Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
12


இணைய நண்பர்கள்

இந்த வார்த்தை பார்த்ததுமே என் மனசில வந்த பல நண்பர்கள்ல இங்க 3 பேர பத்தி சொல்லனும்ன்னு நெனைக்கிறேன்....

2008ல என்னோட முதல் இணையதள நண்பர்கள் பட்டியல் உருவாச்சுனு சொல்லலாம்... அப்போ தெரியல அந்த பந்தம் இன்று வரை தொடரும்ன்னு...

அப்போலாம் ரொம்ப பயம் அதனால யார் கிட்டயும் என்னோட தனிப்பட்ட அடையாளத்த சொல்லிக்க மாட்டேன்..ஆனாலும் இவங்க நம்ம வாழ்க்கைல என்போமே கூட இருந்தா நல்லா இருக்குமேன்னு சிலரோட பாசம் அன்பு எல்லாம் பாக்குறப்ப தோணும் ஆனா இந்த காலத்துல யார நம்புறதுன்னு நெனச்சுட்டு பயத்துல அப்படியே இருந்துருவேன்..

நான் சொல்ல போற முதல் நபர் Thoufiq... சின்ன பையன் .. என் கிட்ட மொதல் மொதல் பேசறப்பதான் 12th முடிச்சு காலேஜ் போக போறான்... ரொம்ப நல்ல மனிதன்... ஏதோ ஒரு குருட்டு தைரியத்துல அவன்கிட்ட என்னோட நம்பர் ஷேர் பன்னினேன்...அவனோட அம்மா பாட்டி தங்கச்சின்னு எல்லார் கிட்டயும் பேச வச்சான்... UG முடிச்சு PG அப்புறம் வேலை அதுக்கு அப்புறம் வெளிநாட்டில வேலை... இப்ப கல்யாணம் ஆகி குடும்பஸ்தன் ஆனால் இன்னமும் எங்க நட்பு தொடர்ந்துட்டு தான் இருக்கு.. ஒரு முறை கூட நேர்ல பாத்தது இல்ல.. ஆனால் ஒருத்தருக்கு ஒருத்தர் எப்போமே support ஆக இருக்கோம்... அது ஆச்சுங்க 18 வருஷம்.... (இவனை பத்தி சொல்ல நிறைய இருக்கு ஆனா அடுத்தவங்களை பத்தியும் சொல்லனும்ல அதனால சுருக்கிட்டேன்)

அடுத்து..சூர்யா
இவரும் Thoufiq போல 18 வருஷமா பழக்கம் ஆனால் அவ்வளவு close இல்லை ... எனக்கு பேச வரும்.. நானும் RJ பண்ணலாம் அப்படினு எனக்கு புரிய வச்ச ஜீவன் இவரு தான்.. FM programs ல எப்படி பேசணும் script worK எப்படி பண்ணனும்ன்னு எனக்கு அடித்தளம் போட்டவர் இவர் தான்... நடுவுல கொஞ்ச காலம் இவரோட பேச முடியல.. அவரோட personal contact எதுவும் நான் வாங்கிக்கலை ஆனா நம்ம FTC ku munnam ஒரு எடத்துல அவரோட குரலை வச்சு அவர identify பண்ணி அவரிடம் மீண்டும் பேச தொடங்கினேன்... இப்போ என் contacts ல இவரும் இணைஞ்சுட்டார்ன்னு சொல்லலாம்...

மூன்றாவதாக நான் சொல்ல போறது... RV அவர அப்படி தான் கூப்பிடுவேன்.. பெருசா இவர்கிட்ட நான் பேச மாட்டேன்... Hi bye அளவு தான் ஆனா ஒரு நாள் நான் என் வேலைய இழந்துட்டேன்... அவரோட company எங்க ஏரியால இருக்குன்னு தெரியும் அதனால எனக்கு வேலை தேடிட்டு இருக்கேன் நண்பர்கள் யாராச்சும் கிட்ட கேட்டு சொல்ரீங்களான்னு கேட்டேன்... 24 மணி நேரம் கூட ஆகல ஆனா ஒரு நல்ல கம்பெனில இருந்து எனக்கு கால் வந்துச்சு அப்போ தான் தெரியும் RV refer பண்ணி இருக்கார்ன்னு... நேர்ல பாத்தது இல்ல.. நமக்கென்னன்னு இல்லாம அடுத்தவர்க்கு ஒண்ணுன்னா உதவி  பண்ற அந்த மனசு இருக்கே அது தான் sir கடவுள்ன்னு சொல்றது போல அந்த நிமிஷம் என் கண்ணுக்கு அவர் கடவுளாகத்தான் தெரிஞ்சாரு....

இப்படியே போய்ட்டு இருந்த என் இணைய நண்பர்கள் வட்டம்... நம்ம FTC ல என்னோட நட்பு வட்டம் ரொம்பவே பெருசாச்சுன்னு சொல்லலாம்... ஒரு ஒரு நபரும் ஒரு ஒரு விதத்துல முக்கியமே.. நம்ம FTC எனக்கு குடும்பம் மாதிரி தம்பிகள் தங்கைகள் நட்புகள்ன்னு அளவில்லாம நல்ல உள்ளங்கள் நிறைய கிடைச்சாங்க... என் சந்தோசம் துக்கம் அனைத்தையும் பகிர ஆரம்பிச்சேன்... எனக்கு real life பிரிஎண்ட்ஸ்ன்னு சொல்லிக்க யாருமே இல்ல ஆனால் இணைய நண்பர்கள் வட்டம் மிக பெரியது.  நேர்ல பாத்துக்காட்டியும் அன்பை பகிர முடியும் அப்படிங்கறதுக்கு சரியான எடுத்துக்கட்டு அப்படினு சொன்ன அது இணைய நண்பர்கள் தான்...

நம்ம FTC ல என்னோட நட்பு வட்டம் பத்தி எழுத தொடங்கினா முடிக்குறது ரொம்ப கஷ்டம் so நான் இதோட நிப்பாட்டிக்கிறேன்..

