சொல்லிவிட்டேன். நீங்க‌ மோச‌மான‌ ப‌ட‌ங்க‌ள் என்று ஒரு 8 ப‌ட‌ங்க‌ளை சொல்லுங்க‌. ப‌ட‌மே பார்க்காம‌ல் எப்ப‌டி சொல்ல‌ப் போறீங்க‌ யூசுப்? ம‌த்த‌வ‌ங்க‌ கிட்ட‌ கேட்டா?

யூசுப் மச்சி இ ந்த‌ ப‌ட‌ங்க‌ளின் பெய‌ர்க‌ளை கூட‌ நான் மிக‌வும் யோசிச்சி தான் எழுதினேன். ப‌ட‌த்தை பார்த்து விட்டு அதை யாரும் ம‌ன‌தில் வைத்திருப்ப‌தில்லை. ஒவ்வொருத்த‌னுக்கும் ஆயிர‌ம் பிர‌ச்ச‌னை இருக்கு, அதை ம‌ற‌ப்ப‌த‌ற்காக‌த்தான் பொழுதுபோக்கா ப‌ட‌ம் பார்க்கிறார்க‌ள். அடுத்த‌ நாள் அதை ம‌ற‌ந்து விடுவார்க‌ள்.



இப்படி சொல்வதால் நீங்க சொல்வது எல்லாம் உண்மையாக ஆகிவிட முடியாது தமிழன். எந்த கிராமத்தில் ரசிகர் மன்றங்கள் நல்ல செயல்களை செய்கிறார்கள் எனக்கு தெரிய வில்லை நானோ அல்லது என்னை சுற்றி இருபாவர்களோ அறியாத ஒன்றாக உள்ளது நீங்கள் கூறுவது.


யூசுப் ம‌ச்சி நீங்க‌ ப‌ட‌ம் தான் பார்க்கிற‌தில்ல‌ என்று சொன்னீங்க‌. ப‌த்திரிகைக‌ள் செய்திக‌ள் கூட‌ பார்க்கிற‌தில்லை போல‌ தெரிகிற‌து.
இப்போ ச‌மீப‌த்தில் கூட‌ அஜித் ர‌சிக‌ர் ம‌ன்ற‌த்தாலும் க‌ம‌ல் ர‌சிக‌ர் ம‌ன்ற‌த்தாலும் ர‌த்த‌தான‌ முகாம்க‌ள் ந‌ட‌த்தினார்க‌ள். நான் நெட் நெந்ச்ல‌ பார்த்தேன். இப்ப‌டி புள்ளி விப‌ர‌த்துட‌ன் கேட்பீர்க‌ள் என்று தெரிஞ்சிரு ந்தா நான் அதை நோட் ப‌ண்ணி வ‌ச்சிருப்பேன்.
முடிஞ்சா அடுத்த‌ ப‌திலில் அதை தாரேன்

உங்க‌ எல்லா கேள்விக‌ளுக்கும் ப‌தில் சொல்வேன். ஆனால் நேர‌ம் போதாது. அடுத்த‌ த‌ட‌வை எதிஉக்கும் சேர்த்து சொல்கிறேன்
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on November 19, 2011, 03:21:57 PM
உங்கள் வாதம் நன்று தமிழன்!

சினிமாவால் சீர் கட்டவர்களின் புள்ளி விவரம் கேட்டீர்கள் இதோ தருகிறேன்!

பிஞ்சுகளின் நெஞ்சங்களில் நல்லொழுக்கங்களும் கற்பிக்கப்பட்டு ஒழுக்கமுடயவராய் திகழவேண்டியவர்கள் திரைப்படங்களில் சிக்கி சின்ன பின்னமாக உருமாறுகிறார்கள். கல்வி பயிலச் செல்லும் சிறார்கள் புத்தகப் பையிலும், நோட்டுகளின் அட்டைகளிலும் நடிகர், நடிகைகளின் கவர்ச்சி படங்களை காண முடிகிறது. சிறு குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத் தர வேண்டிய பெற்றோர்கள் கூட வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம்" குழந்தைகளிடம் ஏதாவது சினிமாப் பாடலை பாடச் சொல்லி வேடிக்கை பார்த்து மகிழும் அவநிலைக்கு காரணம் நிச்சயமாக டி.வி மற்றும் திரைப்படங்களின் தாக்கம்தான். அவர்கள் பார்க்கும் போலிக்காட்சிகளை அவர்களது நடைமுறையிலும் செயல்படுத்துவதை பார்க்கிறோம்.

இந்த கட்டத்தில் "குமுதம்" வாசகி விஜயலட்சுமி என்பவரின் செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர் கூறுகிறார், "சன் டி.வியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட "இந்திரா" என்ற தொடரில் வரும் ஒரு கொலைக் காட்சியை நாங்கள் குடும்பத்துடன் பார்த்தோம். அப்போது எனது 5 வயது மகளும், ஒன்றரை வயது மகனும் உடன் இருந்தனர். மறுநாள் காய்கறி நறுக்கும் சமையலறைக்கு நான் சென்ற போது எனது ஒன்றரை வயது மகன் கையில் கத்தியை எடுத்துக் கொண்டு ஊ.. ஆ.. என்று டி.வியில் வந்ததைப் போன்று தன் அக்காவை மிரட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். தொலைக்காட்சியின் விளைவு! கடவுளே!.." என்று தொலைக்காட்சியின் விபரீதத்தை வர்ணிக்கிறார்.
(நன்றி : குமுதம்

இது படிப்பதற்கு சாதாரண செய்தியாக இருந்தாலும் எந்த அளவுக்கு இந்த தொலைக்காட்சித் தொடர்கள் பச்சிளங் குழந்தைகளின் நெஞ்சங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு இது ஓர் சாட்சி!

சமீப காலமாக சிறுவர்கள் ஓடிப்போகும் காட்சிகள் நடந்தேறுகின்றதே இதற்குக் காரணம் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளின் பாதிப்புகள். பள்ளியில் பயின்று கல்லூரி கடந்து மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் உருவாக வேண்டிய பாலகர்கள் சினிமா மாயையில் சிக்கி நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் வீட்டை விட்டு வெளியேறி திக்கற்றவர்களாக திரியும் காட்சிகள் எதைக் காட்டுகிறது? இதிலிருந்து இந்த ஊடகங்கள் நம் குழந்தைகளை வழிகேட்டிற்கு அழைத்துச் செல்கிறது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

"தினமணி" நாளிதழின் வாசகர் கடிதம் ஒன்றினை இங்கு மேற்கோள் காட்டினால் பொருத்தமானதாக இருக்கும். "வளர் இளம் பருவத்திடம் ஓடிப்போகும் கலாச்சாரம் பரவலாகக் காணப்படுவதற்கு சின்னத் திரைத் தொடர்களும், வண்ணத்திரைகளும் தான் காரணம். பெரும்பாலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில்தான் இந்த ஓடிப்போகும் நிகழ்வு நடைபெறுகிறது. வறுமையும், பண்பாட்டுச் சீரழிவும் காணாமல் போனால்தான் இந்த சமுதாயத்தில் ஓடிப்போகும் கலாச்சாரம் இல்லாத நிலை உருவாகும்.
"சோம நடராசன் (கரூர்) " நன்றி : தினமணி (28-05-2004)

சினிமாவில் வருவதைப் போன்று உயர்மட்ட வாழ்க்கை வேண்டும் என்ற போலி ஆசையில் தனது வாழ்வையே சூனியமாகும் அவல நிலை உருவாகுவதற்கு சின்னத் திரைத் தொடர்களும், வெள்ளித்திரைகளும் அதிக அளவிற்கு காரணமாக இருக்கின்றன.

குழந்தைப் பருவம் பாழ்பட இந்த தொலைக்காட்சி தொடர்களின் வியாபகம் எந்த அளவிற்கு வேரூன்றியிருக்கிறது என்பதை இன்னும் விரிவாக நோக்க "ஒற்றுமை" இதழில் வெளிவந்த "தொலைக்காட்சிகளில் தொலைந்து போகும் எதிர்கால சமுதாயம்" என்ற ஆய்வுக் கட்டுரையை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

 ஒவ்வொரு வாரமும் சராசரியாக 1680 நிமிடங்கள் ஒரு குழந்தை திரைப்படங்கள் பார்ப்பதில் செலவழிக்கிறது. ஆனால் தன் பெற்றோருடன் பயனுள்ள விஷயங்களை குறித்துப் பேச 38.5 நிமிடங்கள் மட்டுமே ஒரு குழந்தை பயன்படுத்துகிறது. என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


ஒரு வயதுக் குழந்தை திரைப்படங்கள் முன் தினமும் 6 மணி நேரத்தைக் கழிக்கிறது. ஆண்டொன்றுக்கு 900 மணி நேரத்தை சிறுவர்கள் பள்ளிக் கூடங்களில் கழிக்கின்றனர். ஆனால் அவர்கள் திரைப்படங்கள் பார்க்க எடுத்துக் கொள்ளும் நேரம் 1023 மணி நேரங்கள். உயர்நிலைப பள்ளியை முடிக்கும் மாணவன் ஒருவன் 19,000 மணி நேரம் தொலைக்காட்சியை பார்த்த அனுபவம் உடையவனாய் அப்பருவத்தை அடைகிறான். இதனால்தான் நாம் தொலைக்காட்சியை நேரத்தை கொல்லும் இரத்தக் காட்டேறி என வர்ணிக்கிறோம்.

 

18 வயதை அடைவதற்குள் ஒரு சிறுவன் திரைப்படங்கள் வழியாக இரண்டு இலட்சம் வன்முறைக் காட்சிகள் பார்த்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 11 வயதை அடைவதற்குள் 8,000 கொலைகளையும் இன்னும் 10,000 வன்முறைகளையும் ஒரு சராசரி குழந்தை பார்த்து விடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


அமெரிக்காவில் 36,000 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் வன்முறையை திரைப்படங்களில் பார்ப்பதற்கும், செயலில் இறங்குவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் திரைப்படங்களை சிறுவர்கள் எவ்வித உணர்வும் இல்லாமல் பார்ப்பதில்லை என்றும் தாங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சியையும் தமது ஆழ் மனதில் உள்வாங்கிக் கொள்கிறார்கள். இதனடிப்படையில் அவர்கள் செயல்களில் இறங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிஜத்திற்கும், நிழலுக்கும் இடையே எவ்வித வேறுபாட்டையும் இவர்களால் காணமுடிவதில்லை என்றும், திரைப்படங்கள் ஏற்படுத்திய பாதிப்புகளால் வாழ்க்கை பயங்கரமானதாகவும் இருள் சூழ்ந்ததாகவும், கவலைக்குரியதாகவும் ஆகிவிடுவதாக பெருவாரியான குழந்தைகள் கருதுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


திரைப்படங்களுக்கு அடிமையானவர்கள் போதைப் பொருள்களுக்கும் அடிமையானவர்கள் போன்றுதான் நடந்து கொள்கிறார்கள். ஆனால் திரைப்படங்கள் போதைப் பொருள்களை விட கொடூரமானது. அது மனிதனின் மனதை பாழாக்கி வன்முறை மீது நாட்டம் கொள்ள வைத்து தனி மனிதரையும், நாட்டையும், சமுதாயத்தையும் அது அழிக்கின்றது. திரைப்படங்கள் வளர்ந்து வரும் தலைமுறையின் மனநிலை மட்டுமின்றி உடல் நலனையும் வெகுவாகப் பாதிக்கின்றது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அளவுக்கதிகமாக திரைப்படங்கள் பார்ப்பதால் பள்ளி மாணவர்களால் குறைந்த பட்ச அளவுகூட உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட முடியவில்லை.

   பெரியவர்களின் அந்தரங்க நடவடிக்கைகளெல்லாம் சிறுவர்களுக்கு அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் சமூக துரோகிகளாகவும் திரைப்படங்கள் விளங்குகிறது. பெரியவர்கள் சண்டை போட்டுக் கொள்வதையும், மனமுடைந்து கண்ணீர் விடுதல், கொலை, பாலியல் உறவுகள் கொள்வது மற்றும் வன்முறைகள் போன்றவற்றை குழந்தைகள் திரைப்படங்களில் காண்கிறார்கள். பெரியவர்களின் பொறுப்பற்ற ஒழுக்கக் கேடான வாழ்க்கைகளை தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் பார்க்கும் குழந்தைகள் அவர்களை தவறுகளுக்கு முன்னுதாரணமாக்குகிறார்கள். பெரியவர்களின் அந்தரங்கங்கள் அம்பலப்படுத்தப்படுவதினால் குழந்தைகள் கள்ளம் கபடமற்ற தன்மையை இழக்கின்றனர்.

பசுமரத்து ஆணி போல திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் போலியான நிகழ்வுகள் உண்மையான வாழ்வில் நடப்புகளாக்க பிஞ்சு நெஞ்சங்களில் பதிவாகின்றன. இதனால் இவர்களின் எதிர்காலம் பாழ்படும் அளவிற்கு நஞ்சு விதைகள் விதைக்கப்படுகின்றன. இந்த அபாயத்தை உணராமல் செயற்கைக் கோள் அலைவரிசைகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகி மனித வாழ்வின் நிலையை பெரும் அபாயத்திற்கு அழைத்துச் செல்கிறது. (நன்றி : ஒற்றுமை, ஜுன்-2001)

தமிழன் ஒரு பானை சொத்திற்கு ஒரு சோறு பதம் என்ற அடிப்படையில் இதை சாட்சிகள் போதும் என்று நினைக்கிறன்!

இந்த அளவிற்கு இளைஞர்களை சிறுவர்களையும் சீர்கெடுக்கும் திரைப்படங்களை எப்படி சரி என்று கூற முடியும்?

உங்களுடைய முதலாவது கேள்விக்கு இந்த பதிலே போதுமானது என்று கருதுகிறேன்!


Quote
படமே பார்க்காம அது சரி இல்லை அதால இளைஞர்கள் கெட்டுப் போராங்க என்று எப்படி சொல்லுறீங்க யூசுப்?
முதலில் உங்களுக்கு இந்த விவாதத்துல பங்கேற்கும் அடிப்படை தகுதியே இல்ல.ஒன்றை பார்க்காம‌ல் அனுப‌விக்காம‌ல் அது ச‌ரியில்லை என்று எப்ப‌டி உங்களால‌ சொல்ல‌ முடியும்?

தமிழன் நான் இது வரை படமே பார்த்தது இல்லை என்று கூற வில்லையே நீங்க நான் கூறியதை சரியாக பாருங்கள்!

எனக்கு விவரம் தெரிந்து சிந்திக்க ஆரம்பித்ததில் இருந்து நான் திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் தமிழன்.

இந்த இடத்தில் எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து நிறுத்தி விட்டேன் என்று தான் கூறி இருக்கிறேன் திரைப்படமே பார்கவில்லை என்று கூற வில்லை தமிழன்!

என்னுடைய கல்லூரி பருவத்தின் மூன்றாம் ஆண்டு வரை நான் திரைப்படங்கள் பார்த்துள்ளேன். இந்த ஒன்று போதாதா நான் இதை பற்றி விவாதிக்க?

நீங்கள் சொல்வதை பார்த்தல் விபச்சாரம் செய்தவன் தான் விபச்சராம் பற்றி பேச வேண்டும் எனபது போலவும் திருடியவன் தான் திருட்டை பற்றி பேச வேண்டும் என்பதை போலவும் அல்லவே உள்ளது இது எப்படி சரியான உதரணாமாக ஆகா முடியும்?


Quote
1) தெய்வ‌த்திரும‌க‌ன்
2) இப்போதும் எப்போதும்
3) 7ம் அறிவு
4) 3 இடிய‌ட்ஸ்
5) வாகை சூட‌ வா
6) ச‌துர‌ங்க‌ம்
8)பேராண்மை
9)சிங்க‌ம்

நீங்கள் சொல்லி இருக்க கூடிய படங்களை பார்த்தால் வியப்பாக உள்ளது!

இந்த படங்களில் எல்லாம் ஆபாச நடனங்கள் இல்லை என்று சொல்ல வருகிறீர்கள? அல்லது அது கொஞ்ச நேரம் தானே வருகிறது அதனால் ஒன்றும் இல்லை என்று சொல்ல வருகிறீர்கள?

அப்படி நீங்கள் அதை சரி கண்டால் அந்த நடிகைகளை அரைகுறை ஆடையோடு பார்ப்பது கூடும் என்றால் நாம் நம் சகோதரிகளை அப்படி பார்ப்பது போல் பார்போமா? பார்க்கத்தான் நினைப்போமா? அல்லது மற்றவன் தவறான எண்ணத்தோடு பார்க்கத்தான் விட்டு விடுவோமா?

அப்படி என்றால் நம் சகோதரிகளுக்கு ஒரு நியாயம் மற்ற பெண்களுக்கு ஒரு நியாயமா?

இதுதான் நீங்கள் கூறும் பொழுதுபோக்கா?

இதே போன்று நமது சகோதரிகளை மற்றவன் பொழுதுபோக்கிற்காக பார்கிறேன் என்று சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்?

இன்றைய இளைஞர்கள் புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும்  சமுதாயத்தில் ஒரு உயர்ந்த செயலாக செய்வதற்கு காரணம் என்ன இதை யாரை பார்த்து பெரும்பான்மையான இளைஞர்கள் கற்றுகொண்டார்கள் இந்த சினிமா தானே காரணம்?

இதை எப்படி உங்களால் மறுக்க முடியும்? இப்படி இளைஞர்களை வழிகெடுக்க கூடிய ஊடகத்தை எப்படி சரி என்று கூற முடியும்?

ஒரு பெண்ணை எப்படி கவரலாம் என்று சினிமாவில் கட்டுவதை பார்த்து எத்தனை இளைஞர்கள் இதை செய்கிறார்கள் இதெல்லாம் உங்களுக்கு தெரிய வில்லை என்றால் நீங்கள் மிக குறிகிய வட்டத்திற்குள் இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை தமிழன்.

இதற்க்கு மேலும் உதரணங்களை கூற முடியும் இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறன்.
 
ஆகவே இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை என்று கூறி உங்கள் பதிலை எதிர்பார்த்து நிறைவு செய்கிறேன்!

மீண்டும் விவாதத்தை தொடர்வோம் இறைவன் நாடினால்!

Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: ஸ்ருதி on November 19, 2011, 05:10:31 PM
இந்த விவாதத்தில் என் கருத்துகளை கூற விரும்புகிறேன்  :)

நான் ஆரம்பத்தில் சொன்னது போல இன்றைய சினிமா நிச்சயம் நம் இளைய சமுதாயத்தை கெடுத்து கொண்டு தான் இருக்கிறது.

இல்லை என்று சொல்லுவது சரியானதாக எனக்கு தோன்ற வில்லை...

நல்ல படம் என்று உதாரண காட்டிய படங்களில் எல்லாம் மசாலா  கலவை இல்லாத படம் என்று சொல்ல முடியுமா?? அன்றாட  வாழ்க்கைக்கு ஒத்து வராத காட்சிகளை வைத்து படம் எடுப்பதே தவறு அதிலும் கதாநாயகன் நான்கு பேரு கூட சண்டை போட்டு அநியாயத்தை  தட்டி கேட்பதால் அந்த படம் நல்லது என்று ஆகிவிடுமா??
வன்முறை வேண்டாம் என்று சொல்லும் நாம் சினிமாவில் வன்முறையை ரசிப்பதே தவறு தானே..

ஆடை குறைப்பு, ஆபாசம் ,  வக்கிர காட்சிகள், குற்றத்தை செய்ய தூண்டும் வகையில் வரும் எல்லா காட்சிகளும் இல்லாத ஒரு படம் இருந்தால் அது நிச்சயம் 100  நாள் ஓடி இருக்க வாய்ப்பே இல்லை. பாரதியார் , காமராஜர், பெரியார்.. காஞ்சிபுரம், இப்படி வந்த மிக சிறந்த படங்களை எதனை பேரு திரை அரங்கத்தில் சென்று பார்த்து இருப்பாங்க??
தேசிய விருது கிடைக்கும் போது தான் சிலருக்கு இந்த படங்களை பற்றியே தெரிந்து இருக்கும்..நல்ல தரமான படங்களின் ஆயுள் நாள் என்று சொல்லபோனால 50 நாள் கூட வராது ..திரைக்கு வந்து சில நாட்களே ஆன என்று தொலை காட்சியில் போட்டால் வேற வழி இல்லாமல் பார்த்தல் மட்டுமே உண்டு.

ஒரு படத்தின்   நகைச்சுவை காட்சி:-

Tea கடையில் வேலை செய்யும் ஒரு சிறுவன் ஆபாச போஸ்டர்-அ கருப்பு மையிட்டு அழிப்பது போல காண்பித்து அருகில் இருக்கும் இளைஞர் . அந்த சிறுவனை பார்த்து நீ ஒரு குட்டி விவேகனந்தர்....அப்டின்னு பாராட்டுவாங்க...உடனே அந்த பையன்,,, சொல்லுவான் நேத்து தான் இந்த படம் பார்த்தேன் ஒரு bit  சீன் கூட இல்லை..என்னை போல யாரும் போஸ்டர் பார்த்து ஏமாற கூடாதுன்னு தான் அதை அழிகிறேனு என்று சொல்லுவான்....

இதை பார்த்து சிரிக்காதவர்கள் யாரும் இருக்காங்களா???

இது வேதனை பட வேண்டிய விஷயம் இல்லையா??

படிக்கிற பையன tea கடையில வேலை செய்வது போல காண்பித்து அவன் வயதுக்கு தேவை இல்லாத காட்சியை நகைச்சுவை என்ற பெயரில் ஆபாசத்தை புகுத்தி அதை எல்லோரும் அன்றாடம்  பார்க்கும் தொலைகாட்சியில்  அடிகடி ஒளிபரப்பி வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளும் கெட்டு போற  வகையில் தானே  இந்த சினிமா நகைச்சுவை காட்சிகள் இருகின்றது

இன்னொரு படத்தில் பெண் வேடம் போட்டு ஒரு நடிகர் குளத்தில் குளிக்க அவரை பலவந்தமாக கெடுக்க முயலுவது போல காட்சி இருக்கும்..
அதை சொல்லவே அருவருப்பாக இருக்கு....இவை எல்லாம் நகைச்சுவைகளா??

இன்றைய மக்களை மனமாற்றம் ஆகிட்டாங்க நல்லா படத்தை தான் ரசிபாங்கனு சொல்லுறீங்க இத்தகைய காட்சிகளை எல்லாம் இந்த மக்களும் ரசித்தவர்கள தானே...

எல்லா மக்களிடமும் நல்ல மனமாற்றம் வந்ததை சொல்வதை வாதமாக  கொண்டால்...கிராமப்புறத்து மக்களுக்கு இன்றைய படங்கள் ஆன ரோபோ, ஹேராம் இவைகள் எல்லாம் புரிய வாய்ப்பே  இல்லை...

முத்த காட்சி என்றால் அபோது எல்லாம் கிளிகளும் பூக்களும் தான் காண்பிபாங்க... இப்பொது குடும்பத்தோடு படம் பார்க்க சென்றால் நாயகன் நாயகி வரும் காட்சிகளில் எப்போது என்ன நடக்கும்னு தெரியாம தான் படம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கோம்...

வன்முறை காட்சிகளை பார்த்து, கொள்ளை அடிக்கும் காட்சிகளை பார்த்து. குற்றம் செய்தேன் என்று சொன்னா எத்தனையோ படிப்பு அறிவு இல்லாத குற்றவாளிகளை உருவாக்கி தந்த இன்றைய சினிமா போற்ற பட வேண்டியதா???


சினிமா சீர் அழிக்கவில்லை என்று சொல்லுபவர்களால் இத்தகைய படங்களை குடும்பத்தோடு சென்று பார்த்து வர முடியுமா??

பாய்ஸ் என்ற ஒரு படத்தை குடும்ப படம் என்று சொல்லலாமா??
 
அம்மா அப்பா இல்லாத அப்போ விலைமாதுவை வீட்டுக்கு கூட்டிட்டு வர போல காட்சி இருக்கும் இது சரியான விஷயமோ?? இந்த காட்சியை ஒரு அப்பாவும் பையனும் சேர்ந்து பார்க்க முடியுமா??

நல்ல விஷயங்கள் மக்களை சென்றடைவது என்பது அரிதான விஷயம் இல்லை. மீடியா என்பது காட்டு தீ போன்றது,, நல்ல விடயமாக இருந்தாலும்
கெட்ட விடயங்களும் சுலபமாக பற்றிக் கொள்ளும்.

இன்றைய இளைய சமுதாயம் கெட்டு போவதற்கு சினிமாவும் ஒரு காரணம் தான்.. :) :)
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Global Angel on November 20, 2011, 12:09:09 AM
Quote
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம்" குழந்தைகளிடம் ஏதாவது சினிமாப் பாடலை பாடச் சொல்லி வேடிக்கை பார்த்து மகிழும் அவநிலைக்கு காரணம் நிச்சயமாக டி.வி மற்றும் திரைப்படங்களின் தாக்கம்தான். அவர்கள் பார்க்கும் போலிக்காட்சிகளை அவர்களது நடைமுறையிலும் செயல்படுத்துவதை பார்க்கிறோம்.

யூசுப் உங்கள் வாதம் நன்று .... அனால் திரை பட பாடல் பாடுவதில் தவறு இருகின்றதா ? ... காலத்துக்கு ஏற்ற மாற்றம் வேண்டும் சினிமா பாடல்களை படுவதில் என்ன தவறு இருக்க முடியும் .... ?  

Quote
"இந்திரா" என்ற தொடரில் வரும் ஒரு கொலைக் காட்சியை நாங்கள் குடும்பத்துடன் பார்த்தோம். அப்போது எனது 5 வயது மகளும், ஒன்றரை வயது மகனும் உடன் இருந்தனர். மறுநாள் காய்கறி நறுக்கும் சமையலறைக்கு நான் சென்ற போது எனது ஒன்றரை வயது மகன் கையில் கத்தியை எடுத்துக் கொண்டு ஊ.. ஆ.. என்று டி.வியில் வந்ததைப் போன்று தன் அக்காவை மிரட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். தொலைக்காட்சியின் விளைவு! கடவுளே!.." என்று தொலைக்காட்சியின் விபரீதத்தை வர்ணிக்கிறார்.
(நன்றி : குமுதம்

ஏன் திரைப்படங்களில் மட்டும் தன அப்படி பார்த்து கேட்டு போகின்றார்கள...பழைய வரலாற்று நாடகங்களில் கூட மேடையில் வாழ் சண்டை போட்டார்களே ... அப்போது யாரும் கத்தியை தொக்கவில்லையா ?

Quote
பெரியவர்களின் அந்தரங்க நடவடிக்கைகளெல்லாம் சிறுவர்களுக்கு அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் சமூக துரோகிகளாகவும் திரைப்படங்கள் விளங்குகிறது. பெரியவர்கள் சண்டை போட்டுக் கொள்வதையும், மனமுடைந்து கண்ணீர் விடுதல், கொலை, பாலியல் உறவுகள் கொள்வது மற்றும் வன்முறைகள் போன்றவற்றை குழந்தைகள் திரைப்படங்களில் காண்கிறார்கள். பெரியவர்களின் பொறுப்பற்ற ஒழுக்கக் கேடான வாழ்க்கைகளை தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் பார்க்கும் குழந்தைகள் அவர்களை தவறுகளுக்கு முன்னுதாரணமாக்குகிறார்கள். பெரியவர்களின் அந்தரங்கங்கள் அம்பலப்படுத்தப்படுவதினால் குழந்தைகள் கள்ளம் கபடமற்ற தன்மையை இழக்கின்றனர்.

இதை காட்டுவதன் மூலம் குடும்பம்  என்றால் என்ன ... அது எப்படி இருக்க வேண்டும் தவறான நடத்தைகளால் ஏற்படும் தாகங்கள் என்ன என்பதை எளிய நடையில் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறது ....  மைக் வச்சு  சொல்லி பாருங்க யாருமே அதை கேட்க மாடார்கள் ...அனால் இப்படி சொனால் புரிந்து கொள்வது எளிது ....  


Quote
அப்படி என்றால் நம் சகோதரிகளுக்கு ஒரு நியாயம் மற்ற பெண்களுக்கு ஒரு நியாயமா?

இதுதான் நீங்கள் கூறும் பொழுதுபோக்கா?

இதே போன்று நமது சகோதரிகளை மற்றவன் பொழுதுபோக்கிற்காக பார்கிறேன் என்று சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்?

இங்கே எதற்கு சகோதரிகளை இழுக்க வேண்டும் ...அங்கே நடிபவர்களை யாரும் கட்டாய படுத்தி நடிக்க வைக்க வில்லை அவர்கள் உடன்பட்டுத்தான் நடிகின்றார்கள் ... அவர்களை எப்டி ஒப்பிடலாம் நீங்கள் யோசுப் ...  

Quote
இன்றைய இளைஞர்கள் புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும்  சமுதாயத்தில் ஒரு உயர்ந்த செயலாக செய்வதற்கு காரணம் என்ன இதை யாரை பார்த்து பெரும்பான்மையான இளைஞர்கள் கற்றுகொண்டார்கள் இந்த சினிமா தானே காரணம்?

திரைப்படம் தோன்றுவதற்கு முனரே மதுபானமும் புகயிலையும் வந்துவிட்டது .... திரைப்படங்கள்தான் உற்பத்தியாக்கி விநியோகம் செய்ததாக கூறுவர்கள் போல் இருக்கே ...

திரை படம் சமூகத்தில நடப்பதைத்தான் வெளி கொண்டு வருது அப்டி பார்த்தல் சமுகம் கெட்டு போனதைத்தான் திரைப்படம் சுட்டி காட்டுகின்றது ....

திரைப்படம் என்று ஒன்று வருவதற்கு முனரே...  திருவிழாக்களில் கவர்ச்சி ஆடை அணிந்து யாரும் ஆடவில்லையா ... இல்லை 4 பெண்டிரை முகரவில்லையா .... இருந்ததைத்தான் வெளி கொண்டு வந்து அதன் விகாரத்தை எடுத்து காட்டுகிறது திரைப்படம் ....இல்லாததை கொண்டு வரவில்லை புதிதாக ஒன்றை உருவாகவும் இல்லை ...
-------------------------------------------------------------------------------



Quote
சினிமா பார்த்து தான் கெட்டு போகணும் என்று இல்லை
சினிமாவும் ஒரு காரணமாக எடுத்து கொள்ளலாம்
ஒரு வருடத்துல வர100 படம் என்றால் அதுல வர 99 படம் கெட்டு போற போல தான் இருக்கு
படம் பார்க்க செல்வது பொழுது போக்காக மட்டுமே எடுத்துக்கணும்
அதை விட்டு அதையே வாழ்க்கைக்கு பாடமாக எடுக்க கூடாது


Quote
Remo

cinema-vum oru Kaaranam endru than sollalam...

cinema matume kaaranam illai enbathu enoda karuthu

Quote
கெட்டுப் போகணும் என்று நினைத்துவிட்டால் அதுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம்.

Quote
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்காக இருக்கணுமே தவிர அதையே வாழ்க்கையாகக் கொண்டு போகக் கூடாது..
எந்த சினிமாக்காரனும் என் சினிமாவை பார்த்து கெட்டு போ என்றும் இதுல இருப்பது தான் நிஜம் இதையே பின்பற்றுங்க என்று சொல்லலியே

கெட்டுப் போகணும் என்று நினைத்துவிட்டால் அதுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம்.

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்காக இருக்கணுமே தவிர அதையே வாழ்க்கையாகக் கொண்டு போகக் கூடாது..
எந்த சினிமாக்காரனும் என் சினிமாவை பார்த்து கெட்டு போ என்றும் இதுல இருப்பது தான் நிஜம் இதையே பின்பற்றுங்க என்று சொல்லலியே


என்ன பார்கிறீங்க ஸ்ருதி இதெல்லாம் யார் சொனது அப்டினா ....? சந்தேகம் வேண்டாம் முந்தய பதிவுகளில் நீங்கள் சொனதுதான் ... ஆனா இப்போ ...


Quote
இன்றைய இளைய சமுதாயம் கெட்டு போவதற்கு சினிமாவும் ஒரு காரணம் தான்..


அந்த பதிவுகள் பதியப் படும்போது உங்களுக்கு திரைப்படங்கள் கெடுக்கவில்லை அப்டி என்று தோன்றி இருக்கு ....இப்போ இப்டி சொல்றிங்க .... முதல்ல தெளிவு படுதோங்கணும் உங்கள்ளுக்கு தோன்றாத சொல்லவேணும் ..... முன்னுக்கு பின் முரணான கருத்தை சொல்றிங்க ...  உங்களுக்கு தெளிவு இல்லை இந்த கருத்தில் .... முதலில் தெளிவு படுத்திகொண்டு பதிவினை மேற்கொள்வது நன்றாக இருக்கும்  

Quote
வன்முறை காட்சிகளை பார்த்து, கொள்ளை அடிக்கும் காட்சிகளை பார்த்து. குற்றம் செய்தேன் என்று சொன்னா எத்தனையோ படிப்பு அறிவு இல்லாத குற்றவாளிகளை உருவாக்கி தந்த இன்றைய சினிமா போற்ற பட வேண்டியதா???

வன்முறை வன்முறை என்று சொல்கின்றீர்களே ... நம் பழைய தலைவர்கள் அவர்கள் சமந்தமான கதைகளில் வன்முறை நடந்த காட்சிகள் இணைக்கப் பட்ட போது அந்த கட்சிகளை அகற்ற சொல்லி யாராவது குரல் கொடுத்திங்களா ..?   வன்முறை நடை பெற்றது என்று சொல்றதுக்கும் அதன் கட்சி பதிவை பார்பதற்கும் எவளவு வித்தியாசம் இருகிறது ....  வன்முறை என்பது இப்டி கொடூரமாய இருக்கும் அதற்கு எதிராக குரல் கொடுக்கணும்னு தோணும் அபோதுதான் ....வெறும் வார்த்தைகள் பதிப்பை ஏற்படுத்துவது குறைவு சமுகத்தில் .....

Quote
முத்த காட்சி என்றால் அபோது எல்லாம் கிளிகளும் பூக்களும் தான் காண்பிபாங்க... இப்பொது குடும்பத்தோடு படம் பார்க்க சென்றால் நாயகன் நாயகி வரும் காட்சிகளில் எப்போது என்ன நடக்கும்னு தெரியாம தான் படம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கோம்...

இதற்க்கு காரணம் என்ன தெரியுமா ..? நம் சமுக அமைப்பு .... வெளி நாடுகளில் கற்பழிப்பு வான் முறைகள் நம் நாட்டை விட குறைவு  ஏன் தெரியுமா .... அங்க எல்லாம் முத்தம் என்பது உணர்ச்சி வெளிபாடு ... எதையும் அடக்கி வைக்கும் போதுதான் அது வெளிப்படும் போது பிரளயமாகும் என்பது அவர்கள் கருத்து ..... இதுல எவளவு உண்மை இருக்கிறது என்பது நாமக்கு தெரியும் ....

பாலியல் கல்வி என்பது முக்கியம் ....  அந்த அறிவில்லாமல் வரக்கூடிய பிரச்சனைகளை காடினால் அதை ஏன் நீங்கள் செக்ஸ் என்ற கோணத்தில் பார்கிறிங்க .... ஒரு அறிவு .... விலை மாது கிட்ட போறதால வர கூடிய விளைவுகளை காட்ட்வதாக  எடுக்கலாமே ...
செக்ஸ் சமந்தமான கட்சிகளுக்கு அப்புறம் வரக்கூடிய கதை கருத்து என்ன என்றதையும் பார்க்கணும் .... நாம் ஒன்றும் பழைய கர்க்கலத்தில் இல்லை 21m  நூடண்டில இருக்கிறம் ... அதை கருத்தில வச்சு பார்க்கலாம் .


Quote
எல்லா மக்களிடமும் நல்ல மனமாற்றம் வந்ததை சொல்வதை வாதமாக  கொண்டால்...கிராமப்புறத்து மக்களுக்கு இன்றைய படங்கள் ஆன ரோபோ, ஹேராம் இவைகள் எல்லாம் புரிய வாய்ப்பே  இல்லை...

முதல் முதல் வந்தது ஊமை படம்தான் .. அதையே புரிந்து கொண்ட அந்தகாலத்து மக்கள் .... இபோ வந்த இந்த படத்தி புரிந்து கொள்ளவில்லை என்று எப்டி சொல்றிங்க ...?  இபோவும் சொல்றம் திரை படம் பொழுது போக்கு என்று ....அதை பார்த்ததும் கிராமத்து மகளே சொல்வார்கள் இயந்திரம் எல்லாம் வருது சின்ன பசங்க பார்குற படம் எண்டு .... அவர்கள் தெளிவா இருக்கிறார்கள் ... நீங்கள் தன தெளிவில்லை ... எல்லா திரைப்படமும் கருத்தை சொல்ல வேண்டும் என்று எப்டி எதிர் பார்க்கலாம் நீங்கள் ...?

Quote
நல்ல படம் என்று உதாரண காட்டிய படங்களில் எல்லாம் மசாலா  கலவை இல்லாத படம் என்று சொல்ல முடியுமா?? அன்றாட  வாழ்க்கைக்கு ஒத்து வராத காட்சிகளை வைத்து படம் எடுப்பதே தவறு அதிலும் கதாநாயகன் நான்கு பேரு கூட சண்டை போட்டு அநியாயத்தை  தட்டி கேட்பதால் அந்த படம் நல்லது என்று ஆகிவிடுமா??

