Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on October 17, 2025, 01:32:14 PM »
2
ஆன்மீகம் - Spiritual / Re: THOUGHT for Today ✝️🙏
« Last post by MysteRy on October 17, 2025, 08:26:53 AM »
3
ஆன்மீகம் - Spiritual / Re: MORNING PRAYER ✝️ 🙏
« Last post by MysteRy on October 17, 2025, 08:26:05 AM »
4
Cine News & Movie Reviews / Search (2025) Webseries Review:
« Last post by MysteRy on October 17, 2025, 08:24:39 AM »

College student Naina (Chandsi) is brutally murdered and the investigation is assigned to ACP Sanyukta (Konkana Sen). In parallel, the story of politician Tushar (Shiv) and his political advisor Raksha (Shraddha Das) are shown. How all these people stories are linked and connected, are rest of the story.

Positives: Thriller mode narration, Many engaging moments, Actors performance, BGM, Cinematography.

Drawbacks: Seems there is another part for season 1 itself and hence no final conclusion.

Verdict: Watchable webseries.

OTT platform: Jio Hotstar.
5
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on October 17, 2025, 08:19:45 AM »
6

கடலிலுள்ள உப்பையெல்லாம் எடுத்து நிலத்தில் சமமாக பரப்பினால் எவ்வளவு உயரமாக இருக்கும் தெரியுமா? சுமார் 150 மீட்டர் உயரமாக இருக்கும்; அதாவது ஏறக்குறைய 45 மாடி கட்டடத்தின் உயரத்திற்கு இருக்கும். ஏராளமான ஆறுகளும் நன்னீர் ஓடைகளும் தானே கடலில் கலக்கின்றன; அப்படியிருக்க இவ்வளவு அதிகமான உப்பு எங்கிருந்து வந்தது? அது பல இடங்களிலிருந்து வந்து சேர்வதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதில் ஒரு இடம், நாம் நின்று கொண்டிருக்கும் நிலமாகும். நிலத்திலுள்ள மண் வழியாகவும், பாறைகள் வழியாகவும் மழைநீர் கசிந்து செல்கையில் சில உப்புகளையும் அவற்றின் பாகமான இரசாயனங்கள் உட்பட சிறிதளவு தாதுப் பொருள்களையும் கரைத்துச் செல்கிறது. அந்த நீர், ஓடைகள், ஆறுகள் வழியாக கடலில் கலக்கையில் இந்த உப்புகளையும் எடுத்துச் செல்கிறது. ஆனால், நன்னீரில் உப்பின் சதவிகிதம் மிகவும் குறைவாக இருப்பதால் அது நமக்கு தெரிவதில்லை.

மற்றொரு இடத்திலிருந்தும் உப்பு வருகிறது; அதுவே, கடலுக்கு அடியிலிருக்கும் புவி மேலோட்டிலுள்ள தாதுப் பொருள்கள் ஆகும். கடல் தரையிலுள்ள வெடிப்புகள் வழியாக தண்ணீர் புவி ஓட்டிற்குள் செல்கிறது; அங்கு பயங்கரமாக சூடாக்கப்பட்டு, தாதுப் பொருள்களையும் தன்னோடு எடுத்துக்கொண்டு, கடலடி வெந்நீர் ஊற்றுகள் வடிவில் மீண்டும் வெளியே வந்து கடலோடு கலக்கிறது . இதுபோன்ற வெந்நீர் ஊற்றுகளில் சில, ஆழ்கடலில் உள்ளன.

