இசையால் வெற்றிப்பெற்ற படங்கள் எத்தனையோ இருந்தாலும், நான் எனக்கு விருப்பமான பாடலை 1982 வெளியான காதல் ஓவியம் எனும் படத்தில் இருந்து கேட்க விரும்புகிறேன்
இந்த படத்தை பொருத்தமட்டில் கதையைவிட இசையும் பாடல்களுமே அதிகமாய் ஆதிக்கம் செய்தன, இந்த படத்தின் நாயகன் இந்த படத்திற்கு பிறகு வேறு படங்களில் நடித்ததாக தெரியவில்லை, ஆனால் பாடல்கள் இன்றும் இசை நிகழ்ச்சிகளையும், ரசிக மனங்களையும் ஆண்டு கொண்டிருக்கின்றன
பாடல்கள் :
அம்மா அழகே உலகின் ஒளியே
குயிலே குயிலே உந்தன் கீதங்கள்
நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமணம்
பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் நேரமிது
என்று இப்படத்தில் மொத்துமாய் எட்டுப்பாடல்கள், ராகதேவனும், கவிப்பேரரசும் போட்டி போட்டிருப்பார்கள், வார்த்தையா லயமா, சந்தமா சுரமா என்று
தத்தி செல்லும் முத்து சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ
ராக தீப மே....
இப்படி சந்தமும் நாதமும், வார்த்தையும் தாளமும் போட்டிகள் போடும்
இந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு இளைய ராஜா, பாரதி ராஜாவை இந்த படத்தை இயக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம், கதையை மக்கள் ஏற்பார்களா ? கதாநாயகனும் புதியவன் என்று படித்தில் பல பலவீனங்கள், எனினும் பாரதி ராஜா பிடிவாதமாய் இயக்க, இளையராஜா இந்த படத்திற்கு தான் பணம் வாங்காமல் இசையமத்து தருவதாக சொல்லிவிட்டாராம், ஏனெனில் இளையராஜாவுக்கு இந்த படம் வெற்றிப்படமாக அமையும் எனும் நம்பிக்கை சுத்தமாக இல்லையாம், படம் வெற்றிப் பெற்ற பிறகும் கூட பணம் வேண்டாம் என்றே மறுத்துவிட்டாராம்
இந்த படம் தோற்றால் பெரும் இழப்பு உனக்கு உண்டாகும், அந்த இழப்பில் கொஞ்சத்தையாவது நான் கம்மி செய்ய விரும்புகிறேன் என்றே இளைய ராஜா பணம் வாங்கவில்லை, என்று பாரதி ராஜா ஒரு பேட்டியில் சொன்னார்
எனக்கு இந்த படத்தில் எல்லா பாடல் மீதும் பிரியம் என்றாலும் சங்கீத ஜாதி முல்லை பாடலை ஒலிப்பரப்பவும் என்று கேட்டுக் கொள்கிறேன்