Special Category > மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty

மாற்றை நோக்கிய பயணம்

(1/2) > >>

blackguard:
மனம் என்னும் மாமருந்து

    -ஹீலர்.அ.உமர் பாரூக்-

1981 ஆம் ஆண்டில் அமெரிக்க விமானத்தை இயக்கிக்கொண்டிருந்த மோரீஸ் விபத்தில் சிக்கிக்கொண்டார். விமானம் வெடித்ததில் அதில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளில் பலர் மரணமடைந்தனர். கடும் காயங்களுடன் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்ட பைலட் மோரீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய முதுகெலும்பு, கழுத்தெழும்புகள் முறிந்திருந்தன. உதரவிதானம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் சுவாசிக்க முடியவில்லை. தொண்டை கடுமையான காயங்களுக்கு ஆளானதால் தண்ணீர் குடிக்கவும், விழுங்கவும் முடியவில்லை. உடல்முழுதும் எழும்புகள் முறிந்தும், தசைகள் செயல் இழந்தும் இருந்தன. சுயமாக கண் விழிகளை இமைக்க மட்டுமே முடிந்த அவருடைய உடல் இனி உயிர் வாழத் தகுதியற்றது என்று மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். ஏராளமான கருவிகள் அவர் உடல் முழுவதும் பொருத்தப்பட்டு ”இப்படியே தொடரலாம்; ஆனால் இமைப்பதைத் தவிர அவரால் வேறொன்றும் செய்ய முடியாது” என்று கூறி மருத்துவம் அவரைக் கைவிட்டது.

இப்போது எல்லோரையும் போல ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மோரீஸின் பெயர் மோரீஸ் குட்மேன். மரணத்திலிருந்து மருத்துவத்தின் உதவியின்றி தப்பிவந்த அதிசய மனிதர் என்று அழைக்கப்படுகிறார். இப்போது அவருடைய முழுநேர வேலை தான் உணர்ந்த மனதின் ரகசியங்களை அனைவருக்கும் கற்றுத்தருவதுதான். உடலை இயக்குவதில் மனம் பெரும் பங்கு வகிப்பதை உணர்ந்து கொண்ட மோரீஸ் குட்மேன் தன் மன இயக்கத்தை உணர்ந்து கொண்டதன் மூலம் உடல் இயக்கத்தை சீராக்க உதவினார். மருத்துவர்களால் தேற்ற முடியாது என்று கூறப்பட்ட சில மாதங்களிலேயே முழு ஆரோக்கியத்திற்குத் திரும்பினார். ”என்னை மருத்துவர்கள் கைவிட்டார்கள். ஆனால் மனம் என் வசம் இருந்தது. என்னால் சிந்திக்க முடிந்தது. என்னைப்பற்றி மருத்துவம் என்ன நினைத்தது என்பதை விட என்னைப் பற்றி நான் என்ன நினைத்தேன் என்பதுதான் முக்கியமானது. உங்கள் மனம் உங்கள் கைவசம் இருந்தால் நீங்கள் செய்ய முடியாதது எதுவுமில்லை.” என்று கூறும் மோரீஸ் குட்மேன் இப்போது உலகின் மிக முக்கியமான தன்னம்பிக்கை உரையாளர்களில் ஒருவர்.

இதே போன்ற அற்புத மனிதர்தான் அயர்லாந்தில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த டாக்டர்.ஜோசப் மர்பி. உளவியலில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த மர்பி தன் இளம் வயதில் தெற்காசிய நாடுகளின் மதங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். உளவியல் சார்ந்த புதிய கருத்துக்களை நோக்கி அவர் நகர்ந்து கொண்டிருந்த காலத்தில் அவர் தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். உடலைப் பற்றிய கவனமின்றி அவர் தொடர்ந்து கொண்டிருந்த ஆராய்ச்சியின் இறுதியில் டாக்டர்.மர்பி கைவிடப்பட்ட புற்றுநோயாளிகளில் ஒருவராக மாறினார். அவர் தன்னுடைய உடலை கவனிக்கத்துவங்கிய போது தோல் புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

புற்றுநோய் படிபடிப்படியாக மோசமான நிலையில் பாதிரியார் ஒருவரைச் சந்தித்தார் மர்பி. அவர் கூறினார் “ ஒரு கைக்கடிகாரத்தை ஒருவர் உருவாக்குகிறார் என்றால் அது உருவாக்கப்படுவதற்கு முன்பு அதைப்பற்றிய தெளிவான எண்ணம் அவருக்கு இருந்திருக்கும். அதே கடிகாரம் பின்னால் பழுதடைந்தாலும் அந்த தெளிவான எண்ணத்தால் அதை அவரால் சரியாக்கிவிட முடியும் அல்லவா?” இந்த உவமை மர்பிக்கு மனதைப் பற்றிய தெளிவைக் கொடுத்தது. மனது உடலின் இயக்கத்தில் பெரும் பங்காற்றுகிறது என்றால் மனதின் தெளிவு உடலின் தெளிவாக மாறும் என்பதை டாக்டர்.மர்பி உணர்ந்தார். மூன்றே மாதங்களில் எவ்விதமான மருத்துவத்தின் உதவியும் இன்றி தோல் புற்று நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தார் மர்பி. ”புற்றுநோய் எப்படி குணமானது என்பது என் மருத்துவருக்கு வேண்டுமானால் அற்புதமாக இருக்கலாம். ஆனால் என் மனதைப் பொறுத்த வரை குணமாதல் என்பது இயல்புதான்” என்கிறார் டாக்டர்.மர்பி. அவருடைய முப்பதிற்கும் மேற்பட்ட உளவியல் நூல்கள் இன்றைய நவீன உளவியலின் போக்கையே திசை மாற்றியிருக்கின்றன. இப்போது நவீன உளவியல் கொள்கையை உலகம் முழுக்க கொண்டு சேர்க்கிறார் மர்பி.

என்னதான் நடக்கிறது நம் உடலில்? உடலுக்கும் மனதுக்கும் அப்படி என்ன தொடர்பு?

உடல் என்பது தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் ஒரு அற்புத உயிரமைப்பு. அதிலும் மனித உடல் உலகில் உள்ள எல்லா உயிரினங்களை விடவும் பரிணாம வளர்ச்சியின் உச்ச கட்டமாகத் தோன்றிய உயிரினம். டார்வினின் பரிணாமக் கொள்கை பேசும் மிக முக்கிய விஷயங்களில் ஒன்று தகவமைப்பு. புறச் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு நம் உடல் தன்னைத் தானே தகவமைத்துக் கொள்கிறது. புற மாற்றங்களின் போதும், நம் நடவடிக்கைகளின் போதும் உடலில் உருவாகின்ற கழிவுகளையும் உடலே வெளியேற்றுகிறது. இப்படி வெளியேற்றும் போது உடல் உள்ளுறுப்புகளில் தோன்றும் பலவீனத்தையும் உடலே சரிசெய்து கொள்கிறது. அது மட்டுமல்ல. தனக்குத் தேவையான ஒவ்வொன்றையும் (வைட்டமின், மினரல், கால்சியம்..இன்ன பிற சத்துக்கள்) தனக்கு கிடைக்கிற சாதாரண உணவுகளில் இருந்தே உருவாக்கிக் கொள்கிறது. நாம் வெளியில் இருந்து உடலுக்கு கொடுக்கும் செயற்கை சத்துக்களுக்கும் உடலே உருவாக்கிக் கொள்ளும் இயற்கை சத்துக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரசாயனத்தால் செய்யப்பட்ட செயற்கை சத்துக்களை உடல் கழிவுகளாக மட்டுமே பார்க்கிறது.

