ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 178
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/178.png)
வெளிச்சத்தை உள்வாங்கி.,
எம் மீது உமிழ்ந்திடும்!
திரன் கொண்ட திரவியமே!
தெவிட்டாத காவியமே!!
ஆதிசிவன் கையிலொரு,.
அரிதான ஞான பழம்.,
அதை தானும் கொள்ளத்தான்.,
முருகன் வந்தான் உலகை வலம்!
அவன் செயலை தன்னகத்தே.,
கொண்டதொரு அழகு நிலம்.,
ஆயுள் முழுதும் சுற்றி வர.,
பூமிதானே அதற்கு மூலம்!!
தொலைதூரம் வாழ்ந்திடும்.,
தொலைந்தாலும் தோன்றிடும்!
நில்லாமல் சுற்றிடும்.,
நம் மனதில் நீங்கா இடம் பெற்றிடும்!!
இரு மலைகள் இடைவளியில்..
இடமளிக்கும் மணல் வெளியில்..
நடைபயின்று நமதருகில்..
நடந்து வரும் நிலவொளியால்!
பேசுவதும் எம்மொழியோ..
மயங்கிடுதே நம் விழியோ!!
பிள்ளைக்கு சோறூட்ட.,
பிடித்தவளை பாராட்ட.,
வடை சுட்ட கதை பேசி.,
படுத்தவண்ணம் ரசித்திட.,
படைக்கப் பட்ட நிலவுதான்!!
பார்ப்பவர் மனமோ களவுதான்!!!
நிலவின் காதலன்!!! பீன்.......
[/font][/color][/size][/size]
உயிர் ஊட்ட உதயனையும்
சுவாசிக்க காற்றையும்
வம்சம் தழைப்பதில் மரங்களையும்
கொடுத்து சிவக்க மழையையைம்
தீமையை அழிக்க அக்கினியையையும்
பல முரண்களை மனிதனுக்கு
எடுத்துரைக்கவோ
இறைவன் படைத்தது ....!
அப்படியினில் வான்மதியை
ஏன் படைத்தான் ?
கவிஞனர்களின் கற்பனைக்கா ?
காதலனின் வர்ணனைக்கா ?
தெரியாது முடியாது எனக்கு
கொடுத்து வைக்கலை
இயலாத காரியம்
கையாலாகாதவன்
கண்டு எடுத்த பிதற்றல்
வார்த்தைகளில் வசைபாடி
வானம் பார்த்து கிடைப்பவனுக்கு
இரவியிடம் ஒளி சேமித்து
இருளில் தேவைக்கு மிளிரும்
வான்மதியும் ஒரு பாடமே
அறிவாயா மனிதா ...!
இவ்வுலகினில் எல்லா உயிர்களும்
ஜனிப்பதற்கு காரணஉண்டெனில்
உன் பிறப்பின் காரணமறிவாய ?
உன் போல் ஒருவன் தான் மதியால்
மதியில் நீர் தேடுகிறான் .
யார் கண்டது
இருபது தலைமுறை கடந்து
பூமி என்றொரு அண்டம் ஒன்று
மனிதனின் பேராசைக்கு
நிர்மூலமானது என்று
உன் தலைமுறை நிலவில்
நின்று பாடம் புகட்டும் ...!
உயர்ந்த லட்சியம் இருப்பின்
வெற்றி நிச்சயம் ...!