Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11

இன்று எனக்கு திடீரென்று Durian சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

அதனால்தான், ரெடியாக பேக் செய்து வைத்திருந்த Durian பழத்தை வாங்கினேன்.

எனக்கு முழு Durian வாங்கி அதைத் திறக்கத் தெரியாது. அதனால் ஆசை வந்தால் இப்படி ரெடியாக பேக் செய்து வைத்திருப்பதை வாங்கிச் சாப்பிடுவது வழக்கம்.

ஆனால், ஒரு விஷயம் சொல்லணும்...

யாராவது முதல் முறையாக Durian சாப்பிட நினைத்தால், இப்படி ரெடியாக பேக் செய்ததை வாங்காதீர்கள். இதன் சுவையும் மணமும் கொஞ்சம் குறைந்திருக்கும்.

புதிதாக (Fresh) பழத்தை வாங்கி, அப்போதே திறந்து சாப்பிட்டால்தான் Durian-ன் உண்மையான சுவையையும் கிரீமியான பதத்தையும் முழுமையாக ரசிக்க முடியும்.

சில பழங்கள் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் Durian மட்டும் சரியான நேரத்தில் கிடைத்தால் தவறவிடாதீர்கள்!

உங்களுக்கு Durian பிடிக்குமா? ❤️ இல்லை அதன் வாசனைக்கே ஓடிடுவீங்களா? 😄


12
SMS & QUOTES / Re: 𝖇𝖚𝖙 𝕷𝖎𝖋𝖊 𝖌𝖔𝖊𝖘 𝖔𝖓✍
« Last post by MysteRy on July 04, 2026, 06:18:09 AM »
13
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on July 04, 2026, 06:04:14 AM »
14
General Videos / Re: Sam Odu Vilayadu Season 5 Episode 7
« Last post by MysteRy on July 03, 2026, 07:58:39 PM »
15

"பசிக்குதுன்னு சொன்னார்... ஆனால் பசி வயிற்றுக்கில்லை!"





நான் வேலை செய்யும் இடத்தில் நடந்த ஒரு சம்பவம் இது.

ஒரு நாள் மதிய நேரத்தில், இரண்டு தமிழ் உணவகங்களில் ஒன்றில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு குடிபோதையில் இருந்தவர் என் மேசை அருகே வந்து, "எனக்கு ரொம்ப பசிக்கிறது... சாப்பாடு வாங்க பணம் இல்லை..." என்று கேட்டார்.

அவருடைய வார்த்தைகளைக் கேட்டதும் மனம் கேட்கவில்லை. உடனே சில பணத்தை அவரிடம் கொடுத்து, "போய் சாப்பாடு வாங்கிச் சாப்பிடுங்கள்" என்று சொன்னேன்.

ஆனால் அடுத்த நிமிடமே அவர் அந்தப் பணத்தில் பீர், சிகரெட் வாங்கக் கேட்டதைப் பார்த்ததும் எனக்குள் இருந்த கருணை கோபமாக மாறிவிட்டது.

உடனே கவுண்டருக்குச் சென்று, நான் கொடுத்த பணத்தை அவரிடமிருந்து திரும்பப் பெற்றேன். அவரை நன்றாகக் கண்டித்தேன். "பசி என்று பொய் சொல்லி யாருடைய இரக்கத்தையும் ஏமாற்றாதீர்கள். உண்மையில் பசித்தால் உணவைக் கேளுங்கள்; மது, சிகரெட்டுக்காக அல்ல," என்று புத்திமதியும் சொன்னேன்.

கோபத்தில் பாதி சாப்பாட்டையே விட்டுவிட்டு வெளியே வந்தேன்.

ஆனால் சில அடிகள் நடந்த பிறகு மனசாட்சி என்னை விடவில்லை.

அவர் செய்தது தவறு. அதற்காக அவருடைய பசியும் உண்மையாக இருக்கக்கூடாதா என்ற எண்ணம் தோன்றியது.

