Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on Today at 11:10:19 AM »
3
ஆன்மீகம் - Spiritual / Re: THOUGHT for Today ✝️🙏
« Last post by MysteRy on Today at 09:08:32 AM »
4
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 09:07:12 AM »
5

நலமான வாழ்வை விரும்புவோர், நான்கு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பிழைத்திருத்தல் என்பது வேறு.. வாழ்ந்திருத்தல் என்பது வேறு... பிழைத்துக் கிடப்பதற்கு பெரிய சிந்தனையோ விஷய ஞானமோ தேவையில்லை. ஆனால் வாழ்ந்திருப்பதற்கு நான்கு விஷயங்கள் தேவை.

வாழ்வை பற்றிய தெளிவு அவசியம். சிரத்தை இல்லையெனில் பல சிக்கல்கள் வந்துவிடும். அதனால்தான் சிரத்தையுள்ளவனே ஆன்மாவைப் பற்றிய அறிவை பெறுகிறான் என்கிறது கீதை. ஆன்மா அறிவை மட்டுமல்ல, நலமிகு வாழ்வை குறித்த அறிவையும் அவன்தான் பெறுகிறான். மனமும் உடலும் சீரான நிலையில் இருந்தால் பிரச்சினைகளுக்கு இடமிருக்காது.

தூங்க வேண்டிய நேரத்தில் சிலர் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருப்பார்கள். செல்போனில் யாரிடமாவது கதைத்துக் கொண்டிருப்பார்கள், அல்லது வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரத்தை பற்றிய உணர்வே இல்லாமல் மூழ்கி கிடப்பார்கள்.

எவ்வித நேர ஒழுங்குமின்றி எப்போதும் வேலை வேலை என்று தூக்கத்தை உதறித் தள்ளுபவர்கள் வெகு சீக்கிரத்திலேயே பல்வேறு உபாதைகளை வாங்கிக் கொள்கிறார்கள். தூக்கமின்மை உடற்சோர்வையும் மனநோயையும் ஏற்படுத்தும்.. புத்தி மயக்கம், பார்வைக் கோளாறு, பேச்சில் குழப்பம், பசியின்மை, எதிலும் தெளிவின்மை போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தூக்கமின்மையே மூல காரணம்.

ஒவ்வொருமுறை தூங்கி விழிக்கின்ற போதும் நாம் புதிதாக பிறக்கின்றோம். எனவே சந்தடியற்ற சஞ்சலமற்ற அமைதியான தூக்கம் மிக அவசியம். இன்றைய விறுவிறு வாழ்க்கை கட்டத்தில் பல நல்ல விஷயங்களை நாம் தவறவிட்டுவிடுகின்றோம். எப்போதும் பரபரப்புடனும் மன உளைச்சலுடனும் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எந்திரமயமான நமது நவீன வாழ்க்கை முறையும் நோய்களுக்குத்தான் வழிவகுக்கின்றன. எனவே அவற்றை வருமுன் தடுத்தாக வேண்டுமே. அதற்குத்தான் உடற்பயிற்சி. பணச்செலவே இல்லாமல் எல்லாரும் எளிதாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சி சில நிமிட நடைப்பயிற்சி. காலையிலோ மாலையிலோ நாற்பது நிமிடங்கள் போதும். அங்கேயும் நாலுபேரைச் சேர்த்துக் கொண்டு பிரச்சினைகளை பேசிப் பேசி நடக்காதீர்கள். அதில் பயனில்லை. சீரான நடைப்பயிற்சியே நீரோட்டத்தை வேகப்படுத்தும். அது நம் உடல் முழுவதும் நடைபெறும்போது நமது காது மடல்களுக்கும் காலின் சுண்டு விரல்களுக்கும் ரத்தம் முழுமையாகச் சென்று திரும்பும். அப்படியானால்தான் நம் உடலின் செல்கள் அனைத்தும் தினம்தினம் புத்துணர்வைப் பெறமுடியும். அப்படி அவை புத்துணர்வைப் பெறும்போதுதான் உள்ளுறுப்புகள் தமக்குரிய கடமைகளை முழு ஆற்றலுடன் செய்ய முடியும்.

ஆரோக்கியமோ சுகக்கேடோ நம் வாழ்க்கை முறையில்தான் உள்ளது. சாப்பிடுவதில்கூட ஒழுங்குமுறை இருக்கிறது. உணவை பயபக்தியுடன் உண்ண வேண்டும். ஏனெனில், உணவு உண்ணுதல் என்பது ஒரு வகை வழிபாடு. சாப்பிட்ட உடனே குளிக்கச் செல்லாதீர்கள். வயிறு நிரம்பி இருக்கும்போது குளித்தால், செரிமான மண்டலம் பலவீனமாகும். உணவு ஜீரணமாவதில் பிரச்சினை ஏற்படும். எனவே குளித்த பிறகுதான் சாப்பிட வேண்டும்.

