FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 30, 2012, 07:09:58 PM

Title: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 30, 2012, 07:09:58 PM
(http://rawforbeauty.com/images/stories/12-love3.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 30, 2012, 07:14:47 PM
அவசர உணவுகளும் அதன் ஆபத்தும்!

(http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/376905_461074160599660_628415803_n.jpg)

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ், கேஎப்சி சிக்கன், பெப்ஸி குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கலந்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் தயாரிப்புக்களையும், இன்னும் சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்களையும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்ததில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அவசர உணவுகள்:
இரண்டு நிமிடத்தில் தயாரித்து விடலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது மேகி, டாப் ரமன் நூடுல்ஸ். இதன் சுவை குழந்தைகளை அதிகம் கவர்கிறது என்பது உண்மைதான். புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த இந்த நூடுல்ஸ்சினை ரசித்து சாப்பிடுவது குழந்தைகளின் வழக்கம். இந்த நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் டிரான்ஸ் கொழுப்பு வகையும், உப்பு, சர்க்கரையும் அதிகம் கலந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Fried சிக்கன்:
Mc Donold Foods, KFC Fried சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில் கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்றி இயற்கையானது மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வேறு பொய்களைக் கூறி விற்பனை செய்கின்றனர். இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்த போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது.

இந்த உணவுப் பொருட்களை குழந்தைகளும் நம் போன்ற இளம் வயதினர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு ஆளாகின்றனர். எனவே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங்களை தவிர்க்க முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை கூறியிருக்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு இதயத்தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது என்றும் எச்சரிக்கின்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வகத்தினர்.

குளிர்பானங்கள்:
Pepsi,Coca cola போன்ற குளிர்பானங்களில் பூச்சி மருந்து அதிகம் கலக்கப்படுவதாக 2003ஆம் ஆண்டிலேயே இந்த ஆய்வு மையம் எச்சரித்தது. தற்போது Mc donold,KFC உணவகங்களில் அவர்களின் தயாரிப்பு உணவுகளோடு இலவசமாக இதுபோன்ற குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 30, 2012, 07:15:44 PM
(http://rawforbeauty.com/images/stories/00000017.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 30, 2012, 07:19:45 PM
(http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/300467_460021424038267_1199973652_n.jpg)


சாப்பிட்ட உடன்...

சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.

சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.

எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் Don’t Loosen Your Belt). ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.

சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.

மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். மருத்துவத் துறையில் நவீன மூட நம்பிக்கைகள் பலவும் இதுபோல உண்டு.



* Don't smoke- Experiment from experts proves that smoking a cigarette after meal is comparable to smoking 10 cigarettes (chances of cancer is higher).

* Don't eat fruits immediately - Immediately eating fruits after meals will cause stomach to be bloated with air. Therefore take fruit 1-2 hr after meal or 1hr before meal.

* Don't drink tea - Because tea leaves contain a high content of acid. This substance will cause the Protein content in the food we consume to be hardened thus difficult to digest.

* Don't loosen your belt - Loosening the belt after a meal will easily cause the intestine to be twisted & blocked.

* Don't bathe - Bathing will cause the increase of blood flow to the hands, legs & body thus the amount of blood around the stomach will therefore decrease. This will weaken the digestive system in our stomach.

* Don't walk about - People always say that after a meal walk a hundred steps and you will live till 99. In actual fact this is not true. Walking will cause the digestive system to be unable to absorb the nutrition from the food we intake.

* Don't sleep immediately - The food we intake will not be able to digest properly. Thus will lead to gastric & infection in ourintestine..
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 30, 2012, 07:20:39 PM
(http://a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/376768_459891500717926_1630891456_n.jpg) (http://www.friendstamilchat.com)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 30, 2012, 07:27:10 PM
(http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/558435_453350568038686_540221571_n.jpg)

பொடுகு தொல்லை நீங்க சில குறிப்புகள் !!

பொடுகு என்றால் என்ன ?

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.

பொடுகு ஏன் வருகிறது?

1. வரட்சியான சருமத்தினால் வரும்

2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும்.

3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது

4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும்

5. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.

6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்

7. அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். க்ண்ட கண்ட செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.

8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்

பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது

2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்

3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.

2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.
“பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.

3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்

4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்

6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.

7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது

8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்

11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்

12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.

14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.

15. தேங்காய் எண்ணையுடன் வேப்பை என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

16. நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.

17. நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.

18. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

19. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

20.ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 30, 2012, 07:31:02 PM
(http://www.tamilkathir.com/uploads/images/2012/08/05/bfad2056-964b-4757-803d-1cbfa2c9bf22_S_secvpf.jpg)

நிறைய பேர் பப்பாளிப்பழம் என்றால் அலர்ஜி போல், அதன் வாசனை வந்தாலே ஓடிப் போய் விடுவர். ஆனால் அத்தகைய பப்பாளிப் பழத்தில் அதிகமான அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. கொலம்பஸ் இதனை பழங்களின் ஏஞ்சல் என்று சொல்கிறார். ஏனெனில் இந்த பழம் நன்கு கனிந்த பின் பார்த்தால், அதன் நிறம் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். மேலும் இந்த பழம் நன்கு சுவையோடு இருப்பதோடு, அதிகமான ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.

உடலில் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கிறது என்று நிறைய பேர் அதற்கான மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். ஆனால் அவ்வாறு மாத்திரைகளை சாப்பிடுவதை விட, இந்த பழத்தை தினமும் சிறிது சாப்பிட்டாலே போதுமானது. சரி, இப்போது பப்பாளி பழத்தினை சாப்பிட்டால் என்னென்ன நன்மை உடலுக்கு கிடைக்கின்றது என்று பார்ப்போமா!!!

பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது. இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன. மேலம் கொலஸ்ட்ராலின் அளவு உடலில் அதிகமாக இருந்தால், அவை இரத்த குழாய்களில் தங்கி, சரியான இரத்த ஓட்டத்தை தடை செய்கின்றன. இதனால் தான் மாரடைப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மிகுதியாக உள்ளது. இந்த நார்ச்சத்துக்களும் இரத்ததில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துகிறது.
இந்த பழத்தில் இருக்கும் புரோட்டீனான பாப்பைன், செரிமான மண்டலத்தை சரியாக இயக்குகிறது. மேலும் இதில் இருக்கும் நொதிப் பொருள், செரிமானமாகாத புரோட்டீன்களை உடைத்து எளிதில் செரிமானமாகும் அமினோ ஆசிட்டுகளாக மாற்றி, செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. அதிலும் பப்பாளியை சாப்பிட்டால், மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும். பாப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால், செரிமானம் எளிதில் நடைபெற்று, மலச்சிக்கலும் குணமாகிறது.

பப்பாளியில் உடலில் ஏற்படும் அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால், பப்பாளியை சாப்பிடுகின்றனர். மேலும் இந்த அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் பப்பாளியில் இருப்பதால், மூட்டுவலி அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிட்டால் நல்லது.
பப்பாளியில் இருக்கும் பலவித பண்புகளோடு, புற்றுநோயை குணப்படுத்தும் பொருளும் இருக்கிறது. இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, புற்றுநோய் உண்டாக்கும் டாக்ஸின்களை உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது. மேலும் பப்பாளியில் இருக்கும் போலேட், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையும் புற்றுநோய் உண்டாக்குவதை தடுக்கும் சத்துக்களாகும்.

அதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இந்த பழம் டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது. ஆகவே பப்பாளிப் பழத்தை தினமும் ஒரு துண்டாவது சாப்பிடுங்க!!!
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 31, 2012, 07:06:33 PM
(http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/304854_461468190560257_1165663772_n.jpg)


மீன் சாப்பிட்டா கண்நோய் வராதாம்: ஆய்வில் தகவல்,

மீன் உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கண்நோய்கள் எட்டிப்பார்க்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மீன் எண்ணெயில் டிஹெச்ஏ(DHA-Docosahexaenoic acid) அதிகம் காணப்படுகிறது. இது ரெக்டினாவை பாதுகாக்கிறது. மேலும் மீனில் உள்ள உயர்தர ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ்(Antioxidants), சி, இ, வைட்டமின்கள், பீட்டா கரோட்டீன்(beta-Carotene), மற்றும் துத்தநாகம்(Zinc) போன்றவை கண்களுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை.

பிர்கமிம்மன் வில்லியம் கிறிஸ்டின், யு.எஸ் பாஸ்டன் பெண்கள் மருத்துவமனை மற்றும் ஹார்வர்டு மருத்துவ பள்ளி ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டனர். 10 ஆண்டுகளாக 38 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டது. ஆய்வின்போது பெண்கள் உணவு பழக்க முறையையும், அந்த உணவு வகைகள் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு தொடர்புடையதாக உள்ளது என்றும் ஆய்வு செய்தனர்.

ஒமேகா கொழுப்பு அமில உணவு அதிகம் எடுத்துக் கொண்ட பெண்களுக்கு மாக்யூலர் நோய் தாக்கம் 38 சதவீதம் குறைவாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெண்கள் தொடர்ந்து மீன்களை சாப்பிடுவதால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பெருமளவு கிடைக்கும். இந்த ஒமேகா அமிலம் நீண்ட கால கண் நோய்களை தவிர்க்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

கண்ணில் உள்ள ரெட்டினா விழித்திரையில் ஒரு பகுதியாக மாக்யூலர் உள்ளது. இந்த மாக்யூலர் பாதிக்கப்படுவதால் பார்வை குறைபாடு ஏற்படும். இந்த குறைப்பாட்டை தவிர்ப்பதற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ள மீன் வகைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இந்த ஆய்வு அறிக்கை பார்வையியல் தொடர்பான ஆவண இதழில் ஜுன் மாதம் வெளியிடப்பட்டுள்ளது.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 31, 2012, 08:58:12 PM
(http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/185920_452995634740846_952378508_n.jpg)


கற்பூரவள்ளி மருத்துவக் குணங்கள்:

காய கற்பம் என்பது காயம் என்னும் உடலை என்றும் இளமையுடன் வைத்திருக்க உதவும் மருந்தாகும்.

சித்தர்கள் தங்களின் தவப் பயனால் கண்டறிந்த மருத்துவ முறைகளில் கற்ப முறைக்கு தனிச்சிறப்புண்டு.

கற்ப முறையில் 1 மண்டலம் மூலிகைகளை சாப்பிட்டு வந்தால், நோய் என்னும் காலன் நம்மை நெருங்காமல் என்றும் புத்துணர்வுடனும், இளமையுடனும் வாழலாம்.
நாம் ஒவ்வொரு இதழிலும் ஒரு கற்ப மூலிகையைப் பற்றி அறிந்து வருகிறோம்.
இந்த இதழில், கற்பூர வள்ளியின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. கற்பூரவள்ளியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்தவகையான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது.
கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு. இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூர வள்ளி என்று அழைக்கப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவள்ளி அமைகிறது.

இந்தியாவில் தமிழகம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

கற்புரவள்ளி இலைகளை காயவைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு 1 சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும். சளியின் அபகாரம் குறையும்.

கற்பூர வள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும். சுருங்கியுள்ள மூச்சுக்குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து.

குழந்தைகளுக்கு உண்டான மார்புச்சளி நீங்க சிறு குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகிப்போயிருக்கும். இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் இது ஆஸ்துமா, காசநோயாக கூட மாற நேரிடும். இவர்களுக்கு கற்பூர வள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி அறவே நீங்கும்.

கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும் .
கற்பூரவள்ளி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும்.
கற்பூரவள்ளி உடலை நோயின்றி காப்பது போல், வீட்டையும் விஷப் பூச்சிகளிலிருந்து காப்பாற்றும்.

இதனை தொட்டிகளில் வளர்த்து அதன் முழுமையான பயன்களைப் பெற்று நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 31, 2012, 09:42:34 PM
(http://a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/215405_452584751448601_1911695865_n.jpg)


மரணத்தை தள்ளிப் போடனுமா? நெல்லிக் கனி சாப்பிடுங்


தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப் போடலாம் என்று கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது, இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால் முதுமையை வென்று என்றும் இளமையுடனும், துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும்தான். முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முதுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது.

ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.

நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கொண்டது. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.

நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது. எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.

இதய வால்வுகளில், இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்தி வந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 31, 2012, 09:46:58 PM
(http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/251930_450956768278066_1140602100_n.jpg)


ஏலக்காய் உடலுக்கு எவ்வளோ நல்லது தெரியுமா?

சமையலில் வாசனைக்காக அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் ஏலக்காய். அதிலும் இந்த ஏலக்காய் இந்திய உணவுகளிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும். சொல்லப்போனால், அந்த பொருள் பயன்படுத்தாத உணவுகளே இல்லை என்றே கூறலாம். மேலும் சிலர் அந்த ஏலக்காய் பிடிக்காது என்பதற்காக அதனை சேர்க்காமல் இருப்பர். ஏனெனில் மசாலா பொருளான ஏலக்காயை உணவில் சேர்ப்பதால் என்ன பயன் என்பது அவர்களுக்கு தெரியவில்வை மற்றும் பலருக்கும் தெரியாது. ஆகவே அதன் உண்மையான மருத்துவ குணம் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* ஏலக்காய் ஒரு மசாலாப் பொருள் என்பதால், அதை உணவில் சேர்க்கும் போது உடலில் இருக்கும் வயிற்றுத் தொல்லைகள் போன்றவற்றை சரி செய்யும். மேலும் உடலில் செரிமானமும் நன்கு நடைபெறும்.

* ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மூச்சுக்குழாயில் பிரச்சனை இருப்பவர்கள், அதனை சாப்பிட்டால், சரியாகிவிடும். அதிலும் ஏலக்காயை தேனுடன் கலந்து சாப்பிட்டால் தொண்டை வலி, இருமல் போன்றவை குணமாகும்.

* ஏலக்காயின் முக்கியமான பயன் என்னவென்றால். சூரிய வெப்பத்தால், உடலில் வெப்பம் அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் பக்கவாதம் வராது. அதிலும் வெளியே செல்லும் போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால், வெப்ப அலைகள் உடலை தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.

* இந்தியாவில் சில இடங்களில் ஏலக்காய் பொடி மற்றும் சந்தனப் பொடியை பேஸ்ட் போல் செய்து, தலை வலிக்கும் போது தடவுவார்கள். மேலும் சிலர் குடிக்கும் டீ-யில் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பார்கள். இதனாலும் தலை வலி குறைந்துவிடும்.

* ஆயுர்வேத கொள்கையின் படி, ஏலக்காய் உடலில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றிற்கு சிறந்தது. இவை உடலில் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்து, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே இதனை உண்டால் நன்கு ஆரோக்கியமாக வாழலாம்.

மேலும் அதனை உண்பதால், நல்ல குரல் வளத்தையும் பெற முடியும். ஆகவே இனிமேலாவது ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்துடன் வாழலாம்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 31, 2012, 09:50:59 PM
(http://a5.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/576235_449875615052848_1076721730_n.jpg)


கிஸ் மிஸ் பழம் பற்றிய தகவல் !!!! ( உலர் திராட்சை )

கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை (ஆண்மைக்கு) தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும் அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் கு ணமடையும்.

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்.

இதில் உள்ள கால்சியத் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சியபின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடகாத்திரமாக வளரும்.

தொண்டைக்கட்டு பிரச்சனை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சைப் பழங்களை சுத்தம் செய்து பசும்பாலில் போட்டுக் காய்ச்சி 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் நிவாரணம் பெறலாம்.

மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும் மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 31, 2012, 09:53:28 PM
(http://a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/207422_449485255091884_2014757205_n.jpg) (http://www.friendstamilchat.com)


பீர்க்கங்காய் நன்மைகள் மற்றும் யார் யார் இதை உண்பதை தவிர்க்க வேண்டும் !!!

பீர்க்கங்காய் உடலுக்கு குளிர்ச்சி என்று நாம் அனைவரும் அறிந்ததே!
பீர்க்கங்காய் கொடி இனத்தை சார்ந்தது.அதாவது இக்காய் சுரைக்காய், பாவக்காய், புடலங்காய் போன்றது.

மேலும் சில தகவல்கள்

1. பீர்க்கங்காய் நீர்ச்சத்தும், தாது உப்புகளும் கொண்டது.

2. பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும்.

3. இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும்.

4. வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும்.

5. பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும்.

6. பெரியவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

7. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

8. ரத்த சோகை நோய் உள்வர்கள் இரும்புச் சத்து நிறைந்த காய்கறிகளை உண்ண வேண்டும்.

9. அவரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், பீட்ரூட், முட்டைகோஸ், முருங்கைக்காய், காலி·பிளவர் போன்ற காய்கறிகளிலும், எல்லா வகை கீரைகளிலும், எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, திராட்சை போன்ற பழங்களில் இரும்புச்சத்து நிறைந்து உள்ளது.

யார் யார் இதை தவிர்கனும்:

10. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 31, 2012, 09:56:41 PM
(http://hudabeauty.com/wp-content/uploads/2012/04/orange.jpg)


ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணங்கள் பற்றிய தகவல் !!!

பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.

ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இருமுறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உண-வில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.

நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம்.
கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்

நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.

ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 31, 2012, 09:59:56 PM
(http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/318764_447608058612937_352033103_n.jpg) (http://www.friendstamilchat.com)


உயிர்காக்கும் இரத்த தானம் தானத்தில் சிறந்த தானமாக அமையும் இரத்த தானம் சரியாகப் பயன்பட்டால் !!!!

அறுவை சிகிச்சை, விபத்து போன்ற காரணங்களால் ஏற்படும் இரத்த இழப்பை ஈடுசெய்யவே இரத்தம் தானமாக பெறப்படுகின்றது. முன்பெல்லாம் இரத்த தானம் செய்ய மக்கள் பயந்தனர், அதன் காரணமாக விளம்பர வாசகங்களும், பலகைகளும் இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டன. இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள், அதனால் உடலுக்கு ஒரு பாதிப்பும் இல்லை, பெறப்படும் இரத்தம் இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும் இதுபோன்ற விவரங்களை நாம் அறிந்தோம். இதனால் இப்பொழுது இரத்த தானம் செய்ய மக்களை தேடும் நிலைமை இல்லை. பல தன்னார்வ நிறுவனங்களும், கல்லூரி மாணவர்களும் பல இணைய தளங்களில் பெயரைப் பதிவு செய்து கொண்டு எந்நேரமும் இரத்த தானம் செய்யத் தயாராக உள்ளனர்.

