Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
Hi
Movie: Beast
Song:Jolly o gymkhana
Lines:Athanaiyum ponaalum
Empty-aathan ninnalum
Padharaama irundhaa
Ada beast-u nee dhaanda

Polamburavan thamaasu
Edhuthu ninnaa nee maasu
Manasil onnu ninachaa
Adha nadathanum nanba – Confirm

I like this song because the lyrics are very motivating. It tells us to stay calm without getting confused, not to be afraid of anyone, and not to complain. It says that if you work boldly and confidently, without fear, you will definitely succeed. That motivation is the reason I like this song.
Thanku
LUMINOUS 💚🧡💛💜😇
12
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:40:35 AM »
13
Hii isai thendral team
    This week my choosen song is
Song Name : Laali Laali
Movie Name : Theeran Adhigaaram Ondru
Starring : Karthi, p
Music : Ghibranp
Lyrics : Raju Murugan
Singers : Ghibran, Sathyaprakash, Pragathi Guruprasad

Fav line :Mella mella.. ennuyiril..
Unnuyirum asaiyudhae..
Thulla thulla ennidhayam..
Nammuyirul niraiyudhae..
Laali laali.. nee en thooli thooli.. Unnai alli yendhiyae..
Oru yugam pogava..
Thalaimudhal kaalvarai..
Panividai parkava..
Laali laali.. naanum thooli thooli..
Thanku ❤️love u guyss
14


பாடகா்கள் : ஹரிஹரன், க்ரிஷ், நகுல்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய் வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக்கொண்டு வந்தாய்

குழு : …………………………

ஆண் : மஞ்சள் வெயில்
மாலையிலே மெல்ல
மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் காட்டுதே

ஆண் : தயக்கங்கள்
விலகுதே தவிப்புகள்
தொடருதே அடுத்தது
என்ன என்ன என்றேதான்
தேடுதே

குழு : வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய் வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக்கொண்டு வந்தாய்

ஆண் : உலகத்தின்
கடைசிநாள் இன்று
தானா என்பது போல்
பேசிப்பேசித் தீர்த்த
பின்னும் ஏதோ ஒன்று
குறையுதே

ஆண் : உள்ளே ஒரு
சின்னஞ்சிறு மரகத
மாற்றம் வந்து குறுகுறு
மின்னல் என குறுக்கே
ஓடுதே

குழு : வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய் வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக்கொண்டு வந்தாய்

ஆண் : மஞ்சள் வெயில்
மாலையிலே மெல்ல
மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் காட்டுதே

ஆண் : தயக்கங்கள்
விலகுதே தவிப்புகள்
தொடருதே அடுத்தது
என்ன என்ன என்றேதான்
தேடுதே

ஆண் : வண்ணங்கள்
வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சில
நடக்கிறார் நடக்கிறார் ஆ
மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்து பெய்து மழை
நனைகிறார் நனைகிறார்

ஆண் : யாரோ யாரோ
யாரோ அவள் ஹே
யாரோ யாரோ யாரோ
அவன் ஒரு கோடும்
கோடும் வெட்டிக்கொள்ள
இரு தண்டவாளம்
ஒட்டிச்செல்ல

குழு : வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய் வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக்கொண்டு வந்தாய்

ஆண் : இன்னும் கொஞ்சம்
நீள வேண்டும் இந்த நொடி
இந்த நொடி எத்தனையோ
காலம் தள்ளி நெஞ்சோரம்
பனித்துளி

ஆண் : நின்று பார்க்க
நேரம் இன்றி சென்று
கொண்டே இருந்தேனே
நிக்க வைத்தாள் பேச
வைத்தாள் நெஞ்சோரம்
பனித்துளி ஓஹோ ஹோ

குழு : தத் தர தா தர
தா தர ரா ரா ரா ஓஹோ
தத் தர தா தர தா தர ரா
ரா ரா தத் தர தா தர
தா தர ரா ரா ரா தத் தர
தா தர தா தர ரா ரா ரா


15


பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் ஆபாவாணன்

இசையமைப்பாளர் : மனோஜ் – கியான்

ஆண் : தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா….
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா…
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா….

ஆண் : உரிமை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா….
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா……

ஆண் : தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா….

ஆண் : விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

ஆண் : உரிமை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா…..
குழு : உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா…..

ஆண் மற்றும் குழு :
தோல்வி நிலையென நினைத்தால்….
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா….