ஆரம்பத்துல சோறு மட்டும் சாப்ட மனிதன் அப்புறம் கறி வகை வகையா சமைத்து சுவைக்கு ஏற்ற படி சாப்டலையா .... அந்த உணவிலயும்தன் கொழுப்பு இருக்கு நச்சு தன்மை இருக்கு அது இருக்கு இது இருக்குனு சொன்னாங்க ... யாரவது அத கருத்தில வச்சு பத்திய சாபாட  கேழ்வரகும் வெங்காயமும்  சாப்டுறேங்க .... ? இல்லை தானே .....  அதை போலத்தான் திரை படமும் காலத்துக்கு ஏற்ற போல மாற்றம் வருது இங்கயும் சொல்ல  படுது புகை புடிக்க கூடாது ... மது அருந்த கூடாது .etc . கருத்தில கொள்ளவில்லை ... இது திரை படங்களின் தப்பா ... இல்லை வழி வழியாய் வந்த நம் பரம்பரை தப்பா ...? அதுதான் கதா நாயகன் அப்டி 4 பேரோட சண்டை போடுறான் என்றது தெரிதுதனே ... அது உண்மை இல்லை வெறும் காட்சி பதிவு பொழுது போக்குனு ..... அப்புறம் எதற்கு வீண் வாதம் ....


சிறுவர்களை கெடுப்பதாக சொல்றதவிட்டு .... சிருவர்களுகேன்று அனுமதிக்க பட்ட திரைப்படங்கள் பார்க்க அவங்களுக்கு அனுமதி வழங்கலாமே .... இந்த சிறுவர்களை கூடி போறது யார் தப்பு ....?  நீங்க பார்க்கணும் என்றதுக்காக பிள்ளைகளையும் கூட கூட்டி போய் அவர்கள் கெட்டு போகின்றார்கள் என்று நீங்கள் குத்தம் சொல்வது எந்த வகையில் சரி ....?  சிறுவன் தப்பு செய்வதாக காட்ட படுகிறதாக சொல்றிங்க .... அது எதற்காக அப்டின்னு பார்க்குரதிலையா ....?  

இப்போ நமீதா அபாசமா நடிச்சத நீங்க நினைகுரிங்க ..... அந்த படத்தி நீங்க போய் பார்கிறிங்க ..... அப்போ தெரிது... அப்புறம் மற்றைய நமீதா நடித்த படத்துக்கு நீங்கள் பிள்ளையை வீடில் விட்டு விட்டா போறிங்க .... இலையே .....  இது யார் குற்றம் ... படம் எடுகுரவங்க குத்தமா இல்ல பிழைகளை கூட்டி போறவங்க குற்றமா ..?

பாலோடு நீரும் கலந்து இருக்கும்போது ....நீரை தவிர்த்து பாலை உண்ணும் அன்ன பறவை போல் ..... கேட்டதை தவிர்த்து நல்ல விடயங்களை நாம் எடுத்துகொண்டு அதை நம் சந்ததியினற்கும் பழக்கலாம் ....  
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: thamilan on November 20, 2011, 12:20:12 AM
youuf machi naan ungal ella kelvigalukum latea pathil soluren :) :)
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: ஸ்ருதி on November 20, 2011, 02:03:52 AM
ரோஸ் நீங்க சொல்றது என்ன எனக்கு இந்த தலைப்பு புரியவில்லை என்றா??

நான் அப்பவும் சொல்றேன் இப்பவும் சொல்றேன் சினிமாவும் காரணம் தான்.
சினிமாவ பார்த்து கேட்டு போ என்று சொல்லல என்று சொன்னேன் ஆனால் உங்கள் எலோரிடைய வாதமும் சினிமா வந்து கெட்டு போக கூடியதாக இல்லை என்று இருக்கும் போது நான் முன்வைக்க நினைத்த கருத்துகளை கூற வேண்டும் தானே...
சினிமா பொழுதுபோக்கு தான்....ஆனால் இப்பொது யார் அதை பொழுது போக்காக நினைக்குறாங்க....உங்கள் கருத்துக்கு ஒத்து சொல்ல வேண்டும் என்று எல்லாம் என்னால் சொல்ல முடியாது. சினிமாவும் ஒரு காரணமே ...ஒரு வாதம் பாதை மாறி செல்லும் போதுதான் நமக்கே தெளிவு வரும்....நான் இந்த தலைப்பை புரிந்து கொண்டுதான் பதிவை தொடர வந்தேன், தான் பேசுவது தான் சரி என்ற மனப்பான்மை வாதத்திற்கு ஒத்து வராது..ஒரு வேளை நீங்கள் சொல்லுவது போல எனக்கு தெளிவு இல்லாமல் இருந்தாலும் செல்வன் அவர்கள் கருத்து மட்டுமே நிஜம் ....அவர் தெள்ள தெளிவாக கூறி நீங்கள் நினைப்பது போல எனக்கும் கூட தெளிவை கொடுத்ததாக நினைத்து சந்தோசம் அடைகிறேன்....வாழ்த்துக்கள் செல்வன் உங்கள் கருத்துகள் மிக மிக பொருத்தம் இந்த தலைப்புக்கு ஏற்ற கருத்துகள்

இருபதாம் நூற்றாண்டில் இருந்தாலும் நாம நம்ம பெற்றவர்கள் முன்னுக்கு யாரையும் கட்டி பிடித்து முத்தம் கொடுக்க முடியாது...
எந்த நூற்றாண்டில் இருந்தாலும் நம்ம கலாச்சாரத்துக்கு ஏற்றார் போல தான் இருக்க முடியும்...ஒரு வேளை வெளிநாட்டு கலாச்சார பங்கோடு நீங்கள் சொலுறீங்கள் போல...அது எனக்கு  புரிய வாய்ப்பில்லை தான்...

ரோஸ் பாய்ஸ் படம் செக்ஸ் கல்விக்காக எடுதபடமா?? விலைமாதுவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இப்படி இருந்த இப்படி நோய் வரும்னு படம் எடுத்த அதை பார்த்து நாம தெரிஞ்சுக்கலாம் அது தவறு இல்லைன்னு சொல்றீங்களா??

சிறுவர்களுக்கான அனுமதிக்க பட்ட படங்களையா தினமும் நகைச்சுவை சேனலில் போட்டு இருக்காங்க??? என்ன ரோஸ் இது எல்லாம்...சினிமா வ பார்ப்பதை வேண்டுமானால் தேர்வு செய்யலாம்....இப்படியான நிகழுவுகள் தினமும் எல்லா சிறுவர்களும் வீட்டில் காண்பது தான்...அடுத்து சொளுவீங்க சேனல் மாத்திருங்க என்று :த

நமீதா நடிச்சு இருக்கா என்று படம் பார்த்து கெட்டு போறவங்களுக்கு உங்கள் வாதம் சரி வரும் என்று நினைக்கின்றேன். என் வாதம் நமீதா பற்றி அல்ல...நமீதா படத்துக்கு பிள்ளைகளை கூட்டி செல்லும் அறிவிலிகளுக்கும் சொல்லுங்கள்,,,

எதனை நூற்றாண்டை கடந்தாலும் ஒரு சில விஷயங்கள் மறைமுகமாக இருபதுதான் நலம். அதை தான் அந்தரங்கம் தாம்பத்யம் என்று சொல்கிறோம்...வெளிபடைய இருப்பதால் எல்லாம் சரி ஆகும் என்றால் அதை எல்லாம் அறிந்து கொள்ள நாம் சினிமா அரங்கத்தினுள் தான் குடும்பம் நடத்த வேண்டும்....செக்ஸ் கல்வி சொல்லி தரான்,, பின்விளைவுகள் சொல்லி தாரன் என்று... :o :o
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Global Angel on November 20, 2011, 03:09:50 AM
சுருதி நீங்க முதல்ல சொனதுக்கு இபோ சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு .... அத நீங்க முதல்ல சொல்லி இருக்கனும் செல்வன் உங்கள் கண்ணை திறந்தார் எண்டு ... இபோ நான் கேட்டதும் நீங்க சொல்லி இருகிங்க ....

இத்தன நாம சொல்றம் சிறுவர்களை எதுக்கு கூட்டிட்டு போறிங்கனு ..... அவர்களுகேண்டு ஒதுக்கப்பட்ட பிலிம்  கூட்டி போங்க....
ஸ்ருதி தாம்பத்ய உறவை காட்ட வில்லையே ... நீங்கள் வேற படத்தை பத்தி பேசுறேன்னு நினைக்குறேன் .....நான் அந்த படங்களை மையமாக வைத்து கருத்தி சொல்ல வில்லை .... சுருதி நீங்க 24  மணி நேரம் சேலைய அணிரிங்க .... வேலை தலத்தில் ஆண்களுடன் தலை நிமிர்ந்து பெசுவதிலையா .... சிறிது பெசுவதிலைய ..... இல்லை சில விஷயங்கள் விவாதிக்குரதிலையா ...

நான் ஒன்றும் பெற்றவர் முன் கட்டி பிடிகுறது குற்றம் இல்லை என்று சொல்லவிலையே ..... குற்றம்  ... இல்லை ... இரண்டுக்கும் நடுவில் ஒரு நிலைமை இருக்கிறது ... சமயோசிதம்  அதன்படி நடக்கலாம் ..

நகைச்சுவை பார்க்க வேண்டும் என்று சிறுவர்களுக்கு தேவை இருக்கா ....?   அப்படி பார்க்க வேண்டும் எண்டால்... சிறுவர் நகை சுவை நிகழ்வுகள் நிறைய இருக்குதே .... உங்கள் தேவைக்கு அவர்களை டிவி முன்னால் உகரத்தி வைத்தது யார் குற்றம் ...?

பாய்ஸ் படத்துல விலை மதுகிட போனதா கேள்விபட்டு அப்புறம் நடந்தவை என்னனு பற்களைய சுருதி ... நங்கள் அதையும் பார்க்க சொல்லிதானே சொல்றம்...

நாகல் சொல்லுவது எல்லாம் சினிமா ஒன்றும் போதி மரம் இல்லை ஞானத்தை மட்டும் கொடுக்க ... அது சாதாரண பொழுது போக்கு .. அதை பொழுது போக்கு அம்சமா பாருங்கள்  குறை இல்லாமல் எதுவும் இல்லை ... அதை தவிர்த்து நல்ல கருத்தி எடுக்கலாம் ....இதுதான் எனுடைய வாதம் .

கட்டி பிடிகுரத பார்த்தா அதையே பார்கமா ........ அதை பார்த்தா அவங்க குடும்பத்துல என்ன நடக்குது என்றத பாருங்க ... அத்தான் சொல்றம்
ஒரு கட்சிக்கு பிறகு வரக்கூடிய நிகழ்வுகளை பாருங்க .... பகுத்தறிந்து நடந்துகொளுங்க
  ;)
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on November 20, 2011, 09:47:25 AM
Quote
யூசுப் உங்கள் வாதம் நன்று .... அனால் திரை பட பாடல் பாடுவதில் தவறு இருகின்றதா ? ... காலத்துக்கு ஏற்ற மாற்றம் வேண்டும் சினிமா பாடல்களை படுவதில் என்ன தவறு இருக்க முடியும் .... ?

நான் சினிமா பாடல்கள் பாடுவது தவறு என்றும் கூற வில்லை சரி என்று கூற வில்லை. எப்படி பட்ட பாடல்களை இன்று பிள்ளைகள் பாடிக்கொண்டு இருகிறார்கள் என்று பாருங்கள் ஏஞ்செல்.  கல்யாண்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா இல்ல புள்ள குட்டி பெத்துகிட்டு ஓடிபோலாமா இதெல்லாம் சிறுவர்கள் பாட கூடிய பாடலா ஏஞ்செல் இப்படி பட்ட பாடல்களை தான் நீங்க நியாய படுத்துகிறீர்களா? இதை விட கேவலமான பாடல்களையும் உதரணமாக காட்ட முடியும் இதில் இருந்து சிறுவர்களுக்கு இப்படி பட்ட இழிசெயலை தானே சினிமா கற்று கொடுகிறது. இன்று பார்க்கிறோம் பள்ளி பருவத்திலேயே எப்படி பட்ட ஒழுங்கீன்கங்கள் நடக்கிறது என்பதை... இதெல்லாம் இளைய சமுதாயத்தை சீர்கெடுக்க கூடியவை இல்லையா?

Quote
ஏன் திரைப்படங்களில் மட்டும் தன அப்படி பார்த்து கேட்டு போகின்றார்கள...பழைய வரலாற்று நாடகங்களில் கூட மேடையில் வாழ் சண்டை போட்டார்களே ... அப்போது யாரும் கத்தியை தொக்கவில்லையா ?

நீங்கள் மீண்டும் தலைப்பை விட்டு வெளியே செல்கிறீர்கள் ஏஞ்செல். இங்கு கொடுக்க பட்டிருக்க கூடிய தலைப்பு சினிமா இளைஞர்களை சீர்கேடுக்கிறதா இல்லையா என்பது தானே தவிர மற்ற ஊடகங்கள் கெடுக்கிறதா இல்லையா என்பது பற்றி இல்லை தலைப்புக்கு பொருத்தாமாக பேசினால் பதில் தர நன்றாக இருக்கும் ஏஞ்செல். நீங்கள் கூறும் இந்த விடயம் பொது மன்றத்தை பார்வை இடுபவர்கள் கூட அறிந்து கொள்வார்கள் இது தலைப்புக்கு ஏற்ற கேள்வி அல்ல என்று. தலைப்பை திசை திருப்ப வேண்டாம்.

Quote
இதை காட்டுவதன் மூலம் குடும்பம்  என்றால் என்ன ... அது எப்படி இருக்க வேண்டும் தவறான நடத்தைகளால் ஏற்படும் தாகங்கள் என்ன என்பதை எளிய நடையில் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறது ....  மைக் வச்சு  சொல்லி பாருங்க யாருமே அதை கேட்க மாடார்கள் ...அனால் இப்படி சொனால் புரிந்து கொள்வது எளிது ....

மீண்டும் சம்பந்தமே இல்லமால் பதில் கூறுகிறீர்கள் ஏஞ்செல். குழந்தைகளுக்கு இந்த தவற கட்சிகளை கண்ம்பிப்பதன் மூலம் அவர்களுக்கு குடும்பம் என்றால் என்ன என்று விளங்கும் என்று கூறுகிறீர்களே இது மிகவும் ஒரு வேடிக்கையான பதில். எந்த குழந்தையும் இந்த கட்சிகளை பார்த்தல் அந்த காட்சிகளில் என்ன நடக்கிறது என்பதை மட்டுமே உள்வங்கிகொல்லுமே தவிர அது எல்லாம் குடும்பத்தில் நடக்க கூடியது தான் என்று புரிந்துகொள்ளது ஏஞ்செல். அப்படி புரிந்து கொள்ள கூடிய திறன் சிறு குழந்தைகளுக்கு கிடையாது ஏஞ்செல். நீங்கள் புரிந்து கொண்டீர்களோ என்னவோ எனக்கு தெரிய வில்லை ஏஞ்செல்.

ஒலிபெருக்கி வைத்து நல்லதை சொன்னால் கேட்காத மக்களை இந்த திரைத்துறையின் மூலம் திருத்துவதை விட்டு விட்டு மேலும் அவர்களை சிந்திக்க விடாமல் ஆபாசத்துக்கு அடிமையாக்கும் இந்த சினிமா மக்களுக்கு கருத்துக்களை ஆபாசத்தின் மூலமாகவும் இரட்டை அர்த்த வசனங்களின் மூலமாகவும் கொண்டுபோய்  சேர்க்கிறது. இது சரி என்று கூற வருகிறீர்களா? உங்களுடைய பதில் வியப்பாக உள்ளது வாசகர்கள் எது உண்மை என்பதை அவர்களே புரிந்து கொள்வார்கள்.


Quote
இங்கே எதற்கு சகோதரிகளை இழுக்க வேண்டும் ...அங்கே நடிபவர்களை யாரும் கட்டாய படுத்தி நடிக்க வைக்க வில்லை அவர்கள் உடன்பட்டுத்தான் நடிகின்றார்கள் ... அவர்களை எப்டி ஒப்பிடலாம் நீங்கள் யோசுப் ...

நடிகைகள் உடுத்துவது போன்று இன்று ஆடைகள் உடுத்தும் பெண்கள் அதிகரிப்பதற்கு காராணம் என்ன ஏஞ்செல்? சினிமாவை பார்த்து அப்படியே தான் வாழ்கையில் கொண்டுவருவது தானே இதன் விளைவு என்ன அவர்கள் இரண்டு பீஸ் ஆடைகள் உடுத்துவத்தின் மூலம் கற்பழிப்புகள் அதிகமாகிறது. இப்படி பட்ட உடைகளை மற்ற பெண்கள் பொது இடங்களில் அணியும் பொது தான் தவறுகள் ஏற்படுகிறது. இதற்க்கு ஏன் நாம் இடங்கொடுக்க வேண்டும். நம் சகோதரிகளுக்கு ஒரு நீதி மற்ற பெண்களுக்கு இந்த விடயத்தில் ஒரு நீதியா? அப்படி செய்தால் அது அநீதி.

நீங்கள் ஏற்று கொண்டாலும் எடுகொள்ள விட்டாலும் இதுத்தான் உண்மை ஏஞ்செல். சிந்திக்க கூடிய வாசகர்கள் இதையும் புரிந்து கொள்வார்கள்.


Quote
திரைப்படம் தோன்றுவதற்கு முனரே மதுபானமும் புகயிலையும் வந்துவிட்டது .... திரைப்படங்கள்தான் உற்பத்தியாக்கி விநியோகம் செய்ததாக கூறுவர்கள் போல் இருக்கே ...

இந்த புகை, மது எல்லாம் இருக்கத்தான் செய்தது இல்லை என்று நான் கூற வில்லை ஆனால் இந்த தீய பழக்கங்களை சுட்டிக்காட்டி மக்களை திருத்த வேண்டிய இந்த திரைப்பட துறையே இதை நல்ல செயல் போல் காண்பிக்கிறதே அதை தான் தவறு என்று சொல்கிறேன். இதை பார்க்க கூடிய சிறுவர்கள் கூட சினிமாவில் வரும் கதாநாயகன் புகை பிடிப்பது போல பிடிப்பதை நம் கண்களால் பார்க்கிறோம். இதை இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா?

Quote
திரைப்படம் என்று ஒன்று வருவதற்கு முனரே...  திருவிழாக்களில் கவர்ச்சி ஆடை அணிந்து யாரும் ஆடவில்லையா ... இல்லை 4 பெண்டிரை முகரவில்லையா .... இருந்ததைத்தான் வெளி கொண்டு வந்து அதன் விகாரத்தை எடுத்து காட்டுகிறது திரைப்படம் ....இல்லாததை கொண்டு வரவில்லை புதிதாக ஒன்றை உருவாகவும் இல்லை

நீங்கள் மீண்டும் தலைப்பிற்கு சம்பந்தமே இல்லாமல் பேசுகிறீர்கள் ஏஞ்செல். இங்கு கொடுக்க பட்டுள்ள தலைப்பு இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா? என்பது தானே தவிர மற்றவைகள் சீர் கேடுக்கதானே செய்கிறது என்பது அல்ல. அப்படி தவறு வெளியில் நடக்கிறது என்றால் அதை சுட்டி காண்பித்து இப்படி செய்வது தவறு என்று கூறக்கூடிய படமாக இருந்தால் அது பாராட்டுக்குரியதுதான். ஆனால் அதை சினிமாக்கள் செய்வதில்லையே ஏன்?

நீங்கள் கூறும் கருத்து தலைப்பிற்குள் இருக்கிறாத என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள் ஏஞ்செல் இல்லை என்றால் இந்த விவாதத்தை படிக்கும் வாசகர்கள் அதை பார்த்து கொள்வார்கள். தலைப்பை விட்டு தவறி செல்வது விவாதத்தை திசை திருப்புவது போன்றாகிவிடும்.


Quote
இதற்க்கு காரணம் என்ன தெரியுமா ..? நம் சமுக அமைப்பு .... வெளி நாடுகளில் கற்பழிப்பு வன் முறைகள் நம் நாட்டை விட குறைவு  ஏன் தெரியுமா .... அங்க எல்லாம் முத்தம் என்பது உணர்ச்சி வெளிபாடு ... எதையும் அடக்கி வைக்கும் போதுதான் அது வெளிப்படும் போது பிரளயமாகும் என்பது அவர்கள் கருத்து ..... இதுல எவளவு உண்மை இருக்கிறது என்பது நாமக்கு தெரியும் ....


நீங்கள் சொல்வதை பார்த்தால் உணர்சிகளை அடக்கி வைக்காமல் வெளிப்படுத்தி விட வேடும் என்று சொல்வது போல் இருக்கிறது ஏஞ்செல். இந்த திரைப்படங்களை எல்லாம் பார்த்து விட்டு உணர்ச்சியை ஒவ்வொருவரும் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் நாடு தாங்காது.  எதையும் அடக்கி வைக்காமல் யார் வேடுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் வெளிப்படுதால் என்று சொல்வது போல் தெரிகிறது. இது அறிவார்ந்த வாதம் இல்லை. அப்படி செய்தால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் வேறுபாடு இல்லை ஏஞ்செல்.


இங்கு கற்பழிப்பு வன் முறைகள் அதிகமாக இருப்பதற்கு காரணம் இங்குள்ள சட்ட திட்டங்களில் ஓட்டை உடைசல் உள்ளது தானே தவிர வேறு காரணம் கிடையாது. நீங்கள் சவுதி அரேபியாவை எடுத்து கொண்டால் இந்தியாவை ஒப்பிடும் பொது இங்குள்ள கற்பழிப்பு வழக்குகளை விட  அங்கு கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 1 %  தான் காரணம் அங்கு உள்ள கடுமையான சட்ட திட்டங்கள் தான் இதன் காரணாமாக அங்கு பெண்களுக்கு பாதுகாப்பு கிடைகிறது. மேலும் அங்கு பெண்கள் அரை குறை அடியோடு வெளியே செல்ல முடியாது இதன் காரணமாக மற்றவர்கள் பெண்களை தவறான எண்ணத்தில் பார்க்க வைப்பும் இல்லை தவறு நடக்கவும் வாய்ப்பில்லை.

நீங்கள் குறை கூற வேண்டும் என்றால் இந்த விடயத்தில் நாட்டின் சட்டத்தை தான் குறை கூற வேண்டும் ஏஞ்செல்.


Quote
பாலியல் கல்வி என்பது முக்கியம் ....  அந்த அறிவில்லாமல் வரக்கூடிய பிரச்சனைகளை காடினால் அதை ஏன் நீங்கள் செக்ஸ் என்ற கோணத்தில் பார்கிறிங்க .... ஒரு அறிவு .... விலை மாது கிட்ட போறதால வர கூடிய விளைவுகளை காட்ட்வதாக  எடுக்கலாமே ...

நீங்கள் எதை பாலியல் கல்வி என்று குறிப்பிடுகிறீர்கள்? கூடமாக சேர்ந்து அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போடுவது தான் பாலியல் கல்வியா?
உங்களுடைய அடுத்த பதிவில் பாலியல் கல்விக்கான வரைவிலக்கணத்தை கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.


Quote
செக்ஸ் சமந்தமான கட்சிகளுக்கு அப்புறம் வரக்கூடிய கதை கருத்து என்ன என்றதையும் பார்க்கணும் .... நாம் ஒன்றும் பழைய கர்க்கலத்தில் இல்லை 21m  நூடண்டில இருக்கிறம் ... அதை கருத்தில வச்சு பார்க்கலாம் .

செக்ஸ் காட்சிகளுக்கு பின்னால் தற்பொழுது வரக்கூடிய படங்களில் என்ன கருத்து இருக்கிறது ஏஞ்செல். அதை கூடாது என்று சொல்வாதாக தெரிய வில்லையே மாறாக எப்படி ஒரு பெண்ணை ஏமாற்றலாம் எப்படி தவறு செய்யலாம் என்று காண்பிப்பதாக அல்லவா தெரிகிறது. இது தான் நீங்கள் சொல்லும் பாலியல் கல்வியோ?

Quote
முதல் முதல் வந்தது ஊமை படம்தான் .. அதையே புரிந்து கொண்ட அந்தகாலத்து மக்கள் .... இபோ வந்த இந்த படத்தி புரிந்து கொள்ளவில்லை என்று எப்டி சொல்றிங்க ...?

நன்றாக புரிந்து கொள்கிறார்கள் ஏஞ்செல் எப்படி தவறு செய்வதை எளிமையாக கற்று கொள்வது என்பதை எளிமையாக கற்று கொள்கிறார்கள்!
மன்மதன் வல்லவன் போன்ற திரைப்படங்கள் எல்லாம் இதற்க்கு உதாரணம்.

இந்த உதாரணம்  போத வில்லை என்றால் அடுத்த பதிவில் இன்னும் அதிகாமாக உதாரணம் தருகிறேன்.


Quote
அதை போலத்தான் திரை படமும் காலத்துக்கு ஏற்ற போல மாற்றம் வருது இங்கயும் சொல்ல  படுது புகை புடிக்க கூடாது ... மது அருந்த கூடாது .etc . கருத்தில கொள்ளவில்லை ...

நீங்கள் சொல்வது விபரீதமாக உள்ளது ஏஞ்செல் இன்று இதையெல்லாம் கருத்தில் கொள்ளாதவர்கள் நாளை ஆடை அணியாமல் நடித்தாலும் தவறில்லை என்றால் அதையும் நீங்கள் தப்பில்லை என்று கூறுவீர்கள் போல. இது மிக பெரிய விபரீதமான பதில் ஏஞ்செல். ஒரு கருத்தை சொல்வதற்கும் முன் யோசித்து சொல்லுங்கள் ஏஞ்செல்.

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்ற அடிப்படையில் இத்தனை பதில்களும் கேள்விகளும் இப்போதைக்கு போதும் என்று நினைக்கிறன் ஏஞ்செல். அடுத்து உங்களது பதிவை தலைப்புக்கு உள்ளே தர்வீர்கள் என்று எதிர்பார்கிறேன்

மீண்டும் அடுத்த பதிவில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் இறைவன் நாடினால்!!!
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Global Angel on November 20, 2011, 09:04:03 PM
Quote
அதை போலத்தான் திரை படமும் காலத்துக்கு ஏற்ற போல மாற்றம் வருது இங்கயும் சொல்ல  படுது புகை புடிக்க கூடாது ... மது அருந்த கூடாது .etc . கருத்தில கொள்ளவில்லை ...
நீங்கள் சொல்வது விபரீதமாக உள்ளது ஏஞ்செல் இன்று இதையெல்லாம் கருத்தில் கொள்ளாதவர்கள் நாளை ஆடை அணியாமல் நடித்தாலும் தவறில்லை என்றால் அதையும் நீங்கள் தப்பில்லை என்று கூறுவீர்கள் போல. இது மிக பெரிய விபரீதமான பதில் ஏஞ்செல். ஒரு கருத்தை சொல்வதற்கும் முன் யோசித்து சொல்லுங்கள் ஏஞ்செல்.

யூசுப்  உங்கள் பார்வையில் நிறைய தவறு இருக்கிறது ஒரு விடயம் கூடாது நல்லது என்ற திற்கும் இடையில் இரண்டும் கலந்து ஒன்று இருக்கிறது அந்த
கருத்தை நீங்கள் உணர மாட்டேன்  என்று இருகின்றீர்கள் .... நான் ஒன்றும் திரைப்படம் எல்லாம் போதி மரம் என்று சொல்ல விலையே வடிவ்வாக ப்ருங்கள்  நன்மை
 தீமை
கலந்து இருக்கிறது  .... நாம்தான் பகுத்தறிய வேண்டும் ..... குழந்தைகள் சிறுவர்கள் என்று கூறுகின்றீர்களே ....அவர்களை திரை படத்துக்கு
அழைத்து செல்லும், பெற்றோரை முதல் குற்றம்  சொல்லுங்கள். 

நாம் எதை பார்கின்றோமோ அதுவாகவே மாறுகின்றோம் .... நல்லதை பாருங்கள் நல்லவராக இருபிர்கள் ... திரைப்படங்களில் நல்லதை மட்டும் பாருங்கள் நல்லதை கற்றுக்கொள்வீர்கள் ..

நவ நாகரீகம் மிகுந்து காணப்படும் வெளிநாட்டு தேசங்களில் கூட ஆடை இல்லாத பற்றி சிந்தை கொள்வதில்லை ... நீங்கள் ஏன் ஆடை இலாததை பற்றி அதிகமாக சிந்திகிண்றீர்கள்  நீங்கள் அதை எதிர் பார்கின்றீர்களா என்ன ?..... அப்படி கேவலமாக நம் திரைப்படம் அமையாது ....  இபவும் சொல்கிறேன் சிறுவர்களை திரை படத்திற்கு அழைத்து செல்வது பெற்றவர்கள் தவறு .....

யோசுப் திரைப்படம் அதனோட முன்னோடி நாடகங்கள் அதைப்பற்றி சொல்லி அதை கோடிட்டு  காடுவது எப்படி நான் விவாதிக்கும் கருத்தில் இருந்து மாறுபடுவதாக சொல்கின்றீர்கள் ....ஆடை குறைப்பு என்பது வருந்த தக்க விடயம் ... ஆனால் அதயும் மீறி அந்த திரை படங்களில் சொல்ல கூடிய கருத்தை நல்ல விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள் என்பதுதான் நம் வாதம் .....

இங்கே திரைப்படம் கெடுக்கின்றது என்று வாதிடுபவர்கள் அவ்வாறு சொலிக்க்கொண்டே அதை பார்வை இடுகின்றார்கள் ... அப்படி பார்வை இடுவதை தவிர்த்திருந்தால் திரை படங்களில் வரக்கூடிய ஆபாச கட்சிகளையும் ஆடை குறைபுகளையும் என்றோ கைவிட்டிருபார்கள் ....

விவாதம் என்று வாதிக்க முன்னர் நாம் விவாதிப்பது நமக்கு எப்படி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும் ...
யோசுப் சரி அப்படி நீங்கள் ஆபாச காட்சிகளின் பின் கதி ஏதும் இல்லை என்று கூற கூடிய படங்களை சொல்ல முடியுமா ...`

சினிமா சமுகத்தை தழுவித்தான் எடுக்க படுகிறது ... எனவே சமுகத்தை சுட்டி காட்டி பேசாமல் வேற எதை சுட்டி காட்டி பேச முடியும் ... சும்மா விவாதத்துக்கு சமந்தம் இல்லாமல் நான் பேசுவதை  நிறுத்தி விட்டு முதல் நான் சொன்ன கருத்துகளை ஊன்றி கனவித்து உணர முயற்சி செய்யுங்கள் ... சிறுவர் வயது வந்தோர் எல்லாம் சமுகம் தானே ... அதை நான் சுட்டி காட்டுவதில் என்ன தப்பு ... சமுகத்தில் நடப்பதைத்தான் சினிமா காட்டுகிறது அதன் விகாரம் உங்களை அதிர்சிக்கு உள்ளாகிறது ..... எனினும் அவை எங்கோ ஒரு மூலையில் நடக்கின்ற ஒரு நிகழ்வுதானே ....

திரை படங்கள் இல்ல விட்டால் கட்ட பொம்மன் . பாரதியார் ,, பெரியார் ... போன்ற நம் முன்னோர் வீர தீர வரலாறு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் .... இல்லை எத்தை பேருக்கு புரிந்திருக்கும் ...?

இன்று ஏழாம் அறிவு ஒன்றுதான் ....போதி தர்மன் என்பவரை பற்றி வெளி கொண்டு வந்திருகிறது ...இதை பத்திரிகையில் போடட்டு இருந்தால் எதனை பேரை அது சென்றடைந்திருக்கும் ...?  இப்படி எத்தனையோ ....

இபவும் சொல்கிறேன் ... சினிமா போதி மரம் இல்லை ... ஞானத்தை மட்டும் கொடுக்க .... அது பொழுது போக்கு ... அதை பொழுது போக்காக பாருங்கள் ....  உங்களை நீங்களே குழப்பி கொள்ளாதீர்கள் ...
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: thamilan on November 20, 2011, 10:39:23 PM
எனக்கு விவரம் தெரிந்து சிந்திக்க ஆரம்பித்ததில் இருந்து நான் திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் தமிழன்


யூசுப் மச்சி நீங்க விபரம் தெரிஞ்சி சிந்திக்க ஆரம்பிச்ச பிறகு படம் பார்க்கிறத நிறுத்திட்டதா சொல்லுறீங்க. இது உங்க வாக்குமூலம். நீங்க விபரம் தெரிகிற‌துக்கு முன்னால சிந்திக்க தொடங்குறதுக்கு முன்னால படம் பார்த்து இருக்கலாம். இது நல்லதா கெட்டதா என்று விபரம் தெரியாத பருவத்தில் சரியா பிழையா என்று சிந்திக்க ஆரம்பிக்கு முன்னர் படம் பார்த்துட்டு அது சரியில்லை என்று எப்படி சொல்ல முடியும்?
விபரம் தெரிஞ்ச பின்னால சிந்திக்க ஆரம்பிச்சதில இருந்து படம் பார்க்கிறத நிறுத்திட்டிங்க. அப்புறம் எதை வைத்து சினிமா சரியில்லை என்று சொல்லுறீங்க? உங்களுக்கு விபரம் தெரிந்த பிறகு, சிந்திக்க தொடங்கின பிறகு தான் நீங்க சினிமா பார்க்கவில்லையே.
மறுபடி நான் விபரம் தெரிந்த பிறகு, சிந்திக்க தொடங்கின பிறகு படங்கள் பார்த்துட்டு தான் பார்க்கிறதை நிறுத்தினேன் என்று சொல்லப் போறீங்க.

அடுத்தது நான் சொன்ன படங்கள பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? நீங்க தான் படம் பார்க்கிறதில்லையே? அதுல ஆபாச நடனங்களோ, ஆபாச வார்த்தைகளோ இருக்கிறது என்று எதை வைத்து சொல்லுகிறீர்கள்.முதலில் நான் சொன்ன படங்களை பாருங்கள். இல்லாமல் வெறும் யூகங்களாலும் மற்றவர் சொல்வதை கேட்டோ நீங்கள் வைக்கும் வாதம் எந்த கோர்ட்டிலும் எடுபடாது மச்சி.
மசாலா கலவை இல்லாத படம்.
ஆபாச நடனம், ஆபாச பேச்சுகள் போய் இப்போது மசாலா கலவைக்கு வந்த்தாச்சி.
அதும் இல்லை என்று வந்தா அடுத்ததா என்ன குறை சொல்ல போறாங்களோ?

நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கூட மசாலா கலவை கொஞ்சம் குறைந்தால் கூட இது சாப்பாடா என்று குறை கூறுகிறோம்.
சினிமா என்பதை உண்டாக்கியதே பொழுது போகத்தான். அதில் மசாலா கலவை இருப்பதில் தப்பு என்ன? ஒரு பொருள் சுவையாக‌ வரவேண்டுமானால் அதன் மூலப்பொருளுடன் வேறு பொருட்களையும் சேர்த்தால் தான் அந்த பதார்த்தம் சுவையாக வரும்.ஒரு BREAD தயாரிக்க மாவுடன் ஈஸ்ட், உப்பு,எல்லாம் சேர்த்து கலந்து செய்தால் தான் அது BREADஆக இருக்கும். வெறும் மாவை தண்ணீரில் குழைத்து வேக வைத்து கொடுத்தால் அதை தயாரித்தவன் முகத்தில் வீசி எறிவார்கள். சினிமாவும் அப்படிதான்.
மனித வாழ்க்கையே ஒரு மசாலா கலவை தானே.




நீங்கள் சொல்வதை பார்த்தல் விபச்சாரம் செய்தவன் தான் விபச்சராம் பற்றி பேச வேண்டும் எனபது போலவும் திருடியவன் தான் திருட்டை பற்றி பேச வேண்டும் என்பதை போலவும் அல்லவே உள்ளது இது எப்படி சரியான உதரணாமாக ஆகா முடியும்?


விபச்சாரம் என்றால் என்ன? திருட்டு என்றால் என்ன என்று தெரியாத விபரம் அறியாதவர்கள் அதை பற்றி பேசினால் அது சரிவருமா யூசுப் மச்சி?அதை பற்றி அடிப்படை அறிவு சரி வேண்டாமா அதைப் பற்றி பேச.
இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் 7ம் வகுப்பு படிக்கும் போது எனது கிளாஸ் டீச்சருடைய மகனும் எங்கள் வகுப்பில் படித்தான். டீச்சருடைய மகனிடம் ஒரு பையன் கற்ழிப்பது என்றால் என்ன என்று கேட்டான். அதற்கு வாத்தியாருடைய பையன் 'ரோட்டில் நாயும் நாயும் பண்ணுகிறதே அது தான் கற்பழிப்பு' என்றான்.
இப்படித்தான் இருக்கும் அடிபடை அறிவில்லாதவர்கள் பேசுவது.




