சலவை செய்து தொங்கவிடப்பட்ட அந்த நிலவு
ஏளனமாய் பார்த்து சிரிக்கிறது
இதே படகில் இதே நதியில் இன்பமாய் கதைபேசி
இரவுகளை கடந்த இரு இதயங்கள்
ஒருவரை ஒருவர் பார்க்க பிடிக்காது
எதிர்த் திசைகளை பார்த்து நிற்க
செல்லும் திசையறியா ப் படகு
செய்வதறியாது தவித்து நிற்பதுமேன்
'
அன்று வருடிச் சென்ற குளிர் காற்று இன்று
அனலாய் கொதிக்கிறதே !
அழகான வெண்முகில்கள் அசைவற்று நிக்கிறதே !
மேலும் கீழும் ஆடும் படகு அசைய மறுக்கிறதே ! !
இது காதலில் தெரியும் கானல் நீ ரா?
காதலரின் வேதனைத் தீயா
அவள் காந்தள் விரல்களை தன் விரல்களுடன்
பிணைத்து விளையாடிய நாட்கள் எல்லாம் பொய்யா ?
காதோரம் அசைந்தாடும் அவள் லோலா க்கோடு
கொஞ்சி விளையாடிய பொழுதுகளும் பொய்யா ?
இதழோடு இதழ் சேர்த்து பரிமாறிய முத்தங்கள்
காற்றோடு காற்றாக மறைந்ததும் கனவா ?
காதல் என்ற ஒரு போர்வைக்கு.ள் காலமெல்லாம்
தூங்கி எழும் காதலரை பிரிப்பது விதியா இல்லை சதியா ?
எத்தனை இரவுகள் இதே படகில் பேசிமகிழ்ந்தோம் '
வானத்து விண்மீன்கள் நடுவே ஒளிரும் மின்விளக்கு அங்கே
என் சப்த நாடிகளையும் அதிரவைக்கும் குலவிளக்கு நீயே
மீட்டாத என் இதய வீணையை மீட்டிய என்னழகே !
சகியே ! என் இதயத்துள் நுழைந்தவளே !
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை
எத்தனை எத்தனை பசப்பு வார்த்தைகள்
காதல் என்ற கறுப்படைக்குள் இத்தனையும் விஷமா?
காதல் எனும் மழையில் காலமெல்லாம் நனைய
காத்திருக்கும் காதலர்கள் காரணம் இன்றியே
காலையில் மலர்ந்து மாலையில் கருகும் லர்க;ள் போல்
காற்றோடு காற்றாக கரைந்து போவதுமேன் ?
நடு நடுவே புகுந்து விளையாடும் தேனீக்கள் போன்ற பெஸ்ட் ஈக்களா?
இல்லை தன்னையே ஒருவழிபடுத்தும் ஈகோக்களா ?
கண்ணில்லாத காதலுக்கு இரண்டுமே விஷமிதான்.!!