இதையெல்லாம் கடந்து உடலுடைய நிறைவான வேலை உள்ளுறுப்புகளை மறு உருவாக்கம் செய்வது. உடலின் ஒவ்வொரு செல்லையும் அதனுடைய ஆயுள் முடிந்தவுடன் புதிய செல்களாக மாற்றுகிறது நம் உடல். உடலின் ஒவ்வொரு உள்ளுறுப்பும் குறிப்பிட்ட காலத்தில் முழுமையாக புதிதாக்கப் படுகிறது. சரி. அப்படி உடல் புதிதாக்கப்பட்டால் குறிப்பிட்ட காலத்தில் உடலில் உள்ள எல்லா நோய்களும் மறைந்து விட வேண்டும் அல்லவா? அப்படியென்றால் உலகில் எல்லோருக்குமே நோய்கள் சரியாகிவிட வேண்டுமே? இங்கேதான் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். உடலுடைய புதுப்பிப்பு பணி என்பது இயல்பாக நடந்து கொண்டேயிருக்கும். உடலுடைய இயல்பான இயற்கையான புதுப்பிப்பு இயக்கத்தில் யாரெல்லாம் குறுக்கிட வில்லையோ அவர்களுக்கெல்லாம் நோய் தானாக சரியாகிவிடும். இயக்கத்தில் குறுக்கிடுவது என்றால் என்ன? உடலின் கழிவு வெளியேற்றத்தை தடை செய்வது. ரசாயன மருந்துகளை சாப்பிடுவது. செயற்கை சத்துக்களை உண்பது போன்றவைதான் நம் குறுக்கீடுகளாகும். அது மட்டுமல்ல; உடலின் இயல்பான தேவைகளான பசி, தாகம், தூக்கம், ஓய்வு போன்றவற்றை புறக்கணித்து நம் இஷ்டம்போல் செய்வதும் குறுக்கீடுதான். பசிக்கிற போது சாப்பிடாமல் பசியில்லாத போது சப்பிடுவது, பசிக்கிற அளவை விட அதிகமாகச் சாப்பிடுவது, தாகமில்லாமல் லிட்டர் லிட்டராக தண்ணீர் அருந்துவது, தாகமிருக்கும் போது தண்ணீர் அருந்தாமல் இருப்பது அல்லது தண்ணீருக்குப் பதிலாக சுவையூட்டப்பட்ட பானங்களை அருந்துவது, இரவுகளில் தூக்கத்தை புறக்கணிப்பது, ஓய்வு தேவைப்படும் போது உடல் உழைப்பை அதிகப்படுத்துவது போன்றவை எல்லாம் நம்முடைய தினசரி நடவடிக்கைகளாக உள்ளன. இப்படி இயற்கைக்கு மாறான நடவடிக்கைகள் உடலின் இயல்பான இயக்கத்தை பாதிக்கின்றன. ஆரோக்கியமாக உருவாக வேண்டிய செல்கள் பலவீனமாக, பழைய நோய்க்கூறுகளுடன் உருவாகின்றன. ஆக நம்முடைய எல்லா தொந்தரவுகளுமே உடலுடைய இயல்பான இயக்கத்துக்கு கட்டுப்பட்டவை. அவை புறச்சூழல்களுக்கு ஏற்றாற்போல் தானாகத் தோன்றி தானாக மறைபவை. நம்முடைய பொறுப்பான குறுக்கீடுகளால் நோய்களாக உடலில் தங்கி விடுகின்றன.

மனதில் ஏற்படும் எல்லா உணர்ச்சிகளும் புறச்சூழல்களை தகவமைப்பதற்காக தானாகவே ஏற்படுபவை. அவற்றை நாம் சரிசெய்ய வேண்டியதில்லை. அப்படி சரிசெய்கிறோம் என்ற போர்வையில் மனதின் இயக்கத்தில் நாம் குறுக்கிடுகிற போது உணர்ச்சிகள் தங்கிவிடுகின்றன. கால நீட்சியடைகின்றன. ஆக மனதும், உடலும் வெவ்வேறானவை அல்ல. இரண்டின் இயங்கு முறைகளும் ஒரே மாதிரியானவைதான். நாம் உடலின், மனதின் மாறுதல்களை வெறுமனே புரிந்து கொள்வது மட்டுமே அதனுடைய தீர்வாக அமையும். மனதைப் பொறுத்த வரை அமைதியடைகிறது. உடல் தன் ஆரோக்கியத்தை அடைகிறது.

அதெல்லாம் சரி. இப்படி இயற்கையான முறையில் வாழ்வதால் நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் ஏற்கனவே வந்து விட்ட நோய்களை என்ன செய்வது? ஏற்கனவே இருக்கின்ற தொந்தரவுகள் என்பவையும் உடலால் செய்யப்படுகின்ற தகவமைப்பு வேலைதான். அதற்காக புதிதாக ஒன்றும் செய்யவேண்டியதில்லை. உடலை அதன் போக்கில் அனுமதிப்பதோடு, இயற்கையான வாழ்வியல் முறைக்குத் திரும்புவதுதான் ஆரோக்கியம் பெற ஒரே வழி.

இந்த முறைகளைக் கடைபிடிப்பதால் மட்டும் முன்பு நாம் பார்த்த மோரீஸ் குட்மேனைப் போலவோ, மர்பியைப் போலவோ அற்புத குணங்களைப் பெற முடியுமா? அப்படி பெற வேண்டுமானால் மேற்கண்ட விஷயங்களை கடை பிடிப்பது மட்டுமின்றி மனதின் இயக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். மனதின் இயல்பை புரிந்து கொள்வதன் மூலம் உடலின் முழு சக்தியையும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனை அமெரிக்க மரபியல் விஞ்ஞானி டாக்டர்.புரூஸ் லிப்டனின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் நிரூபித்து வருகின்றன. நம் உடலின் செல்கள் மட்டுமல்ல அதற்குள் உருவாகும் ஜீன்களும் கூட நம் மன இயல்புக்கு கட்டுப்பட்டவை என்பதுதான் மரபியலின் இன்றைய கண்டுபிடிப்பாகும்.

நம் உடலுடைய முழு சக்தியையும் தொந்தரவுகளின் பக்கம் திருப்பி எவ்வாறு நாம் ஆரோக்கியத்தைப் பெறுவது என்பதைப் பார்ப்போம்.

நம் உடலின் ஆரோக்கியத்தை நிலைப்படுத்துகிற வேலையை பராமரிப்பு சக்தி

(இதைத்தான் மருத்துவர்கள் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறார்கள்) செய்து வருகிறது. நம் உடல் செல்களில் புறச்சூழல் காரணமாக ஏற்படுகிற ஏற்றத்தாழ்வுகளை பராமரிப்பு சக்தி சமநிலைப் படுத்துகிறது. இந்த பராமரிப்பு சக்தியின் ஒரே வேலை சமநிலைப் படுத்துவதுதான். சமநிலைப் படுத்துவது என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல; மனம் சார்ந்ததும் தான். நம் உடலின் பராமரிப்பு சக்தி மனச் சமநிலை தவறினாலும், உடல் சமநிலை தவறினாலும் அதை சமப்படுத்துகிறது.

உடல் சமநிலை தவறுவது என்பது தகவமைப்பு வேலை நடைபெறும் போது நமக்கு ஏற்படும் தொந்தரவுகள் தான் என்பது புரிகிறது. ஆனால் மனச் சமநிலை தவறுவது என்றால் என்ன?

மனச்சமநிலை தவறுதல் என்பது உணர்ச்சிவசப் படுவதைத்தான் குறிக்கிறது. உணர்ச்சிகள் என்பவை புறச் சூழல்களால் தானாகத் தோன்றி தானாக மறைபவை. அதாவது மனதுடைய தகவமைப்பு. அப்படி தானாகத் தோன்றுகிற உணர்ச்சிகளை சரிசெய்கிறோம் பேர்வழி என்று நாம் பொறுப்பெடுத்துக் கொள்ளும் போது அந்த உணர்ச்சிகள் நிலைத்து விடுகின்றன. இதைத்தான் கிராமங்களில் உணர்ச்சி வசப்படுதல் அல்லது ”உணர்ச்சியின் வசம் நாம் போய்விடுவது” என்று கூறுவார்கள்.