அப்படி நீங்கள் அதை சரி கண்டால் அந்த நடிகைகளை அரைகுறை ஆடையோடு பார்ப்பது கூடும் என்றால் நாம் நம் சகோதரிகளை அப்படி பார்ப்பது போல் பார்போமா? பார்க்கத்தான் நினைப்போமா? அல்லது மற்றவன் தவறான எண்ணத்தோடு பார்க்கத்தான் விட்டு விடுவோமா?


இந்த அரைகுறை ஆடைகள் படத்தில் மட்டும் தானா யூசுப் மச்சி?
ந்ம் அண்டாட வாழ்க்கையில் தினம் தினம் தெருவில் இதை தானே பார்க்கிறோம். அதற்காக கண்ணை மூடிக்கொண்டா ரோட்டில் நடக்கிறோம்.உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டா போவீர்கள்?
அப்படி போவதென்றால் நான் பரலோகத்தில் தான் இருப்போம்.
மினி ஸ்கேட் என்ன, டைட் ஜீன்ஸ் என்ன, நீண்ட ஸ்கேட்டிலும் நடப்பதற்கு வசதியாக பாதியை கிழித்து விட்டு நடக்கும் போது முக்கால் வாசி கால் வெளியே தெரியும்.
அது மட்டுமா சாரி உடுத்துபவர்கள் கூட லோ ஹிப் என்ற பெயரில் வயிற்றின் அடியில் பயங்கர வளைவுகள் வரை இறக்கி கட்டுகிறார்கள்.
ஆடை இல்லாமல் இருப்பதை விட இப்படி இருப்பது தான் ஆபாசம் மச்சி. இதை எல்லாம் பார்த்து விட்டு யாரும் கண்ணை மூடிக்கொண்டு போவதில்லை. அதற்காக அதையே நினத்து கொண்டும் இருப்பதில்லை. சினிமாவும் அப்படித்தான்.




இன்றைய இளைஞர்கள் புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும்  சமுதாயத்தில் ஒரு உயர்ந்த செயலாக செய்வதற்கு காரணம் என்ன இதை யாரை பார்த்து பெரும்பான்மையான இளைஞர்கள் கற்றுகொண்டார்கள் இந்த சினிமா தானே காரணம்?


உங்கள் விவாதம் வேடிக்கையாய் இருக்கிறது யூசுப் மச்சி.அப்போ சினிமா இல்லா விட்டால் மது அருந்துவதும் புகை பிடிப்பதும் உலகில் இருக்காது என்று சொல்கிறீர்கள். நல்ல வரவேற்கப்பட வேண்டிய கருத்துக்கள் தான்.

சினிமா என்பது மனிதனுடய சிந்தனையில் உருவாவது. அவன் மனித செயல்களை வைத்துத் தான் சிந்த்தித்து சினிமாவை தயாரிக்கிறான்.அதை வேண்டுமானால் கொஞ்சம் நவீனமயப்படுத்துகிறான். மொத்ததில் மனிதன் எதை செய்கிறார்களோ அது தான் சினிமாவாக வெளியே வருகிறது.
சினிமா முழுவதும் புகை பிடிப்பதில்லை. சினிமா முழுவதும் மது அருந்துவது இல்லை. ஆனால் வீடுகளில் தன் மகனிடமே பணம் கொடுத்த்து சிகரெட் வாங்கிவரச் சொல்லி  மகன் முன்னால் நாள் முழுக்க ஊதித்தள்ளும் தந்தைகள் ஏராளம் இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் முன்னால் மது அருந்தும் பெற்றோர் வீதிக்கு வீதி இருக்கிறார்கள். குடிப்பதும் புகைப்பதும் எல்ல படங்களிலும் வருவதில்லை. வீட்டில் தினமும் இதை பார்த்து கெடாத பிள்ளைகள் மாதத்தில் ஒரு படத்தில் ஒரு சில காட்சிகளில் வருவதை பார்த்து விட்டு கொட்டுப் போகிறார்கள் என்பது வேடிக்கையாக இல்லை?

யூசுப் மச்சி எனது அப்பா பெரிய குடிகாரர்.அவர் குடித்த்து விட்டு வந்து வீட்டையே இரண்டு பண்ணுவார். அம்மாவை எங்கள் கண்முன்னால் சித்திரவதை பண்ணுவார், தினமும் இதை பார்த்து பார்த்து, எனக்கும் எனது அண்ணாக்களுக்கும் குடிக்க வேண்டும் என்ற ஆசை வரவில்லை. மாறாக வாழ்வில் என்றும் அதை தொடக்கூடாது என்ற வைராக்கியமே வந்த்தது. இன்று வரை நானும் எனடு அண்ணன்மார்களும் புகைத்ததும் இல்லை, குடித்ததும் இல்லை.
நீங்கள் சொல்லது போல பார்த்தால் நான் தான் பெரிய குடிகாரனாக இருந்திருக்க வேண்டும்.


சினிமா என்பது ஒரு வியாபாரம்.  மற்றவரை மகிழ்வித்து தானும் சம்பாதிக்கும் நோக்குடனேயே சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன. இதில் காந்தியார், பெரியார், வள்ளுவர் கதைகளை மட்டும் படமாக எடுத்தால் இந்த மூவரும் உயிரோடு இருந்தால் கூட போய்  பார்க்க மாட்டார்கள். அவர்கள் கதைகளை
நாம் பாடசாலைகளில் வேண்டிய மட்டும் படித்திருக்கிறோம். எத்தனையோ புத்தகங்களில் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை படித்திருக்கிறோம்.இதை சினிமாவிலும் பார்கணுமா என்ன?

ஏதோ ஒரு படத்தில் வரும் ஒரு ஆபாசம் என்று சொல்லும் நகைசுவையை ரசித்தவர்கள் படங்களில் நகைச்சுவை வாயிலாக நல்ல கருத்துக்களை சொன்ன கலைவாணர் கிருஸ்ணன் நினைவுக்கு வரவில்லையா. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைசுவைகள் அவைகள்.
திரைபடங்கள் வெறும் சிந்தை ஊட்டுவதாகவும், வெறும் போதனைகள் நிறைத்ததாகவும் மட்டும் இருந்தால் படம் எடுத்தவன் தலையில் துண்டை போட வேண்டியது தான்.
வேலைத்தளங்களில் பிரச்சனை, வீட்டில் பிரச்சனை இப்படி ஆயிரம் பிரச்சனை உள்ள மனிதன் படம் பார்க்க வருவது, தன் கவலைகளை மறந்து மனதை மகிழ்வூட்டத்தான்.
அங்கும் வந்து வாழ்க்கை வரலாற்றையும் போதனைகளையும் படமாக பார்த்தால் என்ன நடக்கும்?

ஒரு நல்ல படமோ கெட்ட படமோ ஓடுவதும் ஓடாததும் அந்த படத்தில் இல்லை. அதை பார்ப்பவர்களிடம் இருக்கிறது. ஒரு நல்ல தேசிய விருது பெற்ற படத்தை தியேட்டரில் ஓடிய 50 நாளும் பார்காமல் இருந்து விட்டு டிவியில் போடும் போது ஓசியில் பார்ப்பது சினிமாவின் பிழையா?



தான் பேசுவது தான் சரி என்ற மனப்பான்மை வாதத்திற்கு ஒத்து வராது


இங்கே வாதாடும் அனைவரும் அந்த மனப்பாங்குடன் தான் வாதாடுகிறார்கள்.இதை சொன்னவர்கள் உட்பட. அதுகு பேர் தான் விவாதம்.எதிரான கருத்தை சொல்வவர்கள் கருத்தை சரி என்று சொன்னால் அதுக்கு பெயர் விவாதமா?


கெட்டவர்களோடு கதா நாயகன் சண்டை போடுவது நல்லது என்று நீங்கள் கூறுகிறீர்கள் இப்படி ஒவ்வொருவரும் சட்டத்தை கையில் எடுத்தால் பிறகு எதற்கு ஒரு அரசாங்கம் காவல் துறை எல்லாம்

உங்கள் விவாதங்கள் வேடிக்கையாகத்தான் இருக்கிறது மச்சி.
உங்கள் அக்கா தங்கச்சி செண்டிமொண்டிலேயே ஒன்று கேட்கிறேன்.
உங்கள் முன்னால் உங்கள் சகோதரியை ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை தாக்கி உங்கள் சகோதரியை காப்பாற்றுவீர்களா? இல்லை சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று, நீ பண்ணுறத பண்ணு நான் காவல்துறையிடம் போறேன் என்று விட்டுட்டு போவீங்களா?
உண்மையான பதில சொல்லுங்க.செட்லயே ஒருதன் ஒரு நேரம் தேவையில்லாத மாதிரி பேசினா ஒரு தடவை இரண்டு தடவை சிரிக்கிற ஸ்மைலிய போடுவீங்க. அப்புறம் தாங்க முடியாம போனா கோபமா ஸ்மைலிய போடுவீங்க. ஒருத்தன் உங்களுக்க்கோ உங்க வீட்டாருக்கோ அடிகடி தொந்தரவு பண்ணினா தட்டிக் கேட்பீங்களா இல்ல சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று சும்மா இருப்பீங்களா?
அப்படி சும்மா இருத்தா ஆண்மகன் என்று யாரும் மதிக்க மாட்டாங்க. இதை தான் படத்திலும் காட்டுறாங்க. ஒரு வித்தியாசம் ரசிக்கணும் என் கிறதுக்காக கொஞ்சம் மிகை படுத்தி காட்டுறாங்க. படத்தை பார்த்துட்டு யாரும் அது போல சண்டை போடுறதா நான் எங்கும் கேட்கல. அப்படி சண்டை போடுறதா இருந்தா அவங்களும் ஸ்டண்ட் மாஸ்டர கூட்டிக்கிட்டு தான் வரணும்.

உங புள்ளி விபரங்களின் அடிபடையில் பார்த்தால் நம் நாட்டுல நல்ல இளைஞர்களே இருந்திருக்க மாட்டாங்க யூசுப்.
அமெரிக்கா கலாசாரம் வேற நம் கலாச்சாரம் வேற. அதை வைத்து நம் சினிமாவையும் எடை போடாதிங்க‌

கடைசியா ஒன்று கேட்கிறேன், நம் சினிமாக்களில் எந்த சினிமாவுல பெற்றோருக்கு முன்னால பிள்ளைகள் கிஸ் அடிக்கிறாங்க? நான் பார்த்த எந்த படத்திலும் அப்படி எதும் பார்க்கல. நீங்க யாராவது பார்த்தா எனக்கும் சொல்லுங்க பிளீஸ்

யூசுப் மச்சி சினிமா ஒரு நிழல்படம். அதில் கெடுறதை விட நேரடியா பார்க், பீச் போய் பாருங்க, எத்தனை நைட்கிளப்ஸ் இருக்கு அங்க போடத கூத்தா?
ஒரு சில மோசமான படங்கள் வரத்தான் செய்கின்றன, ஆனா நீங்க படம் பார்த்த காலத்துக்கும் இப்போதைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இப்போ வார படங்களில் கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. இந்த ஆடை அவிழ்ப்பு, கிளப் டான்ஸ் எல்லாம் இப்போ எடுபடுறதில்ல என்று தயாரிப்பார்கள் அறிந்து கொண்டார்கள். இப்போ வார படங்களில் கதாநாயகனுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறதில்ல.
நான் சொன்ன தெய்வத்திருமகன் படத்தை எடுத்துப் பாருங்கள். அந்த படத்தை பார்த்துடு வெளியில வந்த ஆண்கள் கூட கண்ணை துடைத்துக் கொண்டு தான் வெளியில வந்ததா விமர்சனதில் கூட வாசித்தேன்.அந்த படமும் 100 நாள் ஓடினது சிலருக்கு தெரியாது போல.
போதும் என்று நினைக்கிறேன்.
 
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: RemO on November 21, 2011, 02:50:06 AM
ஏஞ்சல்:
// நான் ஒன்றும் திரைப்படம் எல்லாம் போதி மரம் என்று சொல்ல விலையே வடிவ்வாக ப்ருங்கள்  நன்மை
 தீமை
கலந்து இருக்கிறது  .... நாம்தான் பகுத்தறிய வேண்டும் ..... குழந்தைகள் சிறுவர்கள் என்று கூறுகின்றீர்களே ....அவர்களை திரை படத்துக்கு
அழைத்து செல்லும், பெற்றோரை முதல் குற்றம்  சொல்லுங்கள்.  //

// இபவும் சொல்கிறேன் சிறுவர்களை திரை படத்திற்கு அழைத்து செல்வது பெற்றவர்கள் தவறு //

// இங்கே திரைப்படம் கெடுக்கின்றது என்று வாதிடுபவர்கள் அவ்வாறு சொலிக்க்கொண்டே அதை பார்வை இடுகின்றார்கள் ... அப்படி பார்வை இடுவதை தவிர்த்திருந்தால் திரை படங்களில் வரக்கூடிய ஆபாச கட்சிகளையும் ஆடை குறைபுகளையும் என்றோ கைவிட்டிருபார்கள் ....//

// இபவும் சொல்கிறேன் ... சினிமா போதி மரம் இல்லை ... ஞானத்தை மட்டும் கொடுக்க .... அது பொழுது போக்கு ... அதை பொழுது போக்காக பாருங்கள் ....  உங்களை நீங்களே குழப்பி கொள்ளாதீர்கள் ...//

ஏஞ்சல், சினிமாவில் சீர்கேடுக்கும் விஷயங்கள் உள்ளன , நாம் தான் அதை தவிர்க்கவேண்டும் என்பது தானே உங்கள் கருத்து?? இதை நீங்கள் தெளிவு படுத்தவேண்டும். நீங்கள் கூறிய அனைத்தும் அப்படிதான் நினைக்க தோன்றுகிறது.

சீர்கேடுக்கும் விஷயங்கள் உள்ளது என்றால் அவை கெடுக்க முயற்சிக்கிறது என்று தானே பொருள்.

நீங்கள் உரைத்தது போல் பாலிலிருந்து தண்ணீரை பிரித்து பருக அனைத்து பறவைகளும் அன்னப்பறவை அல்ல, அனைத்தும் அவ்வாறு பிரிக்க வேண்டும் என பாலில் நீர் கலப்பது போல் தான் உங்கள் கருத்து உள்ளது

தீயவற்றை காட்டி அதை ஊக்குவிப்பது சினிமாவும் என்பது என கருத்து.

எந்தவொரு குற்றத்தையும் செய்யத்தூண்டுவது செய்வதை விட குற்றம் அல்லவா??

நீங்களே அதில் தீயவை உள்ளன என்று கூறும் பொது அதை ஆதரிப்பது ஏன்??

தவறு இருக்கிறது, தவறு நடக்கிறது என தெரிந்தும் அதை நாம் விலகி தான் செல்ல வேண்டும் என வாதாடுவது சரியா??

//திரை படங்கள் இல்ல விட்டால் கட்ட பொம்மன் . பாரதியார் ,, பெரியார் ... போன்ற நம் முன்னோர் வீர தீர வரலாறு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் .... இல்லை எத்தை பேருக்கு புரிந்திருக்கும் ...? //

கட்ட பொம்மன்,பாரதியார்,பெரியார் பற்றி எல்லாம் திரைப்படங்கள் தான் மக்களுக்கு சொல்லியது என்றா நினைகிறீர்கள்?? அந்த திரைப்படங்களை நீங்கள் பார்த்தது உண்டா??
பெரியார் படத்தில் கூட அவரை பற்றி தவறாக எண்ணும் வகையில் ஒரு பாடல் அமைந்துள்ளது என செய்திதாளில் நான் படித்தேன். இவ்வாறு உயர்ந்த மனிதர் ஒருவரை பற்றி கூட தவறாக எண்ணத்தோன்றும் சினிமா சரிதானா???

// இன்று ஏழாம் அறிவு ஒன்றுதான் ....போதி தர்மன் என்பவரை பற்றி வெளி கொண்டு வந்திருகிறது ...இதை பத்திரிகையில் போடட்டு இருந்தால் எதனை பேரை அது சென்றடைந்திருக்கும் ...?  இப்படி எத்தனையோ ...//

இந்த படத்தின் விமர்சனத்தை நீங்கள் பதிவு செய்ததை நினைவு படுத்தவிரும்புகிறேன், http://www.friendstamilchat.com/forum/index.php/topic,1664.0.html (http://www.friendstamilchat.com/forum/index.php/topic,1664.0.html).

//இபவும் சொல்கிறேன் ... சினிமா போதி மரம் இல்லை ... ஞானத்தை மட்டும் கொடுக்க .... அது பொழுது போக்கு ... அதை பொழுது போக்காக பாருங்கள் ....  உங்களை நீங்களே குழப்பி கொள்ளாதீர்கள் ...//

தவறான பாதைக்கு கொண்டு செல்லும் பொழுதுபோக்கு ஆரோக்கியமான விசயமா சமுதாயத்திற்கு ??
-------------------------------------------------------------------------------------------------------
தமிழன் :
// அடுத்தது நான் சொன்ன படங்கள பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?//

1) தெய்வ‌த்திரும‌க‌ன்
2) இப்போதும் எப்போதும்
3) 7ம் அறிவு
4) 3 இடிய‌ட்ஸ்
5) வாகை சூட‌ வா
6) ச‌துர‌ங்க‌ம்
7) ப‌ச‌ங்க‌
8)பேராண்மை
9)சிங்க‌ம்

இவைகள் தானே நீங்கள் கூறிய படங்கள் இவை அனைத்தையும் பார்த்தவன் என்ற முறையில் நான் என் கருத்துகளை கூறுகிறேன்
1) தெய்வ‌த்திரும‌க‌ன்:
நான் ரசித்த திரைப்படம், ஆனால் இந்த படத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட நல்ல விஷயம் என்ன?? இதில் சமுதாயத்தை நல்வழி படுத்த எவ்வகையில் உதவியது??
நீங்கள் மிக நல்ல படம் என்று கூறும் இந்த திரைப்படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் கிடையாதா?? குழந்தைகளுடன் பார்க்க சிறந்த படம் என எண்ணி படம் பார்க்கையில் அந்த இரட்டை அர்த்த வசனங்கள் வரும் போது புரியாமல் கேள்வி கேட்க்கும் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்லமுடியும் பெற்றோர்களால்???

2) இப்போதும் எப்போதும் ( எங்கேயும் எப்போதும்)
இத்திரைப்படத்தில் சில நல்ல விசயங்களும் சில தவறான கருத்துகளும் உள்ளன. ஆனால் தவறான கருத்துகளை விட நல்ல விஷயங்கள் அதிகம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

3) 7ம் அறிவு
மேலேயே இந்த படத்தை பற்றிய தோழி ஏஞ்சல் பதிவிட்டுள்ள பதிவை பார்த்திருப்பீர் என நம்புகிறேன், அதனால் இங்கு மீண்டும் அதை பற்றி நான் கூற விரும்பவில்லை.

4) 3 இடிய‌ட்ஸ்
இந்த படத்தில் கவர்ச்சி இல்லையா?? இதில் முத்தம் கொடுப்பதில் உள்ள பிரச்னை பற்றி விவரிக்கவில்லையா? இந்த படம் பார்த்த பின்பு அதிகமானவர்கள் யோசித்தது அந்த முத்தத்தை பற்றிதான். :D கல்லூரியில் எப்படி ஒழுக்கமின்றி நடக்கலாம் என்பதை கூட இந்த படம் கூறுகிறது தானே?? நாயகன் ஒழுக்கமின்றி நடந்து படித்து முதல் மதிப்பெண் பெற்றால் அது சரியாகி விடுமா??
நள்ளிரவில் குடித்து விட்டு கல்லூரி முதல்வரின் வீட்டுக்கு காதல் சொல்ல செல்வது சரி என்று கூறும் இந்த திரைபடம் சரிதானா??

5) வாகை சூட‌ வா
 இந்த திரைப்படத்தில் தவறான விஷயம் ஏதும் இல்லை என நான் நினைக்கிறன். ஆனால் இதில் உள்ளது வெறும் கற்பனைக்கு மட்டும் சாத்தியம், இக்கால வாழ்க்கை இல்லை என்பாதல் இது மக்கள் மனதில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது என கருத்து

6) ச‌துர‌ங்க‌ம்
இந்த படத்தில் தேவை இல்லாத அந்த கவர்ச்சி எதற்கு என்பதை தெரிவிக்க முடியுமா தமிழன் ??

7) ப‌ச‌ங்க‌
ஆபாசமில்லாத சில நல்ல விசயங்களை காட்டிய படம்.

8)பேராண்மை
இந்த படத்தில் இல்லாத இரட்டை அர்த்த வசனங்கள் உண்டா என கேட்கும் அளவிற்கு இந்த படத்தில் உள்ளன. அதுவும் பெண்கள் பேசுவது போல் வருவது சரியா?? அதற்காக பெண்கள் பேசுவதில்லை என்று சமுதாயத்தில் இல்லாத ஒன்றை காட்டியதாகவோ நான் கூறவில்லை.
சமுதாயத்தில் இலைமறை காயாக இருப்பதை இப்படி வெளிச்சம் போட்டு காட்டி அருவருக்கத்தக்க வகையில் காட்ட வேண்டிய அவசியம் இல்லையே?? கல்லூரி வளாகத்தில் பெண் நிர்வாணமாக செல்வது, பிறந்தநாளை கொண்டாட கல்லூரி மாணவிகள் ஆணுறைகள் வாங்குவது போன்றவை சமுதாயத்தில் நடக்கிறதா என எனக்கு தெரியவில்லை

9)சிங்க‌ம்
இந்த படத்தில் நல்ல விஷயம் என அதுவும் எனக்கு தோன்ற வில்லை, உங்களுக்கு அப்படி எதாவது தோன்றினாள் கூறுங்கள் நானும் தெரிந்து கொள்வேன். இதில் கூட ஆபாசம் உள்ளதே. சில பாடல் காட்சிகளை மறைக்க முயற்சிதுள்ளனரே, ஆனாலும் முயற்சி முழுமையடையவில்லை.


நீங்கள் வந்த பல படங்களில் நல்ல படங்கள் என கூறியது வெறும் 9  படங்கள் தான் அதில் வெறும் மூன்று படங்கள் தான் சொல்ல தகுந்தவை என்பதை கூறியுள்ளேன்.அவற்றில் குறைகளை விட நிறைகள் அதிகமாக எனக்கு தெரிந்ததால்.

// நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கூட மசாலா கலவை கொஞ்சம் குறைந்தால் கூட இது சாப்பாடா என்று குறை கூறுகிறோம்.//
சுவைக்காக சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் தான் உடல் நலத்தை கெடுக்கிறது, அது போல் பொழுதுபோக்க மட்டும் உருவாக்க பட்ட சினிமா சமுதாயத்தை கெடுக்கிறதே ??

// ந்ம் அண்டாட வாழ்க்கையில் தினம் தினம் தெருவில் இதை தானே பார்க்கிறோம். அதற்காக கண்ணை மூடிக்கொண்டா ரோட்டில் நடக்கிறோம்.உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டா போவீர்கள்?
அப்படி போவதென்றால் நான் பரலோகத்தில் தான் இருப்போம்.
மினி ஸ்கேட் என்ன, டைட் ஜீன்ஸ் என்ன, நீண்ட ஸ்கேட்டிலும் நடப்பதற்கு வசதியாக பாதியை கிழித்து விட்டு நடக்கும் போது முக்கால் வாசி கால் வெளியே தெரியும்.
அது மட்டுமா சாரி உடுத்துபவர்கள் கூட லோ ஹிப் என்ற பெயரில் வயிற்றின் அடியில் பயங்கர வளைவுகள் வரை இறக்கி கட்டுகிறார்கள்.//

நன்றாக இருந்த நம் கலாச்சாரம் இவ்வாறு கலங்கி நிற்க சினிமாவும் ஒரு காரணம்தானே ! இதற்க்கு சினிமா காரணமே இல்லை என்று நினைத்தால் இவ்வாறு கலாச்சார சீர்கேடு ஏற்பட காரணிகள் என்பதை தெரியபடுத்தவும், நானும் தெரிந்து கொள்வேன்

//உங்கள் விவாதம் வேடிக்கையாய் இருக்கிறது யூசுப் மச்சி.அப்போ சினிமா இல்லா விட்டால் மது அருந்துவதும் புகை பிடிப்பதும் உலகில் இருக்காது என்று சொல்கிறீர்கள். நல்ல வரவேற்கப்பட வேண்டிய கருத்துக்கள் தான்.//

சினிமா புகை பிடிக்க தூண்டுகிறது என்பதற்கு ஒரு உதாரணம், பள்ளிகளில் சிறு குழந்தைகள் கூட பென்சிலை வாயில் style ஆக வைத்து புகைப்பது போல் பாவனை செய்வதை நிறைய பார்க்கலாம்
இதற்க்கு காரணம் சினிமா மட்டும் தான் , ஒரு கதாநாயகன் படத்தில் style ஆகா புகைப்பதை தான் முயற்சிக்கிறது அந்த குழந்தைகள். பள்ளி குழந்தைகள் என்பதால் பென்சிலை வைத்து முயர்த்திகிரார்கள் ஆனால் இளைஞர்களும், சில சிறார்களும் திருட்டுத்தனமாக கதாநாயகனை போல் புகைக்க முயற்சிப்பதை நான் பார்த்துள்ளேன். அங்கு சினிமா தானே சீர்கேடுக்கிறது

//சினிமா என்பது ஒரு வியாபாரம்.  மற்றவரை மகிழ்வித்து தானும் சம்பாதிக்கும் நோக்குடனேயே சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன. இதில் காந்தியார், பெரியார், வள்ளுவர் கதைகளை மட்டும் படமாக எடுத்தால் இந்த மூவரும் உயிரோடு இருந்தால் கூட போய் பார்க்க மாட்டார்கள். //
//திரைபடங்கள் வெறும் சிந்தை ஊட்டுவதாகவும், வெறும் போதனைகள் நிறைத்ததாகவும் மட்டும் இருந்தால் படம் எடுத்தவன் தலையில் துண்டை போட வேண்டியது தான்.
வேலைத்தளங்களில் பிரச்சனை, வீட்டில் பிரச்சனை இப்படி ஆயிரம் பிரச்சனை உள்ள மனிதன் படம் பார்க்க வருவது, தன் கவலைகளை மறந்து மனதை மகிழ்வூட்டத்தான்.
அங்கும் வந்து வாழ்க்கை வரலாற்றையும் போதனைகளையும் படமாக பார்த்தால் என்ன நடக்கும்?//


இங்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா சினிமாவில் சமுதாயத்தை கெடுக்கும் விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறது என

// யூசுப் மச்சி சினிமா ஒரு நிழல்படம். அதில் கெடுறதை விட நேரடியா பார்க், பீச் போய் பாருங்க, எத்தனை நைட்கிளப்ஸ் இருக்கு அங்க போடத கூத்தா? //

அங்கு அவ்வாறு நடக்க தூண்டுவது சினிமா தான்
-------------------------------------------------------------------------------------------------------

சினிமாவிற்கு இணையான தொலைக்காட்சி தொடரான சக்திமான் தொடரை பார்த்து உயிரை விட்ட குழந்தைகள் ஏராளம்

சினிமாவில் நல்ல கருத்துக்கள் இல்லை என நான் கூறவில்லை, நல்ல கருத்துகளை விட சமுதாயத்தை கெடுக்கும் விஷயங்கள் அதிகம் என்பது தான் என கருத்து. அதிகம் என்றால் மிக மிக அதிகம் நல்ல கருத்து சிறு கல் அளவில் இருக்கும் போது தீயவையோ பெரும் மலை போல் அசைக்கமுடியா அளவு உள்ளது.
நல்ல விஷயங்கள் எப்போதும் நத்தை போல செல்லும் போது தீயவை காட்டுத்தீயாய் முன்னேறும் என்பதால் தினையளவு மட்டும் நல்ல விஷயங்கள் கொண்ட சினிமா சமுதாயத்தை குறிப்பாக இளைஞர் சமுதாயத்தை கெடுகிறது

இது என் கருத்து தான், இதற்கான உங்கள் கருத்துகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Global Angel on November 21, 2011, 03:39:14 AM
ரெமோ ... நான் சொல்ல வந்தது ... நீங்கள் அப்படி ஆபாசம் இருபதாக கருதினால் அதை ஏன் ஆரம்பத்திலேயே தவிர்க்க முற்படவில்லை என்பதுதான் ..... சிறுவர்களை எதுக்கு படம் பார்க்க கூட்டி போகின்றீர்கள்

இதுதான் என் விவாதம்  தப்பு அவர்களை கூட்டி போகும் பெற்றவர்கள்தான் .... போதி தர்மன் பற்றி அறிந்து கொள்ள கூடியத்சக இருந்ததா கூறினேனே தவிர 7m  அறிவு திரைப்படமெடுத்த விதம் பற்றி நான் கூற வரவில்லை .... விவ்வதிபதர்க்கு முன் சரியாக புரிந்து கொள்வது அவசியம்

பத்திரிகையில் எழுதுவது எல்லாம் சரியா....?

ரெமோ இபவும் சொல்றேன் பொழுது போக்காக இருபத்தி அப்படியே பாருங்கள் ..... அதை வாழ்க்கையுடன் சமந்த படுத்த வேண்டாம் ...
அது சரி நீங்கள் எப்படி திரைப்படம் எல்லாம் பார்பீர்களா ...?
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on November 21, 2011, 12:58:48 PM
அனைவரின் விவாதமும் நன்று உங்களுடைய பல கேள்விகளுக்கு ரெமோ பதில் கொடுத்துள்ளதால் அதை தவிர்த்து முக்கியாமான கேள்விகளுக்கு பதில் கொடுக்கிறேன்!

 
Quote
குழந்தைகள் சிறுவர்கள் என்று கூறுகின்றீர்களே ....அவர்களை திரை படத்துக்கு
அழைத்து செல்லும், பெற்றோரை முதல் குற்றம்  சொல்லுங்கள்.

எஞ்சேல் உங்கள் போக்கு எப்போதும் தலைப்பை மீறியதாகவே உள்ளது. இங்கு தலைப்பு சினிமா இளைஞர்களை வழிகேடுக்கிறதா இல்லையா? என்பது  தானே தவிர சிறவர்கள் தவறான வழியில் செல்வதற்கு பெற்றோர்கள் தான் காரணாமா இல்லையா? என்பது  அல்ல. வேண்டுமானால் இதை தனி ஒரு தலைப்பாக நாம் விவாதிக்கலாம். அதனால் இளைஞர்கள் வழிகேடுகிரார்களா இல்லையா என்பதை பற்றி மட்டும் பேசுங்கள் எஞ்சேல்.

திரைப்படங்களில் தவறுகள் சிறுவர்களை வழிகேடுக்க கூடிய விடயங்கள் உள்ளன என்பதை உங்களின் இந்த கருத்தின் மூலம் எற்று கொள்கிறீர்கள்  என்பது உறுதி.

மீண்டும் கூறுகிறேன் தலைப்பை திசை திருப்புவது விவாதத்தின் ஆரோக்கியத்தை கேடுப்பதாக கருதப்படும். இந்த தவறை நீங்கள் ஆரம்பத்தில் இருந்து செய்து வருகிறீர்கள்.


Quote
யோசுப் திரைப்படம் அதனோட முன்னோடி நாடகங்கள் அதைப்பற்றி சொல்லி அதை கோடிட்டு  காடுவது எப்படி நான் விவாதிக்கும் கருத்தில் இருந்து மாறுபடுவதாக சொல்கின்றீர்கள் ....ஆடை குறைப்பு என்பது வருந்த தக்க விடயம் ... ஆனால் அதயும் மீறி அந்த திரை படங்களில் சொல்ல கூடிய கருத்தை நல்ல விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள் என்பதுதான் நம் வாதம் .....

இங்கு நாம் திரைப்படத்தை மட்டும் தான் விவாதத்திற்கு எடுத்துள்ளோம் அதன் முன்னோடிகளை பற்றி பேச வர வில்லை எஞ்சேல். ஆகவே மீண்டும் தலைப்பை மீறி விவாதத்தை தொடர்ந்துள்ளீர்கள் எஞ்சேல்.

Quote
விவாதம் என்று வாதிக்க முன்னர் நாம் விவாதிப்பது நமக்கு எப்படி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும் ...

இதை உங்களுக்கே நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன் விவாதத்தின் தலைப்பை உணர்ந்து விவாதம் செயுங்கள் தலைப்பை மீறி விவாத்திப்பது விவாதத்தை திசை திருப்புவதாகும்!

Quote
சும்மா விவாதத்துக்கு சமந்தம் இல்லாமல் நான் பேசுவதை  நிறுத்தி விட்டு முதல் நான் சொன்ன கருத்துகளை ஊன்றி கனவித்து உணர முயற்சி செய்யுங்கள்

இதையும் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்பிகிறேன் விவாத தலைப்பிற்கு சம்பந்தம் இல்லமால் பேசுவது நீங்களா நானா என்பதை சிந்தியுங்கள் ஏஞ்செல். நீங்கள் சிந்திக்க தவறினால் இந்த தலைப்பை பார்வையிட கூடிய வாசகர்களிடம் அந்த பொறுப்பை கொடுத்து விடுகிறேன். அவர்கள் நல்ல ஒரு தீர்ப்பை தரட்டும்.

நீங்கள் சொல்ல வரும் செய்திகளில் கருத்து உள்ளதாக எனக்கு தோன்ற வில்லை. அப்படி அதில் கருத்து உள்ளதென்றால் அதையும் வாசகர்களின் தீர்ப்பிற்கே விட்டு விடுகிறேன்.


Quote
இபவும் சொல்கிறேன் ... சினிமா போதி மரம் இல்லை ... ஞானத்தை மட்டும் கொடுக்க .... அது பொழுது போக்கு ... அதை பொழுது போக்காக பாருங்கள்

இந்த கருத்தில் இருந்து அது நல்லதை சொல்லவில்லை என்பதை எற்று கொள்கிறீர்கள் போல தோன்றுகிறது ஏஞ்செல். பொழுதுபோக்காக செய்வதற்கு எத்தனையோ நல்ல விடயங்கள் இருக்கும் பொழுது வழிகேடுக்க  கூடிய இதை ஏன் நாம் கண்டு கழிக்க வேண்டும் எஞ்சேல்.

உங்களுடைய பெரும்பான்மையான கேள்விகளுக்கு இது தான் என் பதில் மீதி கேள்விகளுக்கு நண்பர் ரெமோ பதில் கொடுத்து விட்டார்.

நான் முந்தய பதிவில் கேட்ட பல கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதில் ஏதும் இல்லை என்று நினைக்கிறன் இருந்து இருந்தால் இந்த பதிவில் பதிவு செய்திருப்பீர்கள்.

நீங்கள் வாதிடுவதில் இருந்து ஒரு கருத்து புரியவில்லை ஏஞ்செல். நீங்கள் இளைஞர்கள் சினிமாவால் சீற்படுத்தபடுகிரார்கள் என்று வாதிடுவது போல் எனக்கு எங்கும் தோன்ற வில்லை. இதில் இருந்தே நீங்கள் தலைப்பை திசை திருப்புகிறீர்கள் என்பது வாசகர்களுக்கு விளங்கும்.

இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா? இந்த தலைப்பில் நான் ரெமோ ஸ்ருதி மற்றும் செல்வன் ஆகியோர் சீர்கேடுக்கிறது என்று வாதிடுகிறோம் ஆனால் நீங்கள் மற்றும் தமிழன் சீற்படுத்துகிறது என்று தானே வாதிட வேண்டும் அதை விட்டு விட்டு தலைப்பிற்கு சம்மந்தம் இல்லாமல் பேசுகிறீர்கள்.

உதாரணத்திற்கு சினிமா ஒன்றும் போதி மரம் அல்ல என்று நீங்கள் தான் கூறினீர்கள் இதில் இருந்து விளங்குவது என்னவென்றால் சினிமா இளைஞர்களை சீற்படுத்தவில்லை என்று கூறிவிடீர்கள் என்று தான் நினைக்க தோன்றுகிறது.

உங்கள் வாதமே புரியாத புதிராக உங்களையே நீங்கள் குழப்பி கொள்கிறீர்கள். முதலில் ஒரு நிலையை எடுங்கள் சீற்படுதுகிறது என்று வாதிட வருகிறீர்கள இல்லை சீர்கேடுக்கிறது என்று பேச வருகிறீர்கள என்பதை நீங்கள் சிந்தித்து விட்டு பிறகு உங்கள் பதிவுகளை தலைப்பிற்கு உட்பட்டு பேசுங்கள்.

ஆகவே இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறது என்ற எனது நிலையில் நான் உறுதியுடன் இருக்கிறேன்!


அடுத்ததாக தமிழன் அவர்களின் விவாதத்திற்கு வருவோம்.

