இதை நான் யாருக்கு பதிலாகவும் எழுதவில்லை.இது இந்த விவாதத்தை வாசிப்பவர்களுக்கு எங்களின் வாதத்தின் அடிபடை நோக்கத்தை தெளிவு படுத்தவே எழுதுகிறேன்.எங்கள் எதிரணியில் உள்ளவர்கள் (ஒரு திருத்தம் எல்லோரும் அல்ல.)
நான் பிடித்த முயலுக்கு ஒன்றரை கால் என்று இருக்கிறார்கள். அவர்களுக்கு தெளிவு படுத்துவதில் அர்த்தம் இல்லை. அதனால் வாசகர்களாகிய உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
முதலில் இந்த தலைப்பே ஒரு தவறான தலைப்பு. சினிமா என்பது முழுக்க ழுழுக்க ஒரு பொழுதுபோக்குக்காக ஆரம்பிகப்பட்டது.
மதம் இளைஞர்களை சீராக்குகிறதா இல்லை சீரழிக்கிறதா என்று கேட்டிருந்தால் அது அர்த்தம் உள்ள கேள்வி.அல்லது பத்திரிக்கைகள் சீரழிக்கிறதா சீர்படுத்டுகிறதா என்று கேட்டால் அதும் பொருந்தும். இவை மனிதர்களை நல்வழிப்படுத்த உண்டானவை.
இந்த கேள்விக்கே சம்மந்தம் இல்லாத ஒரு கருவை எடுத்து அது சீர்படுத்டுகின்றதா சீரழிக்கிறதா என்று கேட்டால் என்ன சொல்வது.
சினிமாவினால் தான் இன்றைய இளைஞர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள். மது அருந்துகிறார்கள், சண்டை போடுகிறார்கள்
என்று சொல்வது தவறு என்று தான் நாங்கள் வாதிடுகிறோம்.
சினிமாவை எடுப்பவன் சாதாரண மனிதன் தான். அவன் உலகில் நடப்பதை. கண்ணால் பார்ப்பதை பத்திரிகைகளில். செய்திகளில் வருவதை வைத்து தான் திரைக்கதையை அமைக்கிறான். படங்களில் நடப்பது மனித வாழ்வில் நடப்பது.அரைகுறை ஆடைகள் ஆபாச பேச்சிகள் எல்லாம் எங்கிருந்து வந்தது? படங்கள் இன்று தோன்றியதல்ல. 50, 60 களில் வந்த படங்களில் தொட்டு பேசாமல் காதல் காட்ட்சிகள் வந்தன. ஒரு ஆபாசமான வார்த்தைகள் இல்லாமல் படங்கள் வந்த்தன.
அந்த காலத்திலும் ஒரு வருடம் ஓடிய படங்களும் இருக்கின்றன. அதை போல படங்கள் எடுத்தால் இப்போது எத்தனை பேர் பார்ப்பார்கள்? பழைய பாடல்கள் FMஇல் போனால் கூட ரேடியோவை நிறுத்தும் காலம் இது. காலத்துக்கு ஏற்றாற்போல படம் எடுக்க தயாரிப்பாளர்களை தூண்டியது இன்றைய சமுதாயம் தான்.
எல்லாவற்றிலும் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது. 100% நல்லது என்று எதும் இல்லை.ஒரு மனிதனுக்குள்ளேயே நல்ல குணமும் இருக்கிறது, கெட்ட குணமும் இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் சினிமா சீரழிகவே செய்கிறது.அதை பார்த்து தான் உலகத்தில் எல்லாமே நடக்கிறது.அதை பார்த்து தான் எல்லாம் கெட்டுப் போகிறார்கள் என்று சொல்வது மடமையாக தெரியவில்லையா?
சினிமா எதற்காக உண்டாக்கப்பட்டது என்று உதாரணங்களுடன் ரோஸ் விளக்கியும்.அதை புரிந்து கொள்ளாமல் பேசுபவர்களுடன் எதை விவாதிப்பது?
"குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்"
ஒருவனுடைய நல்ல குணத்தை ஆராய்ந்து அவனுடைய கெட்ட குணத்தையும் ஆராய்ந்து அவற்றுள் எது அதிகம் என்பதை அறிந்து எது அதிகமோ அதைக்கொண்டு நல்லவன் , கெட்டவன் என தீர்மானிக்க வேண்டும். இது வள்ளுவனின் வாய்மொழி
இது எதிர் அணியில் வாதாடிய நண்பர் செல்வன் கொடுத்த வாக்குமூலம்.
