Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11


80களில், 90களில் பிறந்த குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் தான்... ஏன் தெரியுமா? ஏனென்றால் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சேர்ந்து வளர்ந்தவர்கள் இவர்கள்தான்.

அதாவது, அன்றைய வீடியோ கேமில் தொடங்கி இன்றைய பிளே ஸ்டேஷன் வரை அனைத்தையும் முதலில் உபயோகப்படுத்தியது இவர்கள்தான்.

அன்று தங்கள் பெற்றோர்கள் ஒரே ஒரு ரூபாய் கொடுத்தாலே அதை வைத்து பள்ளி காலங்களில் அதிகபட்ச சந்தோஷத்தை வாங்கியவர்களுக்கு அந்த காலம் மறக்க முடியாத சொர்க்கம் என்றால் அது மிகையாகாது.

சுகமான நினைவுகளும், மறக்க முடியாத சில நிகழ்வுகளும் கொண்ட பாக்கியம் பெற்றவர்கள்தான் 90-களில் பிறந்த குழந்தைகள்.

கேட்டில் ஏறி நின்று கொண்டு அதை ஒற்றைக் காலால் திறந்தும், மூடியும் விளையாடிய கடைசி தலைமுறை.

கொய்யா மரத்தில் ஏறி அணில், கிளி கடித்த பழங்களை சாப்பிட்ட கடைசி தலைமுறை.

தமிழ் சினிமா பாடல் வரிகள் சிறு சிறு புத்தகங்களாய் கிடைக்கும். அதை வாங்கி போட்டி போட்டு படித்த சூப்பர் சிங்கர்கள் அல்லவா? நாம்.

பூவரச இலையில் பீப்பி செய்து இசை வாசித்த கடைசி தலைமுறை.

தட்டான், முயல் பிடிக்க காடுகளில் அலைந்த கடைசி தலைமுறை.

ஆசை ஆசையாக கடிதம் எழுதியதும், அதை பல காலம் பாதுகாப்பாகச் சேர்த்து வைத்திருந்ததும் நம் தலைமுறை தான்.

சிம்னி விளக்கு பயன்படுத்திய கடைசி தலைமுறை.

ஊருக்குள் வரும் கரடி, குரங்குகளை பார்த்து முதலில் பயந்தாலும், பிறகு அதனை பின்தொடர்ந்து போக்கு காட்டிய கடைசி தலைமுறை.

வைக்கோல் போர்களில் துள்ளிக்குதித்து பிறகு எரிச்சல் தாங்க முடியாமல் தள்ளாடிய கடைசி தலைமுறை.

இதை படித்தவுடன் உங்களுக்கும் மலரும் நினைவுகள் ஞாபகத்தில் வந்துவிட்டதா?
12


ஸ்வஸ்திக் அடையாளம் என்பது நாசி ஜெர்மனியின் அதிர்ஷ்ட அடையாளமாக இருந்து வருகிறது. இது நலனின் சின்னமாக கருதப்படுகிறது. இதன் பெயர் சமஸ்கிருத மொழியிலிருந்து சூட்டப்பட்டுள்ளது. இதில் ஸூ என்பதற்கு நல்லது என்றும் அஸ்தி என்பதற்கு நல்வாழ்வு என்பதும் பொருளாக உள்ளது. இந்த பழைய அற்புதமான அடையாளம் மனிதனால் கிட்டத்தட்ட 6000 ஆண்டுகளுக்கு முன்னரே கற்களிலும், பாறைகளிலும் மற்றும் குகைகளிலும் செதுக்கி வைக்கப்பட்ட பழமையான ஒன்றாகும்.

இந்த சின்னத்தை உலக நாடுகள் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட சின்னமாக அறிஞர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். சரி வாங்க இந்த அடையாளத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வதால் என்ன நன்மை கிடைக்கும் என பார்க்கலாம்.

🇬🇪
இந்த சின்னம் நாம் மனதார கும்பிடும் கணபதியின் இடது கையில் பெயர்க்கப்பட்டு இருக்கும். இந்த சின்னம் கடவுளின் இருப்பிடம் என்றழைக்கப்படுகிறது. அதாவது இந்த ஸ்வஸ்திகா சின்னம் தெய்வங்கள் வசிக்கும் இடமாகும். இந்த ஸ்வஸ்திகா அடையாளம் வரையப்பட்ட இடத்தில் செல்வமும் செழிப்பும் பொங்கிப் பெருகும்.



