11
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 408 🆕
« Last post by SweeTie on July 06, 2026, 10:20:18 PM »செங்காந்தள் மலரென அவள்
சிறு விரல்கள் தொடும்வேளை
சுருங்கிக்கிடந்த என் இதயத்தில்
சுருக் என தைக்கிறது ஒரு முள் .
முன்னாள் காதலி அவள்
முத்தான கவிகளால் என்னை
முழு கவிஞனாய் மாற்றியவள்
காலம் பிரித்தாலும் காதல் குறையவில்லை
உனக்காக நானும் எனக்காக நீயும்
இவ்வுலகில் வலம் வந்த நாட்கள்
மீண்டும் வருமா என ஏங்கிய நாட்கள்
காதலோடு நாம் சங்கமித்த நினைவுகள்
மரணத்தை தழுவிய காவிய காதல் இல்லை
மீண்டும் சேர்வோம் என்ற நம்பிக்கை காதல்
வானத்தில் உலா வரும் நட்சத்திர காதல் இல்லை
வாழவேண்டும் என்ற ஆசைகொண்ட காதல்
உதிர்ந்த இதழ்களுக்கிடையே
மீண்டும் தோன்றும் புதிய மொட்டு
சுவாசத்தின் புதிய வாசம்
புதிதாக பிறந்த குழந்தையின் விசும்பல்
மீண்டும். மறந்துபோன அந்த சிரிப்பு,
மின்னல் வெட்டும் அதே கண்கள்
வாழ்க்கைஓட்டம் நிற்கும் வேளையில்
வந்த ஒரு கசக்காது காதல் ஓட்டம்
தலைமுடியில் ஆங்காங்கே தெரியும்
வெள்ளிக் கம்பிகள் மற்றவர்க்கு தெரியும் வயசாக
ஆனால் அது சொல்வது எங்கள் காதலின் ஆழம்
காதலுக்கு என்றும் வயசாகாது
அருகருகே நா ஓடும் இக் காதலோட்டம்
கடிகார முட்களையும் நிறுத்திவிடும்
இளமை என்னும் பூங்காற்று நம்மை
இன்பத்தில் ஆழ்த்திவிடும் கண்மணியே
இனி நம் வாழ்வில் வசந்தம் மட்டுமே
சிறு விரல்கள் தொடும்வேளை
சுருங்கிக்கிடந்த என் இதயத்தில்
சுருக் என தைக்கிறது ஒரு முள் .
முன்னாள் காதலி அவள்
முத்தான கவிகளால் என்னை
முழு கவிஞனாய் மாற்றியவள்
காலம் பிரித்தாலும் காதல் குறையவில்லை
உனக்காக நானும் எனக்காக நீயும்
இவ்வுலகில் வலம் வந்த நாட்கள்
மீண்டும் வருமா என ஏங்கிய நாட்கள்
காதலோடு நாம் சங்கமித்த நினைவுகள்
மரணத்தை தழுவிய காவிய காதல் இல்லை
மீண்டும் சேர்வோம் என்ற நம்பிக்கை காதல்
வானத்தில் உலா வரும் நட்சத்திர காதல் இல்லை
வாழவேண்டும் என்ற ஆசைகொண்ட காதல்
உதிர்ந்த இதழ்களுக்கிடையே
மீண்டும் தோன்றும் புதிய மொட்டு
சுவாசத்தின் புதிய வாசம்
புதிதாக பிறந்த குழந்தையின் விசும்பல்
மீண்டும். மறந்துபோன அந்த சிரிப்பு,
மின்னல் வெட்டும் அதே கண்கள்
வாழ்க்கைஓட்டம் நிற்கும் வேளையில்
வந்த ஒரு கசக்காது காதல் ஓட்டம்
தலைமுடியில் ஆங்காங்கே தெரியும்
வெள்ளிக் கம்பிகள் மற்றவர்க்கு தெரியும் வயசாக
ஆனால் அது சொல்வது எங்கள் காதலின் ஆழம்
காதலுக்கு என்றும் வயசாகாது
அருகருகே நா ஓடும் இக் காதலோட்டம்
கடிகார முட்களையும் நிறுத்திவிடும்
இளமை என்னும் பூங்காற்று நம்மை
இன்பத்தில் ஆழ்த்திவிடும் கண்மணியே
இனி நம் வாழ்வில் வசந்தம் மட்டுமே

Recent Posts
