Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:35:00 AM »
2


ஒற்றை தாய்..
==========

அம்மா! என் அன்பு அன்னையே !
முன்பெல்லாம் நீதான்  என் முதல் எதிரி !
நான் எது வேண்டுமேற்று கேட்டாலும்
ஒருமுறைக்கு பலமுறைகள் யோசித்து
அவசியமானத்தையே அனுமதித்தாய்!
என்னை செய்யாதே என தடுத்த செயலுக்காக
பலமுறைகள் உன்னை சாடியிருப்பேன்.

உண்ணும் உணவில் சில தடைகள்...
உடுத்தும் உடையில் விதிமுறைகள்..
உரையாடல் பொழுதில் சில திருத்தங்கள்..
உலகை ரசிக்க, நினைக்கையில் தடைகள்...
என் மனதில் கோவம் கொப்பளிக்க..
இவள் என்ன பைத்தியமா? நம்மை
ஏன் இப்படி கடுமையாக வாட்டுகிறாள்..
இவள் மனித இனம் தானே? நம்மை
ஏன் இப்படி கொடுமை செய்கிறாள்..

உன்னை பல நாட்கள் திட்டி தீர்த்தேன்..
இவள் என்ன மனுஷியா இல்லை கல்லா?

தந்தையில்லா எனை நீ ஆளாக்க..
உனது உன்னத அன்பை அடக்கி,
உனது தாய்மையை கல்லாக்கி..
உன் மனதினை, ஓர் ஆடவனாக்கி..
என்னை ஆளாக்கி இருக்கின்றாய்..
உனக்கு தலை வணங்குகிறேன்...

ஆனால் என் மனதில் 1000 வினாக்கள்..
இது தான் ஓர் ஒற்றை தாயின் உருவமா?.
இன்று என்னை இவ்வுலகம் மெச்சும்..
உன்னத மகளாக ஊருக்கு கொடுத்தாய்..-இதற்கு .
அம்மா! உன்னை மனதார மதிக்கிறேன்.

ஆனால் தாயே ..  ஒன்றை நீ மறந்துவிட்டாய்
அம்மா! உன் தாய்மையை கல்லாக்கி.
இந்த உலகுக்கு ஒரு நல்ல மகளை கொடுத்தாய்..
இதனால்  நீ உன் தாய்மையை இழந்தாய்..
நானோ என் அன்னையை இழந்தேன்...
இது விதியா? இல்லை இது தான் வாழ்க்கையா?
3
கவிதைகள் / எனக்குள் அவள்
« Last post by joker on Today at 12:19:45 AM »
ஓர் நாள்
வார்த்தைப் போரில்
என் உள்ளத்தை கைப்பற்றியவள்

விருப்பமான இசை போல
என் நெஞ்சில்
பதிந்தவள்

அன்பின்
கைவண்ணத்தில் எனக்காய்
புதிய வானத்தை வரைந்தவள்

இதயத்தின் தீபத்தில்
ஒளியாய் பிரகாசிப்பவள்

எனக்குள் அலைபாய்ந்து
கரையாக நின்றவள்

எனக்குள் ஒரு உலகை
கண்டவள்

மனம் எந்நிலையில் எரிந்தாலும்
குளிர்விக்கும் நினைவுகளை தந்தவள்
 அவள்

எந்த வலியிலும்
அணைத்து ஆற்றும் அவள்
பேச்சு

பகலில் நிழலாய்
இரவில் நிலவாய்
என்னுள்
ஓடும் நதி அவள்

சிறுக சிறுக என்னை
அவளாக  மாற்றி செதுக்கும்
சிற்பி அவள்

நான் வேறு அவள் வேறு அல்ல
எனக்குள் அவள்


***Joker***
4
கவிதைகள் / Re: மாவீரர் நாள்
« Last post by சாக்ரடீஸ் on November 26, 2025, 11:53:32 PM »
மாவீரர் நாள் 🙏மண் மக்கள் மொழிக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் நாள் இது. அவர்களின் இரத்தத்தால் எழுந்த வரலாறு நமக்கெல்லாம் நிலையான வழிகாட்டி. மறக்க முடியாத அந்த வீரச்சுவடுகளை வணங்கிப் போற்றுவோம்.
5
கவிதைகள் / மாவீரர் நாள்
« Last post by Thenmozhi on November 26, 2025, 08:39:04 PM »
                  மாவீரர் நாள்


கார்த்திகைத் திங்கள் 27ஆம் நாளாம் இன்று-       நம் தமிழர்
காவியத்  தெய்வங்களை வணங்கி வழிபடும்      நாளும் அதுவே
காலங்கள் பல்லாண்டுகளாக உருண்டு  ஓடினாலும்
காத்திருக்கின்றோம் -கல்லறையில் இருந்து மீண்டும் நீங்கள் உயிர்த்தெழுவீர்கள் என்ற நம்பிக்கையில்!