Social media ல இன்றைய கால கட்டத்துல  நல்லதும் நடக்குது நிறைய கெட்டதும் நடக்குது.. முகம் பாரா மனிதர்களிடம் நட்பு பாராட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை... கரணம் தப்பினால் மரணம்ன்னு சொல்றது போல தான்.. அதனால நாம யாரிடம் எப்படி நட்பு பாராட்டுகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.... கவனம் முக்கியம் பிகிலூ.......






13
இன்னும் பல பிறவிகள் நம்முடைய உறவுகள் வாழும் தொடர்கதை தான்...

இணையம் என்ன கொடுத்துச்சு உனக்குன்னு யாராச்சும் என்னை கேட்டா 'என்னை அறிந்த நண்பர்களை எனக்கு கொடுத்துச்சுன்னு' பெருமையா சொல்லிப்பேன். யாஹூ சாட் காலத்துல இருந்தே எனக்கு இணைய நண்பர்கள் அதிகம் தான். அதில சில நட்புகள் இன்னைக்கு வரைக்கும் இணக்கமா தொடர்புல இருக்காங்க. இணைய நட்புகள்னா தினமும் பார்க்கனும், பேசனும்னு அப்படி இருந்தா தான் அந்த நட்பு தொடரும் அப்படிங்கிற கட்டாயம் எங்களுக்குள்ள இருந்ததில்ல.

காலபோக்குல யாகூ சாட்ல தொடங்கின நட்பு, ஆர்குட்ல தொடர்ந்து, பேஸ்புக் காலம் வரைக்கும் வளர்ந்துச்சு. ஆனா இணையத்தில் தொடங்கி இதயத்தில் தொடரும் பந்தம்னா அது என்னோட Blogger friends தான். Blogger friendsனு சொல்றது கூட அந்நியமா படுது. ஏன்னா இப்போ நாங்க குடும்ப நண்பர்கள், உறவுகளை கடந்த உறவுகள்னு தான் சொல்லனும். என்னுடைய இரண்டு நெருக்கமான தோழிகள் BB, VV(Privacyகாக பேர்களை மாற்றி கொடுத்திருக்கேன்). எல்லாருமே வேற வேற contextல Blogs எழுதுறவங்களா இருந்தாலும் எங்க மூணு பேரையும் ஒன்னா இணைச்ச புள்ளி ‘தமிழ்'. இணையத்தால் இணைந்தோமா தமிழால் இணைந்தோமான்னு கேட்டா பிரிச்சு பார்த்து சொல்ல முடியாது.

அரசியல்ல இருந்து ஆன்மீகம் வரைக்கும் நாங்க பேசாத விஷயங்களே கிடையாது. Blog commentsல ஆரம்பிச்ச நட்பு இப்போ life commitments வரை எல்லாத்தையும் பகிர்ந்துக்கிற உறவா மாறியிருக்குன்னா இணையம் - இதயத்திற்கு போட்டு தந்த பாதைன்னு தான் சொல்லனும். இணையத்தில் மலர்ந்து 16 வருடங்களா தொடர்கிறது எங்களோட நட்பு
எவ்வளவோ நண்பர்கள் இணையத்தின் வழி கிடைச்சிருக்காங்க ஆனா ஏன் இவங்கள முக்கியமா குறிப்பிடுறேன்னா, அவங்க இல்லன்னா நான் இல்ல. மிகைப்படுத்தி சொல்ற மாதிரி இருக்கலாம் ஆனா அதுதான் உண்மை. என் வாழ்க்கைல எல்லா முக்கியமான முடிவுகளை, நான் முடிவெடுக்க முடியாத நேரங்கள்ல தோழியா தோள் கொடுத்து மனுஷியா காது கொடுத்து கேட்ட தோழிகள் ரெண்டு பேரும்.

2017 ஆம் ஆண்டு ஒரு விபத்து காரணமா Blood clotஆகி இதயத்துல அடைப்பு ஏற்பட்டு ஹாஸ்பிடல்ல நான் அட்மிட் ஆகியிருந்த நேரத்துல தேற்ற வார்த்தகளற்று இருந்த என் குடும்பத்துக்கு மொத்த ஆதரவுமா இருந்தது என் தோழிகள் தான். அவங்களோட வேலைகளை பொருட்படுத்தாம, அத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் 2.5 இலட்சம் பணம் உடனடியா உதவி பண்ணி என்னோட குடும்பத்துக்கு ஆறுதலா இருந்தாங்க. பணம் கொடுத்து உதவி செஞ்சதால இதை சொல்லல, அந்த நேரத்துல உறுதுணையா நின்ன அந்த மனுஷங்களை தான் நான் வாழ்க்கையில சம்பாதிச்ச மிக பெரிய சொத்தா நினைக்கிறேன். அந்த நட்பை கொடுத்த இணையத்திற்கு காலத்திற்கும் கடமைபட்டிருப்பேன்.

ஒரே ஊர்ல இருந்தாலும் தினமும் பாத்துக்கிற, தினமும் பேசிக்கிற தோழிகள் நாங்க இல்ல, ஆனா நாம கொஞ்சம் dullஆ இருந்தாலும் எப்படி தான் இவங்களுக்கு மூக்கு வேர்க்குமோ தெரியாது அன்னைக்குன்னு யாரவது ஒருத்தர் கரக்ட்டா கால் பண்ணி என்ன பண்ற, வேலைக்கு போயிட்டு வந்தியா, சும்மா தான்; உன் ஞாபகமா இருந்துச்சு அதான் கால் பண்ணினேனு சொல்லுவாங்க. இந்த நாகரிகம் பார்க்கிற பவிசான நட்பெல்லாம் இல்ல, தலையிலிருந்து கால் வரை, காலைல இருந்து சாயங்காலம் வரை, பொழுது போயி பொழுது விடிஞ்சா என்னென்ன பிரச்சனன்னு அர்ச்சனை மாதிரி கொட்டினாலும் காது கொடுத்து கேட்பாங்க.

