Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
உணவோட கலந்த நினைவு நம்ம எல்லாருக்குமே இருக்கும். உணவு சிலருக்கு ருசிங்கிற உணர்வு, ஆனா சின்ன வயசுல எங்களுக்கு உணவுங்கிறது பசியோட உணர்வு. உணவுன்னு சொன்னாலே அம்மா ஞாபகம் தான் நம்ம எல்லாருக்கும் வரும். ஆனா நாங்க சின்ன வயசா இருந்தப்போ அம்மா வேலைக்கு போயிட்டு இருந்ததால தயிர் சாதம், சாம்பார் சாதம், இட்லி தோசை தவிர எதுவும் எங்க வீட்டுல கண்ணால கண்டது இல்ல. அதுவும் ஸ்கூலுக்கு பெரும்பாலும் தயிர் சாதம் தான். அந்த தயிர் சாதமும் கெட்டி அடிச்சி போயிருக்கும். ஸ்கூல் முடிஞ்சு வரும்போது, வீடு இருக்கிற தெருவுல நுழையறத்துக்கு முன்னாடி தெருமுனையில இருந்த சாக்கடை பக்கத்துல நின்னு நானும் என் தங்கச்சியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு, ‘நீ சாப்டியா', ‘சாப்பிடலையா’ன்னு கேட்டுட்டு சாப்பாட கொட்டிட்டு வீட்டுக்கு வருவோம்.

எங்க அம்மாவுக்கு ட்ரான்ஸ்பர் ஆகி எங்க அஜ்ஜி இருந்த ஊருக்கே போனோம். எங்களோட பசிய ருசியோட போக்கினது எங்க அஜ்ஜி தான். பெருசா ஒன்னும் இல்ல மாங்கா முருங்காய் போட்டு சாம்பார் வச்சிருப்பாங்க. வாசல்ல போகும் போதே அவ்வளவு மணமா இருக்கும். ஸ்கூல் முடிஞ்சு நேரா அஜ்ஜி வீட்டுக்கு ஓடிருவோம். தட்டு நிறைய சோற போட்டு சாம்பார ஊத்தி, கவளம் கவளமா உருட்டி ஊட்டி விடுவாங்க. அந்த குட்டி வயித்துக்குள்ள அவ்வளவு சாப்பாடு உள்ள போகுதுன்னா அது அஜ்ஜி கையால மட்டும் தான். சாப்பிட்டுட்டு மலைப்பாம்பு மாதிரி உருண்டுட்டு இருப்போம் நான், எங்க அண்ணா, என் தங்கச்சி மூணு பேரும். லீவு நாளுல போனா போதும், Fancy foodலாம் இல்ல பழைய சோற புழிஞ்சு அதுல பழைய குழம்பை ஊத்தி உருட்டி உருட்டி ஊட்டி விடுவாங்க. சொர்க்கமா இருக்கும்.
அஜ்ஜி மேல மணக்குற அந்த  cinthol வாசனையும், அஜ்ஜியோட சாப்பாட்டு மணமும் இன்னமும் நான் தேடி கிடைக்காத வாசனைகள்.

அடுத்து, சம்மர் லீவ் விட்டா எங்க அப்பாயி ஊருக்கு போவோம். ரொம்ப சாதாரண குடும்பம் தான். அங்கேயும் Grand feast, fancy foodலாம் எதுவும் இல்ல, ஆனா எங்க அப்பாயி செய்யிற ‘வெந்தய களி'க்கு முன்னாடி இப்போ crave பண்ற பிட்சா, பாஸ்தாலாம் ஒன்னுமே இல்ல. சுட சுட வெந்தய களி கிண்டி அது நடுல வெல்லமும் நல்லெண்ணையும் ஊத்தி கொடுப்பாங்க. அந்த சுவைல இன்னைக்கு வரைக்கும் வெந்தய களி சாப்பிட்டதே இல்ல. சில சமயம் நல்ல தண்ணியா அரைச்ச தேங்காய் சட்னி செஞ்சு தருவாங்க இந்த வெந்தய களிக்கு, தட்டை வழிச்சு நக்காத குறையா எல்லாரும் சாப்பிடுவோம்.

