Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11


1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?

3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?

4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?

6.அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?

7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு கையுறை போட்டு கொண்டு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?

ஏன்?.... ஏன்?.... ஏன்?

காரணம் மிக சிறிது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.

நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.

எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவுதான்.

ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைக்கப்டும்.

எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது. இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.

உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

என்னை பொருத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமுமாகிவிடுகிறது.

நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.

வெயிலை கண்டு அச்சப்படாதீர்கள்.

காற்றை கண்டு பயப்படாதீர்கள்.

குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள்.

சுடுதண்ணீரில் ஒருபோதும் குளியாதீர்கள்.

சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள்.

இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்.

இயன்றவரை இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் நோயின்றி வாழலாம் வாழ்க வளத்துடன்...
12
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 07:27:40 AM »
13
"Kaatrodu Pattam Pola" song from 'Ayothi' starring Sasi Kumar,Yashpal sharma,Preethi Asrani,Pugazh, Directed by R.Manthira Moorthy. Sung by Pradeep Kumar with Music composed by N.R.Ragunanthan
REASON: சில உறவுகளின் அருமை, அவர்கள் நம்முடன் இருக்கும் போது பெரிதாக தெரியாது…
ஆனால் அவர்கள் தூரமான பிறகோ, இல்லாத நேரங்களிலோ தான் அந்த வெற்றிடத்தின் வலி புரியும்.
அதை விட, அவர்கள் நம்முடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் அன்பாக மதித்து,
அவர்களின் பாசத்தை உணர்ந்து, நாமும் அன்பை திருப்பி கொடுத்து வாழ்ந்தால்…
பிறகு “இருந்தப்போதே இன்னும் கொஞ்சம் அன்பு காட்டியிருக்கலாமே” என்ற வருத்தம் வராது.
இந்த உணர்வு காதலுக்கு மட்டும் அல்ல…
அம்மா, அப்பா, நண்பர்கள், உறவுகள் — எல்லா உறவுகளுக்கும் பொருந்தும் ❤️
So enaku intha song pudikum etha na ella ftc friends dedicate panren💙💚💛🧡💜😇💐😇Luminous
14
Hey Team..

Song: Kannamoochi yeanada en kanna
Film: Kandukonden Kandukonden
Music Director: A.R.Rahman
Lyrics: Vairamuthu
Singers: K.S.Chithra ma

Fav lines:
என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள்
தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
15
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:37:31 AM »
16
Hi RJ indha vaaram isai thendral nigazhchiyil enathu virupa paadalaga thearvuseitha paadal kadandha 2002 am aandu velivandhu Sirpy avargalal isai amikapatta thiraipadam...

Movie Name: Unnai Ninaithu
Song: Yaar Indha Devathai
Singer: Hariharan

Hariharan enaku romba pidicha paadagar avaroda kural kaadhula thendral kaathu veesurapola inimaya irukum indha paadalai FTC nanbargal ellarukum Dedicate panuren..

Neatru nadandha Isai Thendral program la DJ Tejasvi romba supera edit panirundhanga avangaluku enathu nandrikalandha paaratukalai thearivithu kolgiren Keep Rocking....
17
நெஞ்சம் மறப்பதில்லை - அந்தப் பால் டப்பாவும்... பூமா கிரகமும்!

நான் 4th Standard படிச்சிட்டு இருந்த சமயம். எங்க Jothi Miss-க்கு நான் தான் செல்லப் பிள்ளை. அவங்களுக்கு என் மேல ஒரு தனி பாசம், எனக்கும் அவங்களை ரொம்ப பிடிக்கும். எங்க Street-க்கு அடுத்த Street தான் மிஸ் ஓட வீடு. நான் அப்போ பாட்டி வீட்ல தான் வளர்ந்தேன், அதனால என்னை ரொம்ப கண்ணும் கருத்துமா, 'புரொடெக்டிவ்'-ஆ வளர்த்தாங்க.

