11
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 388
« Last post by SweeTie on November 26, 2025, 06:29:29 PM » என் மனதில் ஓடும் ஆயிரம் எண்ணங்களுக்கு
விடைதெரியாமல் இன்று தவிக்கிறேன்
அழகான ஓவியமாக இருந்த உன்னை
சிற்பமாய் என் இதயத்தில் வடித்தேன்
கால ஓட்டத்தில் ஒரு கந்தர்வ வாழ்க்கை அது
தேவதைகளையும் மிஞ்சிய அழகி நீ
தினமும் உன்னை ஆராதித்தேன்
உன்னை படைத்த பிரமனை வியந்தேன்
சித்திரத்தேரிலே தங்க சிலையாக பவனி வந்தாய்
பார்த்து பார்த்து புளகாங்கிதம் அடைந்தேன்
\
பழைய கஞ்சி ஆறிப்போனதுபோல, காலம்கடக்க
உன் அழகிலும் சில மாற்றங்கள் ஏற்பட
உன்மீது என் நாட்டம் குறையலாயிற்று
புதிய உறவுகள் என்னை அண்டத்தொடங்கின
நானும் புதிய மாற்றங்களுக்கு அடிமையானேன்
என் அறிவு மழுங்கியது ஆண்மை தலை தூக்கியது
அழகு சிலையாயிருந்த உன்னை
அறியாமை எனும் உளி கொண்டு அலங்கோலமாக்கினேன்
கடும் சொற்களால் உன்னை கீறி கிழித்தேன்
உடலில் சிதைவுகள் உண்டாக்கினேன்
பெண்மைக்கே உரித்தான பொறுமை உன்னை
பேசாமடந்தையாக்கி என் கொடுமைகளை
பொறுத்துக்கொள்ளும் பூமாதேவியாகிவிட்டது
வெயிலிலும் மழையிலும் எப்படி நீதவித்தாயோ
என் சுகபோக வாழ்க்கையில் இதை எல்லாம்.
எண்ணி பார்த்ததில்லை இன்றுவரை
காலம் என்னை குத்திக்காட்ட தவறவில்லை
தனிமரமாக நிற்கும் என்னை இன்று
தங்குவார் யாருமில்லை
சுற்றிநிற்கும் கறையான்கள் மட்டுமே தஞ்சம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்
நான்மட்டும் என்ன விதிவிலக்கா?
மாற்றங்கள் மாறாதவை என உணர்கையில்
வாழ்க்கையின் இறுதிப்படியில் நின்றுகொண்டிருக்கிறேன்
விடைதெரியாமல் இன்று தவிக்கிறேன்
அழகான ஓவியமாக இருந்த உன்னை
சிற்பமாய் என் இதயத்தில் வடித்தேன்
கால ஓட்டத்தில் ஒரு கந்தர்வ வாழ்க்கை அது
தேவதைகளையும் மிஞ்சிய அழகி நீ
தினமும் உன்னை ஆராதித்தேன்
உன்னை படைத்த பிரமனை வியந்தேன்
சித்திரத்தேரிலே தங்க சிலையாக பவனி வந்தாய்
பார்த்து பார்த்து புளகாங்கிதம் அடைந்தேன்
\
பழைய கஞ்சி ஆறிப்போனதுபோல, காலம்கடக்க
உன் அழகிலும் சில மாற்றங்கள் ஏற்பட
உன்மீது என் நாட்டம் குறையலாயிற்று
புதிய உறவுகள் என்னை அண்டத்தொடங்கின
நானும் புதிய மாற்றங்களுக்கு அடிமையானேன்
என் அறிவு மழுங்கியது ஆண்மை தலை தூக்கியது
அழகு சிலையாயிருந்த உன்னை
அறியாமை எனும் உளி கொண்டு அலங்கோலமாக்கினேன்
கடும் சொற்களால் உன்னை கீறி கிழித்தேன்
உடலில் சிதைவுகள் உண்டாக்கினேன்
பெண்மைக்கே உரித்தான பொறுமை உன்னை
பேசாமடந்தையாக்கி என் கொடுமைகளை
பொறுத்துக்கொள்ளும் பூமாதேவியாகிவிட்டது
வெயிலிலும் மழையிலும் எப்படி நீதவித்தாயோ
என் சுகபோக வாழ்க்கையில் இதை எல்லாம்.
எண்ணி பார்த்ததில்லை இன்றுவரை
காலம் என்னை குத்திக்காட்ட தவறவில்லை
தனிமரமாக நிற்கும் என்னை இன்று
தங்குவார் யாருமில்லை
சுற்றிநிற்கும் கறையான்கள் மட்டுமே தஞ்சம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்
நான்மட்டும் என்ன விதிவிலக்கா?
மாற்றங்கள் மாறாதவை என உணர்கையில்
வாழ்க்கையின் இறுதிப்படியில் நின்றுகொண்டிருக்கிறேன்

Recent Posts






