11
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-012 (ஒரு உணவு... ஒரு நினைவு)
« Last post by Ninja on July 04, 2026, 12:55:03 PM »உணவோட கலந்த நினைவு நம்ம எல்லாருக்குமே இருக்கும். உணவு சிலருக்கு ருசிங்கிற உணர்வு, ஆனா சின்ன வயசுல எங்களுக்கு உணவுங்கிறது பசியோட உணர்வு. உணவுன்னு சொன்னாலே அம்மா ஞாபகம் தான் நம்ம எல்லாருக்கும் வரும். ஆனா நாங்க சின்ன வயசா இருந்தப்போ அம்மா வேலைக்கு போயிட்டு இருந்ததால தயிர் சாதம், சாம்பார் சாதம், இட்லி தோசை தவிர எதுவும் எங்க வீட்டுல கண்ணால கண்டது இல்ல. அதுவும் ஸ்கூலுக்கு பெரும்பாலும் தயிர் சாதம் தான். அந்த தயிர் சாதமும் கெட்டி அடிச்சி போயிருக்கும். ஸ்கூல் முடிஞ்சு வரும்போது, வீடு இருக்கிற தெருவுல நுழையறத்துக்கு முன்னாடி தெருமுனையில இருந்த சாக்கடை பக்கத்துல நின்னு நானும் என் தங்கச்சியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு, ‘நீ சாப்டியா', ‘சாப்பிடலையா’ன்னு கேட்டுட்டு சாப்பாட கொட்டிட்டு வீட்டுக்கு வருவோம்.
எங்க அம்மாவுக்கு ட்ரான்ஸ்பர் ஆகி எங்க அஜ்ஜி இருந்த ஊருக்கே போனோம். எங்களோட பசிய ருசியோட போக்கினது எங்க அஜ்ஜி தான். பெருசா ஒன்னும் இல்ல மாங்கா முருங்காய் போட்டு சாம்பார் வச்சிருப்பாங்க. வாசல்ல போகும் போதே அவ்வளவு மணமா இருக்கும். ஸ்கூல் முடிஞ்சு நேரா அஜ்ஜி வீட்டுக்கு ஓடிருவோம். தட்டு நிறைய சோற போட்டு சாம்பார ஊத்தி, கவளம் கவளமா உருட்டி ஊட்டி விடுவாங்க. அந்த குட்டி வயித்துக்குள்ள அவ்வளவு சாப்பாடு உள்ள போகுதுன்னா அது அஜ்ஜி கையால மட்டும் தான். சாப்பிட்டுட்டு மலைப்பாம்பு மாதிரி உருண்டுட்டு இருப்போம் நான், எங்க அண்ணா, என் தங்கச்சி மூணு பேரும். லீவு நாளுல போனா போதும், Fancy foodலாம் இல்ல பழைய சோற புழிஞ்சு அதுல பழைய குழம்பை ஊத்தி உருட்டி உருட்டி ஊட்டி விடுவாங்க. சொர்க்கமா இருக்கும்.
அஜ்ஜி மேல மணக்குற அந்த cinthol வாசனையும், அஜ்ஜியோட சாப்பாட்டு மணமும் இன்னமும் நான் தேடி கிடைக்காத வாசனைகள்.
அடுத்து, சம்மர் லீவ் விட்டா எங்க அப்பாயி ஊருக்கு போவோம். ரொம்ப சாதாரண குடும்பம் தான். அங்கேயும் Grand feast, fancy foodலாம் எதுவும் இல்ல, ஆனா எங்க அப்பாயி செய்யிற ‘வெந்தய களி'க்கு முன்னாடி இப்போ crave பண்ற பிட்சா, பாஸ்தாலாம் ஒன்னுமே இல்ல. சுட சுட வெந்தய களி கிண்டி அது நடுல வெல்லமும் நல்லெண்ணையும் ஊத்தி கொடுப்பாங்க. அந்த சுவைல இன்னைக்கு வரைக்கும் வெந்தய களி சாப்பிட்டதே இல்ல. சில சமயம் நல்ல தண்ணியா அரைச்ச தேங்காய் சட்னி செஞ்சு தருவாங்க இந்த வெந்தய களிக்கு, தட்டை வழிச்சு நக்காத குறையா எல்லாரும் சாப்பிடுவோம்.
எந்த ஊருக்கும், வெளிநாட்டு பயணம் போனாலும் சரி அந்த ஊரோட native food சாப்பிட்டு பார்க்கனும் அப்படிங்கிற ஆசை எனக்கு எப்பவும் உண்டு. அப்படி நான் சாப்பிட்ட வேற ஊர் சாப்பாடுல எனக்கு ரொம்ப பிடிச்சது இலங்கைல சாப்பிட்ட பல சாப்பாடு இன்னமும் எப்போட திரும்ப சுவைப்போம்ன்னு இருக்கு. இத்தனைக்கும் இலங்கைக்கு போயிருந்தப்போ எல்லாமே நண்பர்களுடைய வீடுகள்ல சாப்பிட்ட சாப்பாடு தான். கண்டி, எல்லா, மட்டகளப்பு, யாழ்ப்பாணம், வவுனியான்னு ஒவ்வொரு ஊர்ல சாப்பிட்ட ஒவ்வொரு உணவும் தனி ருசி.
