Author Topic: சிவாஜி (பேரரசர்)  (Read 5140 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சிவாஜி (பேரரசர்)
« on: February 15, 2012, 03:03:27 PM »
சிவாஜி (பேரரசர்)



ஆட்சிக்காலம்
 
1664 - 1680
 

முடிசூட்டு விழா
 
ஜூன் 6, 1674
 

முழுப்பெயர்
 
சிவாஜி சகாஜி போசுலே
 

பட்டங்கள்
 
க்ஷத்திரீய குலாவதம்ச கோப்பிராமண பிரதிபாலக
 

பிறப்பு
 
பெப்ரவரி 19, 1627
 

பிறப்பிடம்
 
சிவநேரி கோட்டை, புணே, இந்தியா
 

இறப்பு
 
ஏப்ரல் 3, 1680 (அகவை 53)
 

இறந்த இடம்
 
ராய்காட் கோட்டை
 

பின்வந்தவர்
 
சம்பாஜி
 

மனவிகள்
 
சயீ பாய்
 சோயரா பாய்
 புத்தளி பாய்
 காசி பாய்
 சுகுணா பாய்
 காசி பாய்
 சக்கவார் பாய்
 குண்வந்தி பாய்[1][2]
 

வாரிசுகள்
 
சம்பாஜி, ராஜாராம், 6 மகள்கள்
 

தந்தை
 
சகாஜி
 

தாய்
 
ஜீஜாபாய்
 

சமய நம்பிக்கைகள்
 
இந்து


பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே (பிப்ரவரி 19, 1627 - ஏப்ரல் 3, 1680), மராட்டியப் பேரரசின் அடித்தளங்களை அமைத்து அளித்தளித்தவராவார். சாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாயின் இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார். பிஜாப்பூர் சுல்தானியம், டெக்கான் சுல்தானியர்கள் மற்றும் மொகாலியர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் இராணுவ சேவைகளை அளித்த அவர் தந்தை சாஹாஜி, ஒரு மராட்டிய தளபதியாக விளங்கியவர்.[3] ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் (இந்திய சுயாட்சி) சித்தாந்தத்திற்கு ஆதரவளித்த சிவாஜி ராஜே போஸ்லே, பிஜாப்பூர் சுல்தானியத்திற்கும், இறுதியாக வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் அன்னிய ஆட்சிக்கும் நேரடியாக சவால் விட அவர்தம் தோழர்களுடனும், வீரர்களுடனும் ஓர் இந்து கோவிலில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். சிவாஜி, அவரின் வாழ்நாளில், மேற்கத்திய இந்தியாவின் தற்போதைய மாநிலமான மஹாராஷ்டிராவில் வலிமையாக பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியைக் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார்.[4].
 
சிவாஜி மகாராஜாவின் ஹிந்தவி சுயராஜ்ஜிய சித்தாந்தமும், அதன் தொடர்ச்சியாக மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் தொடர்ச்சியான விரிவாக்கமும் தற்போதைய மகராஷ்டிர வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தால் அவர்கள் தவிர்க்கமுடியாமல் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர், இந்தியாவில் சுதந்திர பேரரசை உருவாக்கவதிலும், ஒரு வெற்றிகரமான மராட்டிய தலைமுறையை ஊக்குவித்ததிலும் ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் சித்தாந்தம் பெரும் பங்கு வகித்தது. இந்த சித்தாந்தம், இஸ்லாமிற்கு எதிராகவோ அல்லது இந்துத்துவத்தைப் பரப்புவதை நோக்கியோ திருப்பி விடப்பட்டிருக்கவில்லை.[5] ஒடுக்குமுறை ஆட்சியாளர்களால் தாக்குதல்களுக்கு உட்படாத ஓர் ஐக்கிய இந்தியா தான் சிவாஜியின் நோக்கமாக இருந்தது.
 
நன்கு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவம் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளின் உதவியுடன் பேரரசர் சிவாஜி, ஒரு பொதுவாட்சியை உருவாக்கி அமைத்தார். பெண்களை யுத்த காரணத்திற்காக பயன்படுத்துதல், மத அடையாள சின்னங்களை அழித்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய மத மாற்றம் போன்ற அப்போதிருந்த பொதுவான பழக்கங்கள் அவர் நிர்வாகத்தில் முற்றிலுமாக எதிர்க்கப்பட்டன. அவர் தம்முடைய காலத்தில் பக்தியும், பரந்த மனப்பான்மையும் கொண்ட சிறந்த அரசராக விளங்கினார். சிவாஜி மகாராஜா, அவருக்கென இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான முறைகளை வகுத்திருந்தார். மராத்தியில் கானிமி காவா என்றழைக்கப்படும், கொரில்லா உத்திகளைப் பயன்படுத்துவதில் அவர் நிபுணராக விளங்கினார். அது இறப்பு எண்ணிக்கையையும், வேக தாக்குதல், திடீர் தாக்குதல், ஒருமுகப்பட்ட தாக்குதல் போன்ற பல்வேறு காரணிகளை மையப்படுத்தி இருந்தது. அவரின் எதிரிகளை ஒப்பிடும் போது, பேரரசர் சிவாஜியிடம் மிகச் சிறிய இராணுவமே இருந்தது. ஆகவே இந்த சமமின்மையைச் சமாளிக்க உதவும் வகையில் தான், அவர் கொரில்லா யுத்தத்தை செய்ய வேண்டி இருந்தது.[6]
 
அவர் பேரரசின் பெரும்பாலான பகுதிகள் கடற்கரையாக இருந்தன, அவர் தம் தளபதி கான்ஹோஜி ஆங்ரேயின் கீழ் அதனை ஒரு வலிமையான கடற்படை கொண்டு பாதுகாத்து வந்தார். வெளிநாட்டு கடற்படை கப்பல்களை, குறிப்பாக போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிஷாரின் கப்பல்களை மடக்கி வைப்பதில் அவர் வெற்றிகரமாக இருந்தார். மிகப் பெரிய முதல் கடற்படை தளத்தை உருவாக்குவதற்கான அவரின் தொலைநோக்கு பார்வையால், அவர் "இந்திய கடற்படையின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.[7] கடற்புற மற்றும் நிலப்பகுதி கோட்டைகளை உருவாக்குவது மற்றும் பாதுகாப்பதென்பது சிவாஜி மகாராஜின் இராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. கடற்கரை மற்றும் கடல்எல்லைகள் மீதான சிவாஜியின் பாதுகாப்பு, பிரிட்டிஷ் ஆட்சியின் விரிவாக்கத்தையும், இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் அவர்களின் வர்த்தகத்தையும் தவிர்க்க முடியாமல் தாமதப்படுத்தியது.


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சிவாஜி (பேரரசர்)
« Reply #1 on: February 15, 2012, 03:05:45 PM »
ஆரம்ப வாழ்க்கை

பிறப்பு
 
சிவாஜி மகாராஜ், சஹாஜி மற்றும் ஜிஜாபாய் போஸ்லே ஆகியோரின் இளைய மகன் ஆவார். சிவாஜி மகாராஜின் பிறந்த தேதியைக் குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. ஆனால் 1627 பிப்ரவரி 19 என்று கருதப்படும் நாள் சமீபத்தில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர் பூனேவிற்கு 60 கிலோமீட்டர் வடக்கில், ஜூன்னாரில் உள்ள சிவனேரி கோட்டையில் பிறந்தார். அக்கோட்டையின் பெண்தெய்வமான ஷிவை என்பதன் நினைவாக சிவா என்று பெயரிடப்பட்டார். ஜிஜாபாயிற்கு சிவாஜி மகாராஜ் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார், அவர்களில் மூவர் மழலையிலேயே இறந்துவிட்டனர், சாம்பாஜி ஒருவர் மட்டுமே உயிரோடு இருந்தார். சிவாஜி மகாராஜ் பெரும்பாலும் அவர் அன்னையுடன் இருந்தார், சாம்பாஜி அவர் தந்தையுடன் பெங்களூரில் (தற்போது பெங்களூரூ) வசித்து வந்தார். சிவாஜி மகாராஜின் பிறந்த காலத்தில், மகாராஷ்டிராவின் அதிகாரம் பிஜாப்பூர் சுல்தானியம், அஹ்மதாபாத் சுல்தானியம் மற்றும் கொல்கொண்டா சுல்தானியம் ஆகிய மூன்று சுல்தானியங்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தது. அப்போதிருந்த பெரும்பாலான மராட்டியர்களின் படைகள், அவர்களின் உடைமைகளை இந்த சுல்தானியங்களில் ஒன்றிடம் பிணையமாக வைத்திருந்தார்கள் மற்றும் பரஸ்பர நட்பு மற்றும் பகைமைகளின் ஒரு தொடர்ச்சியான விளையாட்டிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
 
சிவாஜியின் தந்தை சஹாஜி போஸ்லே, வேரூலில் (தற்போது மகாராஷ்டிராவின் எல்லோரா) இருந்த மலோஜி போஸ்லேயின் மூத்த மகனாவார். நிஜாம்ஷாஹியில் இருந்த ஒரு சர்தாரான லக்கூஜிராவ் ஜாதவ் தம் மகளான ஜிஜாபாயின் (சிவாஜி மகாராஜின் அன்னை) திருமணத்தை அவர் மகனான சஹாஜிக்கு முடித்து வைக்க மறுத்த விவகாரத்தில், லக்கூஜிராவினால் மலோஜி போஸ்லே அவமதிக்கப்பட்டதாக புராணங்கள் உள்ளன. இது நிஜாம்ஷாஹியின் கீழ் உயர்ந்த மதிப்புகளையும், ஒரு முக்கிய பொறுப்பையும் பெற வெற்றி பெறுவதற்கு மலோஜியை இட்டு சென்றது, இது தவிர்க்க முடியாமல் அவரை மான்சாப்தார் (இராணுவ தளபதி மற்றும் ஒரு ஏகாதிபத்திய நிர்வாகி) பட்டத்தைப் பெறவும் இட்டு சென்றது. இந்த புதிய புகழ் மற்றும் அதிகாரத்தைப் பெற்றதால், ஜாதவ்ராவ் அவரின் மகளை தம் மகன் சஹாஜிக்கு திருமணம் முடிக்க அவரை மலோஜி போஸ்லேவினால் சமாதானப்படுத்த முடிந்தது.
 