ஸ்கூலுக்கு ஆப்போசிட்ல ஒரு Church இருக்கும். சாயங்காலம் ஸ்கூல் முடிஞ்சதும் அங்க போய் மிஸ்-க்காக பசும்பால் வாங்கிட்டு வரணும், இது தான் எனக்கு மிஸ் கொடுத்த முக்கியமான வேலை. ஆனா அந்த இடம் Main Road, எப்பவும் வண்டிங்க இடைவிடாம வந்துட்டே இருக்கும். பால் வாங்கிட்டு போய் மிஸ் வீட்ல கொடுத்துட்டு வர்றதுக்குள்ள வீட்டுக்கு போக நேரம் ஆகிடும்.

ஒரு நாள் பாட்டி மடக்கினாங்க, "ஏன் லேட்?"

நான் உண்மையையே சொல்லிட்டேன், "மிஸ்-க்கு பால் வாங்கிட்டு போய் கொடுத்தேன் பாட்டி"ன்னு. அவ்வளவுதான்... ஆரம்பிச்சது பெரிய ரகளை! "அவ்ளோ பெரிய Main Road-ஐ Cross பண்ணி போகணும், ஏதாவது ஆச்சுன்னா நாங்க யார்கிட்ட போய் பதில் சொல்லுவோம்? அந்த மிஸ்-க்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? சின்னப் புள்ளைய இப்படி அனுப்புறாங்க?"ன்னு என்னையும் திட்டி, மிஸ்-யும் திட்டி தீர்த்துட்டாங்க. "இனிமே அந்த வேலைக்கு போகக்கூடாது"ன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க.

சரி-ன்னு சொல்லிட்டு ரெண்டு நாள் மிஸ் கிட்ட இருந்து எப்படியோ தப்பிச்சு ஓடி வந்துட்டேன். ஆனா மூணாவது நாள் மிஸ் கேட்டதும் எனக்கு 'நோ' சொல்ல முடியல. மறுபடியும் பால் வாங்கிட்டு மிஸ் வீட்டுக்கு போயிட்டு வழக்கம் போல வீட்டுக்கு போக லேட் ஆகிடுச்சு.

பாட்டி மறுபடியும் கேட்டாங்க. இந்த தடவை உஷாரா ஒரு பொய்யைச் சொன்னேன், "ஸ்கூல்ல Home Work எழுதிட்டு இருந்தேன் பாட்டி"ன்னு. அடுத்த நாள் கேட்டப்போ, "Dance Practice இருந்துச்சு"ன்னு சொன்னேன். இப்படியே ஒரு நாலு அஞ்சு நாள் பொய்யைச் சொல்லி சமாளிச்சிட்டேன்.

அடுத்த நாள் வீட்டுக்கு போறேன்... பார்த்தா வீட்டு வாசல்ல அந்தத் திண்ணைல பாட்டியும், என் தாய் மாமாவும் உட்கார்ந்து இருக்காங்க. (என் மாமாவுக்கு நான் எதுலயாவது மாட்டி அடி வாங்கினா அப்படி ஒரு சந்தோஷம்!)

"ஏன் லேட்?" - அதே கேள்வி.
நான் அதே பழைய பதிலை சொன்னேன், "Home Work எழுதிட்டு வந்தேன் மாமா"ன்னு.
உடனே மாமா, "அப்படியா... அந்த Note-ஐ எடு பார்க்கலாம்"ன்னாரு.

அப்போதான் எனக்கு பொறி தட்டுச்சு, "அய்யோ... மாட்டிக்கிட்டோமே!"ன்னு. மனசுக்குள்ள செம Tension. சமாளிக்கறதுக்காக, "Note-ஐ கிளாஸ்லேயே வச்சிட்டு வந்துட்டேன்"னு சொன்னேன். அவ்வளவுதான்... விழுந்தது பாருங்க ஒரு அடி! பலமான அடி!

"பொய் சொல்றியா? இத்தனை நாளா பொய் சொல்லிட்டு இருக்கியா?"ன்னு பாட்டி சத்தம் போட... அப்போதான் தெரிஞ்சது, என் Classmate பூமா எல்லாத்தையும் சொல்லிட்டான்னு. என் கிரகச்சாரம் இல்ல, இந்தப் 'பூமா கிரகம்' தான் எல்லாத்தையும் வீட்ல போட்டுக் கொடுத்துடுச்சு போல!

