Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
கவிதைகள் / Re: காகிதம் நான் !
« Last post by Yazhini on Today at 05:20:14 AM »
மிக அருமை சகோ...
ஏதோ சில பக்கங்களை மீண்டும் புரட்டி பார்த்த உணர்வு 🔥
2
அழகான காதல் ஓவியம்
நம் திருமண நிழற்படம்...
உன் கரம்பற்றிய நினைவுகளை
மீண்டும் ஒருமுறை புரட்டி பார்க்கிறேன்...

தங்கு தடையில்லாமல் அழகாக
தொடங்கியது நம் காதல் கதை.
உன்னை விட்டு விலகிவிலகி சென்ற போதும்
விரட்டி விரட்டி காதல் செய்தாய்
உன் அதீத அன்பினால் வசிகரித்தாய்..

கடல் தேடி பாயும் நதிபோல்
உன்னை தேடி வர செய்தாய்
சுற்றம் மறந்து முற்றும் மறந்து
உன்னில் தஞ்சம் கொண்டது பேதையுள்ளம்..
உன் நினைவுகளில் மூழ்கிய
என்னை மீட்க - உன்னில்
புதைய சித்தமானேன்....

சித்திரை பூக்களின் மணமுடன்
திருமணத்தில் மனமும் மணக்க...
வற்றா ஜீவஊற்றாய் அன்பும் வழிந்தோட
இரு உயிர்களின் முக்காலத்தையும்
ஒன்றாக பிணைக்கும் மூன்று முடிச்சு
முடிவடையா உணர்வுகளின் நீர் ஊற்று.

உன் கைப்பிடிக்குள் அன்னையின்
கதகதப்பை உணர்ந்திட
மகிழ்ச்சியில் புன்னகையுடன் கண்ணீரும்
சிறிது கலந்து உறவாடியது...
நீயே என் பாதி
என மனமும் மண்டியிட்டது...

எண்ணிலடங்கா நினைவுகளின் பொக்கிஷம்
நாம் அன்பால் இணைந்த திருமண புகைப்படம்... 💜 💜 💜
3
             நீயும் நானுமாய்!

இறைவனுடைய விதிப்படி இன்றைய மாங்கல்ய திருநாள் நமதே!
இரு மனங்களும் காதலித்து காத்திருந்து ஒருமனதாய் சேரும் நாளும் இதுவே!
இனிய காலைப்பொழுதினில் இன்னிசை மேள,தாளங்களுடன் ஆரம்பித்தது எங்கள் திருமணமே!

மணமகனாய் அலங்கரிக்கப்பட்டு மணமேடையில் எனக்காக காத்திருந்தாய்!
மலர்மாலையினை அன்னநடையில் என் கரங்களில் ஏந்தி,  உன் கழுத்தினில் அணிவித்தேன்!
மணகளாய் உன் அருகில் அமர்ந்த என்னை உன் ஓரப்பார்வையினால் இரசித்தாய்!
மலர்ந்த புன்னகையுடன் நாணத்தில் நான் தலை குனிந்தேன்!

மந்திரங்கள் ஓதி ஐயர் அக்கினி வளர்க்க !
மங்கள இசை "மாங்கல்யம் தந்துணானே " என ஒலிக்க !
மனதார வாழ்த்த உற்றார் ,உறவினர்கள் நம்மை சூழ்ந்திருக்க!
மகிழ்வுடன் மாங்கல்யத்தை உன் கையில் ஏந்தி ,என் கழுத்தில் முடிச்சிட்டாய்!
மலர்ந்த உன் இதழினால் என் பிறை நுதலில் அன்பாக முத்தம் இட்டாய்!

என் காதினில் செல்லமாக "I love you பொண்டாட்டி" என்றாய்!
எல்லாம் மறந்து உன் வசம் ஆகி விட்டேன் அத்தருணத்தில்!
என் பட்டுச்சேலை முந்தானையில் உன் பட்டு வேக்ஷ்டி தலைப்பு முடிக்கப்பட்டன இணைபிரியாமல்!
என் கையினை உன் கரத்தினால் இறுகப் பற்றிக்கொண்டாய் மூச்சு உள்ளவரை உன்னை விடமாட்டேன் என்று!

அக்கினியை மும்முறை வலம் வந்தோம் வாழ்க்கை உறுதிமொழி எடுத்தவாறே!
அம்மி மிதித்த என் பாத விரல்களை பிடித்து மெட்டி போட்டு ,தலை நிமிர்ந்து நோக்கினாய் என்னை!
அருந்ததி பார்த்து பெற்றோர், உற்றார் ஆசி பெற்றோம் எங்கள் இல்வாழ்க்கைக்கு!
அன்று நடந்த நீர் பானைக்குள் கணையாழி எடுக்கும் போட்டியில் விட்டுக்கொடுத்து மகிழ்ந்தோம்!

இத்திருமண நாள் கனவுகளுடன் தேன்மொழி இங்கே!
இத்தனைக்கும் சொந்தமான என்னவன் எங்கே!
இந்த ஆசை கனவு நனவாக நீயும் நானுமாய்!



5
ஆன்மீகம் - Spiritual / Re: BIBLE VERSE of THE Day ✝️ 🙏
« Last post by MysteRy on November 17, 2025, 03:17:44 PM »
8
SMS & QUOTES / Re: Random Quotes, Pics, Comedy etc. - Everyday a Suprise
« Last post by Ishaa on November 17, 2025, 01:02:25 PM »
9
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on November 17, 2025, 01:00:45 PM »
10
கவிதைகள் / காகிதம் நான் !
« Last post by joker on November 17, 2025, 12:14:49 PM »
காற்றில்
அசைந்தாடும்
காகிதம் நான்

காற்றில் அசைந்து
சில நேரம் உங்கள் அருகில்
வரக்கூடும்  நான்

சில நேரம்
அழகான கவிதை தாங்கி
உங்களை மகிழ்விக்க கூடும்

சில நேரம்
அழகான கதையின்
ஒரு பகுதியாய் நான்

சில நேரம்
நகைச்சுவையாய்
உங்கள் உதடுகளில்
புன்சிரிப்பை கடத்துபவனாய் 
நான்

சில நேரம்
புரியாத மொழி தாங்கி
உங்களை குழப்பக்கூடும்
நான்

சில நேரம்
வெற்றுக்காகிதமாய்
நான்

யாரோ ஒருவருக்கு
ஏதோ ஒரு கணம்
வேண்டாதவனாய் மாறியதால்
காற்றில் அலைக்கழிந்து கொண்டிருக்கிறேன்

காற்று வீசும் வரை
நான் நகர்வேன்
Pages: [1] 2 3 ... 10