குழு : விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

ஆண் : யுத்தங்கள் தோன்றட்டும்
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா…
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா…..

குழு : உரிமை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா….
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா…

ஆண் மற்றும் குழு :
யுத்தங்கள் தோன்றட்டும்
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா…..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா….


16
     எனது முதல் ரயில் பயணம்   எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நெடும் தூரம் ரயிலில் பயணம் செய்தது இல்லை. என் முதல்  பயணமே நான் கல்லூரி முடித்து  வேலைக்குச் சென்று மூன்று வருடங்களுக்கு பின்பு தான் .அப்பொழுதும் எனக்கு சிறிது மனதில் பதற்றம் கலந்த அச்சத்துடனே  இருந்தேன்.

     எனது நண்பர் அவரின் வீட்டிற்கு அழைத்து செல்ல என் முதல் பயணம் தொடங்கியது. ரயிலில் முன்பதிவு மற்றும் முன்பதிவு ஸ்லீப்பர் ஆக  ரயில் பெட்டிகள்  நிறைய நிறைய இருந்தது .அதெல்லாம் புரியாமலே சென்ற நாள் அது .எங்களுக்கு  ரயில் மாலை 5:30  .எங்களுக்கு  அலுவலகம்  4  மணிக்கு  செல்வதற்கு அனுமதி வழங்கியது.

நாங்கள் பேரூந்தில் சென்றால் தாமதம்  ஆகும் என்று எண்ணி ,மோட்டார் சைக்கிளில் சென்றோம். தாமதம் ஆக  கூடாது என்று ஆர்வத்தில்  என் நண்பர் முன்பதிவு செய்த டிக்கெட்  எடுத்து தன் கரங்களில் வைத்து இருந்தார்.எனக்கு முதல் தடவை என்பதால் எனக்கு எந்த தடம் என்பதும் தெரியாது.

    நாங்கள் மோட்டார் சைக்கிளை எழும்பூர் ரயில் நிலையத்தில் வாகனம்  நிறுத்தும் இடத்தில்  நிறுத்திவிட்டு  கிளம்பலாம் என்று  பார்த்தால், பார்க்கிங் வாகனங்களால் நிரம்பி விட்டது. பார்க் பண்ண முடியாது னு சொல்லிட்டாங்க .உடனே பைக்கை எடுத்து மெட்ரோ பார்க்கிங் ல போட்டோம்.

    நேரம் இப்போ 5 .10 ஆகியது .உடனே ரயில்வே  ஸ்டேஷனில் எங்கே ரயில் னு எந்த ப்ளட் போரம் னு  தேடிட்டு இருந்தோம்.  டிக்கெட் ல பிளாட்போம் 5  என இருந்தது.ஆனால்  டிஸ்பில்  அந்த ரெயில் இல்லை .அறிவிப்பிலும் வரவில்லை நேரம் 5:18 ஆகியது. நான் டிக்கெட் காட்டுங்க னு என் நண்பரிடம் கேட்டேன் .அவரு கொடுத்தார் .நான் பார்த்ததும் ஷாக் ஆனேன் என மச்சி இதுல சென்னை செண்டரில் டு ஈரோடு னு போட்டு இருக்கு. எழும்பூர் ல இருக்கோம் னு கேக்க அவர் சொன்னாரு மச்சி நான் திருச்செந்தூர் போற ஞாபகத்தில் இங்க வந்தேன் னு .