அடி வாங்கிட்டு அழுதுட்டே இருந்த என்னைக் கூட்டிட்டு நேரா மிஸ் வீட்டுக்கு போனாங்க. அங்க ஒரு பெரிய கலவரமே நடந்துச்சு. "சின்னக் குழந்தையை எதுக்கு ரோடு Cross பண்ணி பால் வாங்க அனுப்புறீங்க? இனிமே இப்படி பண்ணுனீங்கன்னா HM கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவோம்"னு என் பாட்டி மிஸ்ஸை ஒரு வழி பண்ணிட்டாங்க.

இப்போ நினைச்சா சிரிப்பு தான் வருது. நம்ம செய்ற உதவி மத்தவங்களுக்குத் தெரியாம இருக்கலாம், ஆனா நம்ம சொல்ற பொய்  நம்ம சொல்ற பொய் யாராவது ஒரு பூமாவுக்கு தெரியாம இருக்கவே இருக்காது! நம்ம லைஃப்ல நாம எவ்வளவோ பேருக்கு Help பண்ணியிருப்போம், ஆனா நாம வாங்குன அந்த ஒரு அடி தான் இன்னைக்கும் நம்ம மனசுல நிக்குது. அதுதான் 'சிறுவயது ஞாபகங்கள்'!

அடியே பூமா! இப்போ நீ எங்க இருக்க? உன்னை என் ஆயுசு முழுவதுமே மறக்க மாட்டேண்டி! என் கிரகம் அப்போ சரி இல்லைனு நினைச்சேன், ஆனா உன் கிரகம் தான் என்னைப் போட்டுக் கொடுத்துடுச்சுன்னு இப்போதான் புரியுது!

Friends... உங்க Life-லயும் ஒரு 'பூமா கிரகம்' கண்டிப்பா இருந்திருப்பாங்க, அப்படித்தானே? அதே மாதிரி இந்த மாமாக்களும் இப்படித்தான்... எப்படா நாம மாட்டுவோம்னு காத்துட்டு இருப்பாங்க! உங்களுக்கும் இப்படி நடந்திருக்கா?


என் நெஞ்சம் மறக்காத இந்தக் கதையை இங்கே ஷேர் பண்ண வாய்ப்பு அளித்த நம்ம FTC-க்கும் மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் டீமுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

இப்படிக்கு,
அன்புடன்,
கவி.
18
Hi vanakkam samyooo

 Naan keka virumbum movie :kummi pattu
Naan kettka virumbum song : adi aasai machan vangi thantha malligai poo
Intha song ftc nanbargal anaivarukkum kekuren samyooo

Pona varam rj hari taru maru takkali soru pannitinga samyioo
19


''சின்ன பொய்.. பெரிய கலவரம்' or சம்பவம்'”

இப்ப நான் சொல்ற சம்பவத்தை நெனச்சு சிரிக்குறதா இல்ல வேதனை கொள்வதான்னு தெரியல.. ஆனா நெனச்சு நெனச்சு இப்பவும் நான் சிரிக்கும் விஷயம் தான்... நீங்க எல்லாம் சிரிக்கிறீங்களா இல்லை சிந்திக்குறீங்களான்னு பாக்கலாம்...

அப்போ நான் 2ஆம் வகுப்பு படித்த நாட்கள்...

என் ஸ்கூலுக்கும் பாட்டி வீட்டுக்கும் இடையில் ஒரு பைபாஸ் ரோடு... எப்பவும் என் பாட்டி லஞ்ச்க்கு என்னை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவாஙக.. அன்றும் அப்படியே நடந்தது... சாப்பிட்டுமுடித்து பள்ளிக்கும் வந்தாச்சு...

கிளாஸ்ல மிஸ் பாடம் எடுத்துட்டு இருந்தாங்க அப்போ ஒரு பெண் வந்து என் பேர் சொல்லி.. "நான் அவங்க சித்தி.. ஊர்ல இருந்து வந்தேன்... இப்போவே ஊருக்கு திரும்பி போக வேண்டிய சூழ்நிலை.. அதனால பிள்ளைய இங்கயே ஒருவாட்டி பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன்.. கொஞ்சம் அனுபுறீங்களான்னு கேட்டாங்க.. எங்க மிஸ்சும் சரி போய்ட்டுவா அப்படின்னு சொன்னாங்க...