Quote
யூசுப் மச்சி நீங்க விபரம் தெரிஞ்சி சிந்திக்க ஆரம்பிச்ச பிறகு படம் பார்க்கிறத நிறுத்திட்டதா சொல்லுறீங்க. இது உங்க வாக்குமூலம். நீங்க விபரம் தெரிகிற‌துக்கு முன்னால சிந்திக்க தொடங்குறதுக்கு முன்னால படம் பார்த்து இருக்கலாம். இது நல்லதா கெட்டதா என்று விபரம் தெரியாத பருவத்தில் சரியா பிழையா என்று சிந்திக்க ஆரம்பிக்கு முன்னர் படம் பார்த்துட்டு அது சரியில்லை என்று எப்படி சொல்ல முடியும்?
விபரம் தெரிஞ்ச பின்னால சிந்திக்க ஆரம்பிச்சதில இருந்து படம் பார்க்கிறத நிறுத்திட்டிங்க. அப்புறம் எதை வைத்து சினிமா சரியில்லை என்று சொல்லுறீங்க? உங்களுக்கு விபரம் தெரிந்த பிறகு, சிந்திக்க தொடங்கின பிறகு தான் நீங்க சினிமா பார்க்கவில்லையே.
மறுபடி நான் விபரம் தெரிந்த பிறகு, சிந்திக்க தொடங்கின பிறகு படங்கள் பார்த்துட்டு தான் பார்க்கிறதை நிறுத்தினேன் என்று சொல்லப் போறீங்க.

தமிழன் நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வில்லை என்பது எனக்கு நன்றாக விளங்குகிறது. நான் விவரம் தெரிந்து சிந்திக்க தெரிந்ததில் இருந்து சினிமா பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என்பது தான் இதன் பொருள் நான் சிந்திக்க தொடங்கி இந்த சினிமா இப்படி மக்களை சீரளிக்கிரதே என்பதை புரிந்து நல்லதுக்கு பயன்பட வேண்டிய சினிமா இப்படி வழிகேடுக்க பயன் படுகிறதே என்பதை புரிந்து தான் அதை பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என்பது தான் பொருள். நீங்கள் கருத்தை தவறாக புரிந்து கொண்டீர்கள்  என்று நினைக்கிறன்.

சிந்திப்பது என்பதன் பொருள் அதில் இருக்க கூடிய தவறுகளை பற்றி சிந்திப்பது தான். நல்லதா கேட்டதா என்பதை பற்றி சிந்திப்பது தான். ஒரு வேலை உங்களுக்கு சிந்திப்பதின் பொருள் தெரியவில்லை என்று கருத வைக்கிறது தமிழன்.


Quote
விபச்சாரம் என்றால் என்ன? திருட்டு என்றால் என்ன என்று தெரியாத விபரம் அறியாதவர்கள் அதை பற்றி பேசினால் அது சரிவருமா யூசுப் மச்சி?அதை பற்றி அடிப்படை அறிவு சரி வேண்டாமா அதைப் பற்றி பேச.
இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் 7ம் வகுப்பு படிக்கும் போது எனது கிளாஸ் டீச்சருடைய மகனும் எங்கள் வகுப்பில் படித்தான். டீச்சருடைய மகனிடம் ஒரு பையன் கற்ழிப்பது என்றால் என்ன என்று கேட்டான். அதற்கு வாத்தியாருடைய பையன் 'ரோட்டில் நாயும் நாயும் பண்ணுகிறதே அது தான் கற்பழிப்பு' என்றான்.
இப்படித்தான் இருக்கும் அடிபடை அறிவில்லாதவர்கள் பேசுவது.

நீங்கள் கொடுத்து இருக்க கூடிய உதாரணம் நகைச்சுவையாக உள்ளது தமிழன். நீங்கள் என்னை 7 ம் வகுப்பு சிறுவனாக கருதி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் அதன் காரணத்தால் தான் இப்படி பட்ட ஒரு உதாரனத்தை கொடுத்துளீர்கள். நீங்கள் சொல்லும் கருத்தில் இருந்து இன்று விபசாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களும் திருட்டுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களும் இதற்க்கு முன் விபச்சாரம் செய்தவர்கள் தான் திருடியவர்கள் தான் என்று கூறுவது போல் உள்ளது.

இதை அவர்கள் பார்த்தால் உங்கள் மீது மான நஷ்ட்ட வழக்கு போட்டாலும் போடுவர்கள் தமிழன் கருத்து கூறுவதற்கு முன் இந்த கருத்து நாம் கூறும் நபருக்கு பொருந்துமா என்பதை சிந்தித்து கூறவேண்டும் தமிழன்.

இதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியா அவசியம் இல்லை ஏனென்றால் உங்களுக்கு விவாதம் அல்வா சாப்பிடுவது போன்றது தமிழன். இதை நீங்கள் தான் கூறினீர்கள்.


Quote
இந்த அரைகுறை ஆடைகள் படத்தில் மட்டும் தானா யூசுப் மச்சி?

இந்த கேள்விக்கு ரெமோ பதில் தந்து விட்டார் மறுபடியும் நான் பதில் தர விரும்புகிறேன். இப்படி அரை குறை ஆடை அணிவதற்கு பெண்களை தூண்டியதே இந்த சினிமா தானே. இந்த சினிமா வருவதற்கு முன் பெண்கள் அரைகுறை ஆடை உடுத்தினார்களா? தமிழன் நீங்கள் சொல்லும் எல்ல கருத்துக்களுமே இப்படி தான் முரணானவையாகவே உள்ளது.

நான் கேட்ட கேள்விக்கு தகுந்த பதிலாக இதை நான் கருத வில்லை தமிழன். நான் கேட்டது சினிமாவில் வருவதை போன்று நம் சகோதரிகளை பார்க்க விரும்புவீர்களா என்று தான். நிச்சயாமாக சுயமரியாதையும் உணர்ச்சியும் ரோஷமும் உள்ள ஒருவன் அவ்வாறு பார்க்க விரும்ப மாட்டான் நம் சகோதரிகளை.


Quote
உங்கள் விவாதம் வேடிக்கையாய் இருக்கிறது யூசுப் மச்சி.அப்போ சினிமா இல்லா விட்டால் மது அருந்துவதும் புகை பிடிப்பதும் உலகில் இருக்காது என்று சொல்கிறீர்கள். நல்ல வரவேற்கப்பட வேண்டிய கருத்துக்கள் தான்.

நீங்கள் இப்படி ஒரு பதில் தந்திருப்பது எனக்குத்தான் வேடிக்கையாய் இருக்கிராது தமிழன். இந்த கேள்விக்கு ரெமோ அற்புதமான ஒரு பதிலை பதிவி செய்து விட்டார். நான் சினிமா இல்லாவிட்டால் மதுவும் புகையும் இருந்திருக்கவே செய்யாது என்று எந்த இடத்திலும் கூற வில்லை. இளைஞர்கள் அதிகமாக வழி கேடுவதர்க்கு இதுவும் ஒரு காரணம் என்று தான் கூறினேன்.

சொல்லும் கருத்துக்களை தெளிவாக புரிந்து உங்கள் பதிலை அமையுங்கள் தமிழன். அவசரத்தில் பதில் கொடுத்தால் இப்படி தான் இடையில் மாட்டி கொள்ள வேண்டியது வரும்.


Quote
நாம் பாடசாலைகளில் வேண்டிய மட்டும் படித்திருக்கிறோம். எத்தனையோ புத்தகங்களில் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை படித்திருக்கிறோம்.இதை சினிமாவிலும் பார்கணுமா என்ன?

இதே பாட சாலையில் தானே நாம் கேட்டதை பார்க்க கூடாது கேட்டதை கேட்க்க கூடாது கேட்டதை பேச கூடாது என்று போதிக்கிறார்கள் அதை நீங்கள் மறந்து விடீர்கள் என்று நினைக்கிறன். மூன்று குரங்குகளை காட்டி இதை சொல்லி தந்திருப்பார்கள் ஆசிரியர்கள். நினைவு படுத்திப்பாருங்கள். பாடசாலையில் சொன்னதை ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டுவிடீர்களா தமிழன் மச்சி.

அதை உங்கள் வாழ்க்கையில் நடைமுறை படுத்தி இருந்தால் நீங்கள் இப்பொழுது இப்படி பேச முன்வதிருக்க மாட்டீர்கள் தமிழன்.


Quote
உங்கள் விவாதங்கள் வேடிக்கையாகத்தான் இருக்கிறது மச்சி.
உங்கள் அக்கா தங்கச்சி செண்டிமொண்டிலேயே ஒன்று கேட்கிறேன்.
உங்கள் முன்னால் உங்கள் சகோதரியை ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை தாக்கி உங்கள் சகோதரியை காப்பாற்றுவீர்களா? இல்லை சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று, நீ பண்ணுறத பண்ணு நான் காவல்துறையிடம் போறேன் என்று விட்டுட்டு போவீங்களா?
உண்மையான பதில சொல்லுங்க.செட்லயே ஒருதன் ஒரு நேரம் தேவையில்லாத மாதிரி பேசினா ஒரு தடவை இரண்டு தடவை சிரிக்கிற ஸ்மைலிய போடுவீங்க. அப்புறம் தாங்க முடியாம போனா கோபமா ஸ்மைலிய போடுவீங்க. ஒருத்தன் உங்களுக்க்கோ உங்க வீட்டாருக்கோ அடிகடி தொந்தரவு பண்ணினா தட்டிக் கேட்பீங்களா இல்ல சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று சும்மா இருப்பீங்களா?
அப்படி சும்மா இருத்தா ஆண்மகன் என்று யாரும் மதிக்க மாட்டாங்க. இதை தான் படத்திலும் காட்டுறாங்க. ஒரு வித்தியாசம் ரசிக்கணும் என் கிறதுக்காக கொஞ்சம் மிகை படுத்தி காட்டுறாங்க. படத்தை பார்த்துட்டு யாரும் அது போல சண்டை போடுறதா நான் எங்கும் கேட்கல. அப்படி சண்டை போடுறதா இருந்தா அவங்களும் ஸ்டண்ட் மாஸ்டர கூட்டிக்கிட்டு தான் வரணும்.

இந்த பதிலை பார்க்கையில் எனக்கு உண்மையில் சிரிப்பு தான் வந்தது தமிழன். நம் சகோதரிகளுக்கு  பாதுக்கப்பு கொடுக்கவோ அடிக்கடி வீட்டில் தொந்தரவு தருபவனயோ சமாளிக்க சினிமாவை பார்த்துதான் சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லையே. அது நம் இயல்பில் ஊறி போன ஒன்று தமிழன். சினிமாவை பார்த்து தான் அதில் வருவதை போன்று எதிரியை சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி ஒரு பதிலை நீங்கள் தந்திருப்பது விந்தையாக உள்ளது தமிழன்.

நம்முடைய பாதுகாப்பிற்காக போராடுவது நம் இயல்பில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் தமிழன். இதற்க்கு சினிமாவை ஒப்பிட்டு பேச வேண்டிய அவசியம் இல்லை.


Quote
உங புள்ளி விபரங்களின் அடிபடையில் பார்த்தால் நம் நாட்டுல நல்ல இளைஞர்களே இருந்திருக்க மாட்டாங்க யூசுப்.
அமெரிக்கா கலாசாரம் வேற நம் கலாச்சாரம் வேற. அதை வைத்து நம் சினிமாவையும் எடை போடாதிங்க‌

இங்கு நான் அமெரிக்காவில் நடந்த விடயங்களை மட்டும் குறிப்பிட வில்லை இந்தியாவில் நடந்த விவரங்களையும் தான் குறிப்பிட்டு இருந்தேன் மீண்டும் ஒரு முறை நன்றாக படித்து பாருங்கள் தமிழன்.

Quote
கடைசியா ஒன்று கேட்கிறேன், நம் சினிமாக்களில் எந்த சினிமாவுல பெற்றோருக்கு முன்னால பிள்ளைகள் கிஸ் அடிக்கிறாங்க? நான் பார்த்த எந்த படத்திலும் அப்படி எதும் பார்க்கல. நீங்க யாராவது பார்த்தா எனக்கும் சொல்லுங்க பிளீஸ்

நீங்கள் என் பதிலை சரியாக வாசித்தீர்கள என்று கூட எனக்கு தெரிய வில்லை. நான் சினிமாவில் பெற்றோர்களுக்கு முன் முத்தம் கொடுகிறார்கள் என்று சொல்ல வில்லை. பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து சினிமா பார்க்கும் பொது இப்படி பட்ட முத்த கட்சிகளும் படுக்கை அரை கட்சிகளும் வருகிறதே அதை தான் சொன்னேன். ரோசம் உள்ள யாரும் குடும்பத்தோடு அமர்ந்து இதை பார்க்க மாட்டார்கள் தமிழன். நமக்கு ரோசம் இருக்கிறதா இல்லையா என்பதை நாம் சுயபரிசோதனை செய்து கொள்வோம்.

Quote
யூசுப் மச்சி சினிமா ஒரு நிழல்படம். அதில் கெடுறதை விட நேரடியா பார்க், பீச் போய் பாருங்க, எத்தனை நைட்கிளப்ஸ் இருக்கு அங்க போடத கூத்தா?

இந்த பார்க் பீச் கலச்சாரம் தோன்றியதே சினிமாவினால் தான் என்று கூறுகிறேன். உங்களால் மறுக்க முடியுமா தமிழன். நைட் கிளப்புகளை கட்டியதே சினிமா தானே. இதையும் உங்களால் மறுக்க முடியுமா.

கடைசியாக ஒன்று கேட்கிறேன் தலைப்பிற்கு ஏற்ப நீங்கள் சினிமா சீற்படுதிகிறது என்று வாதிடுவது போல எனக்கு தோன்ற வில்லை நேநேகளும் தலைப்பை திசை திருப்புவது போல் உள்ளது தலைப்பிற்கு உட்பட்டு அடுத்த பதிவை அமைப்பீர்கள் என்று கருதுகிறேன்.

 ஆகா சினிமாதான் தீமையின் தாய்ச்சபை என்பதை நடுநிலையோடு இந்த விவாதத்தை படிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்.

உங்கள் கேள்விகளுக்கு பொருத்தமான பதிலை தந்திருப்பேன் என்று நினைகிறேன். அப்படி உங்களுக்கு இதில் திருப்பதி இல்லை என்றால் அடுத்தமுறை இதை விட சிறப்பாக பதில் தர என்னை படைத்த இறைவன் எனக்கு அருள் புரிய வேண்டும்.


எஞ்சேல் உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

Quote
பத்திரிகையில் எழுதுவது எல்லாம் சரியா....?

பத்திரிக்கையில் எழுதும் எல்லாம் சரி என்று ஒரு போதும் நான் சொல்லவே மாட்டேன். அனால் அது தெரிந்த நீங்கள் ஏன் 7 ம் அறிவு படத்தின் விமர்சனத்தை ஏன் பதிவு செய்தீர்கள் என்ற கேள்வி எழும்புகிறது. சரி இல்லாத ஒன்றை என் நீங்கள் பதிவு செய்தீர்கள்.

நீங்கள் கொடுத்திருக்கும் பலவீனமான கருத்தில் இருந்தும் தலைப்புக்கு பொருந்தாத கருத்தில் இருந்தும் என் நிலை இன்னும் உறுதியாக ஆகிறது அதற்க்கு வழிவகை செய்துதந்த உங்களுக்கு நன்றி எஞ்சேல்.

மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக கூறுகிறேன் இளைஞர்களை சீர்க்டுக்கத்தான் இந்த சினிமா பயன் படுகிறது என்பதை கூறி கொண்டு அடுத்த பதிவில் இறைவன் நாடினால் சிந்திப்போம்.

நல்ல விடயங்களை மனக்கசப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இறைவன் நமக்கு தர வேண்டும்!!!
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Global Angel on November 21, 2011, 02:20:14 PM
Quote
குழந்தைகள் சிறுவர்கள் என்று கூறுகின்றீர்களே ....அவர்களை திரை படத்துக்கு
அழைத்து செல்லும், பெற்றோரை முதல் குற்றம்  சொல்லுங்கள்.
எஞ்சேல் உங்கள் போக்கு எப்போதும் தலைப்பை மீறியதாகவே உள்ளது. இங்கு தலைப்பு சினிமா இளைஞர்களை வழிகேடுக்கிறதா இல்லையா? என்பது  தானே தவிர சிறவர்கள் தவறான வழியில் செல்வதற்கு பெற்றோர்கள் தான் காரணாமா இல்லையா? என்பது  அல்ல. வேண்டுமானால் இதை தனி ஒரு தலைப்பாக நாம் விவாதிக்கலாம். அதனால் இளைஞர்கள் வழிகேடுகிரார்களா இல்லையா என்பதை பற்றி மட்டும் பேசுங்கள் எஞ்சேல்.

யோசுப் சிறுவர்களை சினிமா சீர் கெடுப்பதாக நீங்கள் சொல்லும் பொது அதற்கான கரணம் பெற்றோர் சினிமாக்கு அழைத்து செல்வது என்று சொனால் அது எப்படி தலைப்புக்கு சமந்தமிலாமல் போகும் ...முதல் ஒழுங்காக விளங்கி கொண்டு நீங்கள் வாதிட்டால் நன்று ... எதிர் வாதம் செய்யவேண்டும் என்றும் வாதிப்பவர் மூக்கை உடைக்க வேண்டும் என்றும் முயற்சி செய்து உங்கள் வாத திறமையை நீங்களே குறைத்து கொள்ளாதீர்கள் ....சிறுவர்களை சினிமாக்கு அழைத்து செல்வது தவறு இல்லை அப்படி என்று சொல்ல வருகின்றீர்கள்
போலும் .  யோசுப் சினிமா சீர் கெடுக்கவில்லை என்று வாதிடும் போது நாம் சினிமா சமுகம் சமந்தமான கருத்துகளை முன்வைக்கவேண்டிய அவசியம் இருக்கிறது .... அதை நீங்கள் எப்படி வேறு ஒன்றை விவாதிபதாக சொல்லாம் ....? சினிமா சமுகத்தில் ஒன்று ...அதை சமூகத்தோடு ஒப்பிட்டுதான் பேச முடியும் ... சும்மா சும்மா உங்களுக்கு கருத்து தெரிவிக்கவோ நான் சொனதை ஏற்கவோ மனது ஒப்பாமல்  வீர விடயம்தான் விவாதிப்பதாக சொல்கிறீர்கள் ...


Quote
யோசுப் திரைப்படம் அதனோட முன்னோடி நாடகங்கள் அதைப்பற்றி சொல்லி அதை கோடிட்டு  காடுவது எப்படி நான் விவாதிக்கும் கருத்தில் இருந்து மாறுபடுவதாக சொல்கின்றீர்கள் ....ஆடை குறைப்பு என்பது வருந்த தக்க விடயம் ... ஆனால் அதயும் மீறி அந்த திரை படங்களில் சொல்ல கூடிய கருத்தை நல்ல விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள் என்பதுதான் நம் வாதம் .....
இங்கு நாம் திரைப்படத்தை மட்டும் தான் விவாதத்திற்கு எடுத்துள்ளோம் அதன் முன்னோடிகளை பற்றி பேச வர வில்லை எஞ்சேல். ஆகவே மீண்டும் தலைப்பை மீறி விவாதத்தை தொடர்ந்துள்ளீர்கள் எஞ்சேல்.

யூசுப் முதல் நாங்கள் சொல்ல வாரத்தை புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் சினிமா கெடுப்பதாக சொன்னால் ... நாங்கள் சினிமா எப்படி கெடுக்கும் அது எப்போ தோன்றியது .. அப்போது இது இருந்ததா அதற்கு முன் இல்லையா ... இப்படியான கருத்துகளை சொல்ல கடமை பட்டு இருக்கின்றோம் ... சும்மா குதிரைக்கு கடிவாளத்தை பூட்டியது போல நேர பாரகம ....நாங்க சொல்றதையும் பாருங்க .... சினிமா கெடுகின்றது சமுகத்தை  என்று நீங்கள் சொல்லி விட்டு போகலாம் .... நாங்கள்  கெடுக்கவில்லை என்று வாதிடும் போது .... சினிமா கெடுக்கவில்லை என்றால் அப்போ வேறு என்ன என்பதை சுட்டி காட்ட வேண்டும் .... சும்மா கெடுக்கவில்லை கெடுக்கவில்லை என்றால் அது வாதத்துக்கு ஒவ்வாத வாதம் .


Quote
விவாதம் என்று வாதிக்க முன்னர் நாம் விவாதிப்பது நமக்கு எப்படி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும் ...
இதை உங்களுக்கே நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன் விவாதத்தின் தலைப்பை உணர்ந்து விவாதம் செயுங்கள் தலைப்பை மீறி விவாத்திப்பது விவாதத்தை திசை திருப்புவதாகும்!

நீங்கள் தான் நீங்கள் சொல்வது சரி என்ற ரீதியில் விவாதித்துகொண்டு இருகின்றீர்கள் .. எதிர் வாதம் சேயும் நாம் முட்டாள்கள் என்ற ர்தியில் கருத்து சொல்கிறீர்கள் .....நான் விவாதத்தின் தலைப்பில் இருந்தது பிறழவில்லை .... நீங்கள் புரிந்தலில் தவறை வைத்துக்கொண்டு ... எனது வாதத்திற்கு பதில் சொல்ல முடியாத நிலைமையில் அதை தலைபிற்கு ஒவ்வாத விவாதம் என்று சொல்கின்றீர்கள் .

தமிழன் தேவையான பதிலை உங்களுக்கு கொடுத்திருக்கும் போது நான் திரும்பவும் அதை சொல்வதில் என்ன பயன் இருக்கும்... எனவேதான் நான் உங்கள் கருத்துகளுக்கு மறு வாதம் செய்து கொண்டு இருகின்றேன் .... எங்கயோ கிடைத்த சினிமா பற்றிய புள்ளி விபரங்களை எடுத்து வைத்து கொண்டு வாதத்தில் நீங்கள் தன சிறப்பாக வாதிடிவதாக நினைத்து கொண்டால் அது எப்படி சரியாக முடியும் ...  தமிழன் சொன்ன கருத்தை நான் திரும்ப கோப்பி பேஸ்ட் பண்ணவா வேண்டும்...? நாம் தரப்பில் ஒருவர் சினிமா எப்படி சீர் கெடுகின்றது என்று சொன்னால் போதாதா ...? நீங்கள் எதையும்  ஒருவர் ஒருக்கால் சொன்னால் புரிந்து கொள்ள மாட்டீர்கள் போல் தெரிகிறது .... அதற்க்கு நான் ஒன்றும் செய்ய முடியாது ....

நீங்கள் சினிமா 100 % நல்லதை சொல்ல வேண்டும் என்று சொல்கின்றீர்கள் அதைத்தான் சொல்ல வந்தேன் சினிமா ஒன்றும் போதி மரம் இல்லை என்று ....சினிமா என்பது பொழுது போக்கு சாதனம் .... நாள் முழுக்க உடல் வருத்தி வேலை செயும் மனிதன் தன மன உடல் களைப்பை போக்குவதற்காக  ஒரு 21 /2  அணி நேரம் செலவு செய்கிறான் ... அதில் அவன் தன் கவலைகளை மறந்து சந்தோசத்தை எதிர் பார்ப்பனா ... இல்லை அவளவு நேரமும் போதனையை எதிர் பார்பானா .....? உங்களுக்கு போதனை வேண்டும் என்றால் அதற்கென்று உள்ள இடங்களுக்கு செல்லலாமே ....(இதை கூட சொல்லுவீர்கள் வாதத்திற்கு வெளியே போவதாக ஹஹஹா )

பொழுது போக்கு அம்சங்களில் போதனையை எதிர் பார்காதிர்கள் அதே போல போதனை செய்யும் இடத்தில பொழுது போக்கினை எதிர் பார்காதிர்கள் ....பொழுது போக்கு பொழு போக்காகவே இருக்கட்டும் இருக்க விடுங்கள் ...  எங்கு எதிலும் போதனை போதனை போதனை என்றால் ..... எலோரும் சந்நியாசிகள் ஆகத்தான் போக வேண்டும் ... அதற்க்கு மக்கள் தயாரில்லை ....  மக்கள் விருபதிற்குதன் சினிமா ...
சினிமாவில் சொல்ல வேண்டிய அளவுக்கு தந்தை தாய் சகோதர நட்பு உறவு பசங்கள் .... சமுக சிந்தனைகள் தேச பற்று எல்லாமே சொல்ல பட்டு இருக்கிறது .... அதை மீறினால் வரக்கூடிய விளைவுகள் எல்லாம் சொல்ல பட்டு இருக்கிறது ....நீங்கள் கேட்கும் தனியான வழிகாட்டல் மற்றைய தொலைகாட்சி நிகழ்வுகளில் உள்ளது ... ஆன்மிகம் .... போதனை ..... வயலும் வாழ்வும் ... சமையல் ...இப்படி ஒவோன்ருக்கும் தனி தனியாக பிரித்து தினம் தினம் போடுகின்றார்கள் சேனலில் .... அது போதாது என்று .... சந்தோசமாக போய் உக்கார்ந்து படம் பார்க்கும் இடத்திலும் நீங்கள் இதை எதிர் பார்த்தால் எப்படி .... தினம் தினம் காட்டப்படும் வழக்கமான தொலைகாட்சி நிகழ்வுகளில் போதனையை கருத்துகளை ஏற்காத மக்கள் திரை படத்தில்தான் .. அதில் போதித்தால்தன் ஏற்று கொள்வார்கள் எனவே அதில் போதனையை மட்டும் கொடுங்கள் என்று சொல்வது .... நம் மக்களை நீங்கள் மந்தைஆடுகள் போல் என்று சொல்லாமல் சொல்வதாக இருக்கிறது .....

உங்களுக்கு தேவையானதை மறைய தொலைகாட்சி நிகழ்வுகள் தினம் கொடுகின்ற போது அதை சினிமாவிலும் 2.30  மணி நேரம் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது ஞாயம் இல்லை ....

யோசுப் இபோகூட சொல்லுவீர்கள் நான் விவாதத்தை திசை திருப்புவதாக ....நன்றாக படியுங்கள் விவாதம் திசை திருப்ப படவில்லை .... நான் விவாததுகேல்லேதான் நிகின்றேன் ....சினிமா என்றால் என்ன அதற்குள் எதை எதிர் பார்க்கலாம் பார்க்க கூடாது ..... என்ன உள்வாங்கலாம் வாங்க கூடாது ..... சினிமாவில் ஏன் அதை எதிர் பார்கின்றீர்கள் அது வேறு வடிவில் கிடைக்கும்போது ...... இப்டியான கேள்விகளை உள்வாங்கியே எனது பதில் அமைந்துள்ளது ..... எனவே நான் சொனதை சினிமா கண்ணோட்டத்தோடு பாருங்கள் .... தெள்ள தெளிவாக புரியும் .




Quote
இதை அவர்கள் பார்த்தால் உங்கள் மீது மான நஷ்ட்ட வழக்கு போட்டாலும் போடுவர்கள் தமிழன் கருத்து கூறுவதற்கு முன் இந்த கருத்து நாம் கூறும் நபருக்கு பொருந்துமா என்பதை சிந்தித்து கூறவேண்டும் தமிழன்.

யூசுப் ஈங்கே சினிமா சீர் கெடுகிறத இல்லையா என்பதுதான் விவாதம்  கருத்துகளை தவறா கூறினால் மான நஷ்ட வழக்கு போடுவார்களா மாடார்கள என்பது இல்லை.... எனவே நீங்கள் தலைப்பினை உள்வாங்கி விவாதிப்பது நன்று ... நீங்கள் விவாதத்தை திசை திருப்ப பார்கின்றீர்கள் ....  


Quote
உங்கள் விவாதங்கள் வேடிக்கையாகத்தான் இருக்கிறது மச்சி.
உங்கள் அக்கா தங்கச்சி செண்டிமொண்டிலேயே ஒன்று கேட்கிறேன்.
உங்கள் முன்னால் உங்கள் சகோதரியை ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை தாக்கி உங்கள் சகோதரியை காப்பாற்றுவீர்களா? இல்லை சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று, நீ பண்ணுறத பண்ணு நான் காவல்துறையிடம் போறேன் என்று விட்டுட்டு போவீங்களா?
உண்மையான பதில சொல்லுங்க.செட்லயே ஒருதன் ஒரு நேரம் தேவையில்லாத மாதிரி பேசினா ஒரு தடவை இரண்டு தடவை சிரிக்கிற ஸ்மைலிய போடுவீங்க. அப்புறம் தாங்க முடியாம போனா கோபமா ஸ்மைலிய போடுவீங்க. ஒருத்தன் உங்களுக்க்கோ உங்க வீட்டாருக்கோ அடிகடி தொந்தரவு பண்ணினா தட்டிக் கேட்பீங்களா இல்ல சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று சும்மா இருப்பீங்களா?
அப்படி சும்மா இருத்தா ஆண்மகன் என்று யாரும் மதிக்க மாட்டாங்க. இதை தான் படத்திலும் காட்டுறாங்க. ஒரு வித்தியாசம் ரசிக்கணும் என் கிறதுக்காக கொஞ்சம் மிகை படுத்தி காட்டுறாங்க. படத்தை பார்த்துட்டு யாரும் அது போல சண்டை போடுறதா நான் எங்கும் கேட்கல. அப்படி சண்டை போடுறதா இருந்தா அவங்களும் ஸ்டண்ட் மாஸ்டர கூட்டிக்கிட்டு தான் வரணும்.
இந்த பதிலை பார்க்கையில் எனக்கு உண்மையில் சிரிப்பு தான் வந்தது தமிழன். நம் சகோதரிகளுக்கு  பாதுக்கப்பு கொடுக்கவோ அடிக்கடி வீட்டில் தொந்தரவு தருபவனயோ சமாளிக்க சினிமாவை பார்த்துதான் சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லையே. அது நம் இயல்பில் ஊறி போன ஒன்று தமிழன். சினிமாவை பார்த்து தான் அதில் வருவதை போன்று எதிரியை சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி ஒரு பதிலை நீங்கள் தந்திருப்பது விந்தையாக உள்ளது தமிழன்.

நம்முடைய பாதுகாப்பிற்காக போராடுவது நம் இயல்பில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் தமிழன். இதற்க்கு சினிமாவை ஒப்பிட்டு பேச வேண்டிய அவசியம் இல்லை.

இதைத்தானே நாமும் சொல்றம் .... இதெல்லாம் சமுகத்தில நடக்குற ஒன்று அதைத்தான் சினிமா வெளிக்கொண்டு வருது ..... அதை ரசிபதர்காக கொஞ்சம் மிகை படுத்தி 10  பேருகூட சண்ட போடுற போல பண்றாங்கன்னு ....இப்போ நீங்கலவே எத்துகிடீங்க அதை ...
(படத்தை பார்த்துட்டு யாரும் அது போல சண்டை போடுறதா நான் எங்கும் கேட்கல. அப்படி சண்டை போடுறதா இருந்தா அவங்களும் ஸ்டண்ட் மாஸ்டர கூட்டிக்கிட்டு தான் வரணும்.) நீங்கள் தமிழன் சொன்ன இந்த முடிவை கவனிக்கவில்லை ... இப்படிதான் நீங்கள் எல்லாவற்றிலும் .. அயோ அடிசுகுரங்க புடிசுகுரனணு கத்துறது ... அதுக்கு பின்னால என்ன சொல்றாங்க ... என்ன வருது என்று பார்கிறதே இல்லை .... உங்களுக்கு சாதகமா எதயாவது எடுத்து அதுக்கு வீண்வாதம் நாங்கள் சொல்லாத  அர்த்தம் கற்பித்து விவாதிகுரிங்க ....


Quote
யூசுப் மச்சி சினிமா ஒரு நிழல்படம். அதில் கெடுறதை விட நேரடியா பார்க், பீச் போய் பாருங்க, எத்தனை நைட்கிளப்ஸ் இருக்கு அங்க போடத கூத்தா?
இந்த பார்க் பீச் கலச்சாரம் தோன்றியதே சினிமாவினால் தான் என்று கூறுகிறேன். உங்களால் மறுக்க முடியுமா தமிழன். நைட் கிளப்புகளை கட்டியதே சினிமா தானே. இதையும் உங்களால் மறுக்க முடியுமா.

யூசுப் உங்களுக்கு வரலாற்று பதிவுகள் படித்து பழக்கம்  இல்லையா  ... பண்டைய மன்னர்கள் சோலை வனங்களிலும் .... கடற்கரை களிலும் சந்தித்து பேசுவதாக இருகின்றதே .. அந்த காலத்தில் அந்தபுரம் என்றும .... தேவமாதர் ( விபச்சாரிகள் ) என்றும் இருந்தது ....இப்டி எல்லாம் இருந்ததுதான் இன்று பார்க் பீச் நு மாறி இருக்கு ....  அந்த காலத்தில் சினிமா இல்லையே ...

Quote
பத்திரிகையில் எழுதுவது எல்லாம் சரியா....?
பத்திரிக்கையில் எழுதும் எல்லாம் சரி என்று ஒரு போதும் நான் சொல்லவே மாட்டேன். அனால் அது தெரிந்த நீங்கள் ஏன் 7 ம் அறிவு படத்தின் விமர்சனத்தை ஏன் பதிவு செய்தீர்கள் என்ற கேள்வி எழும்புகிறது. சரி இல்லாத ஒன்றை என் நீங்கள் பதிவு செய்தீர்கள்.

யூசுப் நீங்கள் ஏன் விவாதத்தை சரியாக படிபதில்லை ... அங்கே நான் சொல்லி இருகின்றேன் போதி தர்மன்  என்று ஒருதமிழன் இருந்தார்  என்பதை நம் மத்தியில் கொண்டு வந்திருகின்றார்கள் என்றுதானே ஒழிய... முருகத்ஸ் சூப்பர் பிலிம் எடுத்தார் .... சூர்யா நல்லா நடித்தார் உதயநிதி நிறைய காசு செலவு பணினார்  இப்டிய சொனேன் ......

பத்திரிகையில் வருவது எல்லாம் உண்மையான்னு பொதுவா கேட்டேன்  ...? யப்பா சாமி உங்களுக்கு வேனும்ன எதுக்கு எதுக்கு வேணும்னாலும் லிங்க் பண்ணுவிங்க போல .....

மற்றவர் கருத்துகளை உள்வாங்கி அதன் கருத்துகளை புரிந்து கொள்ளும் மனபக்குவத்தை நமக்கு கடவுள் கொடுக்கட்டும் ...!!!
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on November 21, 2011, 03:42:30 PM
எஞ்சேல் உங்கள் விவாதம் எப்படி இருக்கிறது என்றால் பழைய குருடி கதவை திறடி என்பதை போல் தான் இருக்கிறாது. எதனை முறை தலைப்பை புரிந்து விவாதம் செயுங்கள் என்று கூறினாலும் நீங்கள் அப்படி செய்வதாக தெரிய வில்லை தலைப்பை விட்டு வெளியே செல்லும் கேள்விகளுக்கு பதில் அளித்து ஏன் நேரத்தை வீணாக்க விரும்ப வில்லை.

செல்வம் கூறிய விடயங்களை இங்கு முன் வைக்க விரும்புகிறேன்.


இந்த விவாதத்தின் தலைப்பை சரியாக பார்ப்பது நன்று.
” இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?”


நீங்கள் சீற்படுத்துகிறது என்று கூறினால் எப்படி சீற்படுத்துகிறது எதனை பேர் திரைப்படத்தால் சீர்பெற்று இருகிறார்கள் என்பதை பேசுங்கள். அதை விட்டுட்டு காலத்திற்கேற்றார் போல மாறும் யாரும் ஞானி அல்ல என்று எல்லாம் பேசி அதை படிப்பதில் எங்கள் நேரத்தை வினடிக்காதீர்கள்.

அதே போல் நான் தலைப்பை மீறி இது வரை பேசி இருந்தால் சுட்டி காட்டுங்கள்.

மீண்டும் செல்வன் கூறியதை நினவு படுத்த விரும்புகிறேன்.


10 பேரில் 4  இளைஞர்கள் கெட்டு போகிறார்கள் . 6 இளைஞர்களை சினிமா சீர்படுத்துகிறதா ?6 இளைஞர்கள் சினிமாவால் உண்டாகும் சீர்கேட்டிலிருந்து தப்பித்து இருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டு என்ன இருக்கிறது ?.ஒட்டு மொத்தமாக பார்த்தால் இளைஞர்கள் சீர்கெட இந்த சினிமா காரணமாக இருக்கிறது. 10%கூட இளைஞர்களை சீர்படுத்த உதவியாய் சினிமா இல்லை.

தலைப்பை விட்டு விலகி செல்லும் கருத்துக்களும்,விவாதங்களும் இந்த விவாத மேடையை அர்த்தமற்றதாக ஆக்கி பலவீனமாக்கும் என்பது எனது கருத்து.

இப்பொழுது இந்த விவாதத்தை பலவீனமாகவும்  தேவை அற்றதை பேசி பார்வையாளர்களின் நேரத்தை வீணடிப்பது போலவே உள்ளது எஞ்சேல்.

சீற்படுதிகிராத இல்லையா? என்று நீங்கள் பேசாமல் பழைய கதை எல்லாம் கிளற வேண்டிய  அவசியம் இல்லை யாரிடம் கேட்டாலும் எளிமையான இரண்டு பதில்களை கூறுவார்கள் ஒன்று சீர்கேடுக்கிறது அல்லது சீற்படுத்திகிறது என்பது தான் அதை விட்டு விட்டு சினிமா பொழுது போக்கு அதை பொழுது போக்காக பாருங்கள் என்று கூறுகிறீர்கள். அது பொழுது போக்கு என்று எங்களுக்கு தெரியாத எஞ்சேல்.

தலைப்பு என்ன வென்றால் ” இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?” என்பது தான். நீங்கள் கூறும் பதில் சினிமா நல்ல பொழுதுபோக்க இல்லையா என்பதிற்கு வேண்டுமானால் பொருந்து இந்த தலைப்பிற்கு பொருந்தாது எஞ்சேல்.

