FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on September 08, 2019, 05:19:21 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 227
Post by: Forum on September 08, 2019, 05:19:21 PM
size=12pt]ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)[/size]

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 227
இந்த களத்தின்இந்த  நிழல் படம்   FTC Team சார்பாக      வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/0Latest/OU/227.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 227
Post by: Guest 2k on September 10, 2019, 09:58:13 AM
வழிந்தோடும் கோப்பை தேநீரின்
சுவையோடு கலந்தாடுகிறது
ஞாபக சுவடுகள்
எனக்கென நீ விட்டுச் சென்றிருப்பவைகளை
அசை போட்டுக் கொள்கிறேன்
மீண்டும் ஒரு ஞாபகத்திற்கென

வீதியில் நீ இறங்கி வருகையில்
மிதிப்படும்
மஞ்சணத்தி பூக்கள்
ஜன்ம சாபல்யம் அடைந்த உற்சாகத்தில் கிறங்கி கிடக்கின்றன
தேரடி கோவிலின் தேவனகானத்தை
விஞ்சி ஒலிக்கிறது
உன்
பாத கொலுசொலிகள்


உயிர் ஊடுருவி செல்லும் மின்னலென
ஒரு ஓரப் பார்வை வீசிச் செல்கிறாய்
இது கார்காலமா என
ஒரு கணம் குழம்பி நிற்கின்றது
முகில் பொதிகள்
தென்றலென தீண்டிச் செல்லும்
உன் காதோர ஜிமிக்கிகளின்
குலுங்கலில்
இதயம் அதிர்ந்து துடிக்கிறது


கலகலக்கும் வளையொலிகளின்
ஓசையில்
சிறகடித்து பறக்கிறது
என் மனப் பட்டாம்பூச்சிகள்.
இப்பொழுது சிரித்தாயா என
சந்தேகமாக கேட்கிறேன்
மீண்டும் ஒருமுறை
கலகலத்து சிரிக்கிறது
உன் கரவளைகள்


பூமியில் இன்னும் தோண்டி எடுக்கப்படாத
இந்த வைரங்களை உன் கழுத்தணியில்
எனை முந்திக்கொண்டு
சேர்ப்பித்தவன் தான் என் முதல் எதிரி

தீண்டிடும் உன் தாவணியின் தலைப்புகள்
மன்மத பாணங்களென
உயிரை உரசி செல்கிறது.
தென்றலை விடவும் மிருதுவானது
அந்த தீண்டல் என
ஏங்கி தவிக்கின்றன
தெருவில் வீற்றிருக்கும் செவ்வரளி செடிகள்

உன்னை கண்டதும் குதித்துக்
கும்மாளமிடும் ஆற்றங்கரையின்
இரகசியம் தான் என்ன?
நீ கால் பதித்ததும்
சலசலத்தோடும் ஆறும் கூட
சலனமின்றி அதிர்ந்து நிற்கிறது.
எனை ஆட்டுவிக்கும் அழகினில்
சரணமடைந்துவிட
துடிக்கிறது என் ஒவ்வொரு நொடி பொழுதுகளும்
புல்லின் நுனி பனித்துளி போல்
நீர் முத்துகள் முத்தாடும்
கொலுசுகளணிந்த
உன் பொற்பாதம் தனை
என் கரங்களில் ஏந்துகையில்
உன் பாதங்களில்
வீழ்கிறது
எந்தன் உலகம்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 227
Post by: யாழிசை on September 10, 2019, 11:01:48 AM
என்னவளின் கொலுசொலி

அன்று அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
உமது சங்கு கழுத்தில் தாலியதனை கட்டிய நான்
மெட்டி அணிவிக்கும் அத்தருணத்தில்
காண தவறவில்லை உமது கால்களுக்கு
அழகூட்டிய கொலுசுதனை...


பஞ்சு போன்ற பாதத்தை உரசி
ஊஞ்சலாடி ஒலியெழுப்பும் கொலுசே..
உன் அழகுக்கு அழகு சேர்க்கும் அந்த கால்களை
கரத்தினில் ஏந்த என்ன தவம் செய்தேனோ...

அந்த ஏழு சுவரங்களும் ஏங்கி அல்லவா போகின்றன
என்னவளின் கொலுசொலி கேட்டு ...
ஜல் ஜல் என்று ஓசை எழும்புகையில்
ஜில் ஜில் என்று மனது சில்லிடுகிறது ....

நித்தம் நித்தம் அதிகாலை வேளையில் 
அலாரம் தேவை இல்லை...
அன்பே உமது கொலுசொலி மட்டும் போதுமே ...