ஒரு தொந்தரவு ஏற்படுகிற போது பராமரிப்பு சக்தி உடலை சமநிலைப்படுத்த தயாராகிறது. நம் உடலில் தொந்தரவுகள் ஏற்படுகிற போது நம் மனநிலை என்னவாக இருக்கும்? இது கேன்சராக இருக்குமோ? இது சர்க்கரையாக இருக்குமோ? என்ற பயம் ஏற்பட்டு மனப்பதட்டம் வந்து விடுகிறது. இந்த பய உணர்ச்சியை நாம் நொடிக்கு நொடி புதுப்பித்துக் கொள்கிறோம். இப்போது மனச்சமநிலையும் குலைந்து விடுகிறது. உடலில் ஏற்படும் ஒரு தொந்தரவு அதைப்பற்றிய நம் புரிதல் இன்மையால் மனச் சமநிலையையும் பாதிக்கிறது. இப்போது பராமரிப்பு சக்தி என்ன செய்யும்?
http://lh4.ggpht.com/-mNOJmZX983A/Tv-7mJ-AgMI/AAAAAAAAAcU/6NTTTqZ8YbI/clip_image001_thumb%25255B3%25255D.gif?imgmax=800

இப்படி பராமரிப்பு சக்தி உடலையும், மனதையும் சமப்படுத்த இரண்டாகப் பிரிகிறது. பொதுவாக பராமரிப்பு சக்தி உடலை விட மனதிற்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. உடல் பாதிப்பு எந்த அளவில் இருந்தாலும், மனபாதிப்பின் தன்மையைப் பொறுத்துத்தான் பராமரிப்பு சக்தி வேலை செய்கிறது. மனச்சமநிலை தீவிரமான அளவு பாதிக்கப்பட்டிருந்தால் உடல் ஆரோக்கியத்தை இரண்டாம் பட்சமாகக் கருதி மனதை நிதானப் படுத்தும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது பராமரிப்பு சக்தி.

இந்த பராமரிப்பு சக்தியை நாம் உடலை நோக்கி முழுமையாகத் திருப்பி விட்டால் என்ன நடக்கும்? உடல் உள்ளுறுப்புக்களின் தகவமைப்பு மிக வேகமாக நடக்கும். உடல் ஆரோக்கியத்திற்குத் திரும்பும். ஆனால் அப்படி எவ்வாறு உடலை நோக்கித் திருப்பி விடுவது?

மிகச் சுலபம்தான். உடலுடைய சமநிலக்குலைவு என்பது இயற்கையானது. அதனை நம் முயற்சியால் மாற்ற இயலாது. மாறாக அது உடலின் தகவமைப்பு தான். கழிவுகளின் வெளியேற்றம் தான் என்பதை நாம் அறிவுப்பூர்வமாக புரிந்து கொண்டால் என்ன நடக்கும்? உடல் சமநிலைக்காக புரிதலோடு காத்திருப்போம். இப்போது மனநிலையின் தன்மை என்னவாக இருக்கும்? உடல் மாறுதல்கள் இயற்கையானவை என்று புரியும் போது மனம் சமநிலை தவறுவதில்லை. அதைப்பற்றிய பயம் ஏற்படுவதில்லை. ”என்னுடைய உடல் என்னை சரி செய்து கொண்டிருக்கிறது” என்பதை நம்மால் உணர முடியும். இப்போது பராமரிப்பு சக்தி நூறு சதமும் உடலை நோக்கி திருப்பிவிடப்படுகிறது. உடல் மிக வேகமாக தன்னைத் தகவமைத்துக் கொண்டு, புதுப்பித்துக் கொள்கிறது. மோரீஸ் குட்மேனைப் போலவும், டாக்டர்.மர்பியைப் போலவும் எல்லோராலும் புரிதலால் நோய்களை வெல்ல முடியும்.

உடல் ஆரோக்கியத்தில் நம்முடைய பங்கு என்பது அதனைப் புரிந்து கொள்வதுதான். அதனுடைய இயக்கங்களில் குறுக்கிடுவது அல்ல. இயற்கையான பழக்கவழக்கங்கள், உடலைப் பற்றிய புரிதல் ஆகியவை மனிதகுல ஆரோக்கியத்தின் மிக முக்கியமான அம்சங்கள். இவற்றைத் தவற விடுகிற மருத்துவங்களால் உடல் நலத்தை மீட்க முடியாது.

---------- --------

Global Angel:

உண்மைதான் ... ஆனாலும் ஒரு துணை தேவைபடுகிறது வலியை மிஞ்சிய மனிதனை மாற்றி அமைக்க கூடிய சக்தி எதுமே இல்லை .. அதை நீக்குபவன் கடவுளாக தென் படுகின்றான் .. அவன் கொடுப்பது அமிர்தமாக தோற்றம் பெறுகிறது .. எனவே மனிதன் சுய சிந்தனை இழந்து விடுகின்றான் ... நமக்கு அன்ஹ நேரம் இருக்கும் உபாதை நீங்கினால் போதும்  அவ்ளோதான் ... இதனாலே தான் பல சிக்கல் உருவாகுகின்றது ... நன்று நீங்கள் பகிர்ந்த தகவல் ...

blackguard:
உணவின்றி அமையாது உலகு

மருத்துவர்.அ.உமர் பாரூக்,M.Acu, D.Ed (Acu)

உணவு – நம் ஆரோக்கியத்தின் அடிப்படை அம்சமாக இருக்கிறது. ஆரோக்கியம் – நம் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. நம் ஒவ்வொருவருக்கும் ஏற்ற உணவுகளை நாம் சரியாகப் புரிந்து பயன்படுத்தத் துவங்குவோமானால் ஆரோக்கியக்கேடும், பொருளாதாரச் சீர்குலைவும் ஏற்படாத ஒரு வாழ்க்கைமுறையை கண்டடையலாம்.

இன்றைய வியாபார உலகத்தில் நம் தலையில் கட்டப்படுகிற ஒவ்வொரு பொருளும் ஆரோக்கியத்தின் பலனைச்சொல்லியே விற்கப்படுகிறது. ”நீண்ட காலம் வாழ இந்த டானிக்கைப் பயன்படுத்துங்கள்” என்ற பழைய கால விளம்பரங்கள் எல்லாம் அழிந்து புதிய உத்திகள் இப்போது படையெடுக்கத் துவங்கியுள்ளன. குட்டையாக உள்ள குழந்தை உயரமாக வளரவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற நினைவாற்றலை பெருக்கிக்கொள்ளவும், இதய நோய் வந்துவிடாமல் இருக்கவுமான விளம்பரங்கள் நம் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நம் மீது பீதி விதைகளைத் தூவிய வண்ணம் இருக்கின்றன.

