Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
GENERAL / Re: Book Hub 📚 🔮
« Last post by சாக்ரடீஸ் on Today at 05:06:27 PM »
Beautiful initiative Vethanisha Mappie
Books truly connect minds and inspire growth, I am very happy to be part of Book Hub.
Looking forward to sharing and discovering great reads altogether


I have read only a few books, but whenever I suggest a book to someone, this is always my first recommendation.


Book Title:

Ikigai

Book Author:

Hector Garcia & Francesc Miralles

Take Away Message:

Life feels meaningful when you live with purpose.
Small daily habits and doing what you love bring true happiness.

Short Explanation:

Ikigai explains the Japanese idea of finding joy in everyday life.
It shows how purpose, routine, and balance help people live happily and longer.

Genre:

Self-Help / Philosophy

Why I Recommend It:

This book is simple, calm, and inspiring.It teaches that happiness comes from purpose, not pressure.The ideas are easy to understand and apply in daily life.It encourages slow living, self-awareness, and inner peace.A good read for anyone feeling lost, tired, or stressed.



How this book came into my life - I found this image while surfing Pinterest, and it made me want to read this book.



Happie Ikigaing friends !
2
GENERAL / Re: Book Hub 📚 🔮
« Last post by Vethanisha on Today at 02:31:05 PM »
Hi everyone, here comes my next book recommendation : PONVILANGU 🪙.
This novel holds a special place in my heart because it was part of my Tamil literature syllabus during my school days. 😅
Because of that, this book is closely associated with my school memories.💕
Let’s take a closer look at this novel.


Book Title
Ponvilangu🪙

Book Author
Na.Parthasarathy

Take Away Message
This novel emphasizes emotional maturity, personal integrity, and ethical strength while navigating love and professional responsibilities.
 Simple message with big impact 😉


Short Explanation - Spoiler free
Ponvilangu revolves around the lives of Mohini, Bharathi, and Sathyamoorthy, presenting a subtle triangular emotional journey. The story portrays melodious love, silent one-sided affection, and inner conflicts, while also reflecting workplace politics within the education sector.
With realism and emotional restraint, the novel balances personal relationships and professional struggles. I would say the Novel also strongly emphasize why trust is the foundation of any relationship.


Genre
Social Fiction

Why I Recommend It:
I recommend this novel because readers can easily connect themselves with the story and its characters. You will never feel bored while reading it.
The love portrayed will make you smile and blush, while the life challenges faced by the characters will leave you feeling emotionally heavy.
It is a perfectly balanced, emotionally rich story that  truly deserves a place on your must read list.


Sollukkum ninaippukkum endha idaththil porul mudigiratho, angedhaan unarchchi pirakkirathu. Andha unarchchiyai solvatharku sariyana baashai edhuvum illai.
My favorite line in the Novel ♥️


3
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 12:43:00 PM »
4
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on Today at 12:17:09 PM »
5
கவிதைகள் / Re: நிலையற்ற உறவு
« Last post by joker on Today at 11:44:16 AM »
உரையாடலற்ற நிலையிலும்
சில உறவுகள் நினைவில்
என்றும் நிலைத்திருக்கும்

உள்ளத்தின் வெளிப்பாடு ,
தொடர்ந்து எழுதுங்கள் சகோ 

6


ஆயிரம்முறை முறைத்து சென்றாலும்
சிறிதும் தலைக்கனம் இல்லாமல்
மீண்டும் தேடச் செய்கிறது மனம்...
உரையாடலற்ற நிலையிலும் கண்கள்
வேட்கை கொள்கிறது...
உள்ளமோ சிலவற்றை ஏற்க மறுக்கின்றது...
அழியா எல்லைக்கு உட்பட்டு
காலம் கடந்து இருப்பாயோ அல்லது
நினைவில் மட்டும் நிலைப்பாயோ...
7
*கல்*
*நெஞ்சமென்பது*
*கற்கலால்*
*ஆனதென்று முடிவு*
*செய்து விடாதீர்கள்...*

*அது*
*நீண்ட, நாள்பட்ட*
*ஏமாற்றத்தினாலும்,*
*நம்பிக்கை*
*துரோகத்தினாலும்*
*ஏற்பட்ட*
*வலிகளின் உறைதல்...*

8
இசைத்தென்றல் நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஊன்றுகோலாக RJs & DJ கு என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டு ,
இவ்வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்

பாடல் : ஓ.. அன்பே அன்பே  ஒரு குட்டி புயல் நீ..
திரைப்படம் : வேதம்
இசை அமைப்பாளர் : வித்யாசாகர்
பாடலாசிரியர் : வைரமுத்து
பிடித்த வரிகள் :
ஐம்பெரும் காப்பியம் நீ..
ஹைக்கூ கவிதையும் நீ ..
ஹிட்லரின் யுத்தம் நீ..
தெரசா முத்தமும் நீ..
பிக்காசோ  ஓவியம்  நீ ..
பிள்ளையின்  கிறுக்கலும் நீ,
உன்னோடு  முடியட்டும்
கடைசி  அழகியும்  நீ ..


