Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1


திருவிழா : தேர்த்திருவிழா
==================

திருவிழான்னு சொன்னதும் எனக்கு எங்க ஊரு தேர்த்திருவிழா தான் நினைவுக்கு வருகிறது.

அது சிவசைலநாதருக்கும் பரமகல்யாணி தாயாருக்கும் நடக்கும் திருமணவிழா தான். 3 ஊருக்குள் நடக்கும் திருவிழா அது. மாப்பிள்ளை ஊரு சிவசைலம். பெண் ஊரு கீழ ஆம்பூர் ன்னு ஒரு சிறிய கிராமம். திருமணம் நடப்பதோ ஆழ்வார்குறிச்சி என்ற கிராமம்.

மாப்பிளை அழைப்பு, பெண் அழைப்பு, திருமணம். பெண் மறுவீட்டுக்கு போவது என்று பல நாட்கள் நடக்கும். எனக்கு என்னமோ சாமீ கூட்டம் எல்லாம் கண்ணுக்கு தெரியாது. என்னுடைய தாத்தா  வருடத்திற்கு 2 முறை புதிய உடுப்பு எடுத்து தருவாங்க. ஒன்று தை பொங்கல், மற்றும் ஒன்று இந்த தேரோட்டத்துக்கு தான். அதிலும் இந்த திருவிழா நமது பள்ளிக்கூடம் கோடை விடுமுறையில் தான் வரும். அதனாலே செம மகிழ்ச்சிய இருக்கும்.

எனக்கு அந்த தேரோட்டத்தில் நிறைய பிடிக்கும். அதிகாலையில் 6.30 எழுந்து, புது ஆடை எல்லாம் போட்டுட்டு  ஓடுவோம். எங்கள் வீட்டுக்கும் கோவிலுக்கும் குறைந்தது 2 km இருக்கும்.  ஓடி போய் சாமி எல்லாம் கும்பிடுறோமோ இல்லையோ. ஆண்டு முழுவதும்.. பள்ளி சீருடையில் பார்த்த என் சக தோழியர்களை வண்ண வண்ண உடையில் பார்க்க போறேன்ன்னு வானளாவிய சந்தோசம் இருக்கும் .

4 தேரடி வீதியில் நிறைந்து வழியும் கூட்டத்தில், என்னோட நண்பர்கள் ஒருவர் ஒருவராக தேடி கண்டு பிடித்து பேசுவதில் அப்படி ஒரு திருப்தி இருக்கும். அதிலும் என் கண்கள், எப்போதுமே படிப்பை பாதியில் விட்டு போன தோழியர்களை தான் அதிகம் தேடும். எங்கள் ஊருல  பொண்ணுகளை அவ்ளோவா படிக்க வைக்கமாட்டாங்க. சிறுவயதிலே திருமணம் செஞ்சு வச்சுருவாங்க.  அப்படி திருமணம் ஆனா என் தோழிகள் அவளின் குழந்தையை என் கையில் கொடுத்து அத்தை பார் அத்தை பார்ன்னு சொல்லும் போது, சிரிப்பாகவும் லேசாக மனமும்   கனத்துதான் போகும்.

அடுத்து என் மனம் அலைந்து தேடுவது.. நீர் மோர் தான்... மோர் எங்கே பெரிய பெரிய அண்டாவில் வச்சு கொடுக்கிறாங்கன்னு தேடி தேடி போய்.. ஒரு செம்பு நிறைய வாங்கி குடிச்ச தான் தேரோட்டம் வந்த திருப்தி வரும்.  அதுக்கு பிறகு. என்னோட தாத்தாவின் கல்லூரி. எனது தாத்தா வேலைபார்க்கும் கல்லூரி இந்த ரதவீதியில் தான் இருக்கிறது.

