Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1

ஒரு மரத்துல
எறும்பும் புழுவும் லீஃப் மேட்

எறும்பு 24×7 active mode
புழு 24×7 Complaint Mode

டேய் நீ எப்ப பார்த்தாலும்
சுறுசுறுப்பாக ஓடுற
என்னால
அதுக்கு அப்டேட் ஆக முடியல
என்று புழு புலம்ப

எறும்பு சொன்னது
Cool நண்பா
Relax நண்பா
பேஷன்ஸ் + டெடிகேஷன் = ரிசல்ட்.

ஒருநாள்
நீயும் என்ன மாதிரி
Turbo Modeக்கு மாறுவ

புழு சிரிச்சுகிட்டே சொல்லுச்சு
இதெல்லாம்
கார்ப்பரேட் லெவல் மோட்டிவேஷன்
நான் வாலன்டரி ரிட்டயர்மென்ட்
வங்க போறேன்

என்று சொல்லி
தன்னை சுற்றி Full Cover
Securityயோட கூடு கட்டிச்சு.

எறும்பு அப்பவும்
பாசிட்டிவா சொல்லுச்சு
சரி சரி
கூட்டுக்குள்ள தவம் பண்ணு
அங்க WiFi இல்ல
அங்க டிவி இல்ல
நல்ல mediate பண்ணு
Result Strongஆ இருக்கும்.

நாட்கள் ஓடின.
எறும்பு ஓடிக்கிட்டே இருந்தது.
புழு meditation le இருந்தது.

ஒரு நாள்

Tandangaaa

கூடு திறந்துச்சு.
ஆனா உள்ள புழு இல்லை.
கலர் கலரா
ஒரு பட்டாம்பூச்சி Entry.

எறும்பு Shockல
டேய் இது என்ன da இது
Free Trial app மாதிரி இருந்த
ஆனா இப்போ
Premium Version 2.0 ஆ மாறிட்ட

சும்மா மச்சான் nu
பட்டாம்பூச்சி சிரிச்சுக்கிட்டே
சொல்லுச்சு "பட்டாம்பூச்சி டா"

அதுக்கு அப்புறம் தான்
அதுக்கே புரிஞ்சது.
சில Retirementகள்
உண்மையில Promotion தான்.

ஒரு முடிவுனு நினைப்பது
இன்னொரு தொடக்கத்தோட
வெயிட்டிங் பிரியட் தான்.

அதனால
முடிஞ்சிடுச்சுனு பயப்படாதீங்க.
அது முடிவு இல்ல.
அது சும்மா
Loading Please wait தான்.

கொஞ்சம் பொறுமையா இருங்க.
உங்க Version 2.0
பின்னால ரெடியா ஆகிட்டு தான் இருக்கு.

Its not end its Just begining.
2
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 01:09:37 PM »
3
GENERAL / Re: Joker's Short Messeges
« Last post by joker on Today at 01:05:32 PM »
Perfect partner is someone
who can understand
your mood just by looking at your
texts and emojis
5

முதுமை வந்து விட்டதே!, என வருந்த வேண்டாம். முதுமைப் பருவம் தவிர்க்க முடியாது. இளமையை போல முதுமையையும் நேசிக்கப் பழக வேண்டும்...

முதுமையும் ஓர் அழகு. நமது ஒத்துப் போகும் குணம், மனதை இளமையுடன் வைத்துக் கொள்ளப் பழகுவது ஆகியவை முதுமையைக் கடக்க எளிதான வழிகளாகும்...

முதுமையில் ஏற்படும் களைப்பை, நோய்களை, உடல் வலிகளை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்...

உடல்நிலை எதற்குத் தகுதியோ அதை மட்டும் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு சிக்கல்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது...

பேரக் குழந்தைகளுடன் மகிழ்வுடன் இருக்க வேண்டும். அவர்கள் செய்யும் குறும்புகளை அனுபவிக்க வேண்டும். ஆனால்!, முழு நேரக் காப்பாளராக இருக்கக் கூடாது...

மகள் அல்லது  மகன் பொறுப்பில் அவர்கள் வளர்க்கட்டும், அவர்களிடம் அந்தப் பொறுப்பை விட்டுவிட வேண்டும்...

மக்கள் கூட்டம், அக்கம்பக்கத்தார் , நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர்கள் கூட்டத்தை அதிகரித்து அவர்களுடன் மகிழ்வுடன் இணைந்து இருக்க வேண்டும்...

தன்னை ஒரு சுமையாக கருதிக் கொண்டு, தன்னை மற்றவர்கள் சுமையாகக் கருதும் அளவிற்கு பேசிக்கொண்டும், நாளது சிக்கல்களில் தாமும் போய் விழுந்து, அதிக சிக்கல்களாக மாறிக் கொண்டும் இருந்தால், உறுதியாக அமைதியே கிடைக்காது...


