வடமேற்கு என்பது வாயு மூலை. தென் கிழக்கு என்பது அக்னி மூலை வாயுமூலை உயர்வதால் என்னென்ன விதமான பிரச்சனைகள் தோன்றும்?
ஆண்களின் இதயத்தையும் பெண்களின் கர்ப்பப் பையையும் வாயு மூலை கட்டுப்படுத்துகிறது. இதுதவிர, இருபாலருக்கும் மனநிலை தொடர்பான எல்லா பிரச்சினைகளுக்கும் வாயுமூலையே காரணமாகிறது.
அக்னி மூலை என்பது பெரும்பாலும் பெண்களுடன் தொடர்பு உள்ளது. அக்னி மூலையில் கிணறு இருந்து, மனையும் ஆக்கினேய பகுதியிலேயே (கிழக்கு, தெற்கு ரோடுகளுடன்) அமைந்தால் பெண்களின் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் சரிபாதிக்கும் மேல் குறைந்து, ரத்தப்புற்று நோய் உண்டாகிறது.
மனையின் தென்கிழக்கில் நீரோடையோ அல்லது வற்றாத குளமோ இருப்பின், பல பெண்டிர் கைகால் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகின்றனர். சிலருக்கு முடக்குவாதம் உண்டாகி படுக்கையில் வாழ்நானள கழிக்க வேண்டிய துர்பாக்கியநிலை ஏற்படுகிறது.
தென்கிழக்கில் நீரோடையும் வடமேற்கில் கிணறும் ஒரு சேர அமைந்துவிட்டால், அது போன்ற வீடுகளில் பாதங்கள் வளைந்த பெண்குழந்தைகள் பிறக்கின்றன. தென்மேற்கை (நைருதி) விட வடமேற்கு (வாயைவியம்) உயர்ந்தால் & அந்த வீட்டில் வாழ்பவர்கள் எதையும் ஆச்சரியத்துடனும் பிரமிப்புடனும் அணுகும் மனநிலைக்கு ஆளாவார்கள்.
ஓ... அப்படியா! அய்யய்யோ! அடேங்கப்பா! என்று வார்த்தைக்கு வார்த்தை ஆச்சரியக்குறிகள் கொட்டும். ஆக்கினேயும் வம்பு வழக்கையும் வாயு வீண் செலவையும் குறிப்பதால், வடமேற்கு உயர்ந்து தென் மேற்கு தாழ்ந்து இடங்களில் எப்பொழுதும் பணப் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். பொதுவாக இதுபோன்ற அமைப்பில் உள்ள மனைகளும் வீடுகளும் தாம்பத்ய சுகத்துக்கு முட்டுக்கட்டை போடுபவை என உறுதியாக கூறலாம்.