நிலவே உண்மை சொல்
சூரியன் கருகிய மாலையில்
சந்திர பூரணம் அது நீயோ - நிலவே!
தரைதொடும் தூரமாய் நிழலோடு
இரு உருவமாய் நீருள் ஊடுருவி ஒன்று!
நிலவே நீ என்னவளா இல்லை
அவள் போலா? இருவராய் !
என்னவள் என்னுள்ளும்
அவள் வீட்டிலும் - இதில்
எது நியம் எது நிழல் ?
நிலா நீ இரசிக்கின்றாயா பூமியை?
மனிதன் வாழ கடவுள் படைத்த பார்!
பார்க்கின்றாயே உன்னிலும் மேன்மை
தானே பூமி?
நீ பார்க்கையில் மலையும் நிலமும்
நீரும் புல்லும் புழுவும் பாம்பும்
ஆற்றோரத்தில் தெரிகிறதல்லவா - உனக்கு!
உண்மை சொல் உன்னிடம் இவைகள் உண்டா?
நீரும் பனியும் நீர்மேல் உறைந்த பனியும்
மலைமேல் படர்ந்த வெண்பனியும் கண்டாயா?
நீ தரும் ஒளியில் உலகம் இருண்டே தெரிகிறதே
உனக்கு கடவுள் தந்தது சாபமா வரமா?
விஞ்ஞானிகள் உனைப்பற்றி எம்மிடம்
சொல்வதெல்லாம் உண்மைதானா!
உண்மை சொல் நிலா!
உலகைப் படைத்தவர் படைக்கையில்
நிலாவே உன்னக்கும் எனக்கும்
மூன்றே நாள்தான் முதுமை இளமை!
ஆதாம் செய்த பாவம் மரணமாக
களங்கமில்லா உன் ஒளி நிலையானது!
கடவுள் வாழத்தந்த பூவுலகில் கேப்பாரற்ற
ஏழைத் தேசமதை வல்லாதிக்கம் அழிக்கிறது!
உன்னையும் ஆராய வருகிறது அவதானம் - நிலா!
உன்னக்கு தோசைசுட்ட என் ஆயாவை
கண்டு பிடிக்கட்டும் நம்புகிறேன் - நிலா!
உண்ணுள் வந்து ஆராய உறவாட
திராணியில்லை வசதியும் - இல்லை
ஏழைகள் நாங்கள்!
குழுமையின் உறைவிடமே உதவி செய்
உண்மை சொல் - நிலா! உண்மையா?
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே