Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
13
𝗛𝗲𝗹𝗹𝗼𝗼 இசை தென்றல் 𝘁𝗲𝗮𝗺...

𝗜 𝗵𝗲𝗮𝗿𝘁𝗳𝘂𝗹𝗹𝘆 𝘁𝗵𝗮𝗻𝗸 𝘆𝗼𝘂 𝘁𝗼 𝗴𝗶𝘃𝗲 𝗺𝗲 𝘁𝗵𝗶𝘀 𝗰𝗵𝗮𝗻𝗰𝗲..♡♡♡...



Song_Nee Singam Dhan
Movie name_Pathu thala
Artist_Sid Sriram
Music composer_A.R Rahman
Lyricist_Vivek

Pathu thala movie paakathavanga kooda irupanga aana intha song kekathavanga irukave mudiyaathu.

Such a meaningful and bravy song like it's name.

Personal aa enaku Sid Sriram songs naa rompa uyiru namma 𝗥𝗷 𝗧𝗶𝗻𝘂 polave.Intha song antha list la top la irukkum.

Intha song Poddathu ennavo namma STR ku thaan aana atha vida ithu orutharku rompave suit aachu athoda famous um aachii. vera yaaru namma 𝗧𝗵𝗮𝗹𝗮 𝗗𝗵𝗼𝗻𝗶 than.

Intha song la enaku pudicha lines naa
       அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று
       நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று.
       கடலால் தீராத எறும்பின் தாகங்கள்     
       இலையின் மேலாடும் பனித்துளி தீர்க்கும்...


𝗜 𝗱𝗲𝗱𝗶𝗰𝗮𝘁𝗲 𝘁𝗵𝗶𝘀 𝘀𝗼𝗻𝗴 𝗳𝗼𝗿 𝗲𝘃𝗲𝗿𝘆 𝗦𝗶𝗱 𝗦𝗿𝗶𝗿𝗮𝗺 𝗳𝗮𝗻 𝗮𝗻𝗱 𝗠𝘆 𝗹𝗼𝘃𝗲𝗹𝘆 𝗙𝗧𝗖 𝗳𝗮𝗺𝗶𝗹𝘆..♡♡♡..
14
Sangram na thalaivar irukkanum it na evil irukkanum samyoooo
15
கவிதைகள் / அவளின் நட்பு !
« Last post by joker on November 13, 2025, 07:22:53 PM »
அவள் கண்ட நாள் முதல்
சின்ன சின்ன சண்டைகள்
சின்ன சின்ன புரிதல்கள்
சின்ன சின்ன வார்த்தை பரிமாற்றங்கள்
சின்ன சின்ன சிரிப்புகள் என
வளர்ந்தது நம் நட்பு

காலம் மெல்ல கடந்து போக போக
ஒரு காலத்தில்
நாம் பேசாமல் கூட பேசினோம்.
சிரிப்பின் ஓசை நம் மொழி,
மௌனத்தின் நிழல் நம் ரகசியம்
என தொடர

ஒவ்வொரு
காலை ஒளியையும் பகிர்ந்தோம்,
நம்மைச் சுற்றிய உலகம் சிறியது,
ஆனால்
நம் கனவுகள் முடிவில்லாதவை.

நீ மௌனமாயிருந்தால்
என் இதயம்
துடி துடிக்கும்

நாம் கடந்து வந்த பாதைகளை
நினைக்கையில்
அது என் இதயத்தைக் குளிர்விக்கிறது

காலம் கடந்து,
பணிகளின் நெரிசல்,
சிலர் வந்தார்கள், சிலர் போனார்கள்,
ஆனால் உன் பெயர் மட்டும்
என் மனத்தின் அமைதியான
மூலையில் நிலைத்திருக்கிறது.

