ஆசையின் சிறப்பம்சங்கள் பல அவற்றுள்
ஆசையாய் மிக சிறப்பானவை சில
ஆசைகள் அற்று வாழ புத்தனுக்கே
ஆசையாம் !
ஆசைதான் உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்கு சாரம் .
ஆசைதான் வாழ்க்கையின் வசீகர அழகிற்கு ஆரம்.
ஆசைஅற்று வாழ்பவனுக்கு வாழ்வே பெரும் பாரம் .
ஆசைமீது எவரும் எப்போதும் பட்டுவிடலாம் ஆசையை
ஆசை படுவது மிக எளிது
ஆசை படுவதை அடைவது அதனிலும் மிக அரிது .
ஆசையை அடைய மனதில் ஒரு தேடல் வேண்டும் .
ஆசையை அடைய தீயாய் தகிக்கும் தீரா வேட்கை வேண்டும் .
ஆசையை அடைய தளர்வில்லா நம்பிக்கை வேண்டும் .
ஆசையை அடைய ஏல்லாவற்றையும் விட
தன்னம்பிக்கை வேண்டும் .
ஆசையை ,ஆசை பட்டதை அடைய
ஆசை பட்டால் , கனவு கண்டால் மட்டும் போதாது
ஆசை மீது ஆசை வேண்டும்