சினிமா ஒரு சமூக எதிரி என சொல்லலாம்.
சினிமாவில் வரும் பெரும்பாலான காட்சிகள் இளைஞர்கள் மனதில் கேடுகளையே உண்டாகுகிறது. முக்கியமாக இளைஞர்களை கவரும்வகையில் எராளமான பாலியல் காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரு தவறை எப்படி மாட்டிகொள்ளாமல் செய்ய வேண்டும் என்பதையும் சினிமா அழகான முறையிலே சித்தரித்து காட்டுகிறது. பாலியல் மற்றும் வன்முறை காட்சிகள் சிறார்களின் உள்ளதை பாழ்படுத்துகிறது என்றே கூறலாம்.இன்று உலகலவில் இயற்றப்படும், திரையிடப்பதும் சினிமாப் படங்கள், சின்னத்திரை தொடர் நாடங்கள், பாடல்கள் அனைத்தும் சமூகத்தின் கலாச்சாரங்களையும் நாகரிகங்களையும் அழித்தொழிக்க பிறந்த ஒரு ஊடகமாகும்.சமூகத்தை வழிகாட்ட மதங்கள், மார்க்கங்கள் பிறந்தது என்று சொல்லுவது போன்று அதே சமூகத்தை வழிகெடுத்த வந்தது தான் சினிமாத்துறை என்றால் அது 100 சதவீதம் உண்மையாகும்.
மக்கள் மனதை சீர்கெடுக்கும் காட்சிகளில் சில ...
எல்லா சினிமாப் படஙகளிலும் காமத்தைத் தூண்டும் அல்லது காதலைத் தூண்டும் பாடல் வரிகள் இருக்க வேண்டும். அந்த பாடல் வரிகளை செயலுருவில் காண்பிக்கும் காட்சிகளை நடிகனும் நடிகையும் நடித்துக் காண்பிப்பார்கள்.அதில் காட்சி தரும் நடிகை அல்லது நடிகைகள் முழு ஆபாசமாக, வெரும் இரண்டு பீஸ்களுடன் மட்டும் வருவார்கள்.
ஒரு பணக்காரனை அச்சுறுத்தி, பிலக்மைல் பண்ணி அவனது பணங்களை கொள்ளையடிப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கும் காட்சி
போதை பொருட்கள் பாவணை, புகைத்தல், மது அருந்துதல்.அந்த போதையில் பெண்களை கற்பழித்தல், பிறரை துன்புறுத்தல், கண்ணில் படும் மனிதர்களுடன் வீணாக சண்டையில் ஈடுபடுவது .
சினிமா பெரும்பாலும் கதாநாயகனை மையப்படுத்தியே எடுக்கப்படுகிறது. கதாநாயகன் எந்த குற்றம் செய்தலும் அது ரசிக்கப்படுகிறது.
இவைகளுக்கும் மேலாக கதாநயகன், கதாநாயகியாக நடிக்கும் வாலிபனும் யுவதியும் எப்படி ஒருவரை ஒருவர் கட்டியணைப்பது, முத்தமிடுவது, ஓரே போர்வையில் உறங்குவது போன்று காட்சிப் படுவது, நிர்வாணமாக குளிப்பது அனைத்தும் எந்த வகையில், எந்த மததில் அனுமதிக்கப் பட்டது? எந்த பெற்றோர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது?
சினிமாவின் பயன் என்று சொல்லவேண்டுமேயானால் , எந்த ஒரு கருத்தையும் மக்களிடத்தில் எளிதில் எடுத்து செல்லக் கூடிய ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக திகழ்கிறது.நல்ல கருத்துகள் சினிமாவில் சொல்லப்படும்பொழுது அது எளிதில் மக்களை சென்று அடையும்.ஆனால் இன்றைய சினிமா பணம் மற்றும் புகழுகாகவே எடுக்கப்படுகிறது . ஆகையால் நல்ல கருத்துக்கள் வர வாய்புகள் குறைவே. இதுதான் எனது கருத்து.
அன்புடன் செல்வன்.