இதற்கு நேர்மாறான ஆனால் இதே விளைவை ஏற்படுத்துகிற மற்றொரு நிகழ்ச்சியும் நடக்கிறது. அதாவது, கடலடியிலுள்ள எரிமலைகள் சூடான பாறைகளை ஏராளமாக கக்குகின்றன; இவ்வாறு வெளிவரும் பாறைகளில் உள்ள இரசாயனங்கள் கடல் நீரில் கலக்கின்றன. தாதுப் பொருள்கள் கடலுக்கு வரும் மற்றொரு வழி, காற்றின் மூலமாகும். இது நிலத்திலுள்ள துகள்களை கடலில் கொண்டுபோய் சேர்க்கிறது . இந்த அனைத்து வழிகளின் மூலமாகவும், பூமியில் அறியப்பட்டுள்ள எல்லா விதமான தனிமங்களும் கடல் நீரில் காணப்படுகின்றன. என்றாலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பாகிய சோடியம் குளோரைடுதான் மிக அதிகளவில் உள்ளது. கடல் நீரில் கரைந்துள்ள உப்புகளில் 85 சதவிகிதம் இதுதான்; கடல் நீர் உப்புக் கரிப்பதற்கான முக்கிய காரணமும் இதுதான்.
🏝
கடலில் உப்பின் அளவு மாறாதிருப்பது எப்படி?

கடலிலிருந்து ஆவியாகிப்போகும் நீர் பெரும்பாலும் தூய்மையாக இருக்கிறது, தாதுப் பொருள்களோ கடலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால்தான் கடலில் உப்புகளின் அளவு அதிகமாக உள்ளது. அதே சமயத்தில், இன்னுமதிகமான தாதுப் பொருள்கள் கடலுக்குள் வந்துகொண்டே இருக்கின்றன. என்றாலும், கடலில் உப்பின் அளவு ஒரே சீராக இருக்கிறது, அதாவது ஆயிரம் பங்கு கடல் நீரில் ஏறத்தாழ 35 பங்கு உப்பு என்ற விகிதத்தில் இருக்கிறது. அப்படியென்றால், உப்புகளும் மற்ற தாதுப் பொருள்களும் சேருகின்ற வேகத்திலேயே நீங்கியும் விடுகின்றன என்பது தெளிவாகிறது. இது மற்றொரு கேள்வியை எழுப்புகிறது.

இந்த உப்புகள் எங்கே போகின்றன?

பல வகை உப்புகள் கடல்வாழ் உயிரிகளால் உறிஞ்சப்படுகின்றன. உதாரணமாக, பவழ பாலிப்புகள், மெல்லுடலிகள், ஓட்டுடலிகள் ஆகியவை உப்பிலுள்ள கால்சியத்தை உட்கொள்கின்றன; இதை உபயோகித்து தங்கள் ஓடுகளையும் எலும்புக்கூடுகளையும் அவை உருவாக்குகின்றன. நுண்பாசிகளான டயாட்டம்கள் சிலிக்காவை உறிஞ்சிக் கொள்கின்றன. பாக்டீரியாவும் மற்ற உயிரிகளும் கடலில் கரைந்துள்ள கரிம பொருள்களை உட்கொள்கின்றன. இந்த உயிரிகள் மரிக்கையில் அல்லது மற்ற உயிரிகள் இவற்றை தின்றுவிடுகையில், அவற்றின் உடலிலுள்ள உப்புகளும் தாதுப் பொருள்களும் கடைசியில் கழிவுகளாக கடலடியில் படிகின்றன.

இவ்வாறு உயிர்வேதியியல் முறையில் நீக்கப்படாத அநேக உப்புகள் பிற வழிகளில் நீக்கப்படுகின்றன. உதாரணமாக, ஆறுகளும் வழிந்தோடும் மழைநீரும் அடித்துச் செல்லும் களிமண்ணும், எரிமலைச் சாம்பல் போன்ற பொருட்களும் கடலில் சென்று சேருகின்றன; இவை, சில உப்புகளோடு கலந்து அவற்றை கடலடிக்கு கொண்டு செல்கின்றன. இன்னும் சில உப்புகள் பாறைகளோடு ஒட்டிக் கொள்கின்றன. இவ்வாறு, பல்வேறு முறைகளில் பெருமளவான உப்பு கடலடியில் போய் சேருகிறது .

