11
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 390
« Last post by Thenmozhi on December 08, 2025, 10:33:09 PM »" இனியனும் இனியாளும் "
இனியனும் , இனியாவும் காதல்வயப்பட்டு வாழும்
இயற்கை அழகும் ,செல்வச் செழிப்பும் மிக்க
கிராமம் அது!
இரு வீட்டார் சம்மதிக்க
இனிதே நிறைவேறியது திருமணம்!
இல்லற வாழ்க்கை இனிதே சிறக்க ,
பெற்றெடுத்தனர் இரு அருமையான
குழந்தைச் செல்வங்களை !
இனியனுக்கோ தொழில்நுட்பத் துறையில் வேலை
வீட்டிற்கு தாமதமாக வரும் கணவனை
கண்டித்து வந்தாள் இனியாள்!
யார் கண் பட்டதோ ?
இன்பமான குடும்பத்தில்
மதுவுக்கு அடிமையானான்
இல்லறத்தில் சண்டையும் , சச்சரவும்
நிம்மதியற்ற வாழ்க்கையுமாய் காலங்கள் செல்ல
சொத்துக்கள் விற்க்கப்பட்டன
வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள் இனியாள்
மதுபிரியன் ஆன இனியனுக்கோ அவள் மேல் சந்தேகம்
துளிர்விட துவங்கியது !
கொஞ்சிய உதடுகள் , வசை பாட
முள்ளாய் குத்த துவங்கின அவளை
ஓர் ஞாயிற்றுக்கிழமை
இனியாள் குங்குமப் பொட்டுடனும், பூவுடனும் ,
பௌர்ணமி நிலவாய் புதுப்பொலிவாய் தென்பட்டாள்!
அவர்களின் இனிய திருமண நாள்!
அன்று குடும்பத்துடன் விருந்துண்டு
அங்கே ஒரு சத்தம் " டேய் மச்சான் வாடா பார்ட்டிக்கு போகலாம்" !
அவள் அழகிய வதனத்தைப் பார்த்த இனியன் போக மனமின்றி
"டேய் மச்சான் இன்னைக்கு வேணாம்டா" !
இடைவிடாது சத்தமிட்ட நண்பனின் தொனியால் வீட்டை விட்டு போக தயாரானன்
இனியாளிடம் இன்று ஒருமுறை சென்று வருகிறேன் எனக் கூறி விடைபெற்றான்!
இனியாள் அவனை பிரிய மனமின்றி தலையசைத்தாள்!
கடற்கரைக்குச் சென்ற நண்பர்கள்
மதுவில் மூழ்கி ,கொஞ்சம் கடல் அலையில் விளையாட
பேரலையில் சிக்கினான் இனியன் !
காலன் அவனை அழைக்க
இனியாள் கடைசியாக பார்த்த பார்வை
அவனின் கண்களில் காட்சியாய் வர
கண்ணை மூடினான் இனியன் !
இமை மூட மறுத்த வெறித்த பார்வையில்
குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய
சிந்தனையில் இனியாள் திகைக்க ,
ஆறுதல் கூற கண்ணீர் எட்டி பார்க்க ,
நிலைகுலைந்த வாழ்க்கை
கனவிலும் எதிர்பார்த்ததில்லை !
குடி குடியை கெடுக்கும்
நாசமாவது உடல்மட்டுமல்ல
உங்கள் உயிருக்கும் உயிரான
உங்கள் உறவுகளும் தான்
குடியை தவிர்ப்போம்!

Recent Posts
