Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11

Today's Morning FTC Main Vibe

Wow... what a lovely day!
Happiest morning to everyone!

இன்றைய காலை FTC-யின் vibe ரொம்பவே special.
உண்மையாகச் சொன்னால், இன்று மனசு நிறைய
சந்தோஷமாக இருந்தது.

இன்று காலை எங்களோடு வந்து,
chat செய்து, சிரித்து, நேரத்தை அழகாக்கிய
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
உங்களுக்காக ஒரு சிறிய special message...

இன்று நிறைய guest IDs-ல இருந்துகூட பலர் வந்து பேசினார்கள். வந்த ஒவ்வொருவரும் சந்தோஷமாக சிரித்து, ரசித்து பேசும்போது, மனதின் ஆழத்தில் ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

காலை மட்டும் அல்ல... FTC-யில் எந்த நேரமாக இருந்தாலும், எல்லோரும் மகிழ்ச்சியாக, ஜாலியாக, பாதுகாப்பாக chat பண்ணுங்கள். ஒவ்வொரு நாளையும் இனிமையாக வாழுங்கள்.

கோபமாக இருக்கிறீர்களா?
சோகமாக இருக்கிறீர்களா?
யாரிடமாவது சண்டை போட்டு பேசாமல் இருக்கிறீர்களா?

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்... இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்க முடியும்? இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் இல்லை. ஆனால் நாம் கொடுக்கும் அன்பு, நாம் பகிரும் புன்னகை, நாம் உருவாக்கும் நல்ல நினைவுகள் மட்டும் என்றும் மனதில் வாழும்.

அதனால்...
மன்னிக்க முடிந்ததை மன்னித்துவிடுங்கள்.
பேச முடிந்தவர்களிடம் பேசிவிடுங்கள்.
சிரிக்க முடிந்த நேரத்தில் மனம் திறந்து சிரியுங்கள்.
அன்பு காட்ட தயங்காதீர்கள்.

FTC என்பது வெறும் chat room அல்ல... பலரின் மன அழுத்தத்தை குறைத்து, தனிமையை மறக்க வைத்து, தினமும் புன்னகைக்க வைக்கும் ஒரு குடும்பம்.

எப்போதும் இதே அன்போடும், ஒற்றுமையோடும், மரியாதையோடும் பயணிப்போம்.

இன்றைய நாளை சந்தோஷமாக தொடங்குங்கள்...
உங்கள் புன்னகை இன்னொருவரின் மகிழ்ச்சிக்குக் காரணமாகட்டும்.

With love,
Natpudan JSB

#ElanRusk#Lydia#Tamil1Sg#Tamil#Jillu#innum niraiya users nyabagam illai sorry friends#Thanks alot.
12
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 06:21:47 AM »
13
Hi FTC Team!

15 ஆண்டு விழா காணும் ftc க்கு என் இனிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

நான் கேட்க விரும்பும் கேள்வி

FTC குழு சந்தித்த மிகப் பெரிய சவால் என்ன? அதை எப்படி சமாளித்தீர்கள்?
இந்த ஆண்டு விழாவில் புதிய திட்டங்கள் அல்லது அறிவிப்புகள் உள்ளனவா?

நன்றி
14
"இந்த உலகமே ஒருநாள் என்னைக் கைவிட்டாலும், எனக்கு பயம் இல்லை. ஏன்னா, என்னோட கையைப் பிடிச்சுக்கிட்டு நடக்க ஒரு சின்ன கை இருக்கு... அது என் குழந்தையோட கை.
என் வாழ்க்கையில எனக்குன்னு எல்லாமுமா இருக்குறது என் குழந்தைதான்.
அவ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியாது. உண்மையா சொல்லணும்னா, அவ இல்லனா நான் வாழ்றதுக்கே எந்த அர்த்தமும் இல்லை.
அவ மூச்சு... அவ சிரிப்பு... அவ அழுகை... இதெல்லாம் தான் என்னை இன்னும் உயிரோட நடக்க வைக்குது.
சில நேரங்கள்ல ரொம்ப சோர்வா இருக்கும். 'இனிமேல் என்னால முடியாது... போதும்...'ன்னு தோணும்.
அந்த நேரத்துல என் குழந்தை வந்து என்னைக் கட்டிப்பிடிக்கிற அந்த ஒரு நொடி... எல்லாத்தையும் மறக்க வச்சிடும். ஒரு வார்த்தை கூட பேசாம, 'நான் இருக்கேன்ம்மா...'ன்னு சொல்லுற மாதிரி இருக்கும்.
அவ கொடுக்குற ஒரு முத்தம்... ஒரு அணைப்பு... ஒரு 'அம்மா'ன்னு கூப்பிடுற குரல்... அதுதான் என்னை மறுபடியும் எழுந்து நிற்க வைக்குது.
ஒரு காலத்துல வாழ்க்கையை வெறுத்த நான், இன்று வாழ்க்கையை பிடிச்சு வாழணும்னு நினைக்கிறதுக்கு ஒரே காரணம் என் குழந்தைதான்.
அவளோட பிஞ்சு சிரிப்பும், அவ கொடுக்குற சின்ன முத்தமும், எனக்கு ஆயிரம் யானை பலத்தைக் கொடுக்குது.
நான் அழுவேன்... நான் சோர்வடைவேன்... சில நேரம் உடைஞ்சு போவேன்...
ஆனா, என் குழந்தைக்காக ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து நிற்பேன்.
இந்த உலகம் என்னைப் புரிஞ்சிக்கலன்னாலும் பரவாயில்லை.
என் குழந்தை மட்டும் 'அம்மா'ன்னு என்னை அணைச்சுக்கிட்டு சிரிச்சா... அதுவே என் வாழ்க்கை. அதுவே என் சந்தோஷம். அதுவே நான் இன்னும் உயிரோட இருக்குறதுக்கான ஒரே காரணம். ❤️
15
super.Thanks jsb sis :)
16
Thanks jsb sis :)
18
Friends Tamil Chat Team Conveys 🎁 Birthday (15- JULY 2026) wishes 🎁 to our lovable friend⭐ Mr. NYRMAL⭐ and wishes him Good Luck.


