ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 193
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/193.png)
அதுவொரு விடுமுறை தினம்...!
தெய்வக்குழந்தை அவளுக்கோ பூரித்தது மனம்...
வார நாட்களில் ஓயாது படிப்பு...
வார இறுதியில் விளையாட்டின் துடிப்பு...
பார்வையற்ற அவளின் ஞானமோ
மேதையின் அறிவுக்கு ஒப்பானது...
ஊமையான அவளின் சாதுரியமோ
வல்லவனின் நுட்பத்துக்கு சமனானது...
அம்மா செய்த அலங்காரம் கொண்டு
தோழமை நாடி விரைந்தாள் பூச்செண்டு...
காற்றில் மிதந்தன மழலை இதயங்கள்...!
வானம் விரியும் நீளமாய் பல ஆசைகள்...
எங்கிருந்தோ வந்தான் ஓர் பாதகன்!
காமவெறி கொண்டக் கிராதகன்!
வஞ்சகன் பார்வையோ இளவரசி மீது படர்ந்தது...
அவன் பாதங்கள் அவளையே பின் தொடர்ந்தது...
தந்தை போல் அரவணைக்க வேண்டிய கரங்கள்,
சிந்தை களைந்து சிறுமியை கூட சீரழிக்கத் துடித்தன...
பாசாங்கு செய்து அவளை ஏமாற்றி அழைத்த வார்த்தைகள்,
கண்காணா இடம் தேடி அவளை கூட்டிச் சென்றன...
கபடமற்றவளாய் அமர்ந்திருக்கிறாளவள்...
கொடூரனின் வன்மம் அறியாமலிருக்கிறாளவள்...
விதியின் சதிக்கு ஆளாகப்போகிறாளா ?
அல்லது எதிர்காலத்தைக் கட்டியாளப்போகிறாளா ?
காமவெறி எனும் போர்வையை மூடி
பிஞ்சு மொட்டையே கசக்க நினைக்கும் அவனுக்கு,
காலம் கருணையுள்ளம் வழங்குமா..?
நன்னடத்தை எனும் போர்வை அணிந்து
பெண்மையை போற்றும் அளவிற்கு,
நற்பிரஜையாய் அவன் மாறுவானா..?
பதில் என்னிடமும் இல்லை...
பெண்மைக்கான மதிப்பு,
நிகழ்காலத்திலும் இல்லை...
ஒரு சில இம்சை ஆண்மையின் உக்கிரத்தால்
பெண்ணினமே மனம் உடைகிறது...
அந்த ஆண்மை செய்யும் வக்கிரத்தால்
ஆண் வர்க்கமே தலை குனிகிறது...
தனிமனிதன் நினைப்பின் முடியும்...
காமப்பிடியில் வாழ்வைத் தொலைக்கும்,
பெண்மையின் இரவுகள் விடியும்...
இனி உதிக்கும் பொழுதுகள்
ஒழுக்கத்தை போதிக்கட்டும்...
ஆண்களின் நற்துணைக் கொண்டு
பெண் பிறப்புக்கள் பூமித்தாண்டி
சாதிக்கட்டும் ...!!!