Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
POEMS / Never ended OU poems
« Last post by Ishaa on Today at 04:39:52 AM »
Oru kaalathila naanum OU kku Kavithai eluthinaan  ;)
But unfortunately naan OU kku elutha start pannuven
but mudikurathukkule OU Thread lock ayirum
or OU program finish ayirum
or poem mudichalum oru satisfaction illai enru post panna madden
or the worst case scenario OU kku poem start pannunan enre maranthuruven.

And recently my documents konjam sort pannnum podhu silla OU prompts kidaichathu.
Tissue paper la kooda elutha start pani irukken enra parthukongalen ennoda Aarvatha. xD

And ithu just Prompts I wrote down.
My notes App la irukura prompts post panna start pannen enra inthe thread ae blast ayirum xD

12
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 04:04:39 AM »
14
மந்திரங்கள்  ஓத நாதஸ்வரம் முழங்க
கெட்டிமேளம்   கெட்டிமேளம் என
குரலொன்று  கூச்சலிட 
கட்டினான்  மணவாளன் 
மாங்கல்யம்  எனும்  மங்கலநாண்

முடிந்துவிட்ட சேலையும்  வேஷ்டியும்
அவிழ்ந்து  விடாது  முடிச்சுகள்  போட்டு
பெற்றாரும் உற்றாரும்  ஆசீர் விதிக்க
முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக 
அரங்கேறும்  ஆனந்த நாள்     

மங்கையவள் வாழ்வில்  திருநாள்
சுதந்திரமாய் திரிந்தவளை
சுமைதாங்கி ஆக்கிய   நன்னாள்
வாழ்க்கையின்  பொறுப்புகளை 
தலைமேல்  சுமத்திய  பெருநாள்

தந்தையின்  பொறுப்புகளை
தாரை வாற்று  கைமாற்றும் தருணம்
தந்தை மகள்  உறவின்   நெருக்கத்தில்   
 விரிசல்களை  உணர்த்தும்  தந்தையின்
ஆனந்த கண்ணீர்  துளிகள்

காதலென்ற  காட்சியின் கனவுகள்
நனவாகுமா இல்லை  கானல்நீராகுமா.
போர்வைக்குள் ஒளிந்திருக்கும் பூச்சாண்டிகளின்
நிறங்கள்  வெளிறும் தருணம்
கண்ணே பொன்னே காணாமல் போய்விடுமா

இடம்விட்டு பிடுங்கி நடப்படும் செடிகள்
துளிர்ப்பதும்   பூப்பதும்   காய்ப்பதுமாய் 
உள்ளக்குமுறல்களை  உள்ளடக்கி 
நாடக மேடையில் ந டிக்கவேண்டிய  கட்டம்
நாளடைவில்  பழகிவிடும் ஆட்டம


காலப் புத்தகத்தின் அத்தியாயங்கள்
கரை புரண்டோட  காத்திருக்கும்  பக்கங்கள்
கிழிந்து  சின்னா பின்னமாகிவிடுமா  இல்லை
அழியாத  ஓவியங்களுடன்  கவிதைகள் ஆகுமா
காத்திருங்கள்  காலம் பதில் சொல்லும்


 
15


மணவறை நாளுக்காய்
மனதில் தீட்டிய ஓவியங்கள்
அருகருகே அமர்ந்தும் - என் அண்ணலை
கண்கொண்டு காண முடியா தருணம்....

வெட்கத்தில் சிவந்த கன்னத்தை பார்க்கயில்
கையிலிட்ட மருதாணியும் மங்களாய்த்தான் தெரிந்தது..
ஆயிரம் ஓசை நிறைந்த அரங்கில்
அவன் முனுமுனுத்த மந்திரம் மட்டும் காதல் கவிதையாய் என் காதில் ஒலித்தது...

மங்கள இசை முழங்க
என் மணவாளன் சூட்டிய மாலையும்
அவன் அணிவித்த மாங்கல்யமும்
மீதமுள்ள வாழ்நாளை என் மனக்கண்முன் நிறுத்தியது..
.
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகையே மறந்து இன்பமாய் வாழ்வோம் எனக்கூறி
உச்சி முகர்ந்த நொடியில் இவ்வுலகை மட்டுமல்ல
என்னையே நான் மறந்தேன்...

கைபேசி ஒலிக்க கண்விழித்துப் பார்தேன்
கண்டதனைத்தும் கனவென உணர்ந்தேன்
கனவிலும் கூட நமக்கு நிலைக்காத காதல்
வாழ்வில் நிலைக்குமென நினைத்தது என் குற்றமே...