எது அதிகமோ அதை கொண்டே நல்லது தீயதை தீர்மானிக்க வேண்டியது. இது அவரே சொன்னது.இரண்டரை மணி நேரம் ஓடும் ஒரு திரைபடத்தில் ஒரு கிளப் டான்ஸ் ஒரு 5 நிமிடம் வரும். ஒரு சண்டை காட்சி 10 நிமிடம் வரும். ஆபாச பேச்சுகள் ஒரு சில நிமிடம் வரும். இந்த ஒரு சில நிமிடம் போக மிகுதி நேரம் எல்லாம்?
செல்வன் சொன்னபடி பார்த்தால் தீமை குறைவும் நன்மை அதிகமும் தானே சினிமாவில் இருக்கிறது? அப்படி படம் முழுவதும் ஆபாசமும் மோசமான காட்சிகளூம் இருக்கும் படம் என்றால் அவர்கள் பார்த்தது வேறு மாதிரியான படங்களாகத்தான் இருக்கும்.
நாங்கள் சீர்படுகிறது என்று எந்த புள்ளிகளையும் கொடுக்கவில்லை தான். எங்கள் வாதம் வேறுவிதம். ஒருவன் கொலை செய்தான் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார்கள். அந்த குற்றவாளி தான் கொலை செய்யவில்லை என்று நிருபிக்க தேவை இல்லை. அதற்கு மாறாக தன் மேல் சாட்டப்பட்ட கொலைக்கான சாட்சியங்கள் தவறென்று நிறுபித்தால் போதும். தகுந்த சாட்டியங்கள் இல்லாததால் குற்ற்வாளியை நிரபராதி என்று நீதிபதி விடுதலை செய்வார். இது நீங்கள் அனைவரும் அறிந்ததே.அதையே நாங்களும் பண்ணுகிறோம்.சினிமாவினால் ஒரு சிலர் சீரழிந்திருக்கலாம். அது ஒரு சிலரே.
சினிமா பொழுது போக்குக்காக எடுக்கப்பட்டாலும் அதிலும் நிறைய நல்ல விசயங்கள் சொல்லப்படுகின்றன.
ஒரு நல்லதை சொல்லும் போது கெட்டதை சொல்லி நல்லதை சொன்னால் தான் அது எதனால் ந்ல்லது என்பது புரியும்.
ஒரு எய்ட்ஸ் பத்திய படம் எடுக்கும் போது அது எதனால் உண்டாகிகிறது? தடுக்க என்ன செய்யலாம் என்று சொல்லத்தானே வேண்டும்.அதை எல்லாம் காட்டாமல் படம் எடுக்கனும் என்றால், எய்ட்ஸ் கேடு விளைவிக்கும் என்று எழுதித்தான் காட்டணும்.
சினிமா மனிதர்கள் இடையே விழிப்புணர்ச்சியை தேற்றுவித்திருக்கிறது.
இது பொதுவா சினிமாவை பற்றியது. தமிழ் சினிமா, ஆங்கிலச் சினிமா என தரம் பிரிக்கப்படவில்லை. அதனால் ஆங்கிலப்படங்கலையும் உதாரணமா சொல்லல்லாம் என்று நம்புகிறேன்.
எல்லோரும் Philadelphia என்றொரு அற்புதமான படத்தை மறந்து இருக்க முடியாது. AIDS அப்போதுதான் ஆரம்பித்த தருணம்.
அதைபற்றிய ஒரு அறிவும் இல்லாத காலத்தில் வந்த படம். அந்த படத்தை பார்த்து எவ்வளவு பேர் தங்கள் குறுகிய எண்ணங்களை மாற்றிக்கொண்டனர்?
ஜுராஸிப் பார்க் எனற படம் வராவிட்டால் எத்தனை பேருக்கு அதை பற்றி தெரியும்?
ரோஸ் சொன்னது போல, வீரபாண்டிய கட்டபொம்மன்னின் வீரம் படித்தை விட படத்தால் தானே நம் மனதில் நின்றது.
காந்தியைப் பற்றி ஒரு படம் வந்ததால் தானே உலகமே அவரது வரலாறை அறிந்து கொண்டது?
பாரதியார் பாடல்களை நாம் பாடசாலைகளில் படித்து மனதில் நிற்காதது அது படத்தில் பாடலாய் வந்ததும் மனதில் நின்றதே
.