   நேரம்  5.20 ஆகிவிட்டது. என்ன பண்ணலாம் பைக் வேற பார்க்கிங்கில் போட்டோம். அது எடுத்து எழும்பூரில்  இருந்து சென்றால் கூட ரெயில  பிடிக்க முடியாது. லோக்கல் ரெயில் பிடிக்கலாம் என்று  பார்த்தால்  எப்படியும் லேட்டா ஆகிடும். உடனே யோசிச்சோம் மெட்ரோல போய்டுவோமானு .அவரும் போவோம் என்று  சொன்னாரு .மெட்ரோ கு பொய்  டிக்கெட் வாங்கி 5 நிமிடத்தில் மெட்ரோ ரயில் வந்த உடனே "இரு ஓடு ஓடு ஓடு "னு ஓடி 5:30 க்கு ரெயில  பிடித்த உடனே புறப்பட்டது.  ரயில் பயணம் மறக்கவே முடியாது என் நண்பனுக்கும் எனக்கும் சிரிப்பு. என்னடா பண்ணி வச்சிருக்கா? இதுக்கு மேல உன்ன நம்பி வருவேனா? ரெயில நினைத்த படி இனிதே சென்றது முதல் ரயில் பயணம்...
17
நெஞ்சம் மறப்பதில்லை நினைவுகள் பேசும் இடம்
என்ற அந்த அழைப்பு வந்த கணமே,
என் உள்ளத்தின் ஆழத்தில் உறங்கியிருந்த
ஒரு நினைவு
மெல்ல கண் திறந்தது.
இதோ… இதுவே சரி,
என் வாழ்க்கையின் ஒரு சிறு சாளரம்
இதன் வழியே சொல்லலாம் என்று
இதயம் தீர்மானித்தது.
ஆனால் காலம் மட்டும்
என் தீர்மானத்தைவிட
வேகமாய் நகர்ந்தது.
ஆர்வம் நெஞ்சை நிரப்பியது,
ஆனால் விரல்களின் வேகம்
அந்த உணர்வைத் தொடர்ந்து
ஓட முடியாமல் தளர்ந்தது.
எண்ணங்கள் சொற்களாக
வடிவெடுக்கும் முன்னரே,
ஆறு கதைகள்
ஒலியாக மாறி
காற்றில் கலந்துவிட்டன.
நான் ஏழாவது…
மேடை ஏறாத ஒரு கதை,
ஒலிக்கப்படாத ஒரு நினைவு.
ஆனால் என் நெஞ்சத்தில்
அது முழுமையாய்
வாழ்ந்துகொண்டிருந்தது.
அப்போதுதான் உணர்ந்தேன்.
நினைவுகள் பேச
வெளிப்புற ஒலிகள் அவசியமில்லை.
அவை உள்ளத்தில்
வேர் ஊன்றினால்,
மறப்பின் எல்லையை
என்றும் கடக்காது.
FM வாசிக்காத அந்த குரல்
ஒரு நாளும் மங்கவில்லை.
அது இன்று வரை
என் நெஞ்சத்தின் ஓரத்தில்
மௌனமாய்,
ஆனால் மிக அழகாய்
பேசிக்கொண்டே தான் இருக்கிறது.
LUMINOUS 😇💜💛🧡💚
18
நான் சின்ன வயசுல ரொம்ப train-ல போனதில்ல… ரேர்-ஆ தான் போவோம்.
ஒரு தடவை family-யோட கும்பகோணம் போகும்போது நடந்த சம்பவம் இது.
எதிர்ல ஒரு family உட்கார்ந்திருந்தாங்க. அப்பா, அம்மா, இரண்டு பசங்க, ஒரு பையன், ஒரு பொண்ணு. என் age-தான் இருக்கும், height-உம் same. அப்போ எனக்கு வயசு சுமார் 6 இருக்கும். நான் அப்போ ரொம்ப சேட்டை…
ஒரு நிமிஷம் கூட அமைதியா இருக்க மாட்டேன்.
எதையாவது பேசிட்டே இருப்பேன், இங்க ஓடுவேன், அங்க ஓடுவேன்…
என்னை சமாளிக்குறது mummy-க்கு ரொம்ப கஷ்டம். எப்பவும் திட்டுறது தான்,
சில நேரம் அடி கூட விழும் 😄 ஆனா எதிர்ல இருந்த அந்த family-யை பாருங்க…அவங்க பசங்கள ஒருபோதும் அடிக்கல, திட்டல. ரொம்ப அன்பா பார்த்தாங்க. நிறைய snacks கொடுத்தாங்க, என்னோடையும் பேசிட்டு, விளையாடிட்டு வந்தாங்க.
அதைப் பார்த்து எனக்கு ஒரே feeling…
அந்த family-யோட mummy ரொம்ப பிடிச்சு போச்சு.
Daddy-கிட்ட போய்,
“நாம அந்த mummy-யை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா?”
ன்னு சொல்லி அழுதேனாம் 😆
Daddy, mummy எல்லாம் என்னை சமாதானம் பண்ண முயற்சி பண்ணினாங்க.
இப்போ கூட அந்த incident-ஐ
Daddy-கிட்ட சொல்லுவேன்.
அப்பவே அந்த mummy-யை கூட்டிட்டு போகலாம்னு சொன்னேன்,
இந்த mummy-யை train-லேயே விட்டுடலாம்னுன்னு சொல்வேன்.
அவர் சிரிச்சுக்கிட்டே,
நான் கேக்கல, அது என் தப்புதான் பாப்பான்னு சொல்வார்.
அதை நினைச்சாலே இன்னைக்கும் சிரிப்பு வருது.Mummy-கிட்ட சொன்னா,
அவங்க சிரிச்சுக்கிட்டே,
அந்த train-லேயே என்னைத் தொலைச்சிருந்தா,
நீ ரொம்ப happy-யா இருந்திருப்பாளாம்...
ன்னு சொல்லுவாங்க.
அதை கேட்டு நானும், எதுவுமே சொல்லாம
சிரிச்சுக்கிட்டே ஓடிப்போவேன் 😄
இதுல இருந்து பெரிய கருத்து எல்லாம் எதுவும் இல்ல.
ஆனா என் life-ல இது ஒரு super fun moment.
Daddy-mummy fight வந்தாலே,
இந்த story-யை எடுத்துச் சொன்னா போதும்
உடனே சிரிச்சு சமாதானம் ஆகிடுவாங்க.
அதனால்தான்…
என் வாழ்க்கையில இருக்குற  நல்ல, positive-ஆன incident
இங்க share பண்ணினேன்.
படிச்ச எல்லாருக்கும் thanks 😊
LUMINOUS 💚🧡💛💜😇
19
நான் என் அம்மாவின் கருவில் இருக்கும் போதே என் ரயில் பயணம் ஆரம்பித்தது.தூர இடங்களுக்கு செல்லும்போது அம்மா ரயிலில் தான் பயணித்தார்.ரயில்வே அலுவலகத்தில் டிக்கெட்டை பெற்றுக் கொண்டு,அந்தக் கடவையில் டிக்கெட்டை touch பண்ணார்.கடவை திறக்கப்பட அம்மாவும் உள் நுழைந்தார்.அறிவித்தல் பலகையில் எத்தனையாவது platform என அம்மா நோக்கமிட்டு, "ஐயோ ரயில் வர 5 mins இருக்கே" என்று கூறியவாறு platform ஐ நோக்கி ஓடினார்.
   