எந்த ஊருக்கும், வெளிநாட்டு பயணம் போனாலும் சரி அந்த ஊரோட native food சாப்பிட்டு பார்க்கனும் அப்படிங்கிற ஆசை எனக்கு எப்பவும் உண்டு. அப்படி நான் சாப்பிட்ட வேற ஊர் சாப்பாடுல எனக்கு ரொம்ப பிடிச்சது இலங்கைல சாப்பிட்ட பல சாப்பாடு இன்னமும் எப்போட திரும்ப சுவைப்போம்ன்னு இருக்கு. இத்தனைக்கும் இலங்கைக்கு போயிருந்தப்போ எல்லாமே நண்பர்களுடைய வீடுகள்ல சாப்பிட்ட சாப்பாடு தான். கண்டி, எல்லா, மட்டகளப்பு, யாழ்ப்பாணம், வவுனியான்னு ஒவ்வொரு ஊர்ல சாப்பிட்ட ஒவ்வொரு உணவும் தனி ருசி.

நண்பர்கிட்ட அவங்க வீட்டுல இருந்து pack பண்ணி சம்பல் அனுப்ப சொல்ற அன்பு இன்னமும் இருக்கு. அங்க சாப்பிட்ட வண்டப்பம், வட்டிலப்பம், மரக்கறி கூட்டு, மிளா கறி, கொத்து இடியப்பம், ஒடியல் கூழ், தம்பிளின்னு எதோட சுவையும் இன்னும் மறக்கல. அது வெறும் உணவோட சுவை மட்டுமில்ல, அந்த எளிய மனிதர்களோட அன்பும் தான். உணவும் ஒரு நினைவு தான்னு உணர வைத்த நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சிக்கு நன்றி.


12
🦁 சிங்கம், புலி, யானை... இவை எல்லாம் சர்க்கஸில் இருக்கும். ஆனால், ஓநாயை மட்டும் பார்த்ததுண்டா? 🐺
ஒரு வேளை உணவுக்காகவும், பாதுகாப்பான வாழ்க்கைக்காகவும் பல கம்பீரமான விலங்குகள் கூட தங்கள் சுதந்திரத்தை மனிதர்களிடம் ஒப்படைத்து விடுகின்றன. சவுக்கடிக்கு பயந்து, கட்டளைக்கேற்ப வளையத்திற்குள் தாவுகின்றன.
ஆனால்...
ஓநாயை மட்டும் நீங்கள் சர்க்கஸில் ஒருபோதும் பார்க்க முடியாது!
ஏன் தெரியுமா?
ஓநாய் பசியைத் தாங்கும்.
தனியாகப் போராடும்.
தோல்வியைச் சந்திக்கும்.
ஆனால், வசதிக்காக (Comfort) தனது சுதந்திரத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
கூண்டுக்குள் கிடைக்கும் சொகுசான வாழ்க்கையை விட, காட்டில் கிடைக்கும் சவாலான சுதந்திரமே அதற்கு மேலானது.
இது ஒரு விலங்கின் கதை மட்டும் அல்ல...
நம் வாழ்க்கைக்கான ஒரு ஆழமான பாடம். 💡
இன்று நம்மில் பலர் Comfort Zone என்ற பாதுகாப்பான வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டு, நம் கனவுகள், லட்சியங்கள், சுயமரியாதை என பலவற்றை மெதுவாக இழந்து வருகிறோம்.
மாத சம்பளத்தின் பாதுகாப்புக்காகவோ...
மற்றவர்களின் பாராட்டுக்காகவோ...
அல்லது மாற்றத்தின் பயத்தினாலோ...
நம் உண்மையான சுதந்திரத்தை நாம் தியாகம் செய்கிறோமா?
ஆம், வாழ்க்கையில் தோல்விகள் வரும்.
தடைகள் வரும்.
சவால்கள் வரும்.
ஆனால்...
சொந்தக் காலில் நின்று வாழ்வதே உண்மையான வெற்றி.
வசதியாக வாழ்வது ஒரு தேர்வு.
சுதந்திரமாக வாழ்வது ஒரு மதிப்பு.
வசதிக்காக வளைந்து கொடுப்பது உயிர்வாழ்தல் அல்ல...
அது சரணடைதல்! 🔥
எனவே...
✨ தடைகளை உடைப்போம்.
✨ சுதந்திரமாகச் சிந்திப்போம்.
✨ நம் பாதையை நாமே உருவாக்குவோம்.
13
_*எல்லோருடைய இதயங்களும் ஒரே அளவில் தான் இருக்கிறது, ஆனால் எல்லோர் இதயங்களிலும் கருணையும், மனிதநேயமும் தான் ஒரே அளவில் இருப்பதில்லை,*_