அதற்கு பிறகு, நிலஇயற்பியல் நிகழ்வுகளால் இந்தச் சுழற்சி முடிவடைவதாக அநேக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். என்றாலும், இதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் எடுக்கலாம். புவியின் மேலோடு பிரமாண்டமான தட்டுகளாலானது. இவற்றில் சில தட்டுகள், நில அடுக்கு இறக்கம் ஏற்படுகிற இடங்களில் சந்திக்கின்றன; அங்கு ஒரு தட்டு அருகிலுள்ள மற்றொரு தட்டிற்குக் கீழே சென்று, வெப்பமாயிருக்கும் புவிப் புறணிக்குள் நுழைகிறது. பொதுவாக, கனமாயிருக்கும் கடலடித் தட்டு இலேசாயிருக்கும் கண்டத் தட்டிற்கு கீழே செல்கிறது; அதேசமயம், ஒரு பெரிய கன்வேயர் பெல்ட் போல செயல்பட்டு கடலடியிலுள்ள உப்புப் படிவங்களையும் இழுத்துச் செல்கிறது. இவ்வாறு, புவி மேலோட்டின் பெரும்பகுதி மெதுவாக மறுசுழற்சி செய்யப்படுகிறது . இந்த நிகழ்ச்சியினாலேயே, பூமியதிர்ச்சிகள், எரிமலைகள், பிளவு பள்ளத்தாக்குகள் போன்றவை ஏற்படுகின்றன.
....
#ஆச்சரியமூட்டும் சமநிலை...

கடல் நீரின் உப்புத்தன்மை இடத்துக்கு இடம் வித்தியாசப்படும்; சில சமயங்களில் பருவத்துக்கு பருவம் வித்தியாசப்படும். மற்ற பெருங்கடல்களோடு இணைக்கப்பட்டிருக்கும் கடல்களிலேயே மிக அதிகமாய் உப்புக் கரிக்கும் நீர் கொண்டவை பாரசீக வளைகுடாவும் செங்கடலும்தான்; ஏனெனில் அங்கு பெருமளவு நீர் ஆவியாகிறது. அதிகளவான மழைநீரை அல்லது பெரிய ஆறுகளிலிருந்து அதிகளவான நன்னீரைப் பெறும் இடங்களில் கடலின் உப்புத்தன்மை சராசரியைவிட குறைவாக இருக்கும். அவ்வாறே, துருவப் பிரதேசங்களில் பனிக்கட்டி உருகும் இடங்களிலும் கடல் நீர் அவ்வளவாக உப்புக் கரிக்காது; ஏனெனில், அந்தப் பனிக்கட்டிகள் உறைந்துபோன நன்னீர் அல்லவா? மாறாக, பனிக்கட்டிகள் உருவாகும்போது அருகிலுள்ள கடல் நீர் அதிகமாக உப்புக் கரிக்கும். என்றாலும், மொத்தத்தில் பார்த்தால் கடல் நீரின் உப்புத்தன்மை பெருமளவு நிலையாகவே உள்ளது.

கடல் நீரின் pH மதிப்பும் பெரும்பாலும் நிலையாகவே இருக்கும்; pH என்பது ஒரு கரைசலின் அமிலத்தன்மையை அல்லது காரத்தன்மையைக் குறிக்கிறது. pH மதிப்பு 7-ஆக இருந்தால் அது நடுநிலை கரைசல் எனப்படும். கடல் நீரின் pH மதிப்பு 7.4 முதல் 8.3 வரை இருக்கும், இது ஓரளவு காரத்தன்மையுடன் இருப்பதைக் குறிக்கிறது. (மனித இரத்தத்தின் pH மதிப்பு ஏறத்தாழ 7.4 ஆகும்.) கடலின் pH மதிப்பு இந்த எல்லையைத் தாண்டினால் கடல்களுக்கு ஆபத்துதான். அப்படிதான் நடந்துவிடுமோ என்று சில விஞ்ஞானிகள் இன்று பயப்படுகிறார்கள். மனிதனால் காற்றில் கலக்கப்படுகிற கார்பன்-டை-ஆக்ஸைடில் பெரும்பகுதி கடைசியில் கடலுக்குப் போய்ச் சேர்கிறது. அது தண்ணீரோடு கலக்கும்போது கார்போனிக் அமிலமாக மாறுகிறது. ஆகவே, மனித செயல்கள் காரணமாக கடல்களின் அமிலத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்துவிடலாம்.