தமிழீழ மண்ணை மீட்டெடுக்க
தன்னுயிரை ஈர்த்த தியாக தீபங்கள்       இவர்களே!
தன்னலமின்றி  தமிழுக்காகவும்,தாய் மண்ணுக்காகவும் உயிர் நீத்த மாவீரர்களும் இவர்களே!
தமிழனின் வீரத்தினை உலகத்திற்கு பறைசாற்றிய வீர,வீராங்கனைகளும் இவர்களே!

இவர்களின் உடல்களில் செங்குருதிகளும், வீரத்தழும்புகளும்!
இவர்களின் கழுத்துகளில் சயனைட் குப்பிகளும்!
இவர்களின் மார்பிலும் ,கைகளிலும் ஆயுதங்களும்!
இவர்களின் மனதில் தமிழீழ தாயக விடுதலை கனவுகளும்!
இவர்களின் வாய் அண்ணன் கூறிய உறுதிமொழிகளை உரைத்தவாறும்!
இவர்களின் கால்கள் விடுதலையை நோக்கி வீறுநடை போடும்!

விடுதலைப் புலிகள்,கரும்புலிகள்,
கடற்புலிகள் எனும் பிரிவுகளாக !
விதவிதமான புனை பெயர்களுடன், சீருடை அணிந்து ,அணியாக போர்க்களத்தில்!
விண்ணைப் பிளக்கும் பீரங்கி ,வெடிகுண்டு சத்தம்!
விழும் எதிரிகளின் உடல் அடுக்கடுக்காக நிலத்தில்!

மாவீரர்களை பத்து திங்கள் சுமந்து ஈன்றெடுத்த தாய் என்றும் வீரத்தாய்!
மாவீரர்கள் கல்லறையில் புதைக்கப்படவில்லை, எங்களின் மனதில் விதைக்கப்பட்டவர்கள்!
மாவீரர்களை வணங்குகின்றேன், வழிபடுகின்றேன்!


6
என் மனதில் ஓடும் ஆயிரம் எண்ணங்களுக்கு
விடைதெரியாமல் இன்று தவிக்கிறேன்
அழகான ஓவியமாக இருந்த உன்னை
சிற்பமாய் என் இதயத்தில் வடித்தேன்
 கால ஓட்டத்தில் ஒரு கந்தர்வ வாழ்க்கை அது

தேவதைகளையும் மிஞ்சிய அழகி  நீ
தினமும் உன்னை   ஆராதித்தேன்
உன்னை படைத்த பிரமனை வியந்தேன்
சித்திரத்தேரிலே தங்க சிலையாக பவனி வந்தாய் 
பார்த்து பார்த்து புளகாங்கிதம் அடைந்தேன்
\
பழைய கஞ்சி ஆறிப்போனதுபோல,  காலம்கடக்க
உன் அழகிலும் சில மாற்றங்கள் ஏற்பட
உன்மீது என் நாட்டம் குறையலாயிற்று
புதிய உறவுகள் என்னை அண்டத்தொடங்கின
நானும் புதிய மாற்றங்களுக்கு அடிமையானேன்

என் அறிவு மழுங்கியது ஆண்மை தலை தூக்கியது
அழகு சிலையாயிருந்த உன்னை
அறியாமை எனும் உளி கொண்டு அலங்கோலமாக்கினேன்
கடும் சொற்களால் உன்னை கீறி கிழித்தேன்
உடலில் சிதைவுகள் உண்டாக்கினேன்

பெண்மைக்கே உரித்தான பொறுமை உன்னை
பேசாமடந்தையாக்கி என் கொடுமைகளை
பொறுத்துக்கொள்ளும் பூமாதேவியாகிவிட்டது
வெயிலிலும் மழையிலும் எப்படி நீதவித்தாயோ 
என் சுகபோக வாழ்க்கையில் இதை எல்லாம்.
 எண்ணி பார்த்ததில்லை  இன்றுவரை

காலம் என்னை குத்திக்காட்ட தவறவில்லை
தனிமரமாக நிற்கும் என்னை இன்று
தங்குவார் யாருமில்லை
சுற்றிநிற்கும் கறையான்கள் மட்டுமே தஞ்சம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்
நான்மட்டும் என்ன விதிவிலக்கா?
 மாற்றங்கள் மாறாதவை என உணர்கையில்
வாழ்க்கையின் இறுதிப்படியில் நின்றுகொண்டிருக்கிறேன்





 
7
உள்ளத்தை துளைக்கும்
நெடிய
நினைவுக்குழியின் ஆழத்திலிருந்து
மேலெழும்பி வருகிறேன்.
கரையேறி வந்தடைந்த முகட்டிலிருந்தும் மீண்டும் உள்ளிழுக்கிறது நினைவுக்குழி

