11
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-001 (ரயில் பயணங்கள்)
« Last post by Yazhini on December 25, 2025, 10:29:48 PM »ரயில் பயணங்கள்...
என் மனசுக்கு மிக மிக நெருக்கமான ஒரு இனிமையான பகுதி. நண்பர்கள் கூட்டம் ன்னு கூட சொல்ல முடியாது ஒரு பட்டாளமே கிடைச்ச அட்டகாசமான நாட்கள்...
காலையில 6 மணி இருக்கும் கோழி கொக்கரக்கோன்னு கூவும் போது நாங்க ரயில்ல இருப்போம். பயண நேரம் காலையில 2.30 மணி நேரம் ( விரைவு ரயில் என்பதால்) மாலை 3 மணி நேரம்... தனியா பேருந்து பயணம் வேற உண்டு... பல மைல் தூரத்த தாண்டி தான் வேலை. ஆனாலும் இந்த ரயில் பயணம் எங்க எல்லோருக்குமே ஒரு குட்டி கல்லூரி காலம்னே சொல்லலாம். இதுல ஆட்டம் உண்டு, ஆரவாரம் உண்டு, குரங்கு சேட்டைகளும் உண்டு. மனசோர்வோ உடல் சோர்வோ நண்பர்கள் கூட்டத்துல காணாமலே போய்டும்....
அரக்க பறக்க ரயில பிடிக்க ஓடினா சில சமயம் tata காட்டிட்டு ரயில் ஓடிடும்...
சில நேரம் நிறுத்தி கூட ஏறிய அனுபவம் உண்டு.
ஒரு தடவை அப்படி தான் வழக்கம் போல நேரம் ஆகிடுச்சு... Train முன் பக்கம் தான் ஓடி போனேன்... ரயில் நகர்ந்து ரெண்டு பெட்டி என்னை தாண்டியும் போயாச்சு... ஆனாலும் அங்க இருந்த porter அண்ணா ஒருத்தங்க ரயில நிறுத்த guard கிட்ட signal காட்ட ரயில் வேகத்த கொஞ்சம் குறைச்சுடாங்க... அவங்களுக்கு தான் வேகம் கம்மி... எனக்கோ இன்னைக்கு ஒரு சம்பவம் நமக்கு இருக்குன்னு மனச சாகசத்துக்கு தாயார் செஞ்சு எனக்கு வேகமா தெரிஞ்ச ரயில, ஒரு பெட்டியில ஒரே தாவு... நல்ல வேல நா வெளிய விழல.... புரிஞ்சுருக்கும்... ஆமாங்க விழுந்தது ரயில் உள்ள தான்... ஆனா வழக்கமா ஏறுரா பெட்டி இல்ல.... நமக்கு முக்கியம் விழாம இருக்கிறது கூட இல்ல... Close friends பாத்துட கூடாது.... அப்பாடா ன்னு எழுந்தா ஒரு நண்பர்... அவ்வளவு தான்.. அன்னைக்கு ரயில தலைப்பு செய்தி நான் தான்... மானம் போச்சு மரியாத போச்சு... சரி இதுவும் நம் வீர வரலாறு ன்னு எடுத்துகிட்டாசு...
இது எப்பவாது நடக்குற சாகசம் - ன்னா எப்பவும் நடக்குற சாகசம் ஒண்ணு இருக்கு.... அதுதான் நண்பர்களுக்கு இடம்பிடிக்குற தலையாய (தலை போற) சாகசம். அந்த ரயில்நிலையத்துல ஏறுறவர்களுக்கு இடம் பிடிச்சா பரவால்ல.. நாங்க தான் அடுத்த ரயில் நிலையத்துல ஏறப்போற எங்க நண்பர்களுக்கு இடம் பிடிப்போம்ல.... வழக்கமா வரவங்களுக்கு இவங்க இப்படி தான்னு ஓடிடுவாங்க... ஆனா புதுசா வரவங்ககிட்ட சண்டைபோட்டு இடத்த தக்க வைக்கிறது இருக்கே.... குழாயடி சண்டையில தண்ணீ பிடிக்குறதுக்கு சமம்...
இவ்வளவு இரணங்களத்துளையும் ஒரு குதூகலம் - ன்னு அப்போ அப்போ festival mode க்கு வேற போய்டுவோம்... பொங்கலோ, தீபாவளியோ கிறிஸ்துமசோ ராம்சனோ.... யார் யார் எத நல்லா சமையல் செய்வோமோ அத கொண்டு வந்து சோறு சோறு - ன்னு ஒரே கொண்டாட்டமா போகும்....