அண்ணன் கல்யாணம், அக்கா பொண்ணு காது குத்து, அம்மா அப்பா அறுவதாம் கல்யாணம், ஒன்னுவிட்ட மாமாவோட friend பையனுக்கு கல்யாணம்னு எங்களுக்குள்ள நாங்க அழைக்கப்படாத விழாக்களும் இல்ல, போகாத விஷேசங்களும் இல்ல.

இணையம் பலரை அறிமுகப்படுத்தியிருக்கலாம். சிலர் நினைவுகளாகக் கடந்திருக்கலாம், சிலர் வாழ்க்கையின் ஒரு பகுதியாகத் தங்கியிருக்கலாம். ஆனால் என் சிரிப்பிலும் கண்ணீரிலும் பங்கெடுத்து, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட இந்த தோழிகள்தான் இணையத்தில் தொடங்கி இதயத்தில் தொடரும் உறவுகள்.
14

வயசு சிறுசு... ஆனா அனுபவம் பெருசுனு சொல்லுவாங்க பெரியவங்க!
அவளுக்கு 15 வயசு தான் இருக்கும்.

Pinky face-ல வெள்ளை மனசு மாதிரி ஒரு அழகு.
அந்த அழகுல மயங்கி அவளை follow பண்ண ஆரம்பிச்ச
கூட்டத்துல நானும் ஒருத்தன்.

உள்நாட்டை தாண்டி வெளிநாடு வரைக்கும் அவளுக்கு ரசிகர்கள்.

யாரோ gossip பேச வருவாங்க, யாரோ நண்பர்களை தேடி வருவாங்க,
யாரோ சும்மா எட்டிப் பார்ப்பாங்க. ஆனா வந்தவங்க நிறைய பேர்,
திரும்பிப் போகாம தங்கியவங்களும் நிறைய பேர்.

அவளுக்கு கவிதை பிடிக்கும்னு கேட்டு, பள்ளிக்கூட தமிழை மறக்காம
சுவிட்சர்லாந்துல இருந்தே ஒரு கவிதை எழுதி அனுப்பினேன்.

பாவி… அதை publish பண்ணி “நாலு பேராவது பாராட்டுறாங்க”ன்னு
எனக்கே confidence ஏத்திட்டா.
அடுத்தது பாடல், lyrics, fun, jokesன்னு impress பண்ண முயற்சி.

ஆனா கடைசில கிடைச்சது காதலி இல்ல…
தங்கச்சிகள், அண்ணன்கள், மச்சிகள், நண்பர்கள்.

அவளோட Daddy-யும் வேற லெவல்.
password கொடுத்து கூட்டம் கூட்டி, அன்பா கண்டிச்சு,
பொறுப்பைக் கற்றுக்கொடுத்து வழி காட்டுற மனுஷன்.

ஒருநாள் “அவர்தான் Gab”ன்னு சொன்னதும் சின்ன shock.
அப்போ தான் புரிஞ்சது character-ஐ கொஞ்சம் கவனமா handle பண்ணணும்னு.

சில நேரம் “ரொம்ப நேரம் இங்க செலவழிக்கிறேனோ?”ன்னு தோணியிருக்கு.
ஆனா கூட்டி கழிச்சு பார்த்தா, இழந்ததைவிட சம்பாதிச்சது தான் அதிகம்.

Keyboard தட்டல்களில் ஆரம்பிச்ச பயணம் கைதட்டல்கள் வரைக்கும் வந்திருக்கு.
Audio editing, online radio, writing, hosting, friendships எல்லாமே பரிசுகள்.

ஒரு காலத்துல பிரபலங்களைத்தான் முன்னுதாரணமா பார்த்தேன்.
ஆனா இங்க சாதாரண மனிதர்களோட குரல், எழுத்து, பேச்சு தான் என்னை அதிகமா ஈர்த்தது.
RJ-கள், writers, poets, speakers, singers அனைவரும் inspire பண்ணினாங்க.

HTML, CSS, JavaScript, Linux, Binary numbers தாண்டி
மனித உணர்வுகளையும் இணைக்க முடியும் என்பதற்கு
என் வாழ்க்கை FTC-யே சாட்சி.

இன்று இந்த 15 வயது இளம்பெண் இணையத்தளம் மட்டுமல்ல  ;
ஆயிரம் நட்புகள், நினைவுகள், திறமைகள் இணைந்த ஒரு உலகம்.

அந்த உலகத்தின் பெயர் Friends Tamil Chat.

இணையத்தில் தொடங்கி இதயங்களில் வாழும் இந்த உறவு
இன்னும் பல ஆண்டுகள் தொடரட்டும்.

FTC நண்பர்களாக… நண்பர்களால்… நண்பர்களுக்காக!
15





‎நட்பை ஒரு கமிட்மென்ட் ஆக ஃபீல் பண்ண ஆரம்பிச்சப்போ தான் நான் லைஃப்ல தனியாக ஆரம்பிச்சேன். ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் எங்கேயுமே நான் குளோஸ்னு சொல்லிக்க எந்த பிரண்ட்ஸும் இல்லாம இருந்தேன். ஆனா நமக்கு பேச ஒரு பெர்சன், நம்மள புரிஞ்சுக்க ஒரு பெர்சன் வேணும், ஆனா அது கமிட்மென்ட் ஆக இருக்கக் கூடாதுனு நினைச்சேன். அப்போ தான் ஆன்லைன் சாட்ல பிரண்ட்ஸ தேடி வந்தேன்.
‎ஆன்லைன் பிரண்ட்ஷிப் ஒரு பொழுதுபோக்கு மட்டும் அல்ல, நமக்காகவே அங்க சிலர் உண்மையா இருக்காங்கனு புரிஞ்சது FTC வந்ததுனால தான்.

‎யாரும் இல்லைனு வந்த எனக்கு கிடைச்சது ஒருத்தர் ரெண்டு பேர் இல்லை, நிறைய பேர். நான் ஸ்பெசிபிக்கா பேசமாட்டேன், எல்லார் மேலேயும் பாசம் வைப்பேன், செல்லமா கூப்பிடுவேன். அதுல நிறைய கருத்து வேறுபாடுல பிரிந்த நட்பும் உண்டு, எவ்வளவு சண்டை போட்டாலும் எப்போதும் சந்தோஷத்துக்கும் கஷ்டத்துக்கும் கூட நிக்கிற பிரண்ட்ஸும் உண்டு. அண்ணன், தம்பி, சிஸ் (sis), அப்பான்னு கிடைச்ச உறவுகளும் அதிகம்.