சஹாஜி பல்வேறு டெக்கான் யுத்தங்களில் அவர் தந்தை வகித்த ஒரு முக்கிய பாத்திரத்தை தொடர்ந்து ஏற்று சென்றார். அவர் அஹ்மதாபாத்தில் உள்ள இளம் நிஜாம்ஷாவுடனும், 1600ன் மொகலாயர்கள் தாக்குதலின் போது அவர்கள் பெற்ற மாவட்டங்களை மீண்டும் நிஜாம்ஷாவிற்காக வென்றெடுத்த நிஜாமின் மந்திரி மலிக் அம்பருடனும் இணைந்து தம் சேவையைத் தொடங்கினார்.[9] அதிலிருந்து, லாகூஜி ஜாதவ், சஹாஜியின் மாமனார் சஹாஜியைத் தாக்கினார், அத்துடன் அவரை மஹூலி கோட்டையில், நான்கு மாத கர்ப்பிணியான ஜிஜாபாயுடன் சேர்த்து முற்றுக்கையிட்டார். நிஜாமிடமிருந்து எந்த உதவியும் வராததைத் தொடர்ந்து, சஹாஜி கோட்டையை விட்டு விட்டு, தப்பிவிட திட்டமிட்டார். அவர் தமது கட்டுப்பாட்டில் இருந்த சிவனேரி கோட்டைக்கு ஜிஜாபாயைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். அங்கு, சிவனேரியில் தான் சிவாஜி மகாராஜ் பிறந்தார். இதற்கிடையில், லாகூஜியின் கடமையில் சந்தேகப்பட்டு, லாகூஜியும், நிஜாம்ஷாவின் படைகளில் சேர வந்திருந்த அவர் மூன்று மகன்களும், அவர்தம் நீதிமன்றத்தில் கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த சஹாஜி ராஜே, நிஜாம்ஷாஹி சுல்தானியத்தில் இருந்து விலகி செல்ல முடிவெடுத்தார், மற்றும் சுதந்திர பதாகையை உயர்த்தினார். அத்துடன் ஒரு சுதந்திர பேரரசை உருவாக்கினார்.
 
இந்த பாகத்திற்கு பின்னர் அஹ்மதாபாத் மொகாலய சக்ரவர்த்தி ஷா ஜஹானிடம் வீழ்ச்சி அடைந்தது, அதன்பின்னர் குறுகிய காலத்தில் நிஜாமின் தளபதியாக இருந்த சஹாஜி மொகாலய படைகளைத் தாக்கி அந்த பகுதியின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றினார். இதற்கு பிரதிபலிப்பாக திரும்பவும் அந்த பகுதியைக் கைப்பற்ற ஒரு பெரிய படையை 1635ல் அனுப்பிய மொகாலயர்கள், மஹூலிக்குள் சஹாஜி பின்னடைய வேண்டிய நிலைக்கு கட்டாயப்படுத்தினார்கள். 1636ஆம் ஆண்டில் இந்த பகுதியை ஆள்வதற்கு அதிகாரத்தை மீட்டு கொடுத்ததற்காக மொகலாயர்களுக்கு திறை செலுத்த பிஜாப்பூரின் அடில்ஷா உடன்பட்டார். அதன்பின்னர், பிஜாப்பூரின் அடில்ஷாவால் சஹாஜி சம்பிரதாயப்படி பதவியில் அமர்த்தப்பட்டார். மேலும் ஒரு தொலைதூர ஜாகிர் நிலவுடைமைகள் (தற்போது இது பெங்களூர்), இவருக்கு அளிக்கப்பட்டன, அத்துடன் பூனேயில் இருந்த அவரின் பழைய நிலங்களையும், உடைமைகளையும் வைத்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சிவாஜி (பேரரசர்)
« Reply #2 on: February 15, 2012, 03:07:01 PM »
சாம்ராஜ்ஜியத்தின் உருவாக்கம்
 
சிவாஜி மகாராஜின் அன்னையான ஜிஜாபாய் கவனிப்பின் கீழ், பூனே உடைமைகளை நிர்வகிக்க இளம்வயது சிவாஜி மகாராஜை சஹாஜி நியமித்தார். நிர்வாகத்தில் சிவாஜி மகாராஜிற்கு உதவவும், பயிற்றுவிக்கவும் ஒரு சிறிய அமைச்சர்கள் குழுவும் நியமிக்கப்பட்டது. இந்த குழுவில் ஷாம்ராவ் நீல்கந்த் பேஷ்வாவாகவும் (பிரதம மந்திரி), பாலகிருஷ்ண பாண்ட் முஜூம்தார் ஆகவும், ரகுநாத் பல்லால் சப்னீசாகவும் , சோனோபண்ட் தாபீரா கவும், சாத்தியப்பட்ட வகையில் தாதோஜி கொண்டியோ ஆலோசகராகவும் இருந்தனர். இந்த மந்திரிகள் தவிர, இராணுவ தளபதிகள் கன்ஹோஜி ஜிட்ஹே மற்றும் பாஜி பாசல்கார் ஆகியோர் சிவாஜி மகாராஜை இராணுவ கலைகளில் பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்டார்கள்.1644ல், பூனேயில் தம் மனைவிக்காகவும், மகன் சிவாஜி மகாராஜிற்காகவும் சஹாஜி லால் மஹால் கட்டினார். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஓர் இராஜமுத்திரை, இது சஹாஜியின் மகனான சிவாஜியின் இராஜமுத்திரையாகும் என்று குறிப்பிடுகிறது. இந்த இராஜமுத்திரை மக்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது. பிறைநிலா வளர்வது போல் இருந்த இந்த முத்திரை (முத்திரையின் விதி) , சிவாஜி மகாராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு சிவாஜி மகாராஜ்ர அரசியல் செயல்திட்டத்தின் ஒரு சிறிய பேரரசின் சுதந்திரமான ஓர் இளம் இளவரசராக அவரின் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். சிவாஜி மகாராஜ், ராஜா (அரசர்) என்ற பட்டத்தையே சஹாஜியின் மரணத்திற்கு பின்னர் தான் பயன்படுத்தினார்.
 
தாய்நாட்டின் மீதும், அதன் மக்கள் மீதும் தம் பற்றை அவர் அன்னை தமது பாடங்களுடன் கூறி ஓர் அழிக்க முடியாத நம்பிக்கையை அவருக்குள் உருவாக்கினார். சிவாஜி மகாராஜ், அரசியல் சுதந்திரத்திற்கான அவர் தந்தையின் தோல்வி முயற்சிகளில் இருந்து நிறைய பாடங்களைக் கற்று கொண்டார்: அதாவது அவரின் தனித்துவமான இராணுவ திறமைகள் மற்றும் சாதனைகள், சமஸ்கிருதம், இந்து பண்பாடு, கலைச்சிறப்புகள், அவரின் யுத்த தந்திரங்கள் மற்றும் அமைதிகால இராஜாங்கம் ஆகியவற்றை கற்று கொண்டார். விடுதலை மற்றும் சுதந்திரத்திற்கான அவர் குடும்பத்தின் இலட்சியம் அவருக்கு கற்று கொடுக்கப்பட்டது, அவற்றால் ஊக்கமளிக்கப்பட்டார். மேலும், அப்பிராந்திய அரசர் நிஜாம்ஷாவினால் நடத்தப்பட்ட ஒரு துரோககரமான சதியால் அவர் அன்னை, தம் தந்தையையும், மூன்று சகோதரர்களையும் இழந்திருந்தார். அன்னிய நாட்டு ஆட்சியாளர்களாக அவர் கருதியவர்களின் உள்ளூர் மக்கள் மீதான ஏளனம் மற்றும் உணர்வுகளை மதிக்காத தன்மையால் அவர்களை அவர் வெறுத்தார். இவ்வாறு சுய-மரியாதை மீதான ஓர் இயற்கையான பற்றையும், அன்னிய அரசியல் செல்வாக்கின் மீதான வெறுப்பையும் ஜிஜாபாய் சிவாஜி மகாராஜிற்குள் ஊற்றி வளர்த்தார்.
 
சொந்த கலாச்சாரத்தின் மீதான அவரின் பற்றும், பொறுப்பும், அத்துடன் சிறந்த இந்திய புராணங்களான மகாபாரதம் மற்றும் இராமாயணத்தில் இருந்து எடுத்துக்கூறிய கதைகளும் சிவாஜி மகாராஜாவின் பண்பை வடிவமைத்தன, அவரை இணையற்றவராக (அவருக்கு விரோதமான வரலாற்றாளரான காஃபி கான் கூட இதை உறுதிப்படுத்துகிறார்) குறிப்பாக பிற மதம் மீதான அவரின் சகிப்புத்தன்மை குணம், அத்துடன் பெண்கள் மற்றும் போரில் ஈடுபடாதவர்கள் மீதான அவரின் கருணை, இரக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்க அவருக்கு உதவியது. ஷாஹாஜியின் இலக்கு , ஜிஜாபாயின் கல்வி மற்றும் ஊக்கம், தாதோஜி கொண்டதேவ் போன்ற நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களாலும், கோமாஜி நாயக் பன்சம்பால் மற்றும் பாஜி பசால்கர் போன்ற இராணுவ தளபதிகளாலும் அளிக்கப்பட்ட சிறந்த பயிற்சிகள் தான் சிவாஜி மகாராஜை ஒரு தைரியமான மற்றும் அச்சமற்ற இராணுவ தலைவராகவும், அத்துடன் ஒரு பொறுப்புள்ள நிர்வாகியாகவும் மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தன. சிவாஜி மகாராஜ் அவர் மாவல் நண்பர்களுடனும், வீரர்களுடனும் சேர்ந்து ரோஹிதேஷ்வாரா கோவிலில் சுயராஜ்ஜியத்திற்காக இரத்தத்தால் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சிவாஜி (பேரரசர்)
« Reply #3 on: February 15, 2012, 03:08:03 PM »
பிராந்திய சுல்தானியர்களுடன் மோதல்
 
1645ல், 17 வயதில், பிஜாப்பூர் பேரரசின் டோர்னா கோட்டையைத் தாக்கி கைப்பற்றியதன் மூலம் சிவாஜி மகாராஜ் அவரின் முதல் இராணுவ தாக்குதலை நடத்தினார். 1647 வாக்கில், அவர் கொண்டனா மற்றும் ராஜ்காட் கோட்டைகளை கைப்பற்றினார், அத்துடன் தெற்கு பூனே பிராந்தியத்தின் பெரும்பகுதிகளையும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். 1654 வாக்கில், சிவாஜி மகாராஜ் மேற்கத்திய தொடர்களில் இருந்த கோட்டைகளையும், அத்துடன் கொங்கன் கடற்கரையையும் கைப்பற்றினார். சிவாஜி மகாராஜின் திறமையான தலைமையின் கீழ் மராட்டியர்களின் இந்த நகர்வை நாசம் செய்வதற்கான ஒரு திட்டத்தில், அடில்ஷா அவர் தந்தை சஹாஜியைப் போலி காரணத்திற்காக கைது செய்தார், மேலும் பெங்களூரில் இருந்த சிவாஜி மகாராஜின் மூத்த சகோதரரான சம்பாஜிக்கு எதிராக (பர்ரத்கான் தலைமையில்) ஒரு இராணுவத்தையும், புரந்தரில் சிவாஜி மகாராஜிற்கு எதிராக (பட்டீகான் தலைமையில்) ஓர் இராணுவத்தையும் அனுப்பி வைத்தார். எவ்வாறிருப்பினும், இரண்டு போஸ்லே சகோதரர்களும் அந்த எல்லைமீறி நுழைந்த இராணுங்களைத் தோற்கடித்து - சிவாஜி மகாராஜ் ஷாஜஹானின் உதவியைக் கேட்டு மனு செய்ததற்கான சாத்தியக்கூறுகளும் இதில் இருக்கின்றன - அவர்களின் தந்தையை விடுவித்து காப்பாற்றினார்கள். அதன்பின்னர், பக்குவப்பட்ட ஒரு தளபதியும், காரியத்தை நிறைவேற்ற கூடிய ஒரு போர்வீரரும் ஆன அப்ஜல் கான், பிஜாப்பூரால் ஒரு பிராந்திய புரட்சியாக பார்க்கப்பட்டதை மாற்றியமைத்து சிவாஜி மகாராஜை தோற்கடிக்க அனுப்பி வைக்கப்பட்டார்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சிவாஜி (பேரரசர்)
« Reply #4 on: February 15, 2012, 03:08:57 PM »
பிரதாப்கட் போர்
 
