Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
Happy birthday gabbbbbbbbbb ❤️
13
Happy happy birthday gab machioo
15
Friends Tamil Chat Team Conveys 🎁 Birthday (10-JUNE 2026) wishes 🎁 to our lovable friend⭐ Mr. GAB ⭐ and wishes him Good Luck.

16
   ❤️ BUNNY ❤️

மழைத் துளிகள் மெதுவாக மண்ணைத் தழுவும் அந்த நேரத்தில்,
உன் கையைப் பிடித்து நடக்கும் இந்தப் பாதை என் வாழ்வின் அழகான கவிதை.
குடை காற்றில் பறந்தாலும் பரவாயில்லை,
உன் அருகாமை எனக்கு ஆயிரம் பாதுகாப்புகளைத் தருகிறது.

மரங்களின் நிழலில் மழை இசை பாட,
நம் இதயங்கள் ஒரே தாளத்தில் துடிக்கின்றன.
நனைந்த உடைகளில் குளிர் இருந்தாலும்,
உன் பார்வையில் என் உயிருக்கு வெப்பம் கிடைக்கிறது.

இந்த மழை நின்றுவிடலாம்,
இந்த சாலை முடிந்துவிடலாம்,
ஆனால் உன்னோடு நடந்த இந்த நிமிடங்கள்
என் நினைவுகளில் என்றும் அழியாத ஓவியமாகவே இருக்கும்.

ஒவ்வொரு மழைத்துளியும் உன் பெயரைச் சொல்ல,
ஒவ்வொரு காற்றும் உன் அன்பைத் தொட்டுச் செல்ல,
உன் தோளில் சாய்ந்த இந்தச் சிறு உலகமே
என் வாழ்வின் மிகப் பெரிய சொர்க்கம்.

உலகம் முழுவதும் மழை பெய்தாலும்,
என் மனதில் என்றும் மலர்வது உன் காதல்தான்.
என் பயணத்தின் முடிவுவரை,
உன் கையை விடாமல் பிடித்துக் கொண்டு
இந்த வாழ்க்கைப் பாதையில் நடக்க வேண்டும் என்பதே
என் இதயத்தின் இனிய ஆசை. ❤️🌧️🥰
17
மேகங்கள் திரண்டுவந்து ராகங்கள் கோர்க்க,

பூமியின் தாகத்தை காதலே தீர்க்க!

மண்ணில் விழும் ஒவ்வொரு மழைத்துளியும்,

நெஞ்சில் எழும் உன்னுடைய நினைவல்லவோ!

குடை விரித்து நாம் நடந்த சாலையோரங்கள்,

குளிர் காற்றில் கரைகின்ற நம் தூரங்கள்!

உன் தோள் நனையக் கூடாதென்ற என் ஏக்கம்,

மழைநீரையும் விட இங்கே வெம்மையாக்கும்!

நனைந்த உன் கூந்தலின் வாசத்திலே,

என் ஆயுள் கரையுது இந்த சுவாசத்திலே!

சேலை நனையும் நொடிகள் எல்லாம்,

காலம் நமக்குத் தந்த வரமல்லவா!

விழியோடு விழி பேசும் மௌனச் சாரல்,

இவ்வுலகில் வேறெங்கும் இல்லாத் தேடல்!

பெய்யும் மழையும் உன்னழகைப் பார்த்து,

பெய்யத் தயங்கி நிற்குதோ தடம் மாற்றி!

பச்சை இலைகளின் மேல் பனிமுத்து ஆட்டம்,

நெஞ்சுக்குள் நீ தந்த சுகமான வாட்டம்!

உன் கரம் கோர்த்து நான் நடக்கும் போதெல்லாம்,

கால் நனையும் நீர்கூட அமுதாக மாறுதடி!

வார்த்தைகள் தேவையில்லை இந்த மழைக் காலத்தில்,

நம் சுவாசம் கலந்திருக்கு இயற்கையின் தாளத்தில்!

வானம் பூமிக்கு எழுதும் காதல் கடிதம்,

நாம் வாசிக்கும் இந்த அழகிய நிமிடம்!