இவ்வாறு முகாம்கள் வாயிலாகவும், நேரடியாகவும் இரத்தம் பெறப்படுகிறது. ஆனால் பெறப்படும் இரத்தம் சரியான நபர்க்கு சரியான நேரத்தில் பயன்படுகிறதா என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சில நேரங்களில் காசுக்காக இரத்தம் விற்கப்படும் அவலங்களும், காலாவதியான இரத்தக் கலன்கள் குப்பைகளில் கிடக்கும் செய்தியும், சில பள்ளிச் சிறுவர்கள் (சிறுவர்கள்???) 200 ரூபாய் பணத்துக்காக இரத்தம் தரும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. விலை மதிப்பற்ற இரத்தம் இப்படி விரயமாவது எவ்வளவு கொடூரமானது. இவற்றையெல்லாம நம்மால் தடுக்க இயலாவிடினும் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.

ஆகவே இரத்த தானம் செய்யும் முன் கீழ்காணும் சில கருத்துக்களை நினைவில் கொள்ளுங்கள்

முடிந்த அளவு முகாம்களில் இரத்தம் தராமல் நேரடியாக இரத்த தானம் செய்யுங்கள்.

அப்படி தருவதென்றால் சரியான மருத்துவமனை, வங்கிக்கு போய்ச் சேருகின்றதா என்பதனை விசாரியுங்கள்.

இரத்தம் பெறுபவருக்கு உண்மையிலே அவசரத் தேவைதானா என்பதை தெரிந்து கொண்டு இரத்த தானம் செய்யுங்கள்.

நான் இரத்த தானம் செய்வது தவறு என்று சொல்லவில்லை, விவரங்களைத் தெரிந்து கொண்டு செய்வது நல்லது .சிலர் இதிலும் பணம் சம்பாதிகிரார்கலாம்
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 31, 2012, 10:04:09 PM
(http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/530050_447216235318786_405310881_n.jpg)


உணவும் உடற்பயிற்சியும் இதய நோயைத் தடுக்கும்!!!

இன்றைய காலத்தில் இதய நோய் வருவது என்பது புதிதான விஷயம் அல்ல. அதிலும் அத்தகைய இதய நோய் பல இளைஞர்களுக்கும் விரைவில் வருகிறது. ஏனெனில் அதிகமான மனஅழுத்தம் வேலை செய்யும் இடங்களிலும், வீட்டிலும் அதிகம் இருப்பதே, இன்றைய இளைஞர்களுக்கு விரைவில் வருவதற்கு காரணம். முதலில் மாரடைப்பு 50 வயதை கடந்தவர்களுக்கு, அதிலும் ஆண்களுக்கே அதிகம் வரும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெண்களுக்கு 40 வயதானாலே மாரடைப்பு மற்றும் இதயத்தில் பக்கவாதம் போன்றவை வந்து தொல்லை தருகிறது.

இவையெல்லாம் வருவதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கவழக்கங்கள் காரணங்களாக அமைகின்றன. ஆகவே அத்தகைய இதய நோயை வராமல் தடுக்க வேண்டுமென்றால், அதற்கு ஒரே ஈஸியான வழி நல்ல ஆரோக்கியமான உணவும், உடற்பயிற்சியும் வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உணவுகள்...

மாதுளை : கண்ணை கவரும் அழகான நிறத்தையுடைய முத்துக்கள் போன்ற பழங்கள் இதய நோய்க்கு மிகவும் சிறந்தது. பொதுவாக இதய புண்கள் அதிகம் இருந்தால், இதய நோய் விரைவில் வரும். அதனை தடுக்க தினமும் மாதுளையை ஜூஸ் செய்து குடித்தால் உடலில் இரத்த அழுத்தமானது குறைந்து, இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, அதில் இருக்கும் வைட்டமின் சி, இதயத்தில் இருக்கும் புண்களையும் சரிசெய்கிறது.

பூண்டு : இதய நோய் இருப்பவர்களை மருத்துவர்கள் பூண்டை தினமும் சாப்பிட சொல்வார்கள். மேலும் நீரிழிவு நோய் இருப்பவர்களும் பூண்டை சாப்பிட வேண்டும். பூண்டானது உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. ஆகவே தினமும் பூண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் இதய நோய் வராமல் தடுக்கலாம். மேலும் பூண்டானது இரத்தத்தின் அளவை சீராக்குவதோடு, உடலில் இருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.

ஸ்வீட் கார்ன் : கார்னில் அதிகமாக குரோமியம் மற்றும் தாதுக்கள் அதிகம் இருப்பதால், இதய நோய் வராமல் தடுக்கும். மேலும் இதில் போலேட் ஆன வைட்டமின் பி9 இருப்பதால், இவை இதயத்தில் பக்கவாதம் மற்றும் அடைப்பு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும்.

கிவி : உடலுக்கு மற்றும் இதயத்திற்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் கிவி பழத்தை தினமும் சாப்பிட்டால் நல்லது. ஏனென்றால் இவற்றில் நார் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், இவை உடலில் இருக்கும் தேவையில்லாத கொலஸ்ட்ராலை குறைக்கும். மேலும் இதில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் காப்பர் அதிகம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தாதுக்கள் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைத்து, இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

பெர்ரி : பெர்ரியில் இருக்கும் பாலிபினால், ஆரோக்கியமற்று இருக்கும் இரத்த
குழாய்களை பாதுகாக்கிறது. ஏனெனில் பாதிக்கப்பட்ட திசுக்கள் இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக் கூடும். ஆனால் பேர்ரியில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட், இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, உடலில் தேவையான கொழுப்புகளை மட்டும் அதிகப்படுத்தும். உதாரணமாக, அவுரிநெல்லிகள் இதயத்தில் இருக்கும் புண்களை குறைத்து, இதயத்தை வழுவாக்குகிறது.

மேற்கூறிய உணவுகளை உண்பதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால் தான், உடலில் இருக்கும் அளவுக்கு அதிகமான கொழுப்புகள் கரைவதோடு, கொலஸ்ட்ரால் அளவும் குறையும். மேலும் உடற்பயிற்சி செய்தால் உடலில் இருக்கும் இரத்த குழாய்கள் நன்கு வளைந்து கொடுத்து, இரத்த ஓட்டத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக ஓடச் செய்யும். அதற்கு என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்றும்
மருத்துவர்களே கூறுகின்றனர்.

உடற்பயிற்சிகள்..

தினமும் வாக்கிங் செல்ல வேண்டும். அவ்வாறு நடக்கும் போது நன்கு சுறுசுறுப்போடு நடக்க வேண்டும்.

ஜாக்கிங் செல்லும் போது மெதுவாக செல்ல வேண்டும்.

சைக்கிலிங் செய்யும் போது வேகமாக செய்ய வேண்டும்.

நீச்சல் தினசரி அடித்தால், பக்கவாதம் வராமல் இருக்கும்.

இந்த சிறு உடற்பயிற்சிகளை செய்தால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கலாம். அவ்வாறு தினமும் செய்தால் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக இருக்கும். எதற்கும் உங்களின் உடல் நிறையை பொறுத்து, மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று எதற்கும் தொடங்குங்கள் என்றும் கூறுகின்றனர்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 31, 2012, 10:07:32 PM
(http://a1.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/532180_445394248834318_730236841_n.jpg)


HOW TO SURVIVE A HEART ATTACK WHEN ALONE..

Since many people are alone when they suffer a heart attack, without help, the person whose heart is beating improperly and who begins to feel faint, has only about 10 seconds left before losing consciousness.
However, these victims can help themselves by coughing repeatedly and very vigorously.

# A deep breath should be taken before each cough, and the cough must be deep and prolonged, as when producing sputum from deep inside the chest.

# A breath and a cough must be repeated about every two seconds without let-up until help arrives, or until the heart is felt to be beating normally again.

# Deep breaths get oxygen into the lungs and coughing movements squeeze the heart and keep the blood circulating.

# The squeezing pressure on the heart also helps it regain normal rhythm. In this way, heart attack victims can get to a hospital.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 31, 2012, 10:13:28 PM
(http://a5.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-prn1/532167_442405322466544_1020753484_n.jpg)


துளசி (Ocimum sanctum) மூலிகைகளின் அரசியாக போற்றப் படுகிறது. துளசியை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பலரது வீடுகளின் கொல்லைப் புறத்தில், துளசிமாடம் அமைந்துள்ளதை இன்றுகூட நாம் காணலாம்.

துளசியானது இடியைத் தாங்கும் சக்தி கொண்டது என அறிவியல் அறிஞர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். இதனால் தானோ என்னவோ வீடுகளில் துளசி வளர்த்திருப்பார்கள் என தோன்றுகிறது.

துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது.

இதற்கு அரி, இராமதுளசி, கிருஷ்ண துளசி, திருத்துளாய், துளவு, குல்லை, வனம், விருத்தம், துழாய், மாலலங்கர் என பல பெயர்கள் உண்டு.

துளசி இந்தியா முழுவதும் காணப்படும் செடி வகையாகும். இதில் நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என பல வகைகள் உள்ளன.

துளசியை பொதுவாக தெய்வீக மூலிகை என்றே அழைப்பார்கள். கற்ப மூலிகைகளில் இதற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்து மதத்தினர், இலட்சுமி தேவியின் அம்சமாகவே எண்ணி இதனை வழிபடுகின்றனர்.

துளசியின் பயன்கள்

· இருதயம், ரத்த நாளங்கள், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை பலப்படுத்தும் தன்மையும் ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர்படுத்தும் தன்மையையும் கொண்டது.

· துளசி உடல் சூட்டை சீரான நிலையில் பாதுகாக்கிறது.

· நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

· மன அழுத்தத்தைப் போக்கும்தன்மை கொண்டது.

· உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது.

· இருமல் மற்றும் சுவாச நோய்களுக்கு அரு மருந்தாக பயன்படுகிறது.

· கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது.

· ஜூரத்தைக் குறைக்கும் குணம் கொண்டது.

· வயிற்றுப் புண், வாய்ப்புண்களை குணப் படுத்தும்.

துளசியை கற்ப முறைப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் நோயில்லா பெருவாழ்வு வாழலாம்.

குழந்தைகளுக்கான மார்புச்சளி நீங்க

துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் கற்பூரவல்லி சாறு கலந்து சூடாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மார்புச்சளி, மூச்சு விட முடியாமை, சளியினால் மூச்சுத்திணறல் போன்றவை நீங்கும். மார்புச்சளி வெளியேறும்.

துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு சம அளவு சேர்த்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்வு நீங்கி உடல் புத்துணர்வடையும்.

பெண்களுக்கு

துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியபின் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக்கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (இரத்தப் போக்கு) குணமாகும்.

ரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறில் 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.

உடல் எடை குறைய

துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.

குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.

அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

துளசி இலை – 9 எண்ணிக்கை

கடுக்காய் தோல் – 5 கிராம்

கீழாநெல்லி – 10 கிராம்

ஓமம் -5 கிராம்

மிளகு – 3

எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.

தொண்டைக்கம்மல், வலி நீங்க

தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும்.

10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு நல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.

சிறுநீரகக் கல் நீங்க

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

சிறு சிறு பூச்சிக் கடிகளின் விஷம் நீங்க

கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பூச்சிக் கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும். அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

வாய்ப்புண் , வாய் நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இதனால் வாய் நாற்றம் வீசும். வாய்ப்புண் ஆற துளசி இலையை பறித்து நீர்விட்டு அலசி, வாயில் வைத்து மென்று மெல்ல மெல்ல சாறினை உள்ளிறக்கினால், வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆறும். வாய் நாற்றமும் நீங்கும்.

மன அழுத்தம் நீங்க

மன அழுத்தத்தைப் போக்கும் குணம் துளசிக்கு உண்டு. துளசி இலையை நன்கு மைபோல் அரைத்து அதனுடன் வில்வ இலை சாறு சேர்த்து லேசாக சூடாக்கி அருந்தினால் மன அழுத்தம் நீங்கும்.

பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர

துளசி இலை, புதினா இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் கிராம்புப் பொடி சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களின் சொத்தை, பல் ஈறு வீக்கம் மேலும் பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

தலைவலி தீர

ஒரு கைப்பிடி துளசி இலை மூன்று மிளகு, 1 துண்டு இஞ்சி எடுத்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.

கண்நோய்கள் தீர

துளசி இலை ஊறிய நீரை 1 மண்டலம் அருந்தி வந்தால் முக்குற்றங்களில் ஒன்றான பித்த அதிகரிப்பு குறையும். இதனால் கண் நரம்புகளின் சூடு குறைந்து நரம்புகள் பலப்படும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது.

சரும நோய்கள் நீங்க

தேமல், படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சரும நோய்கள் நீங்கும்.

துளசி இலைக்கு உள்ளத்தைத் தூய்மையாக்கும் குணமும் உண்டு.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 31, 2012, 10:14:14 PM
(http://a1.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/578840_442309899142753_1216011696_n.jpg)


சீதாப்பழத்தில் இத்தனை விஷயமா !!!! (நோனா பழம் )

சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple(Sugar Apple) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்:
சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்:
சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்:
விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்

எலும்பு பலமடையும்:
சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்:
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:
சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on August 31, 2012, 10:36:12 PM
(http://a5.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/527088_464566083574048_582972304_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 01, 2012, 11:01:26 PM
(http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/168835_441906089183134_427018955_n.jpg)


கவர்ச்சியான கண் அழகைப் பெற...

1. கண் அழகாக பெரிதும் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்யும் காய்கனிகளான கேரட், ஆரஞ்சு, பால், திராட்சை, முட்டை, முன் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் கண்கள் ஆரோக்கியமுடனும், அழகுடனும் இருக்கும்.

2. இரவில் படுக்கும் முன், கண்களுக்கு மை தீட்டும் பழக்கம் உள்ளவர்கள் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். இல்லாவிட்டால் கண் மையில் இருக்கும் இரசாயப் பொருட்கள் கண்களில் தங்கி கெடுதலை ஏற்படுத்தும்.
3. வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது, மறக்காமல் முகத்தையும், கண்களையும் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். அப்படி செய்தால் முகத்தில் மற்றும் கண்களில் இருக்கும் தூசிகள் வெளியேறி கண்கள் பாதுகாப்புடன் இருக்கும்.

4. கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் நீங்க, வெள்ளரிக்காயின் சதைப்பகுதியை எடுத்து கண்களை மூடிக் கொண்டு வைத்து, 10 நிமிடம் கழித்து எடுத்து விடவும். இதனை தினமும் செய்து வந்தால், கண்களுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு சோர்வு இல்லாமல், கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். மேலும் கருவளையமும் நீங்கும்.

5. கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், கண்கள் சோர்வடையும் நேரத்தில் 10 நிமிடம் கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்து, பின் வேலை செய்தால் கண்கள் புத்துணர்ச்சிப் பெறும்.
பொதுவாக பெண்களுக்கு முகப் பொலிவை கண்கள் தான் காட்டும். ஆகவே அத்தகைய கண்களை அலட்சியமாக எண்ணாமல், சரியான முறையில் கண்களை பராமரித்தால் முக அழகானது இன்னும் மெருகேறும்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 01, 2012, 11:05:26 PM
(http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/528161_441545722552504_1743649022_n.jpg)


கூந்தல் உதிர்வு பிரச்சினைகள் சிலவற்றை எதிர்கொள்ள ஆலோசனைகள் சில:

*தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்துவந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து அதை தண்ணீரில் கலந்து, மிதமாக சூடுபடுத்தி தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம்(1/2Hr) கழித்த பின், குளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.

*அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.

*வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

*கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

*வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

*ஐந்தாறு நெல்லிக்காய்களை கொட்டை நீக்கி எடுத்து கொள்ளவும். அதை எலுமிச்சம் பழம் சாறு விட்டு, அம்மியில் வைத்து மை போல் நன்றாக அரைக்கவும்.
இதை தலையில் தேய்த்து குளிக்கவும். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை செய்துவந்தால், முடி உதிர்வது நின்றுவிடும்.
இளநரை இருந்தாலும் வெகு விரைவில் மறைய ஆரம்பிக்கும்

* பூண்டு ஆயில் மற்றும் பூண்டு சாறு ஆகியவற்றால் தலையில் நன்கு மசாஜ் செய்து வந்தால் கூந்தலின் அடர்த்தி அதிகரிக்கும். உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது கூந்தல் வளர்ச்சிக்கு துணை புரியும்

*சீரகத்தை நன்கு கறுப்பாகும் வரை வறுத்து பொடி செய்து பின் அதை ஆலிவ் ஆயிலுடன் கலந்து வைக்கவும். இந்த எண்ணெயை, தலையில் தேய்க்கும் முன் நன்கு கலக்கி விட்டு தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
பின்னர் சிறிது நேரம் நன்றாக ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வது நாளடைவில் குறையும்

*புதிதாக காய்ச்சப் பட்ட பசும்பாலால் தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும். பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, நாளடைவில் கூந்தல் உதிர்தல் குறைந்து விடும். இதேபோல் பிரஷ் கிரீம் அல்லது வெண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங்கும்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 01, 2012, 11:07:01 PM
(http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/380592_440831525957257_1705548173_n.jpg)

Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 01, 2012, 11:10:06 PM
(http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/282690_439573676083042_1139364215_n.jpg)


இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி !!!! ( Celery )

இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி செலரி (Celery) என்பது சாலட் கீரை வகையைச் சேர்ந்ததாகும். இதைச் சமைக்காமலேயே சாப்பிடலாம்.

செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக் காம்பு முதலியவை உணவாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் கீரைத்தண்டு மாதிரி அடிக்கடி இதைச் சமைத்துச் சாப்பிடும் காலம் ஆரம்பமாகிவிட்டது.

காளானைப் போலவே இதுவும் ஓர் அரிய காய்கறியாகும். 1994 ஆம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மின்க்லீ என்பவர் இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டார். தினமும் அவர் இரண்டு செலரித் தண்டுகள் வீதம் ஒரு வாரம் வரை சாப்பிட்டு, அத்தொல்லையிலிருந்து குணமாகி இயல்பான நிலைக்கு வந்துவிட்டார். இவர் மகன் குலாங் டிலீ, ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர். இவர் செலரியிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு வித இரசாயனப் பொருளை ஊசி மூலம் எலிகளுக்கு ஊட்டினார். அந்த எலிகளின் இரத்த அழுத்தம் 12 முதல் 14 சதவிகிதம் வரை குறைந்திருந்தது. இரத்த அழுத்தம் குறைகிறதே என்று இதை அதிகமாகச் சாப்பிடவும் கூடாது. இந்த உண்மையையும் இவர் கண்டுபிடித்துள்ளார். அளவுடன் செலரியை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்த நோயைப் பரிபூரணமாகக் குணமாக்கிக் கொள்ளலாம்.

குணமாகும் நோய்கள்!

உணவு செரிமானமின்மை, ஆஸ்துமா, இரத்த சோகை, சாகேமியா, உடற் பலவீனம், இதய நோய்கள், சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், தூக்கமின்மை, மூட்டு வாதம், ஊளைச்சதை, நரம்புக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் முதலிய நோய்களை செலரித் தண்டுகள் குணப்படுத்துகின்றன.

