இசையென்னும் மாபெரும் கொடையை தந்த இயற்கை இறைவனுக்கு இணையானவன்!!!
காற்றிலே மிதந்து செவிகளிலே தவழ்ந்து, மனதிலே படர்ந்து நவரசங்களை வெளிக்கொணர முடிகிறதே , இசையின் மாயம்..
மௌனங்கள் கூட உறைந்து போகும் கவலைகள் கூட கரைந்து போகும் இசையை விரும்பாதவர்களைக்கூட விரும்ப வைக்கும்,
மொழிகள் அறியாதவர்களை கூட அதன் இசையை நம்மால் உணரமுடிகிறதே,! ஆச்சிரியம்!!!
நம்மை இயங்க வைக்கும் இசைக்கு இதயத்தை கொடுத்தோம் திரும்பும் திசையெங்கும் இசைமொழி பாடலால் நம்மை இறுக்கி வைத்திருக்கும் ! !!
மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் இசையை விரும்புகின்றோம்,
துயரத்தில் தான் பாடல் வரிகளை வர்ணனை செய்கின்றோம் ,மன பாரத்தின் மருந்து இசையே தான்!!!!
இரவில் உன் மடியில் இளைப்பாற
பல வகை உணர்ச்சிகளை பாடலாய் பருக, காயம் பட்ட மனமும் இசைக்கேட்டு உறங்கும், தாலாட்டு பாடுவதில் தாய்க்கு பின் நீ தானே!!!!