Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
கவிதைகள் / Re: சிங்கப் பெண்ணே
« Last post by JsB on Today at 01:20:25 PM »
சிங்கப் பெண் என்பது ஒரு பெயர் அல்ல... ஒரு மனநிலை, ஒரு தன்னம்பிக்கை, ஒரு வாழ்க்கைப் பயணம்.
ஒவ்வொரு வரியும் பெண்களின் துணிவையும், தன்னம்பிக்கையையும் அழகாகப் பேசுகிறது. மனதை ஊக்கப்படுத்திய அருமையான பதிவு. 👏
12
அப்பா என்ற உறவு...
வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு.

ஒவ்வொரு வரியும் கண்களை கலங்க வைத்தது.
அருமையான பதிவு . 👏
13
வார்த்தைகள் படிக்கவில்லை...
வாழ்க்கையையே படித்த உணர்வு.
இளமையில் மலர்ந்த காதல்,
முதுமையில் நிழலாக நிற்கும்
என்பதற்கு இந்த வரிகள்
அழகான சாட்சி.
அருமையான பதிவு. 👏
14
*வயிற்று புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட கம்பு.*

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

* அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.
 
* கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
 
* உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
 
* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக்  கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.
 
* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.
 
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக  வாழலாம்

15
Happy Birth day KANITHAN machi , Many more Happy returns of day , eppavum happy ya santhosamma ya irukanga
16
🌹 தெப்பக்குளம்...

நம்ம ஊர் பெரிய கோவில்களுக்குப் போனால், அங்கே பிரம்மாண்டமான ஒரு தெப்பக்குளம் இருப்பதை பார்த்திருப்போம். சாமிக்கு தெப்ப உற்சவம் நடத்தவும், கை கால் கழுவவும்தான் இந்த குளம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் அசாத்தியமான அறிவியலைத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

இன்று நாம்  'மழைநீர் சேகரிப்பு' என்று  கூறும் நீர் சேமிப்பு பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, ஒட்டுமொத்த ஊருக்கும் சேர்த்து பிரம்மாண்டமாக மழைநீரை சேகரித்தார்கள் நம் முன்னோர்கள். ஊரின் பள்ளமான பகுதியைத் தேர்ந்தெடுத்துதான் கோவில் குளங்கள் அமைக்கப்பட்டன. இதனால் ஊரில் பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழைநீரும் இயற்கையாகவே அந்த குளத்திற்கு வந்து சேரும்.

கோவில் குளத்தில் தண்ணீர் நிரம்பியிருந்தால், அதைச் சுற்றியுள்ள பல கிலோமீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும். எவ்வளவு கொடிய கோடைக்காலம் வந்தாலும், வறட்சி ஏற்பட்டாலும் மக்கள் தண்ணீருக்கு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட 'உயிர் காக்கும் வங்கி' (Life-saving Bank) தான் கோவில் குளம்!

அது மட்டுமா? கோவில் கட்டும்போதே, குளத்துக்காக தோண்டப்பட்ட உறுதியான மண்ணை வைத்துதான் பிரம்மாண்டமான கோவில் மதில்களையும், கோபுரத்தின் அஸ்திவாரத்தையும் எழுப்பினார்கள். நிலநடுக்கம் வந்தாலும், அந்த அதிர்வுகளை குளத்தில் உள்ள தண்ணீர் உள்வாங்கிக் கொண்டு கோவிலைக் காக்கும். அதனால் தான் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நம் கோவில் கோபுரங்கள் சிறு விரிசல் கூட இல்லாமல் இன்றும் கம்பீரமாக நிற்கின்றன.

ஆன்மீக ரீதியாகவும் இதற்கு ஒரு பெரிய காரணம் உண்டு. கோவில்கள் அதிக நேர்மறை அதிர்வுகள் மற்றும் காந்த சக்தி கொண்ட இடங்கள். தண்ணீர் ஒரு சிறந்த கடத்தி. கோவில் குளத்து நீரைத் தழுவி வரும் காற்று நம் உடலில் படும்போது, நம் சக்கரங்கள் சமநிலையடைந்து, மன அழுத்தம் குறைந்து ஒருவித அமைதி கிடைப்பதை நீங்கள் நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள். இதுதான் சித்தர்கள் நமக்கு வைத்துவிட்டுப் போன ஆழமான அறிவியல்!

வெறும் வழிபாட்டுத்தலமாக மட்டுமல்லாமல், கோவில்களை ஒரு சமூகத்தின் நீர் ஆதாரமாகவும், வாழ்வாதார மையமாகவும் மாற்றிய நம் தமிழர்களின் அறிவுக்கு ஈடு இணையே இல்லை!

17
விண்ணுக்கு வான வில் அழகு
மண்ணுக்கு இயற்கை வளம் அழகு
செடிகளுக்கு பூக்கள் அழகு
கடலுக்கு அலைகள் அழகு
காதலுக்கு அன்பு அழகு
முகத்திற்கு புன்னகை அழகு
உனக்கு நான் அழகு
எனக்கு நீ அழகு

‌அடுத்து   🪷 புன்னகை 🪷
19
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 09:37:13 AM »
20
ஹாய் Friends...! ❤️

என் மனதில் இருந்து... ❤️

இங்க இருக்கும் பலர் இன்னும் தங்கள் பெற்றோருடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம்... சிலர் திருமணமாகி தனியாக வாழ்ந்தாலும், பெற்றோரை மறக்காமல் அன்போடும் அரவணைப்போடும் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படி இருந்தால், அதைவிட எனக்கு மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. ❤️🙏

