17
« Last post by Luminous on December 22, 2025, 11:54:24 PM »
கண்ணாடியில் மலரும் சிறகுகள்
பார்க்கும் கண்களுக்கு
சிலருக்கு அருவருப்பு,
சிலருக்கு பயம்....
மண்ணில் ஊர்ந்து செல்லும்
அந்தப் புழு.
ஆனால்
அதன் மௌனத்தின் உள்ளே
ஒளிந்து கிடப்பது
வானம் ஏங்கும்
வண்ணங்களின் கனவு.
உலகம்
அழகென்று கொண்டாடும்
பட்டாம்பூச்சி,
ஒரு நாளில்
திடீரெனப் பிறந்ததல்ல,
பொறுமை சுமந்த
புழுவின்
தீராத நம்பிக்கை அது.
மனிதனே,
ஒரு சந்தர்ப்பத்தில்
நீ தவறினால்,
உன் மீது
வெறுப்பும் ஒதுக்கலும்
மழையாய் பெய்யும்....
அது உண்மை.
அந்த மழையில்
நீ புழுவென
சுருங்கி விடாதே.
“தவறு” என்ற
இருள்கூட்டை
உடைத்துவிட்டு,
உன் உள்ளத்தின்
வண்ணங்களை
சேர்த்து,
வெளியே வா
வண்ணமிகு
பட்டாம்பூச்சியாக.
திருந்திய மனம்
சிறகுகள் பெறும்.
நற்பண்புகள்
வானில்
வண்ணக்கோலமிடும்.
அப்போது
உன் மனம் மட்டும் அல்ல,
உன் வாழ்க்கையும்
சிறகடிக்கும்.
எல்லைகளைத் தாண்டி.
இறுதியில்
முகக் கண்ணாடியில்
நீயே உன்னைப் பார்க்கும்போது,
ஒரு கேள்வி
மௌனமாய் எழும்:
“ஆரம்பத்தில் இருந்தது நான் தானா,
முடிவில் நிற்பது நான் தானா?”
அந்தக் கணத்தில்
பதில் சொல்லும்
உன் பிரதிபலிப்பு,
புழுவல்ல,
வண்ணமிகு
பட்டாம்பூச்சி
அனைவராலும்
விரும்பத்தக்க
உன் உண்மையான
அழகிய முகம்.
LUMINOUS 😇🦋🦋🦋💚💛🧡💜