கோதம் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதைப்படி 'அவங்க கேட்ட ' அதுனால மாறிய ' நீங்கள் கேட்டவை ' கதையைப் படித்தேன்..விமர்சனங்கள் எழுத விரும்பவில்லை..(கதையிலே ஒரு காபி டே மற்றும் டிவி நிகழ்ச்சிலே சொல்லுற போல அதுலே மாறுபட்ட விமர்சனங்களை வச்சுடீங்க)வாசகனா எனக்கு தோணுனத சொல்லிட்டு ஓடிறேன்..வரிகள் விடாம வாசிக்க வைக்கிற வார்த்தை கோர்வைகள்..எதிர்பாராத திருப்பங்கள் வைக்கணும் அப்டின்னு நினைக்காம என்ன சொல்லணுமோ அது மட்டும் இயன்ற அளவு நேர்த்தியா சொல்லிருக்கீங்க ..புதுமையை புகுத்துறேன் பேர்வழின்னு மொக்கை போடாம, உள்ளது உள்ளபடின்னு கீறல் இல்லாம உயிரோட்டத்தோட சொல்லிருக்கீங்க ..கதை கேட்ட,படித்த,தெரிந்த விசயமா தான் இருக்கும் எவ்ளோ யோசிச்சு சொன்னாலும்..சொல்லுகிற விதம் ,சொற்களின் இதம் இரண்டும் படிக்கும் போது அலுப்பு தெரியாம பயணிக்க வைக்கணும்..அந்த வகைல உங்க நடை ,கதைக்கரு சிதைக்காத உரையாடல்கள் பலம்...
நெருடலா அல்லது கேக்கணும் தோணுன விஷயம் கதையின் இறுதிகட்டம்ல (பாகம் 6 ,7) கதையை மதியே சொல்லுவது போல வச்சுருக்கீங்க...purpose ஆ வச்சதா?? இல்லை கதையின் முடிவுல கதாபாத்திரமே சொல்லணும் பண்ணீங்களா? எனக்கு என்ன ஆரம்பத்துல தோணுச்சுனா மதி சொல்வது போலவே கொண்டு போகலாமே அப்டின்னு..அப்பறம் கதை ஆசிரியர் திறமைக்கு களம் வேணும்னு இப்டி கொண்டுபோறீங்க நினைச்சேன் ..இறுதில மாத்திடீங்க ?? அப்ப படிச்சு முடிக்கும் தருவாயில் இவரு இதுக்கு ஆரம்பத்துல இருந்தே மதி சொல்வது போல சொல்லிருந்தா இன்னும் ஊன்றி ஒன்றி இருக்கலாமே நான் அப்டின்னு தோணுச்சு ...?
மத்தபடி நிதானமான நடையின் போக்கு காரணமாக களைப்பில்லாத நதியின் பயண அனுபவம் கிடைச்சது..வாழ்த்துக்கள்...எதிர்வரும் உங்கள் கதைகளுக்கு காத்திருக்கும் நபர்கள் வரிசையில் நானும்...