பிஜாப்பூரை விட்டு நகர்ந்த அப்ஜல்கான், துல்ஜாபூர் மற்றும் பண்டர்பூரில் உள்ள இந்து கோயில்களை நாசப்படுத்தினார். சிவாஜி மகாராஜை உணர்வுப்பூர்வமான கொந்தளிப்பிற்கு உள்ளாக்கி, எண்ணிக்கையில் உயர்ந்த, சிறந்த ஆயுதமேந்திய மற்றும் மிக துல்லியமான பிஜாப்பூர் இராணுவத்தால் அவரின் சிறிய இராணுவ வளங்களைப் பழிக்குப்பழி வாங்கவும், அவ்வாறு அவரை வெற்றி கொள்ளவும் மற்றும் அவரிடம் அரும்பி வந்த இராணுவ அதிகாரத்தை எளிதாக அழிக்கவும் அவர் திட்டமிட்டார். எவ்வாறிருப்பினும், சிவாஜி மகாராஜ் வேறொரு யோசனைகளைக் கொண்டிருந்தார். தாம் அப்ஜல்கானை முகங்கொடுக்க விரும்பவில்லை என்றும், ஏதாவதொரு வகை புரிந்துணர்வுக்கு வர விரும்புவதாகவும் அவர் ஒரு கடிதம் அனுப்பினார். மிக கவனமாக தமது கருத்துக்களை முன்னிறுத்திய சிவாஜி மகாராஜ், இராஜாங்க பேச்சுவார்த்தைகள் என்ற புனைவில் அப்ஜல்கானை ஆச்சரியப்படுத்தவும், எதிர்கொள்ளவும் தந்திரமாக முடிவெடுத்தார். பிரதாப்கட் கோட்டையின் அடிவாரத்தில் சிவாஜி மகாராஜிற்கும், அப்ஜல்கானிற்கும் இடையிலான ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.[6] அந்த கூட்டத்தின் போது, அப்ஜல்கான் சிவாஜி மகாராஜைக் கொல்ல திட்டமிட்டிருந்தான் என்ற தகவல் அவருக்கு கிடைத்தது.
 
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பிச்சுவா (குத்துவாள்), வாஹ் நாக் (புலிநகம்) மற்றும் சில்காட் (சங்கிலி கவசம்) போன்ற ஆயுதங்களால் சிவாஜி மகாராஜ் தம்மைத்தாமே ஆயுதபாணியாக்கி கொண்டார். அந்த பேச்சுவார்த்தையின் போது என்ன சம்பவித்தது என்பது படியெழுதுபவர்களால் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் அவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெகு விரைவில், உயரமான அப்ஜல்கான் - வழக்கமாக கட்டித்தழுவலின் போது - அவரின் இடது கையால் சிவாஜி மகாராஜின் கழுத்தைப் பிடித்து இறுக்கி கொண்டு, அவரின் வலது கையால் ஒரு குத்துவாளினால் சிவாஜி மகாராஜை குத்தினார். எவ்வாறிருப்பினும், சிவாஜி மகாராஜின் கவசம் அவரை காப்பாற்றியது. பழிவாங்கும் நடவடிக்கையில், அவர் அப்ஜல்கானை ஒரு வாஹ்நாக் மற்றும் பிச்சுவாவினால் தாக்கினார், அவர் இரத்தமும், குடலும் தரையில் வந்து விழுந்தன. உடனே அப்ஜல்கானின் காவலாளி சையத் பாண்டா வாட்களுடன் சிவாஜி மகாராஜை தாக்கினான், ஆனால் சிவாஜி மகாராஜின் பிரத்யேக பாதுகாவலன் ஜீவா மஹாலா அவனை அடித்து கீழே தள்ளியதுடன், சையத் பாண்டாவின் ஒரு கரத்தை தண்டாபட்டாவினால் (படா - கோடாளி போன்ற ஆயுதம்) வெட்டி எறிந்தான். கூடாரத்தி்ல் இருந்து உதவியைப் பெற தட்டுத்தடுமாறி வெளியே வந்த அப்ஜல்கான், நிறுத்தி இருந்த சிவிகையில் ஏற முற்பட்டான், ஆனால் தப்பிப்பதற்கு, எச்சரிக்கை ஒலியை எழுப்புவதற்கும் முன்னால் சிவாஜி மகாராஜின் கூட்டாளி சம்பாஜி காவ்ஜி கொண்டல்கரால் தாக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டான்.[6]
 
1659 நவம்பர் 30ல் அடர்ந்த ஜாவ்லி காட்டில் தொடர்ந்து கொண்டிருந்த பிரதாப்கர் யுத்தத்தில், சிவாஜி மகாராஜின் இராணுவங்கள் பிஜாப்பூரின் (அப்ஜல் கானின்) படைகளை தாக்கின, அவர்களை திடீர் தாக்குதல் உத்திகளில் சிக்க வைத்திருந்தனர். அப்ஜல்கானை கொன்ற உடனேயே, சிவாஜி மகாராஜ் அவரின் தளபதிகளுடன் கோட்டையை நோக்கி இருந்த சரிவை நோக்கி விரைந்து சென்றார், அத்துடன் பீரங்கிகள் மூலம் குண்டு வீசவும் உத்தரவிட்டார். இது, உடனடியாக அப்ஜல்கானின் படைகளைத் தாக்க, அடர்த்தியாக இருந்த பள்ளத்தாக்கில் தந்திரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர் காலாட்படைகளுக்கு அளிக்கப்பட்ட ஒரு சமிக்ஞையாக ஆகும்.[6] 1,500 முஸ்கீதர்களைத் தாக்கிய கன்ஹோஜி ஜீதேவின் கீழ் இருந்த மராட்டிய துருப்புகள், அவர்களை கோட்டையின் அடிவாரத்திற்கு திருப்பி விட்டது. பின்னர் ஒரு விரைவான அணிவகுப்புடன், முஷீகான் தலைமையிலான அடில்ஷாஹி படைகளின் ஒரு பிரிவு தாக்குதலில் ஈடுபட்டது. இதில் காயப்பட்ட முஷீகான், அவரின் வீரர்கள் தங்களுக்குதாங்களே தற்சார்பாக நிற்க விட்டுவிட்டு களத்தை விட்டு வெளியேறினார். தளபதி மோரோபாண்ட் பின்கலே, அடில்ஷாஹி துருப்புகளின் கைவிடப்பட்ட பகுதியின் அந்த காலாட்படைகளுக்கு தலைமை ஏற்று நடத்தினார். படைத்தங்கும் இடத்திற்கு நெருக்கத்தில் வந்து அவர் அளித்த திடீர் தாக்குதலால், அடில்ஷாவின் இராணுவம் நிலைகுலைந்து போனது. குதிரைப்படைகள் யுத்தத்திற்கு தயாராவதற்கு முன்னதாகவே தளபதி ரகோ ஆட்ரி விரைவாக குதிரைப்படையைத் தாக்கினார், அதில் பெரும்பாலும் ஒட்டுமொத்தமும் அழிக்கப்பட்டது. வேயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அடில்ஷாஹி படைகளுன் இணைய முயற்சித்த அடில்ஷாஹி படைகளைப் பின்வாங்கச் செய்யும் ஓர் உச்சக்கட்ட முயற்சியில் நேதாஜி பால்கர் தலைமையிலான குதிரைப்படை வேய் நோக்கி விரைந்து சென்றது. யுத்தத்தில் ஈடுபட்டிருந்த அப்ஜல்கானின் பின்வாங்கிய படைகள் திருப்பி விடப்பட்டன.[6]
 
இந்த வெற்றி சிவாஜி மகாராஜை மராட்டிய நாட்டுபுறத்தில் ஒரு கதாநாயகனாகவும், அவர் மக்கள் மத்தியில் ஒரு சரித்திர பிரபலமாகவும் மாற்றியது. பெரும் எண்ணிக்கையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், குதிரைகள், கவசங்கள் மற்றும் பிற பொருட்கள் ஆரம்பகட்டத்தில் வளர்ந்து கொண்டிருந்த மராட்டிய இராணுவத்தை வலிமைப்படுத்த உதவியாக இருந்தது. மொகலாய சாம்ராஜ்ஜிய அவுரங்காசீப், சிவாஜி மகாராஜை அவரின் வலிமை வாய்ந்த மொகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கண்டார். அதன்பின்னர் விரைவிலேயே, சிவாஜி மகாராஜ், சஹாஜி மற்றும்உ நேதாஜி பால்கர் (மராட்டிய குதிரைப்படையின் தலைவர்) ஆகியோரால் பிஜாப்பூரின் அடில்ஷாஹி பேரரசைத் தாக்கி தோற்கடிக்க வேண்டுமென்று ஒரு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், சஹாஜியின் உடல்நிலை மோசமடைந்ததால் திட்டமிட்டப்படி செயல்கள் நடைபெறவில்லை, ஆகவே அவர்கள் தங்களின் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். எவ்வாறிருப்பினும், நேதாஜி பால்கர், அடில்ஷா பேரரசிற்கு தொல்லை அளிக்கும் சிறியளவிலான தாக்குதல்களுடனும் இந்த திட்டத்தை கையில் எடுத்தார்.
 