படுத்துகொண்டோ நின்றுக்கொண்டோ வீட்டுக்கும் தெருவுக்கும் இடைப்பட்ட வாசல்வெளியில் இருந்துகொண்டோ, வீட்டின் கதவைத் திறந்து வைத்து வாசலுக்கு எதிராக அமர்ந்து கொண்டோ சாப்பிடக்கூடாது என்றெல்லாம் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். வாழை இலையில் உணவு உட்கொண்டால் உடல்நலம் பெருகும்.. மந்தம், வலிமைக் குறைவு இழைப்பு போன்ற பிரச்சினைகள் நீங்கும். பித்தமும் தணியும் என்கிறார்கள்.

எனவே கூடுமான வரையில் வாழை இலைகளை நாம் பயன் படுத்திக்கொண்டால் நல்ல பலன்களை காண முடியும். இன்னொரு முக்கியமான விஷயம். எல்லாம் இருந்தும் மனதில் மகிழ்ச்சி இல்லை என்றால் அனைத்தும் வீண். எனவே எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்.

உடலின் உற்சாகம் மனதைச் சார்ந்தது. கண்ணுக்குத் தெரிகின்ற ஒன்றிற்கும், கண்ணுக்குப் புலப்படாத மற்றொன்றிற்கும் அப்படியொரு பிணைப்பு.

நம் சராசரி உயரம் மூன்றரை முழம்தான். ஆனால் மனம்? அதன் உயரத்திற்கு வரையறை இல்லை. அது அற்புதமானது... ஆகாயத்தையும் விஞ்சியது. மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உடல் சுறுசுறுப்பாக இயங்குகிறது. மூளை விறுவிறுப்பாக செயல்படுகிறது. எந்த வேலையையும் சிரமமின்றி முடிப்பதற்கு வேகம் பிறக்கிறது. உள்ளத்தின் மகிழ்ச்சி வாழ்வை சுலபமாக்குகிறது;

அந்த மகிழ்ச்சி என்னும் பெருஞ்செல்வத்தை நாம் எங்கிருந்து பெறமுடியும்? நமக்குள்ளிருந்துத்தான்.. கல்லுக்குள்தானே சிலை இருக்கிறது. தேவையற்றவைகளை வெட்டி எடுத்துவிட்டால் சிலை வந்துவிடும். அதேபோல், மகிழ்ச்சிக்குத் தடையாய் இருப்பவைகளை மனதிலிருந்து விலக்கிவிட்டால் வாழ்க்கை புதுப்பொலிவு பெற்றுவிடும்.

நம்பிக்கை, நிதானம், நல்லெண்ணம், நல்லுறவு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். மனம்விட்டுப் பேச வேண்டும். வாய்விட்டுச் சிரிக்க வேண்டும். குடும்பத்தாரோடு நேரம் செலவிட வேண்டும். அப்படியெனில், மனதில் எப்போதும் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும். எனவே நலமான வாழ்வை விரும்புவோர், நான்கு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். நிம்மதியான தூக்கம், சீரான நடைப்பயிற்சி, ஒழுங்கான உணவுமுறை, எப்போதும் மகிழ்ச்சி இவற்றை பழக்கப்படுத்திக் கொண்டால் நலமிகு வாழ்க்கை நமதாகும்.
6