உண்மையில் நாம் பொறுமையாக யோசித்துப்பார்த்தால் இந்த வகை விளம்பரங்களின் அடிப்படையை நாம் புரிந்துகொள்ளலாம். குட்டையாக உள்ளவரை உயரமாக வளர வைக்கும் சத்துணவை ஏன் இந்தியக் குழந்தைகளிடம் மட்டும் பரிந்துரைக்கிறார்கள்? பெரியவர்களிடமோ அல்லது சராசரி உயரம் குறைவான சீன, ஜப்பான் நாட்டு குழந்தைகளிடமோ இந்த சத்துணவை பரீட்சித்துப் பார்க்க வேண்டியது தானே? இன்னொரு விளம்பரம் நாம் பல் துலக்கப் பயன்படுத்தும் பேஸ்ட்டில் கால்சியம் இருப்பதாகச் சொல்லி விற்கிறது. கால்சியம் என்ற சத்துப்பொருளை ஆங்கில மருத்துவ அடிப்படையில் பார்த்தால் கூட அக்குறிப்பிட்ட சத்தை சாப்பிடுவதால் அது உடலில் சேருமா அல்லது துப்புவதால் உடலில் சேருமா? ஆரோக்கியம் பற்றி வெளியிடப்படும் விளம்பரங்களில் அடிப்படை அறிவிற்கும், அறிவியலுக்கும் பொருத்தமற்ற பொய்கள் மறுபடி, மறுபடி சொல்லப்படுகின்றன. இவ்வகயான பொய்கள் அனைத்தும் நம் தினசரி உணவுகளில் தான் தங்கள் வியாபாரத்தை அரங்கேற்றுகின்றன.

இப்படி போலியான அறிவிப்புகளோடு நம் தலையில் கட்டப்படும் பொருட்களை வாங்கி ஏமாறுவது நம் உணவு பற்றிய அறியாமையால் தான். ஒவ்வொருவரும் தன் உடலுக்கு எவ்வகையான உணவு ஏற்றது என்பதைப் புரிந்து கொள்வோமானால் ஆரோக்கியமும், பொருளாதாரமும் நம் கையிலேயே இருக்கும்.

முதலில், உணவை - யாருக்காக, அல்லது எதற்காக நாம் எடுத்துக் கொள்கிறோம்? நம் உடலிற்காக. அப்படியானால், உடலின் தேவையறிந்து உணவு தருவது நல்லதா? அல்லது நம் இஷ்டத்திற்கு நாம் தேர்வு செய்யும் நேரத்தில் உணவு தருவது நல்லதா? உணவுத் தேவை ஏற்படும் போது உடல் கேட்குமா? அல்லது கேட்காதா? உடல் தன்னுடைய உணவுத் தேவையை பசியுணர்வு மூலமும், தண்ணீர் தேவையை தாகம் மூலமும் நமக்கு அறிவிக்கிறது. இது தான் உணவிற்கான நேரம். நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட வேலை நேரம் போக மிச்ச நேரத்தில் தான் உணவு சாப்பிட முடியும் என்றால் அந்நேரத்தை உடல் அங்கீகரிக்க வேண்டுமே? நாம் பசியற்றுச் சாப்பிடும் உணவு உடலின் உண்மையான தேவையைத் தீர்க்காது. மாறாக, கழிவுகளாக மாறி உடலிற்கு தொந்தரவுகளையே தரும். ஆக, உணவு முறை என்பது உணவுகளின் வகைகளால் ஆனது இல்லை. உடலின் தேவையின் அடிப்படையிலானது.

உடலின் தேவைக்குத் தகுந்தாற்போல் தேவையான அளவிற்கு உணவை எடுத்துக் கொள்வோமானால் உடல் ஆரோக்கியத்தை நிலைப்படுத்திக்கொள்ளும். இதைத்தான் நம்மவர்கள் ”பசித்துப்புசி” என்றும், “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்றும் உடல் தேவையை வலியுறுத்தினார்கள். உணவு முறையின் அடிப்படை அம்சமே உடலின் தேவையறிந்து கொடுப்பதுதான். பசியற்று இருக்கும் போது சாப்பிடாமல் இருப்பதும், பசியோடு இருக்கும் போது தேவையான அளவு சாப்பிடுவதும் நோய்கள் உருவாகாமல் தடுக்கும் உபாயங்கள். சித்தர் பாடல்களில் “ உற்ற சுரத்திற்கும் உறுதியாம் வாய்வுக்கும் அற்றே வருமட்டும் அன்னத்தைக் காட்டாதே” என்று வந்த நோய்களில் இருந்து விடுபடவும் பசி வரும் வரை காத்திருத்தலையே சிகிச்சையாகக் கூறுகிறார்கள்.

சரி. பசித்துச் சாப்பிட வேண்டும். எதைச் சாப்பிட வேண்டும்?

நாம் உணவு வகைகளை சத்துக்களின் அடிப்படையில் பிரித்து மிகப் பெரிய பட்டியல் ஒன்றை வைத்திருக்கிறோம். அதில் எதைச் சாப்பிடுவது என்பதுதான் நம் குழப்பமே.

இயல்பாக நம் உடல் இயங்குவதற்கு 100 கிராம் குளுக்கோசும், 50 கிராம் புரோட்டீனும், 20 கிராம் வைட்டமின்களும், 10 கால்சியம் போன்ற இன்னபிற சத்துக்களும் தேவை என்று (சும்மா ஒரு கணக்கிற்கு) வைத்துக்கொள்வோம். இன்றைய நவீன உணவியல் கூறுகிறது இந்தச் சத்துக்கள் அடங்கிய கலவையான சமச்சீர் உணவைச் சாப்பிடுவதே ஆரோக்கியம் என்று. இது சரியானதாக இருக்கிறதா? நாம் உடலை ஒரு உயிரற்ற இயந்திரமாகவே பார்த்துப் பழகியிருக்கிறோம். மோட்டார் பைக்கிற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் 60 கிலோமீட்டர் ஓடும் என்பது போல, நம் உடலில் இந்தச் சத்துக்களைப் போட்டால் ஆரோக்கியம் என்று புரிந்து வைத்திருக்கிறோம். அப்படியானால் நம் உடலிற்கு இந்த குறிப்பிட்ட சத்துக்களை அளிப்பதற்காகவே தினசரி உணவை உண்கிறோம். அதற்குப் பதிலாக குளுக்கோசும், கால்சியமும், புரோட்டீனும், பிற சத்துக்களும் அடங்கிய மாத்திரைகளையோ அல்லது செயற்கைத் தயாரிப்புக்களையோ உணவிற்குப் பதிலாக எடுத்துக்கொண்டால் போதுமல்லவா?

இவ்வாறு உணவிற்குப் பதிலாக செயற்கைமுறையில் தயாரிக்கப்பட்ட / பிரித்தெடுக்கப்பட்ட சத்துக்களை நாம் சாப்பிட்டு வந்தால் நோய் வாய்ப்படுவோமே தவிர ஆரோக்கியமாக இருக்கமுடியாது என்பது நம் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் இதே சத்துக்களை உணவு மூலம் எடுத்துக்கொள்ளலாம் என்று உடலை இயந்திரமாக யோசிக்கும் அதே தன்மையில் பட்டியலை வைத்திருக்கிறோம்.

அப்படியானால், தேவைக்குத் தகுந்த சத்தான உணவுகளை எப்படித் தேர்வு செய்வது? இதைப்புரிந்து கொள்ள கால்சியத்தை எடுத்துக் கொள்வோம். நம் உடலில் கால்சியம் உள்ள பகுதிகள் எவை? பற்கள், எலும்புகள் இன்னும் பல. இந்த எலும்புகள் நமக்கு முதன்முதலில் எவ்வாறு தோன்றின? தாயின் வயிற்றில் சிசுவாக இருந்தபோது ஸ்கேன் மூலமாக எலும்பு வளர்வதைக் கண்டுபிடித்து கிலோக் கணக்கில் கால்சியம் கொடுத்தோமா? தசை வளர்வதற்கு புரோட்டீனும், உடல் சக்திக்கு குளுக்கோசும் அளந்து அளந்து கொடுத்துக் கொண்டிருந்தோமா? அப்படி நாம் கொடுத்துத்தான் சிசுவை வளர்க்க வேண்டும் என்று இருந்தால் கால்சியத்தை கண்டுபிடிக்காத நூறு வருடங்களுக்கு முன்பு குழந்தைகள் எல்லாம் எலும்புகள் இல்லாமலா பிறந்தன?