தனிமையை வெறுத்த நெஞ்சமொன்று
இன்று தனிமையை துணையாய்க்கொண்டு வாழுது
விட்டுச்சென்ற துணையை நினைத்து வருந்தவா.. அல்ல
துணையாய் அமைந்த தனிமையை ஏற்று வாழவா...
16
ஏழு ஜென்மங்களும் நீயே..!

என் அழகான என்னவனே
இன்று நமக்கான திருநாள்..
மனதினில் ஆயிரம் கனவுகளுடன்
புத்தம் புதியதோர் வாழ்வினை நோக்கி
நாம் அடி எடுத்து வைத்தோம்..!

உனக்காக எனை அழகு படுத்திக்கொண்டு
புன்னகையும் பதற்றமும் தொற்றி கொள்ள
எனக்காக காத்திருக்கும் உன் கண்களை
பார்த்த அந்த நொடியே விழுந்து விட்டேனடா..!

யார் கூறியது பெண்ணின் கண்களே அழகு என!!
என் என்னவனின் கண்களில் நான் பார்த்த அந்த காதல்..
அந்த காந்தசக்தி..கடலின் ஆழத்தை விட
மேலானது போல் என்  இதயத்தை
கிழித்து கொண்டு சென்றது..!

அவன் வசீகரமும் அவன் சிரித்த போது
அந்த கண்ணகுழியும்
என்னை மொத்தமாக கொள்ள..
அவனை முழுதாய் ரசிக்க முடியாமல் முழித்தவளை
நீ கொல்லை அழகடி என அவன் கண்கள் காதல்
மொழியில்..!

மந்திரங்கள் ஓத அட்சதைகள் தூவ
மேள நாதஸ்வர இசையோடு
மாலைகளை மாற்றி கொண்டோம்..!
நீ என் கரம் பிடித்த அந்த நொடியை
நினைக்கையில் மெய் சிலிர்க்குதடா என் மேனி..!

ஊரார் முன்நிலையில் அந்த அக்னியின்
சாட்சியாக என் கழுத்தில் நீ கட்டிய தாலி
என் நெஞ்சுக்குழி வரை முற்றுகின்றது..!

நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டவளை
என் கண்ணத்தில் கை வைத்து என் நெற்றியில்
நீ இட்ட முதல் முத்தம்
புதியதோர் உலகம் பூத்தது போல
நீயே என் நிழலாய்
உன்னை தாங்கும் துணையாக
உயிரில் கலந்து இனி எல்லாமுமே நீயாக!!

முழுதும் உன்னை வென்றவளாய்
உன் இதயத்துடிப்புடன் கலந்தேன்
என் எண்ணவனின் மார்பில்
ஏழு ஜென்மங்களும் நீயே வேண்டும் என
என் கண்கள் ஓரமாய் மகிழ்ச்சியின் எல்லையாக
கண்ணீர் துளிகளுடன் உன்னுடையவள் நான்..!

This is my first try in my lifetime nu thaan sollanum..
Flaws irukkum..sorry for that guys..
Thank you team..
17
இணைந்த கைகள்

இணைந்த கைகள் மட்டுமல்ல  நெஞ்சமும் கூட
இரு நெஞ்சம் மட்டும் அல்ல இரு வீட்டார் உறவுகளும் கூட

எத்தனை கனவுகள் எத்தனை என்ன ஓட்டங்கள் எத்தனை விதமான பரபரப்பு எத்தனை விதமான எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஒன்று கூடும் இந்த இரு கைகள் இணையும் போது

கரம் பிடித்தவளும் கரம் கொடுத்தவனும் இல்வழக்கையை தொடங்கும் நாள் அனைவரது ஆசீர்வாதங்களும் வாழ்த்து மடல்களும் குவிந்து உலகிற்கு உரக்கச் சொல்லும் நாள் நாங்கள் எங்கள் வாழ்க்கையை தொடங்குகிறோம் என்று

இவளுக்கு இவன் என்றும் இவனுக்கு இவள் என்றும் கடவுள் தீர்மானித்து எழுதி வைத்த நாள் இந்த இரு கைகளும் இணையும் நாள்

இதோ இதுவும் என் வாழ்வில் நடந்தேறியது

என் வாழ்க்கை துணையாய் அல்ல என் வாழ்க்கையாகவே வந்தவள் என் கரம்பிடித்தவள் என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவள் என் பிறப்பிற்கு நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு இப்போது வாழும் வாழ்க்கைக்கும் அச்சாரமாய் துணை நின்றவளாய் எனக்கு
வாழ்வை தந்தாய்