மீண்டும் அந்த உணவகத்திற்குச் சென்று, உணவக உரிமையாளரிடம், "அவருக்கு ஒரு சாப்பாடு மட்டும் கொடுத்து அனுப்புங்கள். இதோ அதற்கான பணம்," என்று சொல்லிவிட்டு அமைதியாக அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

அன்று எனக்குப் புரிந்தது...

இரக்கம் என்பது ஏமாளித்தனம் அல்ல. அதே நேரத்தில், கோபம் என்பது மனிதநேயத்தை இழப்பதும் அல்ல. தவறைத் தட்டிக்கேட்கலாம்; ஆனால் பசியைத் தண்டிக்கக் கூடாது.
16

"வெற்றிக்காக ஓடிய நான்... ஒரு நாள் மயங்கி விழுந்தேன்!"
 


நான் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை. பள்ளியில் நடந்த எந்த ஓட்டப்பந்தயமாக இருந்தாலும், முதல் இடம் என்றால் அனைவரின் நினைவிலும் என் பெயர்தான். ஒவ்வொரு போட்டிக்கும் முன்பும்,"இந்தப் போட்டியிலும் இவள்தான் ஜெயிப்பாள்..."என்று என் ஆசிரியர்கள் பெருமையுடன் கூறுவார்கள். அந்த நம்பிக்கையே எனக்கு மிகப்பெரிய பலம்.

ஆனால்... அந்த ஒரு நாள் மட்டும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது.

போட்டி நடந்த அன்று எனக்கு கடுமையான காய்ச்சல். உடல் சோர்வாக இருந்தாலும், என் ஆசிரியர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை உடைக்க மனம் வரவில்லை. அதனால், அந்த காய்ச்சலோடும் களத்தில் இறங்கினேன்.

விசில் ஒலித்தது... என் கால்கள் வழக்கம்போல் வேகமாக பறந்தன. வெற்றிக்கோடு இன்னும் சில அடிகளே தூரத்தில் இருந்தது. அப்போது திடீரென்று என் கண்கள் இருண்டன... உலகமே சுழல்வது போல இருந்தது... அடுத்த நொடியே மயங்கி தரையில் விழுந்துவிட்டேன்.

அந்த விழுதல் வெறும் உடலின் விழுதல் மட்டுமல்ல... என் ஆசிரியர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை விழுந்துவிட்டதாகவே அந்த வயதில் நான் உணர்ந்தேன். அந்த வேதனையே எனக்கு மிகப்பெரிய தோல்வியாக இருந்தது.

நான் கீழே விழுந்ததைப் பார்த்த என் ஆசிரியர்கள் பதறியபடி ஓடி வந்து என்னைத் தூக்கிக்கொண்டு அவசர சிகிச்சை அறைக்குச் சென்றார்கள். முகத்தில் தண்ணீர் தெளித்து, காற்று வீசச் செய்து, காய்ச்சலுக்காக மருந்து கொடுத்து என்னை கவனித்துக் கொண்டார்கள். அவர்களின் அந்த அக்கறை, அந்த அன்பு... இன்றுவரை என் மனதில் அழியாத நினைவாக இருக்கிறது.

இன்றும் அந்த நாளை நினைத்தால்கூட என் கண்கள் கலங்கிவிடுகின்றன. வெற்றி பெற முடியாததற்காக அல்ல... என்னை முழுமையாக நம்பியிருந்த என் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை முதன்முறையாக நிறைவேற்ற முடியாமல் போனதற்காக.

அந்த நாள்தான் எனக்கு ஒரு உண்மையை உணர்த்தியது...
சில தோல்விகள் நம்மால் ஓட முடியாததால் வருவதில்லை... நம்மால் முடிந்த அளவுக்கு ஓடிய பிறகும், உடல் நம்மைத் தாங்க முடியாமல் போனதால் வருகிறது. அந்தத் தோல்விகளுக்கு நாமே காரணமில்லை.
17
கவிதைகள் / ஆணவப் படுகொலை
« Last post by Thenmozhi on July 03, 2026, 05:57:59 PM »
     ஆணவப் படுகொலை

காதல் இரு உயிர்களின் மொழி !
காதலை கட்ட முடியாது
சாதியின் சங்கிலியால்..
ஆணவம் கண்களை மூடும்போது, இரத்தமாகின்றன அன்பின் இதயங்கள் !