வாழை நம்மை வாழ வைக்கும் என்ற பழமொழியைக் கேள்விப் பட்டிருப்போம். வாழை இலையில் சாப்பிடுவது யாருக்குத் தான் பிடிக்காது. வாழை அடி முதல் நுனி வரை அத்தனையும் பயன்படும். அதில் வீணாகிற விஷயமே கிடையாது.
பொதுவாக சாப்பிடுவதற்கு வாழை இலையைப் பயன்படுத்துவோம். சில நேரங்களில் வாழை இலையில் வைத்து மடித்து கொழுக்கட்டை, மீன் போன்ற சில ரெசிபிகளை சமைத்தும் சாப்பிட்டிருப்போம். சுடச்சுட சாப்பாட்டை வாழையில் போட்டதும் இலையின் நிறம் மாறி அதில் உள்ளதெல்லாம் உணவில் கலந்து அந்த உணவுக்குக் கூடுதல் சுவையைக் கொடுக்கும்.
...
இளநரை...
அடிக்கடி வாழை இலையில் சாப்பிட்டு வந்தால், தலையில் இளநரை வராமல், உங்களுடைய முடி நீண்ட நாட்களுக்குக் கருப்பாகவே இருக்கும்.
...
தீக்காயம்...
உடலின் வெப்பத்தைக் குறைக்கும் ஆற்றல் வாழை இலைக்கு உண்டு. அதேபோல் தீக்காயம் பட்டால் அதற்கு சிறந்த மருந்தாக வாழை இலை இருக்கும். அதனால் தான், தீக்காயம் பட்டவர்களை வாழை இலையின் மேல் வைத்து, தீக்காயத்தின் தீவிரத்தைக் குறைப்பார்கள்.
...
கெட்டுப்போகாமல் இருக்க...
வெளியிடங்களுக்குச் செல்லுகின்ற பொழுது, வாழை இலையில் உணவை வைத்துப் பேக் செய்து எடுத்துச் சென்றால், உணவு வெகுநேரம் கெட்டுப் போகாமல் இருக்கும். அதேசமயம் மிகுந்த வாசனையாகவும் இருக்கும்.
குழந்தையின் உடலுக்கு நல்லெண்ணெய் பூசி, வாழை இலையை விரித்து அதில் குழந்தையை சூரிய ஒளியில் படுக்க வைத்திருந்தால் குழந்தைக்கு வைட்டமின் டி அதிகமாகவே கிடைக்கும். குழந்தையின் உடல் சூடு தணிந்து சரும நோய்கள் வராமல் தடுக்கும்.
இதுவரையிலும் மேலே சொல்லப்பட்ட அனைத்துக்கும் வாழை இலையை வெளி மருந்து போல பயன்படுத்தப்பட்டது. ஆனால் வாழை இலையை உள் மருந்தாகவும் சாப்பிடலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதுவும் மருந்தாக இல்லை. உணவைப் பரிமாறும் இலையையே உணவாகச் சாப்பிட முடியும்.
சித்தர்கள் வாழையில் பட்சணங்கள் செய்து வாழையின் மற்ற பாகங்களைப் போல இலையையும் சாப்பிட்டிருக்கிறார்கள்.
சித்த மருத்துவத்தில் வாழை இலைத்துவையல் பல நோய்களுக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.
....
ஊட்டச்சத்துக்கள்...
வாழை இலையில் அப்படி என்ன சத்துக்கள் இருந்துவிடப் போகிறது. நாம் தான் தினமும் வாழைப்பழம், வாழைக்காய், தண்டு, பூ என சாப்பிடுகிறோமே அதில் கிடைக்காததா இந்த இலையில் கிடைக்கப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் வாழை இவை எல்லாவற்றிலும் இருந்து கிடைக்கக்கூடிய சத்துக்கள் வாழை இலையில் இருந்து நமக்குக் கிடைக்கின்றன. வாழை இலையில் இயற்கையாகவே நிறைய ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறையவே இருக்கின்றன. வைட்டமின் ஏ அதிக அளவில் இருக்கிறது அதேபோல் கால்சியமும் நிறைந்திருக்கிறது.
...
சிறுநீரகக் கல்...
வயிற்றுப்புண் இருப்பவர்களுக்கு இந்த வாழை இலைத்துவையல் ஒரு அருமருந்து என்றே சொல்லலாம். அதேபோல் சிறுநீரகக் கல் உண்டாகாமல் தடுக்கவும் ரத்தத்தைச் சுத்திகரிக்கவும் பயன்படுகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
...
வாழை இலை... துவையல்
தேவையான பொருள்கள்
வாழை இலை - அரை இலை (மீடியம் சைஸ்)
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 7
பூண்டு - 10 பல் (தோல் உரிக்காமல்)
சின்ன வெங்காயம் - 25 (உரித்தது)
உப்பு - தேவையான அளவு
புளி - ஒரு கொட்டையளவு.
செய்முறை:
ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பொன்னிறமாக வதங்கியதும் அதில் காய்ந்த மிளகாய், பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வெங்காயம் நன்கு வேகும் வரை வதக்கவும். இஞ்சி சுவை பிடித்தால் ஒரு சின்ன துண்டு இஞ்சியும் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் நன்கு வதங்கியதும், சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் வாழை இலையினைப் போட்டு நன்கு சுருண்டு வதங்கும் வரை வதக்கவும். சிறிய நெல்லிக்காய் இளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்குங்கள். பின்பு சிறிது நேரம் ஆறவிட்டு, மிக்சியில் போட்டு நன்கு மை போல அரைத்து எடுத்துக் கொண்டு, எல்லா சட்னிகளையும் தாளிப்படு போல, கடுகு உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொட்டுங்கள். சுவையான ஆரோக்கியமான வாழை இலை சட்னி தயார். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.
7

கடன் கொடுத்தவன் ஒரே ஒரு கேள்விய வச்சுக்கிட்டு ரொம்பத் தயங்கித் தயங்கி குற்ற உணர்ச்சியோட உயிர் வாழ்றான்...
1. எப்போ தருவீங்க..?

கடன் வாங்கியவன் நிறைய பதில்கள வச்சிக்கிட்டு ஜாலியா குடும்பத்தோட ஊர் சுத்துறான்..

1. உன் பணத்த தூக்கிட்டு ஓடிட மாட்டேன்..

2. உன் காச புடுங்கியா தின்னுட்டேன்..

3. ஏன் பணம் பணம்னு அலையிற..

4. என்கிட்ட வாங்கி அப்படி என்ன பண்ணப் போற....

5. இப்போ என்ன அவசரம்?

6. இன்னுமா ஞாபகம் வச்சிருக்க?

7. ஏற்கெனவே கொடுத்துட்ட மாதிரி இருக்கே...

8. உனக்கு என்ன செலவு இருக்கப் போகுது..

9. ஒருதடவ கொடுத்துட்டு ஓராயிரம் தடவையா கேப்ப?

10. உன்ன ஏமாத்தணும்னு நினைக்கல..

11.கண்டிப்பா கைக்கு வந்தவுடன் குடுத்துடறேன்..

12.இப்போ விட்ரு அடுத்த மாசம் குடுத்துடுறேன்...