உடல் தன்னுடைய தேவைகளை தானே உருவாக்கிக் கொள்கிறது. அப்படி உருவாக்கிக் கொள்வதற்காக உணவு அவசியம். உணவில் இருக்கும் சத்துக்களை நாமே தீர்மானித்துக் கொண்டு உடலுக்குத் தரவேண்டிய அவசியமில்லை. உடலின் தேவைக்குத் தகுந்தாற்போல் உணவை உண்டு வந்தால் – உடல் அதன் தேவைகளை தானே உருவாக்கிக் கொள்ளும். உதாரணமாக நாம் கால்சியம் சத்துத் தேவைக்காக என்ன வகையான உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்கிறோம்? பால் , முட்டை போன்றவற்றைத்தான் நாம் கால்சியத்திற்காக உண்டுவருகிறோம். பாலில் கால்சியம் இருப்பது உண்மைதான். ஆனால் அந்தப் பாலை நமக்குத் தந்த மாட்டிற்கு யார் கால்சியம் தந்தது? தினசரி மாட்டின் உணவுகளில் கால்சியம் சத்துள்ள உணவை கொடுத்துத்தான் நாம் கால்சியம் உள்ள பாலைப் பெறுகிறோமா? மாடு அதிகமாக உண்ணும் புல்லில் மெக்னீசியம் தான் இருக்கிறது. மெக்னீசியத்தை மாட்டின் உடல் தன் தேவைக்கு கால்சியமாக மாற்றிக்கொள்கிறது. அதே போல முட்டையில் கால்சியம் இருப்பது உண்மைதான். ஆனால் முட்டையிடும் கோழிக்கு நாம் கால்சியம் தந்தோமா? இல்லை. தன்னுடைய அன்றாட உணவுகளில் இருந்து கால்சியத்தை உற்பத்தி செய்துகொள்கிறது கோழியின் உடல். தாவரங்கள் தங்களுடைய தேவைகளுக்காக சூரிய ஒளியில் இருந்து ஸ்டார்ச்சை தயாரித்துக் கொள்ளும் என்பதை பள்ளிப் பாடங்களில் படித்திருக்கிறோம். அப்படியானால், கால்சியத்தை தானே தயாரித்துக் கொள்ளும் மாட்டின், கோழியின் உடல் அறிவை விடவும், ஸ்டார்ச்சை தானே தயாரித்துக் கொள்ளும் தாவரத்தின் அறிவை விடவும் மனித உடல் அறிவு குறைவானதா? 1959 ஆம் ஆண்டு இவற்றை ஆய்வு செய்த உயிரியல் விஞ்ஞானி டாக்டர். லூயி கேர்வரான் மனித உடலுக்கு தனக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து கொள்ளும் ஆற்றல் உண்டு என்பதை தன் ஆய்வுகள் மூலம் நிரூபித்தார்.

உணவுகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதை நாம் ஆய்வுக்கூடங்களில் ஆய்வு செய்து கண்டுபிடிக்கும் வேதியியலை விட, உடல் தேவைகளை தானே உருவாக்கிக்கொள்ளும் உயிர் வேதியியல் இயற்கையானது. உடலின் தேவை கருதி, தேவையான அளவிற்கு நமக்குப் பிடித்த உணவுகளை உண்டு வந்தால் போதும். உடல் தனக்குத் தேவையான எல்லா சத்துக்களையும் தானே உற்பத்தி செய்து கொள்ளும். ஒவ்வொருவரும் அவரவருடைய உடலின் தேவையைப் பின்பற்ற வேண்டுமே தவிர பொதுவான உணவுகளை நாமே ஏற்படுத்திக்கொண்டு அவற்றைப் பின்பற்றுவது ஆரோக்கியத்தப் பெற வழிவகுக்காது.

blackguard:
வலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன...?

- ஹீலர்.R.கார்த்திகேயன்.,M.Acu.

மேல் உள்ள கேள்விகளுக்கு, வலி நல்லது... என்ற பதிலை சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும் [இத சொல்லவா கூப்பிட்ட என்று மனசுக்குள்ள திட்டாதிங்க], ஆம். ஆனால் இது உண்மை இதற்கான விளக்கத்தை கட்டுரையின் இடையில் பார்போம்.

http://2.bp.blogspot.com/-dvv0LCzqfq4/T-RQkVL6ggI/AAAAAAAAAFA/QMEVtWsl7i4/s640/pain.jpg

இன்று அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் பல நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் வலி சம்பந்தப்பட்ட அறிகுறிகளை கொண்டுள்ளனர், எடுத்துகாட்டாக : தலைவலி, இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி, கழுத்துவலி, தசை இறுக்கம், ..... என்று பல வலிகளை கூறலாம். இவர்கள் அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் முன்னர் ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை எடுத்தவர்களே பெரும்பாலனவர்கள்.

முதலில் வலி என்றால் என்ன என்பதனை அறியும் முன்னர் இதற்கு ஆங்கில மருத்துவம் சொல்லும் காரணங்களும் அவை தரும் சிகிச்சையும் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

நமக்கே நன்றாக தெரியும், அதிகம் வெய்யிலில் போவதால், அதிகம் பசிக்கும் போது சாப்பிடாமல் இருப்பது அல்லது அளவுக்கு அதிகம் சாப்பிடுவது, ஒன்று இரண்டு நாட்கள் மலம் கழிக்காத போது இப்படி பல சூழல்களில் தலைவலி எற்படுகிறது. ஆனால் தலைவலிக்கு தலை மட்டுமே காரணம் என்று நினைத்து அதனை மட்டுமே சுற்றி சுற்றி வருவது எந்த காலத்திலும் நோயை குணப்படுத்த உதவாது.

இதே போல மூட்டு வலி. இன்று பலர் இந்த நோயால் அவதிப்படுவதை நாம் கண்கூட பார்கிறோம், இதற்கு ஆங்கில மருத்துவம் ஆரம்ப காலங்களில் வலி மாத்திரையை கொடுக்கிறது [வலி மாத்திரைகள் எப்படி வேலை செய்கின்றன என்பது பற்றி பின்பு பார்க்கலாம்..]. சில நாட்கள் குணம் அடைந்தது போல தெரிந்தாலும் பின்பு மீண்டும் நோய் தீவிரம் அதிகரிக்கிறது. இப்போது X-Ray, Scan மற்றும் அனைத்து டெஸ்ட்டும் செய்து பார்த்துவிட்டு [ஏன் இந்த டெஸ்ட்கள் செய்வதற்கு முன்பு தெரியாதா நம்மால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது என்று – என்ன செய்ய பல லட்சம் செலவு செஞ்சு வாங்கியத என்ன பண்ண], உங்க மூட்டு தேய்ந்து விட்டது இனி அதை சரி செய்ய முடியாது என்று கூறி, இதற்கு ஒரே தீர்வு “மூட்டு மாற்று அறுவை சிகிச்சை” என்று இருந்த மூட்டையும் மாற்றி விடுவது எப்படி ஒரு சிறந்த சிகிச்சை ஆகும் என்றுதான் புரியவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் பலருக்கும் மூட்டு மாற்றிய பின்னும் வலி தொடர்வதும், படி ஏறக் கூடாது, காலை மடித்து உட்காரக்கூடாது என்று கூறுவதும் வேதனைக்கு உரியது.