அங்கே குடுகுடுன்னு ஓடி போய். college canteen ல லட்டு பாதுஷா எல்லாம் வச்சு இருப்பாங்க.. கைக்கு இரண்டு எடுத்துட்டு.. ஓடிருவோம்.. காசு எல்லாம் கொடுக்க மாட்டோம்.. அப்படி ஓடுவதில் ஒரு சந்தோசம். அதன் பிறகு ஒரு ஒரு வகுப்பாக போய் எங்களின் பெயர்களை.. அங்கே இருக்கும் கரும்பலகையில் முத்திரை பதித்து விட்டு மறுபடி.. கோவிலுக்கு திரும்புவோம்.

அதற்குள் சாமீ தேர் நிலைக்கு வந்து இருக்கும். அம்மன் தேர் இழுக்க பெண்கள் எல்லாம் வரிசை கட்டி நிப்பாங்க.  நானும் கூட்டத்துக்குள் நுழைத்து தேரின் வடத்தை பிடித்துக்கொள்வேன் ரொம்ப பெருமையாக. ஆனால் இந்த போலீஸ்காரர்  போ போ சின்னப்புள்ளையெல்லாம் பிடிக்க கூடாது ஓடி ஓடி ன்னு விரட்டிருவாங்க..

நானும், சரி போங்க போலீஸ் அண்ணா ன்னு சொல்லிட்டு நான் ஓடி போய் அடுத்த வேலை பார்க்க போயிருவேன். அது வேற ஒன்னும் இல்லை..  தேர் நிலைக்கு வரும் போது அதே பார்த்து ஓஒ ன்னு கைகள் தட்டி ஆரவாரம் பண்ண.. ஒரு வசதியான இடம் தேடுற வேலை  தான்.

தேர் நிலையத்தில் சரியாக கொண்டு வந்து தேரை நிறுத்தவும்.. பூ போட்டு கைதட்டி முடித்தவுடன். அடுத்து எங்கே ஓடுவோம் தெரியுமா? மிட்டாய் பெட்டி வாங்க தான். தாத்தா கைய பிடிச்சுட்டு..   தாத்தா சீவல் 1kg தாத்தா பூந்தி 1 kg கைநிறைய பலகாரம் வாங்கிட்டு வீறுநடை போட்டு வீட்டு வந்து சேர்வோம்.  தேர்த்திருவிழா மறுநாள் சித்திரை விஷு... அதற்குரிய பூ பழங்கள் எல்லாம் அங்கேயே என்னுடைய ஆச்சி அங்கேயே வாங்கிட்டு வருவாங்க.. எல்லோரும் சந்தோசமாக வீடு வருவோம்.

2
திருவிழா

திருவிழா கொண்டாட்டம் என்றாலே  எனக்கு என் சின்ன வயசு ஞாபகம் தான் வருது.
வீட்டுக்குப் பக்கத்துலே நடந்து  போகுற தூரத்துலே கோவில் . என் நாட்டுலே இப்படி எல்லா வசிப்பிடத்துலயும் அமையாது.
வலது பக்கம் போன அழகா கருமாரியம்மன் வீற்றிருக்க , அருகே சீன ஆலயத்தில் குர்ணியம்மா இருக்க இடது பக்கம் பள்ளிவாசல் என மொத்த ஆசிர்வாதமும் நிறைஞ்ச ஊர் எனது . இதுவும் கடவுள் கொடுப்பினை  தான் அம்மா அடிக்கடி சொல்வாங்க . அப்பா சிரிச்சிட்டே மழை வெயில்ன்னு போராடி வீடு வாங்குனது நானு ஆனா பாராட்டு கடவுளுக்கானு அம்மாவ சீண்டி கேலி பண்ணுவாரு.