பிரபஞ்சத்தின் பேரழகே உன் புன்னகைதான்,

இந்த மழைக் காவியத்தின் முதல் வரியே நீதான்!

உலகத்தின் சத்தங்கள் எல்லாம் அடங்கிப் போக,

உன் இதயத் துடிப்பு மட்டும் காதில் கேட்க!

காலங்கள் மாறினாலும் அழியாத காதலிது,

கடவுள் நமக்காகவே வரைந்த சித்திரமிது!

மழைநீரில் நனைந்தபடி நாம் தொலைவோம்,

மறக்க முடியாத நினைவுகளில் என்றும் நிலைப்போம்!

நெஞ்சக்கூட்டில் வாழ்கின்ற அன்பின் சுடரே,

என் ஆயுள் முழுக்க வருகின்ற உயிரின் நிழலே!

துளிகளின் ஓசையில் உன் குரலே கேட்க,

துணையவன் மார்பில் என் உலகம் சிறக்க!

இமை மூடி ரசித்திடும் தூரிகைத் திருவிழா,

வானும் பூமியும் வாழ்த்தும் பேரன்பின் சாட்சியாய்...

இதோ இங்கே, "காதல் காவியம் தொடர்கிறது!"
18
SMS & QUOTES / Re: 𝖇𝖚𝖙 𝕷𝖎𝖋𝖊 𝖌𝖔𝖊𝖘 𝖔𝖓✍
« Last post by MysteRy on June 09, 2026, 06:43:47 PM »
19


என்னங்க ஆசை !
சின்னதா ஒரு ஆசை!


நன்னாளில் அன்று நீ
தந்த சேலை உடுத்தி
உன்னை காண ஆசை !

கண்ணாடி முன் நின்று
வெட்கத்தோடு சிரித்து  - உனக்காக
என்னை அலங்கரிக்க ஆசை!

வருவதற்கு முன் வந்து
சாலையோரம் நின்று - உனக்காக
நான் காத்திருக்க  ஆசை!

காத்திருக்கும் நேரம் அன்பே
நமக்கு பிடித்த பாடலை - என்
 இதழோரம் முணுமுணுக்க ஆசை!

தொலைவில் உன் உருவம்  தெரிய
குழந்தையாய்  என் மனம் தானே
 துள்ளிக் குதிக்க ஆசை!

நீ அருகில் வரும்  அந்நொடி
வானம் மழையாய் பொழிய -என்
இதயமும் மெல்ல குளிர்ந்து போக ஆசை!

முதல் துளி மண்ணில் விழும் நேரம் 
அடுத்த முத்த  துளி - என்
கன்னத்தில் மேல்  விழ கொஞ்சம் ஆசை!

காற்றில் பறக்கும் என் கூந்தலை,
எவ்வித சலனம் இன்றி - உன்
விரல்கள் அடக்க ஆசை!

பட்டென்று  குடையை நான் விரிக்க,
அதை குறும்பாக  நீ  விலக்க
 நாணத்தோடு  சிரித்து வைக்க ஆசை!

கண்களிலே கைது செய்து
கனவோடு உறவாடி - உன்
பார்வைக்குள் சிக்குற  ஆசை !

என் குளிர்ந்த கரங்களை,
உன் கரங்களில் ஆயுள் வரை
இனி நான் சிறை வைக்க ஆசை!

உன் கை கோர்த்து நடக்கும் போது,
உலகமே நம்மைத் தவிர
மறைந்து போக  ஆசை!

பாதை எங்கே செல்கிறது
யாருக்கு தெரியும்  - உன்னோடு
மட்டும் நடக்க வேண்டுமென்ற ஆசை!

உன் சிந்தனைகளில்
தொலைந்து போக ஆசை !
உன் அன்பில்
வியந்து போக ஆசை !
வேறென்ன ஆசை !
நீயே  என்றென்றும் பேராசை !

ABC 😍


20
   "மழையில் மலரும் 
       காதல் நினைவுகள் "

காலையில் கண் முழித்ததும்
இன்று கல்லூரி செல்ல வேண்டுமா?
என்று ஒரு குழப்பமான மனநிலை!
டெலிபோன் மணி
ஒரு முறை"டிரிங் " என
ஒலியெழுப்பிவிட்டு
அணைந்து,
மீண்டும் ஒலியெழுப்ப
ஓடிப் போய் எடுத்தேன்
துள்ளிக் குதித்து
குதூகலத்துடன்...