சரி இப்போது மருந்துகளின் கொடூரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்...

http://1.bp.blogspot.com/-MJHOKChZ-PU/T-RTGO_OROI/AAAAAAAAAFQ/3bnI9Fm_Eu8/s400/prescription-pills-death.png

ஒரு நோயை [வலியை] சரி செய்ய இரண்டு முறைகள் உள்ளது. ஒன்று அந்த நோய் ஏன் ஏற்படுகிறது, அதற்கு காரணம் என்ன, என்பது பற்றிய தெளிவு இருந்தால் அந்த காரணத்தை [நோய் என்பது ஒன்றே ஒன்றுதான் அதுதான் இந்த மூலகாரணம்] சரி செய்வதன் மூலம் நோய் அறிகுறிகளான வலிகள் மற்றும் பல அறிகுறிகளை சரி செய்து விடலாம் [இந்த அறிகுறிகளைத்தான் ஆங்கில மருத்துவம் நோய் என்று நினைக்கிறது]. ஆனால் எந்த ஒரு மருத்துவ இயந்திரமும் நோயின் மூலகாரணத்தை கண்டறிய முடியாது [என்றாவது மனிதனின் அடிப்படை தேவைகளான/உணர்வுகளான பசி-தாகம்-தூக்கம்-சோர்வு-வலிகள் இவற்றை அளவிட மருத்துவ உபகரணங்கள் உள்ளதாக நாம் கேள்விப்பட்டு இருக்கிறோமா..?]. எனவே ஆங்கில மருத்துவம் இரண்டாவது முறையை கையில் எடுக்கிறது, நோயாளிகளின் உடலை/உயிரை பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல்..!

அது தான் வலி மாத்திரைகள். வலி மாத்திரைகள் அவ்வளவு கொடுமையானதா என்றால், நிச்சயம் ஆம் என்றுதான் கூற வேண்டும். ஏன் என்றால் நாம் சாப்பிடும் மாத்திரைகள் எப்படி வலியை சரி செய்கிறது என்பதே இதற்கு பதில்...!

http://2.bp.blogspot.com/-hW-Fm7n2uTQ/T-RTfjLEVgI/AAAAAAAAAFY/tirpaT1Hqto/s400/adam_hypothalamus_pituitary_17135.jpg.jpg

நம் தலையில் Pituitary Gland என்ற சுரப்பிக்கு அருகில் Hypothalamus என்ற ஒரு பகுதி உள்ளது. இது நம் உடலில் ஏற்படும் உணர்வுகளில் ஒன்றான வலிகளை மூளைக்கு தெரிவிக்கிறது. எனவே மருந்துகளை கொடுத்து இந்த Hypothalamus இன் செயல்பாட்டை நிறுத்தி வைத்தால் வலிகள் மூளைக்கு எட்டுவது நிறுத்தப்படும் [என்ன ஒரு வில்லத்தனம்]. ஆகமொத்தம் வலி உடலில் இருக்கும், வலிக்கான காரணிகளும் உடலிலேயே இருக்கும் ஆனால் வலியை மட்டும் உணராமல் வைக்கபடுகிறது.

அப்படி என்றால் உடல் எவ்வளவு நேரம் வலி இல்லாத இந்த நிலையிலேயே இருக்கும்..?

நம் உடல் ஒரு அற்புதமான கட்டமைப்புடன் செயல்படுகிறது, எனவே அது நல்ல நிலையில் உள்ள போது எந்த ஒருரசாயணங்களுக்கும் கட்டுப்படுவது இல்லை. எனவே தான் தினம் தினம் மாத்திரைகள் எடுக்கும் தேவை அதிகரிக்கப்படுகிறது. தொடர்ந்து மாத்திரைகள் எடுக்கும் போது உடலின் இந்த கட்டமைப்பு சின்னாபின்னம் செய்யப்படுகிறது. இப்போது பலருக்கு உடலில் ஏற்படும் பல உணர்வுகள் குறைபடுகிறது, காலில் ஒரு முள் குத்தினாலோ அல்லது ஒரு கல் பட்டு காயம் ஏற்பட்டாலோ கூட தெரிவது இல்லை. இரத்தம் வெளியேறிய பின்பு யாராவது சுட்டிக்காட்டினால் மட்டுமே அவர்கள் சுதாரிப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம்.

இது மட்டும் அல்ல, தொடர்ச்சியாக மருந்துகள் எடுப்பவர்களுக்கு சில நாட்களுக்கு பின்னர் அதிக கோபம், பயம், கண் எரிச்சல், தெளிவற்ற சிந்தனை, ஆண்மை குறைவு, கர்ப்பப்பை பிரச்சனைகள், தூக்கமின்மை, பசியின்மை, இடுப்புவலி, புதிய இடங்களில் வலிகள் என்று பல புதிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் நம் உடலில் உள்ள பிரதான உறுப்புகளான கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறைய தொடங்குவதே ஆகும். காரணம் உடல் ஒருபோதும் ரசாயனங்களை நோய் தீர்க்கும் சக்திகளாக எற்றுகொள்வது இல்லை. இதற்கு ஒரு உதாரணம் அக்குபங்சர் சிகிச்சை மேற்கொள்ளும் பல நோயாளிகள் அவர்களின் உடல் கழிவுகள் வெளியேறும் போது சிறுநீர் மஞ்சள் நிறமுடனோ அல்லது மருந்துகளின் நாற்றமுடனோ வெளியேறுவதாக கூறும்போது நாம் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. அது.., உடல் நோயெதிர்ப்பு சக்தி பெறும்போது மருந்துகளை சக்திகளாக நினைத்து இருந்தால் அவற்றை ஜீரணித்து தன் தேவைக்கு உபயோகம் செய்திருக்கும். ஆனால் நடந்ததோ நேர் மாறானது, உடல் சக்தி பெறும்போது தனக்குள் தேங்கிய ரசாயண மருந்துகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவது, உடல் ரசாயண மருந்துகளை புறக்கணிக்கிறது என்பதை ஆதாரமாக காட்டுகிறது.

சரி இப்போது மீண்டும் மேல் உள்ள கேள்விகளுக்கே வருவோம்...

வலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன...?

முதலில் ஏன் வலிகள் ஏற்பட வேண்டும் என்று நாம் யோசிக்க வேண்டும், உடலில் கழிவுகள் தேக்கம் அடையும்போதும், உடலில் உள்ள சக்தியோட்ட பாதைகளில் தடைஎற்பட்டு உடலின் சமநிலை [பஞ்சபூத உறுப்புகளின் இயக்கம்] மாறுபடும்போதும் உடல் அதனை பல அறிகுறிகளாக வெளிப்படுத்தும் அவற்றில் ஒன்றுதான் வலிகள். அதுவும் நமக்கு பிற்க்காலத்தில் ஏற்படும் பெரிய நோயை தடுக்கும் ஒரு முன் அறிவிப்பே..! முனறிவிப்பு எப்படி நோயாகும். எனவேதான் அதனை, வலி நல்லது... என்று மேலே குறிபிட்டுள்ளேன்.

அப்படியென்றால், மேலே உள்ள அனைத்து வியாதிகளையும் நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா..?

தலைவலிக்கு அடிப்படை கல்லிரலின் இயக்க குறைபாடாக இருக்க பெரும்பகுதி வாய்ப்பாக உள்ளது. இதனை சரியாக உணர அக்குபங்சர் நாடியரிதல் முறையோ அல்லது கேட்டறிதல் முறையோ உதவியாக இருக்கிறது. [கீழ் உள்ள வீட்டுகொரு மருத்துவர் புத்தகத்தில் உள்ள தகவல்களை வைத்து, இந்த கேட்டறிதல் முறையில் உங்களுக்கு நீங்களே சுய சிகிச்சை செய்துகொள்ள முடியும். இந்த புத்தகத்தை இலவச டவுன்லோட் செய்ய இந்த லிங்கில் செல்லவும் : http://rkacu.blogspot.in/p/free-e-books-download.html

http://2.bp.blogspot.com/-HR97TlZP3-Q/T-RY09iBgJI/AAAAAAAAAFs/7DdjCWkCzGo/s400/vm.jpg