அப்பா பொதுவா எங்களை எந்த ஒரு திருவிழாக்கும்  சட்டுனு  அழைச்சிட்டு போக மாட்டாரு .
கோவிலே வசிப்பிடம் , கடவுளே உறைவிடம் அப்படி வாழ்ற அம்மாவுக்கும்  எல்லாமே உன் செயலின் வெளிப்பாடு தான் , முயற்சியை மட்டும் நம்பு என்று பகுத்தறிவு பேசுகிற அப்பாவுக்கும் இடையிலே   ஐயோ ! இந்த முறையும்  திருவிழா கோவில் சாப்பாடு போய்டுமா என்று கவலை படுற குட்டி பசங்க நாங்க .

திருவிழா என்றால் கோவிலில்   அடிக்குற உறுமி மேளம் வீடு வரைக்கும் கேட்கும் , அப்படியே ஏக்கத்தோடு அப்பாவே பார்ப்போம் .
சிரிச்சிட்டே போயிட்டு வாங்க மா சொல்வாரு . உடனே தீபாவளிக்கு எடுத்த சட்டையைப்  போட்டுக்கிட்டு நேரா என் தோழி மலர் வீட்டுக்குப்  போய்ட்டு அவளையும் என் பட்டு பாவாடை வண்ணத்துலே உடை அணியச்  சொல்லி கோவிலுக்கு  ஓடியே போவோம்.

சாமி கும்புடறது என்னமோ 10  நிமிடம் தான் . முதல்ல தட்டு தூக்கிக்கிட்டு வரிசையிலே நின்னுடுவோம். அது என்னமோ திருவிழா சாப்பாடுனாலே தனி ருசி. அதோடு கோவிலுக்கு வெளியே போடுற கடைக்குக் கைகோர்த்துட்டு உலா போயிடுவோம் நானும் என் தோழியும்.
எங்க ஊர் திருவிழா சுத்துவட்டாரத்தில் கொஞ்சம் பிரபலம் என்றே சொல்லலாம்.

எல்லா கோவிலிலும் காலையிலே திருவிழா ஆரம்பித்து மதியம் நிறைவிடையும் ஆனா எங்க கோவில் திருவிழாவே மதியம் 2  மணிக்கு தான் ஆரம்பம் ஆகும். ஆத்தங்கரை இருந்து கிரகம் தூக்கி வருவது சாஸ்திரம் ஆனா எங்க கோவில் கிரகமோ சீன கோவில் இருந்து எடுத்து வரப்படும். திருவிழாக்கு 11 நாள் முன்பதாகவே கிரக குடம் சீன கோவிலில் இருக்கும் குரணியம்மா கையிலே ஒப்படைப்பாங்க.  திருவிழா அன்று மேளதாளத்தோடே சீன கோவிலில் இருந்து மீண்டும் அம்மன் கோவிலுக்குத் தூக்கி வருவாங்க . சீன நண்பர்கள் அலகு குத்துறதும் தீமிதி இறங்குறது என கோலாகலம் என்றால் இதுதான் என்று சொல்ற அளவுக்கு இருக்கும் .

