எனக்கு விவரம் தெரிந்து சிந்திக்க ஆரம்பித்ததில் இருந்து நான் திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் தமிழன்
யூசுப் மச்சி நீங்க விபரம் தெரிஞ்சி சிந்திக்க ஆரம்பிச்ச பிறகு படம் பார்க்கிறத நிறுத்திட்டதா சொல்லுறீங்க. இது உங்க வாக்குமூலம். நீங்க விபரம் தெரிகிறதுக்கு முன்னால சிந்திக்க தொடங்குறதுக்கு முன்னால படம் பார்த்து இருக்கலாம். இது நல்லதா கெட்டதா என்று விபரம் தெரியாத பருவத்தில் சரியா பிழையா என்று சிந்திக்க ஆரம்பிக்கு முன்னர் படம் பார்த்துட்டு அது சரியில்லை என்று எப்படி சொல்ல முடியும்?
விபரம் தெரிஞ்ச பின்னால சிந்திக்க ஆரம்பிச்சதில இருந்து படம் பார்க்கிறத நிறுத்திட்டிங்க. அப்புறம் எதை வைத்து சினிமா சரியில்லை என்று சொல்லுறீங்க? உங்களுக்கு விபரம் தெரிந்த பிறகு, சிந்திக்க தொடங்கின பிறகு தான் நீங்க சினிமா பார்க்கவில்லையே.
மறுபடி நான் விபரம் தெரிந்த பிறகு, சிந்திக்க தொடங்கின பிறகு படங்கள் பார்த்துட்டு தான் பார்க்கிறதை நிறுத்தினேன் என்று சொல்லப் போறீங்க.
அடுத்தது நான் சொன்ன படங்கள பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? நீங்க தான் படம் பார்க்கிறதில்லையே? அதுல ஆபாச நடனங்களோ, ஆபாச வார்த்தைகளோ இருக்கிறது என்று எதை வைத்து சொல்லுகிறீர்கள்.முதலில் நான் சொன்ன படங்களை பாருங்கள். இல்லாமல் வெறும் யூகங்களாலும் மற்றவர் சொல்வதை கேட்டோ நீங்கள் வைக்கும் வாதம் எந்த கோர்ட்டிலும் எடுபடாது மச்சி.
மசாலா கலவை இல்லாத படம்.
ஆபாச நடனம், ஆபாச பேச்சுகள் போய் இப்போது மசாலா கலவைக்கு வந்த்தாச்சி.
அதும் இல்லை என்று வந்தா அடுத்ததா என்ன குறை சொல்ல போறாங்களோ?
நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கூட மசாலா கலவை கொஞ்சம் குறைந்தால் கூட இது சாப்பாடா என்று குறை கூறுகிறோம்.
சினிமா என்பதை உண்டாக்கியதே பொழுது போகத்தான். அதில் மசாலா கலவை இருப்பதில் தப்பு என்ன? ஒரு பொருள் சுவையாக வரவேண்டுமானால் அதன் மூலப்பொருளுடன் வேறு பொருட்களையும் சேர்த்தால் தான் அந்த பதார்த்தம் சுவையாக வரும்.ஒரு BREAD தயாரிக்க மாவுடன் ஈஸ்ட், உப்பு,எல்லாம் சேர்த்து கலந்து செய்தால் தான் அது BREADஆக இருக்கும். வெறும் மாவை தண்ணீரில் குழைத்து வேக வைத்து கொடுத்தால் அதை தயாரித்தவன் முகத்தில் வீசி எறிவார்கள். சினிமாவும் அப்படிதான்.
மனித வாழ்க்கையே ஒரு மசாலா கலவை தானே.
நீங்கள் சொல்வதை பார்த்தல் விபச்சாரம் செய்தவன் தான் விபச்சராம் பற்றி பேச வேண்டும் எனபது போலவும் திருடியவன் தான் திருட்டை பற்றி பேச வேண்டும் என்பதை போலவும் அல்லவே உள்ளது இது எப்படி சரியான உதரணாமாக ஆகா முடியும்?
விபச்சாரம் என்றால் என்ன? திருட்டு என்றால் என்ன என்று தெரியாத விபரம் அறியாதவர்கள் அதை பற்றி பேசினால் அது சரிவருமா யூசுப் மச்சி?அதை பற்றி அடிப்படை அறிவு சரி வேண்டாமா அதைப் பற்றி பேச.
இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் 7ம் வகுப்பு படிக்கும் போது எனது கிளாஸ் டீச்சருடைய மகனும் எங்கள் வகுப்பில் படித்தான். டீச்சருடைய மகனிடம் ஒரு பையன் கற்ழிப்பது என்றால் என்ன என்று கேட்டான். அதற்கு வாத்தியாருடைய பையன் 'ரோட்டில் நாயும் நாயும் பண்ணுகிறதே அது தான் கற்பழிப்பு' என்றான்.
இப்படித்தான் இருக்கும் அடிபடை அறிவில்லாதவர்கள் பேசுவது.
அப்படி நீங்கள் அதை சரி கண்டால் அந்த நடிகைகளை அரைகுறை ஆடையோடு பார்ப்பது கூடும் என்றால் நாம் நம் சகோதரிகளை அப்படி பார்ப்பது போல் பார்போமா? பார்க்கத்தான் நினைப்போமா? அல்லது மற்றவன் தவறான எண்ணத்தோடு பார்க்கத்தான் விட்டு விடுவோமா?
இந்த அரைகுறை ஆடைகள் படத்தில் மட்டும் தானா யூசுப் மச்சி?
ந்ம் அண்டாட வாழ்க்கையில் தினம் தினம் தெருவில் இதை தானே பார்க்கிறோம். அதற்காக கண்ணை மூடிக்கொண்டா ரோட்டில் நடக்கிறோம்.உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டா போவீர்கள்?
அப்படி போவதென்றால் நான் பரலோகத்தில் தான் இருப்போம்.
மினி ஸ்கேட் என்ன, டைட் ஜீன்ஸ் என்ன, நீண்ட ஸ்கேட்டிலும் நடப்பதற்கு வசதியாக பாதியை கிழித்து விட்டு நடக்கும் போது முக்கால் வாசி கால் வெளியே தெரியும்.
அது மட்டுமா சாரி உடுத்துபவர்கள் கூட லோ ஹிப் என்ற பெயரில் வயிற்றின் அடியில் பயங்கர வளைவுகள் வரை இறக்கி கட்டுகிறார்கள்.
ஆடை இல்லாமல் இருப்பதை விட இப்படி இருப்பது தான் ஆபாசம் மச்சி. இதை எல்லாம் பார்த்து விட்டு யாரும் கண்ணை மூடிக்கொண்டு போவதில்லை. அதற்காக அதையே நினத்து கொண்டும் இருப்பதில்லை. சினிமாவும் அப்படித்தான்.
இன்றைய இளைஞர்கள் புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும் சமுதாயத்தில் ஒரு உயர்ந்த செயலாக செய்வதற்கு காரணம் என்ன இதை யாரை பார்த்து பெரும்பான்மையான இளைஞர்கள் கற்றுகொண்டார்கள் இந்த சினிமா தானே காரணம்?
உங்கள் விவாதம் வேடிக்கையாய் இருக்கிறது யூசுப் மச்சி.அப்போ சினிமா இல்லா விட்டால் மது அருந்துவதும் புகை பிடிப்பதும் உலகில் இருக்காது என்று சொல்கிறீர்கள். நல்ல வரவேற்கப்பட வேண்டிய கருத்துக்கள் தான்.
சினிமா என்பது மனிதனுடய சிந்தனையில் உருவாவது. அவன் மனித செயல்களை வைத்துத் தான் சிந்த்தித்து சினிமாவை தயாரிக்கிறான்.அதை வேண்டுமானால் கொஞ்சம் நவீனமயப்படுத்துகிறான். மொத்ததில் மனிதன் எதை செய்கிறார்களோ அது தான் சினிமாவாக வெளியே வருகிறது.