ஆக மொத்ததுல என் ரயில் பயணங்கள் பல இனிமையான நினைவுகளோடு நிறைச்சு இருக்கு. இன்று வரை எங்க பயணம் நிக்காம whatsapp ல ஓடிக்கிட்டே இருக்கு
என் மனசுக்கு மிக மிக நெருக்கமான ஒரு இனிமையான பகுதி. நண்பர்கள் கூட்டம் ன்னு கூட சொல்ல முடியாது ஒரு பட்டாளமே கிடைச்ச அட்டகாசமான நாட்கள்...
காலையில 6 மணி இருக்கும் கோழி கொக்கரக்கோன்னு கூவும் போது நாங்க ரயில்ல இருப்போம். பயண நேரம் காலையில 2.30 மணி நேரம் ( விரைவு ரயில் என்பதால்) மாலை 3 மணி நேரம்... தனியா பேருந்து பயணம் வேற உண்டு... பல மைல் தூரத்த தாண்டி தான் வேலை. ஆனாலும் இந்த ரயில் பயணம் எங்க எல்லோருக்குமே ஒரு குட்டி கல்லூரி காலம்னே சொல்லலாம். இதுல ஆட்டம் உண்டு, ஆரவாரம் உண்டு, குரங்கு சேட்டைகளும் உண்டு. மனசோர்வோ உடல் சோர்வோ நண்பர்கள் கூட்டத்துல காணாமலே போய்டும்....
அரக்க பறக்க ரயில பிடிக்க ஓடினா சில சமயம் tata காட்டிட்டு ரயில் ஓடிடும்...
சில நேரம் நிறுத்தி கூட ஏறிய அனுபவம் உண்டு.
ஒரு தடவை அப்படி தான் வழக்கம் போல நேரம் ஆகிடுச்சு... Train முன் பக்கம் தான் ஓடி போனேன்... ரயில் நகர்ந்து ரெண்டு பெட்டி என்னை தாண்டியும் போயாச்சு... ஆனாலும் அங்க இருந்த porter அண்ணா ஒருத்தங்க ரயில நிறுத்த guard கிட்ட signal காட்ட ரயில் வேகத்த கொஞ்சம் குறைச்சுடாங்க... அவங்களுக்கு தான் வேகம் கம்மி... எனக்கோ இன்னைக்கு ஒரு சம்பவம் நமக்கு இருக்குன்னு மனச சாகசத்துக்கு தாயார் செஞ்சு எனக்கு வேகமா தெரிஞ்ச ரயில, ஒரு பெட்டியில ஒரே தாவு... நல்ல வேல நா வெளிய விழல.... புரிஞ்சுருக்கும்... ஆமாங்க விழுந்தது ரயில் உள்ள தான்... ஆனா வழக்கமா ஏறுரா பெட்டி இல்ல.... நமக்கு முக்கியம் விழாம இருக்கிறது கூட இல்ல... Close friends பாத்துட கூடாது.... அப்பாடா ன்னு எழுந்தா ஒரு நண்பர்... அவ்வளவு தான்.. அன்னைக்கு ரயில தலைப்பு செய்தி நான் தான்... மானம் போச்சு மரியாத போச்சு... சரி இதுவும் நம் வீர வரலாறு ன்னு எடுத்துகிட்டாசு...
இது எப்பவாது நடக்குற சாகசம் - ன்னா எப்பவும் நடக்குற சாகசம் ஒண்ணு இருக்கு.... அதுதான் நண்பர்களுக்கு இடம்பிடிக்குற தலையாய (தலை போற) சாகசம். அந்த ரயில்நிலையத்துல ஏறுறவர்களுக்கு இடம் பிடிச்சா பரவால்ல.. நாங்க தான் அடுத்த ரயில் நிலையத்துல ஏறப்போற எங்க நண்பர்களுக்கு இடம் பிடிப்போம்ல.... வழக்கமா வரவங்களுக்கு இவங்க இப்படி தான்னு ஓடிடுவாங்க... ஆனா புதுசா வரவங்ககிட்ட சண்டைபோட்டு இடத்த தக்க வைக்கிறது இருக்கே.... குழாயடி சண்டையில தண்ணீ பிடிக்குறதுக்கு சமம்...
இவ்வளவு இரணங்களத்துளையும் ஒரு குதூகலம் - ன்னு அப்போ அப்போ festival mode க்கு வேற போய்டுவோம்... பொங்கலோ, தீபாவளியோ கிறிஸ்துமசோ ராம்சனோ.... யார் யார் எத நல்லா சமையல் செய்வோமோ அத கொண்டு வந்து சோறு சோறு - ன்னு ஒரே கொண்டாட்டமா போகும்....
ஆக மொத்ததுல என் ரயில் பயணங்கள் பல இனிமையான நினைவுகளோடு நிறைச்சு இருக்கு. இன்று வரை எங்க பயணம் நிக்காம whatsapp ல ஓடிக்கிட்டே இருக்கு

Recent Posts