இது எல்லாத்துக்கும் முத்தாய்ப்பா அமையுறது தேர் வெளியாகும் இரவு நேரம் தான் . தேர் நேரா முதலில் என் வீட்டுக்கு தான் வரும். அம்மா சாமிக்கு சீர் தவிர்த்து உடன் வர எல்லாருக்கும் டீ , காபி கலக்கி தருவாங்க. சாப்பிட ரொட்டி , கடலை இப்படி எல்லாமே இருக்கும் . பாத்தீங்களா சாமி முதல்ல நம் வீட்டுக்குத் தான் வராங்கனு அம்மா அப்பாவே பெருமிதமா பாக்க .
ஏன்னா நான் நல்லவன் மா என்று அப்பா மீண்டும் அம்மாவைச் சீண்டுவாரு. என் கையிலே 100  ரிங்கிட் கொடுத்து உண்டியிலே போடுமா என சொல்லி அப்பா அவர் வேலையை பாக்க போக நானும் என் அக்கா அண்ணாவும் தேருடன் நடக்க  ஆரம்பிப்போம்.
4
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on January 23, 2026, 03:19:39 PM »
5
வருஷத்துக்கு ஒரு முறை நடக்குற குறிச்சிகுளம் திருவிழா. சுத்துப்பட்டு ஊர்ல இருந்துலாம் வருவாங்க. ஏழூரு மக்க சேர்ந்து நடத்துர திருவிழா, ஜே ஜேன்னு இருக்கும். வெளியூர் என்ன, வெளிநாட்டுக்கே போயிருந்தாலும் ஊர்காரங்க குறிச்சிகுளம் திருவிழாக்கு மட்டும் சரியா வந்துடுவாங்க. எங்க சாமி 'திரௌபதி அம்மன்'. துடியான சாமின்னு சொல்லுவாங்க, ஆனா அம்மன் முகத்தை பார்த்தா அவ்வளவு அழகா கருணை பொங்கி வழியும். சின்ன வயசுல ஸ்கூலுக்கு லீவு போட வச்சு கூட்டிட்டு போயிடுவாங்க. கலர் கலரா கடைங்க, விதவிதமா பலூன் பறக்கும், ஊர் முழுக்க கலர் பேப்பர் தொங்கவிட்டிருப்பாங்க. கோலாகலாமா இருக்கும் ஊரே. சின்ன ஊரு தான் ஆனா ஒவ்வொரு வீட்டுக்கும் அஞ்சு பத்து பேரு வெளியூர்ல இருந்து வந்திருப்பாங்க. வாசல்ல வச்சு பொங்கல் வைக்கிறது, சமைக்கிறதுன்னு கலகலப்பா இருக்கும். ஊரு, ஆள் பேரல்லாம் தெரியாட்டியும் எல்லாரும் ஒன்னுமன்னா சேர்ந்து வேலைய பார்த்துக்கிட்டு இருப்பாங்க.

திருவிழாவும் சும்மா கிடையாது, கொடியேத்ததுல ஆரம்பிக்கும் திருவிழா. கொடியேத்தனவுடனே ஊர்காரங்க காப்பு கட்டுவாங்க, அது முடிஞ்சு முத நாளே மொளபாரி போடுவாங்க, கடைசி நாள் அந்த மொளபாரி எல்லாம் மொளைச்சு, முளைப்பாரிக்கட்டு நடக்கும். எல்லாரு வீட்லயும் முளைப்பாரி போடுவாங்க. தினமும் தெருகூத்து நடக்கும், மகாபாரத சொற்பொழிவெல்லாம் நடக்கும். அம்மன் தினமும் வீதி உலா வருவாங்க தேர்ல, பெரிய தேரு கடைசி நாள் தான் வரும். அம்மன் உலா வரும்போது எல்லார் வீட்டு வாசல்லயும் தண்ணி தெளிச்சி கோலம் போட்ருவாங்க. எல்லா தெருமுக்குலையும் நின்னு தீபாரதனை காட்டி விபூதி பூசிவிடுவாங்க. சில வீடுகள்ல தனியா சாமிக்கு தேங்காய் உடைப்பாங்க.

கடைசி நாள் தேர்திருவிழாக்கு முன்னமா தீமிதி திருவிழா நடக்கும். நான்லாம் சின்ன வயசுல தீமிதினா கொத்திக்கிற நெருப்புல நடந்து வருவாங்கன்னு நினைச்சிப்பேன், ஆனா தீங்கங்கும் சாதாரணமில்ல கொழுந்துவிட்டு எரியிற தீ மாதிரி தான், கங்கு போடும்போதே அனலடிக்கும். அந்த தீமிதியும் மொட்ட வெயில்ல தான் நடக்கும். படத்துல காட்ற மாதிரி மெதுவாலாம் நடந்து வந்துட்டு இருக்கமாட்டாங்க. திபுதிபுதிபுன்னு ஓடிவருவாங்க அந்த பக்கத்துல இருந்து இந்த பக்கத்துக்கு. சின்ன பசங்களை பார்க்க கூடாதுன்னு சில சமயம் வீட்ல இருக்கவங்க இழுத்துட்டு போயிருவாங்க.