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 227
Post by: thamilan on September 10, 2019, 03:28:51 PM


அவளைக்  கண்டது நான்
ஒரு மழை நாளில்
குடையோடு அவளும்
மழையோடு நானும்
வந்து கொண்டிருந்தோம்
கருணையாய் வந்த காற்று
பறித்துக் கொண்டது
நான் எதிர்பார்த்தது போலவே 
அவள் குடையை

மழையில் அவள் நனைய
குளிரில் நடுங்கியது எனதுடம்பு
ஆனந்தமாக அவளை தழுவும்
மழையைக் கண்டு
உடம்பை சிலிர்த்தன
சாலையோர மரங்கள்

அழகை எல்லாம் அள்ளித்தெளித்து
பிரமன் படைத்திட்ட அழகுச் சிலையே
அஜந்தா ஓவியம் உயிர் பெற்றது
உன்னால் தானோ

ஈரமண் தரையில் பதிந்த
அவள் காலடிச் சுவடுகள்
மழைநீர் பட்டு அழிந்தாலும்
இன்னும் அழியாமல் இருக்கிறது
அவள் நினைவுச்சுவடுகள்
என் மனதில்

தலைகுனிந்து நடந்தவள்
சற்றே தலைதூக்கி
ஓரக்கண்ணால் பார்த்து
மெலிதாக சிரித்ததும்
மின்னல் வெட்டியது என்மனதில்

தலை குனிந்து நடந்தாலும்
அவள் புருவம் மட்டும் உயர்ந்தே இருந்தது
அவள் ஓரக் கண்ணால் என்னைப் பார்ப்பதை
எனக்கு அறிவித்தது
அவள் மனம் அவள் வசமில்லை
அவள் தடுமாறும் நடை
எனக்கு புரியவைத்தது
அவளை நெருங்க நெருங்க
படபடக்கும் வானத்தை விட
படபடத்தது என் மனம்

திடீரென என் கண்களுக்குள்
ஒரு தீப்பொறி
அவள் பாதம் தூக்கி வைக்கையில்
அவள் பாதத்துக்கு கீழே
கூரிய இரும்புத் துண்டொன்று

பாய்ந்து தாங்கிக் கொண்டேன்
அவள் பாதத்தை 
பாதங்களா அவை

தாஜ்மகாலை கட்டிட ஷாஜஹான்
பளிங்குக் கற்களை தேர்ந்தெடுத்தது
உன் கால்களைக் கண்டு தானோ
பட்டுப் போன்ற உன் பாதம்
தரையில் பட்டாலும்
பட்டுபோகும் என்மனம்
காயம்பட்டிருந்தால் என்னவாகும்

அன்று தொட்ட அந்த பாதத்தை
இன்னும் சுமந்து கொண்டிருக்கிறேன்
என் மனதில்
உன்பாதம் பதிந்த என்மனது
இன்னும் ஈரம் காயாமல் அப்படியே இருக்கிறது


 




Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 227
Post by: Thalapathi on September 11, 2019, 12:41:38 PM
நானோ அவளது அழகு கால்களை தீண்ட முடியாமல் திணரூகிறேன் நீயோ ஒய்யாரமாக ஒட்டி உரவாடுகிறாய்.

அவள் பட்டுப்பாதங்கள்
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடிக்கும்
தாளம் போடுகிறது!

எல்லாக் கால்களிலும்
கொலுசுகள் கிணுகிணுக்கின்றன.
ஆனால் உன் கால் கொலுசு மட்டுமே
என்னுடன் பேசுகின்றன

நீ ஒரேவிதமாகவே
நடை பயில்கின்றாய் - ஆனால்
உன் கொலுசுகளோ ஏழு ஸ்சுரங்களையும்
எப்படி இசைக்கின்றன

நதி ஓட்டத்தில் நீரலைகளின்
சலசலப்பு !
மனத்தோட்டத்தில் நடந்து வரும் உன் கொலுசின்
ஜல் ஜல் !

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 227
Post by: JeGaTisH on September 11, 2019, 02:45:31 PM
மெல்லிய மழை சாரலில்
மலர் பாதங்கள் நனையாமல்
என் கையில் தாங்கிச்  சென்றிடவே !

ஆயுள் காலம் கூட தெரியாது
அவள் பாதம் தாங்கி
என் மனதில் ஏந்திக்கொண்டேன்  !

பூமி என்ற ஒரு பொருளை மறந்தேன்
உன்னை சுமந்து செல்லும் அந்த நொடியில் !

உன்னை என்னை பிரிக்க
காற்று சதி செய்யுமோ என
பற்றி பிடித்து  படிகள் தாண்டினேன் !
வாழ்க்கை என்னும் வாசலிலாவது
உன்னை கரைசேர்க்க !

நீ பேசிய வார்த்தைகள்
என்னுடைய வலிகளுக்கு
மருந்தாக மாறியது!

மலராக உன்னை மனதில் சூடிக்கொண்டேன்
மரணித்தாலும் மனதை விட்டு அகலாது உன் நினைவு !



