தனிமையா என்னோட நாட்களும் வாழ்க்கையும் போயிட்டு இருந்தப்போ அந்த சம்பவம் நடந்துச்சு. பூட்டிக்கிடந்த பக்கத்து வீட்டுக்கு யாரோ ஒரு நாள் குடிவந்தாங்க. அன்னிக்கு கொஞ்சம் சத்தமா இருந்துச்சு. பொதுவா இங்க இருக்கற வீட்டுல சத்தமே அதிகம் கேக்காது. யாருடான்னு எட்டிப்பாத்தேன். ஒரு அப்பா அம்மா பையன் கொண்ட குடும்பம் அது.
அவங்க எல்லோரு வீட்ட செட் பண்ற வேலையில இருந்தப்போ நான் வீட்டுக்கு முன்னாடி இருந்த புல்வெளியில சுத்தி சுத்தி வந்துட்டு இருந்தேன். என்கூடவே துணைக்கு என் ஜெஸ்ஸியோட நினைவுகளும். என்னால அவ கண்ண மறக்க முடியல. அப்படி ஒரு பார்வை. அதுவும் கடைசியா அவள விட்டு பிரிஞ்சு போறப்ப அவ என்னை பார்த்த பார்வை இருக்கே.. யப்பப்பா..
இப்படியே அவ நினைவுல என்னோட வாழ்க்கைய ஓட்டிடலாம்னு இருந்தப்போ அந்த சத்தம் கேட்டுச்சு. திரும்பி பார்த்த ஜெஸ்ஸி இருந்த வீட்டு பால்கனியில இன்னொரு டாக். இது பூடுல் வகை. குட்டியா பூனை மாதிரி பம்மிக்கிட்டு இருந்துச்சு. என்னை தான் கூப்பிட்டுச்சு போல. ஜெஸ்ஸியோட நினைவுகள்ல இருந்தவன தொல்லை பண்ணுதுனு மொறச்சு பார்த்தேன். பயந்துட்டு வீட்டுக்கு உள்ளே ஓடுச்சு.
அப்புறமா சில நாட்கள் அப்படியே போச்சு. அந்த டாக் அவங்க வீட்டு பால்கனியில நின்னு என்ன லுக் விடறதாவே இருந்துச்சு. 'என்னை தான் சைட் அடிக்குதுனு நல்லாவே தெரிஞ்சுது. என்ன பண்ண ஐயாம் சாரி. என் மனச நான் ஏற்கனவே ஒருத்திக்கிட்ட கொடுத்திட்டேனு' சொல்லலாம்னு பார்த்தேன். யாருன்னே தெரியல எதுக்கு நம்ம கதைய போய் சொல்லணும்னு விட்டுட்டேன். 'என்ன மாதிரி ஒரு நல்ல திடகாத்திரமான ஆண் டாக்-அ பாத்திருக்காதோ'. இப்படி பாக்குது இந்த டாக்.
அப்போ தான் அது நடந்தது. திடீர்னு ஒரு குரல்.
"ஜெஸ்ஸி...."
என் உடம்பெல்லாம் சிலிர்க்க ஆரம்பிச்சது. ரொம்ப நாள் கழிச்சு அவ பேர கேக்கறேன். திரும்ப என்னைத் தேடி வந்துட்டா போல. கண்ணுக்கெட்டிய இடமெல்லாம் அவள தேடினேன். காணல. திடீர்னு குரைக்கற சத்தம். பக்கத்து வீட்டு மாடியில இருந்த டாக் பௌ பௌன்னு கத்திட்டு வீட்டுக்குள்ள ஓடிச்சு. அப்போ தான் தெரிஞ்சுது. அந்த டாக் பேரு ஜெஸ்ஸி தான்னு.
நீங்க எத்தன பேர் காதலிச்சிருக்கீங்கன்னு தெரியல. காதலிச்சுப்பாருங்க. காதலியோட பேர் வச்சிருக்கறவங்க மேல தனிபாசம் வரும். அப்படி தான் முதன்முதலா அந்த டாக் சாரி சாரி.. ஜெஸ்ஸி மேல எனக்கிருந்த கோவம் போக ஆரம்பிச்சுது. அடுத்த நாள் அவ மாடியில நின்னப்ப கொஞ்சமா சிரிச்சேன்.
அவ என்கிட்ட பேச ஆரம்பிச்சா.
"என்ன திடீர்னு சிரிக்கற?"