‘திடீர்’ நெஞ்சுவலி இனி இல்லை!

இதில் உள்ள மக்னீசியமும், இரும்புச் சத்தும் குறிப்பிடத்தக்கவை. அவ்விரண்டும் அதிக அளவில் இருப்பதால் இரத்த சோகை, லூகேமியா முதலிய நோய்கள் உடனே குணமாகின்றன. இரத்த விருத்தியும் விரைந்து ஏற்படுகிறது.

இதயமும், இதயத்திற்குச் செல்லும் நரம்புகளும் தடையின்றி இயங்க மக்னீசியம் கூடுதலாகத் தேவை. அந்தத் தேவையை செலரியில் உள்ள மக்னீசிய உப்புகள் பூர்த்தி செய்துவிடுகின்றன. இதனால் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன.

100 கிராம் செலரியில் கிடைக்கும் கலோரி 37 ஆகும். இதன் இலைகளில் 88% ஈரப்பதமாகும்; புரதம் 6.3%, கொழுப்பு 0.6%, நார்ச்சத்து 1.4%, கார்போஹைடிரேட் 1.6%, தாது உப்புகள் 2.1% ஆகும். தாது உப்புகளும் வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவற்றுடன் வைட்டமின் - ‘ஏ’, வைட்டமின் - ‘பி’ வைட்டமின் - ‘சி’ போன்றவையும் இருப்பதால் இது ஓர் அடிப்படை உணவும் ஆகிறது.

உடல் வளர்ச்சிக்குப் புரதம் தேவை. பிற காய்கறிகளில் அதிக பட்சம் 2% முதல் 3% வரை புரதம் உள்ளது. ஆனால், அது செலரியில் 6.3% ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காரணங்களால் (தாது உப்புகளால்) இரத்தத்தில் புளிப்பு ஏற்பட்டு இரத்தம் கெட்டுவிடுவது தடுக்கப்படுகிறது. அத்துடன் இரத்தத்தில் நஞ்சுப் பொருள்கள் சேர்வதும் தடை செய்யப்படுகிறது. மேலும் கீல் வாதம், ஊளைச் சதை நோய் போன்றவையும் குணப்படுத்தப்படுகின்றன.

செலரியின் தண்டுகளையும் இலைகளையும் சூப்பாகத் தயார் செய்து சாப்பிடலாம்; இல்லை எனில் சாறாக மாற்றி அருந்தலாம். செலரியின் விதையும் மருத்துவக் குணங்கள் நிரம்பியது. அதைக் சாறாக்கி வாத நோய்க்காரர்கள் அருந்தலாம்.

நரம்புக் கோளாறுகளுக்கு….

வலிப்பு நோயால் ஏற்பட்ட இசிப்பு நோய், நரம்புத் தளர்ச்சி நோய் முதலியவை குணமாகும். இதற்காகச் செலரித் தண்டு, இலை ஆகியவற்றின் சாற்றை காரட் சாறுடன் சேர்த்து அருந்த வேண்டும். இந்த முறையில் தினமும் ஒரு வேளை அருந்தினால் நரம்பு நோய்கள் குணமாகும்.

புற்றுநோய், நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, தொண்டை தொடர்பான நோய்கள் ஆகியன குணமாகச் செலரி சூப் அருந்த வேண்டும். அல்லது இலை, தண்டு ஆகியவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கிச் சாப்பிட வேண்டும்.

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்கவும் இத்தண்டு பயன்படுகிறது. வாரத்திற்கு நான்கு நாள்களாவது செலரியைச் சமையலில் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படா. கற்கள் இருந்தாலும் இது கரைத்துவிடும்.

யுனானி வைத்தியத்தில் செலரி வேரைச் சிறுநீரகக் கற்களைக் கரைக்க மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

சோடியம் உப்பு அதிகமாய் இருப்பதால் இது மூட்டு வீக்க நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலைகளையும் மெல்லிய தண்டுகளையும் சாறாக்கி அருந்த வேண்டும். இந்த முறையில் அருந்தினால் மூட்டு வீக்கம் குணமாகும்.

சத்துணவு டானிக்!

உடல் பலவீனமானவர்களுக்கும் சத்துணவுக் குறைவால் ஊட்டம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் எளிய டானிக் ஒன்று இருக்கிறது.

அது இதுதான்.

செலரியின் வேரைக் காய வைத்துப் பொடியாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி பொடியுடன் அதே அளவு தேனும் சேர்த்துச் சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு வேளை இப்படிச் சாப்பிட்டால் உடல் பலன் பெறும்.

‘சாலட்’ செய்வது உண்டா?

மிகவும் நறுமணமுள்ள காய்கறி இது. எனவே, இதை மற்றக் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தால் மணமும் ருசியும் முன்னணியில் நிற்கும்.

வெள்ளரிக்காய், தக்காளி, முள்ளங்கி, காரட் போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு சாலட் (Salad) செய்வார்கள். இதில் செலரியின் இலைகளையும், தண்டுகளையும் வெட்டிப் போட்டு எலுமிச்சைச் சாற்றையும் கலக்க வேண்டும். பச்சைக் காற்கறிகள் சேர்த்த இந்த சாலட் சத்துணவாக ஆகிவிடுகிறது.

செலரியின் கொட்டைகள் சிறுநீர் நன்கு பிரிய பயன்படுகின்றன. வயிற்றுப் பொருமலைக் குணமாக்குகின்றன. தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. நரம்புத் கோளாறுகளைக் குணமாக்குகின்றன. இந்த விதைகளைக் காயவைத்து இடித்துத் தூளாக வைத்துக்கொண்டு தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும்.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட செலரியின் தாயகம் சீனாதான். கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இருந்தே செலரியை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஐரோப்பாவிலும் இதே காலகட்டத்தில் செலரியைப் பயிர் செய்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் செலரியின் மருத்துவக் குணங்களுக்காகத் தோட்டங்களில் வளர்க்க ஆரம்பித்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்புதான்.

செலரியை அடிக்கடி உணவில் சேர்த்து உடல் உறுதி பெறுவோம்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 01, 2012, 11:11:45 PM
(http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/599253_433473710026372_1432844032_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 01, 2012, 11:21:57 PM
(http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/428478_432257830147960_1782719338_n.jpg)


குழந்தைகளுக்கு அதிக சத்துகளை அளிக்கும் பேரிக்காய்

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள்.வெளித்தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.
பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு:

கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து

இதயப் படபடப்பு நீங்க:

இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்

சிறுநீரக கல்லடைப்பு நீங்க:

இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.
அத்துடன் உடல் சூட்டைத் தணிக்கும், கண்கள் ஒளிபெறும், நரம்புகள் புத்துணர்வடையும் மற்றும் தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும், குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கு

வளரும் குழந்தைகளுக்கு:

வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது.

பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.

வாய்ப்புண் குணமாக:

வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 01, 2012, 11:22:57 PM
(http://a1.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/197754_432149936825416_419922084_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 01, 2012, 11:24:35 PM
(http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/252241_431687680204975_1421532400_n.jpg)


பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் !!!

பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

காய்கறி வகைகளில் ஒன்றான இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.

உடல் சூட்டைத் தணிக்கும், சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும்.

புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் நீர்விதை பயன்படுத்தப்படுகின்றது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது

ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும், இரத்தசுத்தியாகும்.

பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல்,நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது இரத்தக்கசிவு ஏற்பட்டால் இரத்தக்கசிவை நிறுத்திவிடும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் இரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.

பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும்(தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும்
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 01, 2012, 11:26:52 PM
(http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/534403_431104486929961_437417191_n.jpg)


வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால்
உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

மாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலைப் பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைக.ள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது..

நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மைல் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது. இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ?? துரதஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும்.

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்.

இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ
அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..

உயிரைக் காக்கும் இது போன்ற விசயங்களை பகிருங்கள் !!!!
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 01, 2012, 11:28:37 PM
(http://a1.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/600448_431078940265849_1583782456_n.jpg)


~Health benefits of Surya Namaskar~

The simple Surya Namaskar that has been practiced in India for years has recently found a whole lot of takers.And if you want a good start to your day, what better than the Surya Namaskar, which is known to have a host of healthbenefits. There are 12 different poses to do in a Surya Namaskar and you're known to have finished a complete round when you've performed two consecutive sets.

Surya Namaskar stimulates almost every system in your body - the cardiovascular system because it keeps the heart strong and, the digestive system as well as the nervous system.

- It also makes endocrinal glands like the thyroid, parathyroid and pituitary glands, function normally.

- Practising the Surya Namaskar regularly is also known to ease stress and giveyou peace of mind besides increasing your levels of concentration.

-If you have trouble sleeping at night, the Surya Namaskar will help you fall asleep without using any external stimulants.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 02, 2012, 09:55:00 PM
(http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/580029_431031566937253_94934178_n.jpg)

நகங்கள் வெள்ளையாக இருக்க ஆசையா?

நகங்கள் வெள்ளையாக....

1. எலுமிச்சை ஒரு சிறந்த நகங்களை அழகுபடுத்த பயன்படும் பொருள். ஒரு துண்டு எலுமிச்சை பழத்தை எடுத்து நகங்களில் சிறிது நேரம் தேய்த்து, ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இதனால் நகமானது வெள்ளையாக மின்னும்.

2. சிறிது எலுமிச்சைபழச்சாற்றை சோப்புத் தண்ணீரில் விட்டு, 4 முதல் 7 நிமிடம் வரை ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலசவும்.

3. எலுமிச்சையானது நல்ல மருத்துவ குணம் கொண்டது. பெரும்பாலும் நகங்கள் வெள்ளையாக தெரியாமல் இருக்க காரணம், நகங்களின் இடையில் நீண்ட நாட்கள் அழுக்குகள் இருப்பதாலே. இவ்வாறு அழுக்குகள் நீண்ட நாட்கள் தங்கி அதன் நிறத்தை மாற்றிவிடுகிறது. இத்தகைய அழுக்குகள் போக எலுமிச்சை சாற்றில் தினமும் நகங்களை ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் நகங்களானது நல்ல பொலிவுடன் இருக்கும்.

4. பேக்கிங் சோடாவை பயன்படுத்தியும் நகங்களை வெண்மையடையச் செய்யலாம். வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது பேக்கிங் சோடாவை போட்டு கரைத்து, பின் நகங்களை ஊற வைத்தால் நகமானது பார்க்க அழகாக இருக்கும். இதனை தினமும் செய்யாமல், வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே போதும்.

5. வெள்ளை வினிகரும் ஒரு சிறந்த பொருள். வெதுவெதுப்பான சோப்பு நீரில் சிறிது வெள்ளை வினிகரை சேர்த்து 8 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவலாம்.

6. எப்படி பற்கள் வெண்மையாக இருக்க பேஸ்ட்டை பயன்படுத்துகிறோமோ, அதேபோல் நகங்களையும் பேஸ்ட்டால் வெள்ளையாக்கலாம். போஸ்ட்டை நகங்களில் தடவி 4 8 நிமிடம் உற வைத்து, பின் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவினால், நகமானது வெள்ளையாகும்.

7. ஒரு துண்டு எலுமிச்சையுடன் உப்பைத் தொட்டு, நகங்களில் கொஞ்ச நேரம் தேய்த்தால் நகங்கள் வெள்ளையாக மின்னுவதோடு, நகங்கள் வழுவழுப்போடும் பளபளப்போடும் காணப்படும்.

இவ்வாறு செய்தால் நகங்களை வெள்ளையாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளலாம்
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 02, 2012, 09:57:21 PM
(http://a5.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/428439_429904713716605_1571726129_n.jpg) (http://www.friendstamilchat.com)

பலாப்பழம் சாப்பிடுங்க!!! உடல் ஆரோக்கியமா இருக்கும்...

முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி மற்றும் தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள்.

1. பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.

2. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

3. ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும்.

4. தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

5. குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.

6. வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.

7. நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.

ஆகவே இந்த அற்புதப் பழத்தை உண்டால், ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 02, 2012, 09:59:21 PM
(http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/480796_429382707102139_1121028485_n.jpg)

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கடுகு,சீரகம்,ஏலக்காய்

உணவு வகைகளில் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் வாசனை பொருட்களாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.
அவை, உணவுக்கு வாசனை மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருபவை. அந்த வாசனைப் பொருட்களை, தற்போதும் சமையலில் பயன்படுத்தி வந்தாலும், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை. உணவில் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள் குறித்து, இந்திய பயிர் பதன தொழில் நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:

பட்டை: செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது. இதில் உள்ள சின்னமிக் அமிலம் உணவை பதப்படுத்த உதவுகிறது.

ஜாதிக்காய்: பல்வலி, தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, ஆண்மையின்மை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. ரத்த ஓட்டம், ஒருமனப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.

கிராம்பு: நுரையீரல் தொடர்பான நோய், காயங்களினால் திசுக்களில் ஏற்படும் வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள ஒட்டுண்ணி, பூஞ்சை, பாக்டீரியாக்களை அழிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இஞ்சி : மலச்சிக்கல், வயிற்று கோளாறு ஆகியவற்றை போக்குகிறது. நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் காயங்கள் ஆறும் தன்மையை அதிகரிக்கும் தன்மை இஞ்சியில் ள்ளது. குமட்டலை தவிர்க்க உதவும்.

புதினா: ஜீரண உறுப்பை சீர்செய்து, மலச்சிக்கலை குறைக்கும் தன்மை இதில் உள்ளது. உணவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது. ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை தடுக்கும் திறன் வாய்ந்தது.

ஏலக்காய்: வாயுவை நீக்குதல், ஜீரண உறுப்புகளை திடப்படுத்துதல், சோர்வை போக்குதல், நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி குறைத்தல் போன்ற பணிகளை ஏலக்காய் செய்கிறது. ஏலக்காய் ஊறவைத்த நீர் தொண்டை உலர்வதை தடுக்கும்.

மல்லி: செரிமானத்திற்கு உதவும் மல்லி, இதயத்திற்கு நல்லது. இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும்.

மஞ்சள்: காயங்களை குணப்படுத்த உதவுகிறது. இரும்பு சத்து அதிகம் இருப்பதால், இதை தினசரி உட்கொள்ளும் போது ரத்த சோகையை தவிர்க்கலாம். குடல் நோய்கள் மற்றும் வயிற்றுபோக்கை குணப்படுத்தும். இதன் சாறு படர்தாமரையை குணப்படுத்தும்.

சோம்பு: வாயுவை குறைத்தல் மற்றும் பெருங்குடல் நோயை குணமாக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது சோம்பு.

பெருங்காயம்: கக்குவான், இருமல், நுரையீரல் நோய்களை தடுக்கும். உடலில் வாயு நீக்கி, செரிமானத்தை கொடுக்கும்.

சீரகம்: சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும்.

வெந்தயம்: நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. மோருடன் சேர்த்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கை நீக்குகிறது.

கடுகு: இதில் உள்ள சல்பர், அப்லோ டாக்சின் போன்றவை நச்சுத் தன்மையை நீக்கும். இருமல், நீரிழிவு, பக்கவாதம், தோல் நோய் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

பூண்டு: வயிற்றுபோக்கு மற்றும் வாயுவை தவிர்க்க உதவுகிறது. காயங்கள், கொப்புளங்கள் மீது பூண்டை தடவினால் விரைவில் குணமடையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் வீக்கம், கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்கிறது. மூலத்தை குணப்படுத்துகிறது.

ஓமம்: இதன் தைலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும். இதன் எண்ணெய் நுண்ணுயிர்களை அழிக்கும். வாயு தொல்லை, வயிற்றுபோக்கு, வாந்தி, வயிற்று வலி, ஜலதோஷம், புண், சிரங்கு, தொண்டை கோளாறு தீர்க்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 02, 2012, 10:11:02 PM
(http://a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/551204_426098324097244_538734098_n.jpg)

புத்துணர்ச்சி தரும் சுரைக்காய் ஒரு உன்னத மருந்து !!!

மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.

நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.

சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.

சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

உடல் சூடு நீங்க

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

சிறுநீர் பெருக

மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.

பித்தத்தைக் குறைக்க

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

· சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

· உடலை வலுப்படுத்தும்.

· பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.

· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

· குடல் புண்ணை ஆற்றும்.

· மலச்சிக்கலைப் போக்கும்

· மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 02, 2012, 10:27:49 PM
(http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/601180_421390294568047_807074231_n.jpg)


What You Can Do To Improve Your Health Now!
1. Eat a vegetable
2. Eat fruit
3. Eat berries & grapes
4. Make a healthy smoothie like Juice PLUS complete!
5. Go run
6. Play
7. Laugh
8. Take a 30 minute nap
9. Relax
10. Breathe (deeply)
11. Meditate
12. Think
13. Watch a funny movie
14. Tell a joke
15. Hang out with friends
16. Spend time with your loved ones
17. Call or visit your parents
18. Call or visit your brothers and sisters
19. Call or visit your children or play with someones kids
20. Call or visit your grandparents
21. Volunteer
22. Give back
23. Help someone else
24. Give someone a hug
25. Give someone a kiss
26. Truly listen
27. Be grateful
28. Write down what you're grateful for
29. Tell someone else what you're grateful for
30. Read a book that interests you
31. Teach someone what you know
32. Practice what you preach
33. Take a walk
34. Go biking
35. Go for a hike
36. Go swim
37. Empty out your pantry and throw away the junk
38. Stop eating processed foods
39. Drink water
40. Drink tea
41. Forgive someone you're angry with
42. Forgive your parents
43. Forgive yourself
44. Move on.
45. Praise!
46. Eat an apple.
47. Give to a charity you believe in.
48. Do some pushups.
49. Do situps.
50. Do some jumping jacks.
51. Go play in a sprinkler with your kids. If you don't have kids, go find some and play with them.
52. Listen to an interview with someone who overcame a horrible disease
53. Set a health goal. How long do you want to live? Is there anything you'd like to improve about your health? Write it down!
54. Pay attention to your body. What hurts? What's uncomfortable? What's good? What's right? What feels great? Do more of what feels good!
55. Let go of your emotional baggage.
56. Make a new friend.
57. Smile.
58. Make someone else smile!
59. Call an old friend and reconnect.
60. Take a vacation.
61. Acknowledge someone who has helped you before.
62. Do something new.
63. Do something crazy!
64. Do what you fear most.
65. Schedule a massage.
66. Give yourself a massage.
67. Give someone else a massage.
68. Take an epsom salt bath.
69. Take a bubble bath.
70. Give yourself a foot bath.
71. Give up whining and complaining. For good.
72. Do what makes you happy.
73. Find out what you're here for.
74. Subscribe to a blog.
75. Never give up.
76. Stretch your muscles.
77. Stretch yourself.
78. Do something you've always wanted to do but you've been afraid of trying.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 02, 2012, 10:29:53 PM
(http://a1.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/389747_419284214778655_510834968_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 02, 2012, 10:32:05 PM
(http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/564978_418708811502862_1747326936_n.jpg)

STROKE: Remember The 1st Three Letters... S.T..R ...
My friend sent this to me ...and encouraged me to post it and spread the word. I agree. If everyone can remember something this simple, we could save some folks.