ஆட்டோகிராப் படத்தில் வந்த "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" என்ற பாடல் கேட்டும் போதெல்லாம் மனதில் புத்துணர்ச்சி ஊட்டுகிறதே! வாழ விரும்பாதவனுக்கும் வாழ வேண்டும் என்ற தன்னம்மிக்கையை ஊட்டும் பாடலாயிற்றே அது.
கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா என்ற பாடலை மட்டும் கேட்பவர்களுக்கு இப்படிப்பட்ட நல்ல பாடல்களை காது கேட்க மறுத்திருக்கும்.
போதிவர்மன் என்றொரு மன்னன் இருந்தான் என்பது 7ம் அறிவு என்றொரு படம் வராமல் இருந்திருந்தால் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்? அங்கே சீன மக்களுக்கு தெரிந்த நம் நாட்டுமன்னனைப் பற்றி நமக்கு தெரியாமல் இருப்பது கேவலமான விசயமல்லவா?
நண்பர் செல்வன் சொன்னது போல கிளப் டான்ஸ், துகில் உரியும் நடனம், எல்லாம் இருந்த படங்கள் வந்தன. இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. அது 70களில் வந்த படங்களில் இருந்தன.ஆனால் இன்று நிலமையே வேறு.
அப்படிப்பட்ட படங்கள் எடுத்தால் ஓடாது என்று தயாரிப்பார்கள் தெரிந்து கொண்டார்கள்.இப்போது வரும் படங்களில் கதைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
சிலர் எப்போதோ வந்த படங்களை பார்த்து விட்டு, படம் பார்ப்பதையே நிருத்திவிட்டு இன்றைய இளைஞர்களை பற்றி பேசுவது வேடிக்கையாய் தெரியவில்லை?
சரி இப்போது யூசுப், உங்களின் வாதங்களுக்கு எனது நிறைவான பதிலை சொல்லி இத்துடன் முடிக்கிறேன்.
முதலில் நீங்கள் முன்னுக்கு பின் முரணாக பேசுவது உங்களுக்கே தெரியவில்லை.
கெட்டவர்களோடு கதா நாயகன் சண்டை போடுவது நல்லது என்று நீங்கள் கூறுகிறீர்கள் இப்படி ஒவ்வொருவரும் சட்டத்தை கையில் எடுத்தால் பிறகு எதற்கு ஒரு அரசாங்கம் காவல் துறை எல்லாம்? நீங்கள் கூறுவது நன்றாக இருக்கிறது ஆனால் நடை முறை சாத்தியம்மில்லை தமிழன்
இது நீங்கள் சொன்னது. அதற்கு நான் சொன்ன பதில்:
உங்கள் அக்கா தங்கச்சி செண்டிமொண்டிலேயே ஒன்று கேட்கிறேன்.
உங்கள் முன்னால் உங்கள் சகோதரியை ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை தாக்கி உங்கள் சகோதரியை காப்பாற்றுவீர்களா? இல்லை சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று, நீ பண்ணுறத பண்ணு நான் காவல்துறையிடம் போறேன் என்று விட்டுட்டு போவீங்களா?
இதற்கு உங்கள் பதில் இதோ
இந்த பதிலை பார்க்கையில் எனக்கு உண்மையில் சிரிப்பு தான் வந்தது தமிழன். நம் சகோதரிகளுக்கு பாதுக்கப்பு கொடுக்கவோ அடிக்கடி வீட்டில் தொந்தரவு தருபவனயோ சமாளிக்க சினிமாவை பார்த்துதான் சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லையே. அது நம் இயல்பில் ஊறி போன ஒன்று தமிழன். சினிமாவை பார்த்து தான் அதில் வருவதை போன்று எதிரியை சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி ஒரு பதிலை நீங்கள் தந்திருப்பது விந்தையாக உள்ளது தமிழன்.
நம்முடைய பாதுகாப்பிற்காக போராடுவது நம் இயல்பில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் தமிழன். இதற்க்கு சினிமாவை ஒப்பிட்டு பேச வேண்டிய அவசியம் இல்லை
அதற்கு நான் உங்களிடம் கேட்டது,
இங்கு நான் கேட்டது சினிமாவை பற்றி அல்ல.சட்டத்தை நாம் கையில் எடுபது நியாயமா? அரசாங்கம் காவல் துறை எல்லாம் எதற்கு இருக்கிறது என்று கேட்ட நீங்களே இப்போது உங்ளுக்கோ உங்கள் உடன்பிறப்புகளுக்கோ ஏதும் நடந்த்தால் அரசாங்கத்தையோ காவல்துறையையோ எதிபார்க்காமல் சமாளிபீர்கள்.அப்போது நீங்கள் என்னிடம் கேட்டது போல சட்டதை கையில் நீங்கள் எடுக்கலாமா? அப்போதும் நீங்கள் காவல்துறையை தானே நாட வேண்டும்.