‎இணையதள நட்புகள் வாழ்க்கையில ஒரு சேப்டரை (chapter) கடந்து போகலாம், ஆனா அந்த நினைவுகள் எப்போதும் நம்ம இதயத்தோடு சேர்ந்து பயணிக்கும். இரவு பகல்னு எப்போ வந்தாலும் என்ன மனசால கூப்டு சாப்ட்டியா, தூங்கலையானு கேட்டு ரியல் லைஃப்ல எனக்கு கிடைக்காத அக்கறையும் பாசமும் இங்க கிடைச்சது.

‎எனக்கு FTC பயணமும் உறவுகளும் பொறுமை என்ற ஒரு விஷயம் நல்லா கத்துக் கொடுத்திச்சு. ஸ்டார்ட்டிங் வந்தப்போ எது நல்லது, எது கெட்டது, எப்படி இருக்கணும், எப்படி ஹேண்டில் பண்ணனும், எங்க கோவப்படணும் எதுவுமே தெரியாம என்னையும் ஹர்ட் பண்ணி அழுத நாட்கள் உண்டு. ஆனால் இத எல்லார்தையும் கத்துக் கொடுத்தது FTC தான். இங்க மட்டும் இல்லை, ஏன் வாழ்க்கைக்கும் அது பெரிய மாற்றம் கொண்டு வந்திருக்கு.
‎வாங்க போங்க சொல்லி உறவுகளா இருந்து, வாடி போடி சொல்லி கூப்பிடற நட்புகள் வரை நான் சம்பாதிச்சுட்டேன்.

‎என் லைஃப்ல எவ்வளவு தூரம் FTC-ஓடு பயணிப்பேனோ தெரியாது, ஆனால் இங்க கிடைச்ச நினைவும் நட்புகளும் காலம் தோறும் என்கூடவே இருக்கும். நான் எவ்வளவு வருஷம் கழிச்சு வந்தாலும் என்ன சந்தோஷத்தோட வரவேற்க என் நட்புகள் இங்கு இருக்கும். இது என் நம்பிக்கை.

16
எங்க பட்டாளம் இணையத்தில் தொடங்கி இதயத்தில் தொடரும் பந்தங்கள் ன்னு சொல்லணும். நாங்க மொத்தம் 7 பேரு. தமிழ், கயல்(நானு), u2brutus (குரங்கு தம்பி), Eren (எரும தும்பி), ஜெய், முஹம்மத்(momo), கோபி...இதுல இன்னைக்கு வர தொடர்ந்து வரது தமிழ், நானு, eren, u2brutus. Eren and u2brutus எங்க பாசமான பாயசம் கொடுக்குற தொல்லையான தங்க தம்பிங்க

தமிழுக்கும் எனக்கும் நெருக்கம் ரொம்ப அதிகம். எதுனாலும் நா அவ கிட்ட பகிர்ந்துக்கலாம்... எதுலையும் என்ன judge பண்ணவே மாட்டா. நா பண்ற திருட்டுத்தனம் நானே அவ கிட்ட சொல்லலனாலும்... நீ சரி இல்ல ன்னு சொன்னதும் எல்லாத்தையும் கொட்டிடுவேன்.😁 பேச்ச வச்சே கண்டுபிடிச்சுடுவா. எங்க 7 பேரையும் கட்டிப்போட்டு இருக்கி வைக்கிற கயிறு போல அவ.... அவ தான் எங்க gang leader 😂... நாங்க பேச ஆரம்பிச்சா கிட்ட தட்ட 2 மணி நேரத்துக்கு மேல தான் போகும். அது வேற voice chat அ கேக்கவே வேணாம்,... எல்லா நேரமும் அரட்டை தான். வேலை ஏதாவது வந்துடுச்சுனா பாட்டுக்கு vibe mode க்கு போய்டுவோம்... சாமி பாட்டுக்கு கூட vibe பண்ணுவோம்...யாரையும் என்ன எதுவுமே சொல்ல விடவும் மாட்டா... சரியான கூட்டு களவாணிங்க நாங்க..ஆனா ஊனா கோபி ஜெய் கிட்ட சண்ட போட்டு id delete பண்ணிடுவேன் 🫣 ஆரம்பத்துல தமிழ் தான் சமாதானம் பண்ணுவா... அப்புறம் ரெண்டு நாள்ல நானே id create பண்ணிடுவேன் ன்னு அவளே என்ன கிண்டல் பண்ண ஆரம்பிச்சுடா 🤧 கிட்ட தட்ட 10 id delete பண்ணிருப்பேன் 😁

தமிழும் u2 வும் மாறி மாறி செம்மையா சண்ட போட்டுபாங்க.... அதே மாதிரி நானும் eren னும் அடிச்சிக்கிட்டு இருப்போம்... அக்கா ன்னு தெரியாம மரியாத கொடுத்துட்டா உடனே ச்சா ச்சா உன்ன யாரு கூப்பிட்டா தமிழ் அக்கா வ கூப்பிட்டேன் ன்னு மொக்க பண்ணிடுவான். ஆனா எங்கயாவது அடி வாங்கிடான்னா உடனே 🤙 call வந்துடும் 😂.... எனக்கு ஒரு bgm தான் போகும்... "வா வா வந்து என் பக்கத்துல உட்காரு" ... இப்போ எங்க அடி வாங்குன ன்னு நல்லா கேட்டுட்டு அடுத்த நாள்... Family meeting போட்டுடுவோம் 😁தமிழ் u2 க்கு update பண்ணனுமே... அது நம்ம முதல் கடமை இல்லையா....இந்த situation ship, ghosting, benching, இத பத்தி கேள்வி பட்டது அவன் கிட்ட இருந்துதான் 😂 ஏதாவது techni related சந்தேகம் ன்னா அத தீர்க்குற எனக்கு வாய்த்த அடிமை இவன் தான்... இவன் எனக்கு இணையத்தையும் தாண்டிய அன்பு தம்பி. நல்லது கெட்டதுல எல்லாம் கூடவே இருந்தான்... இனியும் இருப்பான். தினமும் பேசிக்கமாட்டோம் ஆனா ரொம்ப நாள் பேசலனா call 🤙 பண்ணதும் முதல் கேள்வி " இருக்கியா? இல்ல செத்துட்டியா!? 👻 அவ்வளவு பாசம். இந்த எருமைக்கு ராத்திரி 10 மணிக்கு கூட kinderjoy order பண்ணிருக்கேன சந்தேகத்த சொன்னதுக்கு 😂. எனக்கு கூட பொறந்த தம்பி இல்லாத குறைய தீர்த்து வச்சுட்டான் ( தம்பி ன்னா extra வா நம்ம உயிர எடுக்குற இம்சைன்னு)