காற்றாற்று வெள்ளம் போல் சென்ற என் வாழ்க்கை நெறிப்படுத்தி
அழகிய நதியாய் மாற்றினாய்
திக்குத் தெரியாத சென்ற என்னை

உன் வாழ்வில் சேர்த்து அடையாளம் தந்தாய்  என் வாழ்விற்கு


கோவக்காரன் திமிரு பிடித்தவன்  என்று தூற்றிய வாய்கள்
நீ வந்த பிறகே எனக்கும் மனிதன் என்ற அங்கீகாரம் கொடுத்தனர்

தரிசு நிலம் போல் இருந்த என் வாழ்க்கை உன் வரவால்
என் வாழ்வில் பயிர் தழைக்கச் செய்தாய்
பாலைவனமாய் இருந்த என் வாழ்வு
சோலை வனமாய் மாறியது

உன் வரவால்  இன்பம் தழைக்கச் செய்தாய் ஒவ்வொரு நொடியும்
உன் உதிரம் கொண்டு அழகான  இரண்டு உயிருள்ள ஓவியங்களை தந்து எனையும் ஆண்மகன் ஆக்கினாய்


நிலையான வாழ்வை தந்தாய்
அமிர்தம் போன்ற சுவையை தந்தாய்
என் வாழ்விலும் தென்றலை தழுவச் செய்தாய்


நினைத்துப் பார்த்தோம் இருவரும்
இதே அன்பும் பாசமும் என்றும்
நிலைத்திருக்க வேண்டும் என்று
உன் அன்பிலும் பாசத்திலும் கண்டேன் இவ்வுலகை

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ஆன்றோர் வாக்கு நான் ஏதோ ஒரு பிறவியில் செய்த நற்செயல் நீ எனக்கு வாழ்க்கை துணையாய் கிடைத்தாய் அந்தக் கடவுளும் எனக்கு வரம் தந்தார் தந்த கடவுள் கண்ணையும் மூடிக்கொண்டார் இருப்பினும் இல் வாழ்க்கையை நல் வாழ்க்கையாய்  உன்னோடு தந்ததற்கு ஆயிரமாயிரம் கோடி நன்றிகள் கடவுளுக்கு ...
18
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on November 18, 2025, 03:56:20 PM »
19
*மருந்துகள் என்றால் என்ன?*

1. சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்திருப்பது மருந்து.
2. காலையில் கடவுளை நினைப்பது மருந்து.
3. யோகா, பிராணயாமம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை மருந்துகள்.
4. காலை மற்றும் மாலை நடைப்பயிற்சிகளும் மருந்துகளாகும்.
5. உண்ணாவிரதம் அனைத்து நோய்களுக்கும் மருந்து.
6. சூரிய ஒளியும் மருந்து.
7. மண் பானை நீரைக் குடிப்பதும் மருந்து.
8. கைதட்டுவதும் மருந்து.
9. நன்றாக மெல்லுவதும் மருந்து.
10. தண்ணீர் குடிப்பதும் மனநிறைவுடன் சாப்பிடுவதும் மருந்துகள்.
11. சாப்பிட்ட பிறகு வஜ்ராசனத்தில் அமர்ந்திருப்பது மருந்து.
12. மகிழ்ச்சியாக இருக்க முடிவு செய்வது மருந்து.
13. சில நேரங்களில், மௌனம் மருந்து.
14. சிரிப்பும் நகைச்சுவையும் மருந்துகள்.
15. மனநிறைவு மருந்து.
16. மன அமைதியும் உடல் அமைதியும் மருந்து.
17. நேர்மையும் நேர்மறையும் மருந்துகள்.
 18. தன்னலமற்ற அன்பும் உணர்ச்சிகளும் மருந்துகளே.
19. மற்றவர்களுக்கு நன்மை செய்வது மருந்து.
20. நல்லொழுக்கத்தைத் தரும் ஒன்றைச் செய்வது மருந்து.
21. மற்றவர்களுடன் இணக்கமாக வாழ்வது மருந்து.
22. சாப்பிடுவது, குடிப்பது மற்றும் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது மருந்து.
23. ஒவ்வொரு உண்மையான மற்றும் நல்ல நண்பரும் பணம் இல்லாத முழுமையான மருந்தகம்.
24. குளிர்ச்சியாகவும், பிஸியாகவும், ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் இருப்பது மருந்து.
25. ஒவ்வொரு புதிய நாளையும் முழுமையாக அனுபவிப்பது மருந்து.
20
*தொல்லை தரும் வயிற்றுப்புண்*

அல்சர் எனப்படும் குடல் புண்ணால் இன்றைய காலகட்டத்தில் பலரும் அவஸ்தைப்படுகின்றனர்.