SINGLE சிங்கக்குட்டி ஜெகதீஷ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 227
Post by: காதலின் காதலி on September 11, 2019, 03:50:18 PM
அழகிய பொற்கொலுசு
என் அன்பரின் சிறந்த காதல் பரிசு
வானவில் தோரணம் கட்டி வாழ்த்துமடல் தெரிவித்த 
மாலை வேளையில்
மழைநீர் பன்னீர் தெளிக்க
சந்தனமாக மன்வாசனை மணமணக்க
கார்மேகம் இடியாக  மத்தளம் கொட்ட
மயிலின் நடனக்கச்சேரி அரங்கேற
மின்னல்கள் படம் பிடிக்க
என்னவன் என் பாதம் பற்றி
கொலுசு அணிவித்த அத்தருணம் அழகு
அவ்வேளை அவன் வதனத்தில் தோன்றிய நாணம் அழகினும் அழகு
விவாகத்திற்க்கு ஒத்திகை கண்டாயோடி என்று
என் மனம் என்னை கேலி செய்ய
புதிதாய் பூற்ற ரோஜாமலராக கண்ணம் சிவந்தேன்
பகலும் இரவும் இடைவிடாது கொலுசு என்காலுரச 
அவன்பாற்கொண்ட காதல் என்   உள்ளமுரசியது
என் கால்கள் செல்லும் வழியெல்லாம் பின்தொடர்வேனென்றவன் 
நித்தமும் என்னுடனே பயணித்தான் கொலுசாக !



-காதலின் காதலி
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 227
Post by: ShaLu on September 11, 2019, 04:20:41 PM

என்னவளின் வருகையை
எதிரொலிக்கும் கொலுசே!
உன்னை போல அவளிடத்தில்
ஒட்டி உறவாட துடிக்கிறேன் .

என்ன தவம் செய்துவிட்டாய் நீ
என்னவளின் கால்களில்
எழில்மிகு அணிகலனாய் அலங்கரிக்க!!!
என்மனம் கிறங்கித்தான்போனது
என்னவளின்  கால்கொலுசில்

என்னவளின் பாதங்களை
என்கையில் ஏந்துகையில்
எண்ணிலடங்கா பரவசம் கொண்டேன்.
என்னவளின் அழகுக்கு முன்
ரம்பை என்ன ஊர்வசி என்ன
எட்டித்தான் நிற்கவேண்டும்.

எட்டி எட்டி நடக்கையில்
தட்டி தட்டி இதயத்தை எழுப்பியது
என்னவளின் கொலுசொலி.
இசைக்கலைஞர்களின் கீதத்தை விட
இனிமையானதாய் உணர்கிறேன்!

சற்றே பொறாமைகொள்ள செய்கிறது
என்னைவிட எப்பொழுதும்
என்னவளின் பாதங்களை
முத்தமிட்டுக் கொண்டிருப்பதால்..


என்னவளே ,
இனி ஒரு ஜென்மம் இருப்பின்
கொலுசாக அவதரிக்க  வேண்டுகிறேன்
உன்கால்களில் எந்நேரமும் குடியிருக்க !!!

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 227
Post by: Unique Heart on September 11, 2019, 06:08:04 PM
என் அவளின் கொலுசொலி.

உறசிச்செல்லும்,  பூங்காற்றினை உணரும் நேரமெல்லாம்,
பூக்கள் அது புத்துயிர் பெரும்.

புன்னகைக்கும்! என் இளநெஞ்சமும் ,
நாணத்துடன் சிணுங்கும்  அவளின்
கொலுசொலி கேட்டு....

அவளின் கொலுசொலிதனை  அனைவரும் 
இரைச்சலாய் என்னிய பொழுதும்,
என்னில் அதனை இசையின் இருப்பிடமாய் உணர்ந்தேன்.

இயற்கையின்  இயல்பு தனில்.

நீரோடைகளும் இசைபாடும்,
நீரோட்டங்களின் சலசலப்பின் போது.

பூங்காற்றும் புன்னகைக்கும்,
பூக்கள் அதனை உரசிச்சென்ற நொடி முதலே...


கருங்குயிலில் அது  கவிபாடும்,
கார்முகில் அதை கண்டிருப்பின்.

இயற்கையின் இன்னிசைகள், 
பலநூறு  இருப்பினும்,

என்றும் என் மனத்தோட்டத்தில்
அவளின் கொலுசொலியின் சிணுங்கல்
அதுவே என் துயிலிற்கு துணையான தாலாட்டு....

அவளுடனே பயணிக்கும் எந்தன்  சேவகி,
அவளின் பாத கொலுசு, அவளின் மௌனத்தின் போதும்
அவளிடத்திலான காதலின் கவிதை அது,
பாத கொலுசின் மெல்லிய  சிணுங்கல் .... MNA....