இணையம் இணைத்த சில பந்தம் அதில் எனக்கு eren துரு பிடிக்காத சொக்க தங்கம் (இது ice தான் பா)🤭
17
ஹாய் நண்பர்களே! இந்த வார தலைப்பை பார்த்ததும் எனக்கு அவ்வளவு சந்தோஷம். இணையம் என்று சொன்னதும் எனக்கு நினைவு வந்தது நம்மளோட ftc தான். நான் ஃப்ரீ டைம்ல போரடிக்குதுன்னு ஜஸ்ட் சாட் பண்ண தான் வந்தேன். Ftc க்கு வந்த பின்னாடி தான் தெரிஞ்சுச்சு FTCல fm  இருக்குன்னு. அப்புறம் ftcல சாங்ஸ் கேட்க ஆரம்பிச்சேன்.  இதனால் நான் தினசரி ftc வர ஆரம்பிச்சேன். ப்ரோக்ராம்ஸ் கேட்டுக் கொண்டு நண்பர்களோடு சாட் செய்ய ஆரம்பித்தேன்.

அப்போதான் என்னுடைய உடன்பிறவா தங்கை தேன்மொழியைச் சந்தித்தேன். தேன்மொழி  தங்கையின் அன்பான பேச்சு ftcல் என்னை ரெஜிஸ்டர் செய்ய தூண்டியது. நானும் ftcல் ஒரு யூசர் ஆக மாறினேன். நான் நைட் ஒர்க் பார்க்கும் போது தேன்மொழி சிஸ் வருவாங்க. அப்ப நாங்க பேசிப்போம். ஒர்க் முடிஞ்சா சாப்பிட்டீங்களா ? என ரெண்டு பேரும் கேட்டு எங்களோட கேரிங்க வெளிப்படுத்திக் கொள்வோம்.

அப்புறம் எனக்கு இன்னொரு தோழி இருக்காங்க. அவங்க என்னோட பெஸ்ட் பிரண்ட் ஊஞ்சல் தான். ஒரு நாள் ftcல சாங் கேட்டுகிட்டே விற்பனை பண்ணிட்டு இருந்தேன். அந்த சாங் பாத்தீங்கன்னா மிருதன் படம் மிருதா மிருதா சாங். அப்பதான் ஃபர்ஸ்ட் டைம் ஊஞ்சல் கூட பேசினேன். அந்த ஃபர்ஸ்ட் டாக்க என்னால மறக்க முடியாது.

ஊஞ்சல் ,தேன்மொழி இரண்டு பேரும் நண்பர்கள் என்று எனக்கு முன்ன தெரியாது. அப்புறம் தான் தெரியும். அவங்களோட நட்பு சாதாரண நட்பு இல்லை. ரொம்ப ஆழமான நட்புன்னு கூட சொல்லலாம். எப்படின்னா ஊஞ்சல் சொல்ல நினைக்கிறத தேன்மொழி சொல்லுவாங்க தேன்மொழி சொல்ல நினைக்கிறது ஊஞ்சல் சொல்லுவாங்க. அந்த அளவுக்கு அவங்க ரெண்டு பேரும் அவங்க அவங்க மனச புரிஞ்சு வச்சிருப்பாங்க. இவங்க ரெண்டு பேர் கூட என்னோட பிரண்ட்ஷிப் இருக்குன்னு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்.

ஒரு டைம் பாத்தீங்கன்னா என்னுடைய மனைவி என்னோட குழந்தை ரெண்டு பேருக்குமே உடம்பு முடியல. இது என்னோட நண்பி ஊஞ்சல் தேனு சிஸ் கிட்ட சொன்னேன். அப்ப அவங்க ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு டிப்ஸ் சொன்னாங்க. என்னைக் காட்டிலும் அவங்க ரொம்ப பதறிப் போனாங்க. என்னோட மனைவியும்  குழந்தையும் சரியாகும் வரை நல்லா இருக்காங்களா என்ன விசாரிச்சுட்டே இருந்தாங்க. அவங்க கேட்டது அவ்வளவு சந்தோஷமாகவும் ஆறுதலாகவும் இருந்தது.

இப்படி  நண்பர்களை கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி. சமீபத்துல என்னுடைய மனைவிக்கு பிறந்தநாள் வந்துச்சு. அப்ப எனது தங்கை தேன்மொழி எனது  மனைவிக்காக ஒரு கவிதை எழுதி அண்ணா அண்ணியிடம் இந்த கவிதையை காட்டுங்க எனது பிறந்தநாள் பரிசு அண்ணா என்று சொன்னாங்க. நானும் எனது தங்கை தேன்மொழி எழுதிய கவிதையை என் மனைவியிடம் காண்பித்தேன். என் மனைவி அந்த கவிதையை பார்த்ததும் எல்லையற்ற மகிழ்ச்சியில் உங்களுக்கு இப்படி ஒரு தங்கையா என என்னை பாராட்டினாங்க..