வீழ்ந்தாலும் மீண்டெழ வைக்கும்
மீண்டாலும் மீண்டும் விழ வைக்கும்
இந்நினைவுக்குழியின்
ஒவ்வொரு பிளவிலும்
சொல்வதற்கு ஆயிரம் கதைகள் உண்டு.
மீண்டும் மீண்டும் ரணங்களை
கீறிப் பார்த்து,
சிதலங்களின் சாளரங்கள் வழி
வானம் பார்த்து
ஆறுதலடையும் ஓர் எளியவன் நான்

மாபெரும் இம்மனக்கோட்டையின்
மதில் மேலேறி
என்னை நானே ஆசிர்வதித்துக் கொள்ளும் சில கணங்கள்
உங்களுக்கு புரியாமல் போகலாம்
உங்கள் ஆழ்மனக் காயங்களின்
மீதேறி ஒரு நடனம் புரிந்து பாருங்கள்
பின் நீங்களும்
உங்கள் மதில்களின் மீதேறி
உங்களின் மீட்பராவீர்கள்

இதற்கெல்லாம் நான் அஞ்சியிருந்தேன்
இதற்கெல்லாம் நான்
காரணமாயிருந்தேன்
இதற்கெல்லாம் நான்
விலகியிருந்தேன்
என இடையறாத
இந்த கரையேறுதல்களில் வழி
எனை நானே கற்று தேர்ந்தேன்.

நெருங்குதலும், விலகுதலும்
ஒரு வேடிக்கையென
விளையாடிய பார்த்த
தருணங்களை மலை முகட்டிலிருந்து
திரும்பி வர முடியாத தூரங்களுக்கு
வலசை போகும் பறவைகளுக்கு
பரிசளித்தேன்
அவை மீண்டும் திரும்பி வரக்கூடும்
எனினும் கரையேறுதலில்
கைதேர்ந்தவன் நான்.

இருப்பினும் நான் கரையேற முடியாத தொலைவுகளையும்
தொட்டுவிட முடியாத தூரங்களையும்
திரும்ப திரும்ப தேடிப் போகின்றேன்
இந்த விழைவு தான்
கொஞ்சமேனும் எனை இன்னும்
வாழ வைக்கிறது
இந்த தேடல் தான் இன்னுமேனும்
கொஞ்சம் எனை உயிர்ப்போடு
வைத்திருக்கிறது.

நான்,
செல்வதற்கு பாதைகள் இல்லாதவன்
வாழ்வதற்கு தேசங்கள் இல்லாதவன்
ஆனால் ஏறுவதற்கு
சில மலைகளும்
சில கரைகளும்
சில கதைகளும்
என்னிடம் உண்டு
அதுவே என் வாழ்வின் மீதான பிடிப்பு
8
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on November 26, 2025, 11:27:36 AM »
9
GENERAL / Re: Did you know that 🤔🤔🤔
« Last post by MysteRy on November 26, 2025, 10:36:32 AM »

The famous comedian Mr. Bean — whose real name is Rowan Sebastian Atkinson — is actually an engineer! 😲
He holds a master’s degree in electrical engineering ⚙️ and is also a professional race car driver
🏎️.

But that’s not all — he can fly planes too! ✈️
Once, he even saved a plane full of passengers by taking control after a malfunction in the cockpit!

Rowan Atkinson is ranked among the top 10 comedians in the world, making people laugh for three generations — without mocking anyone or saying a single word.

Ever wondered why Mr. Bean rarely speaks?
Because Rowan has a stammer. In fact, he was once rejected from drama school because of it. Instead of giving up, he created a unique silent character to express himself without words.

That’s how the unforgettable Mr. Bean was born — a man who proved that pure humor doesn’t need words ❤️
10
GENERAL / Re: Did you know that 🤔🤔🤔
« Last post by MysteRy on November 26, 2025, 10:30:32 AM »

There are people who change the world without ever standing in the spotlight. Steven Pruitt is one of them. You’ve probably never seen him, but his work has passed before your eyes hundreds of times.

Pruitt is considered one of the most active editors in the entire history of Wikipedia. He has made millions of contributions — from creating new articles to fixing errors, improving citations, and expanding information that all of us have relied on at some point. And he has done it voluntarily, from his home, with a level of dedication very few people sustain for so many years.

His work is far from insignificant. Wikipedia is one of the largest collaborative knowledge projects on the planet, and it is built by people like him: editors who review every line, verify sources, and make sure the information is clear, accurate, and accessible to everyone.

Pruitt studied art and history, and much of his editing focuses on bringing attention to lesser-known figures — especially women who have been left out of many historical narratives. His contributions have helped balance and broaden representation in an encyclopedia consulted by millions every day.

He isn’t famous for posting videos or appearing in interviews. His influence comes from something simpler, yet much more powerful: the belief that knowledge should be a public good.

And even if his name isn’t recognized on the street, anyone who has ever searched for information and found a reliable answer has received, without realizing it, a small piece of Steven Pruitt’s work.

A reminder that you can change the world from behind a computer — one edit at a time.
Pages: [1] 2 3 ... 10