    அம்மா ஓடும் போது அம்மா வயிற்றில் இருந்து நான் குதூகலத்தில் அங்கு இங்கும் புரண்டுகிட்டிருந்தேன்.ஆஹா நான் ரயிலில் போகப் போறேனே என்ற சந்தோசம் என் மனதில் துளிர்விட்டது.அறிவிப்பு ஒன்று என் காதுகளில் விழுந்தது "இன்னும் சற்று நேரத்தில் ரயில் platform ஐ நெருங்க உள்ளது".சூ-சூ என்று  விசில் எழுப்பியவாறு பெரிய ஒரு உருவம் என் கண்முன்னே!
     "என்னடா இது இவ்வளவு பெட்டிகள் இருக்கு வளைந்து வளைந்து போகுதே? பெட்டிக்குள்ளே டிரைவரை காணோம். வா அம்மா ஓடிடலாம்" என்று நான் பயந்து அலறுவது என் அம்மாவுக்கு கேட்கவில்லை.அம்மாவின் கால்கள் ரயில் பெட்டியை நோக்கி விரைந்தன.பெட்டியின் கதவுகளில் இருந்த open button press பண்ண கதவு திறக்கப்பட்டது.அம்மா இருக்கையில் அமர, அம்மாவுக்குள் நான் அமர்ந்து இரசித்தேன்.

    தண்டவாளங்களில் சக்கரங்களின் "கிளிக்-கிளாக் "ஒலியும்,ரயில் விசிலின் "சூ-சூ" ஒலியும் என் செவிகளில் இசை விருந்து அளித்து.சீக்கிரம் அம்மா வயிற்றில் இருந்து வெளிவந்து அந்த இருக்கையில் அமர்ந்து இரசிக்க ஆசைப்பட்டேன் .என் ஆசை சீக்கிரம் நிறைவேறியது.

     நான் பூமிக்கு அவதரித்து கூட அந்த இருக்கையில் அமர முடியவில்லை.health & safety என்று சொல்லி குழந்தைகள் இருக்கைகளில் அமர்வதற்கு தடை.stroller இல் அமர்ந்து இயற்கையை இரசித்து வந்தேன்.நாள் ஒரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் வளர்ந்து ஐந்து வயதை அடைந்து விட்டேன்.அந்த வயதில் அப்பாவுடன் ரயில் பயணம் மேற்கொள்வதை அதிகம் விரும்பினேன்.
 