எதிர்மறை ஆற்றலை அழிக்க...
ஸ்வஸ்திகா நம்மை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றலை அழிக்கக்கூடியது. வாஸ்து சாஸ்திரம் படி இந்த அடையாளத்தை நல்லதுக்கா வீட்டில் வைப்பார்கள். வீட்டில் அதிர்ஷ்டத்தையும் நிம்மதியையும் கொடுக்க வல்லது.


சமண மதத்தின் ஏழாவது துறவி ஸ்வஸ்திகா அடையாளத்தை குறிப்பிடுகிறார். இந்த அடையாளத்தில் குறிப்பிட்டுள்ள நான்கு கைகளும் கடிகார திசையில் இருப்பது நான்கு மறுபிறப்பு இடங்களை குறிக்கிறது என்கிறார். நம் மறுபிறப்பு என்பது இவ்வுலகில் மிருகமாகவோ அல்லது தாவரமாகவோ இருக்கலாம் அல்லது நரகத்தில் அல்லது பூமியில் அல்லது ஆன்ம உலகில் இப்படி நான்கு உலகை குறிக்கிறது என்கிறார்.


தற்போது நினைத்தால் கூட உலகமே அஞ்சி நடுங்கும் மாவீரன் அடால்ப் ஹிட்லரின் கூற்றுப்படி இந்த ஸ்வஸ்திகா அடையாளம் 'ஆர்ய மனிதனின் வெற்றிக்கான போராட்டத்தின் குறிக்கோளை குறிப்பதாக' தன்னுடைய நாஜி கட்சி கொடியில் அடையாளமாக்கப்பட்டுள்ளது என்றார். இந்த அடையாளம் தங்களுடைய படைப்பாற்றல் மூலம் வெற்றியை தக்க வைக்கும் அற்புதமான அடையாளமாக உள்ளது என்பதால் தன் போராட்ட கொடியில் பதித்தார்.
🇬🇬
பொறிக்க வேண்டிய இடங்கள்...
இந்த அடையாளத்தை உங்கள் வீட்டின் நுழைவு வாசல், கல்லாப் பெட்டி, பணப்பெட்டி, கணக்குப் புத்தகங்கள், பூஜை அறை போன்றவற்றில் பொரித்து வைக்கலாம். சகல இடங்களிலும் மங்களகரமான சின்னமாக இது விளங்கும்.
13


தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 ஆண்டுகளாக இருக்கலாம்.
மூவகைச்சுட்டொலிகளிலிருந்து
சொற்கள் தோன்றியதே தமிழமொழியின் முதல் தோற்றமாகும். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக்
கருத்தில் கொள்ளுங்கள்.

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம். தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம்.
திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர்
போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர்
எழுதிய “முதற்தாய் மொழி”
வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர். குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் –
கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும்
ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென்
ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன
நாடு
5. கிழக்கில் – பர்மா,
மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத்தொடர். இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில்
தொடங்கி தென்னாப்பிரிக்காவில்
முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும். இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் தமிழ் நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க்கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பினர் என்பதே உண்மை. இதற்கு சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

குமரிக்கண்டப்பழங்குடிமக்கள் தமிழர்களே!
குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே.. அம்மொழியும் தமிழ் மொழியே.. கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து
நாசமாக்கியது.

நான்கு பெருங்கடல்கோள்கள்:

1. முதல் சங்கம் –
தென்மதுரை – கடல்
கொண்டது.

2. இரண்டாவது –
நாகநன்னாடு – கடல்
கொண்டது.

3. மூன்றாவது இடைச்சங்கம்
– கபாடபுரம் – கடல்
கொண்டது.

4. நான்காவது –
காவிரிப்பூம்பட்டிணம் –
கடல் கொண்டது.

சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது. தொல்காப்பியம் பழந்தமிழ்நாட்டில் வாழ்ந்த
குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம். தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ்மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நான்கு முறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.

மூன்று தமிழ் :
தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக்
கொள்ளலாம்.
1. பழந்தமிழ்
2. இடைக்காலத்தமிழ்
3. தற்காலத்தமிழ்.

1. பழந்தமிழ் (Ancient Tamil)
உட்பிரிவுகள் மூன்று.
அ. முன்பழந்தமிழ் –
தொல்பழந்தமிழ் Early ancient
Tamil (or) Proto Ancient Tamil
ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval
Ancient Tamil
இ. பின்பழந்தமிழ் – Later Ancient
Tamil.