🥺🥺🥺🥺🥺

நீங்களாவது நல்லாருங்கடா டேய்...
8

'யானை பாகனுக்கு யானையால் தான் சாவு'ன்னு சொல்லுவாங்க. பழக்கும் போது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கர கொடூரமா அடிப்பாங்க. அதனால, யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் மனசுல நியாபகம் வெச்சுகிட்டே இருக்கும். மஸ்து நேரத்துல வாய்ப்பு கிடைச்சு அந்த கோபம் வெளிப்பட்டு ருத்ர தாண்டவம் ஆடிரும். முக்கியமாக மஸ்து நேரத்தில், தலைமை பாகன்... யானை பக்கத்துல இருக்க மாட்டான். காரணம், யானைக்கு தன் பாகன் மேல் இருக்கும் வன்மம் வெளிப்படும் நேரம் அதுதான்.

ஒரு யானைய பழக்கும் போது அந்த யானைய சுத்தி நாலு அல்லது ஐந்து கும்கியை நிறுத்துவாங்க. ஒரு ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னாடி நின்னு ஆளுக்கு ஒரு குச்சிய கீழ போடுவாங்க. பக்கத்துல ஒரு கும்கி நிற்கும். அது, எப்பிடி குச்சிய எடுத்து பாகன் கைல குடுக்கனும்னு திரும்ப திரும்ப செஞ்சு காட்டும். அவ்வளவு சுலபத்தில் புது யானை குச்சியை எடுத்துடாது. ஆனால் அது எடுக்கற வரைக்கும் கும்கிகள் விடாது. புது யானைய தந்தங்களால் முட்டி நொறுக்கும். பாகன்கள் ஒன்றரை இஞ்ச் தடிமனில், ஆறடி நீளத்தில், ஒரு வாரம் விளக்கெண்ணையில் ஊறப் போட்டு தீயில் வாட்டிய, யானைகளுக்காகவே ஸ்பெஷலா தயார் செஞ்ச காட்டு மூங்கில் பிரம்புகள வெச்சிருப்பாங்க. வளைச்சா வட்ட வடிவத்துல ரப்பர் மாதிரி முனைக்கு முனை முட்டும். மனுஷன் அதுல ஒரே ஒரு அடி வாங்குனா செத்துருவான். அதால அடிச்சு வெளுப்பாங்க. பிளிரும்... ரெண்டு கால்ல எழுந்து நிற்கும். ஆனால் குச்சியயை எடுக்காது. எடுக்குற வரைக்கும் கும்கிகளும், பாகன்களும் விடமாட்டாங்க. கடைசியா அடி தாங்காம குச்சிய எடுத்து எந்த பாகன் கைல குடுக்குதோ, அவனைதான் அந்த யானைக்கு பிடிச்சிருக்குன்னு அர்த்தம். இனி அவனுக்கு மட்டுமே கட்டுப்படும். அவன்தான் வாழ்நாள் முழுவதும் அந்த யானைக்கு தலைமை பாகன். இப்ப யானைக்கு பிடிச்சவன தேர்ந்தெடுத்தாச்சு. இனி யானைக்கான பயிற்சி ஆரம்பமாகும்.

அதை பழக்கறதுகுள்ள, தும்பிக்கையை தூக்க முடியாத அளவுக்கு கரோல்ல அடைச்சு... மூணு நாளைக்கு உணவு குடுக்க மாட்டாங்க. நாலாவது நாள் தன் பாகனை பார்த்து கெஞ்சும். கொஞ்சம் கரும்பும் வெல்லமும் கொடுத்து ருசிகாட்டி, பசியை தூண்டி சொல் பேச்சு கேட்டா.. கரும்பு வெல்லம் கிடைக்கும்னு அதுக்கு உணர வெச்சு, வழிக்கு கொண்டு வருவான். அதுக்குள்ள எத்தனை அடிகள் சித்ரவதைகள் அப்பப்பா... அந்த பாகனை கண்டாலே, யானைக்கு மனசுல ஒருவித கிலி ஏற்படுற மாதிரி பண்ணிருவான். என்ன பயமும் பாசமும் ஏற்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் தன் மேல் யாரையும் ஏற விட்டுடாது.

கடைசியாக... என்றைக்கு அந்த யானை, பாகனை முழுசும் எந்த எதிர்ப்பும் இல்லாமல், தன் முன்னங்கால்களை மடக்கி குடுத்து, அதன் வழியா மேல ஏறி உட்கார அனுமதிக்குதோ... அன்னைக்கு பூஜை போட்டு கும்கிகளின் துணையோட கரோல திறப்பாங்க. பாகன் யானை மேல உட்கார்ந்து தான் கரோலை விட்டு வெளிய வரனும். அப்பதான் அது முழுசும் பழக்கப் பட்டதுக்கான அடையாளம். இதெல்லாம் நடக்க 48 நாட்கள் ஆகும். கோவை மாவட்டத்தில் 13 பேரை கொன்று, கேரள அரசால் ஷூட்டிங் ஆர்டர் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய ரௌடி 'மக்னா' யானை, இன்றைக்கு முதுமலை கேம்ப்ல மூர்த்திங்குற பேர்ல அவ்ளோ சாதுவா இருக்கு. அந்தளவுக்கு சித்ரவதை ட்ரெய்னிங்.