உங்கள் பேச்சு உங்களுக்கே ஒன்னுக்கொண்று முரண்பாடாக தெரியவில்லையா? உங்களுக்கு ஏதும் நடந்தால் நீங்கள் சட்டத்தை எதிர்பார்க்காமல் சமாளிப்பீர்கள். சினிமாவில் அபடி காட்டினால் அது தப்பு. அப்படித்தானே உங்கள் வாதம்
இதற்கு நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என பாருங்கள்
தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமை உள்ளது தமிழன். அதில் சட்டத்தில் இடமும் உள்ளது அவர்களை பாதுகாக்க தற்காப்பிற்காக கொலை செய்வது தவறல்ல என்பது சட்டம். உங்களுக்கு சட்டம் தெரியவில்லை தமிழன் அதற்க்கு பதிலாக நிறைய படங்களை தெரிந்து வைத்துளீர்கள் ஆனால் அதன் பயன் ஒன்றும் இல்லை போல தெரிகிறது இருந்திருந்தால் இப்படிப்பட்ட ஒரு கேள்வி உங்கள்ளுக்கு எழும்பி இருக்காது
படத்தில் சண்டை போடுவது பிழை சட்டத்தை கையில் எடுக்கலமா என்று கேட்ட நீங்களே, தன் குடும்பதை காப்பாற்ற கொலையும் செய்யலாம் அதற்கு சட்டத்தில் இடமும் உண்டு என்றும் கூறுகிறீர்கள், உங்கள் வாதம் உங்களுக்கே வேடிக்கையாக தெரியவில்லையா? நீங்கள் சட்டத்தை கையில் எடுக்க சட்டத்தையும் துணைக்கு கூப்பிடுகிறீர்கள். அதையே படத்தில் காட்டினால் மட்டும் தவறு. அருமையான வாதம் யூசுப்.
உங்கள் ஒரு சில வாதங்களை பார்க்கும் போது உங்களை நீங்கள் நினைத்தது போல 7ம் வகுப்பு மாணவனுக்கு சமமாக நினைத்தது கூட தவறு போல தான் தேன்றுகிறது.
சரித்திரத்தில் சினிமாவில் நடக்க கூடிய தவறுகளை படித்திருப்பீர்கள் என்று கேட்கிறீர்கள். சரித்திரம் படிக்கும் அளவிற்கு நான் உங்களை போன்று புத்திசாலி இல்லை தமிழன். என்னை போன்று சரித்திரம் அறியாத இளைஞர்கள் தான் அதிகம். அவர்களுக்கு இந்த தவறுகள் எல்லாம் வெளிச்சம் போட்டு கட்டியது எது இந்த சினிமா தானே. நாங்கள் எல்லாம் சரித்திரத்தை படித்து இந்த தவறுகளை அறிந்து கொள்ள வில்லை கல்லூரி பருவத்தில் சினிமாவை பார்த்து தான் அறிந்துகொண்டோம்.
இது சினிமாவின் தவறல்ல. படிக்கும் போது படிப்பை விட்டுவிட்டு சினிமா பார்க் பீச் என்று சுற்றிய உங்களைப் போல ஒரு சிலரின் குற்றம். நாங்களும் படித்தோம் பாடசாலைக்கு கட் அடித்து விட்டு ஒரு நாள் கூட எங்கும் போனதில்லை. ஒரு தனிப்பட்டவர்களின் பிழையை எதுக்கு சினிமா மேல் சுமத்துகிறீர்கள்?
போனாலும் நல்ல படத்துக்கு போவதில்லை. எங்கு மோசமான படம் ஓடுகிறதோ அங்கு தேடி போவார்கள். இது சினிமாவின் குற்றமில்லை.அது அவர்கள் மனவக்கிரமம்.