அதே வேளையில், சிவாஜி மகாராஜ் அவரின் இராணுவத்தை கணிசமாக விஸ்தரிப்பதற்கு முன்னதாக அவரை தோற்கடிக்கவும், பின்னிருத்தவும் ஆப்கானிய சிப்பாய்களை முதன்மையாக கொண்ட ஒரு மேற்தட்டு புஷ்தான் இராணுவத்தை பிஜாப்பூர் சுல்தான் அனுப்பினார். அதன் விளைவாக ஏற்பட்ட யுத்தத்தில், பிஜாப்பூர் புஷ்தானின் இராணுவம் மராட்டிய துருப்புகளால் நசுக்கப்பட்டது. இந்த தீவிர, இரத்தந்தோய்ந்த யுத்தம், பிஜாப்பூர் படைகள் சிவாஜி மகாராஜிற்கு நிபந்தனையற்ற முறையில் சரணடைந்தவுடன் முடிவுக்கு வந்தது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சிவாஜி (பேரரசர்)
« Reply #5 on: February 15, 2012, 03:10:18 PM »
கோல்ஹாபூர் போர்
 
பிரதாப்கட் இழப்பை ஈடுகட்டவும், புதிதாக உருவாகி வரும் மராட்டிய சக்தியை தோற்கடிக்கவும், இந்த முறை 10,000த்திற்கும் மேலான எண்ணிக்கை கொண்ட மற்றொரு இராணுவம், பிஜாப்பூரின் புதிய அபிசீனியன் ஜெனரல் ருஸ்தாம்ஜமான் தலைமையில் சிவாஜி மகாராஜிற்கு எதிராக அனுப்பி வைக்கப்பட்டது. 5000 மராட்டிய குதிரைப்படைகளுடன், 1659 டிசம்பர் 28ஆம் தேதி கோல்ஹாபூரில் சிவாஜி மகாராஜ் அவர்களைத் தாக்கினார்.
 
ஒரு விரைவான போராட்டத்தில், சிவாஜி மகாராஜ் தலைமையில் எதிரி படைகளின் மத்தியில் ஒரு முழு முன்னணி தாக்குதல் நடத்தப்பட்டது, அதேவேளை அவரின் குதிரைப்படைகளின் மற்ற இரண்டு பிரிவுகள் பக்கவாட்டில் இருந்து தாக்கின. பல மணி நேரம் தொடர்ந்த இந்த யுத்தத்தின் இறுதியில் பிஜாப்பூர் படைகள் கடுமையான தோல்வியைத் தழுவின, ருஸ்தாம்ஜமான் இழிவான வகையில் யுத்தக்களத்தை விட்டு ஓடிவிட்டார்.[6] அடில்ஷாஹி படைகள் சுமார் 2000 குதிரைகளையும், 12 யானைகளையும் மராட்டியர்களிடம் இழந்தார்கள். இந்த வெற்றி, அப்போது சிவாஜி மகாராஜை ஏளனம் செய்யும் வகையில் "மலைவாழ் எலி" என்று குறிப்பிட்டு வந்த வலிமையான மொகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு எச்சரிக்கை மணி அடித்தது. முக்கியமான மராட்டிய அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வர, மொகலாய சக்ரவர்த்தி அவுரங்காசீப் அப்போது முழு பலத்தையும், மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் வளங்களையும் ஒட்டுமொத்தமாக கொண்டு வர தயாராகி கொண்டிருந்தார்.
 
1660 ஜனவரியில் பிஜாப்பூரின் படி பேகமின் வேண்டுகோளின் பேரில், சிவாஜி மகாராஜை தோற்கடிக்க 10,000த்திற்கும் மேற்பட்ட இராணுவ எண்ணிக்கையுடனும், சக்திவாய்ந்த ஆயுதங்களுடனும் அவுரங்காசீப் அவரின் தாய்வழி மாமாவான சாய்ஸ்தா கானை அனுப்பினார். துர்க்தாஜ், ஹூசைன், ஹைதர், நாம்தார் கான், கர்தாலப் கான், உஜ்பெக் கான், பதெக் ஜங்க் மற்றும் பானு சிங், சியாம் சிங், ராய் சிங், சிசோதியா, பிரத்யூமன் போன்ற ராஜபுத்திரர்களுடன் மேலும் பலரையும் சேர்த்து கொண்டிருந்த திறமையான தளபதிகளைக் கான் கொண்டிருந்தார்.அனுபவம் வாய்ந்த தளபதியான கான், 1636ல் அதே பிராந்தியத்தில் சஹாஜியை தோற்கடித்திருந்தார்.சிட்தி ஜௌஹரின் தலைமையிலான பிஜாப்பூர் இராணுவத்துடன் இணைந்து மராட்டிய பேரரசை எதிர்க்க அவர் உத்திரவிடப்பட்டிருந்தார். ஜௌஹரால் சிவாஜி தோற்றகடிக்கப்பட்ட பின்னர், மராட்டிய பேரரசை கைப்பற்ற (அதன் மூலம் அடில்ஷாவை ஏமாற்ற) சாய்ஸ்தா கானுக்கு அவுரங்காசீப் உத்தரவிட்டிருந்தார். சிவாஜி தற்போது மொகலாயர்கள் மற்றும் அடில்ஷா படைகள் ஆகிய இரண்டின் தாக்குதலையும் முகங்கொடுக்க தயாரானார்

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சிவாஜி (பேரரசர்)
« Reply #6 on: February 15, 2012, 03:12:40 PM »


வி. துரந்தர் வரைந்த சிவாஜி ஓவியம்


1660ல், சிவாஜி மகாராஜை தோற்கடிக்க ஒரு தலைச்சிறந்த ஜெனரலான சிட்தி ஜௌஹரை அடில்ஷா அனுப்பினார். மஹாராஷ்டிராவின் கோலாப்பூருக்கு வடக்கே சிவாஜி மகாராஜை எதிர்கொண்டு, அனைவருக்குமாக தோற்கடிக்க 40,000 பேர் கொண்ட அவர் இராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டார். பாலாவானியின் ஜஸ்வந்த்ராவ் தால்வி மற்றும் ஸ்ரிங்கர்பூரின் சூர்யாராவ் சர்வே ஆகியோர் சிவாஜி மகாராஜை தோற்கடிக்க சிட்தி ஜௌஹருக்கு உதவினார்கள்.அந்த நேரத்தில், சிவாஜி மகாராஜ் அவரின் 8,000 மராட்டிய படைவீரர்களுடன், அவரின் அதிகாரத்தி்ற்குட்பட்ட எல்லையின் தெற்கில் இருந்த, தற்போதைய கோலாப்பூருக்கு அருகில் உள்ள பன்ஹாலா கோட்டையில் முகாமிட்டிருந்தார். சிட்தி ஜௌஹரின் இராணுவம் 1660 மார்ச் 2ஆம் தேதி, பன்ஹாலாவின் அனைத்து வினியோக வழிகளையும் அடைத்து விட்டு கோட்டையை முற்றுகையிட்டது. பாஜி கோர்பேட் மற்றும் சிட்தி மாசூத்தினால் மேற்கிலும், சதக் கான் மற்றும் பாய்கானினால் வடக்கிலும், ரஸ்லாம் ஜமாம் மற்றும் பேட்கானினால் கிழக்கிலும், சிட்தி ஜௌஹர் மற்றும் பஜல் கானினால் தெற்கிலும் அந்த கோட்டை முற்றுகை இடப்பட்டிருந்தது. மராட்டிய படையின் கமாண்டர்-இன்-சீஃப் நேதாஜி பால்கர், அடில்ஷாஹி மாகாணத்தை தாக்குவதற்கும், நசுக்குவதற்கும் பன்ஹாலாவில் இருந்து தொலைவில் இருந்தார் என்பதால் சிவாஜி மகாராஜின் உதவிக்கு அவரால் வர முடியவில்லை. அந்த நேரத்தில், சாய்ஸ்தா கான் பாராமதியில் இருந்து சிர்வாலாவிற்கு நகர்ந்தார்.
 
பன்ஹாலா மிகவும் வலிமைமிக்க கோட்டையாகும். அடில்ஷா இராணுவம் தொடர்ச்சியாக பீரங்கி குண்டு வீச்சுகள் மற்றும் வலிமையான பாறை-மோதல்களுடன் போராடி வந்தது.இவ்வாறு, சிட்தி ஜௌஹர் ராஜ்பூர் துறைமுகத்தில் இருந்த பிரிட்டிஷ் தலைவர் ஹென்ரி ரிவிங்டன்னிடம் தொலைதூர மற்றும் நவீன பீரங்கிகளை கேட்டார். எதிர்கால உதவிகளின் நிபந்தனைகளுடன் ஹென்ரி அவருக்கு உதவ முன்வந்தார், பன்ஹாலா கோட்டை உடையத் தொடங்கியது. இதற்கிடையில், இந்த மராட்டியர்கள் பன்ஹாலாவைக் காப்பாற்றுவதற்கான முயற்சியைத் தொடர்ந்தார்கள். அத்துடன் சிட்தி ஜௌஹரை வளைகுடாவில் நிறுத்தி வைப்பதற்கான முயற்சியையும் தொடர்ந்தார்கள். மராட்டியர்கள் சிலமுறை அடில்ஷாவின் முகாம்களை தாக்கினார்கள், ஆனால் அதல் பெரும் வெற்றி பெற முடியவில்லை. எவ்வாறிருப்பினும், இதுபோன்ற ஒரு தாக்குதலில், டிரையம்பாக் பாஸ்கர் மற்றும் கொண்டாஜி பார்ஜண்ட் இருவரும் முறையே தங்களைத்தாங்களே பிரிட்டிஷ் அதிகாரி போன்றும், அடில்ஷாவின் ஒரு வீரரைப் போலவும் மாறுவேடமிட்டார்கள். அவர்கள் அடில்ஷாவின் முகாமிற்குள் வந்து ஹென்றி ரெவிங்டன் மற்றும் அவர் கூட்டாளிகளைச் சந்தித்தார்கள். அவர்கள் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை கொன்றதுடன், ஹென்றியையும் காயப்படுத்தினார்கள். அதன்பின்னர், பீரங்கிகளை அழித்ததுடன், அவர்களை அவர்களே பயனற்றவர்களாகவும் ஆக்கி கொண்டார்கள். இதனால் ஜௌஹர் லிவிட் முற்றுகையை மேலும் இறுக்கினார்.[13] பன்ஹாலாவைச் சுற்றியுள்ள முற்றுகை தளர்ந்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய, ஜௌஹர் ஒரு கல் கூட நகரவிடவில்லை. ஜௌஹர் தனிப்பட்ட முறையில் மிகவும் கவனமாக இருந்தார், அவர் இராணுவத்தில் இருந்த ஒருவர் கூட அகமகிழ்வுடன் இல்லை.ஆரவாரமான மழையையும் எதிர்கொள்ள ஏற்பாடுகள் செய்த அவர், கடுமையான மழையிலும் கூட முற்றுகையைத் தொடர்ந்தார்.பன்ஹாலாவின் கடுமையான முற்றுகையை பற்றி அறிந்த நேதாஜி பால்கர் பிஜாப்பூரில் இருந்து திரும்பி பன்ஹாலாவைச் சுற்றி இருந்த அடில்ஷாவின் படைகளைத் தாக்கினார். முற்றுகையை உடைக்க அவர் முயன்றார், ஆனால் சிறியளவிலான மராட்டிய படை, பெரிய எண்ணிக்கையிலான அடில்ஷாஹி இராணுவத்தால் பின்னுக்கு தள்ளப்பட்டது.
 