_நம்மைத் தவறாக நினைத்து விட்டார்களே எனப் புலம்பாமல் நம்மை இவ்வளவுதான் புரிந்து வைத்துள்ளார்கள் என விலகிவிடுவதே சிறப்பான பதிலடியாகும்._

_*நாம் தொலைந்தால்*_ _*தேடும் அளவிற்கு*_ _*இல்லாவிட்டாலும்,*_ _*நம்மைப் பார்த்து யாரும் ஒளிந்து கொள்ளாத*_
_*அளவிற்கு ஒரு*_ _*வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும்.*_

_தொலைநோக்குச் சிந்தனை, எதிலும் நேர்நிலையான பார்வை, விடாமுயற்சி, உழைப்பின் மீதான நம்பிக்கை, எந்த நேரத்திலும் எதற்காகவும் துவண்டு போகாத மனோதைரியம், குழப்பம் இல்லாமல் முடிவுகளை எடுக்கும் திறன், மற்றவர் கருத்துக்கும் மதிப்பளித்துக் கேட்கும் மனப்பான்மை... இவையனைத்தும் யாரிடம் இருக்கிறதோ அவரே வெற்றியாளர்._

_*வெற்றியாளரின் வாழ்க்கை வரலாற்றைப் பாருங்கள். மேலே குறிப்பிட்ட அத்தனை விசயங்களையும் அவர்கள் கடைபிடித்திருப்பார்கள். வெற்றியாளராவது என்பது மூன்று நிமிடத்தில் ஒரே பாடலில் பணக்காரர் ஆகும் திரைப்படம் போன்றதல்ல.*_
_*பல நாள், பல போராட்டங்களைச் சந்தித்து நல்ல அனுபவங்களை*_
_*கற்றுக் கொண்டால்தான்*_
_*வெற்றிபெற முடியும்.*_

_எவ்வளவு கடுமையாக உழைக்கிறீர்கள் என்பதைச் சொல்லாதீர்கள். எவ்வளவு சாதித்தீர்கள் என்று சொல்லுங்கள் என்கிறார் ஜேம்ஸ் லிங்க் என்ற அறிஞர். எனவே நாம் எவ்வளவு உழைத்தோம் என்பதைவிட, எவ்வளவு சாதித்தோம். ஒரு சாதனையாளராய் வெற்றியாளராய் இருக்கிறோம் என்பதே முக்கியம்._

_*நான் எனக்கு மட்டும் அது கிடைத்திருந்தால் நல்ல வாய்ப்பு எனக்கு வாய்த்திருந்தால், நானும் ஜெயித்திருப்பேன். என்ன செய்வது கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று புலம்பும் சிலரை நாம் பார்த்திருப்போம். இவர்கள் இப்படி சாக்குபோக்கு சொல்லியே தோற்றுப் போகிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் தங்களின் அடையாளத்தையும் தொலைத்து விடுகிறார்கள்.*_
14
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on July 04, 2026, 10:19:19 AM »
15

வழியில் கண்ட அழகு...
வழியில் நடந்தேன்... வாழ்க்கையை நினைத்தபடி...
அப்போது, ஒரு சிறிய பறவை அமைதியாக மண்ணைத் தொட்டு நடந்தது.
அது எனக்குச் சொல்லாமல் சொன்னது...

"பறக்கத் தெரிந்தவனும், எப்போது தரையில் நடக்க வேண்டும் என்பதை அறிவான்."

அவசரமாக ஓடும் உலகத்தில், அமைதியாக வாழ்வதும் ஒரு கலை.
சிறகுகள் இருந்தும் ஆணவம் இல்லை... சுதந்திரம் இருந்தும் ஆர்ப்பாட்டம் இல்லை...