நாம் பேசி கொண்டிருப்பது இன்றைய இளைஞர்களை பற்றி தான். பழைய திரைப்படங்களை பற்றி அல்ல அதை நீங்கள் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று தோனுகிறது. இன்றைய கால கட்டத்தில் உள்ள திரைப்படங்களை பற்றி பேசுவதே தலைப்பிற்கு சரியானது
இப்படி சொல்லும் நீங்கள் இந்த விவாதத்தில் பங்கேற்கும் தகுதி இல்லாதவர் அல்லவா? பழைய படங்களை பற்றி பேசக்கூடாது. இன்றைய இளைஞர்களை பற்றித்தான் பேச்சி. சரி. நீங்கள் தான் இன்றைய படங்களை பார்ப்பதில்லையே. அப்புறம் அதை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
நான் கூறிய ஒரு படங்களை கூட நீங்கள் பார்க்கவில்லை. ரேமோ அந்த படஙகளை பற்றி கூறியிருப்பது சரியா தவறா என்று கூட தெரியாது.அவருக்கு வக்காலத்து வாங்கி பேசி இருக்கிறீர்கள். ரெமோ, சொல்வன் பேசுவது கூட தப்பில்லை. அவர்கள் படம் பார்த்து விட்டு அவர்கள் மனதில் பட்டதை சொல்கிறார்கள். அந்த தகுதி கூட உங்களுக்கு இல்லையே?
உடனே விபசாரம் பண்ணுபவனா விபசாரத்தை பற்றி பேசணும் என்று ஒரு அபத்தமான கேள்வியை கேட்பீர்கள்.
இது எப்படி இருக்கிறது என்றால் சவுதியை பற்றி நீங்கள் மட்டும் தான் அறிந்தவர் எங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைப்பது போல் உள்ளது.
ஒரு பல மொழி சொல்வார்கள் "கேட்பவன் கேனயனாக இருந்தால் கேப்பையில் நெய் வடிகிறது என்று சொல்வான்" என்பதாக. நீங்கள் எங்களை எல்லாம் ___________ ஆகா நினைத்து கொண்டீர்கள் போல தமிழன். அதனால் தான் இப்படி ஒரு செய்தியை இட்டு கட்டுகிறீர்கள்
அதை வாசித்த உங்களை நான் கேனயனாக சத்தியமாக நினைக்கவில்லை. அப்படி உங்களை பற்றி உங்களுக்கு ஒரு அபிப்பிராயம் இரு ந்தால் அது என் தவறல்ல. யூசுப் நீங்கள் எல்லாம் அறி ந்தவர், உலகில் உங்களுக்கு தெரியாத எதுவும் இல்லை என எனக்குத் தெரியும். ஆனால் சவூதியில் தேவாலயம் இருப்பது நான் சொல்லித்தானே உங்களுக்குத் தெரியும். சவூதியை பற்றி உங்களுக்கு சொன்ன நண்பர்களில் எத்தனை பேருக்கு இது தெரியும்? உங்களுக்கு தெரியாத விசயங்களும் இங்கு இருக்கிறது. சில விசயங்களை நான் இங்கே பேச விரும்பவில்லை. சில விசயங்களுக்கு தெரி ந்தாலும் ஆதாரங்களை சொல்லமுடியாது.
நாம் நண்பர்களாக பேசும் போது உங்களுக்கு விளக்கி கூறுகிறேன்.
இங்கே குற்றங்கள் நடக்கிறது.ஆனால் அது வெளியில் வருவதில்லை.அது தான் உண்மை
உங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. முதலில் வழக்குப் போடுவதாக பயமுறுத்தினீர்கள். இப்போது பாவம் எல்லாம் எனகு வந்து சேரும் என பயமுறுத்துகிறீர்கள்.உங்கள் வாதத்தில் உங்களுக்கே நம்பிக்கை இல்லை போல தோன்றுகிறது. அப்படி எனது வாதத்தை கேட்டு சினிமா பார்ப்பது தவறில்லை என இளைஞர்கள் நினைத்தால் அது எங்கள் வாதத்துக்கு கிடைத்த வெற்றி தானே.
கடைசியாக ஒன்று கேட்கிறேன். சினிமாவினால் சீர்கேடு என்று நினைப்பவர்களில் எத்தனை பேர் சினிமாவை பார்ப்பதை விட்டு விட்டார்கள். அதிசய பிறவியான நீங்கள் மட்டும் தானாக இருக்கும்.