என் சித்தி ஆச்சே எனக்கு பிடிச்ச தின்பண்டம் எல்லாம் வாங்கிட்டு வந்தாங்க.. அது என்ன உங்களுக்கு பிடிச்சதுன்னு கேக்குறீங்களா... 😂😂 சொல்ல மாட்டேன்.. சொன்ன நீங்களும் இதையே follow பண்ணிடுவீங்க...

சித்தி குடுத்தத சாப்டுட்டு இருக்கறப்ப... என்ன உங்க அம்மா இதை கூட கவனிக்க மாட்டாளா புள்ள காதுல கம்மல் எவ்ளோ லூசா இருக்கு பாருன்னு என் காதுல கை வச்சாங்க..  அப்போன்னு பாத்து என் கிளாஸ்மேட் ஒரு பையன்  வந்து நீ வந்து ரொம்ப நேரம் ஆகுது உன்ன மிஸ் கூட்டிட்டு வர சொன்னாங்கன்னு சொன்னான்.. நான் "சரி சித்தி நான் உள்ள போறேன்ன்னு" சொல்லிட்டு போய்ட்டேன்..

என் அம்மாவிடம் எப்போதும் ஒரு பழக்கம் இருக்கு.. மாலையில் "இன்று உன் ஸ்கூல்ல என்னவெல்லாம் நடந்துச்சு" அப்படினு கேப்பாங்க.. நானும் சித்தி வந்துட்டு போன கதையெல்லாம் சொன்னேன்... அப்படியா உங்க சித்தி பாக்க எப்படி இருந்தாங்க அப்படினு எல்லாம் கேட்டுட்டு சரி ணு விட்டுட்டாங்க..

அடுத்த நாள் என்னுடன் என் அம்மாவும் பள்ளிக்கு வந்தார்கள்... யாரோ சித்தின்னு வந்திருக்காங்க.. எங்க வீட்ல நான் தான் சின்னவ அதனால என் பொண்ணுக்கு சித்தியெல்லாம் யாரும் இல்லை.. கொஞ்சம் என்னனு பாருங்கன்னு சொன்னாங்க... அப்போ தன் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து ஒரு செய்தி..

நல்லநேரம் உங்க பிள்ள கிட்ட இருந்து எதுவும் புடுங்கல ...பள்ளியில் சில குழந்தைகளிடம் இது போல் பேசி கம்மல் வளையல் என பல பொருள்கள் காணாமல் போய்விட்டது என்றனர் (நல்லவேளை என் கம்மலை கழற்றுவதற்குள் அந்த பையன் வந்து என்னை அழைத்து சென்றுவிட்டான்)...

அப்போது இந்த நிகழ்வின் தாக்கம் எனக்கு புரியவில்லை... ஆனால் பின்காலங்களில் நினைத்து பார்க்கையில்.. அடி ஆத்தீ  என்று இருந்தது...
 
இந்த நிகழ்வுக்குப்பின் எங்கள் பள்ளியில் இன்று வரை... பள்ளிக்கு தங்க அணிலன் எதுவும் போடக்கூடாது.  பெற்றோர் தவிர யாரும் பள்ளிநேரத்தில் பிள்ளைகளை பார்க்க அனுமதி இல்லை என்று பல பல காட்டுப்பாடுகள் கொண்டு வந்தனர்... மதிய உணவுக்கும் அன்றுமுதல் யாரையும் வீட்டிற்கு அனுப்புவதில்லை...

யாரோ "என் சித்தி" என்று சொன்ன பொய் என் பள்ளியில் சில கட்டுப்பாடுகளை விதிக்க வழிவகுத்தது.....பல பிள்ளைகளின் பாதுகாப்புக்கு காரணமானது....

20

Ooviyathin pudhiya parimaanam... Kuzhandhayin kirukkal!


ஓவியத்தின் புதிய பரிமாணம்... குழந்தையின் கிறுக்கல்...
Pages: 1 [2] 3 4 ... 10