   மனதில் எழுந்த கேள்விகள் அனைத்தையும் அப்பாவிடம் கேட்டு விட்டேன்."அப்பா இவ்வளவு பெட்டி இருக்கே ஒரு பெட்டிக்குள்ள தானே டிரைவர் இருக்கிறார்?"அப்போது அப்பா சொன்னார் "பெட்டிகள் அனைத்தும் இரும்பு வடங்களால் பொருத்தப்பட்ட தானேமா இருக்கு பயப்படாதே என்று" அப்பா "வளைந்து வளைந்து போகும் போது எதிலும் முட்டிக்காதா?" . "இல்லம்மா அதுக்கு ஏற்பதான் தண்டவாளம் பொருத்திருப்பாங்க"."கண்ணாடி வழியே பார்க்கும் போது ஏன் அப்பா எதிர் திசையில் மரங்கள் ,கட்டடம் எல்லாம் வருது"."அது சார்பு இயக்கம் தேனு"

      "ஐயோ என்னப்பா இது இருட்டா இருக்கு. எதுவும் தெரியல பயமா இருக்கு" "இது ரெயின் underground இல்  போகுதம்மா" சூப்பரா இருக்கு அப்பா.எடுத்துட்டு வந்த ஸ்நேக்ஸ் தாங்கப்பா சாப்பிட்டுகிட்டே இரசிச்சுக்கிட்டு வாரேன்.ஆஹா ரெயின்ல ஸ்நேக்ஸ் சாப்பிடுவது எவ்வளவு சந்தோஷம்.

  அப்பா என்னது எதிர்ப் பக்கம் இன்னொரு ரெயின் வருது.ஐயோ முட்டிக்க போகுதே!இல்லம்மா தண்டவாளம் track change ஆகும் பாரு .தேனு அந்த ரெயின் இல் ஏதும் வித்தியாசம் பார்த்தியா?ஆமா அப்பா.driver இல்லை அப்பா.மேலே பாரு ஒரு electric cable la train touch பண்ணிட்டே போகுதல்லவா?இது automatic electric train.

நானும் அண்ணாவும் ரெயில் ஒவ்வொரு பெட்டிக்கும் ஓடி திரிந்து விளையாடினோம்.பல விதமான மனிதர்கள் பல்வேறு தேவைகளுக்காக அந்த ரெயிலில் பயணித்தனர்.அப்பா நானும் train ட்ரைவரா வர போறேன்.என் அண்ணா "யாரும் உயிரோட இருக்கிறது பிடிக்கலையா உனக்கு" என கிண்டல் பண்ணான்.எனக்கு ரெயில் பயணம் ரொம்ப பிடிச்சிருக்கு.

  அம்மா ,அப்பா ஆரம்பித்து வைத்த ரெயில் பயணம்..... தொடர்ந்து நண்பர்களுடன் சுற்றுலா செல்ல,... பல்கலைக்கழகம் செல்ல,...என் பணிக்கு செல்ல,...அயல்நாடுகளுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள ...
என் வாழ்வில் ரயில் பயணம் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.இந்த உலகில் நான் அதிகம் விரும்பும் பயணம் ரயில் பயணம்.

20
இரயில் பயணம் என்றலே எதிர்பாராத அனுபவங்களைத் தரும் ஒரு பயணிப்பு தானே. என் வாழ்க்கையிலே  நான் சற்றும் எதிர்பாராத ஒரு நீண்ட பயணம் , புது பயணம் , இன்னும் தொடரும் ஒரு பயணம் , பல நினைவுகளைத் தரும் பயணம் இந்த FTC  பயணமே. 

🚆 அரட்டை அறையில் ஒரு இரயில் பயணம் 😄
அரட்டை அறைன்னா அது சும்மா ஒரு இணைய தளம் கிடையாது நண்பர்களே…

என்னை பொறுத்த வரையில் அது ஒரு முடிவே இல்லாத இரயில் பயணம்! 🚆

கம்ப்யூட்டர் ஸ்கிரீன்ல ஓடுற எழுத்துகள்தான் அந்த இரயிலோட பெட்டிகள்.
நிக் நேம்கள்தான் பயணிகள்.

DP இல்லாத முகங்கள், ஆனா நிறைய கேரக்டர்ஸ்.! 😄
இந்த அரட்டை இரயில், ஒவ்வொரு ஸ்டாப்பிலும் நிற்கும்…
ஒவ்வொரு ஸ்டாப்பும் ஒரு ஊர் மாதிரி.