சில பாடல்கள் கேட்கும்போது அப்படியே அந்த காலத்துக்கே கூட்டிட்டு போகும்.ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் சன் மியூசிக்ல இந்த பாடல் வரும்போது, பேக்கை கூட கழட்டி  வைக்காம அப்படியே டிவி முன்னாடி பாடல் முடிய வரைக்கும் நின்னுட்டு இருப்பன். அர்ஜுன் எங்கயும் முட்டிக்காம கரெக்டா போய் சேரணும்னு ஹீரோயின் ரேஞ்சுக்கு நானும் நகத்தை கடிச்சுக்கிட்டே பார்ப்பேன். நடு நடுவுல social service வேறயா ?,  time ஆகுதுன்னு என்னை மீறி கத்தி  கூட இருக்கன்,   அதை பார்த்துட்டு அம்மா திட்டுறதும் கொட்டுறதும் இப்போ நினைச்சாலும் சிரிப்பு வருது. இந்த  பாட்டுல starting to end  ஒரு செம்ம vibe  இருக்கும்.



9
நான் முதன் முதலா புகைவண்டிய பார்த்தது 5 வயசுல, ஆனா முதன் முறையா நான் அதுல பயணிச்சது என்னோட 22வது வயசுல தான். இரயில்வே ஸ்டேஷன் இருக்கிற ஊர்ல இருந்தாலும் எனக்கு இரயில்ல பயணிக்கிற வாய்ப்பு அந்த வயசு வரைக்குமே கிடைக்கல. ஆனா போற வர்ர ட்ரயின் எல்லாத்தையும் பார்க்கிறதுக்கான வாய்ப்பு எனக்கு தினமும் வாய்ச்சிருந்துச்சு. எல்லா ட்ரயினுமே நிக்கலன்னாலும் இரண்டு ட்ரயின் நின்னு போகிற டவுனுக்கும் கிராமத்துக்குமான இடைப்பட்ட ஊரு எங்க ஊரு. ஸ்கூல் படிக்கும்பொழுதும் சரி காலேஜ் படிக்கும்பொழுதும் சரி யாரவது ட்ரயின்ல போயிட்டே வந்தேன்னு சொன்னாலே ஆசையா இருக்கும் கேட்க. நாமளும் என்னைக்காவது ஒரு நாள் தொலைதூரம் போக முடியலன்னா கூட, சென்னைக்கு ட்ரயில்ன்ல போயிடனும்னு எனக்குள்ளேயே நினைச்சுப்பேன்.

உள்ளூர்ல இருந்த ஸ்கூல்ல படிச்சதால சைக்கிள்லேயே போயிட்டு வந்துருவோம். அப்பவும் தினமும் நான் ஸ்கூலுக்கு போக அந்த ரயில்வே கேட்ல நின்னு தான் போகனும், கரக்ட்டா gate போடுற நேரத்துக்கு தான் போவேன், ட்ரயின பார்க்கனும்ங்கிறதுக்காகவே. தூரத்துல ஹாரன் அடிச்சிக்கிட்டே வர்ர ட்ரயின பார்க்கிறதுக்கே அவ்வளவு பரசவசமா இருக்கும்
'டடக் டடக் டடக் டடக்'னு சீரா ஒரே சவுண்டோட அந்த ட்ரயின் கடந்து முடிச்சிட்டு ஒரு அமைதி வரும் கேட்டிருக்கீங்களா, 'வேற லெவல் feeling அது'.
சின்னவயசுல டாட்டா காட்டவே ட்ரயின் ட்ராக் பக்கத்துல விளையாடிட்டு இருப்போம். பல ட்ரயின் வந்த போற ஊருக்கு தான் ரயில்வே ஸ்டேஷன்லாம் பரபரப்பா இருக்கும். எங்க ஊரு ஸ்டேஷன்லாம் எங்களுக்கு வேடிக்கை பார்க்கிற இடம் தான். ட்ரயின் வந்தாலும் வந்து இறங்குறது மிஞ்சி போனா பத்து பேரு தான் இருப்பாங்க, ஆனாலும் ட்ரயின் வந்து நிற்கும் போதும் எடுக்கும்போதும் இருக்கிற ஒரு சின்ன பரபரப்பு அந்த சின்ன ஸ்டேஷன கூட உயிர்ப்போட மாத்திடும்.