நீயும் நானும் இனி பேசமாட்டோம்,
ஆனால் ஒவ்வொரு நாளும்
ஒரு சின்ன நினைவு என் மனதைத் தொட்டால்,
நான் மெதுவாகச் சொல்லுவேன் —
“நன்றி, தோழி… நீ இருந்தது போதுமானது

நீ காகிதத்தில் வரைந்த சிறு மலர்,
இன்றும் என் புத்தகத்தில் மடியாமல் கிடக்கிறது;
அது மலரின் நினைவு அல்ல,
அது உன் இருப்பின் வாசம்.

நாம் பிரிந்தது சண்டையால் அல்ல,
மௌனத்தால்.
அந்த மௌனமே, ஒரு வலி,
அது சொல்லாத வார்த்தைகளின் சுமை.

வாழ்க்கை நம்மை பிரித்தது,
ஆனால்
நினைவுகள் எப்போதும் இணைந்திருக்கின்றன;
நீயோ, நானோ எழுதாத கடிதங்கள்
இன்னும் வானத்தில் பறக்கின்றன

நீ எங்கேயோ சிரிக்கிறாய் என்று தெரிகிறது
அது போதும்;
ஏனெனில் என் உள்ளத்தில் நீயுள்ள வரை,
இந்த நட்பு ஒருபோதும் முடிவடையாது.


***JOKER***
16
கவிதைகள் / Re: அவள்
« Last post by joker on November 13, 2025, 05:52:37 PM »
அருமை சகோ

தொடர்ந்து எழுதுங்கள்  :)
17

HAPPY BIRTHDAY BRO -- ELLARUM AUTO THARAANGA SO NAANUM AUTO THAREN UNGALKU  :) :)

18
கவிதைகள் / அவள்
« Last post by Lonely Warrior on November 13, 2025, 05:11:55 PM »
அவள்



அவள்
அவளாகவே இருக்கிறாள்
என் அருகில் இருக்கையில்

கோபம் வருகிறது என்றால்
அடுத்த நொடி  முகம் சுளிப்பாள்
உண்மையில் அவள் இப்படி
முகம் சுளிப்பாள் என்றால் யாருமே நம்பமாட்டார்கள்
நான் அப்படியொரு பாக்கியசாலி

கடுப்பாகிவிட்டாள் என்றாள்
இடம் பொருள் பாராமல்
திட்டி தீர்த்துவிடுவாள்
அந்த உரிமை அவளுக்கு
இருக்கிறது என்று
எப்படி தெரிந்ததோ தெரியாது

அவள் மற்றவர்களுடன் இருக்கையில்
பேசி சிரிப்பதைப்போன்றெல்லாம்
ஒருபோதும் என்னுடன் இருந்ததில்லை
முன்பு அதில் எனக்கு
வருத்தம் இருந்தது

ஆனால் இப்போதுதான் புரிந்தது
உண்மையில் என் அருகில் இருக்கையில்
அவள் அவளாகவே இருக்கிறாள் என்று

உண்மையான அன்புக்கு
நடிக்க தெரியாது
அவள் என்னிடம் நடித்ததில்லை

உண்மையான அன்புக்கு பேசவேண்டுமே
என பேசத் தெரியாது
அவள் என்னிடம் அப்படி பேசியதில்லை

அவளுடன் எத்தனை  சண்டைகள்
எத்தனை மௌனங்கள்
எத்தனை கண்ணீர்த்துளிகள்

அதற்கு எல்லாம் காரணம்
அவள் போலியாக இல்லாமல்
என்னிடம் அவள் அவளாகவே இருக்கிறாள்

அவள் என்னருகில் இருக்கையில்
அவள் அவளாகவே இருக்கிறாள்
என்பதைவிட வேறு எந்த விதத்தில்
நான் அதிஷ்டசாலியாகிவிட போகிறேன் 

என் அவள்…..
20
ஏமாற்றம்..!

ஏமாற்றம் ஒன்றும்
புதிதல்ல
ஏங்கிதவிக்கும்
இதயத்திற்கு
ஏமாற்றும் விதம்
தான் புதிது :)


படித்ததில் பிடித்தது..!
Pages: 1 [2] 3 4 ... 10