அப்புறம் வரும் பாருங்க இந்த திருவிழாவோட ஹைலட்டே கோவில் பக்கத்துல இருக்கிற க்ரவுண்ட்ல பெரிய சிலை மாதிரி செம்மண்ண புடிச்சி வச்சிருப்பாங்க படுத்த வாக்குல, சும்மா சின்ன செலயெல்லாம் இல்ல ரொம்ப பெருசா புடிச்சி வச்சிருப்பாங்க. பார்க்கவே பயங்கரமா இருக்கும்.  இத நாங்க அரவான் களபலின்னு சொல்லுவோம். ஊர் கூடி பொங்கல் வச்சு முடிச்ச அப்புறம், அரவான் பலி கொடுக்கிறது நடக்கும். சின்ன பசங்க பார்க்க கூடாதுன்னு தான் சொல்லுவாங்க ஆனா நாம என்னைக்கு கேட்டிருக்கோம். பெரிய சாமி அரிவாள வச்சு அரவான் மேல இருக்க கோழிய வெட்டி அரவான பலி கொடுத்து அதுல ரத்த சாதத்த பிசைஞ்சு சுத்தி இருக்க எல்லார் மேலயும் வீசுவாங்க.

அந்த களபலிய பார்க்கவே கூட்டமான கூட்டமா இருக்கும். பக்கத்துலயே ஏரிக்கரை வேற, இளந்தாரி பசங்கள்லாம் மரத்துமேல ஏறி உட்கார்ந்துட்டு பார்ப்பாங்க, சின்னபசங்கள்லாம் அம்மா, ஆத்தா புடவைக்கு பின்னாடி ஒளிஞ்சிட்டு பார்ப்பாங்க. பூசாரி சாமியாடுறத பார்க்கவே பயங்கரமா இருக்கும். அப்புறம் ஊர் பொம்பளைங்கள்லாம் முளைப்பாரி தூக்கிட்டு வந்து கோவில்ல பொங்கல் வச்சு சாமி கும்பிடுவாங்க. தேர் வடம் பிடிக்கவும் அவ்வளவு கூட்டமா இருக்கும். ஆடி அசஞ்சு வர்ர தேர மாதிரி மனசும் இதையல்லாம் அச போடுது.
6




Hi MiCA Here...
Hi FTC,,Thank You For My Forum Registration..!!


நான்  Chat-க்கு reg user இல்லை...எப்பவாவது guest id  chat வருவதுண்டு...ஆனால் FTC Fm  நிகழ்ச்சிகளை நான் வெளியே இருந்தவாறே  கேட்பதுண்டு...

அண்மையில் நான் புதிதாக கே‌ட்ட நிகழ்ச்சி நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் ( ரயில் பயணங்கள்) அதை பற்றிய  கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்..!!



✍ எழுத்தாளர்கள்:

இந்த நிகழ்ச்சியில்  ரயில் பயணங்களை பற்றி  பகிர்ந்து கொண்ட அத்தனை  கதைகளும்  அருமை...உங்களுடைய  ஒவ்வொரு கதை ஒவ்வொருவருடைய  உன்னதமான  உணர்வுகள்...ஒவ்வொரு கதை படிக்கும் போதும் அல்லது FM -இல் கேட்கும் போது கண்களை  மூடி யோசிச்சா
அத்தனையும்  கடந்த கால  நினைவுகளின்  பொக்கிஷமே👏


🎤 தொகுப்பாளினி:

