Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
ஓர் அழகிய இரவு
என் மடியில் தலை சாய்த்து
நிலவை பார்க்கும் அவள்
அவள் முகத்தில்
நிலவை காணும் நான்

நிறம் ஏங்கும்
நிலவாக
நான் உன்னை நினைக்கிறேன்.
புன்னகையுடன் என்னைத் தேடி வரும்
கனவாக
நீ என்னுள் தங்குகிறாய்

நான் எழுதிவைக்கும்
ஒவ்வொரு சொல்லிலும்
நீ இருக்கிறாய்.
நான் உச்சரிக்கும்
ஒவ்வொரு வரியிலும்
உன் மூச்சு
கலந்து விடுகிறது

என் கையை
உன் விரல்கள்
அருகே தேடும் போது
ஆகாயம் இன்னும்
அருகே வந்தது போல
எனக்குத் தோன்றுகிறது… 

இங்கேதான்
நான் உன்னோடு”
என்று
வானமே
மெதுவாக
மூச்சுக்குள்
கிசுகிசுப்பது போல…

என்னை குளிர்வித்த
காற்றாய் அவள்
என்னை நனைத்த
மழையாய் அவள்…

என்னை சிரிக்க வைத்த
புன்னகையாய் அவள்…
என்னைத் தழுவும்
கனவாய் அவள்…

என்னை உறங்க வைக்கும்
தாலாட்டாய் அவள்
என்னை ஏங்க வைத்த
மோகமாய் அவள்…

என்னுள் வற்றாத
ஊற்றாய் அவள்
என்னுள் சலிக்காத
தாகமாய் அவள்…

என்னை முழுதாய்
மூடிய அன்பாய் அவள்…
என்னை சிந்திக்க வைத்த
காதலாய் அவள்

என் கனவுகள்
உன் மூச்சு பட்டதும்
சத்தமில்லாமல்
விழித்துக்கொள்கின்றன.
என் சிந்தனைகள்
உன் பெயரைத் தொட்டவுடன்
அழகாகி விடுகின்றன.

நமக்கு பிடித்த ஒருவரின்
சந்தோஷத்துக்காக
எதையும் செய்யலாம் என்ற
துணிவு மட்டும்
எங்கிருந்தோ
உள்ளுக்குள் பிறக்கிறது…

நமக்கு பிடித்தது போல
இந்த வாழ்வு
ஓர் நாள்
மலரும் என்ற
நம்பிக்கை
பிறக்கிறது
வாழ்வோம் வா
அன்பே!


****Joker****
12
    நம் காதல் கல்யாணத்தில் முடியும் வரை ....


நான் பூமியில் உதித்த போது
  என் கூட இல்லாத உறவு நீ!
நான் வளர்ந்த குழந்தைப் பருவத்தில்
   என்னுடன் இல்லாத உறவு நீ!
நான் இனி என் வாழ்வில் இழக்க
   முடியாத உறவு நீ!

நீ என் பெயரை உச்சரிக்கும் போது
   உணர்ந்தேன் என் நாமத்தின் அழகினை!
நீ பேசத் தயங்கும் விடயங்களை
   புரிந்து கொள்வேன்  உன் விழிகளில்!
நீ என்மீது கொண்ட பாசமும் ,அக்கறையும்
   உணர வைக்கின்றதே என் குடும்பமாய்!

விழிகளால்   ஈர்க்கப்பட்டு
மனங்களால்   ஒன்றுபட்டு
எண்ணங்கள்   பரிமாறப்பட்டு
உயிரோடும், உணர்வோடும் கலக்கப்பட்டு
உருப்பெற்றோம் உண்மைக் காதலர்களாய்!

நாம் எதையும் எதிர்பார்த்தில்லை
   காதல் வயப்பட்ட  போது!
நம் காதல் கல்யாணத்தில் முடிவுற
   தடையாய் நிற்கிறதே மதபாகுபாடு!
நாம் காத்திருப்போம் பெற்றோர் மனம் மாறி
   காதல் கல்யாணத்தில் முடியும் வரை!

உன் மடி போதும் என் துன்பங்கள்
   அனைத்தும் தூசாகி பறந்திட!
உன் புன்னகை  ஒன்றே போதும்
   என் மனம் புதுப்பொலிவு பெற்றிட!
உன் தோள் சாயும் போது உணர்கிறேன்
   நான் உலகின் சிறந்த அதிர்ஷ்டசாலி என்று!