STROKE IDENTIFICATION:
During a party, a friend stumbled and took a little fall - she assured everyone that she was fine and just tripped over a brick because of her new shoes. (they offered to call ambulance)

They got her cleaned up and got her a new plate of food - while she appeared a bit shaken up, Ingrid went about enjoying herself the rest of the evening. Ingrid's husband called later telling everyone that his wife had been taken to the hospital - (at 6:00pm , Ingrid passed away.)
She had suffered a stroke at the party . Had they known how to identify the signs of a stroke, perhaps Ingrid would be with us today.

Some don't die. They end up in a helpless, hopeless condition instead. It only takes a minute to read this...

STROKE IDENTIFICATION:

A neurologist says that if he can get to a stroke victim within 3 hours he can totally reverse the effects of a stroke...totally. He said the trick was getting a stroke recognized, diagnosed, and then getting the patient medically cared for within 3 hours, which is tough.

RECOGNIZING A STROKE

Remember the '3' steps, STR . Read and Learn!
Sometimes symptoms of a stroke are difficult to identify. Unfortunately, the lack of awareness spells disaster.
The stroke victim may suffer severe brain damage when people nearby fail to recognize the symptoms of a stroke.
Now doctors say a bystander can recognize a stroke by asking three simple questions :

S * Ask the individual to SMILE ..
T * = TALK. Ask the person to SPEAK A SIMPLE SENTENCE (Coherently) (eg 'It is sunny out today').
R * Ask him or her to RAISE BOTH ARMS .

If he or she has trouble with ANY ONE of these tasks, call the ambulance and describe the symptoms to the dispatcher.

NOTE : Another 'sign' of a stroke is
1. Ask the person to 'stick' out their tongue.
2. If the tongue is 'crooked', if it goes to one side or the other that is also an indication of a stroke.

A prominent cardiologist says if everyone who gets this status shares it; you can bet that at least one life will be saved.......
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 02, 2012, 10:33:45 PM
(http://a1.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/398297_413129182060825_851748067_n.jpg)

சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...

அக்னி வெயில் சுட்டெரிக்கும் இந்த டைம்ல `ஜலதோஷ' பிரச்சினை அதிகமாக வருகிறது. இதற்கு காற்றின் வழியாக பரவும் வைரஸ் தான் காரணம். மேலும் தவறான உணவு பழக்கம் காரணமாகவும் வைரஸ்கள் தொற்றி ஜலதோஷத்தை உண்டாக்குகிறது. இந்த ஜலதோஷம் முற்றி வரும் விளைவு தான் சைனஸ்.

பொதுவாக ஜலதோஷம் 3 நாளிலோ அல்லது அதிகபட்சம் 2 வாரத்திலோ குணமடைந்து விடும். அப்படி குணமாகவில்லை என்றால் அவர்களுக்கு சைனஸ் என்று தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அறிகுறிகள்

மூக்கின் முக்கிய பாகங்களாக இருப்பது சைனஸ் அறைகள். அப்போது ஜலதோஷத்தால் உருவாகும் சளி அந்த சைனஸ் அறைகளில் தங்கி கிருமிகலந்த சீழாகி மாறி விடுகிறது. அதனால் நன்றாக சுவாசிக்க முடியாது. தலை பாரமாக இருக்கும். சரியாக பேசவும் இயலாது. குனிந்தாலும், நிமிர்ந்தாலும் கூட `விண் விண்' என்று தலை வலிக்கும். லேசாக இருமினாலும் வலி ஏற்படும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். வாசனை தெரியாது. ருசியை உணர முடியாது.

மூக்கு எதற்கு அடைக்கிறது?

மூக்கில் உள்ள சைனஸ் அறைகள் அடைக்க பல காரணங்கள் உள்ளன. மூக்கின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர் சிலருக்கு சற்று வளைந்து இருக்கும். அந்த தடுப்புச் சுவர் நடுவில் இருந்தால் சைனஸ் அறைகளின் உள்ளே காற்று சென்று வருவதில் எந்த தடையும் இருக்காது.

மாறாக அது வளைந்து இருந்தால் அதன் அருகில் இருக்கும் சைனஸ் அறையின் வாசலை அது எப்போது வேண்டுமானாலும் அடைத்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. சைனஸ் அறை வாசலில் உள்ள சதை வளர்ச்சி ஏற்பட்டாலும் அடைத்துக் கொள்ளும். மேலும் தூசுகள் நிரம்பிய இடங்களில் வேலை பார்த்தால் மூக்குக்குள் தூசுகள் சென்று ஜவ்வுகளைத் தாக்கி சளி தொந்தரவை ஏற்படுத்தி விடும்.

தடுக்கும் முறைகள்

கோடையில் 2 வகையாக சைனஸ் பிரச்சினையை உண்டாகும். ஒன்று திடீரென்று வந்து, அதிக வலியை தரும் சைனஸ். இதை நாசில்ஸ் ஸ்பிரே என்ற நோய் எதிர்ப்பு மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்தி விடலாம். மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை வரை போக வேண்டியதிருக்கும்.

மற்றொன்று நிரந்தரமானது ஆனால் குறைவான வலியைத் தரும் சைனஸ். இதற்கு முதலில் என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்தி விட முடியாத நிலையில் வலியை மட்டுமே முடிந்தது. ஆனால் தற்போது `என்டோஸ்கோப்பிக்' சைனஸ் அறுவை சிகிச்சை முறையில் அதை குணப்படுத்த முடியும். இந்த சிகிச்சையில் மூடப்பட்ட சைனஸ் அறை கதவை திறந்து உள்ளே இருக்கும் சீழ் வெளியேற்றப்படுகிறது.

மேலும் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால் எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவதோடு அவற்றில் இருப்பது சளியா அல்லது சீழா என்பதையும் மிகத்துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதனால் அறுவை சிகிச்சை எளிதாகி விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 02, 2012, 10:36:11 PM
(http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/246408_411348725572204_765512116_n.jpg)

ஆண்மையை விருத்தி செய்யும் அரைக்கீரை!

உடல் ஆரோக்கியத்தில் கீரைகள் முக்கிய பங்குவகிக்கின்றன. தினசரி ஏதாவது ஒரு வடிவத்தில் கீரைகளை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கீரைகளில் பலவகைகள் உள்ளன. ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு வடிவைத்தில் மனிதர்களுக்கு நன்மை தருகின்றன.

பித்த நோய்கள்

அகத்திக் கீரைக்கு பித்தம் தொடர்பான குணமாகும், ஜீரணசக்தி உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுத்தரும். இது மலத்தை இளக்கி வெளியேற்றும். சிறிதளவு வாயுவை உண்டு பண்ணும். உயிர்ச்சத்து ‘ஏ’ மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியையும், கண்பார்வை தெளிவையும் எலும்புகளுக்கும் பலம் கொடுக்கும். ஆரைக் கீரைக்கும் பித்தம் தொடர்பான கோளாறுகளை போக்கும். அளவு மீறிப் போகும் சிறுநீரை கட்டுப்படுத்தி சமநிலைக்கு கொண்டு வரும்.

பொன் போன்ற மேனி

சருமம் பொன்போல பிரகாசிக்க தினசரி பொன்னாங்கண்ணி கீரையை சூப் வைத்து சாப்பிடலாம். பொன்னாங்கண்ணி கீரையை கடைந்து உணவுடன் நெய் சேர்த்து அருந்த உடல் வலுப்பெறும்.

சிகப்பு பொன்னாங்கண்ணி கீரையை பூண்டு சேர்த்து வதக்கி சாப்பாட்டுடன் சாப்பிட்டு வந்தால் மூலநோய் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணமாகும். வாய்ப்புண், தொண்டைப்புண் நீங்கும்.

நரைமுடி அகலும்

முளைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இளமையில் தலைமுறை நரைக்காமல் இருக்கும். கரிவேப்பிலையை நாள்தோறும் உணவில் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொண்டால் உடலின் இளமைத்தோற்றம் நிலைத்துநிற்கும்.

தாது விருத்தியாகும்

அரைக்கீரை அனைத்து பகுதிகளிலும் எளிதாக கிடைக்கும். இதை பருப்புடன் சேர்ந்து கடைந்து சாப்பிடலாம். இந்த கீரை இரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத சம்பந்தமான வியாதி தணிக்கும். நரம்பு வலி, பிடரிவலியை எளிதில் போக்கவல்லது. இது தாதுவை விருத்தி செய்யும். விந்தணு குறைபாடு உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்.

எலும்பு வளர்ச்சி

புதினா கீரையில் இரும்புச்சத்து இருப்பதால் இரத்தத்தை சுத்தம் செய்து புதிய இரத்தத்தை உண்டு பண்ணும். பற்களை கெட்டிப்படுத்தும், எலும்புகளை வளரச் செய்யும். புதினாவை நசுக்கி போட்டு கஷாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். அரை சங்கு புதினாக் கீரையை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும். கொத்தமல்லிக்கீரையை துவையல் அரைத்து சாப்பிட பித்தம் குணமாகும்.

வயிற்றுப் புண் குணமாகும்

பசலைக்கீரை சாப்பிட நீர் கடுப்பு, வெள்ளை வெட்டை நீங்கும். மிளகு தாக்காளி கீரைக்கு வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி உள்ளது. பருப்பும், தேங்காயும் போட்டு காரம் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டால் குடல்புண், வாய்ப்புண் ஆறும்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 02, 2012, 10:38:09 PM
(http://a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/318142_411216925585384_529708523_n.jpg)

காதின் பாதுகாப்பு பற்றிய தகவல் !!!

காதின் பாதுகாப்பை காதினிடமே விட்டுவிடுங்கள்:

காதுக் குடுமியை அகற்றுவது எப்படி?' இப்படிக் கேட்பவர்கள் பலர். குப்பை வாளிக்குள் (Dustbin) இருக்கும் குப்பைகளை அகற்றுவதுபோல காதுக்குடுமியையும் அகற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் காதுக் குடுமி என்பது காதையும் செவிப்பறையையும் பாதுகாப்பதற்காக எமது உடல் தானகவே உற்பத்தி செய்யும் பாதுகாப்புக் கவசம் போன்றது.

பொதுவாக இது ஒரு மென்படலம் போல காதுக் குழாயின் சுவரின் தோலில் படிந்திருக்கும். இதனால் கிருமிகள், சிறுகாயங்கள், நீர் போன்றவவை காதைத் தாக்காது பாதுகாக்கிறது. அத்துடன் காதை ஈரலிப்பாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது. அதிலுள்ள கிருமியெதிர்ப்பு
(antibacterial properties) பண்பானது வெளிக் கிருமிகள் தொற்றி, காதின் உட்புறத்தில் நோயை ஏற்படுத்துவதையும் தடுக்கிறது.

காதுக்குடுமி

(Cerumen) என்பது இயல்பாக எண்ணெய்த் தன்மை உள்ள ஒரு திரவமாகும். சருமத்தில் உள்ள சில சுரப்பிகளால்
(Sebaceous and Ceruminous glands) சுரக்கப்படுகிறது. ஒவ்வொருவரது உடல் நிலைக்கும் ஏற்ப இது நீர்த்தன்மையாகவோ, பாணிபோலவோ, திடமான கட்டியாகவோ இருக்கக் கூடும்.

காதின் சுவரிலிருந்து உதிரும் சருமத் துகள்கள், முடித் துண்டுகள், ஆகியவற்றுடன் கலந்து திடப் பொருளாக மாற்றமுறும். தலை முடியின் உதிர்ந்த கலங்கள் அதிகமாக இருப்பதும், எவ்வளவு நீண்ட காலம் வெளியேறாது காதினுள்ளே இருந்தது என்பதும் எந்தளவு இறுக்கமாகிறது என்பதற்கு முக்கிய காரணங்களாகச் சொல்லலாம். காதுக்குடுமி காதின் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது என்பதால் வழமையாக எவரும் அதனை அகற்ற வேண்டியதில்லை. தினமும் புதிது புதிதாக உற்பத்தியாகி வர பழையது எம்மையறியாது தானாகவே சிறிது சிறிதாக வெளியேறிவிடும்.

மென்மையான குடுமியானது முகம் கழுவும் அல்லது குளிக்கும் நீருடன் கலந்து வெளியேறிவிடும். அல்லது காய்ந்து உதிர்ந்துவிடும். சிலருக்கு, பல்வேறு காரணங்களால் வெளியேறாது உள்ளேயே தங்கி இறுகி விடுவதுண்டு. காதுக்குழாய் ஒடுங்கலாக இருப்பதும் சற்று வளைந்து இருப்பதும் காரணமாகலாம். சிலருக்கு அது இறுகி, கட்டியாகி வெளியேற மறுப்பதுண்டு. அது அதிகமாகி செவிக்குழாயின் விட்டத்தின் 80 சதவிகிதத்ததை அடைத்துக்கொண்டால் காது கேட்பது மந்தமாகும். ஒரு சிலருக்கு வலி ஏற்படலாம். வேறு சிலருக்கு கிருமித் தொற்றும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.

காதுக் குடுமிப் பிரச்சனை என மருத்துவர்களிடம் வருபவர்கள் அனேகர். வருடாந்தம் கிட்டத்தட்ட 12 மில்லியன் அமெரிக்க மக்கள் இப்பிரச்சனைக்காக மருத்துவ உதவியை நாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 2/3 ருக்கு அதாவது 8 மில்லியன் பேருக்கு மருத்துவ ரீதியாக அதனை அகற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது.

இதை அகற்றவது எப்படி?

1. பஞ்சு முனையுள்ள இயர் பட்ஸ் நல்லதா, சட்டைப் பின் நல்லதா, நெருப்புக் குச்சி நல்லதா?

2. இவற்றைக் காதுக்குள் விடுவதைப் போன்ற ஆபத்தான செயல் வேறெதுவும் கிடையாது. அவை காதிலுள்ள மென்மையான சருமத்தை உராசி புண்படுத்தக் கூடும். அல்லது அவை உராசிய இடத்தில் கிருமி தொற்றிச் சீழ்ப் பிடிக்கக் கூடும். அல்லது அவை காதுக் குடுமியை மேலும் உற்புறமாகத் தள்ளி செவிப்பறையைக காயப்படுத்தலாம். இதனால் நிரந்தரமாக காது கேட்காமல் செய்துவிடவும் கூடும். எனவே இவற்றை உபயோகிப்பது அறவே கூடாது.

3. காதுக் குடுமியை கரைத்து இளகவைத்தால் தானாகவே வெளியேறிவிடும். மிகவும் சுலபமானது குடுமி இளக்கி நீர்தான். உப்புத் தண்ணீர், சோடியம் பைகார்பனேட் கரைசல், ஒலிவ் ஓயில் போன்றவையும் உதவக் கூடும். அதற்கெனத் தயாரிக்கப்பட்ட விசேட
(Waxol, Cerumol)காதுத்துளி மருந்துகளும் உள்ளன. ஐந்து நாட்கள் காலை, மாலை அவ்வாறு விட்டபின் சுத்தமான வெள்ளைத் துணியை திரி போல உருட்டி அதனால் காதைச் சுத்தப்படுத்துங்கள். பட்ஸ், குச்சி போன்றவற்றைப் பாவிக்க வேண்டாம். அல்லது சுத்தமான நீரை காதினுள் விட்டும் சுத்தப்படுத்தலாம்.

இவ்வாறு வெளியேறாது விட்டால் மருத்துவர் சிறிய ஆயுதம் மூலம் அகற்றக் கூடும். அல்லதுஅதனை கழுவி வெளியேற்றுவார். இதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட ஊசி போன்ற குழாய்கள் மூலம் நீரைப் பாச்சி கழுவுவார்கள். இதன்போது எந்தவித வலியும் இருக்காது. சில விசேட சிறு ஆயுதங்கள் மூலம் அல்லது உறிஞ்சி எடுக்கும்
(Suction device) உபகரணம் மூலம் சுலபமாக அகற்றவும் முடியும்.தற்போதுள்ள குடுமி அகற்றப்பட்ட போதும் சிலருக்கு இது மீண்டும் மீண்டும் சேரக் கூடிய சாத்தியம் உண்டு.

மீண்டும் ஏற்படாமல் தடுக்க முடியுமா?

அதற்கென மருந்துகள் எதுவும் கிடையாது. வாரம் ஒரு முறை குளிக்கும் போது கையால் ஒரு சிரங்கை நீரை காதுக்குள் விட்டுக் கழுவுவது அதனை இறுகாமல் தடுக்கக் கூடும். ஆயினும் காதில் கிருமித் தொற்றுள்ளவர்களும், செவிப்பறை துவாரமடைந்தவர்களும் அவ்வாறு சுத்தம் செய்வது கூடாது.

அடிக்கடி குடுமித் தொல்லை ஏற்படுபவர்கள் 6 முதல் 12 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவோ குடுமியை அகற்றவோ நேரலாம். ஆயினும் காதுக் குடுமியை நாமாக அகற்றுவதை விட, தன்னைத்தானே சுத்தம் செய்யும் படி காதின் பாதுகாப்பை அதனிடமே விட்டு விடுவதுதான் உசிதமானது.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 02, 2012, 10:38:30 PM
(http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/545618_408777899162620_1406917_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 03, 2012, 08:55:28 PM
(http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/551130_408658592507884_625528859_n.jpg)

சுவாசக் கோளாறுகளைப் போக்கும் கிவி பழம்!!!

பழங்களில் கிவி பழம் அபூர்வமான ஒன்று. இதனை மக்கள் அதிசய பழம், ஒரு வகையான சைனீஸ் நெல்லிக்கனி என்றெல்லாம் அழைப்பார்கள். இது மருத்துவ குணம் வாய்ந்த, உடலுக்கு மிகச் சிறந்த பழம். ருடர்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த டாக்டர் பால் 27 பழங்களை வைத்து ஆராய்ந்தார். இதில் கிவி பழத்தில் புரதச்சத்தின் அளவு மற்ற பழங்களை விட அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வில் தெரிந்துள்ளது.

கிவியின் நன்மைகள்

கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால், மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும். மேலும் ஏப்ரல் 2004ல் நடந்த ஆய்வின் படி, வாரத்திற்கு 5 முதல் 7 பழங்கள் சாப்பிடும் குழந்தைகளின் மூச்சுக்கோளாறு பிரச்சனை குறைவாக சாப்பிடுபவர்களை விட 44% குறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிவி மாதிரி வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. ஆனால் வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கிவி பழத்தில் கலோரியின் அளவு குறைவு. கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது.