"குடும்ப மரியாதை" என்ற பெயரில்
கொல்லப்படுகிறது மனிதம் தினமும் !
மண்ணில் புதைகின்றன
மலர வேண்டிய கனவுகள் !

அம்மாவின் கண்ணீர் ஆறாக ஓடுகிறது...
இரு உயிர்களை அழித்தாலும்,
யாராலும் அழிக்க முடியாது
உண்மையான காதலை...
சாதியை விட மனிதநேயம் உயர்ந்தது !
அன்பே வாழ்வின் அடையாளம்,
ஆணவம் அல்ல !

ஆணவப் படுகொலையை ஒழிப்போம்!



18
கவிதைகள் / Re: Oh Butterfly 🦋
« Last post by Thenmozhi on July 03, 2026, 05:05:23 PM »
oonjal sis &joker anna kavithai nice🥰

       🦋 பட்டாம்பூச்சி 🦋

வண்ணச் சிறகுகள் விரித்து
வானம் முழுதும் பறக்கிறது !
மலரின் மீது அமர்ந்து-நறு
மணத்தை மனதில் நிரப்புகிறது !

தோட்டம் தோறும் சுற்றி வந்து
தேன் துளிகளைத் தேடுகிறது !
இயற்கை தந்த ஓவியமாய்
இதயங்களை கவர்கிறது !

சிறிய உயிராய் இருந்தாலும்
பெரிய பாடம் சொல்லுகிறது!
மாற்றத்தை ஏற்றுக் கொண்டால்
வாழ்க்கையும் அழகாக மலர்கிறது!

19

அப்பா இருந்த நாட்கள்... வாழ்வின் பொக்கிஷம்




என் அப்பாவின் கடைசி வியர்வைத்துளி என் கைகளில் பட்ட அந்த நாள்... அந்த நாள் முழுவதும் நான் குளிக்கவே இல்லை. குளித்துவிட்டால் என் கைகளில் இருந்த அந்த வியர்வைத்துளியும் என்னைவிட்டு மறைந்துவிடுமோ என்ற பயம்.

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று பள்ளிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. என் வகுப்பு ஆசிரியர் என்னைத் தனியாக அழைத்து, "உன் அப்பாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்" என்று கூறிய அந்த நொடி, என் உலகமே நின்றுபோனது.

கண்ணீரோடு என் குடும்பத்தினருடன் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு மருத்துவர்கள், "எங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்துவிட்டோம். இனி கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்" என்று கூறியபோது, என் இதயம் உடைந்தது.

அந்த நொடியில் கண்ணீர் மல்க இறைவனிடம் மன்றாடினேன். என் குடும்பத்தினர் அனைவரும் இடைவிடாமல் ஜெபித்தனர். என் அம்மாவின் வேதனையைப் பார்த்து அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் நானும் மனம் உடைந்து நின்றேன்.

மருத்துவமனை தரையில் படுத்து, புரண்டு கதறி அழுத என் அம்மாவின் அழுகைச் சத்தம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்த காட்சி என் மனதில் என்றும் அழியாத நினைவாக பதிந்துவிட்டது.

ஆனால்... God is so good. இறைவன் எங்கள் ஜெபத்தைக் கேட்டார். என் அப்பாவுக்கு இன்னும் சில நாட்களை எங்களோடு வாழும் அருளைத் தந்தார். அந்த நாட்கள் எங்களுக்கு அளவிட முடியாத ஒரு வரமாக இருந்தது.

இன்றும் அந்த நாளை நினைக்கும் ஒவ்வொரு முறையும், வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது என்பதையும், நம்முடன் இருக்கும் அன்பானவர்களை ஒவ்வொரு நொடியும் மதித்து நேசிக்க வேண்டும் என்பதையும் என் மனம் நினைவூட்டுகிறது.