மஸ்துன்னா மதம்.. நவம்பர் டூ ஜனவரி யானைகளின் இணைச் சேர்க்கை காலத்தில், நெத்தியில் இருந்து மஸ்து நீர் வடியும். பாகன் மேல் பாசம் உள்ள யானைகள், மஸ்து ஆரம்ப நிலையிலேயே பாகனை எச்சரிக்கை செய்யும். சாதாரணமா ஒற்றை கால் சங்கிலிதான் போடுவாங்க. ஆனா மஸ்து அறிகுறி ஆரம்பமாகும் போதே... ரெட்டை காலுக்கு சங்கிலி போட்ருவாங்க. சாதாரணமா அங்குசத்தை பார்த்தால் கட்டுப்படும் யானை, மஸ்து நேரத்துல கட்டுப்படாது. அதன் பிறகு யாரும் கிட்ட நெருங்க முடியாது. மூணு மாசமும் அதற்கு ஒரே இடம்தான். அந்த மஸ்து நீரோட வாசம், நீண்ட தூரம் வீசும். வாசம் வந்தா... எந்த காட்டு யானையும் அந்த ஏரியாலயே நிக்காது. மஸ்து நிலையில் இருக்கும் யானை வினோதமா நடந்துக்கும். தும்பிக்கையை தூக்கி தந்தத்து மேல போட்டுக்கும். பயங்கர ரெஸ்ட் லெஸ்ஸா இருக்கும். உர்ர்ர்ர் ன்னு உருமிகிட்டே இருக்கும். எப்பவும் யானை உருமல்ல இருக்கும் போது பக்கத்துல போகக் கூடாது. கோபத்தின் அறிகுறி. பார்வை வெறிச்சு இருக்கும். மண், செடி, கொடிகளை தலைமீது போட்டுக் கொள்ளும். ரொம்ப பசி எடுக்குற வரை சாப்பிடாது. மஸ்து நீரை தும்பிக்கையால தொட்டு தொட்டு ருசி பார்க்கும். அந்த சுவை யானையை மேலும் மேலும் வெறி ஏற்றும். அதனால மஸ்து நேரத்துல நூறு பேர் எதிர்ல நின்னாலும், அபார ஞாபக சக்தி கொண்ட யானை, தன்னோட பாகன் மேலான பகைய தீர்த்துக்க... தன்னிலை மறந்து, வெறி கொண்டு முதல்ல அவனை தான் தேடும். சிக்குனான்... அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு போட்ரும்.
🐘

சின்ன கொசுறு தகவல்:

யானையில் ஆறு வகை உள்ளது. அதில், தும்பிக்கையை ஒட்டி கீழ் நோக்கி வளரும் தந்தங்களை கொண்ட யானைகளை வளர்க்கவே முடியாது. நம்பக தன்மை இல்லாதது. எப்பவும் ரெஸ்ட் லெஸ்ஸா கொலை வெறியோடு இருக்கும். எந்த நேரம் ஆளை தூக்கும்னு கணிக்கவே முடியாது. கும்கி படத்துல வர்ற கொம்பன் யானை வகைதான் அது.

அதே போல உடம்பில் முதுகெலும்பு தூக்கிக் கொண்டு, ஆள் உட்கார முடியாத உடலமைப்பு கொண்ட யானை களையும், இடுங்கிய கண்களை கொண்ட யானை களையும், நெற்றி துருத்திய யானைகளையும் வளர்க்கவே முடியாது. பயங்கர சிடு மூஞ்சி. இது அவ்வளவு ஆபத்தில்லைனாலும் கூட, கையாள்வது சிரமம். வேண்டா வெறுப்பா கட்டளைக்கு அடி பணியும். இதன் மீது துர்நாற்றம் வீசும்.

ஒழுங்கில்லாத தந்தங்கள் அல்லது ஒற்றை தந்தம் கொண்ட யானையை வளர்க்கவே கூடாது. வனத்துறை, வீட்டில் வளர்க்க அனுமதி கொடுக்காத ஒரே வகை இதுதான். காட்டு யானைகளில், இந்த ஜாதி யானைகள்தான் ஆட்கொல்லிகள். மற்ற வகைகள் வெறும் மிரட்டலுடன் விலகி போய்விடும். இது மறைந்திருந்து தாக்கும் அறிவும் குணமும் உடையது. மனுஷனை பார்த்துட்டால், அனல் போல கொதிநிலைக்கு போயிடும். பயங்கர ராட்ஷசன். அது உடம்பிலிருந்து அழுகிய மாமிச வாசம் வீசும். மலைவாழ் மக்கள், இந்த யானையின் மீது வீசும் குமட்டல் வாடையை வைத்தே இது வருவதையோ, அருகில் நிற்பதையோ கண்டு பிடித்து விடுவார்கள்.