19
இசையின் நித்திய நாயகி – எஸ். ஜானகி!
                        1938-2026



இந்திய திரையிசை உலகில் காலம் கடந்தும் ஒலித்துக்கொண்டிருக்கும் இனிய குரலின் சொந்தக்காரர் எஸ். ஜானகி.
ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த அவர், சிறு வயதிலிருந்தே இசையின் மீது அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த ஆர்வமே அவரை பின்னணி பாடகியாக உயர்த்தியது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் அழியாத இடத்தைப் பெற்றார்.

சிங்கார வேலனே தேவா", "செந்தூரப் பூவே", "சின்னச் சின்ன வண்ணக் குயில்", "கண்மணி அன்போடு", "தென்றல் வந்து தீண்டும் போது", "சின்னத் தாயவள், இஞ்சி இடுப்பழகி", "புத்தம் புது காலை", "மலர்களிலே ஆராதனை", "மௌனமான நேரம்", "காற்றில் எந்தன் கீதம்"

போன்ற பாடல்கள் இன்றும் வானொலிகளிலும், மேடை நிகழ்ச்சிகளிலும், இசை ரசிகர்களின் இதயங்களிலும் புதிதாய் மலர்கின்றன. ஒவ்வொரு பாடலிலும் உணர்ச்சியை மட்டுமல்ல, உயிரையே கலந்து பாடியதால், அவரது குரல் காலத்தைத் தாண்டி நிலைத்திருக்கிறது.

இசை உலகில் பல சாதனைகள் படைத்திருந்தாலும், புகழைத் தேடி ஓடாமல், இசையையே தனது வாழ்க்கையாகக் கொண்டவர் எஸ். ஜானகி. புதிய பாடகர்களுக்கு ஊக்கமளித்து, இசையை நேசிப்பவர்களுக்கு ஒரு வாழும் பல்கலைக்கழகமாக திகழ்ந்தார். அவரது குரல் தலைமுறைகள் மாறினாலும் மங்காத நிலவொளியைப் போன்றது; கேட்கும் ஒவ்வொரு முறையும் புதிய உணர்வை பரிசளிக்கிறது.

இன்று எஸ். ஜானகி என்ற பெயர் ஒரு பாடகியை மட்டும் குறிக்கவில்லை; அது இசையின் இனிமை, உணர்வின் ஆழம், எளிமையின் உயரம், காலத்தால் அழியாத கலைப்பொக்கிஷம் என்பதற்கான அடையாளமாக விளங்குகிறது. அவரது பாடல்கள் ஒலிக்கும் வரை, தமிழ் இசையின் இதயத் துடிப்பாக எஸ். ஜானகியின் குரல் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.



***Joker***[/


20

பிரசவ அறைக்கு போறதுக்கு முன்ன
என்னால முடியும்ன்னு நம்பிக்கையா போறதும் - பின்னால
அய்யோ என்னால முடியலன்னு கூவுறதும்
தாயான எல்ல்லோரும் அனுபவிக்கும் வலி தான்....

பிரசவ அறையில் அரைமயக்கத்தில்
அம்மாவாய் மறுஜனனம் எடுத்தவளுக்கு
ஆணா பொண்ணான்னு கேக்கத்தோணாம
சுகப்பிரசவம் ஆனதே போதும்ன்னு கொஞ்சம் இளைப்பாருவாள் ..

தன் உதிரத்தில் உருவான உயிரை
உச்சி முகர்ந்து உடலோடு ஒட்டி அணைக்கயிலே
பட்ட வலியெல்லாம் பஞ்சா பறந்து போகும்
பிஞ்சு முகம் பார்த்த நொடி வாழ்வில் பிடிப்பு வரும்....

உதிரம் பிழிந்து உயிர் கொடுத்து உலகை மறந்தவள்..
பெற்றோர் உற்றோர் என அனைவரையும் மறந்து
என்ன பெத்த சாமின்னு சொல்லி
அவள் உலகமே நீ என என்றும் வாழ்வாள்..

நீ சிரிச்சா சிரிக்கவும்...நீ அழுதா துடிக்கவும்...
பெத்தவள விட்டா யாரிருக்கா உனக்கு..
உயிர் கொடுத்த அவளவிட -உலகில்
 உயர்ந்ததென்ன இருக்கு நமக்கு .......
Pages: 1 [2] 3 4 ... 10