அப்படி பார்ப்பவர்களுக்கு உங்களை போல விபரம் தெரியாது, சிந்திக்கத் தெரியாது என்று சொல்லப்போகிறீர்களா? அப்படிச் சொன்னால் அது உங்கள் அணியில் பேசுபர்களையும் தாக்கப் போகிறது கவனம்.உங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் படம் பார்ப்பவர்கள் தான். படம் பார்ப்பது தவறில்லை. நமக்கு ஆறறிவு ஏன் இறைவன் படைத்தான்? நல்லதையும் கெட்டதையும் பிரித்து அறியத்தான். நாங்கள் அதை தான் செய்கிறோம். நல்லதை மட்டும் எடுத்துக்கொள்கிறோம். கெட்டதை விட்டு விடுகிறோம்.எங்கள் கண்ணுக்கு நல்லது மட்டும் தெரிகிறது. உங்கள் கண்ணுக்கு கெட்டது மட்டும் தெரிகிறது. இது பார்வையின் பிழை. சினிமாவின் பிழை அல்ல.
சினிமாவினால் தான் இளைஞர்கள் எல்லாம் அறிந்து கொள்கிறார்கள் என்பது தானே உங்கள் வாதம்? புகை பிடிப்பது, மது அருந்துவது, விபச்சாரம் எல்லாம் சினிமா தான் சொல்லிக் கொடுக்கிறது. இது தானே உங்கள் விவாதம்.
உலகத்தில் நகரங்களை விட கிராமங்களே அதிகம். இ ந்தியாவை மட்டும் எடுத்துக் கொள்வோம். நகரங்களை விட கிராமங்கள் தானே அதிகம். திரைஅரங்குகள் இல்லாத கிராமங்கள் நிறைய இருக்கிறது. ஒரு நேர உணவுக்கே அல்லாடும் ஏழைகள் நிறைய நிறைய இருக்கிறார்கள். அந்த கிராமங்களில் குடி இல்லையா? புகைப்பது இல்லையா? விபச்சாரம் இல்லையா? கூத்தியாள் வைத்திருப்பதை பெருமையாக நினைப்பவர்கள் கிராமங்களில் நிறைய இருக்கிகிறார்கள். அதிகமான வியாதிகள் பரவுவது கிராமங்களில் தான்.
சினிமா இல்லாமல் இதெல்லாம் அங்கே எப்படி நடக்கிறது? உங்கள் வாதம் சறுக்குகிறது இங்கே.
சினிமா எப்படி உறவு கொள்ள வேண்டும் என படிப்பிக்கிறது, நகரத்தில் உள்ளவர்கள் தவறு செய்தாலும் பாதுகாப்புடன் செய்கிறார்கள். அதனால் போசமான வியாதிகளில் இரு ந்து தப்புகிறார்கள். அதற்காக தவறு செய்ய சினிமா தான் சொல்லிக் கொடுக்கிறது என்று சொல்லாதீர்கள். அது அவரவர் உடல் தேவை . அது படம் பார்க்காவிட்டாலும் எடுக்கும். அதனால் என்ன வினை வரும்? வராமல் எப்படி பாதுகாப்பது எனும் விழிப்புணர்வை சினிமா தானே உண்டாக்குகிறது?
கடைசியாக ஒன்று சொல்கிறேன்.சினிமாவில் கெட்டது இல்லை என்று நாங்கள் சொல்லவரவில்லை. சினிமாவால் மனிதரிடம் விழிப்புணர்ச்சி உண்டாகி இருக்கிறது.சினிமாவால் நமது அறிவுக்கு எட்டாத நிறைய விசயங்களை தெரிந்து கொள்கிறோம். சினிமாவை பார்த்து விட்டு அதில் உள்ளதையே நினைத்துக் கொண்டிருப்பது உங்களைப் போல ஒரு சிலர் தான். மற்றபடி வேகமாக சுழலும் இந்த உலகில் நிற்பதற்கு நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் காலமிது. சினிமாவை நினைத்துக் கொண்டிருக்க எவருக்கும் நேரமில்லை.ஒவ்வொருவரும் முன்னேற முண்டியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்,
யூசுப் மச்சி, உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள். நீங்கள் நிறைய புள்ளி விபரங்களை கொடுத்திருந்தீர்கள். அந்த தினமணி பத்திரிகை ஆதாரத்தை தவிர வேறு இதற்கும் ஆதாரங்களை கொடுக்கவில்லை.
அதற்கு தகுந்த ஆதாரங்களை கொடுத்தால் நாங்களும் வாசித்து பயனடைவோம்
கடைசியாக ஒரு வேண்டுகோள்.
இன்த விவாதத்தை வாசிப்பவர்களில் ஒரு 10 பேர் சினிமா பார்த்து நாங்கள் சீரழிந்தோம் என ஆதாரங்களுடன் சொல்லுங்கள். எனது வாதம் பிழை என பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறேன்,