ஊஞ்சல் இவங்க சாட்ல யாராச்சும் என்ன தப்பா பேசினாலும் இல்ல அடிச்சாலும் அவங்கள சும்மா விட மாட்டாங்க. அவரு என்னோட பிரண்டுன்னு முன்ன வந்து நிப்பாங்க. அப்புறம் பாத்தீங்கன்னா போன வார ப்ரோக்ராம்க்கு கதை எழுத சொல்லி ரொம்ப என்கரேஜ் பண்ணாங்க. அவங்க இல்லன்னா நான் ரைட் பண்ணி இருக்க மாட்டேன். அந்த ஸ்டோரிய fmல கேட்கிறப்ப அவ்வளவு சந்தோஷம் எனக்கு. தேன்மொழி சிஸ்டர்  கவிதை எழுத சொல்லி என்கரேஜ் பண்ணாங்க. அப்படி தான் இந்த வாட்டி OU கவிதை எழுதினேன். தேன்மொழி ஊஞ்சல் இவங்க ரெண்டு பேரும் எனக்கு கடவுள் தந்த வரப்பிரசாதமா நான் நினைக்கிறேன். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ftc-கும் நெஞ்சம் மறப்பதில்லை ப்ரோக்ராம்க்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ❤️
18
இணையம் என்ற உலகம் பல உறவுகளை உருவாக்குகிறது
அதில் சில உறவுகள் இரத்த பந்தத்தை விட ஆழமானதாக மாறிவிடுகின்றது
வாழ்க்கை சில நேரங்களில்ல  நாம் எதிர்பார்க்காத இடங்களில்
அழகான உறவுகளை பரிசளிக்கிறது.

அப்படித்தாங்க ஒரு நாள் அரட்டையடிக்க ஆள் இல்லனு ஒரு சாட் ரூம் போனேன்
பொண்ணு id க்கு ஒரு ஹாய் அனுப்பினேன் .. உடனே ரிப்ளை வந்திச்சி
பேர் ஊர் எல்லாம் ஷேர் பண்ணிக்கிட்டோம் . 10 நிமிஷம் தான் .. அவங்க போறேன்னு சொன்னாங்க
சரி அக்கா னு சொன்னேன் ...என்னனு சொன்னனு எதிர் கேள்வி ... அக்கா னு சொன்னேன்னு சொல்ல
அவங்க அவ்ளோ ஹாப்பி ஆயிட்டாங்க

அதுக்கு அப்புறம் தினமும் சாட் தான்...நாட்கள் செல்லச் செல்ல அந்த உரையாடல்கள் நம்பிக்கையாக மாறின
என் மகிழ்ச்சிகளை கேட்டு சிரித்தவளும், என் கவலைகளை கேட்டு ஆறுதல் சொன்னவளும் அவள்தான். இரத்தத்தில் பிறக்காதிருந்தாலும், பாசத்தில் பிறந்த சகோதரியாக என் வாழ்க்கையில் இடம் பிடித்தாள்.

தொலைவில் இருந்தாலும், அவளின் அக்கறை எப்போதும் அருகில் இருப்பதைப் போல உணர வைத்தது. அவங்க இருந்தது வேற ஊரு .. கல்யாணத்துக்கு கூப்பிட்டாங்க போக முடியல . அப்புறம் அவங்க வெளிநாடு போய்ட்டாங்க . குழந்தை பிறந்தது ..போட்டோ ல அனுப்பினாங்க ....

ஒரு நாள் நான் வேலைக்காக அவங்க இருந்த ஊருக்கு போயிருந்தேன் . அவங்க husband அண்ட் குட்டீஸ் வந்திருக்காங்க னு சொன்னாங்க பட் அவங்க வர முடில  . எனக்கு குட்டிஸ் பாக்க ஆசை.  husband அவர் வீட்ல தான் இருக்காரு வீட்டுக்கு போ மீட் பண்ணுனு சொன்னாங்க ... அவங்க இல்லாம எப்படி ,  husband  இந்த உறவை எப்படி எடுத்துப்பாரோ னு ஒரு சந்தேகம் , நீ போகலான பேசமாட்டேனு சண்டை வேற ..

ஒரு வழியா குட்டிஸ்க்கு ஒரு டிரஸ் எடுத்திட்டு போனேன், விக்ரமன் படம் எல்லாம் உண்மைதாங்க . அவ்ளோ அன்பா உபசாரிச்சாங்க ..எனக்கு என்ன புடிக்கும்னு தெரிஞ்சிக்கிட்டு அதை சமைச்சி வெச்சிருந்தாங்க அவங்க husband வீட்டுக்காரங்க ...என்னோட ரத்த பந்தமும் அப்படி பண்ணுவாங்கள்னு எனக்கு டவுட் .

மனசே இல்லாம என்ன வழியா அனுப்பி வெச்சாங்க ...இந்தியா வந்தப்போ என் வீட்டுக்கு வந்தாங்க என் அம்மா கூட சாப்டாங்க, பேசினாங்க , உடன் பிறந்தா தான் சகோதரியானு தோணிச்சு ?

அப்படிப்பட்ட ஒரு உறவுதான் இணையம் வழியாக என் இதயத்தில் நுழைந்த சகோதரி உறவு.

இணையத்தில் தொடங்கிய இந்த உறவு, காலப்போக்கில் குடும்ப பாசமாக வளர்ந்தது. இன்று "சகோதரி" என்று அழைக்கும் அந்த ஒரு வார்த்தைக்குள் அன்பும், அக்கறையும், நம்பிக்கையும், மரியாதையும் நிறைந்திருக்கின்றன.

உறவுகள் இரத்தத்தால் மட்டுமல்ல, உண்மையான மனதாலும் உருவாகின்றன என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்தது இந்த இணைய வழி சகோதரி உறவுதான். என் வாழ்வின் அழகான பரிசுகளில் ஒன்றாக அவள் என்றும் இருக்கிறாள்

இப்படி பல பல நட்புக்களையும் , பல பல நல்ல உறவுகளையும் இணையம் தந்திருக்கு ,
சில நேரம் கசப்பான நிகழ்வுகளையும் தந்திருக்குதான் . ஆனா ,
அது தான் இந்த அழகான உறவுகளுடைய மதிப்பை இன்னும் உயர்த்துது

உறவுகள் பிறப்பால் உருவாகலாம்; ஆனால் சில உறவுகள் மட்டும் இதயத்தால் பிறக்கின்றன. அப்படிப் பிறந்த என் அன்புச் சகோதரி, என் வாழ்க்கையின் சில பக்கங்களை அழகாக்கியவள்


இந்த பதிவை எழுத வைத்த  தோழி enigma க்கு நன்றி.


