Entertainment > விளையாட்டு - Games
தமிழ் அறிவு விளையாட்டு
சிநேகிதன்:
இப்பகுதியில் இடம் பெரும் பதிவுகள் யாவும் தமிழ் எழுத்துக்களிலேயே இருத்தல் வேண்டும்.
தமிழ் பாரம்பரியம் ,கலாச்சாரம், வரலாறு இவை யாவும் தொழில்நுட்ப உலகில் அழிந்து வருகிறது . தமிழை பற்றியும் , தமிழர் பற்றியும் தகவல்களை நினைவூட்டும் வகையில் இப்பகுதியில் கேள்விகள் அமைய வேண்டும்.
இந்த பகுதியில் தமிழர் சார்ந்த ,தமிழ் வரலாறு சார்ந்த ,தமிழ் இலக்கணம் சார்ந்த கேள்விகள் மட்டுமே இருத்தல் வேண்டும்.
ஒருவர் தொடர்ச்சியாக கேள்விகளை கேட்டு முடித்தபின் மற்றவர் கேள்விகளை தொடருவது இப்பகுதி அழகுபெற உதவும்.
குறிப்பு : இப்பகுதியை நேர்த்தியாகவும் அழகுறவும் வைக்க உதவுவது தமிழர்கள் நம் கடமை.
சிநேகிதன்:
முதலில் இப்பகுதியின் முழு அம்சமும் அனைவரும் உணர நான் முதலாவதாக கேள்விகளை தொடர்ச்சியாக கேட்கிறேன்.கேள்விகளை சிவப்பு வர்ண எழுத்துக்களில் அமைய செய்வது நலம்.
ஐம்பெரும் காப்பியங்கள் எனப்படுவன யாவை?
Varun:
தமிழில் உள்ள காப்பியங்களை ஐம்பெருங் காப்பியங்கள் என்றும், ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் கூறுவர். ஐம்பெரும் காப்பியங்கள் என்றால், சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி,குண்டலகேசி போன்றவை அடங்கும். ஐஞ்சிறு காப்பியங்கள்,என்றால், சூளாமணி, நீலகேசி, நாககுமார காவியம், யசோதர காவியம், உதயணகுமாரா காவியம் ஆகும்.
சிநேகிதன்:
பதினென் கீழ்கணக்கு நூல்கள் என்பன யாவை ? ( நூல் பெயர்களை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது )
Bommi:
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் ,பதினென் கீழ்கணக்கு நீதி நூல்கள்,
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version