சினிமா என்ற வார்த்தையை வைத்து மட்டும் வாதிட கூடாது.  இளைஞர்களை சினிமாசீர்கெடுக்கவில்லை,சீர்படுத்துகிறது என்று கருத்துகளை ஆதாரத்துடன் கூறி வாதிடுங்கள் அல்லது இளைஞர்களை சினிமா சீர்படுத்தவில்லை , சீர்கெடுக்கிறது என்று வாதிடுங்கள் .

Quote
யூசுப் ஈங்கே சினிமா சீர் கெடுகிறத இல்லையா என்பதுதான் விவாதம்  கருத்துகளை தவறா கூறினால் மான நஷ்ட வழக்கு போடுவார்களா மாடார்கள என்பது இல்லை.... எனவே நீங்கள் தலைப்பினை உள்வாங்கி விவாதிப்பது நன்று ... நீங்கள் விவாதத்தை திசை திருப்ப பார்கின்றீர்கள் ....

எஞ்சேல் இதை பார்த்தல் எனக்கு சிரிப்பு தான் வருகிறது என்ன என்று சொல்வது அவர் எனக்கு இந்த விவாதத்தில் பங்கு கொள்ள தகுதி  இல்லை என்றார் அதற்காக விளக்கத்தை நான் கொடுத்துள்ளேன். நான் விவாதிக்க தகுயற்றவன் என்றால் விபச்சாரத்தை எதிர்ப்பவர்களும் திருடுவதை எதிபவர்களும் அதை பற்றி பேச தகுதற்றவர்களா? என்று கேட்டேன் அதற்க்கு அவர் கூறியதிற்கு அவருக்கு நான் பதில் சொல்லவே மான நஷ்ட வழக்கை பற்றி பேசினேன். அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே அதை பற்றி பேசினேன்.

இதில் இருந்து வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் யார் சரியாக படித்து பார்க்காமல் விவாதம் புரிகிறார்கள் என்று. அதை வாசகர்களின் பொறுப்பில் விட்டு விடுகிறேன்.


Quote
யூசுப் உங்களுக்கு வரலாற்று பதிவுகள் படித்து பழக்கம்  இல்லையா  ... பண்டைய மன்னர்கள் சோலை வனங்களிலும் .... கடற்கரை களிலும் சந்தித்து பேசுவதாக இருகின்றதே .. அந்த காலத்தில் அந்தபுரம் என்றும .... தேவமாதர் ( விபச்சாரிகள் ) என்றும் இருந்தது ....இப்டி எல்லாம் இருந்ததுதான் இன்று பார்க் பீச் நு மாறி இருக்கு ....  அந்த காலத்தில் சினிமா இல்லையே ...

உண்மைதான் எஞ்சேல் எனக்கு வரலாற்று பதிவுகள் படிக்கும் அளவிற்கு திறமை இல்லை. அதே போல் என்னை போன்று வரலாற்று பதிவுகள் படிக்காத மக்கள் தான் இங்கு அதிகம் அப்படி இருக்கும் போது இந்த பீச், பார்க் எல்லாம் எப்படி இந்த இளைஞர்களுக்கு தெரிந்தது. ஒரு வேலை என்னை தவிர பீச் பார்க் என்று சுத்த கூடிய எல்லாம் இளைஞர்களும் வரலாற்று பதிவுகள் படித்து விட்டார்களோ என்னவோ?

அதிகாமான இளைஞர்களுக்கு வரலாற்று பதிவின் மூலம் பீச் பார்க் தெரிய வாய்ப்பில்லை சினிமாவின் மூலம் தான் தெரியும் என்பதை உறுதிபட கூருகிறேன் மறுக்க முடியுமா இனிமேல் உங்களால் எஞ்சேல்?


Quote
யூசுப் நீங்கள் ஏன் விவாதத்தை சரியாக படிபதில்லை

இதற்க்கு  பதிலை வாசகர்களிடமே விட்டு விடுகிறேன். நான் சரியாக படிப்பதில்லையா அல்லது நீங்களா என்பதை நடுநிலமையான வாசகர்கள் பதில் தரட்டும்.

Quote
மற்றவர் கருத்துகளை உள்வாங்கி அதன் கருத்துகளை புரிந்து கொள்ளும் மனபக்குவத்தை நமக்கு கடவுள் கொடுக்கட்டும் ...!!!
இதே பிராத்தனையை மீண்டும் நான் கேட்கிறேன்.

மீண்டும் செல்வன் கூறியதை சுட்டி காட்ட விரும்புகிறேன்.

கண்டிப்பாக விவாதத்தின் தலைப்பை விட்டுச்செல்லும் விவாதங்கள் இந்த விவாதத்தின் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கும். விவாதம் என்றால் எப்படிவேண்டுமென்றாலும் விவாதம் செய்வது மட்டுமே அல்ல. கொடுக்கப்பட்ட தலைப்புக்கு ஏற்றபடி விவாதம் செய்வதே சரி. இரண்டு முரணான கருத்துக்களில் ஒன்றை சரி என்ன சொல்ல உதாரணங்கள் வேண்டுமானால் எப்படியும் கொடுக்கலாம். ஆனால் விவாதத்தின் தலைப்பை விட்டு செல்வது முறையல்ல.

ஆகவே ஏன் இறுதி கருத்து திரைப்படங்கள் அதிகம் இளைஞர்களை சீர்கேடுக்கிறது என்பது தான். இதற்காக திரைப்படங்கள் வேண்டாம் என்று சொல்ல வில்லை திரைப்படங்களில் இருக்க கூடிய ஆபாசமும் இரட்டை அர்த்தங்களையும் தான் எதிர்க்கிறோம். ரோசம் உள்ள யாரும் அதை விரும்ப மாட்டார்கள்.

எதுவரை இந்த சினிமா சதையை நம்பி இருக்கிறதோ, ஆபாசத்தை காட்டுகிறதோ, வக்கிரங்களை ஊக்குவிக்கிறதோ, கலாசார சீரழிவை உண்டுபண்ணுகிறதோ, வன்முறைக்கு வித்திட்டுகிறதோ, அதுவரை இந்த சினிமாவை புறம் தள்ளிவிடுவோம். என்பது தான் ஏன் கருத்து.


ஆகவே நிச்சயமாக சினிமா இன்றைய இளைஞர்களை வழி கெடுக்கத்தான் பயன்படுகிறது என்று கூறி நிறைவு செய்கிறேன்!

நல்லதை புரிந்து கொள்ள கூடிய மனோபாவத்தை இறைவன் நமக்கு வழங்க வேண்டும்!

செல்வன் கொடுத்த குறிப்பை இப்போது இங்கு மீண்டும் பதிவு செய்ய கடமை பட்டுள்ளேன்!

Quote
குறிப்பு :
முதலில் விவாத மேடையின் நியதிகளை அனைவரும் முழுமையாக தெரிந்து கொண்டு வாதிடுவது இந்த விவாதப்பகுதியை சிறப்பானதாக்கி வைக்கும் என்பது எனது கருத்து.கனிவான முறையில் கருத்துக்களை  தெரிவிக்கும் நற்பண்பு அனைவருக்கும் கிடைக்க கடவுள் அருள் புரியவேண்டும்.   மேலதிகமாக விதண்டாவாதமாக செய்யப்படும்,தலைப்புக்கு சம்பந்தமில்லாத  விவாதங்களின் தரத்தை தீர்மானம் செய்யும் பொறுப்பை இந்த விவாதப்பகுதிக்கு வந்து வாசிக்கும் வாசகர்கள் & விவாதம் என்றால் என்ன என்று முழுமையாக உணர்ந்த நண்பர்களிடமே ஒப்படைத்து நிறைவு செய்கிறேன்.
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Global Angel on November 21, 2011, 04:00:05 PM
சபா ..... நீங்கள் சினிமாதான் உருவாகியது என்று சொனதற்கு பண்டைய காலத்தில் இருந்ததாக சொனேன் ......

அவர் கேட்டதற்கு அப்படி இல்லை என்று பதில் சொல்லி இருக்கலாமே மன நஷ்ட வழக்கு பத்தி யார் கேட்டார்கள் ...? நீங்கள் முடிலும் தவறான பதிவினை மேற்கொண்டுவிட்டு நம் மீதே அதை திருப்பிவிடும் சாமர்த்தியம் கொண்டு பெசுகின்றேர்கள் .... விவாதம் என்பது ஆதாரங்களை மையமாக கொண்டு வாதிடுவதும் தான் .... அதற்காக சில கருத்துகளை முன் வைப்பதில் தவறு இருபதாக எனக்கு தெரியவில்லை ...

எளிமையாக சினிமா கெடுகிறது கெடுக்கவில்லை ... இப்படி கூறுவதற்கு விவாத மேடை அவசியமில்லை  ....விவாதம் என்பது கருத்தை சொல்வது அதை படி அலசுவது .. ஆதாரங்களை முன் வைப்பது ... விளக்கம் சொல்வது ...  சொல்வது.... வெறும் கருத்தை மட்டும் சொலிட்டு போக இது பட்டிமன்றமில்லை .....   உலகத்தில் ஆயிரம் நன்மைகள் நடக்குது ஆனா அதெல்லாம் வெளியே வரதில்லை 10  தீமை நடக்கிறது அது உடனே  வந்துவிடும்... அது போல் தான் .... சினிமாவால் நடக்க கூடிய நடந்திருக்க கூடிய நன்மைகள் யாரும் வெளியே  அதிகம் சொலவில்லை ... எதாவது ஒன்று அவர்கள் விளக்க கோளாறால் ஏதோ ஒன்றால் நடை பெற்றால் அது வந்துவிடும்... அது பட்டியளிடபட்டு புள்ளி விபரமாக வந்து விடும் அது நீங்கள் கையில் எடுத்து வைத்துக்கொண்டு சினிமா சீர்கேடுகின்றது செர்கேடுகின்றது என்று சொல்லியே காலத்தை ஓட்டுறீங்க ....

முதல் சினிமா என்றால் என்ன ...... அதை தெளிவு படுத்தி கொண்டு விவாதத்தில் விவாதித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைகின்றேன் ....

மற்றவர்  கருத்துகளை புரிந்து கொள்ளும் மன வலிமையையும் அதை ஏற்றுகொள்ளும் மனோ திடத்தையும் எல்லோருக்கும் கொடுத்தருளு இறைவா ...!!!!
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on November 21, 2011, 07:07:26 PM
Quote
சபா ..... நீங்கள் சினிமாதான் உருவாகியது என்று சொனதற்கு பண்டைய காலத்தில் இருந்ததாக சொனேன் ......

சரி பண்டைய காலத்தில் இருந்தது அது எத்தனை பேருக்கு தெரியும் எஞ்சேல்? சினிமாவை பார்த்துத்தானே கற்று கொண்டார்கள். இதை உங்களால் மறுக்க முடியுமா? அல்லது மீண்டும் என்னை வரலாற்று பதிவுகள் படிக்க சொல்ல போகிறீர்களா?

Quote
அவர் கேட்டதற்கு அப்படி இல்லை என்று பதில் சொல்லி இருக்கலாமே மன நஷ்ட வழக்கு பத்தி யார் கேட்டார்கள் ...?

அவருக்கு ஒரு வரியல் சொன்ன பதில் புரியாத காரணத்தால் தான் மீண்டும் அதை விளக்கி சொல்ல வேண்டும் என்ற நிலை உண்டாகியது. உங்களை போன்று எல்லோராலும் எளிதாக புரிந்து கொள்ள முடியாது அல்லவா.

Quote
விவாதம் என்பது ஆதாரங்களை மையமாக கொண்டு வாதிடுவதும் தான்

நான் சினிமாவால் கேட்டு போகிறார்கள் என்பதற்கு சில ஆதாரங்களை கொடுத்தேன். ரெமோ கூட அதரங்களை மேற்கோள் கட்டினார். ஸ்ருதியும் செல்வனும் கூட ஆதாரங்களை மேற் கொள் கட்டினார்கள். ஆனால் நீங்கள் சினிமாவால் சீற்படுகிரார்கள் என்பதற்கு ஆதராம் கொடுத்தாதாக தெரிய வில்லையே. பிறகு நீங்களே விவாதம் ஆதாரங்களை மையமாக கொண்டது என்று கூறுகிறீர்கள். உங்கள் வாதம் முன்னுக்கு பின் முரணாக உள்ளதே.

Quote
எளிமையாக சினிமா கெடுகிறது கெடுக்கவில்லை ... இப்படி கூறுவதற்கு விவாத மேடை அவசியமில்லை

நான் உங்களை எளிமையாக சொல்ல சொல்லவில்லை ஆனால் விவாத தலைப்பை திசை திருப்பாமல் விவாதத்தை தொடர சொன்னேன். இதை நான் மட்டும் சொல்ல வில்லை ஏற்கனவே நீங்கள் விவாத தலைபிற்கு சமந்தம் இல்லாதம் வாதம் செய்த காரணத்தால் செல்வனும் சொல்லி இருக்கிறார் அதையும் நான் மேற்கோள் கட்டியுள்ளேன்.

Quote
அது போல் தான் .... சினிமாவால் நடக்க கூடிய நடந்திருக்க கூடிய நன்மைகள் யாரும் வெளியே  அதிகம் சொலவில்லை.

யாரும் சொல்லாத காரணத்தால் எங்களுக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம். நீங்கள் அதற்காக வாதிடுகிற காரணத்தால் உங்களுக்கு அதனால் ஏற்பட்ட நன்மை தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்புள்ளது. இதுவரை அந்த நமைகளை நீங்கள் குறிப்பிட வில்லை அந்த நமைகளை அறிந்துவைத்திருப்பவர் என்ற அடிப்படையில் உங்களிடம் கேட்கிறேன் அதை பட்டியலிடுங்கள் அறியாத நாங்களும் அறிந்து கொள்கிறோம்.

Quote
அது பட்டியளிடபட்டு புள்ளி விபரமாக வந்து விடும் அது நீங்கள் கையில் எடுத்து வைத்துக்கொண்டு சினிமா சீர்கேடுகின்றது செர்கேடுகின்றது என்று சொல்லியே காலத்தை ஓட்டுறீங்க ....

இந்த பதில் எனக்கு விந்தையாக உள்ளது அடிப்படை  ஆதரங்களுடன் உங்களுக்கு அதன் தீமையையும் அதன் வக்கிரங்களையும் எடுத்து காட்டிய பின் அதில் எவ்வளவு ஆபாசங்கள் உள்ளது இரட்டை அர்ந்தங்கள் படுக்கை அரை கட்சிகள் உள்ளது என்பதையும் தெளிவாக உங்களுக்கு சொல்லியும் அதை குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க முடியுமா ரோசம் உள்ளவன் பார்பானா என்று கேட்ட பின்னும் நீங்கள் அதன் விபரீதத்தை புரிந்து கொள்ள வில்லை என்றால் அது எங்களின் தவறு கிடையாது உங்களுக்கு புரிதலில் உள்ள கோளறு என்று தான் சொல்ல வேண்டும் என்று தோனுகிறது.

Quote
முதல் சினிமா என்றால் என்ன ...... அதை தெளிவு படுத்தி கொண்டு விவாதத்தில் விவாதித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைகின்றேன் ....

சினிமா என்பதற்கு உங்களை போல் எங்களுக்கு வரைவிலக்கணம் எல்லாம் தெரியாது இருந்தாலும் அது மக்களை குறிப்பாக இளைஞர்களை சீர்கேடுக்கிறது என்பதை மட்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொல்ல முடியும் ஏஞ்செல்.

நீங்கள் வாதிடுவதில் இருந்து ஒன்று புரிகிறது ஆபாச கட்சிகள் தவறில்லை, இரட்டை அர்த்த வசனங்கள் தவறில்லை, படுக்கை அரை காட்சிகள் தவறில்லை, வன்முறைகள் தவறில்லை எப்படி வேணுமானாலும் படம் எடுக்கலாம் அதில் எந்த தவறும் இல்லை அதை விமர்சிக்க தேவை இல்லை விமர்சிப்பவர்கள் பழமை வாதிகள் என்று கூறுவீர்கள் என்று தோனுகிறது ஏஞ்செல்.

சமுதாயத்தில் நிலவக்கூடிய தவறுகளை ஒருவன் சுட்டி காண்பித்தால் அதை ஆதரிப்பதை விட எதிர்க்க கூடியவர்கள் தான் அதிகம் இருப்பார்கள் என்பது தெரிந்ததே அந்த விடயத்தில் நீங்கள் வாதிட்டது ஒன்றும் எங்களுக்கு புதிய விடயம் அல்ல.

இறுதியாக ஒன்றை கூறி ஏன் வாதத்தை நிறைவு செய்கிறேன். சினிமாவால் இளைஞர்கள் சீர்கேடுகிரார்கள் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை என்பதையும் இந்த சினிமாதான் ஏனைய தவறுகளின் தாயச்சபை என்பதிலும் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.


சத்தியத்தை மட்டுமே சொல்லுவோம் அந்த சத்தியத்தின் வழியில் எங்கள் வாழ்கையை நடத்த எல்லாம் வல்ல இறைவன் எங்களுக்கு அருள்புரிய வேண்டும். இங்கு வந்து இந்த விவாதத்தை பார்வையிடும் வாசகர்களுக்கு எது சத்தியம் என்பதை அடையாளம் காணும் வாய்ப்பையும் இறைவன் அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கூறி நிறைவு செய்கிறேன்.
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Global Angel on November 21, 2011, 11:56:46 PM
shruthi sinnathu
Quote
சினிமா பார்த்து தான் கெட்டு போகணும் என்று இல்லை
சினிமாவும் ஒரு காரணமாக எடுத்து கொள்ளலாம்
ஒரு வருடத்துல வர100 படம் என்றால் அதுல வர 99 படம் கெட்டு போற போல தான் இருக்கு
படம் பார்க்க செல்வது பொழுது போக்காக மட்டுமே எடுத்துக்கணும்
அதை விட்டு அதையே வாழ்க்கைக்கு பாடமாக எடுக்க கூடாது


naan sonathu
Quote
yah suruthiyoda karuththukala naan eettrukolkiren


யோசுப் விவாதத்தின் ஆரம்பத்தில் நான் கூறிய கருத்தி நீங்கள் உள்வாங்கி இருக்கவில்லை ..... சுருதி சொன்ன மேற்கண்ட கருத்தை நான் ஆமோதித் திருந்தேன் .... அதாவது கேட்டு போக சினிமாவும் ஒரு காரணம் என்று ....சினிமா மட்டுமே காரணம் இல்லை என்று ..

அடுத்து வந்த விவாதங்களில் நீங்கள் சினிமா முற்று முழுதாக கெடுப்பதாக சொன்னிர்கள் ...  அதனால் எதிர் வாதம் செய்யவேண்டிய நிலைமைக்கு ஆளானேன் . விவாதத்துக்கு சமந்தமிலாமல் நான் பேசுவதாக சொல்கின்றீர்கள் .. சில விளக்கங்கள் இல்லாமல் நீங்கள் பேசுகின்றீர்கள் இத்தோ ...

சினிமா தோற்றம் - சினிமா என்பது தோற்றம் பெறுவதற்கு முன்னர் அதன் வடிவம் வேறொன்றாக இருந்தது ....  மன்னர் காலத்திலே ... மன்னர்கள் தங்கள் உடல் களைப்பையும் உள்ளத்து சங்கடங்களையும் ஆட்சி சிக்கல்களையும் சற்று நேரம் மறப்பதற்காக மாதர்களை ஆட சொல்வதும் விகடங்களை கேட்டு சிரிப்பதும் மல்யுத்தம் செய்வித்து வென்றவர்க்கு பரிசு கொடுத்து மகிழ்ந்தார்கள் .... அதன் வழியே பினாலிலே அது மக்கள் மத்தியில் தெரு கூத்துக்கலாகவும் ... மேடை நாடகங்களாகவும் தோற்றம் பெற்றன .....அங்கேயும் நாள் முழுதும் உழைத்து களைத்த மக்கள் தங்கள் கவலைகள் உடல் வேதனை மறந்து சந்தோசமாக இருக்க அது காரணமாக இருந்தது .....

இது எல்லாம் நவீன மயபடுத்து 1917  ல   அதை திரை படமாக வெளியிடார்கள் ..... முதலில் ஊமை படம் அதன் பின்பு பேசும் படம் -.... இப்படி ஆரம்பித்து பரிணாமம் பெற்று இன்று விஸ்வ ரூபம் எடுத்து இருக்கிறது .... சினிமா தோற்றுவிக்க பட்ட காரணம் பொழுது போக்குதானே தவிர வேறு ஒன்றும் இல்லை ....

அப்டி தோற்றம் பெற்ற சினிமாவில் நல்ல கருத்துக்கள் இடம் பெற வேண்டும் என நினைத்த அதன் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள்
வரலாற்று கதைகள் சமுக சிந்தனைகளை புகுத்தினார்கள் .... வெறும் கருத்துகளை சொன்னால் அது மக்கள் மத்தியில் எடுபடாது என்று ..அதில் காட்சி மிகைபடுதலை புகுத்தி அதிசயம் ..ஆச்சர்யம் ...இன்பம் இவற்றோடு சமுக கருத்துகளையும் கொடுத்தார்கள் ....
பொழுது போக்காக ஆரம்பிக்கபட்ட சினிமாவில் கால போக்கில் இப்படிதான் கருத்துகள் உள்வாங்கபட்டு சமுகத்திற்கு எளிதில் கொண்டு செல்ல பட்டது .....

இன்று அது விஞ்ஞான வளர்ச்சியின் எடுத்துகாட்டாக விளங்குகின்றது ..... சமுதாயத்தின் மிக பெரிய பொழுது போக்கு சாதனம் இது ....
அரம்பிக்பட்ட நோக்கம் பொழுது போக்கு ..... அன்று மக்கள் அதை பொழுது போக்காக மட்டும் தான் பார்த்தார்கள் ..... இன்றும் பலர் அப்படிதான் பார்கின்றார்கள் .....

சினிமா என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக வாழ்வில் ஒன்றி விட்டது இதை தடுக்க நிறுத்தி வைக்க யாராலும் முடியாது ... அப்படி பட்ட சாதனம் பற்றிய தெளிவான விளக்கம் நம் மக்கள் மத்தியில் இல்லாமல் போனதுதான் நீங்கள் சொன்ன சினிமா சீர்கேடுகளுக்கு காரணம் ....பகுத்தறிவு வாதியென்று பேத்தி கொள்ளும் மனிதனும் 6  அறிவு என்று சொல்லி விலங்கில் இருந்து பிரித்து மனிதன் என்று சொல்லி பெருமை படும் மனிதனும் சிந்திக்க வேண்டிய விடயங்களில் சிந்திக்க தவருவதானல்தான் சினிமா சீர்கேடுகள் ....

நன்மைகளுகுள் தீமையும் தேமைகளுகுள் நன்மையையும் கலந்து இருப்பது வழக்கம் .... நாம்தான் அதில் நல்லவற்றை கற்று கொள்ள வேண்டும் ....

யோசுப் நீங்கள் கேட்டீர்கள்  விபரம் கொடுக்க சொல்லி .....

1 ) இயேசு காவியம்   ..... எத்தனை பேருக்கு தெரியும் .... அதை திடைபடமாக வெளியிட்டு மக்கள் மத்தியில் கொண்டு வந்தது ...?
2 ) கட்ட பொம்மன் ....... எதனை பேருக்கு தெரியும் -----அதை திடைபடமாக வெளியிட்டு மக்கள் மத்தியில் கொண்டு வந்தது ...?
3 ) கப்பல் ஒட்டிய தமிழன் ....எதனை பேருக்கு தெரியும் -----அதை திடைபடமாக வெளியிட்டு மக்கள் மத்தியில் கொண்டு வந்தது ...?
4 )நாடோடி -- தாழ்த்தபட்ட சமுதாய வெளிபாடு ....
5 )  இப்படி பல திரை படங்களை சொல்லலாம் ..

தற்போது வரும் திரை படங்கள் ---
1 ) 7m அறிவு - ஒரு தமிழன் வாழ்ந்திருகின்றான் என்ற தகவலை கொடுத்த படம்
2 ) தெய்வ திரு மகன் -  மனவளர்ச்சி குன்றிய ஒருவனது கதை   அதில் அதைப்பற்றி எவளவு தவகல்கள்
3 ) எங்கேயும் எப்போதும் -  வாகனத்தை ஓட்டும் ஒவொருவருக்கும் ஒரு பாடம்
4 ) பசங்க -  பாடசாலைகளில் ஏற்பட கூடிய மனவேறுபாடுகள் .
5 ) காதல் கோட்டை- காதலின் சக்தி காதல்ன என்ன ....
6 ) ரோபோ இந்திரன் - விஞ்ஞானத்தின் பரிணாம வளர்ச்சி
10 )சிங்கம்  - போலிஸ் எப்படி இருக்கனும்
11 ) வேலாயுதம் - ஒவோருவனுகுளும் இருக்கவேண்டிய நாட்டு பற்று
12 ) ஜெயஹிந்த் - தீவிரவாதம் அதன் தாக்கம் ,, நாட்டு பற்று
13 ) படையப்பா -- துரோகம்  ஆணவம் இவற்றுக்கு சரியான பாடம்
14 ) அண்ணாமலை - நண்பனுக்கு துரோகம் பாணின என்ன ஆகும்
15 ) சந்திரமுகி - மனதின் ஆளுமையால் ஏற்பட கூடிய விபரீதம்
16 ) வல்லவா - காதல் எப்டி இருக்கனும் --- காதல்கு வயது வேறுபாடு இல்லை
17 )தளபதி - நட்ப்பு 
18 ) மன்மதன் - பாவத்தின் சம்பளம் மரணம் ....  பாதிக்க பட்டவன் பதில் கொடுப்பான் .
19 ) அம்பா சமுத்திரத்தில் அம்பானி - முயற்சி உயர்வை கொடுக்கும் ..
20 ) திண்டுக்கல் சாரதி -  தாழ்வுணர்ச்சியின் பாதிப்பு
21 ) நாடோடிகள் - நண்பர்களின் உழைப்பு நட்பின் வலிமை உரிமை
22 ) கோவா -  அமைவதுதான் வாழ்க்கை .
23 ) மங்காத்தா -  தீய வழியில் சேர்க்கும் பணம் களவு போகும் ...
24 ) வியாபாரி - பணம் அல்ல வாழ்க்கை
25 ) காதல் - காதல் காதல் தோல்வி அதன் விளைவு

இப்படி ஒவொரு திரைப்படமும் தனக்குள்ளே நல்ல தெளிவான கருத்தை கொண்டு 2 .30  மணி நேரம் கதையாக கொடுக்க படுகின்றது ... அதில நீங்க சொல்ல கூடிய ஆபாச கட்சிகளோ மித மிஞ்சிய சண்டை காட்சிகளோ எவளவு நிமிடம் வருகின்றது -.... அதை கூட கதை அமைப்பின் உணர்ச்சி வேகத்தை குறைத்து ஒரு மிதமான மன நிலையில் வைபதர்காகதான் கொடுக்க படுகின்றது ....  கதையில் ஒன்றி போனவர்கள் இதை எல்லாம் கவனிப்பது அரிது ... அந்த நீரம் அதை ரசித்து பார்த்துவிட்டு வெளியே வருகின்றார்கள் ... வரும் ஒவோருவரிடமும் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டல் .. படம் சூப்பர் ... தல டக்கரா நடிசிருகாறு.-.. ஸ்டோரி சூப்பர் .... அழுதுட்டேன் ... என்ன  கதை .. என்ன கிளைமாக்ஸ் .... இப்டித்தான் சொளுகின்றார்கள் யாரும் என்ன பிகூர்...  சாங் எல்லாம் செம செக்ஸ்சி.... rape பண்ற ஸ்கின் சூப்பர் .... இப்டி ஏதும் சொல்றாங்களா .....? எங்கயோ ஒருவர் அந்த நிழலை நியம என நினைத்து கற்பனைகளை வளர்க்க போய்தான் அது வன்முறைகளில் முடிந்து விடுகிறது ...

திரைப்படங்களை பார்த்து மனம் திருந்தியவர்கள் மனங்கள் வந்து நான் திருந்திவிடேன் பத்திரிகையில் போடு என்று சொல்லாது ..
மாற்றம் என்பது சிறிதாக தான் தன் இலக்கை அடையும் .... ஆனால் தீமை என்பது தீ போல .அதனால் பாதிப்பு இருக்கும் எனப்டியால் அது மக்களை சென்றடைகிறது ... சினிமாவால் கொலை  சினிமாவால் கற்பழிப்பு சினிமாவால் கொள்ளை ... இப்படி எல்லாம் சினிமா சினிமா வாக வந்துவிடும் ஆராய்ந்து பார்த்தல் அவனுக்கு வீர ப்ரோப்ளேமாக இருக்கும் ...

நான் சொல்வதெல்லாம் 2 .30  மணி நேரம் காட்டப்படும் திரைபடத்தில் அங்கங்கே 1  நிமிடம்    கூட இடம் பெறாத கடி பதிவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மீதம் வரும் கதை என்ன சொல்ல வருகின்றார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் சினிமா சீர்கேடு வர வாய்ப்பு இலது போய்விடும் ....

விமர்சனம் செய்கின்றேன் பேர்வழி என்று அந்த திரை படத்தில் வர கூடிய காட்சிகளை திரித்து இன்னும் ஆபாசத்தை தனது பேச்சில் கூட்டி பத்திரிகையில் வர கூடிய செய்திகளை பதிபவர்கள் .. அட நாம் நீற்று அதை பர்கவில்லையே .... அப்டி ஒன்று இருகிறதா என்று மறுபடியும் அந்தபடதிற்கு சென்று அந்த காட்சிக்காக காத்து கிடப்பார்கள் ..... எனவே சினிமாவை வெறும் பொழுது போக்ககா பாருங்கள் ..
அது நிழல் .... என்பதை புரிந்து கொண்டால் எந்த விதமான செர்கேடுக்கும் மனது இடம் கொடுக்காது .....

(திரைப்படத்தை பார்க்காமல் விடுவதனால் யாரும் யோகி ஆகிவிட முடியாது .... 100  பெண்கள் நிர்வாணமாக சூழ நினாலும் எவன் ஒருவன் சிந்தை பிறழாமல் இருகின்றானோ அவன்தான் யோகி.... எனவே மனோ திடம் எதிர் நீச்சல்  இவைதான் நம்மை சீர்கேடில் இருந்து பாதுகாக்கும் ... அது எதுவாக இருந்தாலும்  நம் மனோ திடத்தை வளர்த்து கொள்வோம்<<< இது என் கருத்து ) .


என் கருத்தை நான்  தெளிவாக கூறி விட்டேன் ....   இத்துடன் என் பதிவை நிறைவு செய்கிறேன் ..

இறைவன் நல்ல தெளிவை நமக்கு கொடுக்கட்டும் ....!!! நன்றி வணக்கம் !!!!
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: thamilan on November 22, 2011, 01:21:00 AM
முதலில் நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், நான் சீர்படுதுகிறது என்று வாதாடவில்லை என்று குற்றம் சொல்லி இருக்கிறீர்கள்.விவாதத்தில் அது சீரழிக்கவில்லை என வாதாடுவதன் அர்த்தம் அது சீரழிக்கவில்லை என்பது தான்.
சினிமா சீர்படுத்துகிறதா இல்லை சீரழிக்கிறதா என்பது தான் கேள்வி. சீரழிக்கவில்லை என்று வாதடினால் அதன் பொருள் உங்களுக்கு புரியாவிட்டால் நான் என்ன பண்ண?


ரெமோ மச்சி,
குறை காண்பவன் எதிலும் காண்பான் என்பதுக்கு நீங்கள் சரியான உதாரணம். தெய்வத்திருமகனில் குறை சொல்ல உங்களுக்கு ஒன்றும் அகப்படவில்லை. உடனே அதில் நல்வழிப்படுத்த என்ன இருக்கிறது என்று கேட்டுவிட்டீர்கள்.

முதலில் ஒரு படத்தில் நல்வழிப்படுத்த என்ன என்ன இருக்க வேண்டும் என்று நீங்கள் ஒரு லிஸ்ட் போடுங்கள். அதன் பிறகு அதற்கு ஏற்றாப்போல படங்கள் இருக்கிறதா என்று யோசிக்கிறேன்.
அந்த படத்தில் என்ன சீர்திருத்தம் இருக்கிறது என்று கேட்டீர்கள். ஒரு ஊனமுற்றவன் என்றாலும் தன் பிள்ளை மேல் இருக்கும் பாசத்தையும்,பாசத்தை விட தன் பிள்ளையின் எதிர்காலம் முக்கியம் என்பதையும் அது உணர்த்தியது. உங்களுக்கு புரியாவிட்டாலும் ஒரு தகப்பன்னான எனக்கு அது புரிந்தது.

வாகை சூடவா இதில் தவறான விசயம் எதும் இல்லை என்று சொன்ன நீங்கள் அது கற்பனைக்கு எட்டாத விசயம் என்று சொல்லி இருக்கிறீர்கள். ஒரு படித்த இளைஞன் பட்டிக்காட்டில் போய் வேலை பார்ப்பது கற்பனைக்கு எட்டாத விசயமா? சரி இது கற்பனைக்கு எட்டாத விசயம் என்றே வைத்துக் கொள்வோம். சிகரட் பிடிப்பது மது அருந்துவது, காதலிப்பது எல்லாவற்ரையும் சினிமா எனும் கற்பனைக்கு எட்டாத இடத்தில் இருந்து தானே கற்றுக் கொண்டதாக சொல்கிறீர்கள். அப்போ இது போன்ற நல்ல விசயங்களையும் கற்றுக் கொள்ளத்தானே அந்த படம் சொல்கிறது? ஏன் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்?

பேராண்மை படம் காட்டுவாசிகள் போன்ற ஒரு இனத்தினரை பற்றியது. அந்த ஜனங்கள் பேசுவது போல அல்லாமல் நகரத்தில் பேசுவது போல சுத்த தமிழும் ஆங்கிலம் பேசினால் இதே வாயால் நீங்கள் தான் குறை சொல்வீர்கள். அதையும் கற்பனைக்கு அப்பாட்பட்டது என்று சொல்வீர்கள்.


7ம் அறிவுக்கு யாரோ சொன்ன விமரிசனத்தை தந்து இருக்கிறீர்கள். அதை நான் வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது தனிமனிதன் ஒருவனுடைய கருத்து.
சரி உங்கள் வாதப்படி நீங்கள் சிமரிசனத்தை சரி என்று சொல்வதாக இருந்தால் எங்கேயும் எப்போதும் படத்துக்கு ஆனந்தவிகடன் விமரிசனக் குழு முதன் முறையாக 50க்கும் அதிகமான மார்க் கொடுத்திருந்தது. எந்த படத்துக்கும் இல்லாத விதமாக 2 பக்கங்கள் அந்த படத்தை ஒரு குறையும் சொல்லாமல் பாராட்டி எழுதி இருந்தது. அதற்கு என்ன சொல்கிறீர்கள்.

முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். பாரதியார், காமராஜர் போன்ற ந்ல்ல படங்களை எடுத்தார்கள். அது ஓடவில்லை. அதற்கு யார் காரணம். படத்தின் குற்றமா இல்லை மக்களின் குற்றமா?
நீங்கள் ஒரு பொருளை தயாரித்து விற்கிறீர்கள் அது தரமான பொருளாய் இருந்தும் அது விற்கவில்லை என்றால் என்ன பண்ணூவீர்கள். தரமான பொருள், நான் நஸ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று அதையே தொடர்ந்தும் தயாரிப்பீர்களா? இல்லை அதை மக்களுக்கு ஏற்றபடி மாற்றுவீர்களா? சினிமாவும் அப்படித்தான். நல்ல படங்கள் எடுத்தாலும் பார்க்க மாட்டீர்கள். மசாலா கலந்தாலும் குறை சொல்வீர்கள்.
மசாலா உடம்புக்கு கேடா.அப்போ கெடுதல் என்று மசாலா சேர்க்காமல் மீன் இறைச்சி எல்லாம் சும்மா அவிச்சி தான் சாப்பிடுகிறீர்களா ரெமோ மச்சி? கெடுதல் என்று நினைத்து எந்த ஒரு வீட்டில் சரி மசாலா பாவிக்காமல் இருக்கிறார்களா? உங்கள் பேச்சி வெறும் வாததுக்கு தான் சரி.

உங்களுக்கு இன்னும் பதில் சொல்வேன். எனக்கு தான் நேரம் போதாது.

யூசுப் மச்சி
நீங்கள் தான் ஒன்றுக்கு ஒன்று பொருத்தமில்லாமல் பேசுகிறீர்கள்.



கெட்டவர்களோடு கதா நாயகன் சண்டை போடுவது நல்லது என்று நீங்கள் கூறுகிறீர்கள் இப்படி ஒவ்வொருவரும் சட்டத்தை கையில் எடுத்தால் பிறகு எதற்கு ஒரு அரசாங்கம் காவல் துறை எல்லாம்? நீங்கள் கூறுவது நன்றாக இருக்கிறது ஆனால் நடை முறை சாத்தியம்மில்லை தமிழன்!இது நீங்கள் சொன்ன வார்த்தைகள்.