ஒச்சம் இல்லாத, நிமிர்ந்த தலை, சம அளவுகளில் அகலமாக முன் நோக்கி V வடிவில் பால் போன்ற நிறமுடைய தந்தங்கள், தேன் நிறத்தில் மின்னும் கண்கள், எப்பவும் முகத்தில் ஒரு சாந்தம், அருமையான கீழ்படிதல், வசீகரிக்கும் அழகு கொண்ட உடலமைப்பு, அடர்ந்த முடி கொண்ட வால், அழகான நகங்கள், மடங்காத காதுகள், ஆள் அமரும்படி படுக்கை போன்ற முதுகமைப்பு, நடக்கும் போது அடி மாற்றி வைக்காமல் சரியான அளவுகளில் காலை முழுவதும் தரையில் ஊன்றி நடத்தல், தன் சுற்றுப் புறத்தை சுத்தமாக பராமரித்தல், அன்புக்காக ஏங்கும், மனிதர்களுடன் முக்கியமாக குழந்தைகளுடன் நன்கு பழகி, சொல் பேச்சு கேக்கும். இது பட்டத்து யானையோட சாமுத்திரிகா லட்சணம். இது போன்ற குணங்கள், பத்தாயிரத்துல ஒரு யானைக்குதான் அமையும். இதன் உடம்பில் தாமரை பூவின் நறுமணம் வீசும். முழுவதும் இந்த மொத்த குணங்களும் அமையக் கிடைக்காவிட்டாலும், இதில் மூன்றில ஒரு பங்கு குணங்கள் அமையப் பெற்ற யானைகளை தாராளமாக வளர்க்கலாம். மனிதர்களை தாக்காது.
9

பீஷ்மர், அர்சுனன், பீமன், கர்ணன் என்று ஆளுக்கு ஒரு பெயரைச் சொல்வார்கள். ஆனால் காவியத்தை நன்றாகப் படித்து, ரசித்து, அதைப் பற்றி சிந்தித்தவர்களுக்கு ஒரே ஒரு கதாநாயகன் தான் மனதில் தோன்றுவார்.

யார் அவர்.?

சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாதான். மஹாபாரதக் கதையின் முடிவில் வருவது பாரதப் போர். 18 நாள் யுத்தம்...

வெற்றி பாண்டவர்களுக்கு என்பது தெரிந்த விஷயம். எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள், கெளரவர்கள் பக்கத்தில் — பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல்.
இவர்களை எப்படிப் பாண்டவர்கள்
வென்றார்கள்..?

ஒவ்வொருவருடைய
வீழ்ச்சிக்குப் பின்னாலும் ஸ்ரீ
கிருஷ்ணனின் "வேலை"
இருந்திருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணன் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.

இதோ ஒரு கேள்வி:

கீழ்க்கண்ட வீரர்களில், யாருடைய வீழ்ச்சிக்காக கிருஷ்ணன் தீட்டிய திட்டம், Master Plan என்ற
பாராட்டைப் பெறும்.?

1) ஜயத்ரதன்,

2) பீஷ்மர்,

3) துரோணர்

4) கர்ணன்,

5) ஜயத்ரதன்,

6) துரியோதனன்

7) விதுரர்...

அநேகப் பேர் கர்ணனின்
வீழ்ச்சிக்குக் ஸ்ரீ கிருஷ்ணன்
தீட்டிய யுக்தி தான் சரி என்று
நினைப்பார்கள். இன்னும் சில பேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது தான் உயர்ந்தது என்று
நினைக்கலாம்.

இதே மாதிரி தான், பீஷ்மர், துரோணர் - இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள். ஆனால் சரியான விடை
விதுரருக்காகத் தீட்டிய திட்டம்தான்.

இது என்ன புதுக் கதை?

விதுரர் எங்கே சண்டை
போட்டார்.? அவரை வீழ்த்த ஸ்ரீகிருஷ்ணன் ஏன் திட்டம் போட வேண்டும்.?

கேள்விக்கு விடை சொல்லும்
முன் ஒரு சிறு பயணம் .

யார் இந்த விதுரர்?

விதுரர், திருதராஷ்டிரருக்கும்,
பாண்டுவுக்கும் தம்பி (Step Brother) என்றும், பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சித்தப்பா என்றும் அவருடைய தாயார் ஒரு பணிப்பெண் என்றும் அநேகமாக எல்லோருக்கும் தெரியும்.

மகாநீதிமான், தருமத்திலிருந்து
சிறிதளவும் நழுவாதவர் அவர் என்பது மஹாபாரதத்தில் நடந்த அநேக சம்பவங்களிலிருந்து
தெரியவருகிறது. கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய வீரர்களை வீழ்த்த ஸ்ரீ கிருஷ்ணன் போட்ட திட்டங்கள் அவ்வளவு
கடினமானது இல்லை.

ஒவ்வொருவருக்கும் ஒரு
பலஹீனம் . பீஷ்மருக்குப்
பெண்களுடன் போராட
முடியாத மனநிலை.

துரோணருக்குப் புத்திர
பாசம்.

கர்ணனுக்கு அவனுடைய
தயாள குணம்.

மேலும் இவர்கள் எல்லாரும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்று நியதி என்று சாஸ்திரம் சொல்கிறது.

எல்லா சமயங்களிலும் அப்பாமார்களும், சகோதரர்களும், கணவன்மார்களும், மச்சினர்களும், பெண்களை கெளரவித்து, அவர்களை உயர்ந்த நிலையில்
வைத்துக்கொள்ள வேண்டும். மேலே சொன்ன வீரர்கள் யாராவது இதன்படி
நடந்துகொண்டார்களா.?