அப்பா நம்முடன் இருக்கும்போது, அவரின் அருமை பல நேரங்களில் நமக்குப் புரிவதில்லை. ஆனால், அப்பாவை இழந்தவர்களிடமோ, அவரின் அன்பும் அரவணைப்பும், தியாகமும், பாதுகாப்பும் எவ்வளவு விலைமதிப்பற்றவை என்பதை கேட்டுப் பாருங்கள்.

அப்பாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரின் ஒரு பார்வை, ஒரு வார்த்தை, ஒரு தொடுதல் கூட வாழ்க்கை முழுவதும் நினைவாகவே இருக்கும்.

அப்பா இருக்கும் வரை அவரை நேசியுங்கள்... அவருடன் நேரம் செலவிடுங்கள்... அவர் இல்லாத பிறகு, அவரின் நினைவுகளை மட்டுமே கட்டிப்பிடித்து வாழ வேண்டிய நிலை வராமல் இருக்கட்டும்.

20
நாடெல்லாம் சுத்தி என்னதான் விதவிதமா சாப்பிட்டாலும், சுவைகளின் நிஜமான 'ராணி'னா அது நம்ம மட்டக்களப்பு சாப்பாடுதான்! ஸ்கூல் படிக்குற காலத்துல இருந்தே எங்களோட லீவு நாட்களை ஜாலியா கழிக்க நாங்க தஞ்சம் புகுற சொர்க்கப்புரி, இந்த மட்டக்களப்பு. கடலும் வாவியும் பின்னிப் பிணைஞ்ச அந்த ஊர்ல, சீ-ஃபுட் (Sea food) எப்பவுமே 'அப்படியே அள்ளிக்கிட்டு வர்ற' ஃபிரெஷ்ஷான டேஸ்ட்டோட கிடைக்கும்.

அப்படி ஒரு லீவுலதான், 'குடுமிமலை'ங்குற வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்துக்கு ஃபேமிலியோட ஒரு ட்ரிப் போயிருந்தோம். மாடர்ன் உலகத்தோட வாசமே இன்னும் படாத, இயற்கையோட மடில தூங்குற ஒரு அழகான கிராமம் அது. மூச்சு முட்ட முட்ட 340 படிக்கட்டுகள் ஏறி, அங்கிருந்த குட்டிக் கோவில்ல முருகனைத் தரிசனம் பண்ணிட்டு கீழே இறங்குனா... பசி உயிரை வாங்குச்சு! அப்போ என் சித்தப்பா, *"பக்கத்துல ஒரு அக்கா வீட்ல சாப்பாடு அரேஞ்ச் பண்ணியிருக்கேன்"*னு சொல்லி எங்களைக் கூட்டிட்டுப் போனார்.

சரியான ரோடு வசதி கூட இல்லாத, சுற்றிலும் காடும் காட்டு மிருகங்களோட சத்தமும் நிறைந்த வழி அது. ஆனா, ஆங்காங்கே பழங்கால ராஜ்ஜியங்களோட சிதிலமடைஞ்ச அடையாளங்கள் வரலாற்றைப் பேசிக்கிட்டு இருந்துச்சு. போற வழில, ஒரு வீட்டோட பாதிச் சுவர் இடிஞ்சு கிடக்கவே, பதறிப்போய் என்னாச்சுனு விசாரிச்சோம். அந்த வீட்டுப் பெண்மணியோ, "ஓ... அதா, நேத்து ஒரு யானை வந்து இடிச்சிட்டுப் போயிட்டு" அப்படின்னு ரொம்ப கேஷுவலா சொல்லிட்டு, யாருனே தெரியாத எங்களுக்கு, அவங்க தோட்டத்துல பறிச்ச ஃபிரெஷ்ஷான கொய்யாப்பழங்களைக் கொண்டு வந்து கொடுத்தாங்க. அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மாறாத அவங்களோட அன்பைப் பார்த்து நாங்க மிரண்டுட்டோம்!