அனைவருக்கும் தெரியும் வைட்டமின் ஈ அதிகமாக இருக்கும் உணவில் கொழுப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது.

போலிக் ஆஸிட் கிவி பழத்தில் அதிகமாக, இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும்

நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, கர்பிணிகளுக்குத் தேவையான வைட்டமின்களையும் தருகிறது. மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்ததோடு மட்டுமல்லாமல் இதய நோய் வராமலும் தடுக்கிறது.

டையட் மேற்கொள்வதற்கு சிறந்ததாகவும் உள்ளது. ஏனென்றால் இதில் இரும்புச்சத்து இருப்பதால் பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கும். மேலும் இரும்புச்சத்து கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது. இது உடல் எடையைக் குறைப்பதோடு, உடலுக்கு சிறந்த பழமாகும்.

கிவி பழத்தில் ஜிங்க் இருப்பதால் தோல், முடி, பல் மற்றும் நகங்களுக்கு சிறந்தது.

கிவி பழத்தை எப்படி தேர்ந்தெடுக்கலாம்?

கிவி பழத்தின் மேல் பகுதி தடிமனாகவும், உட்பகுதியில் சுவையான பழமும் இருக்கும். இதன் மேல் பகுதியை அழுத்தினால் சற்று உள்ளே செல்ல வேண்டும், அதுவே சாப்பிடுவதற்கு ஏற்ற பழம். மேலும் இதில் பெரிய பழம் நன்றாக இருக்கும், சிறிய பழம் சுவை குறைவாக இருக்கும் என்றெல்லாம் இல்லை. சொல்லப்போனால், பெரிய பழத்தை விட சிறிய பழமே சுவையாக இருக்கும்.

ஆகவே கிவி பழத்தை சாப்பிடுங்க! ஆரோக்கியமா இருங்க!
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 03, 2012, 08:58:54 PM
(http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-prn1/542029_408140119226398_363688097_n.jpg)

முருங்கைக்கீரை


நரம்புகளின் வீரியத்தை நிலைப்படுத்துவது முருங்கை.
தேங்காயை கற்பக விருட்சம் என அழைப்பது போல முருங்கையை பிரம்ம விருட்சம் என போற்றுகின்றனர். இக்கீரை மரத்தில் கிடைப்பதால் நிறைய பஞ்சபூத ஆற்றல்கள் உள்ளன. மனிதர்கள் சாப்பிடக்கூடிய கீரைகளில் முக்கியமாக சாப்பிடக்கூடிய கீரை முருங்கையும், கறிவேப்பிலையும் தான். இதை நாம் சமைத்து சத்துக்களை வீணாக்கி விடுகிறோம்.
ஏழைகளின் பிணிகளை விரட்டும் அற்புதக்கீரை. மலிவானது. எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. மனித குலத்திற்கு என படைக்கப்பட்ட முதல் தர கீரை முருங்கையாகும.

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள்:

நீர்=71%
மாவுப்பொருள்=12.5%
புரதம்=6.7%
கொழுப்பு=1.7%
நார்பொருள்=12.5%
தாது உப்புக்கள்=4%
கால்சியம்=0.44%
பாஸ்பரஸ்=0.07%
இரும்புத் தாது=7 யூனிட்
வைட்டமின் A=11300 யூனிட்
வைட்டமின் B=70 யூனிட்
வைட்டமின் C=200 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் முருங்கைக்கீரைச்சாறில் உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:

இதில் பொட்டசியம் அதிகமாக உள்ளதால் உடல் உப்பால் உடலை குலைத்தவர்கள் நலம் பெறுகின்றனர். உயர் இரத்த அழுத்த நோய் மறைகிறது.
நீரிழிவு பிணியாளர்களின் ஒப்பற்ற நம்பிக்கை நட்சத்திரம் முருங்கை எனலாம். அளவற்ற பிணிகளின் மூல நோயான மலச்சிக்கலை இரு வேளையிலேயே விரட்டிடும் அற்புதக்கீரை.
மாலைக்கண் மற்றும் சில கண் நோய் உள்ளவர்கள் முருங்கையால் உறுதியான முன்னேற்றம் பெறுவார்கள்.
முதுமைக்கும், இளமைக்கும் இடையில் ஊசல் ஆடுபவர்கள் முருங்கையால் வாழ்வின் வசந்தத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.
ஹீமோகுளோபினைக் கூட்டும். இரத்த சோகை நீக்கும்.
பக்கவாதம், நரம்பு தள‌ர்ச்சி, அதிக உடல் எடை போன்ற பிணிகளைத் தினமும் முருங்கையைப் பயன்படுத்தி குணம் பெறலாம்.
தாது பலம் தரும் சஞ்சீவிக் கீரை.நரம்பு பலம் பெற முருங்கைக்கீரை மிக சிறந்தது.
குறிப்பு:

முருங்கைக்கீரைகளைச் சமைக்காமல் சாப்பிட்டால் பல பிணிகள் குறையும்.
சமைக்காமல் சாறாக எடுத்து நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிடுவது சிறந்தது.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 03, 2012, 09:00:11 PM
(http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/148781_399857753387968_326167837_n.jpg)

தக்காளிப் பழத்தின் மருத்துவ பயன்கள் !!!

தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.

தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராம், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. மிகக் குறைவாக சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராமே உள்ளது.

தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.

பொதுவாக இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தாலே உடலில் நோய்த் தொற்று ஏற்படுவது எளிதான காரியமல்ல.

தக்காளிப் பழத்தை எந்தவிதத்திலாவது தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.

தக்காளிப் பழத்தை சூப்பாக வைத்து காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவித பொலிவுடன் திகழும்.

இதுமட்டுமல்லாமல், சரும நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.

தக்காளிப் பழத்தைக் கொண்டு ஜாம் செய்து வைத்துக் கொண்டால், அதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என காலை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான சத்தும் எளிதில் கிடைத்துவிடும்.

விலை உயர்ந்த பழங்களை உட்கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் தக்காளிப் பழத்தை சாப்பிடலாம் என்று சொல்லலாம். ஆனால், தற்போதைய விலைவாசியில் தக்காளிப்பழமும் ஒரு விலை உயர்ந்த பழமாக மாறிவிட்டுள்ளது என்பதே உண்மையாக இருக்கிறது.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 03, 2012, 09:02:16 PM
(http://a1.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/522678_399096013464142_2123438134_n.jpg)

தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !!!

பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது.
நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று
பெருமையாக சொல்வார்கள்.!!!

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது
தயிர்தான்.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து
32%பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி
நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

பாலில் LACTO இருக்கிறது.
தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு
மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி
மருத்துவர்கள் சொல்வார்கள்.

பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை
குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர்
அப்படி அல்ல.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது
வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று
பொருமல் அடங்கும்.

பாலைதிரித்து உருவாக்கபடுவதுதான் பனீர்.
(பனீரைதனியாக எடுத்த பிறகு இருக்கும்
whey புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை
நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது.

பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை
சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல்
இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு
தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான
அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும் நன்மைகள் சில

1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து.

5. அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

7. சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில் க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.


தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை
உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்.

1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக
உண்ணலாம்.

2. பனீர்கட்டிகள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
(அதிகம் வேண்டாம், கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)

3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை,
பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 03, 2012, 09:05:18 PM
(http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/526175_391548964218847_2052818737_n.jpg)

வெள்ளரிக்காய் மருத்துவக் குணங்கள்!!
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும்.
வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.

இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.

செரிமானம் தீவிரமாகும், பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேச ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.

நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.
காய்கறிகளுள்ளே குறைவான சக்தி / கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும் கலோரி 18 தான்.

விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்; பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.

வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத்தனிச்சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப்பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

வாதநோய்கள் குணமாகும்!
இக்காய் பித்த நீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.

அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமை மிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.

ஆந்திரர்களின் வெள்ளரிக்காய் பிரியம்!
ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம், ஆந்திர சமையலில் காரம் அதிகம். 100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது. அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது. மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ‘பி’ ஆகியவை அமைந்துள்ளன; வைட்டமின் ‘சி’யும் சிறிதளவு உண்டு.

வெள்ளரிக்காய் சாறு /ஜுஸ் சாப்பிடுவதுண்டா?
சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக் காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம்.
இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச்சாறு திகழ்கிறது.

வெள்ளரியைச் சமைத்துச் சாப்பிடும்போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடுகின்றன. எனவே, வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச்சாறு அருந்தினால் குணம் தெரியும்.

காலரா- பேதி/வயிற்றோட்டம் குணமாகும்!
பேதி நோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒரு மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்தவேண்டும்.

தோல் பளபளப்பாக…
வறண்ட தோல், காய்ந்துவிட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் கிடக்கும் காலத்தில் தினமும் வெள்ளரிக்காய்ச்சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.

சிறந்த சத்துணவு இது?
தினமும் மிகச் சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக்காய்த் துண்டுகளை நறுக்கிப் போடவும். அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும போட்டு வைத்து மரக்கறி சாலட் போல் பரிமாறவேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச்செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச் செய்யும்.

இரத்த அழுத்தம் குறையும்!
இக்காயில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.

மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக் காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.


பருக்கள் மறைந்துவிடும்!
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூச வேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.

உடல் எடை குறையும்!
நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக்காய் என்றாலும் பெரிய வகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன்தான் அரைத்துச் சாறு அருந்த வேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.

முடி நன்கு வளர எளிய வழி
முடி வளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர்தரமான சிலிகானும், கந்தகமும் முடிவளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட்சாறு, இரு தேக்கரண்டி பசலைக்கீரைச்சாறு, பச்சடிக்கீரைச்சாறு போன்றவற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.

காரட் கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில்ன தோல் பகுதி அருகில்தான் தாது உபபுகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ் ஸாடிவாஸ் என்பதாகும். இது மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இமய மலைப்பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி 15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உள்ளது.

ஜமைகா நாட்டு வெள்ளரிக்காய் எலுமிச்சம் பழ அளவிலும், நிறத்திலும் இருக்கிறது. கிழக்கத்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிராக்குகின்றனர். குளிர் சாதனப்பெட்டியில் இரு வாரங்கள் வரை வைத்து வெள்ளரிக் காய்களை பயன்படுத்தலாம்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 03, 2012, 09:08:52 PM
(http://a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/580898_388096471230763_1372586344_n.jpg)


"10000 times stronger killer of CANCER than Chemo".. do share it.. can save many lives, fill up hopes and build confidence in the patients...

The Sour Sop or the fruit from the graviola tree is a miraculous natural cancer cell killer 10,000 times stronger than Chemo.

Why are we not aware of this? Its because some big corporation want to make back their money spent on years of research by trying to make a synthetic version of it for sale.

So, since you know it now you can help a friend in need by letting him know or just drink some sour sop juice yourself as prevention from time to time. The taste is not bad after all. It’s completely natural and definitely has no side effects. If you have the space, plant one in your garden.
The other parts of the tree are also useful.

The next time you have a fruit juice, ask for a sour sop.

How many people died in vain while this billion-dollar drug maker concealed the secret of the miraculous Graviola tree?

This tree is low and is called graviola ! in Brazi l, guanabana in Spanish and has the uninspiring name “soursop” in English. The fruit is very large and the subacid sweet white pulp is eaten out of hand or, more commonly, used to make fruit drinks, sherbets and such.

The principal interest in this plant is because of its strong anti-cancer effects. Although it is effective for a number of medical conditions, it is its anti tumor effect that is of most interest. This plant is a proven cancer remedy for cancers of all types.

Besides being a cancer remedy, graviola is a broad spectrum antimicrobial agent for both bacterial and fungal infections, is effective against internal parasites and worms, lowers high blood pressure and is used for depression, stress and nervous disorders.

If there ever was a single example that makes it dramatically clear why the existence of Health Sciences Institute is so vital to Americans like you, it’s the incredible story behind the Graviola tree..

The truth is stunningly simple: Deep within the Amazon Rainforest grows a tree that could literally revolutionize what you, your doctor, and the rest of the world thinks about cancer treatment and chances of survival. The future has never looked more promising.

Research shows that with extracts from this miraculous tree it now may be possible to:
* Attack cancer safely and effectively with an all-natural therapy that does not cause extreme nausea, weight loss and hair loss
* Protect your immune system and avoid deadly infections
* Feel stronger and healthier throughout the course of the treatment
* Boost your energy and improve your outlook on life

The source of this information is just as stunning: It comes from one of America ‘s largest drug manufacturers, th! e fruit of over 20 laboratory tests conducted since the 1970′s! What those tests revealed was nothing short of mind numbing… Extracts from the tree were shown to:

* Effectively target and kill malignant cells in 12 types of cancer, including colon, breast, prostate, lung and pancreatic cancer..
* The tree compounds proved to be up to 10,000 times stronger in slowing the growth of cancer cells than Adriamycin, a commonly used chemotherapeutic drug!
* What’s more, unlike chemotherapy, the compound extracted from the Graviola tree selectivelyhunts
down and kills only cancer cells.. It does not harm healthy cells!

The amazing anti-cancer properties of the Graviola tree have been extensively researched–so why haven’t you heard anything about it? If Graviola extract is

One of America ‘s biggest billion-dollar drug makers began a search for a cancer cure and their research centered on Graviola, a legendary healing tree from the Amazon Rainforest.

Various parts of the Graviola tree–including the bark, leaves, roots, fruit and fruit-seeds–have been used for centuries by medicine men and native Indi! ans in S outh America to treat heart disease, asthma, liver problems and arthritis. Going on very little documented scientific evidence, the company poured money and resources into testing the tree’s anti-cancerous properties–and were shocked by the results. Graviola proved itself to be a cancer-killing dynamo.
But that’s where the Graviola story nearly ended.

The company had one huge problem with the Graviola tree–it’s completely natural, and so, under federal law, not patentable. There’s no way to make serious profits from it.

It turns out the drug company invested nearly seven years trying to synthesize two of the Graviola tree’s most powerful anti-cancer ingredients. If they could isolate and produce man-made clones of what makes the Graviola so potent, they’d be able to patent it and make their money back. Alas, they hit a brick wall. The original simply could not be replicated. There was no way the company could protect its profits–or even make back the millions it poured into research.

As the dream of huge profits evaporated, their testing on Graviola came to a screeching halt. Even worse, the company shelved the entire project and chose not to publish the findings of its research!

Luckily, however, there was one scientist from the Graviola research team whose conscience wouldn’t let him see such atrocity committed. Risking his career, he contacted a company that’s dedicated to harvesting medical plants from the Amazon Rainforest and blew the whistle.

Miracle unleashed
When researchers at the Health Sciences Institute were alerted to the news of Graviola,! they be gan tracking the research done on the cancer-killing tree. Evidence of the astounding effectiveness of Graviola–and its shocking cover-up–came in fast and furious….

….The National Cancer Institute performed the first scientific research in 1976. The results showed that Graviola’s “leaves and stems were found effective in attacking and destroying malignant cells.” Inexplicably, the results were published in an internal report and never released to the public…

….Since 1976, Graviola has proven to be an immensely potent cancer killer in 20 independent laboratory tests, yet no double-blind clinical trials–the typical benchmark mainstream doctors and journals use to judge a treatment’s value–were ever initiated….

….A study published in the Journal of Natural Products, following a recent study conducted at Catholic University of South Korea stated that one chemical in Graviola was found to selectively kill colon cancer cells at “10,000 times the potency of (the commonly used chemotherapy drug) Adriamycin…”

….The most significant part of the Catholic University of South Korea report is that Graviola was shown to selectively target the cancer cells, leaving healthy cells untouched. Unlike chemotherapy, which indiscriminately targets all actively reproducing cells (such as stomach and hair cells), causing the often devastating side effects of nausea and hair loss in cancer patients.

…A study at Purdue University recently found that leaves from the Graviola tree killed cancer cells among six human cell lines and were especially effective against prostate, pancreatic and lung cancers…. Seven years of silence broken–it’s finally here!
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 03, 2012, 09:09:55 PM
(http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/533554_373050192735391_1770906328_n.jpg)

முந்திரி பழத்தில் ஏராளமான விட்டமின்கள், தாதுக்கள், பிற முக்கிய சத்துக்கள் உள்ளன. இதில் ஆரஞ்சுப்பழத்தில் இருப்பதைப் போல 5 மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது. அதோடு, அதிக தாது உப்புகளும், பல வாசனை எண்ணெய்களும் உள்ளன.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 03, 2012, 09:12:08 PM
(http://a1.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/539738_373037606069983_1332966736_n.jpg)

வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது.

இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல் படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 03, 2012, 09:14:15 PM
(http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/540534_372488312791579_179184419_n.jpg)

மருத்துவப்பயன்கள் :- இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது. இதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன் படுத்துகிறார்கள். இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில் பயன் படுத்துகிறார்கள். தமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள்.

இலந்தை இலை 1 பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வரக் கருப்பை குற்றங்கள் நீங்கிப் புத்திர பாக்கியம் கிட்டும்.

இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில்போட்டுக் கொதிக்க வைத்து 125 மி. லி. யாக்கி 4 வேளை தினம் குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு நீங்கும்.

இலந்தை வேர்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும்.

துளிர் இலையையாவது பட்டையையாவது 5 கிராம் நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலையாகக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்தப்பேதி தீரும்
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 03, 2012, 09:14:56 PM
(http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/547202_372351036138640_1539678197_n.jpg)

1. மூலிகையின் பெயர் -: வெற்றிலை.

2. தாவரப் பெயர் -: PIPER BETEL.

3. தாவரக்குடும்பம் -: PIPER ACEAE.

4. வேறு பெயர் -: தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என்பன.

5. வகைகள்-கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என்பன.

6. பயன்தரும் பாகங்கள் -: கொடியின் இலை மற்றும் வேர்.

7. வளரியல்பு -: இது இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும், வளர்கிறது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் இதயவடிவில் பெரிதாக இருப்பதோடு நுனி கூர்மையாகவும் இருக்கும். வடிகால் வசதி இருக்கவேண்டும். அகத்தி மரங்களை இடையில் வளர்த்தி அதில் கொடிகள் வளர வளர கட்டிக்கொண்டே செல்வார்கள் மூங்கில் களிகளையும் பயன்படுத்துவார்கள். இதை ஆற்றுப் படுகைகளில் வியாபார ரீதியாக அதுகம் பயிரிடுகிறார்கள். கருப்பு நிறமுடன் நல்ல காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர மணத்துடன் சறிது காரமாகவும் இருப்பது கற்பூர வெற்றலையாகும். வெற்றிலைக்கு நல்ல மணமும் , காரமும் உண்டு. இது கொடி பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

8. மருத்துவப் பயன்கள் -: பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.

வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.

வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.

கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.

சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.

வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும்.

விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.

ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்க 10 கிராம் வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 20-40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.

வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும்.

சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 04, 2012, 11:01:48 PM
(http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-prn1/522094_371935609513516_917790435_n.jpg)

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.
உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.
ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.
சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.
தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.
கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.
கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.
சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 04, 2012, 11:04:44 PM
(http://a1.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/560170_371781082862302_478345073_n.jpg)

தொப்பை குறைய எளிய வைத்தியம்..
இஞ்சி நம் உடலுக்கு அருமருந்து

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும். இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 04, 2012, 11:06:23 PM
(http://a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/559694_371780426195701_1856993632_n.jpg)

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி

சர்க்கரை வியாதியால் இனிப்பை தொட்டுக் கூட பார்க்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் இனிப்பான செய்திதான். பராகுவேயில் பிரபலமான ஒரு செடி இப்போது உலகெங்கும் உள்ள சர்க்கரை வியாதியஸ்தர்களை பெரிதும் கவரத் தொடங்கியுள்ளது.

அதன் பெயர் ஸ்டீவியா. அதன் தாவரவியல் பெயர் ஸ்டீவியா ரிபாடியானா (Stevia rebaudiana), சுருக்கமாக ஸ்டீவியா.

இந்த செடி மகா இனிப்பானது. இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் சாறு அத்தனை இனிப்பு நிறைந்தது. இதை செயற்கை சர்க்கரை போல பயன்படுத்தி வருகின்றனர்- தென் அமெரிக்கா [^]வில். இத்தனை இனிப்பாக இருந்தாலும், சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானது என்பதுதான் இதன் விசேஷமே.

இந்த செடியின் பூர்வீகம் தென் அமெரிக்காவில் உள்ள பராகுவே ஆகும். பல நூற்றாண்டுகளாக இந்த மூலிகைச் செடியை பராகுவேயில் உள்ள குவாரனி என்ற இனத்தவர் ஸ்வீடனராக பயன்படுத்தி வருகின்றனர். மிகச் சிறிய அளவிலான இந்த செடியின் இலைகளில்தான் இந்த இனிப்புத் தன்மை காணப்படுகிறது. சாதாரண சர்க்கரையை விட இதன் இனிப்பு 300 மடங்கு அதிகமாகும்.

மேலும் சர்க்கரையி்ல் உள்ளது போல அல்லாமல், இந்த ஸ்டீவியாவில் கலோரி ஒரு துளி கூட கிடையாது. மேலும் ரத்தத்தில் நமது சர்க்கரையின் அளவையும் இது அதிகரிக்காது.

உலக நாடுகளை மயக்கிக் கொண்டிருக்கும் இந்த ஸ்டீவியா தற்போது இந்தியாவுக்கும் வரவுள்ளது. நறுமணம் மிக்க ஸ்டீவியா மூலிகைச் செடி செம்மண்ணிலும் பிற வளம் நிறைந்த மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது. 50 முதல் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் வளரக்கூடிய இந்த செடியை பயிரிட்டு வளர்ப்பதும் பராமரிப்பதும் மிகவும் எளிது. இந்திய தட்பவெட்ப நிலையில் இந்த செடி நன்றாக வளரும். எனவே இதை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயிரிடலாம். வீட்டு தோட்டத்திலும் வளர்க்கலாம்.

ஸ்டீவியா செடியின் இலை, விதை, தண்டு ஆகியவற்றை காயவைத்து பொடியாக்கி சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மாற்று இனிப்பு பொருள் ஆகும். ஸ்டீவியா பவுடரை தொடர்ந்து பயன்படுத்தினால் அது இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்க உதவும் என்பதும் கண்டு அறியப்பட்டு உள்ளது.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 06, 2012, 12:42:49 AM
(http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/577068_424947400886079_1532786877_n.jpg) (http://www.friendstamilchat.com)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 24, 2012, 06:26:12 PM
சில நோய்களுக்கான ஈஸியான வீட்டு மூலிகை மருந்துகள்!!!

(http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/400777_471074326266310_1357436748_n.jpg) (http://www.friendstamilchat.com)


உடல் நலம் சரியில்லை என்றால் நிறைய பேர் உடனே மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஒருசிலர் நமது பாரம்பரிய மருந்துகளை பின்பற்றுவார்கள். ஏனெனில் நமது பாரம்பரிய வீட்டு மருந்துகளின் அருமை அவர்களுக்கு நன்கு தெரிந்திருப்பதே ஆகும். ஆனால் சிலருக்கு அதன் அருமை, அதனைப் பற்றிய ஒரு நன்மைகள் சரியாக தெரியவில்லை. மேலும் நிறைய மக்கள் கெமிக்கல் உள்ள மருந்துகளை பயன்படுத்துதைவிட, மூலிகை மருத்துவமான ஆயுர்வேதத்தை தான் பின்பற்றுகிறார்கள். ஆகவே அத்தகைய ஆயுர்வேத மருத்துவத்தில் நீரிழிவு, சளி, இருமல் மற்றும் ஜலதோஷம் போன்றவற்றிற்கு எந்த மூலிகைகளை பயன்படுத்தினால் நல்லது என்பதைப் பற்றி பார்ப்போமா!!!

நீரிழிவிற்கு...

கறிவேப்பிலை: உணவுகள் அனைத்திலும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலை ஒரு சூப்பரான மருத்துவகுணம் கொண்டது. அதிலும் நீரிழிவிற்கு நல்லது. ஆகவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மூன்று மாதம் தினமும் 8-10 இலைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைத்துவிடும்.

இலவங்கப்பட்டை: இது பெரும்பாலும் பிரியாணிக்கு பயன்படுத்துவார்கள். இத்தகைய இலவங்கப்பட்டையை தினமுத் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு குறைந்துவிடும். மேலும் சில காரத்திற்கு பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பே இலைகள், மஞ்சள் மற்றும கிராம்பு போன்றவையும் நீரிழிவை சரிசெய்யும்.

நெல்லிக்காய்: நெல்லிக்காய் சாப்பிட்டால், கூந்தல் நன்கு வளரும் என்று அனைவருக்கும் தெரிந்தது. அத்தகைய நெல்லிக்காய் ஒரு சிறந்த மூலிகைப்பொருள். இதனால் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அதற்கு இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாகற்காய் ஜூஸ் உடன் கலந்தும் சாப்பிடலாம். மேலும் இந்த நெல்லிக்காயை தொடர்ந்து 2-3 மாதத்திற்கு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
இருமல் மற்றும் சளிக்கு...

துளசி: உடலில் அதிக குளிர்ச்சியின் காரணமாக வரும் சளி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு துளசி இலைகளை பச்சையாகவோ, ஜூஸ் அல்லது துளசி டீ-யாகவோ செய்து சாப்பிட்டால், நல்லது.

இஞ்சி: சளி மற்றும் இருமலுக்கு இஞ்சி மற்றொரு சிறந்த மூலிகைப் பொருள். ஆகவே சளி அல்லது இருமல் ஏற்படும் போது ஒரு துண்டு இஞ்சியை தேனுடன் தொட்டு சாப்பிடலாம். இல்லையெனில் அதனை இஞ்சி டீ போட்டும் குடிக்கலாம்.

ஏலக்காய்: உணவுகளில் நறுமணத்திற்கு சேர்க்கும் ஏலக்காயும், சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. ஆகவே இதனை டீ செய்து குடித்தால், இருமலால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.

எலுமிச்சை: வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு கலந்து குடித்தால், சளி மற்றும் இருமல் சரியாகும். இதனை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம்....
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 29, 2012, 10:19:31 PM
Eyestrain

(http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-ash4/308257_473089236064819_1593246114_n.jpg)

Eyestrain is one of the
most common headache
triggers in high-frequency
computer users.

*Focusing
The distance
between the front of a
monitor and our eyes is
called the working
distance. Interestingly, our
eyes actually want to relax
at a point that's farther
away from the screen.

We
call that location the
Resting Point of
Accommodation (RPA).

In order to see what's on
the screen the brain has to
direct our eye muscles to
constantly re-adjust its
focus between the RPA
and the front of the
screen. This "struggle"
between where our eyes
want to focus and where
they should be focused
can lead to eyestrain and
eye fatigue, which can
eventually trigger a
headache.

*There are a few things we
can do to help alleviate
headaches triggered by
eyestrain:

*If you're working for
more than 45 minutes, get
up and take a 10-15
minute break. Use that
time to do activities that
don't require focusing on a
monitor like going for a
walk, looking out of a
window or looking down
a long hallway.

*If you're referring to text
on paper while working at
the computer, don't put
the paper down next to
your keyboard. Prop the
page up next to your
monitor so that there is
less distance for your eyes
to travel and less
opportunity for eyestrain.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on September 29, 2012, 10:41:57 PM
(http://static.binscorner.com/c/cycling/part-003.jpeg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on October 01, 2012, 10:23:35 AM
(http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-snc7/405203_439204259463039_2064904185_n.jpg) (http://www.friendstamilchat.com)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on October 01, 2012, 11:28:49 AM
(http://sphotos-b.ak.fbcdn.net/hphotos-ak-ash3/553880_437690062947792_193186741_n.jpg) (http://www.friendstamilchat.com)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on October 01, 2012, 11:37:26 AM
(http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/418565_434170296633102_1166032560_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on October 01, 2012, 01:49:11 PM
(http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-snc6/268695_430896430293822_527634733_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on October 01, 2012, 03:35:26 PM
(http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash3/544656_420952927954839_1074409806_n.jpg) (http://www.friendstamilchat.com)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on October 01, 2012, 03:54:16 PM
(http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-ash3/552316_416675551715910_1028047053_n.jpg) (http://www.friendstamilchat.com)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on October 01, 2012, 04:36:48 PM
(http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-ash4/306961_413275712055894_2093827262_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on October 02, 2012, 12:32:48 AM
(http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-ash4/417271_393516430714114_507574072_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on October 03, 2012, 06:28:42 PM
(http://sphotos-e.ak.fbcdn.net/hphotos-ak-ash4/262866_402678446464236_660796528_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on October 06, 2012, 08:44:19 PM
(http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash3/558244_10150972126246629_634927957_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on October 07, 2012, 03:56:11 PM
(http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-snc6/227464_374121306006361_393669951_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on October 31, 2012, 03:38:01 PM
(http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-ash4/936_381010018640122_930970596_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on October 31, 2012, 03:41:34 PM
(http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-snc7/374809_380751581999299_53498982_n.jpg)

(தயவு செய்து முடிந்தவரை இந்த தகவலை அனைவரும் SHARE செய்யவும் )

அன்பின் நண்பர்களே..இந்த தகவல் எல்லாம் படிக்க மட்டும் இல்லை
இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும் தான்.எம்மால் முடிந்தவரை
டெங்குவை ஒழிப்போம்... மக்களை காப்போம்.. வளமுடன் வாழ்வோம்..

டெங்குவின் அறிகுறிகள் என்ன?

டெங்கு பாதிப்பிற்கு ஆளாவோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல், உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன்கூடிய தொடர் காய்ச்சல் இருக்கும்.

இந்த அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?: நம் மக்களில் பெரும்பாலோரிடம், காய்ச்சல் என்றால், முதலில் மருத்து கடைகளுக்கு சென்று, தன்னிச்சையாக மாத்திரை உட்கொள்ளும் போக்கு உள்ளது. ஆபத்தான இப்போக்கை கைவிட்டு, உடல்வலியுடன்கூடிய காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.

டெங்கு அறிகுறியுடன் வருவோருக்கு, என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன? டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, முதலில், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சராசரியாக ஒரு மனிதனின் ரத்தத்தில், அவரவர் வயதிற்கேற்ப, 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை, தட்டணுக்கள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை, 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தால், அவர்களுக்கு டெங்கு இருக்க, அதிக வாய்ப்பு உள்ளது. அதை உறுதி செய்யவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு, கூடவே, தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சிகிச்சையும் தரப்படும்.

டெங்குவில் எத்தனை நிலைகள் உள்ளன?: மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு, டெங்கு வைரஸ் பாதிப்பதால், மூன்று முதல் ஏழு நாட்கள் வரை, காய்ச்சல் இருக்கும். மற்றப்படி பெரிய பாதிப்புகள் இருக்காது.
இக்காய்ச்சல் வந்துபோன சில நாட்கள் இடைவெளியில், மீண்டும் டெங்கு வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோர், காய்ச்சலின் இரண்டாம் நிலையில் உள்ளவர்களாக கருதப்படுவர். இவர்களுக்கு, ரத்தம் உறைவதற்கு தேவையான தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து, வாய், மூக்கு போன்ற பகுதிகளில் ரத்தபோக்கு ஏற்படும். இந்நிலை முற்றியவர்கள், டெங்குவின் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு, ரத்தபோக்கின் காரணமாக, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு குறைந்து, மயக்க நிலையை அடைவர். தோலில் ஆங்காங்கே சிகப்பு புள்ளிகள் உண்டாகும்.
டெங்கு தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளவர்களுக்கு தான் உயிரிழக்கும் அபாயம் அதிகம்.

ஆனால், தற்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில், 90 சதவீதம் பேருக்கு, டெங்குவின் முதல் நிலை பாதிப்பு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on November 24, 2012, 08:05:21 PM
(http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-snc7/479902_445447458834976_984368530_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on December 14, 2012, 09:44:49 PM
(http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-prn1/563772_563211333693800_1536058171_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on December 14, 2012, 09:53:03 PM
(http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-prn1/532373_448467558535897_1233013041_n.jpg)

Chest Radiograph Interpretation (A-X):

A-Airway – Anatomic and Artificial (ETT
Placement, etc.)
B-Bony Structures – Cervical Spine, Ribs,
Clavicles, Scapula, etc.
C-Cardiac Structure – Situs, Heart Size,
etc.
D-Diaphragm Structure –
Pneumoperitoneum, Pneumothorax,
Effusions, etc.
E-Esophagus
F-Fissures – Horizontal Fissure Location
vs atelectasis, pneumonia,
pneumothorax
G-Gastric Bubble vs Situs
H-Hilum – Lymph Nodes, Airways,
Vessels
I-Interstitium disease processes
J-Junctional Lines
K-Kerley Lines: A, B, C
L-Lobes of Lung vs Cardiac Silhouette
(Silhouette Sign)
M-Mediastinum-Mediastinal Widening,
Thymus Size/ConfigurationN-Nodes
O-OverAeration, Opacification
P-Pleura
Q-Quickly Check for Correct Name, Date
of Birth, Imaging Study, Date, Time
R-Respiratory Effort – Inspiratory vs
Expiratory Film
S-Segments
T-Thoracic Underperfusion – Pulmonary
Embolism
U-UnderPerfusion, Underpenetration,
Underventilation
V-Vascularity, Vascular Line Placement
(Central Lines, Umbilical Artery/Vein
Lines)
W-Women (Breast Shadows)
X-Xtra Equipment: Central Lines, ETT,
Chest Tubes, etc.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on December 14, 2012, 10:13:18 PM
(http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-ash4/382022_448244581891528_556709171_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on December 14, 2012, 10:16:54 PM
How to diagnose Gilbert syndrome ?

(http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash3/67679_448164918566161_622666773_n.jpg)

Gilbert syndrome is a genetic condition and this autosomal recessive condition is characterized by intermittent jaundice in the absence of hemolysis or liver disease.
The hyperbilirubinemia is mild. By definition, bilirubin levels in Gilbert syndrome are lower than 6 mg/dL, though most patients exhibit levels lower than 3 mg/dL. Gilbert syndrome is the result of a genetic mutation in the promoter region of a gene for the enzyme UGT1A (bilirubin–uridine diphosphate glucuronyl transferase).
A presumptive diagnosis can be made in patients with the following features:
Unconjugated hyperbilirubinemia on repeated testing
A normal complete blood count, blood smear, and reticulocyte count
Normal liver function tests (plasma aminotransferases and alkaline phosphatase concentrations)

The diagnosis is definitive in patients who continue to have normal laboratory studies (other than the elevation in plasma bilirubin) during the next 12 to 18 months. As discussed above, the diagnosis is also supported by observing a rise in the plasma bilirubin concentration following a low lipid, 400 kcal diet or after the administration of intravenous nicotinic acid. However, these provocative tests are seldom necessary in clinical practice.

Genetic testing can confirm the diagnosis in settings where there is diagnostic confusion.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on December 14, 2012, 10:18:36 PM
Interpretation of the Hepatitis B

(http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-prn1/18881_448163471899639_1646554723_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on December 14, 2012, 10:19:50 PM
Hepatitis B: Clinical Outcomes of Acute HBV Infections

(http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-snc7/479724_448162188566434_682465102_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on December 14, 2012, 10:20:42 PM
(http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-ash4/481610_448159508566702_337226176_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on December 14, 2012, 10:21:39 PM
(http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-ash3/561080_448157105233609_1303790859_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on December 14, 2012, 10:23:41 PM
Malaria Life cycle

(http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash3/65031_447886698593983_649744022_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on December 14, 2012, 10:26:14 PM
Types of small bowel cancer:

(http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-ash4/315771_447147632001223_1537098573_n.jpg)

There are five main types of small bowel cancer:

Adenocarcinoma. Adenocarcinoma is the most common type of small bowel cancer, usually occurring in the duodenum or jejunum. Adenocarcinoma begins in the gland cells of the small bowel.

Sarcoma. Small bowel sarcoma is generally a leiomyosarcoma (a tumor that arises in the muscle tissue that makes up part of the intestine) and most often occurs in the ileum.

Gastrointestinal stromal tumor (GIST). GIST is an uncommon tumor that is believed to start in cells found in the walls of the gastrointestinal (GI) tract, called interstitial cells of Cajal (ICC). GIST belongs to a group of cancers called soft tissue sarcomas.

Carcinoid tumor. Carcinoid tumors are classified as neuroendocrine tumors (tumors that originate in the hormone-producing cells of various organs) and generally occur in the ileum.

Lymphoma. Lymphoma is a cancer of the lymph system, which is part of the body’s immune system. Lymphoma that occurs in the small bowel usually occurs in the jejunum or ileum and is most commonly non-Hodgkin lymphoma.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on December 15, 2012, 08:28:54 AM
Three Types of ST Depression

(http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-snc7/483482_447090862006900_949399827_n.jpg)

ST Depression is often a sign of myocardial ischemia, of which coronary insufficiency is a major cause. Other ischemic heart diseases causing ST depression include:
•Subendocardial ischemia or even infarction
•Non Q-wave myocardial infarction
•Reciprocal changes in acute Q-wave myocardial infarction (e.g., ST depression in leads I & aVL with acute inferior myocardial infarction)
•Depressed but upsloping ST segment generally rules out ischemia as a cause.