நண்பர்கிட்ட அவங்க வீட்டுல இருந்து pack பண்ணி சம்பல் அனுப்ப சொல்ற அன்பு இன்னமும் இருக்கு. அங்க சாப்பிட்ட வண்டப்பம், வட்டிலப்பம், மரக்கறி கூட்டு, மிளா கறி, கொத்து இடியப்பம், ஒடியல் கூழ், தம்பிளின்னு எதோட சுவையும் இன்னும் மறக்கல. அது வெறும் உணவோட சுவை மட்டுமில்ல, அந்த எளிய மனிதர்களோட அன்பும் தான். உணவும் ஒரு நினைவு தான்னு உணர வைத்த நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சிக்கு நன்றி.

எங்க அம்மாவுக்கு ட்ரான்ஸ்பர் ஆகி எங்க அஜ்ஜி இருந்த ஊருக்கே போனோம். எங்களோட பசிய ருசியோட போக்கினது எங்க அஜ்ஜி தான். பெருசா ஒன்னும் இல்ல மாங்கா முருங்காய் போட்டு சாம்பார் வச்சிருப்பாங்க. வாசல்ல போகும் போதே அவ்வளவு மணமா இருக்கும். ஸ்கூல் முடிஞ்சு நேரா அஜ்ஜி வீட்டுக்கு ஓடிருவோம். தட்டு நிறைய சோற போட்டு சாம்பார ஊத்தி, கவளம் கவளமா உருட்டி ஊட்டி விடுவாங்க. அந்த குட்டி வயித்துக்குள்ள அவ்வளவு சாப்பாடு உள்ள போகுதுன்னா அது அஜ்ஜி கையால மட்டும் தான். சாப்பிட்டுட்டு மலைப்பாம்பு மாதிரி உருண்டுட்டு இருப்போம் நான், எங்க அண்ணா, என் தங்கச்சி மூணு பேரும். லீவு நாளுல போனா போதும், Fancy foodலாம் இல்ல பழைய சோற புழிஞ்சு அதுல பழைய குழம்பை ஊத்தி உருட்டி உருட்டி ஊட்டி விடுவாங்க. சொர்க்கமா இருக்கும்.
அஜ்ஜி மேல மணக்குற அந்த cinthol வாசனையும், அஜ்ஜியோட சாப்பாட்டு மணமும் இன்னமும் நான் தேடி கிடைக்காத வாசனைகள்.
அடுத்து, சம்மர் லீவ் விட்டா எங்க அப்பாயி ஊருக்கு போவோம். ரொம்ப சாதாரண குடும்பம் தான். அங்கேயும் Grand feast, fancy foodலாம் எதுவும் இல்ல, ஆனா எங்க அப்பாயி செய்யிற ‘வெந்தய களி'க்கு முன்னாடி இப்போ crave பண்ற பிட்சா, பாஸ்தாலாம் ஒன்னுமே இல்ல. சுட சுட வெந்தய களி கிண்டி அது நடுல வெல்லமும் நல்லெண்ணையும் ஊத்தி கொடுப்பாங்க. அந்த சுவைல இன்னைக்கு வரைக்கும் வெந்தய களி சாப்பிட்டதே இல்ல. சில சமயம் நல்ல தண்ணியா அரைச்ச தேங்காய் சட்னி செஞ்சு தருவாங்க இந்த வெந்தய களிக்கு, தட்டை வழிச்சு நக்காத குறையா எல்லாரும் சாப்பிடுவோம்.
எந்த ஊருக்கும், வெளிநாட்டு பயணம் போனாலும் சரி அந்த ஊரோட native food சாப்பிட்டு பார்க்கனும் அப்படிங்கிற ஆசை எனக்கு எப்பவும் உண்டு. அப்படி நான் சாப்பிட்ட வேற ஊர் சாப்பாடுல எனக்கு ரொம்ப பிடிச்சது இலங்கைல சாப்பிட்ட பல சாப்பாடு இன்னமும் எப்போட திரும்ப சுவைப்போம்ன்னு இருக்கு. இத்தனைக்கும் இலங்கைக்கு போயிருந்தப்போ எல்லாமே நண்பர்களுடைய வீடுகள்ல சாப்பிட்ட சாப்பாடு தான். கண்டி, எல்லா, மட்டகளப்பு, யாழ்ப்பாணம், வவுனியான்னு ஒவ்வொரு ஊர்ல சாப்பிட்ட ஒவ்வொரு உணவும் தனி ருசி.
நண்பர்கிட்ட அவங்க வீட்டுல இருந்து pack பண்ணி சம்பல் அனுப்ப சொல்ற அன்பு இன்னமும் இருக்கு. அங்க சாப்பிட்ட வண்டப்பம், வட்டிலப்பம், மரக்கறி கூட்டு, மிளா கறி, கொத்து இடியப்பம், ஒடியல் கூழ், தம்பிளின்னு எதோட சுவையும் இன்னும் மறக்கல. அது வெறும் உணவோட சுவை மட்டுமில்ல, அந்த எளிய மனிதர்களோட அன்பும் தான். உணவும் ஒரு நினைவு தான்னு உணர வைத்த நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சிக்கு நன்றி.


Recent Posts