RJ...எழுதிய கதைகளை  அப்படியே  வாசிக்காம...கதைகளை  அத்தனையும்  உள்வாங்கி  தானே அந்த  கதாபாத்திரமாகவே  மாறி  கேக்குற users-க்கு  எளிதாக  புரிய  வைத்த  விதம்  அற்புதம்  தோழி....ரயில் அனுபவங்களை  எழுதியவர்கள்தான்  நம்மிடம் கதை சொல்றாங்க போல,,,அப்படினு எங்களுக்கும்  கதை  எழுதியவர்களுக்கு  அந்த  உணர்வை கொண்டு வந்தது  RJ- வின்  தனிச்சிறப்பு👏



🎧 EDITOR:

ஒரு  movie- க்கு எப்படி  பின்னணி இசை  முக்கிய பங்கு வகிக்கிறதோ  அது போல தான் இந்த  நிகழ்ச்சியின்  பின்னணி  இசையும்...எங்க  என்ன தேவை  என்று  நல்ல  புரிஞ்சிக்கிட்ட,,நிகழ்ச்சி  கேட்ட  அத்தனை பேர்  கையை  பிடித்து  கொண்டு உங்க பின்னணி இசையில்   எங்களை பின் தொட‌ர வைத்தது  இந்த  நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்தியது👏


📌 இறுதியாக:

இந்த  நிகழ்ச்சி  கேட்டு  ரசித்த  எங்க  எல்லாருக்கும்  இது போன்ற  அனுபவம் இருக்கலாம்  சிலருக்கு  இல்லாமலும்  இருக்கலாம் ஆனால் இந்த  நிகழ்ச்சி ஒளி பரப்பான அந்த  தருணத்தின்  பயணம்  உண்மையிலேயே  எங்கள் மனதில் என்றென்றும் நெஞ்சம் மறப்பதில்லை...!!!

வாழ்த்துக்கள்...நன்றி🙏
7
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on January 23, 2026, 09:18:20 AM »
8
கவிதைகள் / Re: கண்களின் மொழி❤️
« Last post by Lakshya on January 23, 2026, 06:53:14 AM »
அவள் கண்களில் அச்சம் இல்லை,
தலை நிமிர்ந்து நடந்தாள்
உலகம் விதித்த எல்லைகள்
அவள் கனவுகளுக்கு
சுவர் ஆகவில்லை❤️
9
  திருவிழா கொண்டாட்டம்:
    அப்பா கடை நடத்திட்டு வந்ததால அதிகமா எங்கும் வெளிய போனது இல்ல.... ஆனா ஆண்டுக்கு ஒருமுறை மாதா கோயில் திருவிழாக்கு கூட்டிட்டு போவாங்க... Bus ல பயணம்.... சந்தோஷமா அம்மா அப்பா அக்கா கூட கிளம்பிடுவேன்... அங்க இருக்குற கடைங்க மற்றும் ராட்டினத்துக்காக.... எப்பவாது கிடைக்கும் வாய்ப்ப தவர விடலாமா??? கண்டிப்பா இல்ல...

அப்பா நேரா கோயில் குள்ள கூட்டிட்டு போயிடுவாங்க...ஆனா நம்ம மனசோ ரங்க ராட்டினதுல சுத்திட்டு இருக்கும். எப்போ டா கோயில விட்டு போவோம் ராட்டினத்துலன்னு ஏறுவோம் ன்னு இருக்கும்.

ஒரு வழியா திருப்பலி ஒண்ணு முடிஞ்சதும் வெளியே இருக்கும் திருவிழா கடைக்கு கூட்டிட்டு வருவாங்க... எத வாங்க எத விடன்னு மனசு அல்லோல் படும்... கண்ணு கடைய முழுசா ஆராஞ்சு வழக்கம் போல ஒரு முடி வச்ச பொம்மை ல போய் நின்னுடும்... கைக்கு வந்த பொம்மைக்கு என்ன என்ன hair style பண்ணலாம் ன்னு யோசிசுட்டே அடுத்து ராட்டினம் தான் 😁...