அங்கிருந்து புதுசா சிலர் ஏறுவாங்க

👉 Hi all
👉 Good morning
👉 Any girls?
👉 Silent readers
👉 Admin irukkaara?
என சிலர் பயணத்தைத்  தொடங்குவார்கள்.

சிலர் ஜன்னல் ஓரத்துல சும்மா  நிக் பார்க் போட்டுக்கிட்டு எனக்கென்ன என்று  உட்கார்ந்திருப்பாங்க.

சிலர் ஏறின 2 நிமிஷத்துல முழு பெட்டியையும் கலகலப்பாக்குவாங்க.

சிலர் நலம் விசாரிச்சிட்டு இறங்கிடுவாங்க .

சிலர் ஏன் ஏறினோம் என்கிற குழப்பதிலே கடைசி வரை இருப்பாங்க .

சிலர் ஆஸ்தான பயணிகளாகப்  பல வருடமாய்  இதே பயணத்தில் தன்னை இணைத்துக்கொண்டுப்  பயணிக்குறாங்க   .
பலரின் பயணத்தை அழகான பயணமா மாற்றுவதில் இந்த பயணிகளின் பங்களிப்பு அளப்பரியது.
 
என்னுடைய இந்த FTC  இரயில் பயணத்தில் நான் பலவகையான மனிதர்களைச் சந்தித்துள்ளேன் .


மேதைகள்
எல்லாம் தெரிஞ்ச அறிவாளிகள்
உபதேச ஞானிகள்
காமெடி பீசுகள்
வேடிக்கை அளிப்பவர்
சும்மா வம்பு இழுக்க வந்த ரவுடிகள்
தப்பை சரியாய் புரிந்து கொண்டவர்கள்
சரியை தவறாகப் புரிந்து கொண்டவர்கள்
பாசத்தின் அதிபதிகள்
இசை பிரியர்கள்
சில CCTV என இங்க எல்லா ரக மனிதர்களும் உண்டு.


ஒரு கமெண்ட்  போட்டா,
அதுக்கு 10 மீம்ஸ்,
20 பதில்  கமெண்ட்ஸ்,
3 சண்டை,
1 பிளாக் 😜
என சிரிப்பும் கலாய்ப்பும் இங்க டிக்கெட் இல்லாம கிடைக்கும்!

சில சமயம் இந்த பயண பெட்டியில் சில நேரம் வம்பு வரும்…

“அதை அப்படி சொல்லல”
“நான் அப்படி நினைக்கல”
“நீ புரிஞ்சுக்கல”

உடனே நம்ம TTR  அவர்களை தனியே வேறு பயணப்பெட்டிக்கு அழைத்து தீர்வு வழங்கி அனுப்பி வைக்கும் வழக்கமும் உண்டு 😆

ஆனா அதுக்குள்ளேயே உதவி, ஆதரவு, ஊக்கம் எல்லாம் இலவசம் .

அது மட்டுமா , திறமைசாலிகளின் கிடங்கு எங்க  இந்த அரட்டை இரயில்.

ஒருத்தர் கவிதை எழுதுவார் ✍️
ஒருத்தர் கதை சொல்லுவார் 📖
ஒருத்தர் பாடுவார் 🎤
ஒருத்தர் RJ மாதிரி அரட்டை அடிப்பார் 😄

பிறந்தநாள் வந்தா…
முழு அரட்டை அறையும் கல்யாண வீடு மாதிரி! குதூகலமடையும் . 🎂🎉

இங்க காதலும் வரும் 💕
பெயரும் முகமும் தெரியாம,
“typing…”லேயே மனசு இணையும் அதிசயம்!
சில நட்புகள் ஒரு ஸ்டாப்பிலேயே இறங்கிடும்…
சில நட்புகள் கடைசி ஸ்டேஷன் வரைக்கும் கூடவே வரும் . ❤️💛💜

இந்த அரட்டை இரயில்,
ஒரே இடத்துல வாழ்க்கையோட எல்லா கேரக்டர்களையும் சந்திக்குற இடம்.
சிலர் ஏறுவாங்க,
சிலர் இறங்குவாங்க…

ஆனா அந்த நினைவுகள் மட்டும் மனசுக்குள்ள Always Online 😌

நம்ம வாழ்க்கையைப் புரிய வைக்குற ஒரு அழகான பயணம்! என்னுடைய இந்த FTC இரயில் பயணம் 🚂

வேதனிஷா AR.
Pages: 1 [2] 3 4 ... 10