****Joker***

19
நான் இப்போ சொல்லப் போறது என்னோட கதை இல்லை. என்னோட ஒரு தோழி என்கிட்ட பகிர்ந்த உண்மை சம்பவம். அந்த சம்பவம் இணைய நண்பர்கள் பற்றிய என்னோட பார்வையையே மாற்றிடுச்சு.

அரவிந்த், நந்தினி இருவரும் சமூக வலைதளத்தின் மூலம் பழகிய நண்பர்கள். நேரில் பார்த்ததே இல்லை. ஆனா தினமும் பேசிக்கிற அளவுக்கு நல்ல நட்பு இருந்தது.

எப்போதும் ஜாலியா பேசிக்கிட்டு இருக்கும் நந்தினி, கொஞ்ச நாளா சோகமான மெசேஜ்களே அனுப்ப ஆரம்பிச்சா.
"எனக்கு யாருமே இல்ல..."

"எவ்வளவு முயற்சி பண்ணாலும் எதுவும் சரியா நடக்கல..."
"நான் இருந்தாலும் இல்லாட்டியும் யாருக்கும் வித்தியாசம் இல்லை..."
முதல்ல அரவிந்த் சாதாரண மனக்கஷ்டம்னு நினைச்சான். ஆனா நாளுக்கு நாள் அவளோட பேச்சுல இருந்த வலி அதிகமா தெரிய ஆரம்பிச்சது.
அப்புறம் அவகிட்ட மெதுவா பேசி கேட்டப்போ தான் உண்மை தெரிய வந்தது.
வீட்டுல பொருளாதார பிரச்சினை. அப்பா வேலை இழந்திருந்தார். தினமும் சண்டை. கல்லூரில சில பேர் அவளோட குடும்ப சூழ்நிலையை வைத்து கிண்டல் பண்ணியிருந்தாங்க. படிப்புலயும் எதிர்பார்த்த மார்க் வரல.
இதெல்லாம் சேர்ந்து அவளை ரொம்ப மனஅழுத்தத்துக்கு தள்ளியிருந்தது. யாரிடமும் மனசு விட்டு பேச முடியாம தனக்குள்ளேயே புழுங்கிக்கிட்டு இருந்தா.

ஒருநாள் இரவு திடீர்னு அரவிந்த்க்கு ஒரு மெசேஜ் வந்துச்சு.
"இனி என்னால முடியாது... எல்லாத்தையும் முடிச்சிடலாம்னு தோணுது..."
அந்த மெசேஜை பார்த்த அரவிந்த் அதிர்ச்சியாயிட்டான். உடனே அவளை தொடர்பு கொண்டு பேச ஆரம்பிச்சான். அந்த இரவு முழுக்க அவளை தனியா விடாம பேசிக்கிட்டே இருந்தான்.

வாழ்க்கையில எந்த பிரச்சினையும் நிரந்தரம் இல்ல, எல்லாத்துக்கும் ஒரு தீர்வு இருக்கும், நீ தனியா இல்லன்னு நம்பிக்கை கொடுத்தான்.
அடுத்த நாள் அவளோட நெருங்கிய உறவினர்களிடம் விஷயத்தை சொல்லி உதவி கிடைக்க ஏற்பாடு பண்ணினான். குடும்பத்தினரும், மனநல ஆலோசகரும் சேர்ந்து அவளுக்கு ஆதரவா இருந்தாங்க.

கொஞ்சம் கொஞ்சமா நந்தினி பழைய மாதிரி மாற ஆரம்பிச்சா. படிப்புல கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களோட கல்லூரியை முடிச்சா. பிறகு ஒரு நல்ல நிறுவனத்துல வேலைக்கும் சேர்ந்தா.

அவளோட வாழ்க்கையில நடந்த இந்த மாற்றத்தை மறக்காம, பிற இளைஞர்களுக்கும் உதவணும்னு மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்ல தன்னார்வலரா பங்கேற்க ஆரம்பிச்சா.
அப்படியொரு நிகழ்ச்சில பேசும்போது அவ சொன்ன வார்த்தை இன்னைக்கும் நினைவுல இருக்கு

"என்னை நேர்ல பார்த்ததே இல்லாத ஒரு இணைய நண்பன், நான் இழந்த நம்பிக்கையை திரும்ப கொடுத்தான். அந்த ஒரு நட்பு இல்லனா இன்று நான் இங்க நின்னு பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்."
இந்தக் கதையை என் தோழி என்கிட்ட சொன்னப்போ, ஒரு விஷயம் புரிஞ்சது.

இணையத்தில் தொடங்குற எல்லா நட்பும் வெறும் டைம் பாஸ் இல்லை. சில நட்புகள் நம்ம சிரிக்கும்போது கூடவே சிரிக்கும். நம்ம விழும்போது கை கொடுத்து தூக்கி விடும். அப்படிப்பட்ட நட்புகள் தான் இதயத்தில் தொடரும் உண்மையான பந்தங்கள்.
😇💜💙💚💛🧡💯
20


ftc  இணையத்தளத்தில் எனக்கு அன்பான நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள்  கிடைத்திருக்கிறார்கள். எல்லா நண்பர்களும் என்னுடன் அன்பாகவும், அறிவுரை கூறுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

நான் ஏதும்  மனசு கவலைப்பட்டால், "அதை எல்லாம் விட்டுவிடு நாங்கள் இருக்கிறோம்" என்று கூறுவார்கள் ஊஞ்சல்,சேது,ஈவில், கணிதன்.இவர்களிடம் தான் நான் mostly பகிர்ந்து கொள்வேன்.
ஈவில் நண்பனாக பல அறிவுரைகள்,ஆறுதல்கள் கூறியமை இன்னும் இணையத்தில் நான் நிலைத்து இருக்கின்றேன்.ஈவிலிடம் இருந்து கற்றுக் கொண்ட விடயங்களை இப்போ நான் என் நண்பர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.

