11
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 395
« Last post by PreaM on January 19, 2026, 11:18:06 PM »வேண்டாத தெய்வங்களை வேண்டி விட்டேன்
வேண்ட வந்தேனம்மா உன்னிடத்தில்
காணாத கஷ்டங்கள் கண்டேனம்மா
கண்களில் நீர்வழிய நின்றேனம்மா
தீராத வேதனை என்னிடத்தில்
தீர்த்து வையடி இந்த பெண்னிடத்தில்
வேதனை நீ தந்த சோதனையா
நீ சோதிக்க நான் என்ன பாதகியா
பட்ட கஷ்ட்டம் எல்லாம் போதுமம்மா
கண் திறந்தென்னை பாரும் அம்மா
கல்லான உன்னைக் காண வந்தேன்
சொல்லாலே சோகம் தீர்க்க வந்தேன்
உன் சோதனையால் வாழ்வு வேதனையே
சோறும் தண்ணியும் இறங்கலையே
விரதம் இருந்து வேண்டி வந்தும்
என் வேதனை இன்னும் தீரலையே
கையேந்தி வேண்டி நிற்கின்றேன் பாரம்மா
காது கொடுத்து கொஞ்சம் கேளம்மா
உன் கண்களை திறந்து பாரம்மா
நீ கருணை கொஞ்சம் காட்டம்மா
வேண்ட வந்தேனம்மா உன்னிடத்தில்
காணாத கஷ்டங்கள் கண்டேனம்மா
கண்களில் நீர்வழிய நின்றேனம்மா
தீராத வேதனை என்னிடத்தில்
தீர்த்து வையடி இந்த பெண்னிடத்தில்
வேதனை நீ தந்த சோதனையா
நீ சோதிக்க நான் என்ன பாதகியா
பட்ட கஷ்ட்டம் எல்லாம் போதுமம்மா
கண் திறந்தென்னை பாரும் அம்மா
கல்லான உன்னைக் காண வந்தேன்
சொல்லாலே சோகம் தீர்க்க வந்தேன்
உன் சோதனையால் வாழ்வு வேதனையே
சோறும் தண்ணியும் இறங்கலையே
விரதம் இருந்து வேண்டி வந்தும்
என் வேதனை இன்னும் தீரலையே
கையேந்தி வேண்டி நிற்கின்றேன் பாரம்மா
காது கொடுத்து கொஞ்சம் கேளம்மா
உன் கண்களை திறந்து பாரம்மா
நீ கருணை கொஞ்சம் காட்டம்மா

Recent Posts