சினிமா முழுவதும் புகை பிடிப்பதில்லை. சினிமா முழுவதும் மது அருந்துவது இல்லை. ஆனால் வீடுகளில் தன் மகனிடமே பணம் கொடுத்த்து சிகரெட் வாங்கிவரச் சொல்லி மகன் முன்னால் நாள் முழுக்க ஊதித்தள்ளும் தந்தைகள் ஏராளம் இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் முன்னால் மது அருந்தும் பெற்றோர் வீதிக்கு வீதி இருக்கிறார்கள். குடிப்பதும் புகைப்பதும் எல்ல படங்களிலும் வருவதில்லை. வீட்டில் தினமும் இதை பார்த்து கெடாத பிள்ளைகள் மாதத்தில் ஒரு படத்தில் ஒரு சில காட்சிகளில் வருவதை பார்த்து விட்டு கொட்டுப் போகிறார்கள் என்பது வேடிக்கையாக இல்லை?
யூசுப் மச்சி எனது அப்பா பெரிய குடிகாரர்.அவர் குடித்த்து விட்டு வந்து வீட்டையே இரண்டு பண்ணுவார். அம்மாவை எங்கள் கண்முன்னால் சித்திரவதை பண்ணுவார், தினமும் இதை பார்த்து பார்த்து, எனக்கும் எனது அண்ணாக்களுக்கும் குடிக்க வேண்டும் என்ற ஆசை வரவில்லை. மாறாக வாழ்வில் என்றும் அதை தொடக்கூடாது என்ற வைராக்கியமே வந்த்தது. இன்று வரை நானும் எனடு அண்ணன்மார்களும் புகைத்ததும் இல்லை, குடித்ததும் இல்லை.
நீங்கள் சொல்லது போல பார்த்தால் நான் தான் பெரிய குடிகாரனாக இருந்திருக்க வேண்டும்.
சினிமா என்பது ஒரு வியாபாரம். மற்றவரை மகிழ்வித்து தானும் சம்பாதிக்கும் நோக்குடனேயே சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன. இதில் காந்தியார், பெரியார், வள்ளுவர் கதைகளை மட்டும் படமாக எடுத்தால் இந்த மூவரும் உயிரோடு இருந்தால் கூட போய் பார்க்க மாட்டார்கள். அவர்கள் கதைகளை
நாம் பாடசாலைகளில் வேண்டிய மட்டும் படித்திருக்கிறோம். எத்தனையோ புத்தகங்களில் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை படித்திருக்கிறோம்.இதை சினிமாவிலும் பார்கணுமா என்ன?
ஏதோ ஒரு படத்தில் வரும் ஒரு ஆபாசம் என்று சொல்லும் நகைசுவையை ரசித்தவர்கள் படங்களில் நகைச்சுவை வாயிலாக நல்ல கருத்துக்களை சொன்ன கலைவாணர் கிருஸ்ணன் நினைவுக்கு வரவில்லையா. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைசுவைகள் அவைகள்.
திரைபடங்கள் வெறும் சிந்தை ஊட்டுவதாகவும், வெறும் போதனைகள் நிறைத்ததாகவும் மட்டும் இருந்தால் படம் எடுத்தவன் தலையில் துண்டை போட வேண்டியது தான்.
வேலைத்தளங்களில் பிரச்சனை, வீட்டில் பிரச்சனை இப்படி ஆயிரம் பிரச்சனை உள்ள மனிதன் படம் பார்க்க வருவது, தன் கவலைகளை மறந்து மனதை மகிழ்வூட்டத்தான்.
அங்கும் வந்து வாழ்க்கை வரலாற்றையும் போதனைகளையும் படமாக பார்த்தால் என்ன நடக்கும்?
ஒரு நல்ல படமோ கெட்ட படமோ ஓடுவதும் ஓடாததும் அந்த படத்தில் இல்லை. அதை பார்ப்பவர்களிடம் இருக்கிறது. ஒரு நல்ல தேசிய விருது பெற்ற படத்தை தியேட்டரில் ஓடிய 50 நாளும் பார்காமல் இருந்து விட்டு டிவியில் போடும் போது ஓசியில் பார்ப்பது சினிமாவின் பிழையா?
தான் பேசுவது தான் சரி என்ற மனப்பான்மை வாதத்திற்கு ஒத்து வராது
இங்கே வாதாடும் அனைவரும் அந்த மனப்பாங்குடன் தான் வாதாடுகிறார்கள்.இதை சொன்னவர்கள் உட்பட. அதுகு பேர் தான் விவாதம்.எதிரான கருத்தை சொல்வவர்கள் கருத்தை சரி என்று சொன்னால் அதுக்கு பெயர் விவாதமா?