அது முதல், சிவாஜி மகாராஜ், அருகில் இருந்த விஷால்கட் கோட்டைக்கு தப்பிவிடவும், அங்கு அவரின் வீரர்களை மீண்டும் ஒன்று திரட்டி, சிட்தி ஜௌஹர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த தீர்மானித்தார். சிவாஜி மகாராஜ் தாம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், தங்குமிடம், புரிந்துணர்வு மற்றும் கருணையை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டு சிட்தி ஜௌஹருக்கு திசைதிருப்பும் செய்திகளை அனுப்பினார். அதற்கிடையில், பிஜாப்பூரைத் தாக்க சிவாஜி வலிமையான சிட்தி ஜௌஹருக்கு பணம் மற்றும் ஆட்களை அளித்து உதவுகிறார் என்ற வதந்திகளையும் சிவாஜி பரவவிட்டார். இந்த செய்தியால், அடில்ஷா வீரர்கள் சற்று தளர்ந்தார்கள், சிவாஜி மகாராஜ் 1660 ஜூலை 12ஆம் தேதி இரவு 10 மணிக்கு ஒரு பயங்கர இரவில் தப்பித்தார். சிவாஜி மகாராஜை தப்புவிக்க எதிரிகளைத் திசைதிருப்புவதற்காக சிவாஜி மகாராஜ் போன்ற தோற்றமுடைய சிவகாஷித்தை அவர் போன்றே உடையணிவித்து வெளியில் அணுப்பினார், ஜௌஹரின் வீரர்கள் போலியான சிவாஜி மகாராஜ் உட்பட மராட்டியர்களின் ஒரு சிறு குழுவை பிடித்தார்கள். பிடிக்கப்பட்டவர் சிவாஜி மகாராஜைப் போன்றே தோற்றமுடையவர் என்பதையும், சிவாஜி மகாராஜூம் அவர் இராணுவமும் விஷால்கட்டிற்கு சென்று விட்டார்கள் என்பதையும் ஜௌஹரின் வீரர்கள் பின்னர் புரிந்து கொண்டார்கள்

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சிவாஜி (பேரரசர்)
« Reply #7 on: February 15, 2012, 03:14:39 PM »
பவன்கிண்ட் யுத்தம்
 
எதிரிகளின் குதிரைப்படை விரைவாக தங்களை நெருங்கி வருவதை உணர்ந்த சிவாஜி மகாராஜ் தோல்வியையும், பிடிபடுவதையும் தவிர்க்க விரும்பினார். ஒரு மராட்டிய சர்தாரான பாஜி பிரபு தேஷ்பாண்டே, அவரின் 300 வீரர்களுடன் எதிரிகளை கோட்கிண்டில் (விஷால்கண்டில் இருந்து 4 மைல்கள் தூரத்தில் இருந்த காஜாபூருக்கு அருகில் இருந்த ஒரு மலைப்பாதை) நிறுத்தி வைக்க இறக்கும் வரை போராட தாமாக முன்வந்தார், இதன் மூலம் சிவாஜி மகாராஜூம், அவரின் எஞ்சிய இராணுவமும் விஷால்கட்டிற்கு பாதுகாப்பாக சென்றடைய ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
 

பவன்கிண்ட் யுத்தத்தைத் தொடர்ந்து, பாஜி பிரபு தேஷ்பாண்டே கடுமையாக போராடினார். முற்றிலுமாக மிக கடுமையாக அவர் காயப்பட்டிருந்த போதினும், சிவாஜி மகாராஜ் பாதுகாப்பாக கோட்டையைச் சென்றடைந்து விட்டார் என்பதற்கு அறிகுறியாக விஷால்கட்டில் இருந்து பீரங்கி முழக்கம் கேட்கும் வரை அவர் தொடர்ந்து போராட்டத்தைத் தக்க வைத்திருந்தார். இதன் விளைவு இந்த கொடூரமான யுத்தத்தில் 300 மராட்டியர்களின் மரணம் மற்றும் அடில்ஷா துருப்புகளில் 1286 வீரர்களின் மரணம். சிவாஜி 1660 ஜூலை 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு அக்கோட்டையைச் சென்றடைந்தார். அதன்பின்னர் சிவாஜி மகாராஜாவின் பேரரசை சுதந்திர நாடாக உத்தியோகப்பூர்வமாக அங்கீகரித்தும், உறுதியளித்தும் சிவாஜி மகாராஜிற்கும், அடில்ஷாவிற்கும் இடையில் சஹாஜியின் மூலம் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும், அமைதி பேச்சுவார்த்தையின் அடிப்படையில், பன்ஹாலா கோட்டை சிட்தி ஜௌஹருக்கு அளிக்கப்பட்டது.
 
பாஜி பிரபு தேஷ்பாண்டே, ஷிபோசிங் ஜாதவ், புலோஜி, பண்டால் சமூக மக்கள் (அந்த பிராந்தியம் பற்றிய அறிவு, மலையேற்ற திறன், இராணுவ பண்புகள் ஆகிய காரணங்களை மனதில் கொண்டு பன்ஹாலாவில் இருந்து தப்பிக்கும் போது குறிப்பாக பண்டால் சமூகத்தின் மக்கள் சிவாஜியால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்) மற்றும் கோட்கண்டில் போராடிய பிற வீரர்களை கௌரவிக்கும் வகையில் கோட்கிண்ட் (கிண்ட்=ஒரு குறுகலான மலைப்பாதை), பவன்கிண்ட் (புனித பாதை) என்று பெயர் மாற்றப்பட்டது.பாஜி பிரபு மற்றும் அவர் உடனிருந்தவர்களின் துணிவிற்கு மதிப்பளிக்கும் வகையில் இன்றும் கூட ஒரு சிறிய நினைவுச்சின்னம் அங்கு நிற்கிறது. இந்நிலை சஹாஜியின் மரணம் வரை நீடித்தது. அதன்பின்னர் டெக்கானில் மராட்டியர்கள் ஓர் உத்தியோகப்பூர்வ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சக்தியாக இருந்தார்கள். சிட்தி ஜௌஹரின் துரோகத்தைச் சந்தேகித்து, அடில்ஷாவால் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டார்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சிவாஜி (பேரரசர்)
« Reply #8 on: February 15, 2012, 03:15:55 PM »
பிரிட்டிஷ் மீதான தாக்குதல், ராஜா ஜஸ்வந்த்ராவ் மற்றும் ராஜா சூர்யாராவ்
 
சிவாஜி தற்போது ரத்னகிரி கடற்கரை பகுதியில் உள்ள ராஜாபூர் கோட்டையில் இருந்த பிரிட்டிஷாரின் பக்கம் அவரின் கவனத்தைத் திருப்பினார்.பிரதாப்கட் யுத்தத்திற்கு முன்னர், ஹென்ரி உட்பட பல பிரிட்டிஷ் அதிகாரிகளை மராட்டியர்கள் கைது செய்தனர், ஆனால் அவர்களை வெளியில் செல்ல அனுமதித்து விட்டனர்.[13] யுத்தத்திற்கு முன்னர், அப்ஜல்கான் அவர்களுக்கு அவர் கப்பல்களை அளித்திருந்தார், யுத்தத்திற்கு பின்னர் அவற்றை மராட்டியர்களிடம் திருப்பி அளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். இவ்வாறு அவர்கள் மராட்டியர்களால் கைது செய்யப்பட்டனர், எவ்வாறிருப்பினும் ஹென்ரி மற்றும் அவர் சக பிரிட்டிஷார் சிவாஜி மகாராஜின் பாதையில் ஒருபோதும் குறிக்கிட மாட்டோம் என்று உறுதி அளித்ததுடன், நேச உடன்படிக்கை ஒன்றையும் செய்து கொண்டதால் சிவாஜி மகாராஜ் அவர்களை மீண்டும் விட்டு வி்ட்டார். சிவாஜியால் இரண்டு முறை மரணதண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட போதினும், ஹென்ரி ரேவிங்டன் அவரின் வார்த்தைகளைக் காப்பாற்றவில்லை என்பதுடன் மராட்டியர்களுக்கு எதிராகவும் சவால் விடுத்தார். சிட்தி ஜௌஹருக்கு அவரின் பன்ஹாலா முற்றுகையின் போது, ஹென்ரி அவருக்கு நவீன ஆயுதங்களை அளித்ததோடு மட்டுமின்றி, பீரங்கிகளை இயக்க ஆட்களையும் (ஆயுத கண்காணிப்பாளர், இதர பிறரையும்) அளித்தார். அதிலிருந்து, இந்த அன்னிய நாட்டவர்கள் தங்களை வெறுமனே வர்த்தகர்களாக காட்டிக் கொள்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்களின் சொந்த ஆட்சியை அமைக்கவும், விரிவாக்கவும் அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்ற தீர்மானத்திற்கு சிவாஜி மகாராஜ் வந்தார்.
 
இவ்வாறு, வர்த்தகம் என்ற பெயரில் அப்போதைய காலத்தில் பிரிட்டிஷார் கொண்டிருந்த சில பாதுகாப்பான துறைமுகங்களில் ஒன்றான ராஜாப்பூர் துறைமுகத்தை சிவாஜி தாக்க தீர்மானித்தார். சிவாஜி தாமே ராஜாப்பூர் துறைமுகத்திற்கு அணிவகுத்து சென்றார். ஜௌஹருக்கு உதவியது தங்களின் தவறு தான் ஒத்துகொண்டதுடன், இதுபோன்று மீண்டும் நடக்காது என்றும் கூறி சிவாஜியை சமாதானப்படுத்த பிரிட்டிஷார் முயற்சித்தார்கள். தற்போது பிரிட்டிஷாரை நம்ப தயாராக இல்லாத சிவாஜி, ராஜாப்பூர் துறைமுகத்தில் இருந்து அனைத்து பிரிட்டிஷாரையும் துல்லியமாக கைது செய்தார்கள், அத்துடன் அவர்களின் வக்கார் - அதாவது வர்த்தக உடமைகளையும் கைப்பற்றினார்கள்.
 