2. இடைக்காலத் தமிழ் (Medieval
Tamil) உட்பிரிவுகள் மூன்று.
அ. முன் இடைக்காலத் தமிழ்
– Early Medieval Tamil
ஆ. மத்திய இடைக்காலத்
தமிழ் – Medium Mediaval Tamil
இ. பின் இடைக்காலத் தமிழ் –
Later Medieval Tamil.

3. தற்காலத் தமிழ் (Mode Tamil)
உட்பிரிவுகள் மூன்று.

அ. முன் தற்காலத் தமிழ் – Early
Mode Tamil
ஆ. மத்திய தற்காலத் தமிழ் –
Medium Mode Tamil
இ. பின் தற்காலத் தமிழ் – Later
Mode Tamil.

தொல்பழங்காலத்தில் தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல, அன்றைய குமரிக்கண்டமாகிய பழந்தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது. தமிழினம் மற்றும் மொழிச்
சிதைவு உலகெங்கும் தன்னிகரற்ற பேரரசனாக கொடிகட்டிப் பறந்த தமிழினமும், அவன் தாய் மொழியாகிய தமிழ் மொழியும், நான்குமுறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்களால் அழிவுற்றது. அப்பெரும் கடல் கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே பேரழிவுகளால் மலை மடுவானது, உலகின் பல நாடுகள் அழிவுற்றன. உயிரினங்கள் மாண்டன, மொழிகளும் சிதைவுற்றன. அவ்வாறே குமரிக்கண்டமும் நீரில் மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின் மரபு, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து நாசமாகியது. உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம் பெற்றது. வரலாற்றுச் சான்றுகள் வரலாறு பலவகை உண்டு. அவற்றில் மொழிவரலாறும் ஒன்று. மொழி வரலாறு என்பது மொழியின் தோற்றம், வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின் மாற்றங்கள், பிறமொழிக்கலவை, வரிவடிவ
மாற்றங்கள் இப்படிப் பலமொழிச் செய்திகளை நமக்குத் தருவது மொழி வரலாறு. ஒரு மொழியின் வரலாற்றைப் படைக்க, சான்றுகளே முக்கியப்பங்கேற்கிறது. சான்றுகளின்றிப் படைக்கப்படும் வரலாறுகள் வரலாறுகள் அல்ல, அவைகள் கதைகளாகக் கருதப்படும். தமிழ் மொழி வரலாற்றுச் சான்றுகள் மொழிகள் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தமிழ் மொழியின் ஆய்வினைக் கொண்ட பேரறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள், பிறமொழிக் கல்வெட்டுக்கள், அயல்நாட்டினர் குறிப்புகள், நடுகற்கள், அரசுச் சாசனச் செப்பேடுகள், தொல்பொருட்களின் மீது எழுதப்பட்ட வரி வடிவங்கள் போன்ற பல மொழி வரலாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தி மொழி வரலாற்றைப் படைக்கின்றனர். ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள் ஒரு வரலாற்றைப் படைக்க, ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்த கொள்ள, ஒரு மொழியை அறிந்துகொள்ள அடிப்படையாக அமைவது ஆற்றுச் சமவெளி நாகரிகங்களே.. இத்தோடு ஒத்துழைப்புத் தருபவைகள் மொழி
இலக்கணங்களும், இலக்கியங்களும், அனைத்து விதமான ஆதாரங்களைக் கொண்டு உலக வரலாற்றைக் கண்டறிந்த ஆய்வு நிபுணர்கள், மொழிவரலாற்றையும்
கண்டறிந்துள்ளனர். மொழிகள் தோன்றிய காலம் எதுவென்று சரிவரக் கூறமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது.
14


மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். ஆனால் இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும்.

சனி தோஷம்:
மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.

வாஸ்து தோஷம்:
வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.

அலமாரி:
நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யுமாம்.

எதிர்மறை ஆற்றல்கள்:
மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

அலுவலக இடம்:
ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.

பூச்சிகள் வராது:
மயில் இறகு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதுவும் இதனை வீட்டின் சுற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.

அன்யோன்யம் மற்றும் புரிதல்:
திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.
15
நகைச்சுவை - Jokes / Why Women Need a Husband?
« Last post by MysteRy on June 23, 2026, 02:06:10 PM »



A Woman goes to a Psychiatrist and complains:
“I don't want to marry. I am educated, independent, and self-sufficient. I don't need a husband. But my parents are asking me to marry. What do I do?”