அடுத்து, சாப்பாடு ரெடி பண்ணியிருந்த அந்த அக்கா வீட்டுக்குப் போனோம். வெளியில இருந்து பார்க்கச் சின்னதா தெரிஞ்சாலும், உள்ளே பரந்து விரிஞ்ச முற்றம் கொண்ட மண் வீடு அது. பக்கத்துலயே புடலங்காய், கத்தரிக்காய், மிளகாய், தக்காளின்னு ஒரு குட்டித் தோட்டம் பச்சப்பசேல்னு க்யூட்டா இருந்துச்சு. கேஸ், கரண்ட்னு எதோட வாசமும் இல்லாத அந்த ஊர்ல, உள்ள கால் வச்சதுமே உடம்பையும் மனசையும் ஜில்லுனு மாத்துற மாதிரி ஒரு செம டேஸ்ட்டான 'விளாம்பழ ஜூஸ்' கொடுத்து எங்களை வரவேற்றாங்க.

அங்க, மண்ணால மெழுகப்பட்ட விறகடுப்புல, மண்பானைகள்ல, அவங்க வீட்டுத் தோட்டத்து காய்கறிகளை வச்சுச் சமைக்கப்பட்ட அந்த மதிய சாப்பாடு இலையில பரிமாறப்பட்டுச்சு...

ஆவி பறக்குற சுடச்சுடச் சீரகச் சம்பா சோறு, மட்டி (Clams) போட்ட கத்தரிக்காய் பால் கறி, வாவியில பிடிச்ச விரால் மீன் மொறுமொறு பொரியல், அகத்திக் கீரைச் சுண்டல், அப்புறம் மரவள்ளிக்கிழங்கு போட்ட சோதி!

இத்தனை வருஷம் கழிச்சும், இந்த 'Menu' என் மனசுல அப்படியே அச்சடிச்ச மாதிரி நிக்குதுனா, நான் அதை எவ்ளோ ரசிச்சுச் சாப்பிட்டிருப்பேன்னு பாருங்களேன்! என் லைஃப்லயே அப்படி ஒரு ருசியான சாப்பாட்டை நான் சாப்பிட்டதே இல்லை. எந்தவித கெமிக்கலும் இல்லாத அந்தப் பியூர் உணவோட டேஸ்ட், இன்னைக்கு சூப்பர் மார்க்கெட்ல 'Organic Vegetables'னு நூறு இருநூறு எக்ஸ்ட்ரா கொடுத்து வாங்குற காய்கறிகள்ல எனக்குக் கிடைக்கவே இல்லை.

*"இந்த ஊரோட தண்ணிக்கும், சாப்பாட்டோட ருசிக்கும் தானே அந்தக்காலத்து ராஜாக்கள்லாம் இந்த இடத்துல டேரா போட்டு வாழ்ந்திருப்பாங்க போல"*னு எங்களுக்குள்ளேயே பேசிக்கிட்டோம்.

அந்த அமிர்தமான  சாப்பாட்டைச் சாப்பிட்டு முடிச்ச அசதி தீருறதுக்குள்ள, வீட்லயே உறை ஊத்துன கெட்டியான எருமைத் தயிர்ல, கித்துள் பாணி (Kithul Treacle) ஊற்றி ஒரு 'Natural Dessert' கொடுத்தாங்க பாருங்க... அப்படியே மயங்கி விழுந்துடலாம் போல இருந்துச்சு!

"சாப்பாடு கொடுத்து உபசரிக்கிறதுலேயே நம்மள கிறங்கடிக்கணும்னா, அது மட்டக்களப்பு மக்கள் மட்டும்தான்" அப்படின்னு மனசார வாழ்த்திட்டு வந்தேன். அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும், அந்த மட்டக்களப்பு கைபக்குவம் நமக்கும் வந்துடாதானு பல youtube channels  பார்த்துப் பார்த்து ட்ரை பண்ணிக்கிட்டே இருக்கேன். ஆனா, அந்த மண்ணோட வாசனையும், விறகடுப்புச் சுவையும் வரத்தான் மாட்டேங்குது!
Pages: 1 [2] 3 4 ... 10