அதென்னவோ தெரியல ட்ரயினோட அந்த ஊதா கலரும், வளைஞ்சு, நெளிஞ்சு அது போறதை பார்க்கறப்பவும் எதோ ஒரு இரும்பு பூச்சி ஊர்ந்து பிற மாதிரியே அவ்வளவு அழகா இருக்கும். எனகெல்லாம் ட்ரயின் ஒரு பிரமிப்பு தான் எப்பவும், எப்படி யோசிச்சு கண்டுபிடிச்சாருக்கான் பாருய்யா மனுஷன்னு அதை வியந்து பார்க்காத நாளே கிடையாது.
காலேஜ் சேர்த்துவிட்டப்பவும் டவுன்ல சேர்த்துவிட்டாங்க, இருக்கவே இருக்கு பஸ்சு, இதுல எங்க இருந்து ட்ரயின்ல போறது. அப்படியே போயிருச்சு காலேஜ் வாழ்க்கையும்.

ட்ரயின் வெளியே இருந்தே ரசிக்கிற ஆளுக்கு உள்ளேயே போய் பயணிக்க கூடிய வாய்ப்பு முதல் முறையா அமைஞ்சது, அமைஞ்சதுனு சொல்ல முடியாது நானே ஏற்படுத்திக்கிட்டேன்.

சென்னைல வேலை கிடைச்சுது, அப்ப கூட வீட்ல இருந்து மொத்தமா பஸ் ஏறி கூட்டிட்டு வந்து சென்னைல ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டு போனாங்க. அங்கேயும் பஸ் வாழ்க்கை தான். முதல்ல ரெண்டு மூணு முறை ஊருககு போகும்போது பஸ்ல தான் வந்து போயிட்டு இருந்தேன். கூட வேலை செஞ்ச ப்ரண்டு சொல்லி தான் தெரிஞ்சுது சென்னைல இருந்து தெக்க பிற ட்ரயின் ஒன்னு எங்க ஊர்ல நிக்கும்னு.

ஒரே பதட்டமும், பரவசமுமா ஒன்னு சேர்ந்துகிடுச்சு. அப்பவெல்லாம் இந்த ஆன்லைன் டிக்கெட் தெரியாது, ஊர்ல சொல்லி ஸ்டேஷன்ல போயிட்டு டிக்கெட்ட எடுக்க சொல்லி அந்த டிக்கெட்ட ஊர்ல இருந்து வர்ர ரெகுலர் பஸ்ல கொடுத்தனுப்ப சொல்லி இதுக்கு பஸ்லேயே போயிருக்கலாமேடான்னு கூட தோணுயிருக்கும் எல்லாருக்கும். ஆனாலும் வைராக்கியத்தோட டிக்கெட்ட கைல வாங்கினப்போ எனக்கு இருந்த சந்தோஷம், இன்னைக்கு ப்ளைட்டல போறப்ப கிடைக்கிற சந்தோஷத்தையெல்லாம் விட பெரிய சந்தோஷம்.

