FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Nancy on December 19, 2011, 04:17:00 PM

Title: பெண்ணே சொல்லடி
Post by: Nancy on December 19, 2011, 04:17:00 PM
(http://img1.imagehousing.com/1/5bbd0294817f122f5a94378beb020608.jpg)

பெண்ணே
உன் கூந்தலுக்கு யாரோ கட்டிய மல்லிகை
உன் கண்களுக்கு யாரோகரைத்த கண்மை
உன் காதுக்கு யாரோ செய்த கம்மல்
உன் சங்கு கழுத்துக்கு யாரோ கோர்த்த பாசி மணிகள்
உன் முகத்துக்கு யாரோ தயாரித்த வாசனை பவுடர்
உன் அழகை மறைக்க யாரோ தயாரித்த ஆடைகள்
உன் கைகளுக்கு யாரோ செய்த வளவிகள்
உன் கால்களுக்கு யாரோ கோர்த்த கொலுசுகள்
இத்தனையும் உன்னை விரும்பவில்லை என்றாலும்
நீயே விரும்பி யார்ருக்கொல்கிறாய்
உன்னை விரும்பும் என்னை மட்டும் ஏன்
யார்க்க மறுக்கிறாய் சொல்லடி என் பெண்ணே
சொல்லடி என் பெண்ணே