11
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-009 (சொல்லாமல் போன காதல்/அன்பு)
« Last post by Oonjal on May 21, 2026, 11:00:49 PM »"சொல்லாமலே போன அன்பு"
ஊரையே சுற்றி சுற்றி விளையாடும் சிறு பிள்ளைகள் நாங்கள் யாரும் டிவி பக்கமே போறது இல்லை. அப்படி ஒரு நாள் நான் சைக்கிள் ஓட்டி முடித்து வீட்டுக்குள் வரும்போது டிவியில் "துள்ளாத மனமும் துள்ளும்" படம் கடைசி scene போறதை பார்த்தேன். என்னை அறியாமல் கண்ணீர் வழிந்தது. அந்த படம் முழுவதும் பார்க்க ஆசைபட்டு cable அண்ணா கிட்ட விஜய் படம் போடுங்க அண்ணா என்று கெஞ்சி போட வைத்து படம் பார்த்து முடித்தேன். அன்றில் இருந்து விஜய் படம் தேடி தேடி பார்க்க தொடங்கினேன்.
ஏன் என்னனு தெரியாமல் விஜய் டிவியில் வந்தாலே ரசிக்க ஆரம்பித்தேன். விஜய் பாடலை கேட்டால் கூட சேர்ந்து ஹம்மிங் பண்ணுவேன். நான் வளர வளர விஜய் மேலே இருந்த crush என் கூடவே வளர்ந்தது. ஒரு ரசிகையாய் நான் பண்ணும் ஆர்ப்பாட்டம் எல்லாம் பார்த்து என் தோழிகள் கிண்டல் பண்ணுவர். இப்படி ஒரு ரசிகை இருப்பது உன் விஜய்க்கு தெரியவா போகுது என்று கூட கலாய்ப்பர்.
யார் என்ன சொன்னாலும் கண்டுக்காமல் எனக்கு விஜயை பிடிக்கும் நான் இப்படிதான் இருப்பேன். விஜய்க்கு தெரியனும் என்று அவசியம் இல்லை என்பேன். நான் சொல்வதை விஜயை ரசிக்கும் ஒரு ரசிகையால் மட்டுமே உணர்ந்து கொள்ளமுடியும்.
அப்பா கிட்ட படத்துக்கு போகனும் என்று கேட்க முடியாது. ஒரு function போயிட்டு வரும் வழியில் அத்தை குடும்பத்தோடு கத்தி படம் போனோம். மறக்க முடியாத படமாய் என் நெஞ்சில் இன்றுவரை இருக்கிறது. எல்லா பாடல்களுக்கும் கத்தி கத்தி என் தொண்டை புண்ணாகி போச்சு. அவ்ளோ ஆட்டம் போட்டேன்.
திருமணத்திற்கு பின் என் கணவர் என்ன சொல்லுவாரோ என்று கொஞ்சம் பயம் இருந்தது. அவரோடு விஜய் படம் பார்க்க போனேன். கொஞ்ச நேரம்தான் அமைதியாக இருக்க முடிந்தது. எல்லோரும் கத்தி கூச்சல் போடுவதை பார்த்ததும் நானும் கத்தி கூச்சல் போட்டேன். அவர் சிரித்து கொண்டே என்ன இப்படி ஆட்டம் போடுற என்று கேட்டார். Hehe விஜயை பார்த்த மட்டும் எனக்குள்ள இருந்து இன்னொருத்தி வெளியே வருவா என்றேன். அவர் திட்டவோ இப்படி பண்ணாதே என்றோ சொல்லிருந்தா என் மனம் உடைந்திருக்கும். அன்றில் இருந்து விஜய் படம் வந்தால் முதல்நாள் படம் பார்க்க அழைத்து செல்லுவார்.
தியேட்டரில் படம் பார்ப்பதே கனவாக இருந்த எனக்கு முதல் நாள் படம் பார்ப்பது எவ்ளோ சந்தோசம் தரும் என்று சொல்ல வார்த்தைகள் இல்லை. News channel பக்கமே போகாத நான் டிவியில் "ஜோசப் விஜய் என்கிற நான்" விஜய் CMஆ பொறுப்பு ஏற்ற அந்த நொடியை கண்டு மெய்சிலிர்த்தேன். நான் எப்பவுமே விஜயை ஒருமையில் தான் பேசுவேன் என் மனதில் இப்படி நெருங்கிய இடத்தை வேறு யாரும் பிடித்தது இல்லை.
எங்க வீட்டில் ஒருத்தராக பார்க்கும் விஜயை தள்ளி வைத்து மரியாதை கொடுத்து பேச எனக்கு வராது. என்னை யார் என்றே தெரியாத விஜய் மேலே எனக்கு வந்த இந்த அன்பு என் வாழ்வின் இறுதி வரை தொடரும்.
