Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
கவிதைகள் / Re: Oh Butterfly 🦋
« Last post by JsB on July 05, 2026, 07:07:41 PM »
Oonjal chelam,
பட்டாம்பூச்சி பறந்தது தோட்டத்தில்...
உங்கள் வார்த்தைகள் பறந்தது இதயத்தில்...
ரோஜாவை ரசித்த கண்கள்,
அந்த ரசனையை எழுத்தாக மாற்றிய மனம்...
இயற்கையையே பேச வைத்துவிட்டது.
சில பட்டாம்பூச்சிகள் பூவை மட்டுமே தொடும்...
ஆனால் உங்கள் எழுத்து வாசிப்பவர்களின் மனதையே தொட்டுச் செல்கிறது.
வாழ்த்துகள்... இன்னும் பல இயற்கைக் கவிதைகள் மலரட்டும்.
12
நம்பிக்கை உடைவது வலிக்கும்...
ஆனால் அந்த வலியே யாரை நம்ப வேண்டும் என்று கற்றுத்தரும்.
13
அருமையான பதிவு. வாழ்க்கையில் வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் அல்ல; நல்ல மனம், விடாமுயற்சி, சரியான அணுகுமுறையால் கிடைப்பது என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.
14
அருமையான சிந்தனை! 👏 வசதியை விட சுதந்திரத்தின் மதிப்பு பெரியது என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
18
கவிதைகள் / Re: மழையின் மடியில்!!
« Last post by Thenmozhi on July 05, 2026, 02:15:06 PM »
மழையின் மடியில் மனம் நனைந்ததே !
மண்ணின் மணத்தில் நினைவு மலர்ந்ததே !
துளித் துளியாய் நம்பிக்கை பொழிகிறதே !
துயர மேகங்கள் தூரம் விலகுகிறதே !

பசுமை போர்வை பூமி போர்த்துகிறதே !
பறவைக் குரலில் காலை விடிகிறதே !
இயற்கை பாடும் இனிய ராகத்தில்,
இதயம் மலர்கிறதே மழையின் மடியில் !
19
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on July 05, 2026, 10:38:42 AM »
20

இதைப் பார்த்தாலே...இதைப் பார்த்த நொடி...

இதயம் ஒரு நொடி நின்றுவிட்டதோ என்று தோன்றும்...
உடலெங்கும் மின்னல் ஓடியதுபோல் சிலிர்ப்பு பரவும்...
கண்கள் வேறு பக்கம் திரும்பினாலும்,
மனம் மட்டும் அதிலேயே சிக்கிக் கொள்ளும்.
பலருக்கு அது ஒரு சாதாரண உயிர்...
எனக்கோ அது சொல்ல முடியாத பயத்தின் உருவம்.
அது என்னைத் தீண்டவில்லை...
எனக்குத் தீங்கும் செய்யவில்லை...
ஆனால் அதை ஒரு நொடி பார்த்தாலே,
அங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்பதே
என் முதல் எண்ணம்
சில பயங்களுக்கு காரணம் இருக்காது...
அதை வெல்ல முயன்றாலும்,
அந்த ஒரு கணத்தில் உடம்பெல்லாம் நடுங்கி,
மனமெல்லாம் பதறிவிடும்
பயம் என்பது பலவீனம் அல்ல...
ஒவ்வொருவருக்கும் இயற்கை கொடுத்திருக்கும்
ஒரு உணர்வு
இதைப் பார்த்ததும் இரண்டு பேரில்
ஒருவர் தான் உயிர் பிழைப்பார்...
ஒன்று அது...
இல்லையென்றால் நான்! 😅







தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்:

Laevicaulis alte போன்ற ஒரு நில நத்தை (slug) என்று தோன்றுகிறது.
இது வெளிப்புற ஓடு இல்லாத நில நத்தை (Slug) வகையைச் சேர்ந்தது.
இதற்கு வெளிப்புற ஓடு (Shell) கிடையாது.
மழைக்காலம் மற்றும் ஈரமான இடங்களில் அதிகமாகக் காணப்படும்.
இரவு நேரங்களில் அதிகம் சுறுசுறுப்பாக இயங்கும்.
இலைகள், காய்கறிகள் மற்றும் அழுகிய தாவரங்களை உணவாக உண்ணும்.
மனிதர்களைக் கடிக்காது; பொதுவாக விஷத்தன்மையும் இல்லை.
Pages: 1 [2] 3 4 ... 10