வேதியியல் ரீதியில் கடல் நீர் சமநிலையோடு இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி நமக்கு முழுமையாகத் தெரியாது. என்றாலும், நமக்குத் தெரிந்திருப்பவற்றிலிருந்து, தமது படைப்பில் அக்கறை காட்டும் நம் சிருஷ்டிகரின் எல்லையற்ற ஞானம் எவ்வளவு உயர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.​
....
#கடல் உப்புகள்

விஞ்ஞானிகள் நூறு வருடங்களுக்கும் மேலாக கடல் நீரை ஆராய்ச்சி செய்திருக்கிற போதிலும், அதில் என்னென்ன இரசாயனப் பொருள்கள் உள்ளன என்பதைப் பற்றி அவர்களுக்கு முழுமையாக தெரியாது. இருந்தாலும், கடல் நீரில் கரைந்திருக்கும் பல்வேறு உப்புகளை பிரித்தெடுத்து, அவற்றின் விகிதங்களை கணக்கிட்டிருக்கிறார்கள். அவற்றில் சில:

55% குளோரைடு

30.6 சோடியம்

7.7 சல்பேட்

3.7 மெக்னீசியம்

1.2 கால்சியம்

1.1 பொட்டாசியம்

0.4 பைகார்பனேட்

0.2 புரோமைடு

போரேட், ஸ்ட்ரான்ஷியம், ஃபுளோரைடு போன்ற மற்றவை

நிலத்தால் சூழப்பட்டிருக்கும் சில நீர்நிலைகள் பெருங்கடலைவிட அதிக உப்பானவை. இதற்கு தலைசிறந்த உதாரணம் சவக் கடல். பூமியில் இருப்பதிலேயே அதிக உப்பான நீர்நிலை இதுதான். இது பைபிள் காலங்களில் உப்புக் கடல் என்று அழைக்கப்பட்டது. சவக் கடலுக்கு வந்துசேரும் நீரில் உப்புகளும் மற்ற தாதுப் பொருட்களும் கரைந்திருக்கின்றன. சவக் கடலின் கரைப்பகுதிதான் பூமியிலேயே மிகவும் தாழ்வான இடம் என்பதால் அதிலுள்ள நீர், ஆவியாதல் மூலமாக மட்டுமே வெளியேற முடியும். அதுவும் கோடை காலத்தில் பெருமளவு நீர் ஆவியாவதால் கடல் மட்டம் ஒரு நாளில் ஏறக்குறைய ஓர் அங்குலம் குறைந்துவிடுகிறது.

இதன் காரணமாக, மேற்பரப்பிலுள்ள நீரில் சுமார் 30 சதவிகித உப்பு இருக்கிறது; இது, மத்தியதரைக் கடலைவிட ஏறக்குறைய 10 மடங்கு அதிகமாகும். நீரின் உப்புத்தன்மை அதிகரிக்கையில் அதன் அடர்த்தியும் அதிகரிப்பதால், நீச்சலடிப்பவர்கள் இந்த நீரின் மேற்பரப்பிலேயே மிதப்பார்கள். சொல்லப்போனால், மல்லாக்கப் படுத்துக்கொண்டு அவர்களால் ஒரு செய்தித்தாளை வாசிக்க முடியும்! அதுவும் எந்த மிதவையும் இல்லாமலேயே!

....

#உப்பினால் சுத்தமாகும் காற்று...

