FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on December 21, 2023, 08:52:46 PM
-
நட்ட நடு சாமத்தில
நான் தூங்கும் நேரத்துல
பாவி மக கனவு வந்து
என்ன தட்டி என்ன எழுப்பிடுச்சே
கனவில் அவ கிட்ட வந்து
கைய புடிச்சுஅழுதுகிட்டு
என்ன விட்டு போகதனு
சொன்னது போல தோனிருச்சு
என்னத்த நான் சொல்ல
இப்படித்தான் கனவு வந்தா
கனவுல மட்டும்தானே அவ
காதலை எனக்கு தந்தா