எங்கிருந்து வந்தீயோ
என்ன வந்து சேந்த நீ
எப்படித்தான் நடந்துச்சோ
எம்மனச பரிச்சிட்ட
உங்கூட பேசத்தான்
நேரம் போதவில்லைனு
ஆயுளை கூட்டத்தான்
ஆண்டவன கேட்டேனே
அப்படி ஒரு ஆச
உன்மேல எனக்கிருக்க
எப்படித்தான் மனசு வந்து
என்ன விட்டு போனியோ
நீ போன நாள் முதலா
உறங்காம நானிருக்கேன்
மீண்டும் நீ வருவணு
உயிர் தாங்கி தானிருக்கேன்
ஒரு வேளை உம்மனசு
கொஞ்சமா மாறுச்சுன்னா
உனக்காக ஒரு ஜீவன்
கெடக்குன்னு ஓடி வா நீ..