மூட்டு வலிக்கு காரணம், மூட்டு தேய்வது இல்லை மாறாக, மூட்டுகளை சுற்றி உள்ள தசைநார்கள் பலம் இழப்பதும், மூட்டுகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு பகுதியில் நீர் தன்மை குறைவதால் அவை சுருங்கி விரியும் தன்மையை இழந்து இரு எலும்புகளும் உறைவதால் வலி ஏற்படுகிறது. இதற்கு உதவியாக உள்ள உள்ளுறுப்புகளை சரியான சிகிச்சை மூலம் பலப்படுத்துவதால், இன்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருந்த பல நோயாளிகள் அதனை தவிர்த்து, முழு குணம் பெறுவதனை அக்குபங்சர் மருத்துவர்களான நாங்கள் கண்கூடாக பார்த்துக்கொண்டுதான் உள்ளோம். இது போன்ற அடிபடையில் தான் அனைத்து வலிகளும் ஏற்படுகின்றன. அதனை புரியாமல் நோய் அறிகுறிகளை மட்டும் தடுப்பதால், உடலினுள்ளே கழிவுகள் மேலும் மேலும் அதிகரிக்கும்போதுதான் உள்ளுறுப்புகள் செயல் இழக்கின்றன. இப்போதுதான் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை என்ற ஒன்று தேவை என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது.


http://3.bp.blogspot.com/-TgPNB-dz-B0/T-RRGqSJjDI/AAAAAAAAAFI/a_YadsSOXcI/s640/Painkillers-3.jpg

எங்களிடம் அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் எந்த ஒரு நோயாளியையும் முதலில் நாங்கள் செய்யச் சொல்லும் விஷயம் மருந்துகளை [ரசாயண விஷங்களை] நிறுத்துங்கள் என்றுதான்...! இப்போது உடல் சக்தி பெறப்பெற தனக்குள் தேங்கப்பட்ட கழிவுகளை வெளியேற்றும், இப்போது மருந்துகளின் கட்டுப்பாட்டில் இருந்த Hypothalamus மீண்டும் புத்துணர்வு பெரும். இந்த நிலையில்தான் நோயாளிகள் மீண்டும் வலி அதிகரிப்பதனை உணர்வார்கள். ஏன் வலி அதிகரிக்க வேண்டும் என்றால், உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் இப்போது தனக்குள் தேக்கப்பட்ட கழிவுகளை வெளித்தள்ள முயற்சி செய்யும்.. இந்த நிலையில் வலி அதிகரிக்கும், பசி குறையும், சிலர் இரவு நேரங்களில் தான் அதிகம் வலிகளை உணர்வார்கள். காரணம் உடல், இயக்கம் இல்லாத இந்த நிலையில் தான் தன்னுடைய முழு சக்தியையும் நோயை எதிர்த்து போராட உபயோகிக்கும். ஒரு சிலருக்கு இடுப்பிலும் வலிகள் அதிகரிக்கும், காரணம் இதுவரை சாப்பிட்ட மருந்துகள் சிறுநீரகத்தை பளுதுபடுத்தி இருக்கும் இதனை உடல் சரி செய்யும் முயற்சிதான் இந்த வலி. இந்த வலிகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இப்போது வலிகள் மட்டும் அல்லாமல், உடலில் இருந்த நோய்கள் என்று நாம் நினைக்கும் பல அறிகுறிகள் ஒவ்வொன்றாக மறைய ஆரம்பிக்கும். கடைசியில் மிஞ்சுவது முழுமையான ஆரோக்கியம் மட்டுமே. காரணம் உடல் என்றுமே தவறு செய்வது இல்லை...! உயிரின் வேலை, உடலில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்றி அந்த உடலை என்றுமே ஆரோக்யமாக வைத்துகொள்வது மட்டுமே கடமையாக நினைக்கிறது.

எங்களிடம் அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் எந்த ஒரு நோயாளியையும் முதலில் நாங்கள் செய்யச் சொல்லும் விஷயம் மருந்துகளை [ரசாயண விஷங்களை] நிறுத்துங்கள் என்றுதான்...! இப்போது உடல் சக்தி பெறப்பெற தனக்குள் தேங்கப்பட்ட கழிவுகளை வெளியேற்றும், இப்போது மருந்துகளின் கட்டுப்பாட்டில் இருந்த Hypothalamus மீண்டும் புத்துணர்வு பெரும். இந்த நிலையில்தான் நோயாளிகள் மீண்டும் வலி அதிகரிப்பதனை உணர்வார்கள். ஏன் வலி அதிகரிக்க வேண்டும் என்றால், உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் இப்போது தனக்குள் தேக்கப்பட்ட கழிவுகளை வெளித்தள்ள முயற்சி செய்யும்.. இந்த நிலையில் வலி அதிகரிக்கும், பசி குறையும், சிலர் இரவு நேரங்களில் தான் அதிகம் வலிகளை உணர்வார்கள். காரணம் உடல், இயக்கம் இல்லாத இந்த நிலையில் தான் தன்னுடைய முழு சக்தியையும் நோயை எதிர்த்து போராட உபயோகிக்கும். ஒரு சிலருக்கு இடுப்பிலும் வலிகள் அதிகரிக்கும், காரணம் இதுவரை சாப்பிட்ட மருந்துகள் சிறுநீரகத்தை பளுதுபடுத்தி இருக்கும் இதனை உடல் சரி செய்யும் முயற்சிதான் இந்த வலி. இந்த வலிகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இப்போது வலிகள் மட்டும் அல்லாமல், உடலில் இருந்த நோய்கள் என்று நாம் நினைக்கும் பல அறிகுறிகள் ஒவ்வொன்றாக மறைய ஆரம்பிக்கும். கடைசியில் மிஞ்சுவது முழுமையான ஆரோக்கியம் மட்டுமே. காரணம் உடல் என்றுமே தவறு செய்வது இல்லை...! உயிரின் வேலை, உடலில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்றி அந்த உடலை என்றுமே ஆரோக்யமாக வைத்துகொள்வது மட்டுமே கடமையாக நினைக்கிறது.

இன்னொரு உண்மை என்னவென்றால், உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகாரம் செய்யப்பட 112 வகையான மருத்துவ முறைகளில் [அக்குபங்சர், ஆங்கில மருத்துவம் உட்பட] ஒன்றுகூட எந்த ஒரு நோயையும் குணப்படுத்த முடியாது. உடல் தன்னை தானே குணப்படுதிக்கொள்ளும், மருத்துவத்தின் வேலை உடலின் இயக்கங்களை முழுமையாக புரிந்துகொண்டு பக்கத்துணை நிற்பதுமட்டுமே. அதனை விட்டுவிட்டு, உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நினைக்கும் எந்த மருத்துவத்தாலும், எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்தவோ அல்லது குணப்படுதவோ எள்ளளவும் சாத்தியக்கூறு இல்லை.

பசி – தாகம் – தூக்கம் – சோர்வு போன்ற உடலின் அடிப்படை தேவைகளை உடல் நம்மிடம் எதிர்பார்க்கும்போது, அதனை முறையாக கவனித்து அந்த தேவைகளை பூர்த்திசெய்து வந்தால், நிச்சயம் அக்குபங்சர் உட்பட எந்த ஒரு மருத்துவமும் மனித உடலுக்கு தேவையே இருக்காது. காரணம் நம் உடலில் உள்ள உயிரின் வேலை, எப்போதும் தான் அந்த உடலில் உள்ளவரை அதில் உள்ள நோய்களை களைந்து அந்த உடலுக்கு நலனை கொடுபதுமட்டுமே....! இதனை கவனிக்க தவறியவர்களுக்கு மட்டுமே மருத்துவம் தேவைப்படுகிறது...

வீட்டுகொரு மருத்துவர் புத்தகத்தின் ஆசிரியர் -ஹீலர்.உமர் பாரூக் அவர்களின் மற்ற புத்தகங்களை இந்த லிங்கில் http://www.rkacu.blogspot.in/p/free-e-books-download.html சென்று இலவச டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

blackguard:
உண்மையில் நோய் என்றால் என்ன...?