ஊரையே சுற்றி சுற்றி விளையாடும் சிறு பிள்ளைகள் நாங்கள் யாரும் டிவி பக்கமே போறது இல்லை. அப்படி ஒரு நாள் நான் சைக்கிள் ஓட்டி முடித்து வீட்டுக்குள் வரும்போது டிவியில் "துள்ளாத மனமும் துள்ளும்" படம் கடைசி scene போறதை பார்த்தேன். என்னை அறியாமல் கண்ணீர் வழிந்தது. அந்த படம் முழுவதும் பார்க்க ஆசைபட்டு cable அண்ணா கிட்ட விஜய் படம் போடுங்க அண்ணா என்று கெஞ்சி போட வைத்து படம் பார்த்து முடித்தேன். அன்றில் இருந்து விஜய் படம் தேடி தேடி பார்க்க தொடங்கினேன்.
ஏன் என்னனு தெரியாமல் விஜய் டிவியில் வந்தாலே ரசிக்க ஆரம்பித்தேன். விஜய் பாடலை கேட்டால் கூட சேர்ந்து ஹம்மிங் பண்ணுவேன். நான் வளர வளர விஜய் மேலே இருந்த crush என் கூடவே வளர்ந்தது. ஒரு ரசிகையாய் நான் பண்ணும் ஆர்ப்பாட்டம் எல்லாம் பார்த்து என் தோழிகள் கிண்டல் பண்ணுவர். இப்படி ஒரு ரசிகை இருப்பது உன் விஜய்க்கு தெரியவா போகுது என்று கூட கலாய்ப்பர்.
யார் என்ன சொன்னாலும் கண்டுக்காமல் எனக்கு விஜயை பிடிக்கும் நான் இப்படிதான் இருப்பேன். விஜய்க்கு தெரியனும் என்று அவசியம் இல்லை என்பேன். நான் சொல்வதை விஜயை ரசிக்கும் ஒரு ரசிகையால் மட்டுமே உணர்ந்து கொள்ளமுடியும்.
அப்பா கிட்ட படத்துக்கு போகனும் என்று கேட்க முடியாது. ஒரு function போயிட்டு வரும் வழியில் அத்தை குடும்பத்தோடு கத்தி படம் போனோம். மறக்க முடியாத படமாய் என் நெஞ்சில் இன்றுவரை இருக்கிறது. எல்லா பாடல்களுக்கும் கத்தி கத்தி என் தொண்டை புண்ணாகி போச்சு. அவ்ளோ ஆட்டம் போட்டேன்.
திருமணத்திற்கு பின் என் கணவர் என்ன சொல்லுவாரோ என்று கொஞ்சம் பயம் இருந்தது. அவரோடு விஜய் படம் பார்க்க போனேன். கொஞ்ச நேரம்தான் அமைதியாக இருக்க முடிந்தது. எல்லோரும் கத்தி கூச்சல் போடுவதை பார்த்ததும் நானும் கத்தி கூச்சல் போட்டேன். அவர் சிரித்து கொண்டே என்ன இப்படி ஆட்டம் போடுற என்று கேட்டார். Hehe விஜயை பார்த்த மட்டும் எனக்குள்ள இருந்து இன்னொருத்தி வெளியே வருவா என்றேன். அவர் திட்டவோ இப்படி பண்ணாதே என்றோ சொல்லிருந்தா என் மனம் உடைந்திருக்கும். அன்றில் இருந்து விஜய் படம் வந்தால் முதல்நாள் படம் பார்க்க அழைத்து செல்லுவார்.
தியேட்டரில் படம் பார்ப்பதே கனவாக இருந்த எனக்கு முதல் நாள் படம் பார்ப்பது எவ்ளோ சந்தோசம் தரும் என்று சொல்ல வார்த்தைகள் இல்லை. News channel பக்கமே போகாத நான் டிவியில் "ஜோசப் விஜய் என்கிற நான்" விஜய் CMஆ பொறுப்பு ஏற்ற அந்த நொடியை கண்டு மெய்சிலிர்த்தேன். நான் எப்பவுமே விஜயை ஒருமையில் தான் பேசுவேன் என் மனதில் இப்படி நெருங்கிய இடத்தை வேறு யாரும் பிடித்தது இல்லை.
எங்க வீட்டில் ஒருத்தராக பார்க்கும் விஜயை தள்ளி வைத்து மரியாதை கொடுத்து பேச எனக்கு வராது. என்னை யார் என்றே தெரியாத விஜய் மேலே எனக்கு வந்த இந்த அன்பு என் வாழ்வின் இறுதி வரை தொடரும்.

Recent Posts