Also, it can be a normal variant or artifacts, such as:
•Pseudo-ST-depression, which is a wandering baseline due to poor skin contact of the electrode
•Physiologic J-junctional depression with sinus tachycardia
•Hyperventilation

Other, non-ischemic, causes include:
•Side effect of digoxin
•Hypokalemia
•Right or left ventricular hypertrophy
•Intraventricular conduction abnormalities (e.g., right or left bundle branch block, WPW, etc.)
•Hypothermia
•Tachycardia
•Reciprocal ST elevation
•Mitral valve prolapse
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on December 15, 2012, 01:53:27 PM
(http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-ash4/483460_445975398785113_169267221_n.jpg)

Chest pain can arise from a number of disorders. A cardiac source is the most concerning cause, as it is the most life-threatening; thus, it must be excluded as soon as possible.

Once a cardiac source of pain has been excluded, a variety of other sources should be considered, such as muscular skeletal or pulmonary causes. For example, an individual who is exercising after a period of physical inactivity may experience discomfort, heaviness, chest pain, and possibly even damage or trauma. Muscular skeletal causes are common sources of chest pain. Chest pain can also be triggered by pulmonary conditions such as an infection in the lungs.

Once cardiac, muscular, and pulmonary conditions have been excluded, the vast majority of patients are found to have an esophageal source for their chest pain. The 3 main causes of esophageal chest pain result from an underlying disturbed nerve sensation and muscle and mucosal dysfunction. The most common esophageal cause of pain is gastroesophageal reflux disease. Reflux of acid can present with chest pain, heartburn, or swallowing difficulties; chest pain is only 1 manifestation of this condition. Esophageal chest pain can also occur when the esophagus undergoes a strong spasm caused by a motility disorder of the esophagus. The third cause of esophageal chest pain, which has been a focus of my research for the last one-and-a-half decades, is an abnormal sensory function of the esophagus called esophageal hypersensitivity. In this sensory disorder, the muscle, nerve, and receptors of the esophageal wall are overly sensitive.

Finally, anxiety or an underlying psychiatric disorder can manifest as chest pain in some individuals.

How are cardiac and esophageal causes of chest pain differentiated?
It is often difficult to distinguish between cardiac and esophageal causes of chest pain based upon symptom presentation alone because the nerves that supply the heart also supply the esophagus. Therefore, patients may think they are experiencing pain of a cardiac origin when the pain is, in fact, coming from the esophagus. Likewise, individuals who think that they are experiencing heartburn may actually be having a heart attack. Another example is an individual who is exercising and experiencing chest discomfort and pain radiating to the arm; this scenario may appear to suggest a cardiac etiology, but exercise is also known to trigger reflux, which could result in reflux pain. Thus, physicians are increasingly relying less upon symptoms and more upon objective data.

Nevertheless, symptoms may offer some hints. For example, it is not very likely that a 20-year-old nonsmoker complaining of chest pain who is otherwise ft and active has coronary artery disease. On the other hand, it is not possible to judge whether chest pain in a 50-year-old smoker with a family history of hypertension is due to a cardiac or a noncardiac source.

For cardiac evaluation, patients should undergo a stress test and angiogram performed via magnetic resonance studies or other techniques. These tests are the most effective methods for excluding vascular disease in the heart.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on January 02, 2013, 08:13:11 AM
(http://sphotos-e.ak.fbcdn.net/hphotos-ak-ash3/64633_373430996083559_1235873481_n.jpg)

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம்.

சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது

இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.

ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது;

கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

மகளீரின் கருப்பை வலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது.

உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி.

பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாகத் தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, 'பைப்ரினோலிடிக்' செயற்பாடு குன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.

இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.

இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.

இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.

மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தித் தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.

தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும்.

எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on January 02, 2013, 09:38:42 AM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash4/196109_377635932329732_2079010551_n.jpg) (http://www.friendstamilchat.com)

இயற்கை உணவு குறித்த பொன்மொழிகள்
(1) வைகறையில் துயில் எழு. (அதிகாலையில் எழ வேண்டும்).
(2) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
(3) உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.
(4) நீரை உண்; உணவை குடி(உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும். நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும்)
(5) உணவும் மருந்தும் ஒன்றே.
(6) அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.
(7) கடவுள் கனிகளை படைத்தார். சாத்தான் சமையலை படைத்தான்.
( 8 ) படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்.
(9) பசிக்காக சாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே
(10) சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.
(11) சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும்.& ஜப்பானிய பொன்மொழி
(12) சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார்.&ஸ்பெயின் பொன்மொழி
(13) 5 மணிக்கு எழு 9 மணிக்கு உண் (காலை)
5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு(மாலை)
(14) வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும்&ஜெர்மன் பழமொழி.
(15) பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.
(16) சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on January 02, 2013, 09:49:04 AM
மரம் முழுவதும்
மருத்துவ குணம்
கொண்ட முருங்கை


(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-snc7/401668_375592285867430_841162423_n.jpg)

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.

எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.

மரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on January 02, 2013, 11:46:16 AM
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/72382_374461935980465_1978481947_n.jpg)

இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும்... அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது. வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலை, வேப்பம்பூ, வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் நமக்கு உணவாக... மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன.

பொதுவாகவே, தமிழ் மருத்துவத்தில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, அந்தந்த சூழலுக்கு ஏற்ப... உணவுப் பழக்க வழக்கமும் மாறும். தட்ப வெப்பநிலைக்கு அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுகளையே நாம் சாப்பிட வேண்டும். கோடை காலம் ஆரம்பிக்கும் இந்த சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து... காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன.

வெயில் காலத்தில் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது. கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.

குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. பாங்காக்கில் உள்ள தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும் தன்மை வாய்ந்தது' எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர். `அரோமா தெரபி' எனப்படும் சிகிச்சையில் மன அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர்.

கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் வேப்பம்பூவை சேகரித்து, நிழலில் உலர்த்தி வைத்து, அதை சில வாரங்கள் பயன்படுத்தலாம். பழங்காலத்தில் வேப்பம்பூ பச்சடி சமைத்து சாப்பிட்டனர். இப்போதும் சித்திரை மாதத்தில் கிராமங்களில் வேப்பம்பூ பச்சடி சாப்பிடுகின்றனர். நீங்களும் தயாரித்து சாப்பிடுங்கள்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on January 09, 2013, 02:44:05 PM
(http://sphotos-e.ak.fbcdn.net/hphotos-ak-ash4/302886_465233596860308_241114608_n.jpg)

முட்டை சைவப் பிரியர்களின் முதன்மை உணவாக மாறிப்போயிருக்கும் காலம் இது. முட்டை அசைவம் என்றாலே நம்பத் தயாராய் இல்லை இன்றைய இளம் தலைமுறை. ஆனால் அவர்களைக் கலக்கமுறச் செய்வதெல்லாம் முட்டையைக் குறித்து உலவிக் கொண்டிருக்கும் ஏராளமான கட்டுக் கதைகள் தான்.

“முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் இது, அது ..” என அடுக்கடுக்காய் வைக்கப்படும் பல்வேறு பயமுறுத்தும் அறிக்கைகளால் முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருக்கின்றனர் பெரும்பாலானோர்.

அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்த ஆனந்தத்துக்கு உள்ளாக்குகின்றன சமீப காலமாய் வெளியாகும் முட்டை குறித்த ஆராய்ச்சிகள். அவற்றில் ஒன்று “தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று.

முட்டை தரும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் செயலையே செய்கின்றன என ஒரு விரிவான ஆய்வின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

முட்டை வயிற்றில் உள்ள என்சைம்களுடன் கலந்து உருவாக்கும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தும் மருந்துகள் செய்யும் அதே பணியையே அடிபிறழாமல் செய்கின்றன எனும் தங்களது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர் கனடாவின் ஆல்பர்டா பல்கலைக் கழக ஆய்வாளர்கள்.

முட்டையை வேகவைத்து என்றல்ல, பொரித்து ஆம்லேட்களாக உட்கொள்வதும் சிறந்த பயனளிக்கிறது என்று சொல்லி ஆம்லேட் பிரியர்களின் வயிற்றில் முட்டை வார்க்கின்றனர் இவர்கள்.

முட்டை உண்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும், இதய நோய்கள் வரும், அது இது என அச்சுறுத்திக் கொண்டிருந்த தகவல்களுக்கு இன்னொரு ஆராய்ச்சி முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.

உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வரக் காரணமாகாது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானதல்ல. மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை. இன்னும் சொல்லப்போனால் தினம் இரண்டு முட்டைகளை உண்பது உடலுக்கு நல்லது. உங்கள் எடை கட்டுக்குள் வைத்திருக்கக் கூட இது உதவும் என சிலிர்ப்பூட்டும் தகவல்களைச் சொல்லி முட்டைப் பிரியர்களை ஆனந்தக் கூத்தாட வைக்கின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆராய்ச்சிக் குழுவினர்.

வாரத்துக்கு மூன்று முட்டைகளே ஆரோக்கியமானது என இங்கிலாந்து மருத்துவர்கள் நிர்ணயித்திருந்த கட்டுப்பாடுகளின் கட்டுகளையெல்லாம் அவிழ்த்து விட்டு , தினம் இரண்டு சாப்பிடுங்கள் என அறிவுறுத்த ஆரம்பித்திருக்கிறார்களாம்.

பிறகென்ன, நீங்களும் முட்டையை மறுபடியும் நேசியுங்கள்
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on January 10, 2013, 11:25:54 AM
(http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-snc6/247714_461076100609391_1331788149_n.jpg)

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி
அனைவருக்குமே நெல்லிக்கனியை பற்றி நன்கு தெரியும். நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது.
இந்த நெல்லிக்கனியில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், இதனை ஆயுர்வேத மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

1. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்கனியை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

2. உடலில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

3. இது ஒரு இயற்கையான ஆன்டி-ஏஜிங் பொருள். ஆகவே இதனை உட்கொண்டால் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் ஸ்காப்பிற்கு போதுமான அளவு ஈரப்பசை தருவதோடு, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

4. செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்து, மலச்சிக்கலை சரிசெய்யும்.

5. உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

6. கல்லீரலின் செயல்பாட்டை முறையாக நடத்துகிறது.

7. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காமல் பாதுகாக்கும்.

8. நெல்லிக்கனி உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on January 13, 2013, 09:15:01 AM
(http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-ash4/418734_434433806606954_626661671_n.jpg) (http://www.friendstamilchat.com)

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.முழு அளவு காட்டு கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

* வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். மற்றும், குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.

* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.

* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on January 13, 2013, 11:37:16 AM
(http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-snc7/404165_431847763532225_124682442_n.jpg) (http://www.friendstamilchat.com)

நிலக்கடலை அல்லது வேர்க்கடலை அல்லது கச்சான் என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும். இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.

இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை காந்தியடிகளுக்குப் பிடித்த உணவாகும்.

எண்ணெய் வித்துக்களில் மனிதர்களுக்கு அதிக அளவில் பயன்படுவது நிலக்கடலை ஆகும். நிலக்கடலையில் ஏகப்பட்ட அளவிற்கு புரோட்டீன் சத்து அடங்கியிருக்கிறது. நாம் உணவு தயாரிக்க பெருமளவில் பயன் படுத்தப்படும் கடலை எண்ணெய் கூட நிலக்கடலையிலிருந்துதான் எடுக்கப்படுகின்றன. கடலை எண்ணெய் பயன்படுத்தினால் அளவிற்கு அதிகமான அளவில் கொலஸ்ட்ரால் உண்டாகின்றது என்பதால் தற்காலத்தில் கடலை எண்ணெ யை பலர் தவிர்க்கின்றனர்.

உடம்பு மெலிதாக இருப்பவர்கள் தினம் சிறிது அளவு நிலக்கடலை பருப்பை சாப்பிடலாம். நிலக்கடலை சாப்பிடும்போது நிறைய உலர்ந்த முற்றிய கடலையை சாப்பிடுதல் கூடாது. ஏனெனில் எண்ணெய் சத்து முதிர்ந்த கடலையில் அதிகம் இருப்பதால் அது வாந்தியையும் உண்டு பண்ணிவிடக் கூடும். நிலக்கடலையிலிருந்து பால் எடுத்து பயன்படுத்தலாம்.


உங்களுக்கு தோணும் இன்னொரு கேள்வி கடலைக்கும், கடலை போடுறதுக்கும் என்ன சம்மந்தம் என்று???
ஒரு சம்மந்தமும் கிடையாது, யாரோ ஒருவர் நிலக்கடலை மீது உள்ள கோவத்தில் இப்படி கோர்த்துவிட்டு இருக்கவேண்டும்!!!
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 03, 2013, 06:32:51 PM
(http://4.bp.blogspot.com/-L2dzXZPFwvw/T14I_zfoV9I/AAAAAAAAAYU/bkb4CK-FZgI/s1600/421079_340075869363401_250712958299693_860818_648034966_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 09, 2013, 08:23:16 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash4/426677_335384876566331_1416438480_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 11:11:32 AM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/531678_286291711497889_38406627_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 11:23:46 AM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/31479_286439291483131_1291075623_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 11:41:22 AM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/304631_266076533519407_475409309_n.jpg)

முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் நிறைய...

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது.

இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும். முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்.

மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும். பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

முருங்கைக் கீரை சாப்பிட்டால் பெறும் பயன்கள்:
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற
பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம்
முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.

முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

முருங்கைப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான்என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.

கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை, குடலில்ஏற்படும் திருகுவலு, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப பருகிவர காசநோய் ,கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.

வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயன்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி

வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்...
இத்தனை பயன் உள்ள முருங்கைகீரையை சாப்பிட்டு உடல் நலத்தை பாதுகாக்கவும்...
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 11:43:33 AM
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-snc7/481318_266570046803389_541274349_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 11:50:31 AM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash4/424108_268694509924276_1875980110_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 12:00:19 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/59958_270797909713936_1715125659_n.jpg) (http://www.friendstamilchat.com)


புதினா கொத்தமல்லி கருவேப்பிலை மூன்றையும் தினசரி தவறாது உணவில் சேர்த்து வரவேண்டும். எளிதில் கிடைப்பதால் இவற்றின் நன்மை பலருக்கும் தெரிவதில்லை.

புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம்...ஆனால் இதன் மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் தொடர்ந்து பயன்படுத்துவோம்.

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு கார்போஹைடிரேட், நார்ப் பொருள் உலோகச் சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம் இரும்புச் சத்துக்களும், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது முக்கியம்.

அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது.

இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும். மலச்சிக்கல் நீங்கும்.
பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.

வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.

புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.

ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.

மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.

புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.

புதினா கஷாயம்:

25 கிராம் புதினா இலையை 500 மில்லி தண்ணீர் விட்டு நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டிய கஷாயத்தில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலந்து 60 மில்லி அளவு தினம் இரண்டு வேளை சாப்பிட்டால் செரிமானக் குறைவு நிவர்த்தியாகும். கை, கால் மூட்டுக்களில் ஏற்பட்ட வலிகள் குறைந்து விடும்.

புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு நீர் சேர்த்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். மூச்சுத்திணறல் நிற்க, புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.

புதினா ஜூஸ்

தேவையான பொருட்கள்: புதினா இலை-1 கட்டு, தண்ணீர்-1 டம்ளர், சர்க்கரை-1 கப், இஞ்சி - கொஞ்சூண்டு, எலுமிச்சை சாறு-1 டீஸ்பூன், உப்பு-2 சிட்டிகை.

செய்முறை: வெயிலில் நிழலான இடத்தில காயவைத்து புதினா இலையை எடுத்து கொள்ளவேண்டும். தண்ணீரில் இஞ்சி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சில நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து தண்ணீர் ரெடியான பிறகு புதினா இலைகளைச் சேர்த்து மறுபடியும் கொதிக்க விடவும். சில நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, இதை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அதன்பின் இந்தக் கலவையை வடிகட்டி, எலுமிச்சை சாறு சேர்க்கவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை அருந்தி வரலாம்.

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பள பளக்கும்.

புதினா பல் பொடி

இதை நாமே தயார் செய்துகொள்ளலாம்.புதினா இலைகளை வெயிலில் நன்றாக காயவைத்து அதனுடன் அதன் அளவில் எட்டில் ஒரு பங்கு உப்பு சேர்த்து தூள் செய்து சலித்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த பொடியை வைத்து தினசரி பல் தேய்த்து வந்தால் வாழ்நாள் முழுவதும் பல் சம்பந்தமான எந்த ஒரு நோயினாலும் பாதிக்கப்படமாட்டார். பற்கள் வெண்மையாக ஜொலிக்கும். ஈறுகளில் இரத்தம் வருவது, வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கும்.

வீட்டுத்தோட்டத்தில் புதினா:-

புதினாக் கீரையை தொட்டிகளில் எளிதாக வளர்க்கலாம். கடையில் வாங்கி வரும் புதினாக் கீரையில் இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை தொட்டி மண்ணில் ஊன்றி வைத்தால் போதும், கைக்கெட்டிய தூரத்தில் புதினா மூலிகை கிடைக்கும்.