அதற்கு தான் நான்
உங்கள் அக்கா தங்கச்சி செண்டிமொண்டிலேயே ஒன்று கேட்கிறேன்.
உங்கள் முன்னால் உங்கள் சகோதரியை ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை தாக்கி உங்கள் சகோதரியை காப்பாற்றுவீர்களா? இல்லை சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று, நீ பண்ணுறத பண்ணு நான் காவல்துறையிடம் போறேன் என்று விட்டுட்டு போவீங்களா?

என்று கேட்டேன். அதற்கு நீங்கள்


இந்த பதிலை பார்க்கையில் எனக்கு உண்மையில் சிரிப்பு தான் வந்தது தமிழன். நம் சகோதரிகளுக்கு  பாதுக்கப்பு கொடுக்கவோ அடிக்கடி வீட்டில் தொந்தரவு தருபவனயோ சமாளிக்க சினிமாவை பார்த்துதான் சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லையே. அது நம் இயல்பில் ஊறி போன ஒன்று தமிழன். சினிமாவை பார்த்து தான் அதில் வருவதை போன்று எதிரியை சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி ஒரு பதிலை நீங்கள் தந்திருப்பது விந்தையாக உள்ளது தமிழன்

இங்கு நான் கேட்டது சினிமாவை பற்றி அல்ல.சட்டத்தை நாம் கையில் எடுபது நியாயமா? அரசாங்கம் காவல் துறை எல்லாம் எதற்கு இருக்கிறது என்று கேட்ட நீங்களே இப்போது உங்ளுக்கோ உங்கள் உடன்பிறப்புகளுக்கோ ஏதும் நடந்த்தால் அரசாங்கத்தையோ காவல்துறையையோ எதிபார்க்காமல் சமாளிபீர்கள்.அப்போது நீங்கள் என்னிடம் கேட்டது போல சட்டதை கையில் நீங்கள் எடுக்கலாமா? அப்போதும் நீங்கள் காவல்துறையை தானே நாட வேண்டும்.
உங்கள் பேச்சு உங்களுக்கே ஒன்னுக்கொண்று முரண்பாடாக தெரியவில்லையா? உங்களுக்கு ஏதும் நடந்தால் நீங்கள் சட்டத்தை எதிர்பார்க்காமல் சமாளிப்பீர்கள். சினிமாவில் அபடி காட்டினால் அது தப்பு. அப்படித்தானே உங்கள் வாதம்
.

அடுத்தது நான் உங்களை 7ம் வகுப்பு படிக்கும் மாணவனாக நினைக்கவில்லை. நான் சொன்னது ஒரு உவமை. அதன் பொருள் உங்களுக்கு விளங்காவிடால் அது என் தப்பில்லை.
நாம் எதை பற்றி பேசுவதாக இருந்தாலும் அதை பற்றிய அடிப்படை அறிவு கொஞ்சம் சரி இருக்க வேண்டும். இல்லமல் பேசினால் எப்படி இருக்கும் என்பதற்கே அந்த உதாரணம். உதாரணத்துக்கும் உண்மைக்கும் வித்தியாசம் தெரியாமல் நான் அதை உங்களுக்கு சொன்னதாக நினைக்கிறீர்கள்.வாதங்களுகெல்லாம் வழக்கு தொடங்குவார்கள் என்றால் முதலில் உங்களை தான் தூக்கில் தொங்கவிடுவார்கள்.



அமெரிக்காவில் 36,000 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் வன்முறையை திரைப்படங்களில் பார்ப்பதற்கும், செயலில் இறங்குவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இது நீங்கள் சொன்னது தானே மச்சி, இதற்குத்தான் நான் பதில் சொன்னேன்,

தலைப்பை விட்டு நீங்கள் வெளியே வரவில்லையா மச்சி? தேவை இல்லாமல் சகோதரியை உள்ளே கொண்டு வந்தீர்கள். அப்புறம் மானநஸ்ட வழக்கை கொண்டு வந்தீர்கள். நீங்கள் சொல்வதற்கு நாங்கள் பதில் சொன்னால் நாங்கள் தலைப்பை விட்டு வெளியே போகிறோம். அப்படித்தானே?

கடைசியா ஒன்று கேட்கிறேன், நம் சினிமாக்களில் எந்த சினிமாவுல பெற்றோருக்கு முன்னால பிள்ளைகள் கிஸ் அடிக்கிறாங்க? நான் பார்த்த எந்த படத்திலும் அப்படி எதும் பார்க்கல. நீங்க யாராவது பார்த்தா எனக்கும் சொல்லுங்க பிளீஸ்

இதை நீங்கள் சொன்னதா நான் எங்காவது குறிப்பிட்டிருக்கிறேனா? நான் மற்ற‌வர்கள் சொன்னதற்கு சொன்ன பதிலை உங்களுக்கு என்று எடுத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இந்த பார்க் பீச் கலச்சாரம் தோன்றியதே சினிமாவினால் தான் என்று கூறுகிறேன். உங்களால் மறுக்க முடியுமா தமிழன். நைட் கிளப்புகளை கட்டியதே சினிமா தானே. இதையும் உங்களால் மறுக்க முடியுமா.

நிச்சயம் மறுக்கமுடியும். சினிமாவை எடுப்பது வேற்றுகிரகவாசிகள் அல்ல. மனிதன் தான். அவன் உலகில் நடப்பதை வைத்துதான் படம் எடுக்கிறான்.மனிதனுடைய வக்கிரமங்கள் அவன் மனதில் இருந்து எழுபவை. அதற்கு சினிமாவை காரணம் காட்டாதீர்கள்.ஆதாம் ஏவாள் காலம் தொடக்கம் காதல் இருந்தது. சினிமா என்ற ஒன்று வருமுன்னரே
ஆட்டங்கள் களியாடங்கள் இருந்தன. ரோம் சாம்ராட்சியமே இன்பபுரியாக விழங்கியது. மதுவும் மாதும் சர்வசாதாரணம் அங்கே, இதை நீங்கள் சரித்திரத்திலேயே படித்திருப்பீர்கள். ஒருவன் மனைவியை இன்னொருவன் கவர்வது, தனது மனம் கவர்ந்த பெண்ணை கவர்ந்து சொல்ல்வது இது நம் சரித்திரத்திலும் இருக்கிறது. ஏதோ சினிமா வந்த பிறகு தான் எல்லம் வந்ததாக கதை சொல்லாதீர்கள் யூசுப். நீங்கள் அடிக்கடி துணைக்கு கூப்பிடும் வாசகர்களுக்கும் சரித்திரம் தெரியும்.ஏன் சரித்திரத்திற்க்குப் போக வேண்டும்.
சவூதியில் சினிமா தியேட்டர் இல்லை. சவூதி அரசர் படம் பார்ப்பதில்லை. அவருக்கு ஒவ்வொரு நகரத்திலும் பெலஸ் இருக்கிறது. பெலஸ் அந்த காலத்தில் அந்தபுரம்.அங்கே அவருக்கு என்று 100 மேற்பட்ட பணிப்பெண்கள் இருக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் இருந்து அவருக்காக தேர்ந்தெடுத்து கொண்டுவரப்பட்டவர்கள். அவர் சினிமா பார்த்தா அந்தபுரம் வைத்திருக்கிறார்? சினிமா பார்த்தா பெண்களுடன் சல்லாபிக்கிறார்?


பெற்றோருக்கு முன்னால் எந்த படத்தில் முத்தம் கொடுத்தார்கள் என்று கேட்டது உங்களை அல்ல. நீங்கள் வீணாக அடிக்கடி குழம்பிப் போகிறீர்கள்.

சினிமா என்பது உலகத்தை திருந்துவதற்காகவோ போதிப்பதற்காகவோ உண்டாக்கப்பட்டதல்ல. அது பொழுதுபோக்குக்காக உண்டாக்கப்பட்டது.உங்களைப்போல ஒரு சிலரை திருப்தி படுத்துவதற்காக படம் எடுத்தால் சினிமாதுறையே அழிந்த்திருக்கும். ஆபாசமில்லாமல், ஆடை குறைப்பு இல்லாமல் படம் எடுத்தால் இது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்றும் சொல்பவர்கள் எதிலும் திருப்தி பட போவதில்லை.
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on November 23, 2011, 01:17:37 PM
Quote
யோசுப் விவாதத்தின் ஆரம்பத்தில் நான் கூறிய கருத்தி நீங்கள் உள்வாங்கி இருக்கவில்லை ..... சுருதி சொன்ன மேற்கண்ட கருத்தை நான் ஆமோதித் திருந்தேன் .... அதாவது கேட்டு போக சினிமாவும் ஒரு காரணம் என்று ....சினிமா மட்டுமே காரணம் இல்லை என்று ..

ஏஞ்செல் நீங்களே ஆரம்பத்தில் சினிமாவும் கேட்டு போக ஒரு காரணம் என்று கூறிவிட்டு இப்பொழுது அதையே மாற்றி பேசுகிறீர்களே இதை எப்படி ஏற்று கொள்வது. உங்கள் வாதம் மீண்டும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. இதில் இருந்து நீங்கள் சினிமாவினால் கேட்டுபோவது ஒரு காரணம் என்று வாசகர்களுக்கு புரிய வைத்து விட்டீர்கள் ஏஞ்செல்.

அடுத்து சினிமா மட்டும் ஒரு காரணம் இல்லை என்று கூறி இருக்கிறீர்கள் ஏஞ்செல். இங்கு விவாதிக்க படுவது சினிமாவை பற்றி மட்டும் தான் ஏஞ்செல். மற்ற வழிகேடுகளை பற்றி இல்லை ஏஞ்செல். இதை மனதில் வைத்து பதிவை பதிவு செய்திருக்கலாம். இதுவே நீங்கள் தலைப்பை விட்டு தடம் புரண்டதர்க்கு தகுந்த சான்று. அதை நீங்களே ஒப்பு கொண்டுவிட்டீர்கள்.

ஆரம்பத்திலேயே எனக்கு சிரமம் இல்லாமல் நீங்களே ஒப்பு கொண்டதற்கு நன்றி ஏஞ்செல்.

சினிமாவை பற்றிய ஒரு வலற்று குறிப்பை கொடுத்துளீர்கள் ஏஞ்செல். நான் உங்களிடம் சினிமா எப்படி தோன்றியது என்ற வரலாற்றை எல்லாம் கேட்க்க வில்லை. சினிமா சீர்கேடுக்கிறதா இல்லையா? என்பதை தான் ஆதாரத்தோடு விளக்கும்படி கேட்டேன். நீங்கள் தேவை இல்லாமல் வரலாறை  பதிவு செய்து உங்கள் நேரத்தை வீனடித்துளீர்கள் ஏஞ்செல்.


Quote
சமுதாயத்தின் மிக பெரிய பொழுது போக்கு சாதனம் இது ....
அரம்பிக்பட்ட நோக்கம் பொழுது போக்கு ..... அன்று மக்கள் அதை பொழுது போக்காக மட்டும் தான் பார்த்தார்கள் ..... இன்றும் பலர் அப்படிதான் பார்கின்றார்கள்

இதில் நீங்கள் சினிமாவை பொழுதுபோக்காக கூறியுள்ளீர்கள் இன்றைய இளைஞர்களிடம் இந்த பொழுது போக்கு எப்படி இருக்கிறது தெரியுமா ஏஞ்செல். பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டு கல்லூரி மற்றும் அலுவலகத்தை கட் அடித்து விட்டு இன்றைய இளைஞர்கள் சினிமாவிற்கு செல்வதை நாம் அன்றாடம் பார்த்து கொண்டிருக்கிறோம். ஒரு பொழுதுபோக்கை பொழுதுபோக்க வேண்டிய நேரத்தில் தான் செய்ய வேண்டும் அதை விட்டுவிட்டு படிப்பை கெடுத்து கொண்டு வீட்டுக்கு தெரியாமல் பொய் சொல்லி விட்டு இன்றைக்கு எத்தனை இளைஞர்கள் திரை அரங்கிற்கு செல்கிரார்கள் இது தான் நீங்கள் சொன்ன சீற்படுத்துவதா? இதனால் யாருடைய படிப்பு பாதிக்க படுகிறது ஏஞ்செல்?

இப்பொழுது சொல்லுங்கள் இந்த திரைப்படங்கள் சீர்கெடுகிறத இல்லை சீர்படுத்துகிறதா என்று. மாணவர்கள் கட் அடித்து விட்டு திரை அரங்கு செல்வது நல்லதா? இது தான் நீங்கள் சொல்லும் பொழுது போக்கா? என்பதை இதை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் ஏஞ்செல்.


Quote
பகுத்தறிவு வாதியென்று பேத்தி கொள்ளும் மனிதனும் 6  அறிவு என்று சொல்லி விலங்கில் இருந்து பிரித்து மனிதன் என்று சொல்லி பெருமை படும் மனிதனும் சிந்திக்க வேண்டிய விடயங்களில் சிந்திக்க தவருவதானல்தான் சினிமா சீர்கேடுகள் ...

இந்த சீர்கேடுகளை தடுக்க கூடிய சிறந்த ஆயுதத்தை கையில் வைத்திருக்க கூடிய சினிமா துறை ஏன் இதை தடுக்க வில்லை ஏஞ்செல்? இதற்க்கு பெயர் தான் சுயநலமா? அல்லது சினிமா துறையில் இருப்பவர்கள் சிந்திக்க தவரிவிடார்களா? என்ன காரணம்.

நீங்கள் ஒரு பெரிய பட்டியலை போட்டு திரைப்படத்தின் கருத்தை சொல்லி இருகிறீர்கள் ஏஞ்செல் நான் இதை உங்களிடம் கேட்க வில்லை.
சீர்பெற்றவர்கள் எத்தனை பேர் என்பதை தான் கேட்டேன் அதற்க்கு உங்களிடம் பதில் இல்லை என்பது தெரிகிறது. இருந்திருந்தால் பதிலை பதிவு செய்திருப்பீர்கள். இதையும் வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

நாம் பேசி கொண்டிருப்பது இன்றைய இளைஞர்களை பற்றி தான். பழைய திரைப்படங்களை பற்றி அல்ல அதை நீங்கள் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று தோனுகிறது. இன்றைய கால கட்டத்தில் உள்ள திரைப்படங்களை பற்றி  பேசுவதே தலைப்பிற்கு சரியானது.

நான்  பழைய படங்களை பற்றி எந்த குறையும் கூற வில்லை. ஆகவே இன்றைய திரைப்படங்களை பற்றிய கருத்தை மட்டுமே பதிவு செய்கிறேன்.

நீங்கள் பட்டியலிட்ட படங்களில் ஆபாசங்கள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை என்று உங்களால் கூற முடியுமா? இதையும் வாசகர்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன்.


Quote
(திரைப்படத்தை பார்க்காமல் விடுவதனால் யாரும் யோகி ஆகிவிட முடியாது .... 100  பெண்கள் நிர்வாணமாக சூழ நினாலும் எவன் ஒருவன் சிந்தை பிறழாமல் இருகின்றானோ அவன்தான் யோகி.... எனவே மனோ திடம் எதிர் நீச்சல்  இவைதான் நம்மை சீர்கேடில் இருந்து பாதுகாக்கும் ... அது எதுவாக இருந்தாலும்  நம் மனோ திடத்தை வளர்த்து கொள்வோம்<<< இது என் கருத்து ) .

 ஏஞ்செல் உங்கள் கவனத்திற்கு நான் எந்த இடத்திலும் என்னை யோகி என்று கூறிக்கொள்ள வில்லை என்பதை நினைவு படுத்துகிறேன்.  நான் ஒரு ஆசா பாசம் உள்ள உணர்ச்சிகள் உள்ள மனிதன் என்னை போன்று தான் பெரும்பான்மையான மனிதர்கள் இருப்பார்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை ஏஞ்செல்.

நீங்கள் யோகி என்று நினைக்கிறேன் அதனால் தான் உங்களால் மட்டும் திரைப்படங்களில் உள்ள தவறான காட்சிகளை பார்த்து விட்டும், இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு விட்டும் வழிதவராமல் இருக்க முடிகிறது. இதே போன்று என்னாளோ அல்லது மற்ற மனிதர்களாலோ உங்களை போன்று யோகியாக இருக்க முடியாது ஏஞ்செல்.

இப்படி பட்ட கட்சிகளை பார்க்கும் போது மனம் தவறை நோக்கித்தான் செல்லும் இது தான் மனித மனம். இதை யாரும் மறுக்க முடியாது யோகிகளை தவிர. ஆகவே இந்த யோகி என்ற வார்த்தை உங்கள்ளுக்கு மட்டும் தான் பொருந்தும் எல்லா மனிதர்களாலும் தங்கள் இச்சைகளை கட்டுபடுத்த முடியாது. இது தான் நிதர்சனமான உண்மை. இதை வாசகர்கள் அறிவார்கள் என்பதை நம்புகிறேன்.

இப்படிப்பட்ட பலவீனம் உள்ள மனிதன் தவறான கட்சிகளை பார்க்கும் போது வழி பிறழ்வது இயல்பு. என் உட்பட நான் யோகி அல்ல உங்களை போன்று. ஆகவே இப்படி பட்ட கட்சிகளை பார்த்து வழி தவறுவதை விட இந்த கட்சிகளை பார்க்காமல் இருப்பதால் தேவையற்ற மன சஞ்சலங்களில் இருந்து தவிர்க்கலாம்.

உங்கள் கருத்துக்கான என் பதிலை கூறி விட்டேன் ஏஞ்செல்!


அடுத்து தமிழன் அவர்களின் விவாதத்திற்கு வருவோம்!

Quote
முதலில் நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், நான் சீர்படுதுகிறது என்று வாதாடவில்லை என்று குற்றம் சொல்லி இருக்கிறீர்கள்.விவாதத்தில் அது சீரழிக்கவில்லை என வாதாடுவதன் அர்த்தம் அது சீரழிக்கவில்லை என்பது தான்.

தமிழன் உங்கள் தமிழ் கற்றலில் கோளறு உள்ளது என்று நினைக்கிறன். இரண்டு வெவ்வேறான வார்த்தைகளின் அர்த்தத்தையே நீங்கள் மாற்றி சொல்கிறீர்களே. ''சீரளிக்கவில்லை" "சீற்படுத்துகிறது" என்ற இந்த வார்த்தைகள் எப்படி ஒரே அர்த்தம் உள்ள வார்க்த்தைகள் ஆகும்?

 சீரளிக்கவில்லை என்றால் அது கெடுக்கவில்லை தவறு செய்ய தூண்ட வில்லை என்ற பொருளைத்தான் கொள்ளலாம்.

சீற்படுத்துகிறது என்றால் வாழ்க்கையை நெறி படுத்த சத்திய பாதையில் செல்ல உதவி இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம்.

இந்த வெவ்வேறான  இரண்டு வார்த்தைகளும் எப்படி ஒரே வார்த்தையாக முடியும். இதில் இருந்து எனக்கு ஒன்று தெரிகிறது தமிழன் உங்கள் தமிழில் கோளாறு உள்ளது  என்று புரிகிறது. இதை வாசகர்களின் சிறப்பு கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்.


Quote
உங்கள் அக்கா தங்கச்சி செண்டிமொண்டிலேயே ஒன்று கேட்கிறேன்.
உங்கள் முன்னால் உங்கள் சகோதரியை ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை தாக்கி உங்கள் சகோதரியை காப்பாற்றுவீர்களா? இல்லை சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று, நீ பண்ணுறத பண்ணு நான் காவல்துறையிடம் போறேன் என்று விட்டுட்டு போவீங்களா?

தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமை உள்ளது தமிழன். அதில் சட்டத்தில் இடமும் உள்ளது அவர்களை பாதுகாக்க தற்காப்பிற்காக கொலை செய்வது தவறல்ல என்பது சட்டம். உங்களுக்கு சட்டம் தெரியவில்லை தமிழன் அதற்க்கு பதிலாக நிறைய படங்களை தெரிந்து வைத்துளீர்கள் ஆனால் அதன் பயன் ஒன்றும் இல்லை போல தெரிகிறது  இருந்திருந்தால் இப்படிப்பட்ட ஒரு கேள்வி உங்கள்ளுக்கு எழும்பி இருக்காது.

படங்களை பார்த்து தெரியாத இதை நீங்கள் நல்ல புத்தகங்களின் மூலமாக தெரிந்து வைத்திர்க்கலாம். இப்போது உங்களுக்கு உதவியாக இருந்திருக்கும். அடுத்த முறை முயற்சி செய்யுங்கள் தமிழன்.


Quote
அடுத்தது நான் உங்களை 7ம் வகுப்பு படிக்கும் மாணவனாக நினைக்கவில்லை. நான் சொன்னது ஒரு உவமை. அதன் பொருள் உங்களுக்கு விளங்காவிடால் அது என் தப்பில்லை

நீங்கள் கொடுத்த உவமை எனக்கு பொருந்தாது என்பது வாசகர்கள் அறிந்த ஒன்று தான் என்று நினைக்கிறேன். இனி மேலாவது உவமை கொடுக்கும் பொழுது எனக்கு பொருந்தகூடிய உவமையாக கொடுக்க முயற்சி செய்யுங்கள் தமிழன்.


Quote
வாதங்களுகெல்லாம் வழக்கு தொடங்குவார்கள் என்றால் முதலில் உங்களை தான் தூக்கில் தொங்கவிடுவார்கள்.

இந்த பதிலை பார்த்து விட்டு நான் சிரிக்கத்தான் செய்தேன். இதை என்னவென்று சொல்வது. சமுதாயத்தை சீரழிக்கும் ஒரு விடயத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க நினைத்த எனக்கு தூக்கு தண்டனை என்றால். சமுதாயத்தை சிந்திக்க விடமால் தவறை சரி என்று வாதிடக்கூடிய உங்கள்ளுக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள்?

சத்தியத்தை கூறுவதற்கு தூக்கு என்றால் அந்த தூக்கு கயிறை வரவேற்கிறேன்!!!

சரித்திரத்தில் சினிமாவில் நடக்க கூடிய தவறுகளை படித்திருப்பீர்கள் என்று கேட்கிறீர்கள். சரித்திரம் படிக்கும் அளவிற்கு நான் உங்களை போன்று புத்திசாலி இல்லை தமிழன். என்னை போன்று சரித்திரம் அறியாத இளைஞர்கள் தான் அதிகம். அவர்களுக்கு இந்த தவறுகள் எல்லாம் வெளிச்சம் போட்டு கட்டியது எது இந்த சினிமா தானே. நாங்கள் எல்லாம் சரித்திரத்தை படித்து இந்த தவறுகளை அறிந்து கொள்ள வில்லை கல்லூரி பருவத்தில் சினிமாவை பார்த்து தான் அறிந்துகொண்டோம்.


Quote
சவூதியில் சினிமா தியேட்டர் இல்லை. சவூதி அரசர் படம் பார்ப்பதில்லை. அவருக்கு ஒவ்வொரு நகரத்திலும் பெலஸ் இருக்கிறது. பெலஸ் அந்த காலத்தில் அந்தபுரம்.அங்கே அவருக்கு என்று 100 மேற்பட்ட பணிப்பெண்கள் இருக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் இருந்து அவருக்காக தேர்ந்தெடுத்து கொண்டுவரப்பட்டவர்கள். அவர் சினிமா பார்த்தா அந்தபுரம் வைத்திருக்கிறார்? சினிமா பார்த்தா பெண்களுடன் சல்லாபிக்கிறார்?

இது எப்படி இருக்கிறது என்றால் சவுதியை பற்றி நீங்கள் மட்டும் தான் அறிந்தவர் எங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைப்பது போல் உள்ளது.
ஒரு பல மொழி சொல்வார்கள் "கேட்பவன் கேனயனாக இருந்தால் கேப்பையில்  நெய் வடிகிறது என்று சொல்வான்" என்பதாக. நீங்கள் எங்களை எல்லாம் ___________ ஆகா நினைத்து கொண்டீர்கள் போல தமிழன். அதனால் தான் இப்படி ஒரு செய்தியை இட்டு கட்டுகிறீர்கள்.

இதை போன்று சவுதியில் ஒன்றும் நடக்க வில்லை என்பது எனக்கும் தெரியும் சவுதியை பற்றி அறிந்தவர்களுக்கும் தெரியும்.

சவுதியில் சட்டங்கள் கடுமையாக உள்ளதால் தவறுகள் குறைவு இந்தியாவை ஒப்பிடும் பொது என்று நான் கூறியதற்கும் நீங்கள் சொன்ன இந்த விளக்கத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை. இதை வாசகர்கள் அறிவார்கள் என்று நம்பிகிறேன். ஏனென்றால் உங்கள் விளக்கத்தை படித்த வாசகர்கள் தான் இதை கூட எனக்கு சொன்னார்கள்.


Quote
சினிமா என்பது உலகத்தை திருந்துவதற்காகவோ போதிப்பதற்காகவோ உண்டாக்கப்பட்டதல்ல. அது பொழுதுபோக்குக்காக உண்டாக்கப்பட்டது.

நான் ஏற்கனவே கூறியது போன்று பொழுதுபோக்கு என்பது நம்முடைய கடமைகள் போக மீதம் இருக்க கூடிய நேரத்தில் செய்வது. இன்றைய இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் கல்லூரிகளையும் பள்ளி கூடங்களையும் கட் அடித்து விட்டு நீங்கள் சொல்ல கூடிய பொழுதுபோக்கிற்கு செல்கிறார்கள் இதற்க்கு பெயர்தான் பொழுதுபோக்கா?

தங்கள் வாழ்கையை பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல் தலைவா என்ற கோசத்துடன் படிப்பை கவனிக்காமல் தாய் தந்தையை ஏமாற்றி விட்டு சினிமாவிற்கு சென்று படிப்பிற்கு காசு வங்கியாதாக சொல்லி அந்த பணத்தை சினிமாவில் சீரழிக்கும் இளைஞர்களுக்கு இது தான் பொழுதுபோக்கா?

இதைதான் நீங்கள் சொல்லும் சினிமா இளைஞர்களுக்கு கற்றுகொடுத்து சீற்படுத்துகிறது என்று வாதாடுகிறீர்களா?

கடைசியாக ஒன்றை சொல்கிறேன் தமிழன் நீங்கள் வாதாடும் இந்த தீமையை சரி என்று யாரவது பார்த்து தங்கள் வாழ்கையை கெடுத்து கொண்டார்கள் என்றால் நிச்சயம் அந்த பாவத்தின் பங்கில் உங்களுக்கும் ஒரு பங்கு உள்ளது என்பதை சொல்ல கடமை பட்டுள்ளேன்.


ஆகவே நீங்கள் அறிந்துகொண்டே சத்தியத்தை அசத்தியத்தொடு கலக்காதீர்கள். நிச்சயாமாக அசத்தியம் அழியக்கூடியது. அசத்தியம் அழிந்தே தீரும்.

சத்தியம் நிச்சயமாக என்றும் வெல்ல கூடியது!!!
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Global Angel on November 23, 2011, 02:15:43 PM
ini naan ingu vaathiduvathaaga illai..... mukkiyamaa naan onru solla virumbukiren... thayavu seithu thangal sontha karuthukalai pakirnthu kolungal..... aduthavar karuththai pathivu seivathai thavirthu kolungal....

ADUTHAVARKKU KARUTHTHU SOLBAVARKAL THANKAL SONTHA NICK IL PATHIVINAI MERKOLVATHU NALAM. MATARAVARKALAI SONTHAMA SINTHIKA VIDAVUM  :)
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on November 23, 2011, 02:50:35 PM
ஏஞ்செல் நான் யாருடைய கருத்தை சொல்கிறேன் என்று சொல்கிறீர்கள். எனக்கு சொந்தமாக மூளை இல்லை என்று நினைத்து கொண்டீர்களா ? அடுத்தவரின் கருத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதை தெளிவு படுத்தி கொள்கிறேன். உங்களுக்கு உண்மையை ஏற்றுகொள்ள கசக்கிறது என்றால் அதற்காக இது அடுத்தவரின் சிந்தனை என்று சொல்வீர்களா?

அடுத்தவரின் கருத்து இது என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? உண்மையை ஏற்றுகொள்ள முடியவில்லை என்றால் இப்படித்தான் சொல்வீர்களா?

ஏதோ எனக்கு சுயமாக மூளை இல்லாதது போல் அடுத்தவர்கள் சொன்னதை நான் பதிவு செய்தது போல் கருத்து சொல்லி இருகிறீர்கள்.

விவாதத்தை தொடர இயலவில்லை என்பதற்காக இப்படி தேவையல்லாத கருத்துக்களை பதிவு செய்யாதீர்கள் ஏஞ்செல்.

எது சத்தியமோ அதை எற்றோகொள்ள உங்கள் மனம் விரும்பவில்லை என்பதற்காக அடுத்தவர்கள் மேல் பழி சுமத்தாதீர்கள்.

சத்தியத்தை ஏற்றுக்கொள்ளகூடிய பக்குவத்தை உங்களுக்கும் எனக்கும் இதை பார்வையிடும் அனைவருக்கும் இறைவன் வழங்க வேண்டும்!!!
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Global Angel on November 23, 2011, 02:57:20 PM
 :)   yousuf ungal sontha karuththu alla ithu enave ungal sontha karuththai pathivu seiyungal<<<<<< ipadi naan kooravilaye yousuf...

as a mod aa pothuva solli irukinren ... eni varum pathivukal sirapaaga amaya vendum enbatharkaaga puthithaaga kalam irangubavarkum... iranga pobavarkum arivuruthal thats all...

muthalla naan onnu sonna athu unkalukka enru Uruthip paduththikkondu  unkal karuthukalai pathivu seivathu ... aduthavargalai manaulaichal padavaikamal irukkum  :)

Quote
என் கருத்தை நான்  தெளிவாக கூறி விட்டேன் ....   இத்துடன் என் பதிவை நிறைவு செய்கிறேன் ..

இறைவன் நல்ல தெளிவை நமக்கு கொடுக்கட்டும் ....!!! நன்றி வணக்கம் !!!!

en pathivai naan anre niraivu seithuvidden.... :)
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on November 23, 2011, 03:21:41 PM
நீங்கள் இந்த பதிவை முதலிலேயே மேற்கொண்டு இருக்கலாமே இப்படி நான் என்னுடைய பதிவை மேற்கொண்ட பிறகு இப்படி ஒரு பதிவை மேற்கொண்டால்  என்னை சொல்கிறீர்கள் என்றுதான் கருத வைக்கும் ஏஞ்செல்.இதுவரை என்னமோ பதிவுகள் சிறப்பாக அமையாதது போலவும் இனிமே வரக்கூடிய பதிவுகள் சிறப்பாக அமைய போகிறது என்பது போலவும் இருக்கிறது உங்கள் பேச்சு ஏஞ்செல்.

என்னுடைய பதிவிற்கு பின்னல் உங்கள் சொந்த கருத்தை பதிவு செய்யுங்கள்  என்று கூறினால் என்னமோ நான் மூளை அற்றவன் அடுத்தவர்களின் பேச்சை கேட்டு பதிவு செய்கிறேன் என்பது போலல்லவா இருக்கிறது உங்கள் பேச்சு. அடுத்தவர்கள் கருத்தை ஏதோ மற்றவர்கள் கொண்டு வந்து பதிவு செய்வது போல் இருக்கிறது நீங்கள் சொல்வது.

அப்படி பார்த்தால் நீங்கள் சினிமா தோன்றியதற்கு ஒரு வரலாறு கொடுத்து உள்ளீர்களே  அது உங்கள் கருத்துதான அல்லது மற்றவர்கள் கருத்தை எடுத்து பதிவு செய்து இருக்கிறீர்களா என்பதை பார்க்க கூடியோய ஒவ்வொருவரும் புரிந்து கொள்வார்கள்.

உங்களால் பதில் கொடுக்க முடியவில்லை என்பதற்காக அடுத்தவர்களை குற்றம் சுமத்துவதை முதலில் விடுங்கள்.

உண்மையை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்.

இப்படி இலைமறைகாயாக பேசுவதால் நீங்கள் சொன்னது சரி என்று ஆகாது ஏஞ்செல். இதையும் வாசகர்கள் பார்க்கட்டும்.
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Global Angel on November 23, 2011, 03:42:17 PM
 :) yosuf

Quote
ini naan ingu vaathiduvathaaga illai.....


 
naan ipothuthan vanthen forumku ..... vanthathum pottuleen.... netru irave naan poduvathaaga irunthen ..... enathu pc yai naan clean seithu kondu irunthathaal naan forum post panna mudiyatha nilai apadiye vitutu thunki enthirichu vanthathum poten...


Quote
உங்களால் பதில் கொடுக்க முடியவில்லை என்பதற்காக அடுத்தவர்களை குற்றம் சுமத்துவதை முதலில் விடுங்கள்

Quote
Quote
என் கருத்தை நான்  தெளிவாக கூறி விட்டேன் ....   இத்துடன் என் பதிவை நிறைவு செய்கிறேன் ..

இறைவன் நல்ல தெளிவை நமக்கு கொடுக்கட்டும் ....!!! நன்றி வணக்கம் !!!!
en pathivai naan anre niraivu seithuvidden....


yosuf naan yar peyarum kuripidamal pottu ullen.... neengal yen unkalai eduthhu kolkinreerkal... neeththu oruvar thaan ithil pathivu seiya povathaga enakku koori irunthaar  avar nanbarudan athai patri pesi karuththu pathivu seivathaga sonaa... atharkuthan naan ithai pathivu seithen .... (intha vilakam naan unkalukku koora vemdiya avasiyamillai irunthum koori ullen... unkalukku avalavu santhegam enral adminidam kettu therinthu kolungal avar mesage paarthu solluvaar unmaya poiya enbathu:) )

Quote
உண்மையை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்.

muthalil neengal thelivu paduthikondu pesa katru kolungal... ithu neenkal matume post panra idamillai palarum post panra idam... nenkal thaniyaga pathivu seiyum idathil potu irunthaal athu unkalai saaduvathu polaagum.... inku poduvathu appadiyaagathu....

ipo unkal pathivuku pin remo pottu naan atharku aduthu pottu irunthaal removai sonen unkalai solla villai enru etru kolverkal pola.

MOD AAGA NAAN SOLLI IRUKINREN YAAR PEYARUM KUPRIPIDAAMAL.

muthalil unkalaithan elaarum ellam solkiraarkal enru paarpathai niruththi kollungal.

ithai patri melathikamaaga vivaathika eni naan virumbavilai...


Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: thamilan on November 27, 2011, 11:57:02 PM
இதை நான் யாருக்கு பதிலாகவும் எழுதவில்லை.இது இந்த விவாதத்தை வாசிப்பவர்களுக்கு எங்களின் வாதத்தின் அடிபடை நோக்கத்தை தெளிவு படுத்தவே எழுதுகிறேன்.எங்கள் எதிரணியில் உள்ளவர்கள் (ஒரு திருத்தம் எல்லோரும் அல்ல.)
நான் பிடித்த முயலுக்கு ஒன்றரை கால் என்று இருக்கிறார்கள். அவர்களுக்கு தெளிவு படுத்துவதில் அர்த்தம் இல்லை. அதனால் வாசகர்களாகிய உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

முதலில் இந்த தலைப்பே ஒரு தவறான தலைப்பு. சினிமா என்பது முழுக்க ழுழுக்க ஒரு பொழுதுபோக்குக்காக ஆரம்பிகப்பட்டது.
மதம் இளைஞர்களை சீராக்குகிறதா இல்லை சீரழிக்கிறதா என்று கேட்டிருந்தால் அது அர்த்தம் உள்ள கேள்வி.அல்லது பத்திரிக்கைகள் சீரழிக்கிறதா சீர்படுத்டுகிறதா என்று கேட்டால் அதும் பொருந்தும். இவை மனிதர்களை நல்வழிப்படுத்த உண்டானவை.
இந்த கேள்விக்கே சம்மந்தம் இல்லாத ஒரு கருவை எடுத்து அது சீர்படுத்டுகின்றதா சீரழிக்கிறதா என்று கேட்டால் என்ன சொல்வது.
சினிமாவினால் தான் இன்றைய இளைஞர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள். மது அருந்துகிறார்கள், சண்டை போடுகிறார்கள்
என்று சொல்வது தவறு என்று தான் நாங்கள் வாதிடுகிறோம்.