சிட்தி ஜௌஹர் கட்டளையின்படி விஷால்கட்டை முற்றுகையிட்டவர்களும், சிவாஜிக்கு எதிராக இருந்தவர்களுமான ஜஸ்வந்த்ராவ் தால்வி (பால்வன் மகாராஜா) மற்றும் சூர்யராவ் சுர்வே (சிங்கர்பூரின் மகாராஜா) இருவருக்கும் சிவாஜி தற்போது பாடங்கற்பிக்க விரும்பினார். பால்வனை நோக்கி சிவாஜி அணிவகுத்து சென்றவுடன், அச்சப்பட்ட ஜஸ்வந்த்ராவ் தப்பி ஓடி, சூர்யராவின் சிங்கர்பூரில் அகதியாக தஞ்சமடைந்தார். பின்னர் சூர்யராவுடன் நட்புக்கரம் நீட்டிய சிவாஜி, அன்னிய சக்திகளுக்கு எதிராக போராட அவர்கள் ஒன்றுபட வேண்டியதன் தேவையை அவர்களுக்கு புரிய வைக்க அவர் முயற்சித்தார்.சிவாஜியின் கருத்தை ஒத்துக்கொண்ட சூர்யராவ், சிவாஜி இல்லாத போதும் சிங்கர்பூரில் நிறுத்தப்பட்ட அவரின் இராணுவத்தை முழுமையாக கவனித்து கொள்வதாகவும் உறுதியளித்தார். எவ்வாறிருப்பினும், துரோக நாடகம் நடத்திய சூர்யராவ் ஆயத்தமாக இல்லாத மராட்டிய இராணுவத்தை தாக்கினார். தானாஜி மலூசரேயின் தலைமையிலான மராட்டிய இராணுவம், சூர்யராவின் ஆட்களுக்கு எதிராக போராடியது, அவர்களை பின்னுக்கு தள்ளியது. சூர்யராவின் துரோகத்தால் ஆத்திரமடைந்த சிவாஜி, திரும்பி வந்து சிங்கர்பூரைத் தாக்கினார். எவ்வாறிருப்பினும், சூர்யராவ் தப்பியோடினார் மற்றும் சிங்கர்பூர் சிவாஜியால் கைப்பற்றப்பட்டது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சிவாஜி (பேரரசர்)
« Reply #9 on: February 15, 2012, 03:17:28 PM »
மொகலாயர்களுடன் மோதல்

கொங்கன் வெற்றி
 
1661, பி்ப்ரவரி 3ல் கொங்கன் பகுதியில் சிவாஜி மகாராஜாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கோட்டைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், அவர் மீது தாக்குதல் தொடுக்கவும் ஓர் உஸ்பெக் தளபதியான கர்தாலாப் கானை சாய்ஸ்தா கான் அனுப்பி வைத்தான். அவர் 30,000 துருப்புகளுடன் பூனேவிற்கு அருகில் இருந்த அவர் முகாமை விட்டு புறப்பட்டார். இந்த முறை மொகாலயர்கள் வெளிப்படையாக அணிவகுத்து வரவில்லை, சிவாஜி மகாராஜை அதிர்ச்சிக்குள்ளாக்க அவர்கள் நாட்டின் சுற்றுப்பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், மாறாக, 'அம்பர் கிண்ட்' (இன்றைய பென் அருகில் உள்ள ஓர் அடர்த்தியான காடு) என்ற பாதையில் சிவாஜி மகாராஜ் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார், அத்துடன் அவர்களை அனைத்து திசைகளில் இருந்தும் தாக்கினார். அந்த அடர்த்தியான காட்டில் மறைந்திருந்த மராட்டியர்கள், ஒரு நன்கு ஒருங்கிணைந்த தாக்குதலை மொகலாயார்கள் மீது நடத்தினார்கள்.[13] சிவாஜி மகாராஜ் தாமே ஒரு மேற்தட்டு குதிரைப்படை பிரிவுடன் முன்னனியில் இருந்தார். மற்ற மூன்று பக்கங்களும் சிவாஜி மகாராஜின் மிதமான காலாட்படைகளால் பக்கவாட்டில் இருந்து தாக்குதலைத் தொடுத்தன.
 
மிதமான காலாட்படை மற்றும் குதிரைப்படையின் ஒரு நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தில், சிவாஜி மகாராஜ் அவர்களை வெற்றி கொண்டார். மொகலாய படைகளுக்கு துணை-தலைமை வகித்து வந்த ஒரு மராட்டிய பெண்மணியான தளபதி ராய்பகான் சூழ்நிலையை ஆராய்ந்தார், தோல்வி தவிர்க்க முடியாதது இருப்பதை உணர்ந்த அவர், தோல்வியை ஒப்புக்கொண்டு, சிவாஜி மகாராஜூடன் சமாதானத்தை ஏற்படுத்தி கொள்ளுமாறு கர்தாலாப்கானுக்கு ஆலோசனை வழங்கினார்.[6][13] நான்கு மணிநேர தாக்குதல்களுக்கு உள்ளாகவே எதிரிகள் தோல்வியை ஒப்புக்கொண்டனர். அவர்கள் தங்களின் அனைத்து ஆயுதங்களையும், பொருட்களையும் மற்றும் உடைமைகளையும் ஒப்படைத்தார்கள். மொகலாய இராணுவம் பெரியளவில் காயப்பட்டிருந்தது. தோல்வியடைந்த இராணுவம் பாதுகாப்பாக செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் நிராயுதபாணியான பொதுமக்கள் மீதான சிவாஜி மகாராஜின் நீண்டகால கொள்கையின் அடிப்படையில் கர்தாலாப்கான் மற்றும் ராய்பகான் இருவரும் மரியாதையுடன் விடுவிக்கப்பட்டனர்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சிவாஜி (பேரரசர்)
« Reply #10 on: February 15, 2012, 03:19:36 PM »
சாய்ஸ்தா கான்
 
இதற்கிடையில், சாய்ஸ்தாகான் அவரின் சிறந்த மற்றும் மீதமிருந்த 100,000 இராணுவத்துடன் பூனேவையும், அதன் அருகில் இருந்த சகான் கோட்டையையும் முற்றுகையிட்டார்.
 
அந்த சமயத்தில், 300-350 மராட்டிய வீரர்களால் பாதுகாக்கப்பட்ட சகான் கோட்டையின் கில்லேடராக (தளபதியாக) பிரான்கோஜி நர்சாலா இருந்தார். மொகலாயர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து அவர்களால் ஒன்றரை மாதம் மட்டும் தாக்கு பிடிக்க முடிந்தது. பின்னர், பரூஜ் (வெளிப்புற சுவர்) வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டது. இது கோட்டைக்குள் மொகலாயர்கள் நுழைய அனுமதிக்கும் வகையில் ஒரு வழியை ஏற்படுத்தி கொடுத்தது.எண்ணிக்கையில் அதிகமாக இருந்த மொகலாய இராணுவத்திற்கு எதிராக பிரான்கோஜி தாமே மராட்டியர்களை முன்னின்று வழிநடத்தினார்.தவிர்க்க முடியாமல், கோட்டையின் இழப்புடன்,பிரான்கோஜியும் கைது செய்யப்பட்டார். பிரான்கோஜியின் வீரத்தை பாராட்டிய சாய்ஸ்தா கானின் முன்னால் அவர் கொண்டு வரப்பட்டார், மொகலாய படையில் அவர் சேர்ந்தால் அவருக்கு ஜஹாகிர் (இராணுவ கமிஷன்) அளிக்கப்படும் என்ற நிபந்தனை வழங்கப்பட்டது, ஆனால் அதை பிரான்கோஜி நிராகரித்தார். அவரின் இராஜ விசுவாசத்தைக் கண்டு ஆச்சரியமடைந்த சாய்ஸ்தா கான் பிரான்கோஜியை மன்னித்து விடுவித்தார். சிவாஜியிடம் திரும்பி வந்த பிரான்கோஜிக்கு, அவர் புபல்கட் என்ற கோட்டையை விருதாக வழங்கினார்.
 
சாய்ஸ்தா கான் அவரின் பெரிய, நன்கு வசதிகளைப் பெற்றிருந்த மற்றும் கடுமையான ஆயுதமேந்திய இராணுவத்துவத்துடன் சில மராட்டிய மாகாணங்களின் சாலைகளில் காலடி பதித்தார். சிவாஜியை அடிபணியச் செய்ய முடியாத சாய்ஸ்தாவின் தோல்வியால் வெறுப்படைந்திருந்த அவுரங்காசீப்பை சமாதானப்படுத்த, அவர் பரிந்தா என்ற அடில்ஷாஹியின் கோட்டையையும் கூட கைப்பற்றினார். இருப்பினும், அவர் பூனேயை ஓர் ஆண்டிற்கும் மேலாக அவரின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார், அதன் பின்னரும் அவருக்கு சில வெற்றிகள் கிடைத்தன. அவர் பூனேயில் சிவாஜியின் அரண்மனையான லால் மஹாலை அவர் இருப்பிடமாக கொண்டிருந்தார்.[6] சாய்ஸ்தாவினால் சிவாஜியை அடிபணிய வைக்க முடியாததைப் பார்த்த அவுரங்கசீப், சாய்ஸ்தாகானுக்கு உதவ மகாராஜா ஜஸ்வந்த் சிங்கை (இவர் அவுரங்காசீப் டெல்லியின் சிம்மாசனத்தில் ஏற முயன்ற போது, முன்னதாக ஷா ஜஹான் கட்டளையின் கீழ் தாபி ஆற்றங்கரையில் அவுரங்காசீப்பை நிறுத்தி ஒரு இராஜபுத்திரர் ஆவார்) அனுப்பினார்.
 
சாய்ஸ்தாகான் பூனேயில் கடுமையான காவலை ஏற்படுத்தி வைத்திருந்தார். எவ்வாறிருப்பினும், இந்த கடுமையான காவலுக்கு இடையிலும் சாய்ஸ்தா கான் மீதான ஒரு தாக்குதலுக்கு சிவாஜி மகாராஜ் திட்டமிட்டார். 1663 ஏப்ரலில், ஒரு திருமண விழா ஓர் ஊர்வலத்திற்கான சிறப்பு அனுமதியைப் பெற்றிருந்தது; அந்த திருமண விழாவை பயன்படுத்தி ஒரு தாக்குதலைத் தொடுக்க சிவாஜி மகாராஜ் திட்டமிட்டார். மராட்டியர்கள் தங்களை பெண் மற்றும் மாப்பிள்ளை ஊர்வலத்தில் மாறுவேடம் பூண்டு பூனேவிற்குள் நுழைந்தார்கள். சிவாஜி மகாராஜ் அவரின் இளமைகாலத்தின் பெரும்பகுதியை பூனேவில் கழித்திருந்தார், அதனால் அந்நகரையும், அவரின் சொந்த அரண்மனையான லால் மஹாலைச் சுற்றிலும் இருந்த அனைத்து வழிகளும் அவருக்கு தெரியும்.சிவாஜி மகாராஜின் சிறுவயது நண்பர்களில் ஒருவரான சிம்மானாஜி தேஷ்பாண்டே, ஒரு பிரத்யேக காவல் சேவைகள் வழங்கியதன் மூலம் இந்த தாக்குதலில் அவருக்கு உதவி செய்தார். பாபாசாஹேப் புரன்தரேவின் கருத்துப்படி, மொகலாய இராணுவத்தில் மராட்டிய வீரர்களும் அடங்கி இருந்ததால், சிவாஜி மகாராஜாவின் வீரர்களுக்கும், மொகலாய இராணுவத்தில் இருந்த மராட்டிய வீரர்களுக்கும் இடையில் வித்தியாசத்தைக் கண்டறிவது யாருக்கும் சிரமாக இருந்தது. இவ்வாறு, இந்த குழப்பத்தை ஆதாயமாக்கி, சிவாஜி மகாராஜூம் அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆட்களும் மொகலாய முகாமிற்குள் ஊடுறுவினார்கள்.
 