கூடை மாதிரி இருக்குற இருக்கை... அக்காவும் நானும் ஒண்ணா இருந்தோம். ரெண்டு சுத்து தான் சுத்திருக்கும், அம்மா ராட்டினம் போய்ட்டு வந்து ice cream சாப்டு ன்னு சொன்னத மீறி சாப்ட ice cream தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சுடுசு... வயத்த பிரட்டிட்டு வர, சரியா மேல போகும் போது கீழ இருந்தவங்க தலையில அபிசேகம் தான்... பாவம் யார் பெத்த பிள்ளையோ... ராட்டினம் சுத்தி முடிச்சதும் அங்க ஏன் நிக்கிறேன்... இறங்குனதும் யார் கிட்டையும் மாட்டாம தப்பிச்சு அம்மா இருந்த இடத்துக்கு போயாச்சு.... அக்காவும் நானும் ஒரே மாதிரியான colour dress ... பாவம் அவ எனக்கு பதிலா மாட்டிகிட்ட... அக்கா இருக்கிறது அப்போ தான் நிம்மதியா இருத்தது... அப்பாட நம்ம தப்பிசோம் 😁

முடி வச்ச பொம்ம, நிறைய பலகாரம், கம்மல், வளையல் கொஞ்சம் பக்தி வருடா வருடம் இதே கத தான்... ஆனா அதுக்கு அப்புறம் ராட்டினம் போய்ட்டு வந்து தான் ice cream 🍨 - இது நகரத்துல திருவிழா ன்னா.... ஊர் பக்கம் கேக்கவே வேணாம்...  ஆனா.....

முழு ஊருமே உறவுமுறைக்குள்ள இருந்தாலும் நகரத்துல பொறந்து வளர்ந்து எப்போவாது ஊருக்கு போற பசங்களுக்கு எல்லார்கிட்டயும் பழகிறது கொஞ்சம் கடினம் தான்... திருவிழா வ தொலைக்காட்சி குள்ள தான் பாக்க முடிது. பல பேர் திருவிழா பற்றி பக்கம் பக்கமா பேசும் போது மனசுக்குள்ள ஏக்கம் அலாதியா இருக்க தான் செய்யுது...

சொந்த ஊர விட்டு நகரமையம் ஆகுதலின் பாதிப்புல இதுவும் ஒன்று 💔

நகர கூண்டு வாழ்க்கைக்கு ஜன்னல் வழி காற்று திருவிழா 😊😊
10


Hi Isai Thendral Team,

Good Evening ✨

This week I request you to Play the Song... UNAKULLE MIRUGAM,  from BILLA -2

Song Name - Unakkulle Mirugam
Movie - Billa 2
Singer - K.G. Ranjith
Music - Yuvan Shankar Raja
Lyrics - Na. Muthukumar
Director - Chakri Toleti

Intha Song Naan Enakkum and En FTC Friends kum Dedicated Pandren...

Enakku Intha Song la Ellaa Varigalum Pidikum...

Athilum Migavum Romba Piditha Varigal Ethoo Keeley...

கனவுகளை உணவாய்
கேட்டு அது துடிக்கும்
உன்னை அது விழுங்கி
உந்தன் கையில் கொடுகும்

எரிக்காமல் தேன் அடை கிடைக்காது
உதைக்காமல் பந்து அது எழும்பாது
வலியதுதான் உயிர் பிழைக்கும்


இங்கு நண்பன் யாரும் இல்லையே
எதிரிக்கும் பகைவன் யாரும் இல்லையே
இனி நீதான் உனக்கு நண்பனே
என்றும் நீதான் உனக்கு பகைவனே

அடிக்கடி நீ இறக்க வேண்டும்
மறுபடியும் பிறக்க வேண்டும்
உறக்கத்திலும் விழித்திரு நீ
இரு விழியும் திறந்த படி


Thank You,

Yours,

KANITHAN...

Pages: [1] 2 3 ... 10