The psychiatrist replied: “YOU, undoubtedly will achieve great things in life. But somethings inevitably will not go the way you want. Somethings will go wrong. Sometimes you will fail. Sometimes your plans won't work. Sometimes your wishes will not be fulfilled. Then who will you blame? Will you blame Yourself?”

Woman: “NO...”

Psychiatrist: “Yes... That's why you need a husband “...

😜
16
18
{Athiradikaaran
Machaan machaan machaandi
Avanukkellamae
Utcham utcham utchamdi} (2)


Sanana mananana
Sananana manasa
Sanana mananana jaja jaja

Rathee thee thee thee
Jaga jodhi jodhi jodhi
Thalaa paa thee
Vedi jaadhi jaadhi jaadhi
Adi billa ranga baasha than
Ivan pistol pesum besha thaan
Rathee…. thee

Sutta takka takkaa
Dammaal dummeel
Paanja saanja kaanja menja
Thonja maanja jaa jaa jaa jaa

Rathee thee thee thee
Jaga jodhi jodhi jodhi
Thalaa paa thee
Vedi jaadhi jaadhi jaadhi

Avan billa ranga baasha than
Ivan pistol pesum besha thaan
Male : Rathee thee
Chorus : Sutta takka takkaa
Dammaal dummeel

Thil thikk thil ah ah ah
Thil thikk thil ah ah ah
Male : Thil thikk thil
Thendral nenjil
Thithikkira andril kunjil
Jil jall jil ginger pennil
Jillendroru jin than kannil

Dhadhaa thottu konja thotha
Chittu chikkuthae sokkuthae
Oru shoocku yerum padu shocka
Thotta onnu renddu potta
Ponnu thulluthae kolluthae
Vedi vettu poda vizhum flataa

Male : Gun gun enn stenn gun
Roger moore pole
Munnaal pennundu
Endhan pinnaal kannundu paar
Female : Fun fun unn love fun
Eddy murphy poll naughty
Male : Nee endhan maan thaan
Naan than don than


Athiradikaaran
Machaan machaan machaandi
Avanukkellamae
Utcham utcham utchamdi

Rathee thee thee thee
Jaga jodhi jodhi jodhi
Female : Thalaa paa thee
Vedi jaadhi jaadhi jaadhi

Adi billa ranga baasha than
Ivan pistol pesum besha thaan
Rathee thee
Chorus : Sutta takka takkaa
Dammaal dummeel
Paanja saanja kaanja menja
Thonja maanja jaa jaa jaa jaa

Thadhimi theem
Thadhimi thadhimi

Man man man super man than
Midnighthula spiderman thaan
Female : NRI undhan eye thaan
James bond pol seyyum spy thaan

Cuba pola oru theeva
Ponnu nikkuthae mukkuthae
Male : Endhan tension erum romba fasta
Castro pola indha maestro
Sondham kollava killava
Indha first night enna waste-ah

Bun bun ne sweet bun
Butter jam polae naandhaan
Undhan melae thaan
Naan otti kolladhaan vaa

One two three four five
Mutham thandhaalae thaen thaan
Female : Enn anbae my fair lady
Needhaan

Athiradikaaran
Machaan machaan machaandi
Avanukkellamae
Utcham utcham utchamdi

Rathee thee thee thee
Jaga jodhi jodhi jodhi
Thalaa paa thee
Vedi jaadhi jaadhi jaadhi

Ada billa ranga baasha than
Ivan pistol pesum besha thaan
Male : Rathee thee
Chorus : Sutta takka takkaa
Dammaal dummeel
Paanja saanja kaanja menja
Thonja maanja jaa jaa jaa jaa

Byeee…..



NEXT LINE :

Aiyaiyooo what shall i do
Tell me what to do
Ammammoo what can i do
I am mad after you
 


19
History / Re: Nikola Tesla Legacy
« Last post by MysteRy on June 23, 2026, 01:35:03 PM »


Tesla coil demonstrations are a captivating spectacle found in science museums, showcasing the fascinating principles of electricity and magnetism. These electrifying displays not only entertain but also ignite curiosity in young minds, encouraging a new generation to explore the wonders of science and technology.
20
History / Re: Nikola Tesla Legacy
« Last post by MysteRy on June 23, 2026, 01:34:09 PM »


In a series of public demonstrations, Tesla showcased the innovative use of compact oscillation transformers to power wireless lamps. This groundbreaking technology highlighted the potential of wireless energy transmission, showcasing the fusion of science and illumination in an extraordinary display of engineering marvel.
Pages: 1 [2] 3 4 ... 10