மாலை  வருகிறேன்
கல்லூரி வாசலில்
காத்திரு என்று ஒரு
குரல்...  கிளம்பினேன்
கல்லூரிக்கு உற்சாகமாக...
கல்லூரியின் மணி
அடித்து முடிந்து நான்
காத்திருந்த மாலை நேரம்....

வானம் மேகங்களை
போர்த்திக் கொண்டு 
பூமிக்கு பரிசாக
அனுப்பி கொண்டிருந்தது
மழை துளிகளை ....
கல்லூரி வாசலில் நின்றாலும்
என் விழிகள் சாலையின்
முடிவில்!

மழை பெய்தாலும்
ஒருவனின் வருகைக்காக
காத்திருந்தது என் மனம் !
தொலைவிலிருந்து  என்னை
காண வந்தான்
கண்ணில் காதலுடன்
அவன் !

அவன் மேல் விழுந்தன
மழைத்துளிகள்...
ஆனால் அவன் கண்கள்
தேடிக் கொண்டிருந்தது
என்னை மட்டுமே...

என்னைக் கண்ட
அந்த நொடி மழையின்
குளிரையும் மறந்து
ஆயிரம் சூரியன்கள் மலர்ந்தன
அவன் முகத்தில் ....
இவ்வளவு மழையில்
ஏன் வந்தாய்? என்று கேட்டேன்
மழை வருவது பூமியை பார்க்க
நான் வருவது
உன்னை பார்க்க என்று 
சொன்னான் புன்னகையுடன்...
அவ்வார்த்தைகளில்
நனைந்தது என் மனம்....

மழை கொட்டோ கொட்டோ
என்று கொட்டிக் கொண்டிருக்க
சாலையோரம் தண்ணீர்
பெருக்கெடுத்து  ஓட ...
எங்களுக்காக மட்டும்
நின்றது போல் இருந்தது
அந்த உலகமே!

என் கையிலிருந்த
குடையை அவன்
வாங்கி பிடித்தான்
இருவருக்குமாக...
குடை இருந்தும் நனைந்தோம்
ஒவ்வொரு துளியும்
எங்களின் காதல் கதையை
மெல்ல எழுதிக் கொண்டிருந்தது....

கல்லூரி சாலையில் நடந்த
அந்த சில நிமிடங்கள்
எங்கள் வாழ்வின்
மறக்க முடியாத
நினைவுகளாக மாறின....
இன்றும் மழை பெய்யும்
போதெல்லாம்
அந்த கல்லூரி வாசலும்
அந்த சாலையும்
அந்த நனைந்த மாலையும்
எங்கள் மனதில் மீண்டும்
உயிர் பெறுகிறது....

ஏனெனில் அந்த மழை
வெறும் மழை அல்ல...
இரண்டு இதயங்களை
ஒன்றாக இணைத்த
காதலின் இனிய நினைவு...

அந்த மழைநாள்
முடிந்து இருக்கலாம்
நனைந்த உடைகள்
காய்ந்து இருக்கலாம்
சாலையில் தேங்கிய
நீரும் வற்றியிருக்கலாம்
ஆனால் அன்று
உன் கண்களில்
நான் கண்ட காதலும்
மழைத்துளிகளுக்குள்
நாம் பகிர்ந்த புன்னகைகளும்
உன் கைகோர்த்த நொடிகளும்
இன்றும் நனைந்தபடியே
இருக்கின்றன
என் இதயத்தில் !

காலங்கள் கடந்தாலும்
சில மழைகள் தான்
நினைவுகளை நனைக்கும்..
அதுபோல தான்
அந்த மழை நாள்!
நாம் இருவரும்
என் கல்லூரியை
கடக்கும் போதெல்லாம்
நனைத்து கொண்டே
இருக்கும்
நினைவுகளால்....
Pages: 1 [2] 3 4 ... 10