Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on Today at 04:44:51 PM »
2
POEMS / Re: The Hypocrisy
« Last post by joker on Today at 04:13:51 PM »
Wow nice!

edho karutha sollirupeenganu namburen  :D :D

Welcome back poetuuuu  :) :)
3
POEMS / The Hypocrisy
« Last post by Mirage on Today at 12:44:04 PM »
Joker and Luminous have inspired me to write again... so yet another mental manadhin kirukkal.
This is my conscience confronting my mind.

4
ஊசி


அடுத்த விடுகதை
🪷மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன? 🪷
5
நேற்று வைத்திருந்த
புன்னகையை மறந்து விட்டு
இன்று அழுதுக் கொண்டு இருக்கிறாய்

நாளை இந்த அழுகையும்
பறந்தோட போகிறது
இதற்குள்ளாக தானே வாழ்க்கை இருக்கிறது 

கடந்து வாருங்கள்
காலம் பல முன்னே இருக்கிறது வெல்ல
அது இன்னும் நிறைய ஆச்சரியங்களை
வைத்திருக்கிறது தந்திட
6
Wallpapers - Own Creations / Re: Select your chat nick images
« Last post by Yazhini on Today at 11:49:26 AM »


Brooo.. enakum ipadi oru image Venum 🤧🤧🤧🤧
7
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 11:12:19 AM »
8
Wallpapers - Own Creations / Re: Select your chat nick images
« Last post by Yazhini on Today at 11:07:02 AM »
Awesome..... 🎉🎉 Semmaiya iruku 👏👏👏
9
தேன் தேன் தேன் !!!

*தேன் சாப்பிடும் முறைகள்*🙏*10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தேன் சாப்பிட கூடாது* 🙏
தெரிந்த தேனைப்பற்றி தெரியாத பல விடயங்கள் !!!

தேன் தானும் கெடாது தன்னுடன் சேரும்
பொருளையும் கெட விடாது !!!
தேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது.

அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. முத்து போல உருண்டு நகரும்

தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும்.

இதை நாய் முகராது !!!

அதேபோல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது !!!

வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பை கொஞ்சம் உள்ளங்கையில் வைத்து கால் ஸ்பூன் தேனை வைத்து நன்றாக மத்தித்தால் உள்ளங்கை நன்றாக கொதிக்கும் அப்படி கொதித்தால் அது நல்ல சுத்தமான தேன்  !!!

காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு.

தேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள்.
இது காய்ச்சிய தேன்.

இது கொஞ்சம் நீர்த்திருக்கும். இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும்.

காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். ஆண்டுக் கணக்காக வைத்திருந்தாலும் கெடாது !!!

சுடுதண்ணீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்காது !!!
அதனால் தேனை ஒரு சிறிய கரண்டியில் எடுத்து நன்றாக நக்கி உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்டு பிறகு சுடுநீர் அருந்தவும்

வயதானவர்களுக்கு தேனை தாராளமாகக் கொடுக்கலாம். சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், சர்க்கரை ஏறாது

வெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல.

பத்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம்.

ஆனால், நாட்டு மருந்து கொடுக்கும்போது… ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு (சித்த மருந்துகள் )தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம்.

எச்சரிக்கை :- ஆங்கில மாத்திரைகளை தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது !!!

எந்த வயதினராக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ்பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது.

அதேபோல, தேனை நக்கித்தான் சாப்பிடவேண்டும்.

கண்டிப்பாக குடிக்கவோ விழுங்கவோ கூடாது.

விழுங்கும்போது புரையேறினால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகிவிடும்.

மருந்து சாப்பிடும்போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும்போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது.

தேன்  மிகஉயர்ந்த அமிர்தம்.

இது  அனைவருக்கும்தெரியும் !!!

ஆனால்  அந்த தேனே  சிலசமயம்  நஞ்சாக மாரி ஆளைக்கொள்ளும் !!!

 நாம்  எதற்காகவோ  ஆங்கில மருந்து  சாப்பிட்டுயிருக்கும் போது
பாலில்  தேன்கலந்தோ   சாப்பிடுவோம்

இனி இதுபோல் செய்யாதீர்கள் !!!

இந்த பரிசோதனையை நீங்கள்  செய்துபாருங்கள் !!!

பெரும்பாலான மாத்திரையில்  சுண்ணாம்புசத்து  அதிகம் உண்டு !!!

சிறிது  வெற்றிலைபோடும்  சுண்ணாம்பில்  தேன்கலந்து  கை  வைத்து  பாறுங்கள்  கை  கொப்பளிக்கும்  அளவு  சூடுவரும் !!!

ஒருவர் சுகர்மாத்திரை  சாப்பிட்டு
கொஞ்ச நேரத்தில் இருமலுக்காக
ஒருஸ்பூன்  தேன்  குடித்தார் சிறிது  நேரம் கழித்து வயிறு  எரிந்து  வேர்த்து  இதயவலிவந்து  டாய்லட்போயி  அவஸ்தைபட்டு விட்டார் !!!

நல்ல வேளை  அவர் வீட்டில்  எலுமிச்சம்பழம் 
இருந்தது  அதைகுடித்து  விஷம்முறித்து  ஆபத்தில்இருந்து  தப்பித்தார் !!!

தயவுசெய்து  ஆங்கில மருந்து  சாப்பிட்டு இருக்கும் பொழுது  மறந்தும் யாரும்  தேன்  சாப்பிடாதீர்கள் !!!

அது  மருந்தை  முறித்து  உயிரை கொள்ளும் !!!

தெரியாமல்
யாரும்
சாப்பிட்டுவிட்டால் உடனே
எலுமிச்சைசாறு  கொடுத்தால் விஷம் முறிவு ஏற்பட்டு
காப்பாற்றி விடலாம்
10


சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.

தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு. அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.

பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம் சாப்பிடுகிறார்கள்.  கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.

சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும்.

அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.

சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.

கொதிக்கக்கொதிக்க சோறு சாப்பிடக்கூடாது.  மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும்.

அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்லதெம்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.

முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது.

பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக்கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.

சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.

பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச்சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.  சிலர் சாம்பார், ரசம், வற்றல்குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல் எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல்.

மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.

மாதாந்திர பிரச்சினை உள்ள பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது.

சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.

வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது. ...

Pages: [1] 2 3 ... 10