காற்றில் கலந்திருக்கும் மாசு, மேகத்திலிருந்து நிலத்தின்மீது மழை பொழிவதை தடுப்பதாக ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. ஆனால், அதே மாசுபட்ட மேகம் கடல்மீது செல்கையில் உடனடியாக மழையாய் பெய்கிறது. கடல் நீர்த் திவலைகளில் உருவாகும் உப்பு நீர் கலந்த காற்றே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

காற்றிலுள்ள மாசுத் துகள்களைச் சுற்றி உருவாகும் நீர்த் துளிகள் மிகவும் சிறியவையாக இருப்பதால் அவை மழையாக பெய்வதில்லை; ஆகவே அவை காற்றிலேயே மிதக்கின்றன. உப்பு நீர் கலந்த காற்று, கடல்மீது தவழும் மேகங்களிலுள்ள சிறிய நீர்த் துளிகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பெரிய துளிகளாவதற்கு உதவுகிறது. அதனால் மழை பெய்கிறது; அவ்வாறு பெய்யும்போது, காற்றிலுள்ள மாசுகளையும் நீக்கி சுத்தப்படுத்துகிறது.
7

இந்தியரான அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியது. அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டுப்லோ, மெக்கேல் கிரமர் ஆகிய மூவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இதற்கு முன்பாக இந்தியாவை சேர்ந்த 8 பேர் இந்த கவுரவமிக்க விருதை பெற்றுள்ளனர்.
⤵️
அவர்கள் பற்றிய ஒரு விவரம் இதோ:

முதல்முதலில் நோபல் பரிசு வென்ற இந்தியர், நமது தேசிய கீதத்தை எழுதிய, #ரவீந்திரநாத்_தாகூர். இலக்கியத்திற்காக 1913ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அவரது ஆழ்ந்த உணர்திறன், புதிய மற்றும் அழகான வரிகளின் காரணமாக, ரவீந்திரநாத் தாகூருக்கு இந்த விருது கிடைத்தது.
#சிவி_ராமனுக்கு, இயற்பியல் ஆய்வு சாதனைக்காக, 1930ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஒளி சிதறல் பிரிவு ஆய்வுக்காக சர் சி.வி.ராமன் இந்த விருதை பெற்றார்.
#ஹர்_கோவிந்த்_கொரானா, மருத்துவ துறை பணிக்காக 1968ல் நோபல் பரிசு பெற்றார். மரபணு குறியீட்டின் விளக்கம் மற்றும் புரதத் தொகுப்பில் அதன் செயல்பாடு பற்றிய ஆய்வுக்காக இந்த விருது ராபர்ட் டபிள்யூ. ஹோலி மற்றும் மார்ஷல் டபிள்யூ. நிரன்பெர்க் ஆகியோருடன் ஹர்கோவிந்த் கொரானாவுக்கும் கிடைத்தது.
அமெரிக்கா வாழ் இந்தியர் #அபிஜித்_பானர்ஜி உட்பட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு
அமைதிக்கான நோபல் பரிசு, அன்னை #தெரசாவுக்கு 1979ல் வழங்கப்பட்டது.
#சுப்ரமண்யம்_சந்திரசேகர் இயற்பியல் துறைக்காக, 1983ல் நோபல் பரிசு பெற்றார். நட்சத்திரங்களின் அமைப்பு மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இயற்பியல் செயல்முறைகள் குறித்த அவரது தத்துவார்த்த ஆய்வுகளுக்காக இந்த விருது கிடைத்தது.
பொருளாதார அறிவியலுக்கு வழங்கிய பங்களிப்புக்காக, 1998ல் #அமர்த்தியா_சென்னுக்கு விருது வழங்கப்பட்டது.
வேதியியல் துறையில் சாதித்ததற்கு, 2009ல் #வெங்கட்ராமன்_ராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. தாமஸ் ஏ. ஸ்டீட்ஸ் மற்றும் அடா ஈ. யோனாத் ஆகியோருக்கும் சேர்த்தே இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அமைதிக்கான நோபல் பரிசு 2014ல் #கைலாஷ்_சத்யார்த்திக்கு வழங்கப்பட்டது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குஎதிரான அடக்குமுறை தொடர்பான, செயல்பாடுகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கும் அப்போது அமைதிக்கான நோபல் விருது சேர்த்தே அறிவிக்கப்பட்டது.