அரண்மனை காவலாளிகளை வேட்டையாடிய பின், மராட்டியர்கள் ஒரு சுவரை இடித்து அரண்மனைக்குள் நுழைந்தார்கள். சிம்னாஜி மற்றும் நேதாஜி பால்கர் இருவரும் சிவாஜி மகாராஜாவிற்கு பாதுகாப்பளிக்க முதலில் நுழைந்தார்கள். சிவாஜி மகாராஜாவின் மற்றொரு நீண்டகால விசுவாசியான பாபாஜி தேஷ்பாண்டே இந்த தாக்குதலின் போது அவருக்கு உண்மையான பாதுகாப்பை அளித்தார்கள். லால் மஹால் தாக்குதலுக்கு உட்பட்டிருப்பதைப் பார்த்த சாய்ஸ்தா ஹரமில் (பெண்கள் பகுதி) சென்று ஒளிந்து கொண்டார். பின்னர் சிவாஜி மகாராஜ் 'நேருக்கு நேர்' சாய்ஸ்தா கானை எதிர்கொண்டார். ஆபத்தை உணர்ந்து கொண்ட சாய்ஸ்தாவின் மனைவியரில் ஒருவர் உடனடியாக விளக்குகளை அணைத்து விட்டார். சிவாஜி சாய்ஸ்தாவைத் தாக்கினார், இதில் சிவாஜி (இருட்டிலேயே) தம் வாளால் அவர் மூன்று விரல்களை வெட்டினார், உடனே சாய்ஸ்தா திறந்திருந்த ஜன்னல் வழியாக தப்பி ஓடினார். சாய்ஸ்தா கான் மரணத்தின் மிக அருகிலிருந்து தப்பிவிட்டார்; ஆனால் இந்த படையெடுப்பில் அவரின் மகனையும், அவரின் பாதுகாவலர்களையும், வீரர்களையும் இழந்தார்.
 
இந்த தாக்குதலின் 24 மணி நேரத்திற்குள், சாய்ஸ்தா கான் பூனேயை விட்டு விட்டு ஆக்ராவை நோக்கி வடக்கில் ஓடிவிட்டார். பூனேயில் அவரின் இந்த இழிவான தோல்வியால் மொகலாயர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டமைக்கு தண்டனை அளிக்கும் வகையில் கோபமடைந்த அவுரங்காசீப் அவரை தொலைதூர வங்காளத்திற்கு மாற்றிவிட்டார்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சிவாஜி (பேரரசர்)
« Reply #11 on: February 15, 2012, 03:21:18 PM »
சூரத்தும், மிர்ஜா ராஜா ஜெய்சிங்கும்
 
1664ல் சிவாஜி மகாராஜ், ஒரு முக்கியமான மற்றும் செல்வவளம் மிக்க மொகலாய வர்த்தக நகரான சூரத் மீது படையெடுத்தார், தற்போது வெறுமையாக இருந்த அவரின் கருவூலத்தை நிரப்பவும், சாய்ஸ்தா கானினால் மராட்டிய மாகாணம் சூறையாடப்பட்டதற்கும், கைபற்றபட்டதற்கும் பலிவாங்கும் நடவடிக்கையாக சிவாஜி அதை சூறையாடினார். 1670ல், சூரத் மீண்டும் சிவாஜியால் சூறையாடப்பட்டது.
 
கோபமடைந்த அவுரங்காசீப், சிவாஜி மகாராஜைத் தோற்கடிக்க 100,000த்திற்கும் மேலான எண்ணிக்கை கொண்ட இராணுவத்துடன் முதலாம் மிர்ஜா ராஜா ஜெய் சிங்கை அனுப்பினார். ஆரம்பகட்ட யுத்தங்களில் மொகலாய படைகள் தடுத்த நிறுத்த முடியாதபடிக்கு இருந்தன, சிவாஜி மகாராஜ் அவுரங்காசீப்புடன் பேச்சுவார்த்தையில் இறங்க முடிவெடுத்தார். சிவாஜி மகாராஜ் மற்றும் ஜெய்சிங்கிற்கு இடையில் கையெழுத்தான புரந்தர் உடன்படிக்கையில், சிவாஜி மகாராஜ் அவரின் 23 கோட்டைகளையும், ரூ. 400,000த்தையும் மொகலாயர்களுக்கு அளிக்க ஒப்பு கொண்டார். மேலும் அவர் மகன் சம்பாஜியை ஒரு மொகலாய சர்தாராக அனுப்பவும், அவுரங்காசீப்பின் மொகலாய சபையில் சேவை செய்யவும் அவர் ஒப்புகொண்டார்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சிவாஜி (பேரரசர்)
« Reply #12 on: February 15, 2012, 03:29:19 PM »
ஆக்ராவிற்கான பயணமும், தப்பிப்பும்
 
1666ல், அவுரங்காசீப் அவரின் ஐம்பதாவது பிறந்தநாள் விழாவில் சிவாஜியும், அவரின் ஆறு வயது மகன் சம்பாஜியையும் ஆக்ராவிற்கு வர அழைப்பு விடுத்திருந்தார். மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் வடமேற்கத்திய எல்லைகளை ஒருங்கிணைக்க, நவீன காலத்தில் ஆப்கானிஸ்தானாக இருக்கும் கண்டாஹாருக்கு சிவாஜி மகாராஜை அனுப்ப அவுரங்காசீப் திட்டமிட்டிருந்தார். எவ்வாறிருப்பினும், 1666 மே 12ல், அவுரங்காசீப் அவரின் சபையில் மன்சாப்தார்களுக்கு (இராணுவ தளபதிகளுக்கு) பின்னால் சிவாஜி நிற்குமாறு செய்தார்.[6] இந்த அவமரியாதைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவாஜி மகாராஜ் சபையை விட்டு திடீரென வெளியேறினார். ஆகவே ஆக்ராவின் கோட்வலான புலத்கானின் கண்காணிப்பில் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவர்தம் ஒற்றர்கள் மூலம், அவர் வசிப்பிடத்தை ராஜா வித்தல்தாஸ் ஹவேலிக்கு மாற்றவும், பின்னர் அவரை கொன்று விடவும் அல்லது ஆப்கான் எல்லைகளில் அவரை சண்டைக்கு அனுப்பவும் அவுரங்காசீப் திட்டமிட்டிருந்தார் என்பதை சிவாஜி அறிந்தார். இதன் விளைவாக அங்கிருந்து தப்பிக்க சிவாஜி திட்டமிட்டார்.
 
கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருப்பது போல் நடித்த அவர், அவரின் படைப்பிரிவின் பெரும்பகுதியை டெக்கானுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார், இதன் மூலம் அவர் இராணுவத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவுரங்காசீப்பை ஏமாற்றவும் முயற்சித்தார். இதன்பின்னர், அவரின் வேண்டுகோளின் பேரில், அவர் குணமடைவதற்காக ஆக்ராவிலுள்ள சன்னியாசிகள், பகீர்கள் மற்றும் கோயில்களுக்கு தினமும் இனிப்புகளும், பலகாரங்களும் அளிக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.[6] இனிப்புகள் கொண்ட பெட்டிகளை பல நாட்கள் மற்றும் வாரங்களுக்கு அனுப்பிய பின்னர், சிவாஜியும் அவரின் ஆறு வயது மகனும் இரண்டு பெட்டிகளில் ஒளிந்து கொண்டு தப்பித்தார்கள். சாதுக்களைப் (புனித மனிதர்கள்) போன்று போலி வேடமிட்டு சிவாஜியும், அவர் மகனும் டெக்கானுக்கு தப்பினார்கள். இந்த தப்பித்தலுக்கு பின்னர், மொகலாயர்களை ஏமாற்றவும், அவர்களிடமிருந்து சாம்பாஜியைக் காப்பாற்றவும் சிவாஜி அவரே, சாம்பாஜி இறந்துவிட்டதாக வதந்திகளைப் பரப்பினார்.[6]
 
அக்ரயாஹூன் சுட்கா என்கிற ஒரு புத்தகத்தில் டாக்டர். அஜீத் ஜோஷி, ஹவேலி மைதானங்களில் சிவாஜி மத சடங்குகளை செய்து காட்டிய பின்னர், ஒரு பிராமணரைப் போன்று மாறுவேடமிட்டு, அங்கிருந்து புறப்பட்ட அந்தண பரிவாரங்களுடன் கலந்து தப்பித்திருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார்.[மேற்கோள் தேவை] எவ்வாறிருப்பினும், ஸ்ரீமன் யோகி (இந்த புத்தகம் பின்னர் சிவாஜி தி கிரேட் என்று மொழிபெயர்க்கப்பட்டது) என்ற மராத்திய புத்தகத்தின் ஆசிரியரான திரு. ரஞ்சித் தேசாயின் கருத்துப்படி, பரிசுகளாக அனுப்பப்பட்ட இனிப்பு பெட்டிகளைக் கொண்டு சென்ற சேவகர்களில் ஒருவராக சிவாஜி மகாராஜ் மாறுவேடமிட்டு இருந்தார்.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சிவாஜி (பேரரசர்)
« Reply #13 on: February 15, 2012, 03:39:42 PM »
போருக்கான தயாரிப்பும், சின்ஹாகட் யுத்தமும்
 
1667-69 ஆகிய ஆண்டுகளில், சிவாஜி ஒரு குறை பெயரையே பெற்றார், அக்காலங்களில் அவர் சுறுசுறுப்பாக அவர் இராணுவத்தை கட்டமைக்க தொடங்கினார். அவர் இராணுவத்தில் அப்பொழுது 40,000 குதிரைப்படைகளும், 60,000 காலாட்படைகளும் இருந்தன, அத்துடன் ஒரு வலிமையான கடற்படையும், ஆற்றல்மிக்க ஆயுதங்களும் உள்ளடங்கி இருந்தன. தற்போது ஒரு வீணான படை தான் அவரிடம் இருப்பதாகவும், மேற்கொண்டு அவர்கள் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றும் மொகலாயர்கள் எண்ணினார்கள். ஆனால் சிவாஜி யுத்தத்திற்கு அடிவைத்து கொண்டிருந்தார், மேலும் மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் ஒருங்கிணைந்த சக்தியை நேரடியாக கைப்பற்றவும் அவர் திட்டமிட்டார். 1670 ஜனவரியில், மஹாராஷ்டிராவில் மொகலயா காவற்படைகளின் மீது ஒரு பன்முக தாக்குதலைத் தொடுத்தார். ஆறுமாதத்திற்குள் அவர் முன்னர் ஏற்கனவே கொண்டிருந்த மாகாணங்களை மீண்டும் கைப்பற்றியதுடன், அதற்கு மேலும் கைப்பற்றினார்.[6] 1670 முதல் 1674 வரை, மஹாராஷ்டிராவின் முக்கிய பகுதிகளையும், நவீன நாட்களின் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு எனப்படும் நீண்ட தெற்கு பகுதிகளையும் உள்ளடக்க அவரின் பேரரசை சிவாஜி விரிவாக்கினார்.
 