கெட்டவர்களோடு கதா நாயகன் சண்டை போடுவது நல்லது என்று நீங்கள் கூறுகிறீர்கள் இப்படி ஒவ்வொருவரும் சட்டத்தை கையில் எடுத்தால் பிறகு எதற்கு ஒரு அரசாங்கம் காவல் துறை எல்லாம்
உங்கள் விவாதங்கள் வேடிக்கையாகத்தான் இருக்கிறது மச்சி.
உங்கள் அக்கா தங்கச்சி செண்டிமொண்டிலேயே ஒன்று கேட்கிறேன்.
உங்கள் முன்னால் உங்கள் சகோதரியை ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை தாக்கி உங்கள் சகோதரியை காப்பாற்றுவீர்களா? இல்லை சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று, நீ பண்ணுறத பண்ணு நான் காவல்துறையிடம் போறேன் என்று விட்டுட்டு போவீங்களா?
உண்மையான பதில சொல்லுங்க.செட்லயே ஒருதன் ஒரு நேரம் தேவையில்லாத மாதிரி பேசினா ஒரு தடவை இரண்டு தடவை சிரிக்கிற ஸ்மைலிய போடுவீங்க. அப்புறம் தாங்க முடியாம போனா கோபமா ஸ்மைலிய போடுவீங்க. ஒருத்தன் உங்களுக்க்கோ உங்க வீட்டாருக்கோ அடிகடி தொந்தரவு பண்ணினா தட்டிக் கேட்பீங்களா இல்ல சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று சும்மா இருப்பீங்களா?
அப்படி சும்மா இருத்தா ஆண்மகன் என்று யாரும் மதிக்க மாட்டாங்க. இதை தான் படத்திலும் காட்டுறாங்க. ஒரு வித்தியாசம் ரசிக்கணும் என் கிறதுக்காக கொஞ்சம் மிகை படுத்தி காட்டுறாங்க. படத்தை பார்த்துட்டு யாரும் அது போல சண்டை போடுறதா நான் எங்கும் கேட்கல. அப்படி சண்டை போடுறதா இருந்தா அவங்களும் ஸ்டண்ட் மாஸ்டர கூட்டிக்கிட்டு தான் வரணும்.
உங புள்ளி விபரங்களின் அடிபடையில் பார்த்தால் நம் நாட்டுல நல்ல இளைஞர்களே இருந்திருக்க மாட்டாங்க யூசுப்.
அமெரிக்கா கலாசாரம் வேற நம் கலாச்சாரம் வேற. அதை வைத்து நம் சினிமாவையும் எடை போடாதிங்க
கடைசியா ஒன்று கேட்கிறேன், நம் சினிமாக்களில் எந்த சினிமாவுல பெற்றோருக்கு முன்னால பிள்ளைகள் கிஸ் அடிக்கிறாங்க? நான் பார்த்த எந்த படத்திலும் அப்படி எதும் பார்க்கல. நீங்க யாராவது பார்த்தா எனக்கும் சொல்லுங்க பிளீஸ்
யூசுப் மச்சி சினிமா ஒரு நிழல்படம். அதில் கெடுறதை விட நேரடியா பார்க், பீச் போய் பாருங்க, எத்தனை நைட்கிளப்ஸ் இருக்கு அங்க போடத கூத்தா?
ஒரு சில மோசமான படங்கள் வரத்தான் செய்கின்றன, ஆனா நீங்க படம் பார்த்த காலத்துக்கும் இப்போதைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இப்போ வார படங்களில் கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. இந்த ஆடை அவிழ்ப்பு, கிளப் டான்ஸ் எல்லாம் இப்போ எடுபடுறதில்ல என்று தயாரிப்பார்கள் அறிந்து கொண்டார்கள். இப்போ வார படங்களில் கதாநாயகனுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறதில்ல.
நான் சொன்ன தெய்வத்திருமகன் படத்தை எடுத்துப் பாருங்கள். அந்த படத்தை பார்த்துடு வெளியில வந்த ஆண்கள் கூட கண்ணை துடைத்துக் கொண்டு தான் வெளியில வந்ததா விமர்சனதில் கூட வாசித்தேன்.அந்த படமும் 100 நாள் ஓடினது சிலருக்கு தெரியாது போல.
போதும் என்று நினைக்கிறேன்.