உலகளாவிய வறுமையை நிவர்த்தி செய்வதற்கான சோதனை அணுகுமுறைக்காக #அபிஜித்_பானர்ஜி, எஸ்தர் டுஃப்லோ மற்றும் மைக்கேல் க்ரீமருடன் சேர்ந்து 2019 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
8

(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.
(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.
(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணறு.
(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
(8 ) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்களைக் கட்டிய கிணறு.
(12) கடல் (Sea) - சமுத்திரம்.
(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
(15) கால் (Channel) - நீரோடும் வழி.
(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.
(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.
(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) – குளம், ஏரி, முள்ளம்களின் நடுவே அமைந்த கிணறு.
(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
(41) பொய்கை- தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.
(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள் ஆகும்..

(48)முள்ளம் ..
செம்பரம்பாக்கம் ஏரி மாதிரியான பாசன கால்வாய்களில் மீன் பிடிக்க அமைக்கப்படும் நீர்தேங்கும் அமைப்பு. தெற்கு மலையம்பாக்கத்தில் இந்த அமைப்பு இருந்தது... 2000ம் ஆண்டிற்கு பிறகு இது படிப்படியாக விவசாயத்துடன் அழிக்கப்பட்டு இப்போது கட்டிடங்களாகி விட்டது.
9

90 காலகட்டத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு இது தான் அன்றைக்கு பேவரிட் ஸ்நேக்ஸ்...

செட்டியாரின் பலசரக்கு கடையில் தகர டப்பாவில் இந்த பிஸ்கட் மூடி வைத்திருப்பார்.

ஒத்த பைசா பிஸ்கட்,
5 பைசாக்கு 5 பிஸ்கட், பத்து பைசாக்கோ, இருபது பைசாக்கோ பிஸ்கட் வாங்கி யூனிபார்ம் பாக்கெட்டில் போட்டு பள்ளிக்கூடத்திற்கு போகும் வழியில் ஒவ்வொரு பிஸ்கட்டாக வாயில் போடுவோம்,

வாயில் போட்ட ஒத்த பிஸ்கட்டை தின்னுவது இல்லை. உமிழ்நீரில் அந்த பிஸ்கட் கரைந்து போகும் பிறகு அப்படியே நுனைத்தபடி சுவையுடன் ருசித்து விழுங்குவது தான் இந்த பிஸ்கட் தின்னும் முறை, என எழுதபடாத சட்டம் உண்டு..

சில நேரங்களில் பள்ளிக்கு வந்த பிறகு மீதம் பிஸ்கட் டவுசர் பாக்கெட்டில் இருந்தால், அதை சக பள்ளி தோழனுக்கு கொடுப்போம்.. சும்மா இல்லை.? பண்ட மாற்று முறையில்...

நான் பிஸ்கட் தந்தால் நீ, சிலேட் குச்சி, சிலேட் அழிக்கும் பச்சிலை, அல்லது சின்ன கச்சி (சின்ன கோலி) இதில் ஏதாவது ஒன்று தரவேண்டும்...

பர்கர், ஷவர்மா, சிக்கன் ரோல் , லேஸ் ஆகியவை இன்றைக்கு பேவரிட் ஸ்நேக்ஸின் ஆளுமை, ஒத்த பைசா பிஸ்கட் மறக்கபட்டும், மறைக்கபட்டும் உள்ளது. ( இந்த பிஸ்கட் ஒரு சில இடங்களில் இப்போதும் உள்ளது)

ஒத்த பைச பிஸ்கட்டை ருசித்து தின்ற கடைசி தலைமுறையும் நாம் தான்..
10
வெறும் வயிற்றில் ஒருபிடி அம்மன் பச்சரிசி இலையை சாப்பிட்டு பிறகு அரைலிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு ஒன்றறை மணிநேரம் கழித்து சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அல்சராக இருந்தாலும் 10 நாட்களில் குணமாகிவிடும்...

Pages: [1] 2 3 ... 10