பூனேயின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள கொண்டனா கோட்டை தொடர்ந்து மொகலாய கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. கோட்டை காவலர் உதய் பான் ரதோட், தலைமையில் சுமார் 1500 ராஜபுத்திரர்கள் மற்றும் மொகலாயர்கள் அந்த கோட்டை காவலுக்கு இருந்தனர். 1670 பிப்ரவரி 4ல், கொண்டனாவைக் கைப்பற்றும் ஒரு திட்டத்தைத் தலைமை ஏற்று நடத்த, சிவாஜி அவரின் மிக மூத்தவரும், நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவருமான தானாஜி மலூசரேவை நியமித்தார். அந்த நேரத்தில், தானாஜி மகனின் (ராய்பாவின்) திருமணம் நடைபெற இருந்தது. எவ்வாறிருப்பினும், தம் குடும்பத்தை விட மராட்டிய மண்ணின் கடமையை முதலில் கொண்டு, "அதி லாங் கொண்டன்யாச்சா, மங் மாஜ்யா ராய்பாச்சா" (முதலில் கொண்டனா வெற்றி கொள்ளப்படும், பின்னர் ராய்பாவிற்கு திருமணம் நடக்கும்) என்று அவர் தெரிவித்தார்.
 
தானாஜி மலுசரேவின் கீழ் அளிக்கப்பட்டிருந்த மராட்டிய இராணுவம், கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்த மொகலாய இராணுவத்தை விட மிக குறைவாகும். தானாஜி மலுசரே சில நாட்கள் கோட்டையையும், அதன் பாதுகாப்பையும் கணக்கிட்டார். அக்கோட்டை நன்கு பாதுகாக்கப்பட்டிருந்தது. தானாஜியின் கண்களில் ஒரு மிக கூர்மையான பாறை தென்பட்டது. இந்த செங்குத்தான பக்கத்தில் இருந்து கோட்டைக்கு மேல் ஏற முடியும் என்று ஒருவரால் கற்பனையும் செய்ய முடியாது என்பதால் அந்த பக்கம் குறைவாகவே பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தது. கோட்டைக்குள் நுழைய இந்த செங்குத்தான பகுதியை அளக்க தானாஜி முடிவெடுத்தார். ஓர் அமாவாசையன்று இந்த செங்குத்தான பகுதியில் ஏற, அவர் ஓர் ஒடும்பின் (யேஷ்வந்தி என்று பெயரிடப்பட்ட மராட்டியில் கோர்பண்ட் என்று அறியப்படும்) உடலில் கயறைக் கட்டி பயன்படுத்தினார் என்பது புராணம். அந்த ஒடும்பின் கோட்டையின் மேலே ஏற உதவியது. இந்த ஒடும்பின் முக்கிய பண்பு, இறுக்கி பிடிப்பதென்பதால் கோட்டையின் ஒரு முனையில் அது கவ்வி நின்றது. பின் மேலே ஏறிய ஒரு வீரர் பிறரும் ஏற இடமளிக்கும் வகையில் கயிறுகளை வீசினார்.
 
இதற்கிடையில் தானாஜியின் சகோதரர் சூர்யாஜி, மற்றொரு 300 மாவலாக்களுடன் கால்யாண் தார்வாஜா எனும் கோட்டை கதவுகளுக்கு அருகில் வந்தார். அந்த கதவுகள் விரைவில் திறக்கப்பட்டன, அவரின் அனைத்து வீரர்களும் திடீர் தாக்குதலில் தானாஜியுடன் சேர்ந்து கொண்டார்கள். தானாஜியும், உதய்பானும் நேருக்கு நேர் மோதினார்கள், மற்றும் ஒரு கடுமையான போர் உறுதியாயிற்று. உதய்பானு ஒரே வீச்சில் தானாஜியின் கவசத்தை உடைத்தெறிந்தார், இதில் சிறிதும் தயங்காத தானாஜி, அவரின் காயங்கள் மற்றும் இரத்தப்போக்கை நிறுத்த அவரின் தலைப்பாகையை பாதுகாப்பிற்காக அவர் இடது கையில் சுற்றி கொண்டு தொடர்ந்து போரிட்டார். படுமோசமாக காயப்பட்டிருந்த தானாஜி, தள்ளாடி கீழே விழுந்தார். தங்கள் தலைவர் கடுமையான காயத்துடன் தங்கள் கண்முன்னால் இறப்பதைக் கண்ட மராட்டிய வீரர்கள் பின்திரும்பவும், பின்னடையவும் தொடங்கினார்கள், சூர்யாஜி மற்றும் ஷீலர் மாமா முன்னோக்கி சென்று தலைமை ஏற்றார்கள். தனது எழுபதாவது வயதில் இருந்த ஒரு பழைய சர்தார்ஜியான ஷீலர் மாமா பொறுப்பேற்றார், உதய்பானுவை எதிர்நின்று போராடியதுடன் வெகு விரைவிலேயே அவனை கொன்று வீசினார். அச்சமயம் துருப்புகளை வழிநடத்தவும், ஒடுக்குமுறையில் அவர்களைத் திருப்பவும் சூர்யாஜி முற்பகுதிக்கும், மையத்திற்கும் அடியெடுத்து வைத்தார். தற்போது மராட்டியர்கள் மொகலாய தடுப்பாளர்கள் மீது அவர்களின் தாக்குதலை மீண்டும் தொடங்கினார்கள், இதன் மூலம் கோட்டையைக் கைப்பற்றுவதிலும் வெற்றி பெற்றார்கள்.
 
வெற்றிக்குப் பின் சிவாஜி கோட்டைக்கு வந்த போது, தம் அருமை நண்பர் தானாஜியின் இழப்பிற்காக மிகவும் ஆழமாக வருத்தப்பட்டார். அவர் மிகவும் சோகத்துடன், "கத் ஆலா பன் சின்ஹா கேலா" (கோட்டை வெற்றி கொள்ளப்பட்டது, ஆனால் சிங்கம் இழக்கப்பட்டது) என்று குறிப்பிட்டார். இதற்கு பின்னர், தானாஜி மாலுசரேயின் வீரத்தை கௌரவிக்கும் வகையில் கொண்டனா கோட்டை சின்ஹாகட் என்று பெயர் மாற்றப்பட்டது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சிவாஜி (பேரரசர்)
« Reply #14 on: February 15, 2012, 05:20:57 PM »
பட்டமளிப்புகளும், தெற்கத்திய பிரயாணமும்
 
1674, ஜூன் 6ல், ராய்கட் கோட்டையில் சிவாஜி உத்தியோகப்பூர்வமாக சத்ரபதி யாக (சத்ரியர்களின் அரசர் அல்லது தலைவர்) முடிசூட்டி கொண்டார். அத்துடன் சத்ரிய குலவன்தாஸ் சின்ஹசனாதீஷ்வர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்ற பட்டமும் வழக்கப்பட்டது. வாரணாசியிலிருந்து வந்த ஒரு புகழ்பெற்ற பிராமணரான பண்டிட் காகாபட், அந்த விழாவிற்கு தலைமை தாங்கியதுடன், சிவாஜியின் வழிமரபு ஒரு உண்மையான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சத்ரிய மரபு என்று அறிவித்தார்.[6] சிவாஜி உண்மையில் தன்ங்கார் சமயபோதர் வழிமரபில் இருந்து (அவர் அதிலிருந்து வந்தவர் தான் என்பதால்) வந்தவர் என்று கூறி உள்ளூர் சன்னியாசிகள் இதை நிராகரித்தார்கள்.[14][15][16] அவர் வேதங்களால் ஜான்வா (ஹிந்தியில் - ஜான்யூ, சத்திய பாதை) வழங்கப்பட்டவர், மேலும் அபிஷேகத்திலும் நீராட்டப்பட்டவர். 9ஆம் நூற்றாண்டில் இருந்து வழக்கில் இல்லாமல் இருந்து வந்த இந்திரபிஷேக் சடங்கிற்கு சிவாஜி முக்கியத்துவம் அளித்து கொண்டிருந்தார். அப்போது சிவாஜிக்கு "சக்கார்தா" என்ற பட்டம் வழங்கப்பட்டது. அவர் தனது சொந்த நாட்காட்டியைத் தொடங்கினார். சில நாட்களுக்கு பின்னர், இரண்டாம் விழா நடத்தப்பட்டது, இந்த முறை டான்ட்ரிசத்திற்கான வங்காள பள்ளியின் கருத்துப்படி, நிஸ்சல் பூரியின் தலைமையி்ல் நடத்தப்பட்டது.
 
இந்த பட்டமளிப்புக்கு பின்னர், 1676ன் இறுதியில், 50,000 (30,000 குதிரைப்படை & 20,000 காலாட்படை) துருப்புகளைக் கொண்ட ஒரு மாபெரும் படையுடன் சிவாஜி மகாராஜ் தெற்கத்திய இந்தியாவில் வெற்றி அலைகளை நிகழ்த்தினார்.[6] அவர் கர்நாடகாவின் பிஜாப்பூருக்கு அருகில் உள்ள (தற்போது தமிழ்நாட்டில் உள்ளன) வேலூர் மற்றும் செஞ்சி கோட்டைகளைக் கைப்பற்றினார். அவர் கொல்கொண்டாவின் குதுப்ஷாவுடன் ஒரு நேச உடன்படிக்கையும் செய்து கொண்டார். இந்த வெற்றிகள் அதற்கடுத்து ஏற்பட்ட யுத்தங்களில் மிக முக்கியத்துவமானவை என்பதை நிரூபித்தன. 27 ஆண்டுகள் யுத்தத்தின் போது செஞ்சி 9 ஆண்டுகள் மராட்டியர்களின் தலைநகராக விளங்கியது. எவ்வாறிருப்பினும், சஹாஜிக்கு பின்னர் தஞ்சாவூரை ஆண்ட வென்கோஜியுடன் (மொஹிட்டி குடும்பத்திலிருந்து வந்த சஹாஜியின் இரண்டாவது மனைவின் மகன்) சமரச செய்து கொள்வது தான் அவரின் முக்கிய நோக்கமாக இருந்தது. அவர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள், சிவாஜி மகாராஜூடன் சமரசப்படுவதற்கான அறிகுறிகளை வென்கோஜி (ஈகோஜி I) காட்டினார் என்றாலும், பின்னர் எவ்விதமான உறுதியான விளைவும் ஏற்படவில்லை.[6] எவ்வாறிருப்பினும், அவர்கள் இருவரும் எதிரிகளாக இல்லை, அவர்கள் வெவ்வேறு பேரரசுகளை ஆண்டு வந்தார்கள்