🟡 முதுமை வரும் பொழுது மனதைத் தான் பக்குவப்படுத்தி மகிழ்ச்சி பெறத் தெரிய வேண்டும். அதுதான் இளமையாக இருப்பதின் மறைபொருளாகும்...!

🔴 இவ்வளவு நாள் சேமித்ததை நல்ல முறையில் செலவிடுங்கள். உங்கள் உடல் நிலை, பொருளாதார வசதி ஒத்துழைத்தால் இதுவரை சென்று வர இயலாத இடங்களுக்கு குடும்பத்துடன்  சென்று வாருங்கள்...!!

🔴 கடந்த கால நினைவுகளை எண்ணாமல் நிகழ்காலத்திற்கு வாருங்கள். நேற்றைய நினைவுகளோ, நாளைய கவலைகளோ தேவையற்றவை. நேற்று என்பது முடிந்து போனது. நாளை என்பது வராமலேயே கூடப் போகலாம். உங்களையும் மற்றவர்களையும் மன்னித்து விடுங்கள்...!!

⚫ உங்களால் பிறருக்கு ஏதேனும் இடர் ஏற்பட்டிருந்தால் தயங்காமல் மன்னிப்பு கோருங்கள். குடியொன்றும் முழுகிப் போவது இல்லை. இறுதியாக வாழ்வின் சுழற்சியில் மரணமும் ஒன்று. அமைதியோடு அஞ்சாமல் இருங்கள்...!!!

⚫ இந்த வாழ்வை விடச் சிறந்த வாழ்வின் திறவுகோல் தான் மரணம். செல்வதற்கு எப்போதும் தயாராக இருங்கள். முதுமையை வென்று இளமையாக வாழ்வோம்...!!!
6
உயிர்ப்பின் பேரழகு
[/color]

பெருவெளியின் ஒரு சிறு துகளாய் அடையாளமற்ற ஓர் அங்கமாய், வெறும் கம்பளிப் பூச்சியென இம்மண்ணில் உதித்தேன்...

அழகின் தராசில் என்னை யாரும் நிறுத்தியதில்லை,
 அருவருப்பின் படிமமாய், விகார முட்கள் கொண்ட உருவமாய், கண்டவுடன் விலகிச் சென்றனர் பலர்.

என் தற்காப்பு ஆயுதங்களையே என் விகாரங்களென உலகம் தூற்றியபோது,
நானும் என்னை வெறுக்கக் கற்றுக்கொண்டேன்.
ஆனால் - அந்த இருண்ட மௌனத்திலும்,
என் ஆழ்மனம் ரகசியமாய் கிசுகிசுத்தது: "இது முடிவல்ல!"

வானத்தை அளக்கும் வேட்கையும்,
 சிறகுகளின் ரகசியக் கனவும்,
ஊர்ந்து செல்லும் என் கால்களுக்குள் உறங்கிக் கிடந்தன.

உலகை உதறி, பசியை வென்று,  சிறு கூட்டிற்குள் எனை நானே சிறைபூண்டு  தவமிருந்தேன்.
அங்கே ,
என் வலி மாற்றமானது
என் அமைதி பரிணாமமானது.

ஒரு பொழுதில்...
என் குறுகிய சிறைக்கூடு உடைந்தது!
வண்ணங்கள் என் உடலெங்கும் கவிதை எழுதின!
தரை தொட்ட கால்கள் யாவும் திசை தொடும் சிறகுகளாய் விரிந்தன.

நேற்று என்னை நசுக்கத் துணிந்த கரங்கள்,
இன்று என் வண்ணக் கோலங்களில் வசப்பட்டு,
"நசுங்கி விடுமோ" எனப் பற்றத் தயங்கின.

என் உயிர் மாறவில்லை,
மாறியது என் புறத்தோற்றம் மட்டுமே!

புற அழகைக் கொண்டாடும் இவ்வுலகம்,
என்றாவது ஒருநாள் உணர்ந்து கொள்ளும்,
அழகென்று ஏதுமில்லாத போதும் என் உயிருக்கு ஓர் உன்னத மதிப்பு இருந்தது என்பதை!

புறக்கோலம் கடந்த உயிர்ப்பின் இருப்பே பேரழகென்று,
என் மௌனப் பரிணாமம் உலகிற்கு மொழிந்தது
[/size][/size][/size]

(பி .கு : எழுது எழுது.. என எனை ஊக்குவிக்கும் என் தோழி யாழினிக்கு  சமர்ப்பணம் )
8
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on Today at 11:45:02 AM »

10
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:23:05 AM »
Pages: [1] 2 3 ... 10