சினிமாவை எடுப்பவன் சாதாரண மனிதன் தான். அவன் உலகில் நடப்பதை. கண்ணால் பார்ப்பதை பத்திரிகைகளில். செய்திகளில் வருவதை வைத்து தான் திரைக்கதையை அமைக்கிறான். படங்களில் நடப்பது மனித வாழ்வில் நடப்பது.அரைகுறை ஆடைகள் ஆபாச பேச்சிகள் எல்லாம் எங்கிருந்து வந்தது? படங்கள் இன்று தோன்றியதல்ல. 50, 60 களில் வந்த படங்களில் தொட்டு பேசாமல் காதல் காட்ட்சிகள் வந்தன. ஒரு ஆபாசமான வார்த்தைகள் இல்லாமல் படங்கள் வந்த்தன.
அந்த‌ கால‌த்திலும் ஒரு வ‌ருட‌ம் ஓடிய‌ ப‌ட‌ங்க‌ளும் இருக்கின்ற‌ன‌. அதை போல‌ ப‌ட‌ங்க‌ள் எடுத்தால் இப்போது எத்தனை பேர் பார்ப்பார்க‌ள்? ப‌ழைய‌ பாட‌ல்க‌ள் FMஇல் போனால் கூட‌ ரேடியோவை நிறுத்தும் கால‌ம் இது. கால‌த்துக்கு ஏற்றாற்போல‌ ப‌ட‌ம் எடுக்க‌ த‌யாரிப்பாள‌ர்க‌ளை தூண்டிய‌து இன்றைய‌ ச‌முதாய‌ம் தான்.
எல்லாவ‌ற்றிலும் நல்ல‌தும் இருக்கிற‌து கெட்ட‌தும் இருக்கிற‌து. 100% ந‌ல்ல‌து என்று எதும் இல்லை.ஒரு ம‌னித‌னுக்குள்ளேயே ந‌ல்ல குண‌மும் இருக்கிற‌து, கெட்ட‌ குண‌மும் இருக்கிற‌து.
இப்ப‌டிப்பட்ட‌ நிலையில் சினிமா சீர‌ழிக‌வே செய்கிற‌து.அதை பார்த்து தான் உல‌க‌த்தில் எல்லாமே ந‌ட‌க்கிற‌து.அதை பார்த்து தான் எல்லாம் கெட்டுப் போகிறார்க‌ள் என்று சொல்வ‌து ம‌ட‌மையாக‌ தெரிய‌வில்லையா?
சினிமா எத‌ற்காக‌ உண்டாக்க‌ப்பட்ட‌து என்று உதார‌ண‌ங்க‌ளுட‌ன் ரோஸ் விள‌க்கியும்.அதை புரிந்து கொள்ளாம‌ல் பேசுப‌வ‌ர்க‌ளுட‌ன் எதை விவாதிப்ப‌து?


"குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்"
ஒருவனுடைய நல்ல குணத்தை ஆராய்ந்து அவனுடைய கெட்ட குணத்தையும் ஆராய்ந்து அவற்றுள் எது அதிகம் என்பதை அறிந்து எது அதிகமோ அதைக்கொண்டு நல்லவன் , கெட்டவன் என தீர்மானிக்க வேண்டும்.  இது வள்ளுவனின் வாய்மொழி


இது எதிர் அணியில் வாதாடிய‌ ந‌ண்ப‌ர் செல்வ‌ன் கொடுத்த‌ வாக்குமூல‌ம்.
எது அதிக‌மோ அதை கொண்டே ந‌ல்ல‌து தீய‌தை தீர்மானிக்க‌ வேண்டிய‌து. இது அவ‌ரே சொன்ன‌து.இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌ம் ஓடும் ஒரு திரைப‌ட‌த்தில் ஒரு கிள‌ப் டான்ஸ் ஒரு 5 நிமிட‌ம் வ‌ரும். ஒரு ச‌ண்டை காட்சி 10 நிமிட‌ம் வ‌ரும். ஆபாச‌ பேச்சுக‌ள் ஒரு சில‌ நிமிட‌ம் வ‌ரும். இந்த‌ ஒரு சில‌ நிமிட‌ம் போக‌ மிகுதி நேர‌ம் எல்லாம்?
செல்வ‌ன் சொன்ன‌ப‌டி பார்த்தால் தீமை குறைவும் ந‌ன்மை அதிக‌மும் தானே சினிமாவில் இருக்கிற‌து? அப்ப‌டி ப‌ட‌ம் முழுவ‌தும் ஆபாச‌மும் மோச‌மான‌ காட்சிக‌ளூம் இருக்கும் ப‌ட‌ம் என்றால் அவ‌ர்க‌ள் பார்த்த‌து வேறு மாதிரியான‌ ப‌ட‌ங்க‌ளாக‌த்தான் இருக்கும்.

நாங்க‌ள் சீர்ப‌டுகிற‌து என்று எந்த‌ புள்ளிக‌ளையும் கொடுக்க‌வில்லை தான். எங்க‌ள் வாத‌ம் வேறுவித‌ம். ஒருவ‌ன் கொலை செய்தான் என்று கோர்ட்டில் வ‌ழ‌க்கு தொட‌ர்கிறார்க‌ள். அந்த‌ குற்ற‌வாளி தான் கொலை செய்ய‌வில்லை என்று நிருபிக்க‌ தேவை இல்லை. அத‌ற்கு மாறாக‌ த‌ன் மேல் சாட்ட‌ப்ப‌ட்ட‌ கொலைக்கான‌ சாட்சிய‌ங்கள் த‌வ‌றென்று நிறுபித்தால் போதும். த‌குந்த சாட்டிய‌ங்க‌ள் இல்லாத‌தால் குற்ற்வாளியை நிர‌ப‌ராதி என்று நீதிப‌தி விடுத‌லை செய்வார். இது நீங்க‌ள் அனைவ‌ரும் அறிந்த‌தே.அதையே நாங்க‌ளும் ப‌ண்ணுகிறோம்.சினிமாவினால் ஒரு சில‌ர் சீர‌ழிந்திருக்க‌லாம். அது ஒரு சில‌ரே.
சினிமா பொழுது போக்குக்காக‌ எடுக்க‌ப்ப‌ட்டாலும் அதிலும் நிறைய‌ நல்ல‌ விச‌ய‌ங்க‌ள் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ன‌.
ஒரு நல்ல‌தை சொல்லும் போது கெட்ட‌தை சொல்லி ந‌ல்ல‌தை சொன்னால் தான் அது எத‌னால் ந்ல்ல‌து என்ப‌து புரியும்.
ஒரு எய்ட்ஸ் ப‌த்திய‌ ப‌ட‌ம் எடுக்கும் போது அது எத‌னால் உண்டாகிகிற‌து? த‌டுக்க‌ என்ன‌ செய்ய‌லாம் என்று சொல்ல‌த்தானே வேண்டும்.அதை எல்லாம் காட்டாம‌ல் ப‌ட‌ம் எடுக்க‌னும் என்றால், எய்ட்ஸ் கேடு விளைவிக்கும் என்று எழுதித்தான் காட்ட‌ணும்.

சினிமா ம‌னித‌ர்க‌ள் இடையே விழிப்புண‌ர்ச்சியை தேற்றுவித்திருக்கிற‌து.
இது பொதுவா சினிமாவை ப‌ற்றிய‌து. த‌மிழ் சினிமா, ஆங்கில‌ச் சினிமா என‌ த‌ர‌ம் பிரிக்க‌ப்ப‌ட‌வில்லை. அத‌னால் ஆங்கில‌ப்ப‌ட‌ங்க‌லையும் உதார‌ணமா சொல்ல‌ல்லாம் என்று ந‌ம்புகிறேன்.

 எல்லோரும் Philadelphia என்றொரு அற்புதமான படத்தை மறந்து இருக்க முடியாது. AIDS அப்போதுதான் ஆரம்பித்த தருணம்.
அதைபற்றிய ஒரு அறிவும் இல்லாத காலத்தில் வந்த படம். அந்த படத்தை பார்த்து எவ்வளவு பேர் தங்கள் குறுகிய எண்ணங்களை மாற்றிக்கொண்டனர்?
ஜுராஸிப் பார்க் எனற‌ ப‌ட‌ம் வ‌ராவிட்டால் எத்த‌னை பேருக்கு அதை ப‌ற்றி தெரியும்?
ரோஸ் சொன்ன‌து போல‌, வீர‌பாண்டிய‌ க‌ட்ட‌பொம்ம‌ன்னின் வீர‌ம் ப‌டித்தை விட‌ ப‌ட‌த்தால் தானே நம் ம‌ன‌தில் நின்ற‌து.
காந்தியைப் ப‌ற்றி ஒரு ப‌ட‌ம் வ‌ந்த‌தால் தானே உல‌க‌மே அவ‌ர‌து வ‌ர‌லாறை அறிந்து கொண்டது?
பார‌தியார் பாட‌ல்க‌ளை நாம் பாட‌சாலைக‌ளில் ப‌டித்து ம‌ன‌தில் நிற்காத‌து அது ப‌ட‌த்தில் பாட‌லாய் வ‌ந்த‌தும் ம‌ன‌தில் நின்ற‌தே
.
ஆட்டோகிராப் ப‌ட‌த்தில் வ‌ந்த‌ "ஒவ்வொரு பூக்க‌ளுமே சொல்கிற‌தே" என்ற‌ பாட‌ல் கேட்டும் போதெல்லாம் ம‌ன‌தில் புத்துண‌ர்ச்சி ஊட்டுகிற‌தே! வாழ‌ விரும்பாத‌வ‌னுக்கும் வாழ‌ வேண்டும் என்ற‌ த‌ன்ன‌ம்மிக்கையை ஊட்டும் பாட‌லாயிற்றே அது.

க‌ல்யாண‌ம் க‌ட்டிக்கிட்டு ஓடிப்போலாமா என்ற‌ பாட‌லை ம‌ட்டும் கேட்ப‌வ‌ர்க‌ளுக்கு இப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌ல்ல‌ பாட‌ல்க‌ளை காது கேட்க‌ ம‌றுத்திருக்கும்.

போதிவ‌ர்ம‌ன் என்றொரு ம‌ன்ன‌ன் இருந்தான் என்ப‌து 7ம் அறிவு என்றொரு ப‌ட‌ம் வ‌ராம‌ல் இருந்திருந்தால் எத்த‌னை பேருக்கு தெரிந்திருக்கும்? அங்கே சீன‌ ம‌க்க‌ளுக்கு தெரிந்த‌ ந‌ம் நாட்டும‌ன்ன‌னைப் ப‌ற்றி ந‌ம‌க்கு தெரியாம‌ல் இருப்ப‌து கேவ‌ல‌மான‌ விச‌ய‌ம‌ல்ல‌வா?

ந‌ண்ப‌ர் செல்வ‌ன் சொன்ன‌து போல‌ கிள‌ப் டான்ஸ், துகில் உரியும் நட‌ன‌ம், எல்லாம் இருந்த‌ ப‌ட‌ங்க‌ள் வ‌ந்த‌ன‌. இல்லை என்று நாங்க‌ள் சொல்ல‌வில்லை. அது 70க‌ளில் வ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ளில் இருந்த‌ன‌.ஆனால் இன்று நில‌மையே வேறு.
அப்ப‌டிப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ள் எடுத்தால் ஓடாது என்று த‌யாரிப்பார்க‌ள் தெரிந்து கொண்டார்க‌ள்.இப்போது வ‌ரும் ப‌ட‌ங்க‌ளில் க‌தைக்கே முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கிறார்க‌ள்.
சில‌ர் எப்போதோ வ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ளை பார்த்து விட்டு, ப‌ட‌ம் பார்ப்ப‌தையே நிருத்திவிட்டு இன்றைய‌ இளைஞ‌ர்க‌ளை ப‌ற்றி பேசுவ‌து வேடிக்கையாய் தெரிய‌வில்லை?



ச‌ரி இப்போது யூசுப், உங்க‌ளின் வாத‌ங்க‌ளுக்கு என‌து நிறைவான‌ ப‌திலை சொல்லி இத்துட‌ன் முடிக்கிறேன்.

முத‌லில் நீங்க‌ள் முன்னுக்கு பின் முர‌ணாக‌ பேசுவ‌து உங்க‌ளுக்கே தெரிய‌வில்லை.

கெட்டவர்களோடு கதா நாயகன் சண்டை போடுவது நல்லது என்று நீங்கள் கூறுகிறீர்கள் இப்படி ஒவ்வொருவரும் சட்டத்தை கையில் எடுத்தால் பிறகு எதற்கு ஒரு அரசாங்கம் காவல் துறை எல்லாம்? நீங்கள் கூறுவது நன்றாக இருக்கிறது ஆனால் நடை முறை சாத்தியம்மில்லை தமிழன்

இது நீங்க‌ள் சொன்ன‌து. அத‌ற்கு நான் சொன்ன‌ ப‌தில்:

உங்கள் அக்கா தங்கச்சி செண்டிமொண்டிலேயே ஒன்று கேட்கிறேன்.
உங்கள் முன்னால் உங்கள் சகோதரியை ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை தாக்கி உங்கள் சகோதரியை காப்பாற்றுவீர்களா? இல்லை சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று, நீ பண்ணுறத பண்ணு நான் காவல்துறையிடம் போறேன் என்று விட்டுட்டு போவீங்களா?


இத‌ற்கு உங்க‌ள் ப‌தில் இதோ

இந்த பதிலை பார்க்கையில் எனக்கு உண்மையில் சிரிப்பு தான் வந்தது தமிழன். நம் சகோதரிகளுக்கு  பாதுக்கப்பு கொடுக்கவோ அடிக்கடி வீட்டில் தொந்தரவு தருபவனயோ சமாளிக்க சினிமாவை பார்த்துதான் சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லையே. அது நம் இயல்பில் ஊறி போன ஒன்று தமிழன். சினிமாவை பார்த்து தான் அதில் வருவதை போன்று எதிரியை சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி ஒரு பதிலை நீங்கள் தந்திருப்பது விந்தையாக உள்ளது தமிழன்.

நம்முடைய பாதுகாப்பிற்காக போராடுவது நம் இயல்பில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் தமிழன். இதற்க்கு சினிமாவை ஒப்பிட்டு பேச வேண்டிய அவசியம் இல்லை



அத‌ற்கு நான் உங்க‌ளிட‌ம் கேட்ட‌து,

இங்கு நான் கேட்டது சினிமாவை பற்றி அல்ல.சட்டத்தை நாம் கையில் எடுபது நியாயமா? அரசாங்கம் காவல் துறை எல்லாம் எதற்கு இருக்கிறது என்று கேட்ட நீங்களே இப்போது உங்ளுக்கோ உங்கள் உடன்பிறப்புகளுக்கோ ஏதும் நடந்த்தால் அரசாங்கத்தையோ காவல்துறையையோ எதிபார்க்காமல் சமாளிபீர்கள்.அப்போது நீங்கள் என்னிடம் கேட்டது போல சட்டதை கையில் நீங்கள் எடுக்கலாமா? அப்போதும் நீங்கள் காவல்துறையை தானே நாட வேண்டும்.
உங்கள் பேச்சு உங்களுக்கே ஒன்னுக்கொண்று முரண்பாடாக தெரியவில்லையா? உங்களுக்கு ஏதும் நடந்தால் நீங்கள் சட்டத்தை எதிர்பார்க்காமல் சமாளிப்பீர்கள். சினிமாவில் அபடி காட்டினால் அது தப்பு. அப்படித்தானே உங்கள் வாதம்



இதற்கு நீங்க‌ள் என்ன‌ சொல்லியிருக்கிறீர்க‌ள் என‌ பாருங்க‌ள்

தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமை உள்ளது தமிழன். அதில் சட்டத்தில் இடமும் உள்ளது அவர்களை பாதுகாக்க தற்காப்பிற்காக கொலை செய்வது தவறல்ல என்பது சட்டம். உங்களுக்கு சட்டம் தெரியவில்லை தமிழன் அதற்க்கு பதிலாக நிறைய படங்களை தெரிந்து வைத்துளீர்கள் ஆனால் அதன் பயன் ஒன்றும் இல்லை போல தெரிகிறது  இருந்திருந்தால் இப்படிப்பட்ட ஒரு கேள்வி உங்கள்ளுக்கு எழும்பி இருக்காது

ப‌ட‌த்தில் ச‌ண்டை போடுவ‌து பிழை ச‌ட்ட‌த்தை கையில் எடுக்க‌ல‌மா என்று கேட்ட‌ நீங்க‌ளே, த‌ன் குடும்ப‌தை காப்பாற்ற‌ கொலையும் செய்ய‌லாம் அத‌ற்கு ச‌ட்ட‌த்தில் இட‌மும் உண்டு என்றும் கூறுகிறீர்க‌ள், உங்க‌ள் வாத‌ம் உங்க‌ளுக்கே வேடிக்கையாக‌ தெரிய‌வில்லையா? நீங்க‌ள் ச‌ட்ட‌த்தை கையில் எடுக்க‌ ச‌ட்ட‌த்தையும் துணைக்கு கூப்பிடுகிறீர்க‌ள். அதையே ப‌ட‌த்தில் காட்டினால் ம‌ட்டும் த‌வ‌று. அருமையான‌ வாத‌ம் யூசுப்.

உங்க‌ள் ஒரு சில‌ வாத‌ங்க‌ளை பார்க்கும் போது உங்க‌ளை நீங்க‌ள் நினைத்த‌து போல‌ 7ம் வ‌குப்பு மாணவ‌னுக்கு ச‌ம‌மாக‌ நினைத்த‌து கூட‌ த‌வ‌று போல‌ தான் தேன்றுகிற‌து.



சரித்திரத்தில் சினிமாவில் நடக்க கூடிய தவறுகளை படித்திருப்பீர்கள் என்று கேட்கிறீர்கள். சரித்திரம் படிக்கும் அளவிற்கு நான் உங்களை போன்று புத்திசாலி இல்லை தமிழன். என்னை போன்று சரித்திரம் அறியாத இளைஞர்கள் தான் அதிகம். அவர்களுக்கு இந்த தவறுகள் எல்லாம் வெளிச்சம் போட்டு கட்டியது எது இந்த சினிமா தானே. நாங்கள் எல்லாம் சரித்திரத்தை படித்து இந்த தவறுகளை அறிந்து கொள்ள வில்லை கல்லூரி பருவத்தில் சினிமாவை பார்த்து தான் அறிந்துகொண்டோம்.


இது சினிமாவின் த‌வ‌ற‌ல்ல‌. ப‌டிக்கும் போது ப‌டிப்பை விட்டுவிட்டு சினிமா பார்க் பீச் என்று சுற்றிய‌ உங்க‌ளைப் போல‌ ஒரு சில‌ரின் குற்ற‌ம். நாங்க‌ளும் ப‌டித்தோம் பாட‌சாலைக்கு க‌ட் அடித்து விட்டு ஒரு நாள் கூட‌ எங்கும் போன‌தில்லை. ஒரு த‌னிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் பிழையை எதுக்கு சினிமா மேல் சும‌த்துகிறீர்க‌ள்?
போனாலும் நல்ல‌ ப‌ட‌த்துக்கு போவ‌தில்லை. எங்கு மோச‌மான‌ ப‌ட‌ம் ஓடுகிற‌தோ அங்கு தேடி போவார்க‌ள். இது சினிமாவின் குற்ற‌மில்லை.அது அவ‌ர்க‌ள் ம‌ன‌வ‌க்கிர‌ம‌ம்.



 நாம் பேசி கொண்டிருப்பது இன்றைய இளைஞர்களை பற்றி தான். பழைய திரைப்படங்களை பற்றி அல்ல அதை நீங்கள் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று தோனுகிறது. இன்றைய கால கட்டத்தில் உள்ள திரைப்படங்களை பற்றி  பேசுவதே தலைப்பிற்கு சரியானது


இப்ப‌டி சொல்லும் நீங்க‌ள் இந்த‌ விவாத‌த்தில் ப‌ங்கேற்கும் த‌குதி இல்லாத‌வ‌ர் அல்ல‌வா? ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ளை ப‌ற்றி பேச‌க்கூடாது. இன்றைய‌ இளைஞ‌ர்க‌ளை ப‌ற்றித்தான் பேச்சி. ச‌ரி. நீங்க‌ள் தான் இன்றைய‌ ப‌ட‌ங்க‌ளை பார்ப்ப‌தில்லையே. அப்புற‌ம் அதை ப‌ற்றி பேச‌ உங்க‌ளுக்கு என்ன‌ த‌குதி இருக்கிற‌து?
நான் கூறிய‌ ஒரு ப‌ட‌ங்க‌ளை கூட‌ நீங்க‌ள் பார்க்க‌வில்லை. ரேமோ அந்த‌ ப‌ட‌ங‌க‌ளை ப‌ற்றி கூறியிருப்ப‌து ச‌ரியா த‌வ‌றா என்று கூட‌ தெரியாது.அவ‌ருக்கு வ‌க்கால‌த்து வாங்கி பேசி இருக்கிறீர்க‌ள். ரெமோ, சொல்வ‌ன் பேசுவ‌து கூட‌ த‌ப்பில்லை. அவ‌ர்க‌ள் ப‌ட‌ம் பார்த்து விட்டு அவ‌ர்க‌ள் ம‌ன‌தில் ப‌ட்ட‌தை சொல்கிறார்க‌ள். அந்த‌ த‌குதி கூட‌ உங்க‌ளுக்கு இல்லையே?
உட‌னே விப‌சார‌ம் ப‌ண்ணுப‌வனா விப‌சார‌த்தை ப‌ற்றி பேச‌ணும் என்று ஒரு அப‌த்த‌மான‌ கேள்வியை கேட்பீர்க‌ள்.



இது எப்படி இருக்கிறது என்றால் சவுதியை பற்றி நீங்கள் மட்டும் தான் அறிந்தவர் எங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைப்பது போல் உள்ளது.
ஒரு பல மொழி சொல்வார்கள் "கேட்பவன் கேனயனாக இருந்தால் கேப்பையில்  நெய் வடிகிறது என்று சொல்வான்" என்பதாக. நீங்கள் எங்களை எல்லாம் ___________ ஆகா நினைத்து கொண்டீர்கள் போல தமிழன். அதனால் தான் இப்படி ஒரு செய்தியை இட்டு கட்டுகிறீர்கள்




அதை வாசித்த‌ உங்க‌ளை நான் கேன‌ய‌னாக‌ ச‌த்திய‌மாக‌ நினைக்க‌வில்லை. அப்ப‌டி உங்க‌ளை ப‌ற்றி உங்களுக்கு ஒரு அபிப்பிராய‌ம் இரு ந்தால் அது என் த‌வ‌ற‌ல்ல‌. யூசுப் நீங்க‌ள் எல்லாம் அறி ந்த‌வ‌ர், உல‌கில் உங்க‌ளுக்கு தெரியாத‌ எதுவும் இல்லை என‌ என‌க்குத் தெரியும். ஆனால் ச‌வூதியில் தேவால‌ய‌ம் இருப்ப‌து நான் சொல்லித்தானே உங்க‌ளுக்குத் தெரியும். ச‌வூதியை ப‌ற்றி உங்க‌ளுக்கு சொன்ன‌ ந‌ண்ப‌ர்க‌ளில் எத்த‌னை பேருக்கு இது தெரியும்? உங்க‌ளுக்கு தெரியாத‌ விச‌ய‌ங்க‌ளும் இங்கு இருக்கிற‌து. சில‌ விச‌ய‌ங்க‌ளை நான் இங்கே பேச‌ விரும்ப‌வில்லை. சில‌ விச‌ய‌ங்க‌ளுக்கு தெரி ந்தாலும் ஆதார‌ங்களை சொல்ல‌முடியாது.
நாம் ந‌ண்ப‌ர்க‌ளாக‌ பேசும் போது உங்க‌ளுக்கு விள‌க்கி கூறுகிறேன்.
இங்கே குற்ற‌ங்க‌ள் ந‌ட‌க்கிற‌து.ஆனால் அது வெளியில் வ‌ருவ‌தில்லை.அது தான் உண்மை


உங்க‌ளை நினைத்தால் பாவ‌மாக‌ இருக்கிற‌து. முத‌லில் வ‌ழ‌க்குப் போடுவ‌தாக‌ ப‌ய‌முறுத்தினீர்க‌ள். இப்போது பாவ‌ம் எல்லாம் என‌கு வ‌ந்து சேரும் என‌ ப‌ய‌முறுத்துகிறீர்க‌ள்.உங்க‌ள் வாத‌த்தில் உங்க‌ளுக்கே ந‌ம்பிக்கை இல்லை போல‌ தோன்றுகிற‌து. அப்ப‌டி என‌து வாத‌த்தை கேட்டு சினிமா பார்ப்ப‌து த‌வ‌றில்லை என‌ இளைஞ‌ர்க‌ள் நினைத்தால் அது எங்க‌ள் வாத‌த்துக்கு கிடைத்த‌ வெற்றி தானே.

க‌டைசியாக‌ ஒன்று கேட்கிறேன். சினிமாவினால் சீர்கேடு என்று நினைப்ப‌வ‌ர்க‌ளில் எத்த‌னை பேர் சினிமாவை பார்ப்ப‌தை விட்டு விட்டார்க‌ள். அதிச‌ய‌ பிற‌வியான‌ நீங்க‌ள் ம‌ட்டும் தானாக‌ இருக்கும்.
அப்ப‌டி பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு உங்க‌ளை போல‌ விப‌ர‌ம் தெரியாது, சிந்திக்க‌த் தெரியாது என்று சொல்ல‌ப்போகிறீர்க‌ளா? அப்ப‌டிச் சொன்னால் அது உங்க‌ள் அணியில் பேசுப‌ர்க‌ளையும் தாக்க‌ப் போகிற‌து க‌வ‌ன‌ம்.உங்க‌ளைத் த‌விர‌ மற்றவ‌ர்க‌ள் எல்லோரும் ப‌ட‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ள் தான். ப‌ட‌ம் பார்ப்ப‌து த‌வ‌றில்லை. ந‌ம‌க்கு ஆற‌றிவு ஏன் இறைவ‌ன் ப‌டைத்தான்? ந‌ல்ல‌தையும் கெட்ட‌தையும் பிரித்து அறிய‌த்தான். நாங்க‌ள் அதை தான் செய்கிறோம். ந‌ல்ல‌தை ம‌ட்டும் எடுத்துக்கொள்கிறோம். கெட்ட‌தை விட்டு விடுகிறோம்.எங்க‌ள் க‌ண்ணுக்கு ந‌ல்ல‌து ம‌ட்டும் தெரிகிற‌து. உங்க‌ள் க‌ண்ணுக்கு கெட்ட‌து ம‌ட்டும் தெரிகிற‌து. இது பார்வையின் பிழை. சினிமாவின் பிழை அல்ல‌.



சினிமாவினால் தான் இளைஞ‌ர்க‌ள் எல்லாம் அறிந்து கொள்கிறார்க‌ள் என்பது தானே உங்க‌ள் வாத‌ம்? புகை பிடிப்ப‌து, ம‌து அருந்துவ‌து, விப‌ச்சார‌ம் எல்லாம் சினிமா தான் சொல்லிக் கொடுக்கிற‌து. இது தானே உங்க‌ள் விவாத‌ம்.
உல‌க‌த்தில் ந‌க‌ர‌ங்க‌ளை விட‌ கிராம‌ங்க‌ளே அதிக‌ம். இ ந்தியாவை ம‌ட்டும் எடுத்துக் கொள்வோம். ந‌க‌ர‌ங்க‌ளை விட‌ கிராம‌ங்க‌ள் தானே அதிக‌ம். திரைஅர‌ங்குக‌ள் இல்லாத‌ கிராம‌ங்க‌ள் நிறைய‌ இருக்கிற‌து. ஒரு நேர‌ உண‌வுக்கே அல்லாடும் ஏழைக‌ள் நிறைய‌ நிறைய‌ இருக்கிறார்க‌ள். அந்த‌ கிராம‌ங்க‌ளில் குடி இல்லையா? புகைப்ப‌து இல்லையா? விப‌ச்சார‌ம் இல்லையா? கூத்தியாள் வைத்திருப்ப‌தை பெருமையாக‌ நினைப்ப‌வ‌ர்க‌ள் கிராம‌ங்க‌ளில் நிறைய‌ இருக்கிகிறார்க‌ள். அதிக‌மான‌ வியாதிக‌ள் ப‌ர‌வுவ‌து கிராம‌ங்க‌ளில் தான்.
சினிமா இல்லாம‌ல் இதெல்லாம் அங்கே எப்ப‌டி ந‌ட‌க்கிற‌து? உங்க‌ள் வாத‌ம் சறுக்குகிற‌து இங்கே.
சினிமா எப்ப‌டி உற‌வு கொள்ள வேண்டும் என‌ ப‌டிப்பிக்கிற‌து, ந‌க‌ர‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் த‌வ‌று செய்தாலும் பாதுகாப்புட‌ன் செய்கிறார்க‌ள். அத‌னால் போச‌மான‌ வியாதிக‌ளில் இரு ந்து த‌ப்புகிறார்க‌ள். அத‌ற்காக‌ த‌வ‌று செய்ய‌ சினிமா தான் சொல்லிக் கொடுக்கிற‌து என்று சொல்லாதீர்க‌ள். அது அவ‌ர‌வ‌ர் உட‌ல் தேவை . அது ப‌ட‌ம் பார்க்காவிட்டாலும் எடுக்கும். அத‌னால் என்ன வினை வ‌ரும்? வ‌ராம‌ல் எப்ப‌டி பாதுகாப்ப‌து எனும் விழிப்புண‌ர்வை சினிமா தானே உண்டாக்குகிற‌து?



க‌டைசியாக‌ ஒன்று சொல்கிறேன்.சினிமாவில் கெட்ட‌து இல்லை என்று நாங்கள் சொல்ல‌வ‌ர‌வில்லை. சினிமாவால் ம‌னித‌ரிட‌ம் விழிப்புண‌ர்ச்சி உண்டாகி இருக்கிற‌து.சினிமாவால் ந‌ம‌து அறிவுக்கு எட்டாத‌ நிறைய‌ விச‌ய‌ங்க‌ளை தெரிந்து கொள்கிறோம். சினிமாவை பார்த்து விட்டு அதில் உள்ள‌தையே நினைத்துக் கொண்டிருப்ப‌து உங்க‌ளைப் போல‌ ஒரு சில‌ர் தான். ம‌ற்றப‌டி வேக‌மாக‌ சுழ‌லும் இந்த‌ உல‌கில் நிற்ப‌த‌ற்கு நேர‌மில்லாம‌ல் ஓடிக் கொண்டிருக்கும் கால‌மிது. சினிமாவை நினைத்துக் கொண்டிருக்க‌ எவ‌ருக்கும் நேர‌மில்லை.ஒவ்வொருவ‌ரும் முன்னேற‌ முண்டிய‌டித்துக் கொண்டு ஓடுகிறார்க‌ள்,

யூசுப் ம‌ச்சி, உங்க‌ளிட‌ம் ஒரு தாழ்மையான‌ வேண்டுகோள். நீங்க‌ள் நிறைய‌ புள்ளி விப‌ர‌ங்க‌ளை கொடுத்திருந்தீர்க‌ள். அந்த‌ தின‌ம‌ணி ப‌த்திரிகை ஆதார‌த்தை த‌விர‌ வேறு இத‌ற்கும் ஆதார‌ங்க‌ளை கொடுக்க‌வில்லை.
அத‌ற்கு த‌குந்த‌ ஆதார‌ங்க‌ளை கொடுத்தால் நாங்க‌ளும் வாசித்து ப‌ய‌னடைவோம்



க‌டைசியாக‌ ஒரு வேண்டுகோள்.
இன்த‌ விவாத‌த்தை வாசிப்ப‌வ‌ர்க‌ளில் ஒரு 10 பேர் சினிமா பார்த்து நாங்க‌ள் சீர‌ழிந்தோம் என‌ ஆதார‌ங்க‌ளுட‌ன் சொல்லுங்க‌ள். என‌து வாத‌ம் பிழை என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ ஒத்துக் கொள்கிறேன்,
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on November 29, 2011, 02:34:10 PM
இதை படிக்க கூடிய வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இதில் உங்களுக்கு  எது சரி என்று தோன்றுகிறதோ அதை எடுத்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு எனது பதிலை தர விரும்புகிறேன்.



   
Quote
இப்ப‌டிப்பட்ட‌ நிலையில் சினிமா சீர‌ழிக‌வே செய்கிற‌து.அதை பார்த்து தான் உல‌க‌த்தில் எல்லாமே ந‌ட‌க்கிற‌து.அதை பார்த்து தான் எல்லாம் கெட்டுப் போகிறார்க‌ள் என்று சொல்வ‌து ம‌ட‌மையாக‌ தெரிய‌வில்லையா?


தமிழன் ஒரு திருத்தம் நான் சினிமாவை பார்த்திவிட்டு தான் உலகில் எல்லாம் நடக்கிறது என்று ஒரு இடத்திலும் கூறவில்லை. அப்படி நான் கூறி இருந்தால் சுட்டி காண்பித்திருக்கலாம் ஆனால் அப்படி நீங்கள் சுட்டி காண்பிக்க இயலாது ஏனென்றால் நான் அப்படி கூற வில்லை. சினிமா பார்க்க கூடிய இளைஞர்களில் அநேகர் சினிமாவினால் சீர்படுத்த படுவதை விட  சீரழிக்க படுகிறார்கள் என்று தான் நான் கூறினேன் எல்லோரும் கேட்டு போகிறார்கள் என்று கூற வில்லை. எனது பதிலை புரிந்து கொள்ள முடியாமல் நீங்கள் தான் மடமையாக பேசுவது போன்று தோன்றுகிறது தமிழன்.



   
Quote
சினிமா எத‌ற்காக‌ உண்டாக்க‌ப்பட்ட‌து என்று உதார‌ண‌ங்க‌ளுட‌ன் ரோஸ் விள‌க்கியும்.அதை புரிந்து கொள்ளாம‌ல் பேசுப‌வ‌ர்க‌ளுட‌ன் எதை விவாதிப்ப‌து?

விவாதம் சினிமா எதற்காக உண்டக்கபட்டதுன்னு இல்லை.  நான் சினிமா சீரளிபதற்குத்தான் உருவாகபடதுன்னு கூறவும் இல்லை. உங்கள் கருத்துபடியே பொழுதுபோக்க உண்டாக்கப்பட்ட  சினிமா  சீரழிக்கவே  செய்கிறது என்று தான் கூறுகிறேன்.

சரி சினிமா பொழுதுபோக்குக்காக உண்டாக்க பட்டது என்று கூறுகிறீர்கள். அந்த சினிமாவை ஓய்வு நேரத்தில் பார்ப்பது தானே பொழுது போக்குக்கான வரைவிலக்கமாக இருக்க முடியும் அதை விட்டுவிட்டு பள்ளிகளை கட் அடித்து விட்டும் கல்லூரிகளை கட் அடித்து விட்டும் அலுவலகத்தை கட் அடித்து விட்டும் அதிக விலை கொடுத்து வரிசையில் நிறு டிக்கெட் வாங்கி பார்பதற்கு பெயர்தான் பொழுதுபோக்கா?

இந்த கேள்வியை நான் முந்தய பதிவில் கேட்டிருந்தும் அதற்க்கு நீங்கள் பத்தி தரவில்லை. ஏன் உங்களிடம் இதற்க்கு பதில் இல்லையா இல்லை பதில் சொல்ல தெரிய வில்லையா?

இல்லை இது தவறு என்று உங்களுக்கு புரிந்து விட்டதால் அதை மறைபதர்காக முயற்சி செய்கிறீர்களா தமிழன்?




 
Quote
  இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌ம் ஓடும் ஒரு திரைப‌ட‌த்தில் ஒரு கிள‌ப் டான்ஸ் ஒரு 5 நிமிட‌ம் வ‌ரும். ஒரு ச‌ண்டை காட்சி 10 நிமிட‌ம் வ‌ரும். ஆபாச‌ பேச்சுக‌ள் ஒரு சில‌ நிமிட‌ம் வ‌ரும். இந்த‌ ஒரு சில‌ நிமிட‌ம் போக‌ மிகுதி நேர‌ம் எல்லாம்?


ஆபாச கட்சிகளையும் இரட்டை அர்த்தன்கையும் பார்த்து பார்த்து பழகிப்போன உங்களுக்கு அதன் கேடு தெரிய விட்டால் உங்களை போல நாங்களும் அப்படி பட்ட காட்சிகளை 5 நிமிடம் தானே சில நிமிடங்கள் தானே என்று அதை சீரணித்து கொள்ள வேண்டும் என்கிறீர்கள் போல தமிழன். தனி மனித ஒழுக்கத்தோடு வாழ விரும்பும் யாரும் அதை சீரணித்து கொண்டு பார்க்க மாட்டார்கள். அது உங்களுக்கு தெரிய விட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்.



   
Quote
நாங்க‌ள் சீர்ப‌டுகிற‌து என்று எந்த‌ புள்ளிக‌ளையும் கொடுக்க‌வில்லை தான்.


உங்களால் சீற்படுத்துகிறது என்று புள்ளிகளை கொடுக்க முடியவில்லை என்றால் உங்களிடம் அதற்க்கு புள்ளி விவரம் இல்லை என்பது தான் உண்மை. அதை விட்டு விட்டு அதற்க்கு கீழ் ஒரு கதையை சொல்லி இருக்கிறீர்கள் அதற்கெல்லாம் பதில் அளித்து என் நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை.

அதரங்களின் அடிப்படையில் பேசுவதுதான் விவாதம்  எங்களுடைய ஆதரங்களை சமர்பித்தோம் உங்கள் அதரத்தை நீங்க சமர்பிக்காமல் வாதாடினால் அதற்க்கு பெயர் விவாதம் அல்ல வீண்வாதம்.

இதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் இவர்களின் வாதத்தில் அர்த்தமே இல்லை என்பதை உங்கள் கவனித்திற்கு கொண்டு செல்கிறேன்.




   
Quote
ப‌ட‌த்தில் ச‌ண்டை போடுவ‌து பிழை ச‌ட்ட‌த்தை கையில் எடுக்க‌ல‌மா என்று கேட்ட‌ நீங்க‌ளே, த‌ன் குடும்ப‌தை காப்பாற்ற‌ கொலையும் செய்ய‌லாம் அத‌ற்கு ச‌ட்ட‌த்தில் இட‌மும் உண்டு என்றும் கூறுகிறீர்க‌ள், உங்க‌ள் வாத‌ம் உங்க‌ளுக்கே வேடிக்கையாக‌ தெரிய‌வில்லையா? நீங்க‌ள் ச‌ட்ட‌த்தை கையில் எடுக்க‌ ச‌ட்ட‌த்தையும் துணைக்கு கூப்பிடுகிறீர்க‌ள். அதையே ப‌ட‌த்தில் காட்டினால் ம‌ட்டும் த‌வ‌று. அருமையான‌ வாத‌ம் யூசுப்.