இதனால் சிறிது உணவு உட்கொண்டாலும் அது தொண்டைக்குழியிலேயே நிற்பது போல உணர்வு ஏற்படும்.

நெஞ்செரிச்சலும், புளித்த ஏப்பமும் அடிக்கடி வந்து தொந்தரவை ஏற்படுத்தும்.

வாய்க்கு ருசியாக காரமாகவோ, புளிப்பாகவோ எதையும் சாப்பிட முடியாத நிலை, கொஞ்சம் சாப்பிட்டால் கூட புளித்த ஏப்பம் என அல்சர் வாட்டியெடுத்துவிடும்.

சாப்பிட வேண்டிய நேரத்தில் சரியாகச் சாப்பிடாமல் விடுவதும், துரித உணவு, எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகள், காபி, டீ அதிகம் அருந்துவது போன்றவையும் அல்சர் ஏற்பட காரணமாகின்றன.

அதேபோல் அதிக டென்ஷன், மனஅழுத்தம் போன்றவையும் அல்சர் ஏற்படக் காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மனஅழுத்தத்தால்

ஒரு சிலருக்கு பாரம்பரிய ரீதியிலும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், அதிக உணர்ச்சி வசப்படுதல், மன அழுத்தம் காரணமாகவும் அல்சர் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

டென்ஷன் ஏற்படும்போது குடலில் அமிலம் அதிகமாகச் சுரக்கிறது, இதுவும் அல்சர் ஏற்பட முக்கிய காரணமாகிறது.

மருந்தின் வீரியத்தால்

சாதாரணமாக ஏற்படும் தலைவலி, காய்ச்சல் என்றால் தாங்களாகவே மருந்தகங்களுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி உட்கொள்கின்றனர். இவ்வாறு அடிக்கடி மாத்திரை சாப்பிடுவது ஆபத்து என்கின்றனர் மருத்துவர்கள்.

அதேபோல் வலிநிவாரணி மாத்திரைகள், ஆன்டிபயாடிக் போன்ற மாத்திரைகள் உட்கொள்வதும் அல்சர் ஏற்பட காரணமாகின்றன. ஏனெனில், ஆன்டிபயாடிக் உட்கொள்ளும்போது மருத்துவர்கள் தரும் பி.காம்ப்ளெக்ஸ் மாத்திரைகளை உட்கொள்வதும் அவசியம்.

எண்ணெய் பலகாரங்கள் கூடாது

வயிற்றுப்புண் ஏற்பட்டவர்கள் ஸ்ட்ராங்கான காபி, டீயை குடிக்கக் கூடாது. அதேபோல் அதிகமான இனிப்புகள், பொரித்த உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சைக் காய்கறிகள்(வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, மசாலா, காரமான குழம்பு இவற்றை அறவே தவிர்க்கவேண்டும்.

தவிர்க்கும் பட்சத்தில்

எந்தக் காரணத்தையும் கொண்டு உணவை தவிர்க்க கூடாது, சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளுதல் அவசியம்.

மேலும், அல்சர் உள்ளவர்கள் எளிதில் ஜீரணமாகும் வகையிலான உணவுகளை உட்கொள்ளவேண்டும்.

அல்சர் வந்தவர்களுக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது. மூன்று வேளையும் மூக்கைப் பிடிக்க சாப்பிடாமல், கொஞ்சமாக, அடிக்கடி சாப்பிடலாம்.

எதையும் நன்கு கடித்து, மென்று பொறுமையாக சாப்பிட வேண்டும்.

குழைய வேகவைத்த அரிசிச் சாதம், அவல் பொரியில் கஞ்சி போன்றவை செய்து சாப்பிடலாம்.

கீரை, காய்கறிகளைக்கூட நன்றாக வேகவைத்து மசித்துச் சாப்பிட வேண்டும், பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

உணவு உட்கொண்ட உடனே படுக்கைக்குச் செல்லக்கூடாது, ஏனெனில் அது நெஞ்செரிச்சல் ஏற்பட வழிவகுக்கும்.

எனவே சாப்பிட்டபின் மூன்று மணி நேரம் கழித்தே உறங்கவேண்டும். நேரம் கெட்ட நேரத்தில் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவது அவதியை அளிக்கும்.

பொதுவாக, வயிற்றுப்புண் உள்ளவர்கள், தங்கள் குடலை கண்ணும் கருத்துமாகக் காத்துக்கொள்ள வேண்டும்.
Pages: 1 [2] 3 4 ... 10