நானும் வரலாமா?
முதலில் விவாதம் என்பது தன் கருத்தை மட்டும் சொல்வது அல்ல. எதிரான கருத்தில், அதில் உள்ள பிழைகளை விலக்கிச் சொல்வதுமே விவாதமாகும். நான் எனது கருத்தை மட்டுமே சொன்னால் அது மேடைபேச்சாகி விடும்.
அடுத்தது,இந்த தலைப்பு ஒரு மனிதனையோ அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளையோ பற்றியது அல்ல.இது ஒட்டு மொத்த மனிதர்களை பற்றியது. ஆகவே, இதில் ஒரு சிலர் கெடுவதை வைத்தோ அல்லது ஒரு சிலர் திருந்துவதை வைத்தோ நியாயத்தை கூற முடியாது. எந்த பக்கம் அதிகம் பாதிப்பு இருக்கிறதோ, அந்த பக்கம் தான் தீர்ப்பு சொல்லப்பட வேண்டும்.
இந்த தலைப்பு சினிமா இளைஞர்களை சீர்படுத்துகிறதா இல்லை
சீரழிக்கிறதா? இளைஞர்கள் சீரழிய வேறு காரணங்கள் இருக்கலாம். அதற்கும் இந்த தலைப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.சினிமா சீரழிக்கிறதா இல்லயா. அதை மட்டும் வாதிடுங்கள்.
எனது கருத்தை சொல்லுகிறேன்.சினிமாவை பார்த்து சீரழிபவர்களும் இருக்கிறார்கள் இருக்கிறார்கள். சீர்பட்டவர்களும் இருக்கிறார்கள். இதில் எது அதிகம் என்று பார்த்தால் சீர்பட்டவர்களே அதிகம். சீரழிபவர்கள் ஒரு சிலர் தான்,
சாரு சொன்னது போல நிறய நல்ல படங்கள் வரத்தான் செய்கின்றன. அனேகம் பேர் படம் பார்ப்பது பொழுது போக. அந்த 21/2 மணி நேரம் ஜாலியா படத்தை பார்த்து, விசிலடித்து விட்டு வெளியே வந்து அடுத்த நாள் அந்த படத்தை மறந்து விடுவார்கள். இது தான் இயற்கை. நான் ஒன்று கேட்கிறேன்,
இப்போ இங்கே யூசுப், ரெமோ,செல்வன், நான் தமிழன், ரோஸ், சாரு எல்லோரும் படம் பார்க்கிறவர்கள் தான். இதில் யாராவது படத்தை பார்த்து சீரழிந்தவர்கள் இருக்கிறீர்களா? இல்லை என்றே நினைக்கிறேன்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஒரு சிலர் கெடுபவர்களும் இருக்கிறார்கள். அந்த ஒரு சிலரை பற்றி நாம் விவாதிக்க வேண்டியதில்லை. எல்லா பதத்திற்கும் எதிர்பதம் உண்டு.ஆகவே நாம் ஒரு சிலரை விட்டு விட்டு பலரை பற்றி மட்டும் பேசுவோம்.
சாரு சொன்னது போல 3 idots நட்பின் அருமையை அழகாக சொன்ன ஒரு படம். இப்படி தான் நட்பு இருக்க வேண்டும் என எடுத்துக் காட்டிய படம். இப்போதும் எப்போதும் படம் பார்த்தவன் வாகனத்தை வேகமாக ஓட்ட அஞ்சுவான். தெய்வத்திருமகன் படம் பாசத்தின் பிரதிபலிப்பு.ஒரு ஆபாசமில்லலாத,மனதை நெகிழ வைத்த படம்.
செல்வன் இப்படி நல்ல படங்களை பார்ப்பதில்லை போல தெரிகிறது. இப்போது வரும் படஙளில் 10ல் 1 படம் தான் நீங்கள் கூறுவது போல ஆபாச நடனங்களும் ஆபாசக் காட்சிகளும் நிறைந்த படமாக இருக்கும். அந்தப் படங்கள் ஒரு வாரம் கூட திரையில் தங்குவதில்லை. இதில் இருந்து மோசமான படங்களை பார்ப்பதை மக்கள் விரும்பவில்லை என்று புரியவில்லயா?
மற்றது, இந்த சினிமாவால் இன்னும் பல நன்மைகள் நடக்கின்றன. படத்தில் நடிக்கும் நடிகர்களின் ரசிகர் மன்றங்களால் ரத்ததான முகாம்கள் நடத்தப்படுகின்றன. நிறைய ரசிகர்கள் ரத்ததானம் செய்கிறார்கள். இது சீரழிவா?
ரசிகர் மன்றங்களல் கிராமங்களில் சிரமதான வேலைகள் நடாத்தப்படுகின்றன.இது நல்ல விசயம் தானே.
ரெமோ, நீங்கள் சொல்வது போல கதாநாயகன் சண்டை போடுவது யாரோடு? கெட்டவர்களோடு தானே. கெட்டவர்களை எதிர்க்க வேண்டும் என்பதை தானே அது உணர்த்துகிறது.
எந்த படத்திலாவது கதாநாயகன் நல்லவர்களுடன் சண்டை போடுகிறானா?
அப்படி கதாநாயகன் கெட்டவனாக இருந்தாலும் அதுவும் மனிதருக்கு ஒரு கருத்தை சொல்லும் பாடமாகவே அமையும்.
சினிமாவால் சீரழிவதை சீர்படுவதே அதிகம். இந்த அதிகம் என்ற வார்த்தை தான் தீர்ப்பு.