    நம் வீடு பெண்களை பாதுகாக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரிடமும் ஊறி போன ஒன்று தமிழன் இதற்க்கு படத்தை பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் சொன்னது கதாநாயகன் காவல் துறையால் சாதிக்க முடியாததை கூட சாதிப்பதாக கூறி கொண்டு சமுதாயத்தில் மாற்றம்  கொண்டு வருவேன் என்று கூறும் நடைமுறைக்கு சத்தியம் இல்லாமல் ரவுடிகள் போன்றோர்களை ஒழிக்கப்போவதாக கூறி கொண்டு  சட்டத்தை கையில் எடுப்பது போன்ற கட்சிகளை தான் தமிழன். நீங்கள் என்னுடைய வாதத்தை சரியாக புரிந்து கொள்ள வில்லை. இதற்க்கு நான் பொறுப்பல்ல.


தமிழன் உங்களுக்கு குடும்ப பிரச்சனைகளுக்கும் சமுதாய பிரச்சனைகளுக்கும் வேறு பாடு தெரிய வில்லை என்றால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. குடும்பத்தை காத்து கொள்ளத்தான் சட்டத்தில் இடமிருக்கிறதே தவிர சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக சட்டத்தை கையில் எடுக்க சட்டத்தில் இடம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த சாதாரண விடயம் கூட புரிய வில்லை என்றால் யார் 7 அம் வகுப்பு சிறவனை போன்று ஒன்றும் விளங்காதவர்களாக உள்ளார்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளட்டும்.





   
Quote
இது சினிமாவின் த‌வ‌ற‌ல்ல‌. ப‌டிக்கும் போது ப‌டிப்பை விட்டுவிட்டு சினிமா பார்க் பீச் என்று சுற்றிய‌ உங்க‌ளைப் போல‌ ஒரு சில‌ரின் குற்ற‌ம். நாங்க‌ளும் ப‌டித்தோம் பாட‌சாலைக்கு க‌ட் அடித்து விட்டு ஒரு நாள் கூட‌ எங்கும் போன‌தில்லை. ஒரு த‌னிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் பிழையை எதுக்கு சினிமா மேல் சும‌த்துகிறீர்க‌ள்?

தமிழன் நான் எந்த இடத்திலும் ஊரு சுத்தியதாக இருந்தேன் என்று குறிப்பிட வில்லையே என்னை பற்றி  என் வாழ்கையை பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்தது. பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறீர்கள் போல இருக்கிறது உங்கள் வாதங்கள் அனைத்தும்.

தமிழன் நீங்க படிச்சது கிராமமாக இருந்திருக்கலாம். அதனால் நீங்கள் கட் அடிக்காமல் இருந்திருக்கலாம். நகரத்தில் கட் அடிப்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. ரசிகர் மன்றம் பெயரில்  பள்ளி கல்லூரிகள்  ..அலுவலகங்களை ..கட்  அடித்துவிட்டு கஷ்டப்பட்டு  மணிக்கணக்கில் வரிசையில் காத்து நின்று டிக்கெட்  அதிக விலை கொடுத்து வாங்கி படம் பார்கிறார்கள் இது தான் பொழுதுபோக்கா?

நீங்கள் பாடசாலைக்கு தவறாமல் சென்றதாக சொன்னீர்கள் அங்குதானே கேட்டதை பார்க்காதே கேட்டதை பேசாதே கேட்டதை கேட்காதே என்று மூன்று குரங்குகளை காட்டி சொல்லி தந்தார்கள் அது உங்களுக்கு நினைவில்லையா. மறந்து விட்டீர்களா? பாடசாலையில் ஒழுக்கத்தை கற்று கொடுக்க வில்லையா தமிழன் உங்களுக்கு. கற்று கொடுத்திருந்தால் நீங்க இந்த விவாதத்தில் இப்படி பேசி இருக்க மாட்டீர்கள்.

அல்லது ஒழுக்கத்தை நீங்கள் விரும்பாதவராக இருந்தால் தான் உங்களால் இப்படி எல்லாம் பேச முடியும் ஆபாசம் 5 நிமிடம் தானே என்றெல்லாம்.

ஒழுக்கத்தை விரும்பக்கூடிய யாரும் இப்படி பேச மாட்டார்கள்.





   
Quote
இப்ப‌டி சொல்லும் நீங்க‌ள் இந்த‌ விவாத‌த்தில் ப‌ங்கேற்கும் த‌குதி இல்லாத‌வ‌ர் அல்ல‌வா? ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ளை ப‌ற்றி பேச‌க்கூடாது. இன்றைய‌ இளைஞ‌ர்க‌ளை ப‌ற்றித்தான் பேச்சி. ச‌ரி. நீங்க‌ள் தான் இன்றைய‌ ப‌ட‌ங்க‌ளை பார்ப்ப‌தில்லையே. அப்புற‌ம் அதை ப‌ற்றி பேச‌ உங்க‌ளுக்கு என்ன‌ த‌குதி இருக்கிற‌து?


நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பதிலும் நகைசுவாயகத்தான் இருக்கிறது தமிழன். என்னை நீங்க கிழவன் என்று நினைத்துவிடீர்கள் போல. நான் திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி 40 வருடங்கள் ஒன்றும் ஆகா வில்லை 3 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது அதற்க்கு காரணம் நான் தனிமனித ஒழுக்கத்தோடு முழுமையாக நடந்துகொள்ள இயலாவிட்டாலும் முடிந்தவரை நடந்து கொள்ள வேண்டும் என்பதால். அது தவறு என்று எனக்கு புரிந்ததால் நான் அதை நிறுத்தி விட்டேன். உங்களுக்கு தவறு எது சரி எது என்று சிந்திக்கும் திறன் இல்லாத காரணத்தால் அனைவரயும் அவ்வண்ணமே நினைத்து விட கூடாது தமிழன்.



   
Quote
நான் கூறிய‌ ஒரு ப‌ட‌ங்க‌ளை கூட‌ நீங்க‌ள் பார்க்க‌வில்லை. ரேமோ அந்த‌ படங்களை ப‌ற்றி கூறியிருப்ப‌து ச‌ரியா த‌வ‌றா என்று கூட‌ தெரியாது.அவ‌ருக்கு வ‌க்கால‌த்து வாங்கி பேசி இருக்கிறீர்க‌ள். ரெமோ, சொல்வ‌ன் பேசுவ‌து கூட‌ த‌ப்பில்லை. அவ‌ர்க‌ள் ப‌ட‌ம் பார்த்து விட்டு அவ‌ர்க‌ள் ம‌ன‌தில் ப‌ட்ட‌தை சொல்கிறார்க‌ள். அந்த‌ த‌குதி கூட‌ உங்க‌ளுக்கு இல்லையே?
    உட‌னே விப‌சார‌ம் ப‌ண்ணுப‌வனா விப‌சார‌த்தை ப‌ற்றி பேச‌ணும் என்று ஒரு அப‌த்த‌மான‌ கேள்வியை கேட்பீர்க‌ள்.


தமிழன் சரி இப்பொழுது விபச்சாரத்தை பற்றிய கேள்வியை உவமையாக காண்பிக்க வில்லை. வேறு ஒரு கேள்வியை கேட்கிறேன். விசத்தை பருகினால் தான் நீங்கள் விஷம் என்று ஏற்றுகொள்வீர்களா தமிழன்?. அது போல் தான் நீங்கள் சொல்லும் உதாரணம் எல்லாம் இருக்கிறது. சினிமா பார்த்தால் தான் சினிமா பற்றி பேச வேண்டும் என்றால் விசத்தை பருகினால் தான் அது விஷம் என்று சொல்ல வேண்டுமா?

நீங்கள் சொல்வது தான் சிறுபிள்ளை தனமாகவும் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது தமிழன். நீங்கள் இப்படி சம்பந்தமே இல்லாமல் பேசுவதிலிருந்தே நீங்கள் விவாதம் செய்ய வரவில்லை வீண்வாதம் செய்யத்தான் வந்துள்ளீர்கள் என்று தெரிகிறது.




   
Quote
இங்கே குற்ற‌ங்க‌ள் ந‌ட‌க்கிற‌து.ஆனால் அது வெளியில் வ‌ருவ‌தில்லை.அது தான் உண்மை


தவறுகளையே  தேடி கொண்டிருக்கும்  உங்களை போல சிலருக்கு தவறுகள் தெரிகிறது போல் நினைகிறேன் தமிழன். நான் ஒன்றும் சவுதியில் குற்றம் நடக்கவே இல்லை என்று கூற வில்லை இந்தியாவை ஒப்பிடும் பொது நூறில் ஒரு சதவிதம் தான் சவுதியில் குற்றங்கள் நடக்கிறது என்று கூறினேன். நீங்க எனது பதிலை ஒழுங்காக படித்து விட்டு பதில் கொடுத்திருக்கலாம். அப்படி என்ன அவசரம் என்று தெரிய வில்லை இப்படி அவசரமாக பதில் கொடுக்க தமிழன்.



 
Quote
ந‌ம‌க்கு ஆற‌றிவு ஏன் இறைவ‌ன் ப‌டைத்தான்? ந‌ல்ல‌தையும் கெட்ட‌தையும் பிரித்து அறிய‌த்தான். நாங்க‌ள் அதை தான் செய்கிறோம். ந‌ல்ல‌தை ம‌ட்டும் எடுத்துக்கொள்கிறோம். கெட்ட‌தை விட்டு விடுகிறோம்.எங்க‌ள் க‌ண்ணுக்கு ந‌ல்ல‌து ம‌ட்டும் தெரிகிற‌து. உங்க‌ள் க‌ண்ணுக்கு கெட்ட‌து ம‌ட்டும் தெரிகிற‌து. இது பார்வையின் பிழை. சினிமாவின் பிழை அல்ல‌.


நீங்கள் சொன்ன அதே இறைவன் தான் எங்களுக்கு அந்த கேட்டதை பார்க்காதே என்று சொல்லி இருக்கிறான் தமிழன். இது உங்களுக்கு தெரியாது என்று என்னை ஏமாற்ற முடியாது இறைவன் ஆபாசமாக பார்ப்பதை தடை செய்துள்ளான் என்பது உங்களுக்கு நன்றாக  தெரிந்ததே அது உங்களுக்கும் உங்களுக்கு ஆறு அறிவை கொடுத்த இறைவனுக்கும் தெரியும் தமிழன்.

நாங்கள் நீங்கள்  சொல்வது போல் ஆறு அறிவை பயன்படுத்தி நல்லதை பிரித்தறிந்து அதை பார்ப்பது தவறு என்று கூறுகிறோம். ஆனால் நீங்கள் அந்த அறிவை பயன்படுத்தவில்லை அதை பயன் படுத்த விருப்பம் இல்லாமல் வீண்வாதம் செய்கிறீர்கள் என்பது புரிகிறது தமிழன்.

இதில் இருந்து உங்களுக்கு பார்வையிலும் சிந்திக்கும் அறிவிலும் பிழை இருக்குறது என்பது தெட்ட தெளிவாக புரிகிறது.

மது, புகை அனைத்தையும் சினிமா சொல்லி கொடுகிறது என்று கூறினேன் நீங்கள்  என்ன செய்திருக்க வேண்டும் அதை இல்லை சினிமா கற்றுகொடுக்க வில்லை என்று கூறி இருக்க வேண்டும் அதை விட்டுட்டு கிராமங்களை உதாரணமாக எடுகிரீர்கள் தலைப்பை விட்டு வெளியே செல்கிறீர்கள்  தமிழன் இது தலைப்பல்ல. கிராமவாசிகள் தவறு செய்கிறார்களா இல்லையா? என்பது. உங்கள் வாதம் இங்கு சறுக்கி தலைப்பை திசை திருப்புகிறீர்கள். என் வாதம் இங்கு சருக்கிகிராதா இல்லையா என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும்.




   
Quote
சினிமா எப்ப‌டி உற‌வு கொள்ள வேண்டும் என‌ ப‌டிப்பிக்கிற‌து, ந‌க‌ர‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் த‌வ‌று செய்தாலும் பாதுகாப்புட‌ன் செய்கிறார்க‌ள். அத‌னால் போச‌மான‌ வியாதிக‌ளில் இரு ந்து த‌ப்புகிறார்க‌ள். அத‌ற்காக‌ த‌வ‌று செய்ய‌ சினிமா தான் சொல்லிக் கொடுக்கிற‌து என்று சொல்லாதீர்க‌ள். அது அவ‌ர‌வ‌ர் உட‌ல் தேவை . அது ப‌ட‌ம் பார்க்காவிட்டாலும் எடுக்கும். அத‌னால் என்ன வினை வ‌ரும்? வ‌ராம‌ல் எப்ப‌டி பாதுகாப்ப‌து எனும் விழிப்புண‌ர்வை சினிமா தானே உண்டாக்குகிற‌து?


எந்த சினிமா உங்களுக்கு உறவு கொள்ள படிப்பிகிறது தமிழன்? நீங்க வேறு ஏதோ சினிமாவை பற்றியும் அதில் எப்படி பாதுகாப்பாக உறவு கொள்வது என்பதை பற்றியும் சொல்லி கொடுப்பதாக சொல்கிறீர்கள்  போல. இதை நான் விரிவாக பேச விரும்ப வில்லை.

நீங்கள் சொல்வதை பார்த்தால் அப்படி தவறான உறவு கொள்வது சரி என்று சொல்வீர்கள் போல. இப்பொழுது புரிகிறது  தமிழன் உங்களை இந்த சினிமா எந்த அளவிற்கு சீர்படுத்தி இருக்கிறது என்பது. வாசகர்களும் புரிந்து கொல்வார்கள் என்பதை நம்புகிறேன்.




   
Quote
சினிமாவை பார்த்து விட்டு அதில் உள்ள‌தையே நினைத்துக் கொண்டிருப்ப‌து உங்க‌ளைப் போல‌ ஒரு சில‌ர் தான்.


மீண்டும் என்னை விட நீங்கள் என்னை அதிகம் புரிந்தவர் போல் பேசி இருக்கிறீர்கள் தமிழன். நான் ஒரு போதும் அதை நினைத்து கொடிருக்கவில்லை தமிழன் அது தவறு என்பதை புரிந்து கொண்டதால் தான் இங்கு வாதிட்டு கொண்டிருக்கிறேன். ஒருவேளை நீங்கள் அதையே நினைத்து கொடிருப்ப்பதால் தான் அதை விட்டு பிரிய மனம் இல்லாமல் சரி என்று வாதிடுகிறீர்கள் போல. அது உங்கள் சிந்தனையின் தவறு.



   
Quote
யூசுப் ம‌ச்சி, உங்க‌ளிட‌ம் ஒரு தாழ்மையான‌ வேண்டுகோள். நீங்க‌ள் நிறைய‌ புள்ளி விப‌ர‌ங்க‌ளை கொடுத்திருந்தீர்க‌ள். அந்த‌ தின‌ம‌ணி ப‌த்திரிகை ஆதார‌த்தை த‌விர‌ வேறு இத‌ற்கும் ஆதார‌ங்க‌ளை கொடுக்க‌வில்லை.
    அத‌ற்கு த‌குந்த‌ ஆதார‌ங்க‌ளை கொடுத்தால் நாங்க‌ளும் வாசித்து ப‌ய‌னடைவோம்


தமிழன் மச்சி நான் உங்கள் தமிழிலும், சிந்தனையிலும் தான் கோளறு சொன்னேன் இப்பொழுது தான் புரிகிறது உங்கள் கண்ணிலும் கோளறு உள்ளது என்பது. நான் தினமணி செய்தியை மட்டும் குறிப்பிட வில்லை மேலதிகமாக குமுதம் மற்றும் ஒற்றுமை போன்ற இதழ்களில் இருந்தும் அதரங்களை மேற்கோள் கட்டினேன். நீங்கள் அதை பார்க்க வில்லை என்றால் முதலில் கண் மருத்துவர் உங்கள் கண்ணை பார்க்கட்டும் பிறகு நீங்க ஆதாரங்களை பாருங்கள் தமிழன் மச்சி.



   
Quote
இன்த‌ விவாத‌த்தை வாசிப்ப‌வ‌ர்க‌ளில் ஒரு 10 பேர் சினிமா பார்த்து நாங்க‌ள் சீர‌ழிந்தோம் என‌ ஆதார‌ங்க‌ளுட‌ன் சொல்லுங்க‌ள். என‌து வாத‌ம் பிழை என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ ஒத்துக் கொள்கிறேன்.


நன்றாக நகைச்சுவை செய்கிறீர்கள் தமிழன் யாரவது கேட்டு போனவர்கள் பகிரங்கமாக தான் கேட்டு போய்விட்டேன் என்று கூறுவார்களா? கொலை செய்தவன் தப்பு செய்தவன் எப்படி தான் தப்பு செய்துவிட்டேன் என்பதை ஒத்துகொள்வான். இப்படி கேள்வி கேட்பதால்  உங்கள் விவாதம் (வீண்வாதங்கள்) அனைத்தும் சரி என்று ஆகி விடுமா தமிழன்.

நீங்கள் ஒத்து கொண்டாலும் ஒத்து கொள்ள விட்டாலும் சிந்திக்க கூடியவர்கள் அறிவுள்ளவர்கள்  ஒழுக்கம் உள்ளவர்கள் சினிமா இளைஞர்களை சீற்படுத்துவதை விட சீரழிக்கத்தான்  செய்கிறது என்று கூறுவார்கள் தமிழன்.

மீண்டும் நினவு படுத்துகிறேன் தமிழன்!

நீங்கள் கேட்ட விடயத்தை நல்ல விடயமாக மாற்றுவதற்கு முயற்சிசெய்கிரீர்கள் ஆனால் இதை படிக்கும் வாசகர்கள் அறிந்து கொள்வார்கள் எது நல்லது எது கேட்டது என்பதை என்று நம்புகிறேன்.

ஆகவே, நீங்கள் பொழுதுபோக்கு என்று கூறும் இந்த சினிமா இளைஞர்களை சீற்படுத்துவதை விட சீரழிப்பது தான் அதிகம் என்று மீண்டும் உங்களுக்கும் இதை படிக்கும் வாசகர்களுக்கும் கூறிகொள்கிறேன் தமிழன்.
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: thamilan on November 29, 2011, 09:57:16 PM
சரித்திரத்தில் சினிமாவில் நடக்க கூடிய தவறுகளை படித்திருப்பீர்கள் என்று கேட்கிறீர்கள். சரித்திரம் படிக்கும் அளவிற்கு நான் உங்களை போன்று புத்திசாலி இல்லை தமிழன். என்னை போன்று சரித்திரம் அறியாத இளைஞர்கள் தான் அதிகம். அவர்களுக்கு இந்த தவறுகள் எல்லாம் வெளிச்சம் போட்டு கட்டியது எது இந்த சினிமா தானே. நாங்கள் எல்லாம் சரித்திரத்தை படித்து இந்த தவறுகளை அறிந்து கொள்ள வில்லை கல்லூரி பருவத்தில் சினிமாவை பார்த்து தான் அறிந்துகொண்டோம்

இது நீங்க‌ள் சொன்ன‌து தானே. இதில் நாங்க‌ள் என்று ப‌ன்மையாக உங்க‌ளையும் சேர்த்து தான் சொல்லி இருக்கிறீர்க‌ள்.அத‌ற்குத்தான்

இது சினிமாவின் த‌வ‌ற‌ல்ல‌. ப‌டிக்கும் போது ப‌டிப்பை விட்டுவிட்டு சினிமா பார்க் பீச் என்று சுற்றிய‌ உங்க‌ளைப் போல‌ ஒரு சில‌ரின் குற்ற‌ம். நாங்க‌ளும் ப‌டித்தோம் பாட‌சாலைக்கு க‌ட் அடித்து விட்டு ஒரு நாள் கூட‌ எங்கும் போன‌தில்லை. ஒரு த‌னிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் பிழையை எதுக்கு சினிமா மேல் சும‌த்துகிறீர்க‌ள்? என்று கேட்டேன்,

தமிழன் நான் எந்த இடத்திலும் ஊரு சுத்தியதாக இருந்தேன் என்று குறிப்பிட வில்லையே என்னை பற்றி  என் வாழ்கையை பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்தது. பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறீர்கள் போல இருக்கிறது உங்கள் வாதங்கள் அனைத்தும்.

இதில் எங்காவ‌து நீங்க‌ள் ஊர் சுற்றிய‌தாக‌ சொன்னேனா? யார் க‌ண்ணில் கோளாறு என்று இதை வாசிப்ப‌வ‌ர்க‌ளுக்கு புரியும்.


தமிழன் நீங்க படிச்சது கிராமமாக இருந்திருக்கலாம். அதனால் நீங்கள் கட் அடிக்காமல் இருந்திருக்கலாம். நகரத்தில் கட் அடிப்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. ரசிகர் மன்றம் பெயரில்  பள்ளி கல்லூரிகள்  ..அலுவலகங்களை ..கட்  அடித்துவிட்டு கஷ்டப்பட்டு  மணிக்கணக்கில் வரிசையில் காத்து நின்று டிக்கெட்  அதிக விலை கொடுத்து வாங்கி படம் பார்கிறார்கள் இது தான் பொழுதுபோக்கா?

என்னை பற்றி  என் வாழ்கையை பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்தது. பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறீர்கள் போல இருக்கிறது உங்கள் வாதங்கள் அனைத்தும்

இப்ப‌டி என்னிட‌ம் கேட்ட‌ அதை தானே நீங்க‌ளும் செய்திருக்கிறீர்க‌ள்? நான் அதையே திருப்பி கேட்க‌வா? என்னை ப‌ற்றி உங்க‌ளுக்கு என்ன‌ தெரியும்? ச‌ரி உங்க‌ள் ம‌ன‌சாந்திக்காக‌ நான் கிராம‌த்தில் தான் ப‌டித்தேன், என்றே வைத்துக்கொள்ளுங்க‌ளேன்.அத‌னால் உங்க‌ளுக்கு ஏற்ப‌டும் ச‌ந்தோஷ‌த்தை ஏன் கெடுக்க‌ வேண்டும்?


தவறுகளையே  தேடி கொண்டிருக்கும்  உங்களை போல சிலருக்கு தவறுகள் தெரிகிறது போல் நினைகிறேன் தமிழன்

இதையே நீங்க‌ள் உங்க‌ளுக்கு சொன்ன‌தாக‌ எடுத்துக் கொள்ளுங்க‌ள் யூசுப். சினிமாவாப் பொருத்த‌ம‌ட்டும் அது உங்க‌ளுக்கே பொருந்தும்.இங்கு விவாத‌ம் சினிமாவைப் ப‌ற்றிய‌து. அங்கே த‌வ‌றுக‌ளை ம‌ட்டுமே தேடுவ‌து நீங்க‌ள் தானே.
ந‌ன்றி யூசுப்.


என் சிந்த‌னையில் கோளாறு, என் த‌மிழ் க‌ற்ற‌லில் கோளாறு, என் க‌ண்க‌ளில் கேளாறு எல்லா கோளாறுக‌ளும் எனக்கு தான். ஒரு குறையும் இல்லாம‌ல் உங்க‌ளை ப‌டைத்த‌த‌ற்கு நானும் க‌ட‌வுளுக்கு ந‌ன்றி சொல்கிறேன்.

 விவாத‌ம் விப‌ரீத போக்கில் போகாம‌ல் இருக்க‌ இத்துட‌ன் என‌து வாத‌ங்க‌ளை நிறைவு செய்கிறேன். நன்றி
.
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: Yousuf on November 30, 2011, 11:24:51 PM
அனைவரும் அவரவர் கருத்தினை நிறைவு செய்து விட்ட காரணத்தால் நானும் எனது நிறைவான கருத்தினை சொல்லி நிறைவு செய்கிறேன்.

நான் ஆரம்பத்தில் இருந்து வாதாடியது போல சினிமா இளைஞர்களை சீற்படுத்துவதை விட அதிகம் சீரழிக்கத்தான் செய்கிறது என்று முதலும் முடிவுமாக கூறி எனது இந்த கருத்தை பதிவு செய்கிறேன்!

விவாதத்தின் வரைவிலக்கனப்படி ஒரு தலைப்பை ஆதாரத்தின் அடிப்படையில் விவாதித்து அதில் உள்ள நிறை குறைகளை எடுத்து காண்பித்து இறுதியாக தீர்ப்பை பார்வையாலர்களிடமோ அல்லது வாசகர்களிடமோ விட்டு விட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தலைப்பின் தீர்ப்பை வாசகர்களிடம் ஒப்படைக்கிறேன்!

இந்த விவாதத்தில் பங்கு பெற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்து இந்த விவாதத்தை சிறப்பித்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

இந்த விவாதத்தில் பங்கு பெற்ற நண்பர்கள் ஏஞ்செல், ரெமோ, தமிழன், ஸ்ருதி, செல்வன், சாறு, தாமரை, சாம் ஆகிய உங்களில் யாரையாவது விவாதத்தின் பொது மனம் புன்படும்படி பேசி இருந்தாலோ, கஷ்டம்ப்ப்படும்படியான வார்த்தைகளை உபயோகித்திருந்தாலோ மன்னிக்கவும்.

யாருடைய மனதையும் வேண்டும் என்று புண்படுத்த வேண்டிய நோக்கத்தோடு நான் விவாதம் செய்ய வில்லை மாறாக என் பக்கத்து நியாயத்தை எடுத்து கூறவே விவாதத்தில் பங்கு கொண்டேன்.

இந்த விவாதத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் இந்த விவாதத்தை பார்வையிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி!

இத்துடன் என் விவாதத்தை நிறைவு செய்கிறேன்!!!


என்றும் அன்புடன் தோழன்!

யூசுப்!
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: KungfuMaster on December 13, 2011, 02:53:29 PM
சினிமா  intha vishayam vanthu  ethanai varudangal irukkum? 100 varudam, 200 varudam?

but nalla vishayangalum theeya vishayangalum pala 1000 varushangaluku munna irunthe irukkathan seikirathu...

Naam ethai thedi pogindromo athu namaku kidaikathan seiyum....

oru manithan (avan Youth ah irunthalum sari pallu pona palaya bootha ah irunthalum sari) nalla vishayangalai thedinal thavarana vishayangal avanuku therivathu ilai, athai avan therinthukolla vendiya avasiyamum illai...

oruvan thavarana nokkathodu selgiran endral nalla vishayame kidaithalum athai othukki vittu thavarana vishayathaye thedi pidipan...

சினிமா enbathu oodagam,,, athil varathu ellam eppadi ellam thavarugal nadakirathu enbathai sutti kattuvathe thavira padam paarka varum ellarayum appadi matruvathu alla...

சினிமா  porutha varaikum 95% ella padangalum kadaisiyil theeyavai azhinthu subam endre mudika padukirathu... aana naama athai vittuvittu athuku munnala ulla romance, fight, athu ithunu ellathayum capture panikitu ukkanthiruntha kettu pogama enna panna mudiyum...

nan romba busy ah iruken athanala vilakama solla mudiyala but kadaisiya nan onnu solikiren....


    தீதும் நன்றும் பிறர்தர வாரா!!!

Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: RemO on February 13, 2012, 02:07:02 AM
நண்பர்களே இந்த விவாதத்திற்கு தகுந்த ஒரு செய்தியை நான் படித்தேன் இன்று அதை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்

ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடைய ஆசிரியை கொலை செய்து அதற்கான காரணத்தை வாக்குமூலமாக கொடுத்துள்ளான் அது

Quote
வருத்தமா இருக்கு... எங்க டீச்சர் செத்துடுவாங்கன்னு நினைக்கவே இல்ல.. போலீஸ் வந்து கைது பண்ணுவாங்கன்னும் தெரியாது, என அப்பாவியாக வாக்குமூலம் அளித்துள்ளான், சமீபத்தில் தனது வகுப்பு ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற மாணவன்.

மேலும் ஆசிரியையை கொல்ல கத்தி எடுக்கத் தூண்டியதே தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் வரும் வன்முறைக் காட்சிகள்தான் என அந்த மாணவன் கூறியுள்ளான்.

சென்னை நகரை மட்டுமல்ல, பள்ளி கல்வி முறையையே உலுக்கியுள்ளது, வகுப்பு ஆசிரியையை அவரது மாணவனே குத்திக் கொன்ற சம்பவம்.

கடந்த வியாழக்கிழமை பாரிமுனையில் உள்ள ஆர்மேனியன் தெருவில் இருக்கும் செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இந்த கொலை நிகழ்ந்தது. அந்த பள்ளியின் ஆசிரியை உமா மகேஸ்வரி வகுப்பறையில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரிடம் படிக்கும் 9-வது வகுப்பு மாணவனே இந்த கொடூரத்தை செய்துவிட்டான்.

அந்த பள்ளி மாணவன் தற்போது கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது பிஞ்சு மனது நஞ்சாகி கொலை செய்யும் அளவுக்கு அவன் எவ்வாறு தூண்டப்பட்டான் என்பது அவனது வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.

சிறுவர் சீர்திருத்த இல்லத்தில்...

அந்த மாணவன் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு தற்போது புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அதே சீர்திருத்த இல்ல வளாகத்தில் செயல்படும் சீர்திருத்த நீதிமன்றம் அவன் மீதான வழக்கை விசாரிக்க உள்ளது.

அந்த சீர்திருத்த இல்லத்தில் பல்வேறு குற்றங்களில் மாட்டியுள்ள 60 சிறுவர்களும், 2 சிறுமிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் இருவருக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் 60 பேரும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் ஒரு பிரிவாகவும், 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இன்னொரு பிரிவாகவும் தனித்தனியாக அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். 15 வயது நிரம்பியவன் என்பதால், 10 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் அந்த இல்லத்தின் முதல் மாடியில் தங்க வைக்கப்பட்டுள்ளான்.

பொதுவாக அறியாத வயதில் புரியாமல், தெரியாமல் சிறுவர்- சிறுமிகள் குற்றங்களில் ஈடுபட்டு இந்த இல்லத்தில் அடைக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் விரும்பிய நேரத்தில் இவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

பாரிமுனை பள்ளி மாணவனையும் முதல் நாளன்று அவனது பெற்றோரும், 3 அக்காள்களும் மற்றும் உறவினர்களும் பார்த்து பேச அனுமதிக்கப்பட்டனர்.

சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டவுடன் அவன் மனதளவில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 3 பெண் அதிகாரிகள் அவனிடம் அன்பாக பேசினார்கள். அவனது மனம்கோணாத வகையில் நடந்த சம்பவம் பற்றி அவனிடம் அன்பாக பேசி கேட்டறிந்தார்கள். முதலில் இல்லத்துக்கு சென்றவுடன் மாணவன் வருத்தத்தோடும், மனஇறுக்கத்தோடும் காணப்பட்டான். பெண் அதிகாரிகளின் அரவணைப்பான பேச்சால், இயல்பான அவன் நடந்த சம்பவம் பற்றி விளக்கி கூறியுள்ளான்.

கொலை செய்தது ஏன்?

அவனது வாக்குமூலத்தின் ஒரு பகுதி:

ஆசிரியை உமா மகேஸ்வரி மிகவும் நல்லவர். அதே நேரத்தில் கண்டிப்பாக பேசுவார். முதலில் அவரை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. வீட்டில் நான் ஒரே பிள்ளை. அப்பா-அம்மா, என்னை செல்லமாக வளர்த்தார்கள்.

வீட்டில் எனக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கும். நான் அந்த அறையில் இருந்துதான் படிப்பேன், படுத்து தூங்குவேன்.

மனசைக் கெடுத்த சினிமா

கொலை, வெட்டுக்குத்து, வில்லனை கதாநாயகன் அடித்து நொறுக்கும் சண்டைக்காட்சிகள் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில படங்களையே நான் விரும்பி பார்த்தேன். கடைசியாக `அக்கினி பத்' என்ற இந்தி படத்தை நான் பார்த்தேன்.

அதில், கதாநாயகன், வில்லனை கத்தியால் நெற்றியில் குத்துவான். அந்த காட்சி எனது மனதில் ஆழமாக பதிவானது.

ரிப்போர்ட் கார்டில் தவறாக எழுதினார்

நான் இந்தி பாடத்தை சரியாக படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியை உமா மகேஸ்வரி அடிக்கடி என்னை கண்டிப்பார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 3 முறை எனது `ரிப்போர்ட்' கார்டில் என்னைப்பற்றி தவறாக எழுதிவிட்டார். என்னிடம் பாசத்தை கொட்டும் எனது தந்தைகூட இதை பார்த்துவிட்டு என்மீது கோபப்பட ஆரம்பித்தார்.

எனக்கு தினமும் செலவுக்காக நான் கேட்கும் பணத்தை என் அப்பா கொடுப்பார். ரிப்போர்ட் கார்டில் ஆசிரியை எழுதியதை பார்த்தவுடன் எனக்கு செலவுக்கு பணம் கொடுப்பதை இனிமேல் தரமாட்டேன் என்று எனது தந்தை கண்டிப்பாக கூறினார்.

இது, மனதுக்கு ஒரு கஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆசிரியை மீது கோபத்தை ஏற்படுத்தியது. கடந்த புதன்கிழமை அன்று இந்தி பாடம் சரியாக படிக்காத என்னைப் போன்ற 7 மாணவர்களை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சிறப்பு வகுப்புக்காக ஆசிரியை உமா மகேஸ்வரி வரச்சொன்னார். அப்போது அவர் என்னை திட்டினார். இனி ஒழுங்காக படிக்காவிட்டால், பெயிலாகி விடுவாய் என்று சொன்னார். இது, எனது மனதில் ஏற்கனவே இருந்த கோபத்தோடு பயத்தையும் உண்டாக்கியது.

மாணவர்கள் கிண்டல்

ஆசிரியை இவ்வாறு சொன்னதை பார்த்து, எனது சகமாணவர்கள் என்னை கிண்டல் செய்தனர். இது, எனக்கு அவமானத்தையும், மேலும் கோபத்தையும் தூண்டியது.

அப்போதுதான் இந்தி படத்தில் வரும் காட்சியைப்போல, ஆசிரியையை கத்தியால் குத்தவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், ஆசிரியை செத்துப்போவார். போலீசார் பிடிப்பார்கள். நம்மை இப்படி இல்லத்தில் அடைப்பார்கள் என்று எதுவும் எனக்கு தெரியாது. இப்போது வருத்தமாக உள்ளது," என்று கூறியுள்ளான்.

அந்த மாணவனுக்கு கவுன்சலிங் கொடுத்து இயல்பாக இருக்க வைத்துள்ளனர் போலீசார்.

நேற்று காலையிலும், நேற்று முன்தினம் காலையிலும் அவனுக்கு ஒரு மணி நேரம் யோகா சொல்லிக்கொடுக்கப்பட்டது. மற்ற மாணவர்களோடு விளையாடவும் அனுமதிக்கப்பட்டான்.

டிவி பார்க்கவும், விளையாடவும் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவன் தொடர்ந்து படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் தெரிந்த 2 ஆசிரியைகள் அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். அந்த மாணவனுக்கு புதிய சீருடை தைத்து வழங்கப்பட்டது.

ஒரு குற்றவாளி என அந்த மாணவனுக்கு நினைப்பு வராத அளவுக்கு பார்த்துக் கொள்கின்றனர் அந்த இல்லத்தில். அவனுக்கு என்ன தண்டனை என்பதை சீர்திருத்த நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.

இந்த ஒரு விஷயம் போதுமானது என நான் நினைக்கிறன் 
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: $ Open HearT $ on October 25, 2014, 04:39:46 PM
Some films have great educational value. They teach us about life. I think the films are not corrupting the youths. Because as we know every coin has two sides one is positive and other is negative, It completely depends upon us whether to take it as positive or negative.

If we are saying that today's youth is copying the action of hero's from violence scene then I will suggest him to watch any gandhiwadi film and try to copy the bapu's thought in one day.

There are number of good movies also which are inspiring the youths like.

3Idiots, Taare Zamin Par, My name is khan from which we can learn lot of good thinks. Spiritual movies like Ramayan and Mahabharat showing the culture of India from which also we can learn the culture of India.

So finally I want to conclude that we have to judge in the films whether what is the good and what is bad and I will say it depends upon individual how they take it.
Title: Re: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?
Post by: thamilan on October 25, 2014, 08:48:39 PM
open heart you are right.  நிறைய movies இப்போ நல்ல masseges சொல்கிறது. உதாரணத்துக்கு சாட்டை movie.  ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் அது. இறைவன் மற்ற எல்லா உயிர் இனங்களையும் விட மனிதனுக்கு அறிவு என்று ஒரு ஆற்றலை கொடுத்திருப்பது எதையும் சிந்தித்து எது சரி எது பிழை என முடிவெடுக்கத்தான். கெட்டதை பார்த்து அதை பின்பற்றும் ஒருவனால் ஏன் நல்லதை பார்த்து அதை பின்பற்ற முடியாது?
இது மனிதனிடம் இருக்கும் கோளாறே தவிர படங்களில் இல்லை.