அனைவரும் வீடுகளில் புதினாவை வளர்த்து நம் உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 12:02:16 PM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/530667_272126116247782_799840095_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 12:03:16 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/734928_272237822903278_940715103_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 01:38:15 PM
(http://rawforbeauty.com/images/stories/0011.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 01:40:53 PM
(http://rawforbeauty.com/images/stories/0009.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:04:40 PM
(http://rawforbeauty.com/images/stories/0021k.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:06:13 PM
(http://rawforbeauty.com/images/stories/019k.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:17:54 PM
(http://rawforbeauty.com/images/stories/013k.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:18:31 PM
(http://rawforbeauty.com/images/stories/012k.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:20:31 PM
(http://rawforbeauty.com/images/stories/food/natural%20remedies%20for%20rosacea%20copy.png)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:21:21 PM
(http://rawforbeauty.com/images/stories/12-love3.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:22:38 PM
(http://rawforbeauty.com/images/stories/385270_335026056606072_528235333_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:23:17 PM
(http://rawforbeauty.com/images/blog/blog__%208.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:23:50 PM
(http://rawforbeauty.com/images/blog/blog__%206.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:24:46 PM
(http://rawforbeauty.com/images/blog/blog__%2022.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:25:26 PM
(http://rawforbeauty.com/images/blog/blog__%2020.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:26:01 PM
(http://rawforbeauty.com/images/blog/blog__%202.png)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:27:03 PM
(http://rawforbeauty.com/images/blog/blog__%2019.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:27:50 PM
(http://rawforbeauty.com/images/blog/blog__%2014.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:28:31 PM
(http://rawforbeauty.com/images/blog/blog__%2015.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:29:03 PM
(http://rawforbeauty.com/images/blog/blog__%2012.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:29:36 PM
(http://rawforbeauty.com/images/blog/blog__%201.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:30:28 PM
(http://rawforbeauty.com/images/blog/1%209.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:30:58 PM
(http://rawforbeauty.com/images/blog/1%208.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:31:34 PM
(http://rawforbeauty.com/images/blog/1%206.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:32:02 PM
(http://rawforbeauty.com/images/blog/1%203.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:32:37 PM
(http://rawforbeauty.com/images/blog/1%205.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:33:33 PM
(http://rawforbeauty.com/images/blog/1%2012.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:34:06 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/33rd_make%20your%20own%20natural%20fluoride2.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:34:48 PM
(http://rawforbeauty.com/images/blog/1%201.png)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:35:45 PM
(http://rawforbeauty.com/images/stories/480526_280905408684804_1212894422_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:37:07 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/aat.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:37:46 PM
(http://rawforbeauty.com/images/stories/251281_289826441126034_1487127481_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:40:14 PM
(http://rawforbeauty.com/images/stories/30th_benefits_of_salsa_dancing.jpg) (http://www.friendstamilchat.com)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:41:48 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/18.jpg) (http://www.friendstamilchat.com)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:42:47 PM
(http://rawforbeauty.com/images/stories/food/d10.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:43:33 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/b38.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:50:17 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/154191_241840869281316_1255207405_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:50:56 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/4752_478863345488185_39270964_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:51:34 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/306688_329245617184116_2103111795_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:52:16 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/59933_330345830407428_2010347020_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:54:04 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/66399_4789839978119_1399346517_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:55:02 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/alkaline%20water%20copy.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:55:41 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/use%20sfor%20bentonite.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:57:56 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/20%20usese.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:58:43 PM
(http://rawforbeauty.com/images/stories/20097_327214454053899_2040052168_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 02:59:32 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/378210_435545876484351_2143488175_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 03:00:58 PM
(http://rawforbeauty.com/images/stories/demo/natural%20treatments4.jpg) (http://www.friendstamilchat.com)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 03:01:52 PM
(http://rawforbeauty.com/images/stories/demo/46140_326028807505797_668387054_n.png)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 03:02:34 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/580557_326046127504065_229693373_n.png)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 03:04:42 PM
(http://rawforbeauty.com/images/stories/demo/toothpaste.jpg) (http://www.friendstamilchat.com)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 11, 2013, 03:05:40 PM
(http://rawforbeauty.com/images/stories/food/agave.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 02:21:17 PM
(http://rawforbeauty.com/images/stories/d22.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 02:23:45 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/d18.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 02:25:07 PM
(http://rawforbeauty.com/images/stories/d14.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 02:26:46 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/d9.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 02:34:07 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/d3.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 02:36:16 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/b39.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 02:40:35 PM
(http://rawforbeauty.com/images/stories/b16.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 02:41:23 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/b7.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 02:42:21 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/2.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 02:42:58 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/1.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 02:43:44 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/42.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 02:44:27 PM
(http://rawforbeauty.com/images/stories/demo/40.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 02:45:15 PM
(http://rawforbeauty.com/images/stories/food/28.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 02:45:50 PM
(http://rawforbeauty.com/images/stories/food/35.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 02:46:24 PM
(http://rawforbeauty.com/images/stories/food/27.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 02:47:16 PM
(http://rawforbeauty.com/images/stories/food/33.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 02:48:04 PM
(http://rawforbeauty.com/images/stories/food/26.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 02:48:54 PM
(http://rawforbeauty.com/images/stories/food/25.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 03:50:45 PM
(http://rawforbeauty.com/images/stories/aam.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 03:54:11 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/19.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 03:55:23 PM
(http://rawforbeauty.com/images/stories/avocado%20a%20day.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 03:56:47 PM
(http://rawforbeauty.com/images/stories/food/10.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 03:58:11 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/aaaa.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 04:01:30 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/aaw.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 04:08:09 PM
(http://rawforbeauty.com/images/stories/food/6.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 04:09:54 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/5a.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 04:12:42 PM
(http://rawforbeauty.com/images/stories/3r.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 04:15:40 PM
(http://rawforbeauty.com/images/stories/1r.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 04:17:57 PM
(http://rawforbeauty.com/images/stories/548016_282578561850822_571131274_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 04:19:34 PM
(http://rawforbeauty.com/images/stories/13a.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 04:21:21 PM
(http://rawforbeauty.com/images/stories/7a.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 04:28:55 PM
(http://rawforbeauty.com/images/stories/1a.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 04:35:22 PM
(http://rawforbeauty.com/images/stories/l.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 04:40:41 PM
(http://rawforbeauty.com/images/stories/k.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 04:43:52 PM
(http://rawforbeauty.com/images/stories/76.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 04:50:12 PM
(http://rawforbeauty.com/images/stories/73.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 04:53:21 PM
(http://rawforbeauty.com/images/stories/54.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:32:38 PM
(http://rawforbeauty.com/images/stories/53.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:33:35 PM
(http://rawforbeauty.com/images/stories/51.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:34:15 PM
(http://rawforbeauty.com/images/stories/49.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:34:45 PM
(http://rawforbeauty.com/images/stories/35.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:35:17 PM
(http://rawforbeauty.com/images/stories/34.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:35:48 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/320472_289470631161615_1231309008_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:36:21 PM
(http://rawforbeauty.com/images/stories/32.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:36:52 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/66176_289753161133362_1652947930_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:37:35 PM
(http://rawforbeauty.com/images/stories/408791_289373381171340_452275515_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:38:24 PM
(http://rawforbeauty.com/images/stories/fruit/251104_289775127797832_530470735_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:39:04 PM
(http://rawforbeauty.com/images/stories/18.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:39:36 PM
(http://rawforbeauty.com/images/stories/17.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:40:03 PM
(http://rawforbeauty.com/images/stories/13.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:40:39 PM
(http://rawforbeauty.com/images/stories/15.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:41:08 PM
(http://rawforbeauty.com/images/stories/12.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:41:38 PM
(http://rawforbeauty.com/images/stories/14a.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:42:15 PM
(http://rawforbeauty.com/images/stories/10.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:44:02 PM
(http://rawforbeauty.com/images/stories/8.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:44:34 PM
(http://rawforbeauty.com/images/stories/7.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 06:45:10 PM
(http://rawforbeauty.com/images/stories/3.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 07:04:52 PM
(http://rawforbeauty.com/images/stories/2.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 07:06:02 PM
(http://rawforbeauty.com/images/stories/1.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 07:06:54 PM
(http://rawforbeauty.com/images/stories/holy%20basil.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 07:13:49 PM
(http://rawforbeauty.com/images/stories/homey.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 07:17:00 PM
(http://rawforbeauty.com/images/stories/natural%20remedies%20for%20radiaton.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 07:17:57 PM
(http://rawforbeauty.com/images/stories/cooling%20and%20warming.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 07:19:20 PM
(http://rawforbeauty.com/images/stories/alkalne%20menirals.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 07:20:20 PM
(http://rawforbeauty.com/images/stories/bamboo.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 07:21:31 PM
(http://rawforbeauty.com/images/stories/polmegrate.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 07:23:16 PM
(http://rawforbeauty.com/images/stories/yoga.png)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 07:25:16 PM
(http://rawforbeauty.com/images/stories/coconut%20oil.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 07:38:31 PM
(http://rawforbeauty.com/images/stories/turmeric.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 07:40:11 PM
(http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/424662_294978680610810_1494473468_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 07:41:46 PM
(http://rawforbeauty.com/images/stories/casto%20oil.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 07:46:45 PM
(http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash3/557574_295274827247862_629845919_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 07:54:50 PM
(http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-prn1/46544_296005210508157_926996293_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 08:12:55 PM
(http://sphotos-b.ak.fbcdn.net/hphotos-ak-ash3/598786_296742003767811_1702207840_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 08:25:50 PM
(http://sphotos-b.ak.fbcdn.net/hphotos-ak-ash4/409188_296389363803075_228772861_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 08:28:08 PM
(http://rawforbeauty.com/images/stories/197542_297823460326332_717669819_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 08:29:47 PM
(http://rawforbeauty.com/images/stories/285676_298126990295979_946286308_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 12, 2013, 08:32:08 PM
(http://sphotos-c.ak.fbcdn.net/hphotos-ak-ash3/c0.0.403.403/p403x403/553735_298134416961903_1772397496_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:36:59 AM
(http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/c0.0.403.403/p403x403/398186_297886706986674_1807355633_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:37:49 AM
(http://rawforbeauty.com/images/stories/561595_284474981661180_1117309946_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:38:25 AM
(http://rawforbeauty.com/images/stories/9279_292133517561993_873086966_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:40:35 AM
(http://rawforbeauty.com/images/stories/217887_283945595047452_1690665267_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:41:16 AM
(http://rawforbeauty.com/images/stories/385740_293226474119364_1601646252_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:41:57 AM
(http://rawforbeauty.com/images/stories/255465_293811694060842_279169538_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:42:42 AM
(http://rawforbeauty.com/images/stories/251281_289826441126034_14871274jk81_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:43:10 AM
(http://rawforbeauty.com/images/stories/581032_292585217516823_658877417_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:43:46 AM
(http://rawforbeauty.com/images/stories/148883_292637354178276_213850111_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:44:21 AM
(http://rawforbeauty.com/images/stories/581499_296966693745342_1198250669_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:44:58 AM
(http://rawforbeauty.com/images/stories/253120_287403748034970_586576460_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:45:44 AM
(http://rawforbeauty.com/images/stories/58782_296745987100746_462606053_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:46:12 AM
(http://rawforbeauty.com/images/stories/66156_288532757922069_1619207309_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:46:47 AM
(http://rawforbeauty.com/images/stories/cucumber.png)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:47:40 AM
(http://rawforbeauty.com/images/stories/488175_282682185173793_1460523613_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:48:19 AM
(http://rawforbeauty.com/images/stories/404243_296391223802889_231547878_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:48:53 AM
(http://rawforbeauty.com/images/stories/283742_271134719661873_1755477912_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:49:21 AM
(http://rawforbeauty.com/images/stories/488309_271960522912626_1038827203_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:49:58 AM
(http://rawforbeauty.com/images/stories/306305_272215796220432_151408199_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:50:33 AM
(http://rawforbeauty.com/images/stories/185267_287396361369042_445180116_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:51:16 AM
(http://rawforbeauty.com/images/stories/246486_285496294892382_1274108311_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:51:49 AM
(http://rawforbeauty.com/images/stories/44521_297130507062294_1438877686_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:52:24 AM
(http://rawforbeauty.com/images/stories/644138_297431967032148_232155835_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:53:12 AM
(http://rawforbeauty.com/images/stories/545444_297429017032443_1681535932_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:54:37 AM
(http://rawforbeauty.com/images/stories/blog13.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:55:11 AM
(http://rawforbeauty.com/images/stories/blog2.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:55:44 AM
(http://rawforbeauty.com/images/stories/blog1.png)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:56:14 AM
(http://rawforbeauty.com/images/stories/mc%20203053467%201.png)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:56:49 AM
(http://rawforbeauty.com/images/559077_275231269252218_2030583884_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:57:31 AM
(http://rawforbeauty.com/images/blog17.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:58:00 AM
(http://rawforbeauty.com/images/blog16.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:58:33 AM
(http://rawforbeauty.com/images/blog15.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 11:59:12 AM
(http://rawforbeauty.com/images/blog14.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 12:00:03 PM
(http://rawforbeauty.com/images/blog11.png)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 12:00:32 PM
(http://rawforbeauty.com/images/blog7.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 12:01:05 PM
(http://rawforbeauty.com/images/blog10.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 12:01:37 PM
(http://rawforbeauty.com/images/blog9.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 12:02:13 PM
(http://rawforbeauty.com/images/blog4.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 12:02:46 PM
(http://rawforbeauty.com/images/blog1.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 13, 2013, 12:03:23 PM
(http://rawforbeauty.com/images/blog2.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 27, 2013, 09:59:45 PM
(http://rawforbeauty.com/images/stories/z47.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on February 27, 2013, 10:00:36 PM
(http://rawforbeauty.com/images/stories/z40.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on March 20, 2013, 09:24:32 AM
(http://rawforbeauty.com/images/stories/food/natural%20remedies%20for%20rosacea%20copy.png)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on March 20, 2013, 09:27:26 AM
(http://rawforbeauty.com/images/stories/00000018.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on March 20, 2013, 09:29:02 AM
(http://rawforbeauty.com/images/stories/00000013.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on March 20, 2013, 09:30:39 AM
(http://rawforbeauty.com/images/stories/00000012.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on March 20, 2013, 09:31:04 AM
(http://rawforbeauty.com/images/stories/0000009.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on March 20, 2013, 09:32:03 AM
(http://rawforbeauty.com/images/stories/00000011.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on March 20, 2013, 09:33:44 AM
(http://rawforbeauty.com/images/stories/01q.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on March 20, 2013, 09:37:57 AM
(http://rawforbeauty.com/images/stories/01g.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on March 20, 2013, 09:38:27 AM
(http://rawforbeauty.com/images/stories/01f.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on March 20, 2013, 09:39:58 AM
(http://rawforbeauty.com/images/stories/01d.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on March 20, 2013, 09:42:29 AM
(http://rawforbeauty.com/images/stories/zz4.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on March 20, 2013, 09:43:07 AM
(http://rawforbeauty.com/images/stories/zz1.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on March 20, 2013, 09:45:00 AM
(http://rawforbeauty.com/images/stories/z50.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on March 20, 2013, 09:45:50 AM
(http://rawforbeauty.com/images/stories/z47.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on April 20, 2013, 04:40:00 PM
(http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-ash3/544102_346515242115321_1991545171_n.jpg)


சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத்தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும்; அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர். ‘சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும்’ என்பது பழமொழி. பாம்புக்கடி, நண்டுவாக்களி கடி முதலிய விஷக்கடிகளுக்கு இதன் இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். அதனால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும்.

கசப்பு மருந்து எனப்படும் சிறியாநங்கை, பெரியாநங்கை தாவரங்கள் மருத்துவகுணம் நிறைந்தவை. இவை செம்மண், கரிசல் மண்களில் நன்றாக வளரும். இது ஒரு குறுஞ்செடி. வேப்பிலை போன்று எதிர் அடுக்கில் வெட்டு இல்லாத இலைகளைக் கொண்டது. இதை விதைத்து 45 நாட்கள் ஆனதும் நாற்று எடுத்து நடலாம். ஆறு மாதம் கழித்து இலைகள் அறுவடை செய்து நிழலில் 5 நாட்கள் உலரவிட்டு பின் பொடி செய்து மருந்தாக உபயோகிப்பார்கள். ஆறு மாத்திற்கு மேல் வளர விட்டால் எள் பூ போன்று வெண்மையான பூ விடும். பின் 1.5 - 2 செ.மீ. நீள காய்கள் விடும். பின் காய்கள் காய்ந்தவுடன் வெடித்து விதைகள் சிதறிவிழும். இலை மென்று தின்றால் கசப்பாக இருக்கும்.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

ஆன்டி ரோகிராப்பின் மற்றும் பனிக்கொலின் வேர்களிலும், இலைகளில் பீட்டா-சட்டோ ஸ்டீரால், 'கால்மேகின்' என்ற கசப்புப் பொருளும் உண்டு.

விஷக்கடிக்கு மருந்து

சிறியாநங்கையின் இலை மற்றும் வேர்ப் பகுதிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. வேட்டைக்கு செல்லும் வேடர்கள் சிறியாநங்கை செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி எடுத்து கடை வாயில்வைத்து கடித்துக் கொண்டு செல்வார்கள் அவ்வாறு செல்லும்போது வேறு எந்த விஷப்பூச்சி கடித்தாலும் தாக்காது. தோல்நோய்களுக்கு சிறியா நங்கை மிகவும் நல்லது. ஆனால் பத்தியத்திற்கு கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது.

நீரிழிவு நோய்க்கு மருந்து

இது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். குழந்தைகளுக்கு மருந்து தயாரிக்க ஏற்றது. காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலம் இளக்கி, படபடப்பு, வயிற்றுப் போக்கு போன்ற வற்றிக்கும், மண்ணீரல் சம்பந்தமான நோயிக்கும் நல்ல மருந்து. நீரிழிவு நோயிக்கும் சிறியாநங்கையைப் பயன்படுத்து கிறார்கள்.

கல்லீரல் நோய்களை போக்கும்

காய்ச்சல், கல்லீரல் நோய்களைப் போக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து. ப்ளுகாய்ச்சலை குணப்படுத்தும். சைனஸ் மற்றும் சளித்தொந்தரவினால் ஏற்பட்ட நோய்களை போக்கும். மலேரியாவிற்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது சிறந்த ரத்தசுத்திகரிப்பானாக பயன்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on April 24, 2013, 08:49:26 PM
(http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-snc6/269815_517579954937074_1314392606_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 07:41:16 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/05/943226_379767815465229_1150826269_n_thumb.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 07:44:41 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/05/525449_379770192131658_1624626994_n_thumb.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 07:47:13 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/05/946028_379849778790366_2120030060_n_thumb.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 07:55:15 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/05/936338_379857238789620_420976365_n_thumb.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 08:00:13 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/05/943689_379863068789037_880546104_n_thumb.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 08:05:59 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/05/262382_379867745455236_1470381455_n_thumb.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 08:18:08 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/05/485422_379420075500003_1075807133_n_thumb.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 08:44:57 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/05/282285_379376965504314_829817183_n_thumb.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 08:49:20 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/05/250057_379309972177680_274569048_n_thumb.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 08:50:29 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/05/943492_379260472182630_743325149_n_thumb1.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 08:51:46 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/05/315917_379283608846983_1387286477_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 08:52:43 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/05/389125_378908935551117_1936242141_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 08:56:19 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/05/945854_378757722232905_1347423109_n.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 08:57:56 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/05/avocado1.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 08:59:05 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/05/healthbene1.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 09:00:08 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/04/greenonion.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 09:01:58 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/04/use-of.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 09:02:57 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/04/health.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 09:04:56 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/04/celery%20juice%20lowers%20blood%20sugar.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 09:07:38 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/04/16th_uses_of_cinnamon_oil.jpg) (http://www.friendstamilchat.com)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 09:20:16 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/02/00000025.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 09:21:24 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/02/012k.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 09:51:24 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/03/01q.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 09:53:30 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/03/01g.jpg)
Title: Re: ~ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~
Post by: MysteRy on May 12, 2013, 09:54:49 PM
(http://rawforbeauty.com/blog/wp-content/uploads/2013/03/01d.jpg)