FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on February 16, 2019, 02:51:56 AM
-
முரட்டுக்காதல் ஒன்றை
உள்புதைத்த சுவடுகள்
வெளித்தெரியாமல்
நடந்தலைந்ததாய் பொருமிக்கொண்டிருந்தேன்..
வேனலின் மழையாய்
தரிசனம் கொள்கையிலும்
முழுமையாய் உணர்ந்ததில்லை
என்னுள் உயிர்ப்போடிருந்த
உன் DNA கூறுகளில்
ஒட்டியே இருந்த
தேவதைத் தடயங்களை
உள் புதைந்துப் போனபின்னும்
பெருவிருட்சத்தின் சாயலோடு
தூங்கிக் கொண்டிருந்திருப்பாய்
விதையாய்..
தர்க்க நியாங்கள் பொய்த்துப்போன பொழுதொன்றில்
உன்னை எதிர்கொண்டு திரும்புகையில்
எனை உணர்கிறேன்...
உன் பெயர் காதலோ??
-
Wonderful நண்பா!!