- ஹீலர்.R.கார்த்திகேயன்.,M.Acu.

உடலில் கழிவுகள் தேக்கமே நோய், அதனை உடலே வெளியேற்ற எடுக்கும் முயற்சியே நோய் அறிகுறிகள், நோய் ஒன்றே ஒன்றுதான் ஆனால் அது வெளியேறும் முறைகளை பொருத்து அதன் அறிகுறிகள் பல தோன்றும், அந்த அறிகுறிகளை நோய் என்று நினைக்கும் ஆங்கில மருத்துவம் முதலில் மருந்துகளை கொடுத்து அந்த அறிகுறிகளை மறைக்க பார்க்கின்றது. ஆனால் இந்த ஆங்கில மருந்துகள் அனைத்தும் வியாதியை [அறிகுறியை] அப்போதைக்கு மறைத்து மட்டுமே வைக்கும் குணபடுத்த முடியாது.

http://4.bp.blogspot.com/-NUHp937n8Mk/T-RMpl4oVMI/AAAAAAAAAE0/f8Bb6Lz0zEw/s640/disease.jpg

[இதனால்தான் ஆங்கில மருத்துவம் எந்த ஒரு நோயையும் குணப்படுத்த முடியாது, கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்று கூறுகிறது. - உண்மையில் ஒரு நோயை கட்டுப்படுத்த முடிந்தால் அதனை குணபடுத்தவும் முடியும் அல்லவா...? எனவேதான் இந்த மருத்துவத்தில் வாழ்நாள் முழுக்க மருந்து எடுக்கவேண்டி உள்ளது.]

இதனால் உடலில் மேலும் மேலும் கழிவுகள் தேங்கும், இத்துடன் உடல் ஏற்றுக்கொள்ளவே முடியாத ரசாயன மருந்துகளை கொடுப்பதால், உடலில் ஏற்கனவே இருந்த கழிவுகளுடன் இப்போது இந்த புதிய ரசாயன கழிவுகளும் சேர்ந்துகொள்ளும். இப்போதும் உடல் தனக்குள் தேக்கப்பட்ட கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கிறது, ஆனால் இந்த முறை சற்று கடினமாக வெளியேறுகிறது. முன்பை விட சில புதிய அறிகுறிகள் வெளிப்படுகிறது. இதனை உணராமல் இப்போது மருத்துவம் அதற்கு வேறு ஒரு பெயர் வைத்து அதற்கும் அதே ரசாயனங்களை தான் கொடுக்கிறது, [எடுத்துகாட்டாக: ஒவ்வாமை [Allergy], மற்றும் வேறு சில புதிய பெயர்களை கூறி அதற்கும் ஒரு புதிய மருந்தை கொடுக்கிறது.]

இந்த நிலை மேலும் தொடரும்போது கழிவுகளை உடலை விட்டு நீக்க வேண்டிய உறுப்புகளின் [கல்லீரல், சிறுநீரகம்] இயக்கம் குறையும் இதனையும் மருந்துகளை கொடுத்து சரிசெய்ய முயற்சிக்கும் மருத்துவம் தோற்று, அந்த உறுப்பு கெட்டு போய்விட்டது என்று கூறி அந்த உறுப்பையே வெட்டி எறிந்துவிட்டு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை என்னும் பெயரில் மற்றவரின் உறுப்புகளை வெட்டி வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது, ஆனால் இதனையும் தன்னுடையது அல்ல என்று அடையாளம் கண்டுகொண்ட உடல் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் போது அதனையும் நிராகரிக்கும். [மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தொடர்ந்து மருந்து எடுப்பது இந்த நோய் எதிர்ப்பு சக்தியை முடக்கி வைக்கவே என்பதை இங்கு கவனிக்க வேண்டும் – மேலும் : https://www.facebook.com/photo.php?fbid=138366736293734&set=a.109234725873602.10012.100003612254243&type=1

[இந்த கட்டுரையை எழுதும் போது என்னை பார்க்க வந்த ஒரு நோயாளியை பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன்: சுமார் 60 வயது மதிக்க அவர், ஒரு நுரையீரல் புற்றுநோயாளி, அவருக்கு ஆங்கில மருத்துவத்தில் கொடுத்த சிகிச்சை, ஸ்கேன் செய்து விட்டு Biopsy test என்னும் பெயரில் அந்த கான்சர் கட்டியின் ஒரு பகுதியை வெட்டி உள்ளனர். பின்பு இதனை சரிசெய்ய முடியாது என்று கூறி அனுப்பி விட்டனர். ஏன், இந்த நோயை ஆங்கில மருத்துவம் குணபடுத்த முடியாது என்பது அந்த Test செய்யும் முன்பே தெரியாதா..? இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், உண்மையில் புற்றுநோய் என்றால் என்ன என்பதனை உணரவேண்டும் – மேலே கூறியபடி உடலில் தொடர்ந்து கழிவுகள் தேக்கப்படும்போது உடல் அதனை வெளியேற்ற போதுமான சக்தி இல்லாவிட்டால், அந்த கழிவுகள் உள்ளுறுப்புகளை பாதித்துவிடும் என்று அறிந்த உடல் அதனை ஒரு கட்டியாக ஒன்று திரட்டி, அதன் மேலே ஒரு பாதுகாப்பு வளையத்தையும் உருவாக்கி ஒரு பகுதியில் ஒட்டவைக்கிறது. இந்த நிலையில் அந்த உடலுக்கு முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தால் நிச்சயம் அந்த கட்டியை கரைத்து அந்த கழிவை வெளியேற்றும் தகுதியுடன் இருக்கிறது. ஆனால் இந்த நிலையில் ஆங்கில மருத்துவம் Biopsy test என்னும் பெயரில் அந்த கான்சர் கட்டியை வெட்டி துளை இடுவது அந்த கழிவுகள் உடல் முழுமைக்கும் பரவ ஏதுவாக இருக்கும். பின்பு எப்படி அதனை குணப்படுத்த முடியும்]

இப்படிதான் உடலின் [உயிரின்] எந்த ஒரு உணர்வையும் புரிந்து கொள்ளாத மருத்துவத்திடம் சிக்கி நோயுடன் போராடும் காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறதே தவிர. ஆரோக்கியம் என்றும் நிலைபடுவது இல்லை. இந்த மருத்துவம் தன் போக்கை மாற்றாத வரை பல உயிர்கள் பலி ஆவதை யாராலும் மறுக்க முடியாது...

# ஆங்கில மருந்துகள் எந்தப் பயனும் அற்றவை என்பதையும் பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை என்பதையும், அந்த நோய்களைக் குணப்படுத்துவோம் என்று சொல்லக்கூடாது என்றும் இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றியும் இந்த லிங்கில் படித்து தெரிந்து கொள்ளுங்கள் :http://rkacu.blogspot.in/2012/04/51.html

# செல்கள் எவ்விதம் இயங்குகின்றன? என்ற கேள்விக்கு இன்றைய நவீன விஞ்ஞானம் ஜீன்களை காரணமாகக் கூறுகிறது. ஆனால் மனிதனைக் கட்டுப்படுத்துவதாக நம்பப்படும் ஜீன்கள் மனித சிந்தனைகளால், நம்பிக்கையால் எவ்வாறு மாற்றம் பெறுகின்றன? என்பதை அமெரிக்க ஆய்வாளர் டாக்டர்.புரூஸ் லிப்டன் தன் கண்டுபிடிப்புகள் மூலம் நிரூபித்து வருகிறார். இந்த உரைகளை தெளிவாக புரிந்துகொள்வதன் மூலம் உண்மையான உடல் இயக்கத்தை எளிதாக புரிந்துகொள்ள முடியும்.


Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version