ட்ரயின்ல போக வேண்டிய நாளும் வந்துச்சு, புதுசா ஆள பார்க்க போற feelingல கிளம்பி போய் ஸ்டேஷன்ல ட்ரயின் பிளாட்பார்ம தேடி, கம்பார்ட்மெண்ட்ட தேடின்னு பரபரப்புமா மண்டகுடைச்சலாவும் போச்சு.. என்னாடா இதுன்னு யோசிச்சாலும் எனக்கே எனக்கா விழுந்த ஜன்னல் சீட்டுல போய் உட்கார்ந்துட்டு ட்ரயின் கிளம்பும்போது ஜிவ்வ்வ்வுன்னு ஒரு feeling கிளம்புச்சு பாருங்க.... 'டடக் டடக் டடக் டடக்...
10
ரம்மியமான காலைப்பொழுது நேரத்தில் எழுந்து தயாராகிக் கொண்டிருந்தான் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பிடிக்க இரவே தயாராக வைத்திருந்த தனது பையை எடுத்துக்கொண்டு கோவை ரயில் நிலையத்தை அடைந்தான் எப்பொழுதும்போல் பரபரப்பாக காணப்பட்டது ரயில் நிலையம் ஆவின் பாலகம் சென்று ஒரு காபி கையில் பிடித்துக்கொண்டு தனது பெட்டியை நோக்கி நடக்கத் தொடங்கினேன் ஊருக்கு செல்வதென்றால் எத்தனை பரபரப்பு தனி சந்தோஷம் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த தனது ஜன்னலோர இருக்கை அடைந்தான் அந்த ஜன்னலோர இருக்கை கிடைப்பதில் தான் எத்தனை சந்தோஷம் கொண்டு வந்த பையை அதனிடத்தில் வைத்துவிட்டு  ஹெட்போனை மாட்டிக்கொண்டு தான் வைத்திருந்த பாட்டு தொகுப்புக்களை கேட்கத் தொடங்கினான் ஆறு பேர் கொண்ட இருக்கையில் தான் மட்டுமே தனித்து பயணம் செய்தான் வண்டி மெல்ல திருப்பூரை அடைந்தது ஒரு ஆளாய் பயணித்த அவன் இப்போது ஆறு பேர்களுடன் சேர்ந்து பயணித்தான். நான்கு முதியவர்கள் பின் 35 வயதைத் ஒத்த ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தார் அவரும் தனது ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாட்டு கேட்க தொடங்கினார் ரயில் வண்டி ஈரோடு வந்தடைந்தது நான் இறங்கிப்போய் உண்பதற்கான காலை சிற்றுண்டியை வாங்கி வந்தேன். எதிரில் அமர்ந்திருந்த பெண்ணின் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு தெரிந்தது வினவினேன் அவரிடம் ஏதாவது வாங்கித் தர வேண்டுமா சங்கோஜம்  பட்டுக் கொண்டு ஆதாரம் ஆமா எப்படி கேட்கறதுன்னு தெரியல அதான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன் என்றார்இதுல என்ன இருக்கு ஜஸ்ட் கேட்க வேண்டியதுதானே என்ன வேணும் சொல்லுங்க வாங்கிட்டு வரேன் என்றேன் இட்லியும் பழம்பொரியும் போதும் என்றார் பழம்பொரி ஈரோடு ஸ்டேஷனில் அருமையாக இருக்கும் அதிலிருந்து தெரிந்து கொண்டேன் அவர் அடிக்கடி இவ்வழியில் பயணம் செய்பவர் என்று இருவரும் சாப்பிட்டு முடித்தோம் பின் பேசத் தொடங்கினோம் பேச்சு இசையின் பக்கம் நகர்ந்தது எஸ்பிபி சுசீலாம்மா ஜானகியம்மா இன்றைய பாடகர்கள் சித் ஸ்ரீராம் ஷ்ரேயா கோஷல் நித்யஸ்ரீ மகாதேவன் பெண் ஏ ஆர் ரகுமான் மியூசிக் இளையராஜா மியூசிக் தேவா மியூசிக் அனைவரையும் ஒப்பிட்டு எங்கள் உரையாடல் சென்றுகொண்டிருந்தது வண்டியோ சேலம் தாண்டி மறப்போர் தாண்டி ஜோலார்பேட்டை வந்தடைந்தது மறுபடியும் இருவரும் ஒரு வடையும் தேநீரும் பருகினர்  இருவருமே எண்ணங்களும் இசையில் ஒன்றாக இருந்தது அறிந்தனர் ரயில் சினேகம் நட்பாக மாறியது இருவரும் தங்களது வாட்ஸ்அப் நம்பரை பரிமாறிக்கொண்டனர் ஒரு பெண் தனது நம்பரை பரிமாறிக் கொள்ளை எத்தனை யோசித்திருப்பார் என்று அறிவீர்கள் இந்த நான்கு மணி யாத்திரையில் அவன் அவளின் நம்பிக்கையைப் பெற்றான் காட்பாடி ஜங்ஷன் வந்தது அவளும் தான் இந்தி இறங்கப்போவது அறிவித்து கைகுலுக்கி சென்றாள் இருவருக்கும் மகிழ்ச்சி. அவரவர் தங்கள் பணியை நோக்கி சென்றனர் இரவு வந்தது வாட்ஸ்அப் அடித்தது சாப்பிட்டீங்களா என்ன பண்றீங்க பின் தங்கள் இருவரும் முழுமையாக அறிமுகப்படுத்திக் கொண்டனர் நாட்கள் நகர்ந்தது தட்பம் கூடிக்கொண்டே போனது ஒரு கட்டத்தில் அவளது மெசேஜ் இல்லை என்றாள் துடித்துப் போனான் நாட்கள் நகர்ந்தது அவளிடம் இருந்து எந்த ஒரு மெசேஜும் வரவில்லை துடித்துப் போனார் அழைத்துப் பார்த்தாள் நம்பர் நாட் ரீச்சபிள் என்ன காரணம் என்னவென்று தெரியாமல் துடித்துப் போனான் அழகாய் கிடைத்த ஒரு நட்பு இப்பொழுது இல்லையே என்றேன்

இப்பொழுதும் அது இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருப்பூரை அடையும்போது படிக்கட்டுகளில் நின்று பார்ப்பான் எங்கேயும் அவள் மறுபடியும், வரமாட்டாளா என்று தேங்கி துடித்தன கண்கள்

இன்றும் காத்துக்கிடக்கின்றன அவள் வரவுக்காக .....

இது ஒரு கற்பனை பதிவு

         🤡
Pages: [1] 2 3 ... 10