எனக்கு இந்த உலகத்தில் அம்மா, அப்பாவிற்கு அடுத்து பிடித்த பந்தம் என்று சொன்னால், அது அண்ணா. அண்ணாவின் திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட தனிமைதான் எனக்கு ftc  தளத்துக்கு தமிழ் நண்பர்கள் தேடி வரக்காரணம்.அந்த தனிமை ftc நண்பர்கள்,சகோதரர்கள் எல்லாரும் போக்கினது மிக்க மகிழ்ச்சி. இந்த வாரம் நான் அந்த பந்தத்தில் ஒன்றான அண்ணா பற்றி எழுதப் போகிறேன்.

maara guest idஇல் வந்தாங்க. அப்போ நாங்க normal ஆகத்தான் பேசினோம்.register id சேது என்று வந்தாங்க.வரும்போது அவங்க sisன்னு பேசினாங்க.அப்படியே பேசிகிட்டிருந்தோம்.

ஒருநாள்  familyபற்றி பேசினோம்.நான் என்னுடைய அண்ணா, அம்மா, அப்பா என்று பேசும்போது சேது  "எனக்கு தங்கையும் இல்லை.பெண் குழந்தையும் இல்லை.எனக்கு தங்கச்சி இருக்கனும்னு ஆசை" என்று சொன்னார்.அந்தத் தருணம் நான் ஏதோ என் இதயத்தில் ஒரு பாசத்தை உணர்ந்தேன். "நான் உங்களுக்கு தங்கச்சியா இருக்கிறேன் சேது அண்ணா"என்று சொன்னேன் அந்த நொடி.அன்றிலிருந்து எங்களுடைய பந்தம் ஆரம்பித்தது.

எனக்கு சேது அண்ணாவிடம் பேசும்போது என் அண்ணாவிடமே பேசுவது போல் ஒரு பயம் இருக்காது. ftcல்  நிறைய அண்ணாக்கள் இருந்தாலும் ,நான் எல்லாம் shareபண்ணி பேசுறது சேது அண்ணாவிடம் தான். என்னுடைய பாசம் உண்மையென்று புரிந்துகொண்ட அண்ணா.

சிலசமயம் மணிக்கணக்காகப் பேசிக்கொண்டு இருப்போம்.
அந்த உணர்வு எப்படி இருக்குமென்றால் நான் என் அண்ணாவுடன் இருக்கிற மாதிரி எனக்கு இருக்கும். அண்ணிக்கு எங்களுடைய அண்ணா தங்கை  உறவு தெரியும்.

அண்ணாவையும் எழுதப் பண்ணனும்னு ஆசையில்  கேட்டபோது "ஐயையோ சிஸ்மா என்ன விட்டிடுங்க எனக்கு இது சரி வராது"வந்தோமா chatபண்ணோமா,songs vibeபண்ணோமா என்று இருக்கேன்னு சொன்னாங்க."இல்லை முடியாதுன்னு எதுவுமில்லை. நீங்க மதுரைத்தமிழ் தானே பண்ணுங்க நான் support பண்ணுறேன்" என்று சொன்னேன்.இப்போ write பண்றாங்க.மிகவும் அழகான தமிழில் அண்ணா கவிதைகள்,nm post பார்க்கும் போது சந்தோசமாக இரு‌க்கு‌ம்.

அண்ணாவிற்கு வேலையில் promotion கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.சில நேரத்தில் நான் அண்ணிக்குத்தான் support பண்ணுவேன்.

சேது அண்ணா  முருகபக்தன் யாத்திரையெல்லாம் போய் வந்தாங்க.அண்ணா நல்லா cook பண்ணுவாங்க.dish pic போடுவாங்க.அண்ணிக்கு தான் thanks சொல்லனும் chatக்கு அண்ணாவை விட்டதால் தான் எனக்கு சேது அண்ணா கிடைத்தாங்க.

oonjal sis எனக்கும் அண்ணாக்கும் friend. நாங்க 3பேரும் கலாய்த்துப் பேசுவோம்.எங்களோட memories, family பற்றி share பண்ணிக்குவோம்.ftc program,forum post பற்றிப் பேசுவோம்.fight பண்ணதில்லை.நமக்குள்ள ஒரு புரிந்துணர்வு இருக்கு.

sometimes எங்க அண்ணா கூடவும் ,சேது அண்ணா கூடவும் பேசலனா missing feel இருக்கும்.ரெண்டு பேருக்கும் msg பண்ணிடுவேன்.

ftcஇல் நானும் சேது அண்ணாவும் பேசுறத பார்த்து சில‌ friends சொல்லி இருக்காங்க அழகான அண்ணா தங்கச்சி உறவு என்று.சில‌பேரு இது உண்மையான பாசமா என்று கேட்டும்  இருக்கிறாங்க.நானும் சேது அண்ணாவும் உடன் பிறக்கவில்லை எ‌ன்றாலு‌ம் நம்ம மனதால் இணைந்த உறவு.எங்களுக்கு அதன் உ‌ண்மை உணர்வு புரியும்.

இணையதளத்தில் இணைந்த பந்தங்கள் என் இதயத்தில் தொடரும்.இவ்வாறான பாசமான பந்தத்தை தந்த ftcகும் ,இந்த தலைப்பை கொடுத்த nm teamகும் நன்றிகள்.

முக்கிய குறிப்பு: உங்கள் பெயர் குறிப்பிடவில்லை எ‌ன்று அன்பான நண்பர்களே,அண்ணாக்களே குறை நினைக்க வேண்டாம்.நீங்களும் என் இதயத்தில் இருப்பீர்கள்.உங்கள் நினைவுகளை உங்கள் பிறந்தநாள் wish இல் சொல்லுவேன்.
























Pages: 1 [2] 3 4 ... 10