திரெளபதியை துச்சாதனன்
துகில் உரியும்போது வாய்
திறக்காமல் மெளனமாகத் தானே இருந்தார்கள் அதற்கான தண்டனை - யுத்தத்தில் மரணம்.

சரி, இப்போது கேள்வி...
விதுரருக்காக ஏன் திட்டம் தீட்ட வேண்டும்.?

விதுரர் அப்பழுக்கில்லாதவர். மற்ற பெரியவர்கள் செய்த பிழையை அவர் செய்யவில்லை. துணிந்து,
துரியோதனனையும் அவன்
சகோதரர்களையும் கண்டித்து திரெளபதிக்காக வாதாடினார். அதனால் தருமம் தவறாத அவரை எப்படி யுத்தத்தில் சாகடிக்க முடியும். மேலும் பாண்டவர்கள் பக்கத்தில் தரும புத்திரர் (எமனின் மகன்) எதிர்பக்கம், அவர் தந்தை - தர்மராஜர் (விதுரர்) சமநிலை சரியாக வராதே.?

எவ்வளவு அவமானப்பட்டாலும் யுத்தம் என்று வந்தால், மற்ற பெரியவர்கள் - பீஷ்மர், துரோணர் - போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக துரியோதனனுக்காகத் தானே போராட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவார்.
முன்னமேயே சொல்லியிருக்கிறோம். அவர் வில் எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது.

இப்பொழுது புரிகிறதா.?

விதுரர், கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி
பெறுவது நிச்சயம் இல்லை. மஹாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி ஆகிஇருக்க வாய்ப்பு உண்டு. அதனால் எல்லோரையும் விட மிக முக்கயமான நபர், விதுரர்தான். அவர் கெளரவர்களுக்காக நிச்சயம்
போராடக் கூடாது. எப்படி தடுப்பது?

இதோ ஸ்ரீ கிருஷ்ணனின்
யுக்தி ....

ஸ்ரீ கிருஷ்ணா், விதுரரை
கெளரவர்களிடமிருந்து
விலக்கிவைக்கப் போட்ட திட்டம், ரொம்ப ரொம்ப சிம்பிள்.

Human Psychologyஐ நன்கு பயன்படுத்தி செயல்பட்டார். எல்லோருக்கும் தெரிந்த கதை கிருஷ்ணன் தூது... பாரதப் போரைத் தடுக்க, ஸ்ரீ கிருஷ்ணன்
பாண்டவர்களுக்காகத் தூது
சென்றான். அவன் வருகிறான்
என்று தெரிந்த திருதராஷ்டிர
மகாராஜா தடபுடல் வரவேற்பு
எற்பாடு செய்திருந்தார். சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின
இரவு, ஸ்ரீ கிருஷ்ணன் யார் வீட்டில் தங்குவார் என்ற கேள்வி பிறந்தது.

நான், நீ என்று எல்லோரும் அவரை
அழைத்தார்கள். ஸ்ரீ கிருஷ்ணரோ., “நான் தூதுவன். என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன். இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்”
என்றார்.

விதுரருக்கு மகா சந்தோஷம். தனக்கு பிரியமான கிருஷ்ணன் தன் விருந்தினராக வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார். இரவு பொழுது நன்றாகவே இருந்தது விதுரருக்கும் கிருஷ்ணருக்கும்.

மறுநாள், அரச சபையில் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டவர்களுக்காக வாதாடினான். துரியோதனன் ஒரு ஊசி முனை நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லி கிருஷ்ணனையும் அவமதித்துப் பேசினான். கிருஷ்ணனும் "யுத்தம் நிச்சயம்" என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார். திரும்பும்முன், கிருஷ்ணருடைய சாரதி கேட்டான். "சுவாமி, எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர்
மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்.?”.

கிருஷ்ணா் சொன்னார், "என்
மனதில் ஒரு திட்டம் இருக்கிறது. அது நடக்குமா.? என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்” என்று
சிரித்தார்.

கிருஷ்ணன் சென்ற பின் துரியோதனன் சபையில் எல்லோரும் அவனிடம் கெஞ்சி, கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று வாதாடினார்கள். அதில் விதுரர் குரல் ஓங்கி ஒலித்தது. ஏற்கனவே துரியோதனனுக்கு விதுரர்மேல் ஒரு கடுப்பு. அவர் பாண்டவர்கள் கட்சி என்று ஒரு நினைப்பு. போதாக்குறைக்கு விதுரர் பாண்டவ தூதரான
கிருஷ்ணனை தன் வீட்டில்
உபசாரம் செய்தது.

விதுரர் பேச்சைக் கேட்டவுடன், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது. என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில்
நரம்பின்றி விதுரரை அவமானப்படுத்திப் பேசினான்.

குறிப்பாக, அவரை ‘தாசி_புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான். (ஏற்கனவே இருந்த மாண்டவ்யர் சாபம் முற்றிலும் பலித்து விட்டது). விதுரருக்கு கோபம், வருத்தம். சபையோர்கள் நடுங்க சபதமிட்டார்.

"எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை. அழிவு காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. என்னை அவமானப் படுத்திய இந்த துரியோதனனுக்காக நான்
என் வில்லை எடுத்துப் போராட மாட்டேன். அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்லமாட்டேன்” என்று சொல்லித்
தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டு சபையிலிருந்து
வெளியேறினார். யுத்தம் முடியும்வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து
திரும்பவில்லை என்பது
வேறு கதை.

இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணன், விதுரர் வீட்டில் தங்காமல் இருந்தால், விதுரர் வில்லை உடைத்து
வெளியேறியிருப்பாரா.?
துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு
வந்திருக்கும் அல்லவா.? விதுரர் வைத்திருந்த வில் மஹாவிஷ்ணுவின் வில். கோதண்டம் எனப்படும் அந்த வில்லை எவராகவும் வெல்ல
முடியாது.

அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. காண்டீபம் என்பது அதன் பெயர். போர் என்று வந்து விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்றுவிட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்லமுடியாது. இதனை அறிந்திருந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தான் விதுரர் மாளிகையில் தங்கி, துரியோதனனுக்கு சினமூட்டி அவனை அப்படிப் பேச வைத்து விதுரர் வில்லை முறிக்க வைத்து
விட்டார். இதுவும் பாண்டவர்களுடைய
வெற்றிக்கு ஒரு காரணமாக
அமைந்து விட்டது..

இதுதான் கிருஷ்ணனுடைய
மஹா தந்திர யுக்தி.....
10

ஒரு பெரும்படையை வழி நடத்திச் சென்று முன்னால் வழி காட்டிக் கொண்டு போகின்றவனும் தலைவன் தான் (போரின் போது பெரும்பாலும் நம் இந்திய அரசர்கள் இப்படித் தான் இருந்தார்கள்).

அதுவே, தனது சேனைகளை முன்னால் அனுப்பியபடி, 'அவர்கள் சரியான விதத்தில் தடங்களை பதித்துச் செல்கிறார்களா?' என்று நோட்டமிட்டு, அப்படி ஒருவேளை இல்லாத பட்சத்தில் அவர்களை சரியான வழியில் இனம் கண்டு இயக்கித் திருத்துபவனும் தலைவன் தான். இப்படிப் பட்ட தலைவனை ஆங்கிலத்தில் 'நல்ல மேய்ப்பன்'. அதாவது 'Good Shepherd' என்றும் சொல்வார்கள். ஆனால், ஒரு நல்ல தலைவனுக்கு இது மட்டும் போதாது.

எனில், 'யார் சிறந்த தலைவனாக இருக்க முடியும்?' என்று கேட்டால். இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்னர் ஒளவையாரின் வரிகளை கொஞ்சம் பார்ப்போம். அதாவது, ஒளவையாரிடம் சென்று 'உலகில் பெரியது எது?' என்று கேட்கிறார்கள். அதற்கு ஒளவையார் 'இது தான் பெரியது' என்று ஒரே வரியில் சொல்லிவிடாமல், இப்படியாக ஒரு விளக்கத்தை அளிக்கிறார். அதாவது...

"பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய் பெரிது பெரிது புவனம் பெரிது புவனமோ நான்முகன் படைப்பு நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன் கரிய மாலோ அலைகடல் துயின்றோன் அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம் கலசமோ புவியிற் சிறுமண் புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம் அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம் உமையோ இறைவர் பாகத் தொடுக்கம் இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.".

இதன் பொருள், சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஒளவை கூற்றுப் படி 'தொண்டு தான் பெரியது' என்கிறார் ஒளவையார். அதாவது ஒரு நல்ல தலைவன் முதலில் நல்ல தொண்டனாக இருத்தல் வேண்டும். ஒரு நல்ல தொண்டன் மட்டுமே பிற்காலத்தில் நல்ல தலைவனாக இருக்க முடியும். அதன் படி, கிறிஸ்துவ வேதாகமத்தில் மோசஸும், ஜீஸசும் கூட தொண்டு செய்தே மக்களுக்கு வழி காட்டியவர்கள். அதனால் தான் ஆன்மாக்கள் அவர்களிடம் மண்டியிடுகின்றன.

அதுபோல, தொண்டு உள்ளத்துக்கு இன்னொரு உதாரணம் கர்ம வீரர் காமராஜர். அவர் ஒரு 'நல்ல தலைவர்' என்று சொல்லத் தான் வேண்டுமோ?. இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால்,' எனது சுவடுகளை பின்பற்று' என்று சொல்கிறவன் சிறந்த தலைவன் அல்ல. அவன் உண்மையில் சிறந்த தலைவனாக ஆகவும் முடியாது. ஆனால், அதே சமயத்தில், எந்த சூழ்நிலையிலும் தனது எண்ண அலைகள் பாதிக்கப்படாமல், தனது சகாக்களை எப்போதும் நல்வழியில் நடத்துபவனே நல்ல தலைவன்.

தலைவன் என்பவன் குரு. அவர் வழியும் காட்டுவார். வாழ்ந்தும் காட்டுவார். அடங்கிய மனமே குரு.
Pages: [1] 2 3 ... 10