15
« Last post by VenMaThI on June 25, 2026, 08:07:36 PM »
பணம் பத்தும் செய்யும் என்பார்கள் - அனால்
பணம் மனிதனை பித்தாகவும் செய்யும்
படிப்பு வேணுமா பணம் வேணும்
உசுர காப்பாத்தணுமா பணம் வேணும்
சேவை என தொடங்கிய பணிகள் எல்லாம்.. இன்று
பண தேவையாய் போய்விட்டது...
தூக்கத்தை கெடுத்து சம்பாரிச்சு
சம்பாரிச்ச பணத்தையெல்லாம்.. காசு
கொடுத்து படிச்ச டாக்டரிடம் கொடுத்து
காசுக்காக உசுர பணயம் வைக்குற காலம் இது
படிக்குற புள்ள எங்க இருந்தாலும் படிக்கும்ன்னு சொல்வாங்க - ஆனா இன்னைக்கு
பணம் இருக்குற புள்ள தானே படிக்குது
அரசாங்க வேலையில கூட பணம் தானே ஆதிக்கம் பண்ணுது...
பண்டமாற்று காலத்துல நம் முன்னோர்கள்
நிம்மதியா ஆரோக்கியமா இருந்தாங்க
100 வயசுக்கு மேல அஸ்ஸால்டா வாழ்ந்தாங்க
இந்த காலத்துல அதெல்லாம் நடக்குமா
சாப்புடுற சாப்பாட்டுல கலப்படம்
குடுக்கிற மருந்துல கலப்படம் - அவ்வளவு ஏன்
குடிக்கிற தண்ணிய கூட காசு குடுத்து வாங்க வெச்சு
வணிக துறைக்கு மாத்தி வச்சிருக்காங்க...
அயல் நாட்டுல வேல செய்யுற பையன்
ஆயிரம் ஆயிரமா கொட்டி அம்மாவுக்கு
ஆள் போட்டு பணிவிடை செய்தான்
உசுரு போற நேரத்துல அந்த ஆயா சொல்லிச்சு
"ஆயிரம் தான் என்ன அலுப்பு இல்லாம பார்த்தாலும்
ஆசையாம வச்சி பாக்க ஆள் இருந்தாலும்
உசுரு போற நேரத்துல நான் பெத்த புள்ளகிட்ட தோள் சாய முடியலையே "
பணம் இன்று வரும் நாளை போகும்
நிலையில்லா தன்மை கொண்டது
அதன் பின் ஓடும் மனிதனின் வாழ்க்கை மட்டும்
எப்படி நிலை பெரும்
அம்பானியாய் இருப்பவன்கூட ஒரு நொடிப்பொழுதில் ஆண்டியாய் ஆகலாம்
காலம் செய்யும் கோலம் என்றும்
நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாதது.....
ஆளுயர மாலை போட்டு
வானவேடிக்கையும் தாரை தப்பட்டயும் ஒலிக்க
ஒய்யாரமாய் போவதில் இல்லை நம் மதிப்பு
அது வெறும் மாயை தான்
ஒப்பாரி வச்சு அழுது
ஊர் சனம் எல்லாம் ஒண்ணு கூடி
அலை போல் மக்கள் வெள்ளம் சூழ - மனதார
அழுது புலம்பி அனுப்பி வைப்பது தான் மதிப்பு..
கோடி கோடியா சம்பாரிச்சு வச்சாலும்
பிணம்ன்னு பேர் வச்சப்புறம் - பணம்ன்னு சொல்லி
எந்த பிணமும் இன்றுவரை வாயை திறந்ததில்லை
கோடீஸ்வரனுக்கும் தெருக்கோடியில் இருப்பவனுக்கும் மரணம் ஒன்று தான்...
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்
தேவைக்கு சம்பாரிச்சு தேகசுகம் பெற வாழ்வோம்
இல்லாதவனுக்கு நம்மால் இயன்றதை கொடுப்போம்
இருக்கும் இந்த நொடியை இன்பமாய் கழிப்போம்...