ஆனால் இன்று பல பெற்றோர்கள், தாங்கள் உயிராய் வளர்த்த பிள்ளைகளாலேயே கைவிடப்பட்டு, முதியோர் இல்லங்களிலும், ஆதரவற்ற நிலையிலும், வீடும் வாசலும் இல்லாமல் வாழும் வேதனையை அனுபவித்து வருகிறார்கள். அவர்களின் கண்ணீரால் இந்த பூமியே கனத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு விஷயம் மட்டும் மறந்துவிடாதீர்கள்... அவர்கள் இல்லையென்றால், இன்று நாம் யாருமே இந்த உலகத்தில் இருந்திருக்க முடியாது. ❤️

அந்த எண்ணத்தை மனதில் வைத்து, அனைவரும் சிந்திக்க வைக்கும் ஒரு சிறிய கதையை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்...

நான் என் குடும்பத்தில் ரொம்ப செல்லப் பிள்ளை. ஒரு அடி கூட வாங்காமல் வளர்ந்தவள் என்று சொல்லலாம். குடும்பப் பாசம், அக்கறை, புரிதல்... இவை எல்லாமே எனக்கு அதிகம். எனக்குப் பிடித்தவர்கள் என்னிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நான் நினைப்பேனோ, அதே அன்பையும் அக்கறையையும் முதலில் அவர்களுக்கே கொடுக்க வேண்டும் என்பதுதான் என் குணம்.

என் அம்மாவாக இருந்தாலும், அப்பாவாக இருந்தாலும், அவர்களிடம் நான் எப்போதும் சுட்டித்தனமாகத்தான் இருப்பேன். பத்து வயதிலேயே என் அப்பாவுக்காக சமையல் செய்து கொடுத்திருக்கிறேன்.என் அப்பாவுக்கு என் சமையல் என்றால் ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி, "இன்று நீ சமைத்து கொடு..." என்று சொல்லி ஆசையாக சாப்பிடுவார். நான் சமைத்து பரிமாறும் ஒவ்வொரு முறையும், அவர் முகத்தில் தெரியும் அந்த சந்தோஷம் எனக்கு உலகமே கிடைத்தது போல இருக்கும்.

அன்றிலிருந்து அவர் இந்த உலகத்தை விட்டுப் போகும் நாள் வரை, என் உலகமே அவரைச் சுற்றித்தான் இருந்தது.எனக்கு ஒரு சிறிய கஷ்டம் என்றால்கூட, என் அம்மாவாக இருந்தாலும் சரி, என் அப்பாவாக இருந்தாலும் சரி, அதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. நான் சிரித்தால் அவர்களும் சிரிப்பார்கள்; நான் வாடினால், என்னைவிட அதிகமாக அவர்கள் வாடிப் போய்விடுவார்கள்.

அதுதான் பெற்றோரின் அன்பு. நம்முடைய வலியை அவர்கள் தங்களுடைய வலியாகவே உணர்வார்கள். அந்த அன்புக்கு இந்த உலகத்தில் எந்த ஈடும் இல்லை.

ஒரு நாள் வந்தது... என்னை விட்டு நிரந்தரமாகப் பிரியும் நாள். மரணம் என்னும் வாசல் வழியாக என் அப்பா இறைவனிடம் சென்றுவிட்டார்.
அவர் சென்ற பிறகு... என் உலகமே இருண்டுபோனது. இன்று என்னிடம் எல்லாமே இருக்கிறது. ஆனால், "அப்பா" என்று அழைக்க என் அப்பா இல்லை. அந்த வெற்றிடத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. சில நேரங்களில், "அப்பா..." என்று ஒருமுறை அழைக்க முடியாதா என்று ஏங்கிய நாட்களும் உண்டு.

ஆனால் ஒரு விஷயத்தை முடிவு செய்தேன். என் அப்பாவுக்கு செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு செய்ய முடியாமல் போன எல்லா அன்பையும், இன்று அப்பாவாக நினைக்கும் ஒவ்வொருவரிடமும் பகிர்ந்து கொண்டே இருக்கிறேன்.

இப்போது என் உலகம் என் அம்மா. தாயென்ற தொப்புள் கொடி உறவு. அந்த உறவும் இல்லாமல் நான் எப்படி இருப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

என் அப்பாவுக்கு செய்ய முடியாமல் போன பல விஷயங்களை, என் அம்மாவுக்குச் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் சின்னதாக ஆசைப்பட்டாலும், அது உடனே நிறைவேற்ற முயற்சிப்பேன். அவர் கேட்காத பல விஷயங்களைக்கூட, அவர் மகிழ்ச்சிக்காகச் செய்திருக்கிறேன்.

ஒரு நாள் அவர்கள் நம்முடன் இருக்க மாட்டார்கள். அந்த நாளின் வலி தவிர்க்க முடியாதது. ஆனால் அவர்கள் நம்முடன் இருக்கும் இந்த நேரத்தில், அவர்களை நன்றாகப் பார்த்துக்கொண்டு, அன்பாக வைத்துக்கொண்டு, அவர்களின் மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பது மட்டும்தான் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.

பெற்றோர் இருக்கும் போதே அவர்களின் மதிப்பை உணருங்கள். அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். அவர்களுக்காக செய்ய வேண்டியதை நாளைக்கு தள்ளிப் போடாதீர்கள். இன்று செய்யுங்கள். நாளை என்பது யாருக்கும் உறுதி இல்லை. ❤️🙏

அன்புடன்,
JSB ❤️



Pages: 1 [2] 3 4 ... 10