கனவு காண்கின்றேன் நம்
    எதிர்கால வாழ்வை நோக்கி!
கனவு இல்லம் அதைச்சுற்றி இரசிப்பதற்கு       
     இயற்கையான பூந்தோட்டம்!
கலந்து பேசி மகிழ்ந்திட நம்ம இரு   
     பெற்றோர்கள் நம் வீட்டில்!
காதல் சின்னமாக இரசித்திடுவோம்
    இரு குழந்தைகள் பேசும் மழலை அழகை!


இப்போ நாம் காதல் மொழியில்   
   இரசிக்கின்றோம் வெண்ணிலாவை!
இதுக்கு அப்புறம் நிலவொளியில்
   உண்போம் கூட்டாஞ்சோறு!
இன்று பிடித்த உன் கரங்களை
   விடமாட்டேன் என்றும்!
நமக்கு பிடித்த போல வாழ்க்கை
  என்றோ ஒருநாள் மாறும்!
நாம் முயற்சி செய்வோம்
   சோர்ந்து போய்விடாமல்!

இன்றே மாறிவிடாது நம் வாழ்க்கை!
இடைவிடாது உழைத்திடுவோம்
     உன்னத தொழில் செய்து!
சிக்கனமாய் சேமிப்போம் சிறுக சிறுக!
நாம் நம் வாழ்க்கையை சிறப்பாக்குவோம்
  பெற்றோர்க்கு நம்பிக்கை வரும் வரை!

நமக்கு அளிக்கப்பட்டது இறைவனால்
   இன்பமான காதல் வாழ்க்கை!
நம் காதலுக்கு மனம் போதும்
    மதம் ஒரு தடை அல்ல என்னவனே!
நம் காதல் கல்யாணத்தில் முடியும் வரை
    கை கோர்த்து நிற்பேன் உன்கூட !
13
உலகை மறந்து தாயிடம்
தஞ்சமடையும் சேயின் உறக்கமென...
விரல்கள் கோர்த்து தலைகோதும்
அன்னையின் அன்பு மடியென...
உன் மடிமீது துயில் கொள்கிறேன்
இன்னலறியா சிறு குழந்தையாக....

கனக்கும் இதயமும் கணப்பொழுதில்
இறகைவிட இலகுவாக்கும் ஸ்பரிசம்...
முத்தத்தின் முத்திரையால் முழுமையாக
சரணடைய செய்யும் ஆளுமை...
யாதுமாகி உயிரில் கலந்து
உணர்வை உருகசெய்யும் அன்பு...

நித்திரையிலும் நிழலாயிருப்பேன் என
உணர செய்யும் நம்பிக்கை...
சில ஊடல் நிமித்தங்களை
தணிய செய்யும் காதல்...
அனைத்தையும் ஒன்றாய் உணர்கிறேன்
உன் மடிமீது தலை சாய்க்கையில்...

காலத்தினால் அகவை கூடினாலும்
உன் கண்களுக்குள் ஏனோ
துள்ளி எழும் என் குழந்தைத்தனம்...
கண்விழிக்கையில் தான் தெரிகிறது
அனைத்தும் அழியாமல் ஆழ்மனதில்
அமிழ்ந்து கிடக்கும் நினைவுகளென்று...
நித்திரையைக் கலைக்கும் பதிவுகளென்று...

இன்றும் மனம் ஏங்குகிறது
கரம்பிடித்து உன்னோடு பயணிக்க
மகிழ்ச்சியின் மறுகரையென மாற... 💔 💔 💔
14
                                     நீ தந்த நரகம்!!!

அன்று உன் மடியில் சாய்ந்த அந்த நிமிடம்
இந்த உலகமே என் வசம் என எண்ணினேன்…
நமக்குப் பிடித்தபடி நம் வாழ்க்கை மாறும்
என்று நீ சொன்ன வார்த்தைகள் இன்றும்
என் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே
இருக்கின்றன…

நீல நிற இரவுகள் இன்னமும் வருகின்றன
ஆனால் உன் கதகதப்பான அணைப்பு
மட்டும் ஏனோ இல்லை…
“மாறும்” என்று நீ சொன்ன வாழ்க்கை
இன்றுவரை மாறவே இல்லை!
மாறிப் போனது நீயும்
உன் மனமும் மட்டும்தானடா…

நிழலாய் இருந்த உன் நினைவுகள் எல்லாம்
இப்போது நெருப்பாய் என்னைச் சுடுகின்றன…
நூறு கனவுகளை என் மனதில் விதைத்துவிட்டு
அவற்றை பறித்துச் சென்றது
நியாயமா…?