"இல்லே. பக்கத்து பக்கத்து வீட்டில இருக்கோம். முறச்சுக்கிட்டா இருக்க முடியும். அதான்."
"ஓ. இப்போ தான் தெரிஞ்சுதாக்கும். இதுவரைக்கும் ஒரு சிரிப்பு கூட இல்லே.. க்கும்.." தலையை வெட்டினாற்போல் இடித்தது. எனக்கு சிரிப்பாய் வந்தது. அந்த மேனரிசம் கூட நல்லா தான் இருந்தது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சோம். முதல்ல பொதுவா பேச ஆரம்பிச்சு பிறகு நல்லா பேச ஆரம்பிச்சோம். பழைய ஜெஸ்ஸி விட்டுப்போன காயங்களுக்கு புது ஜெஸ்ஸி மருந்து போட ஆரம்பிச்சா. அவ கூட பேசும் போது மனசுக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.
புது ஜெஸ்ஸியின் சேஷ்டைகள் அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கு. அப்புறம் அந்த வீட்டுலேர்ந்து யாராச்சும் எங்க வீட்டுக்கு வந்தா ஜெஸ்ஸியும் வர ஆரம்பிச்சா. நிறைய பேசினோம். முதல்ல நட்பா தான் நினைச்சிருந்தேன். மெல்ல மெல்ல பழைய ஜெஸ்ஸியோட இடத்த பிடிக்க ஆரம்பிச்சா. ஒருநாள் அவகிட்ட சொல்லிட்டேன்.
"ஜெஸ்ஸி. உன்ன எனக்கு புடிச்சிருக்கு. உனக்கு?"
அப்படியே மொறச்சா. பயந்துட்டேன்.
"இத சொல்ல உனக்கு இவ்வளவு நேரமா என்ன? வந்த நாள்லேந்தே உன்ன எனக்கு புடிக்கும். மெஜஸ்டிக்கா கம்பீரமா நீ நிக்கறப்போ உன்கூடவே இருக்கணும்னு தோணும்."
வானத்துல மறுமுறையா பறக்க ஆரம்பிச்சேன். இப்படியே எங்க காதல் அத்தியாயம் தொடங்கிச்சு. இதுக்கு மறுபடியும் சோதனை அவ ஓனர் மூலமா வந்தது. விடுமுறைக்கு ஒருவாரம் வெளியூர் போனாங்க. அப்போ ஜெஸ்ஸியையும் கூட்டிட்டு போனாங்க. அழுகையே வந்துச்சு. மனசில்லாம விடைகொடுத்தேன்.
அடுத்த நாள்லேந்து தனிமை. அப்படி ஒருநாள் உட்கார்ந்திருந்தப்போ என் வாழ்க்கையில நடந்த சம்பவங்கள யோசிச்சுப்பாத்தேன். ஜெர்மனி, டென்மார்க், அப்புறம் பழைய ஜெஸ்ஸி.. ஸ்ஸ்ஸ்.. இத்தனை நாளா அவள பத்தின நெனப்பையே மறந்திருந்தேன் புது ஜெஸ்ஸியால. சிந்தனை வேற மாதிரி போச்சு. இப்போ புது ஜெஸ்ஸி மேல இருக்கறது காதலா இல்லே பழைய ஜெஸ்ஸி மேல இருந்தது உண்மை காதலா?
நிறைய யோசிச்சு அந்த விடைய கண்டுபுடிச்சேன். என்னன்னு கேக்கறீங்களா?? கதையோட தலைப்ப மறுபடியும் படிங்க.
'உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?'ஆமாங்க. இதுவரைக்கும் நான் லவ் பண்ணியிருக்கிறது. ஜெஸ்ஸிங்கற பேர தான். எந்த நாயாயிருந்தாலும் பரவாயில்லே. ஆனா ஜெஸ்ஸிங்கற பேர்ல இருந்தா காதலிச்சிருப்பேன்னு தோணுச்சு.
ஹலோ.. என்ன பாக்குறீங்க.. அடிக்க வராதீங்க.. பௌ..பௌ...
--- முற்றும்---
பி.கு: கதையில் வரு சில காட்சிகளால நான் காதலை கொச்சைப்படுத்தறேனு யாரும் நினைக்க வேண்டாம். இப்படிப்பட்ட விஷயங்களும் இருக்கலாம்னு சொல்றது தான் இந்த கதை. : )