என் இதயம் தேடும் குரலே யார் நீ ? 4
இங்க அடிக்குற வெயில்ல ஏதாச்சும் இளநீர் குடிச்சா நல்லா இருக்குமே...
தொண்டை ரொம்ப வறண்டு போகின்ற நிலமையிலும் அந்த குரலுக்கு சொந்தமானவரை தேடும் தீவிரத்தில் இறங்கியதை மறந்து விடக் கூடாது.
சேரி ... இளனிய வாங்கிட்டு , அடுத்து வருவது யாருன்னு பார்க்கலாம்....
என்ன ...இங்க இளநீ கடை புதுசா இருக்கே.....
இம்ம்ம்ம்... கடை கூட நல்லா வெளிச்சமா இருக்கு...
போயி முழிக்க போற மூஞ்சி எப்படி இருக்குமோ....
அண்ண...அண்ண...யாராவது கடையில இருக்கீங்களா?
என்ன ஆளையே காணும்? டைம் வேற ஆகுது ...
ஓமைகோட் ... என்ன இந்த ஆளு face மாஸ்க் போடாம....முக முடியோட வராரு ...
சரியான காமெடி பீஸ் போல,
என்று உள்ளத்திலே பேசி சிரித்துக் கொண்டேன்.
“அண்ண, கடைய ஓபன் பண்ணிட்டு ; எங்க போயிட்டீங்க?
எவளோ நேரமா உங்களை கோழி கூவுற மாதரி கூப்டுகிட்டே இருக்கிறது.
கூப்டு ... கூப்டு... இருக்குற வாய்ஸ்சும் இல்லாம போய்டும் போல.
“இல்ல,நீ ...வர்றதை தூரத்தில் இருந்தே பார்த்தேன்...
நீ வரேன்னு தெரிஞ்சு தான் பின்னாடி உள்ள வேலைய போட்டு; உனக்காக...முன்னாடி ஓடி வந்தேன்”.
சேரி, “ அண்ண.நீங்க ...முன்னாடி வந்த அழகு எப்படினு தான் நான் பார்த்தேனே ...
எனக்கு ஜில்லுனு ஒரு இளநீ கொடுங்க”.
ஹஹ்ஹாஹா .....அதை ஏன் இங்க வந்து கேக்குற?
ஜொள்ளு விடுற ஜில்லு கிட்டல நீ கேட்கணும்...
என்ன இந்த ஆளு என்னமோ சொல்லுதே ....
ஆஹா... இந்த மூஞ்சிய பார்த்த விக்கு போட்ட விக்ரம் மாதரியே இருக்கே...
ஆமா ...இவரு எப்படி இங்க?
நல்ல காலத்துலே உளறுவரே...
ஆனா ...இன்னைக்கு ரொம்ப கருத்தா...தெளிவா... பேசுறாரே.
சேரி அப்பரும் இருக்கு இந்த ஆளுக்கு கச்சேரி.
அமைதியா வாங்கிட்டு இடத்தை காலி பண்ணுவோம்.
“யோவ், பேச்சை குறைச்சிட்டு செயல்ல கூட்டுயா...
சீக்கிரமா கேட்டதை கொடுங்க; நான் போகணும் ...
டைம் ஆச்சு.”
“இளனி வேணும்னு கேக்குதுங்க...
வரும்போதே காலுல சுடுதண்ணி ஊத்திட்டு வருதுங்க ...
உன் மூஞ்சில முழிச்சுட்டேன்ல ...அப்போ அவ்ளோதான் ;
எவன் கிட்ட அடி வாங்க போறேனோ... ஆண்டவா....”.
“ம்..ம்..ம்ம்... நீ, அடி வாங்கினா எங்கிட்ட தான் வாங்குவையா...
ஏன்னா...உன் மைன்டு வாய்ஸ் இங்க வரைக்கும் கேக்குது...
ஒழுங்கா வேலைய பாரு...நான் வரட்டா....”.
தொடரும்...