நீ இல்லாத இந்த நகரத்தின் சாலைகள்
எல்லாம் என்னை ஏளனமாய் பார்த்து சிரிக்கின்றன…
என் கூந்தலைக் கோதிய உன் விரல்களின் ஸ்பரிசம்
இன்றும் என் நினைவுகளில்
நெருப்பாய் எரிகிறது…

உன் மார்பில் தலை சாய்த்து
நான் கேட்ட அந்த இதயத் துடிப்பு
எனக்கானதென்று நம்பியது
என் தவறா…?
ஊரே உறங்கும் இந்த இரவின் வேளையில்
உன் நினைவுகளோடு
நான் மட்டும் யுத்தம் செய்கிறேன்…

காலம் ஓடினாலும்
காயங்கள் மட்டும் ஆறவில்லை…
“திரும்பி வருவாய்” என்ற
ஒரு மெலிந்த நூலிழையில்
இன்றும் இந்த உயிர்
வாழ்ந்து கொண்டிருக்கிறது…

“வாழ்க்கை மாறும்” என்று சொன்னாயே…
இதோ, அது மாறிவிட்டது —
நரகமாக…
“கனவுகள் மாறும்” என்று சொன்னாயே…
இதோ, அவை மாறிவிட்டன —
கருகிய சாம்பலாக…

கண்ணீர் வற்றிப் போனாலும்
வலி மட்டும் மாறவில்லையே…
சாகத் துணிவில்லை…
வாழ வழியும் இல்லை…
உன் நினைவுகளின் சிறையில்
நான் ஆயுள் கைதியாக…

இதயத்தின் ஓரத்தில் உறைந்த அந்த வலி
யாருக்கும் தெரியாத
ரகசியத்தின் பாரமாக…
யுகம் யுகமாய் ஆனாலும்
மறக்க முடியாத இறுக்கமாக…

பேசத் துடித்தும்
வார்த்தைகள் அற்ற நிலையில்
மௌனமாய்…
தனிமை என்னும் தீயில்
உன் நினைவுகளுடன்
நான் வாடுகிறேன்…

இறுதியில் ஒன்றை மட்டும் கேட்கிறேன்…
“வாழ்க்கை மாறும்” என்று
இன்னொரு பெண்ணிடம் மட்டும்
சொல்லாதே…
இந்த வலியைத் தாங்கிக்கொள்ளும் சக்தி
எல்லா பெண்களிடமும்
இருப்பதில்லை…!
15
Happy happy birthday sabarish
16
GENERAL / Re: Joker's Short Messeges
« Last post by joker on December 29, 2025, 05:15:05 PM »
A man can have everything in the world,
but
if he decides he will be unhappy than
he is not happy
17
GENERAL / Re: Joker's Short Messeges
« Last post by joker on December 29, 2025, 05:13:23 PM »
We suffer
more often in our
imagination than
reality -
18
வாகனத்தில் செல்ல 
வழியில்
சிகப்பு விளக்கு ஒளிர நின்ற போது
கை நீட்டிய பிஞ்சு குழந்தையிடம்
இல்லை என்ற போது
நானும் பிச்சைக்காரனாய் உணர்ந்தேன்

19
கவிதைகள் / பிரிவு!
« Last post by joker on December 29, 2025, 01:00:38 PM »
அழகிய கடல் அலை
மெல்ல பாதம் நனைக்கயில்
சில்லென்ற காற்று மெல்ல
காலத்தை பின்னோக்கி
இழுக்கிறது

உன்னோடு விளையாடிய
நினைவுகள்
என் நெஞ்சில் ஒட்டிக்கொள்கிறது
ஈரப்பாதத்தில் ஒட்டிய
கடற்கரை மணல் போல

விதி செய்த சதியில்
பேசாமல் சில காலம்
கடந்திற்று

ஓர் நாள் நண்பரின் திருமணத்தில்
ஒப்பனைகள் ஒவ்வாத உன் முகத்தில்
ஒப்பனை குளியல்

பகட்டான நிறத்தில் உன் ஆடைகள் .
தேவதைகள் வெள்ளை நிற உடை தான்
அணிய வேண்டுமா என்ன ?

என்னை கண்டும்
காணாததாய் நடிக்கும் 
உன் காந்த விழிகள்

நாம் பிரிந்த பின்
எத்தனை மாற்றங்கள்
உன்னிடம்

என் பிரிவு
உனக்கு நன்மை பயக்கும் எனில்
என்னை விட மகிழ்பவர் யாரோ

சில நேரம்
சிலரின் பிரிவும்
நன்மைக்கே


***Joker***
20
கவிதைகள் / Re: சிறு புன்னகை 😊
« Last post by joker on December 29, 2025, 12:05:31 PM »
கவிதை அருமை தொடர்ந்து எழுதுங்கள் சகோ
Pages: 1 [2] 3 4 ... 10