இயற்கை தினமும் பாடம் நடத்துகிறது... அதை ரசிக்க ஒரு மனம் இருந்தால் போதும்.

"வழியில் கண்ட அந்தப் பறவை...
சில நொடிகள் மட்டுமே என் கண்களில் இருந்தது;
ஆனால் அது கற்றுக் கொடுத்த அமைதி,
என்றும் என் மனதில் இருக்கும்."



16

இன்று எனக்கு திடீரென்று Durian சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

அதனால்தான், ரெடியாக பேக் செய்து வைத்திருந்த Durian பழத்தை வாங்கினேன்.

எனக்கு முழு Durian வாங்கி அதைத் திறக்கத் தெரியாது. அதனால் ஆசை வந்தால் இப்படி ரெடியாக பேக் செய்து வைத்திருப்பதை வாங்கிச் சாப்பிடுவது வழக்கம்.

ஆனால், ஒரு விஷயம் சொல்லணும்...

யாராவது முதல் முறையாக Durian சாப்பிட நினைத்தால், இப்படி ரெடியாக பேக் செய்ததை வாங்காதீர்கள். இதன் சுவையும் மணமும் கொஞ்சம் குறைந்திருக்கும்.

புதிதாக (Fresh) பழத்தை வாங்கி, அப்போதே திறந்து சாப்பிட்டால்தான் Durian-ன் உண்மையான சுவையையும் கிரீமியான பதத்தையும் முழுமையாக ரசிக்க முடியும்.

சில பழங்கள் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் Durian மட்டும் சரியான நேரத்தில் கிடைத்தால் தவறவிடாதீர்கள்!

உங்களுக்கு Durian பிடிக்குமா? ❤️ இல்லை அதன் வாசனைக்கே ஓடிடுவீங்களா? 😄


17
SMS & QUOTES / Re: 𝖇𝖚𝖙 𝕷𝖎𝖋𝖊 𝖌𝖔𝖊𝖘 𝖔𝖓✍
« Last post by MysteRy on July 04, 2026, 06:18:09 AM »
18
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on July 04, 2026, 06:04:14 AM »
19
General Videos / Re: Sam Odu Vilayadu Season 5 Episode 7
« Last post by MysteRy on July 03, 2026, 07:58:39 PM »
20

"பசிக்குதுன்னு சொன்னார்... ஆனால் பசி வயிற்றுக்கில்லை!"





நான் வேலை செய்யும் இடத்தில் நடந்த ஒரு சம்பவம் இது.

ஒரு நாள் மதிய நேரத்தில், இரண்டு தமிழ் உணவகங்களில் ஒன்றில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு குடிபோதையில் இருந்தவர் என் மேசை அருகே வந்து, "எனக்கு ரொம்ப பசிக்கிறது... சாப்பாடு வாங்க பணம் இல்லை..." என்று கேட்டார்.

அவருடைய வார்த்தைகளைக் கேட்டதும் மனம் கேட்கவில்லை. உடனே சில பணத்தை அவரிடம் கொடுத்து, "போய் சாப்பாடு வாங்கிச் சாப்பிடுங்கள்" என்று சொன்னேன்.

ஆனால் அடுத்த நிமிடமே அவர் அந்தப் பணத்தில் பீர், சிகரெட் வாங்கக் கேட்டதைப் பார்த்ததும் எனக்குள் இருந்த கருணை கோபமாக மாறிவிட்டது.

உடனே கவுண்டருக்குச் சென்று, நான் கொடுத்த பணத்தை அவரிடமிருந்து திரும்பப் பெற்றேன். அவரை நன்றாகக் கண்டித்தேன். "பசி என்று பொய் சொல்லி யாருடைய இரக்கத்தையும் ஏமாற்றாதீர்கள். உண்மையில் பசித்தால் உணவைக் கேளுங்கள்; மது, சிகரெட்டுக்காக அல்ல," என்று புத்திமதியும் சொன்னேன்.

கோபத்தில் பாதி சாப்பாட்டையே விட்டுவிட்டு வெளியே வந்தேன்.

ஆனால் சில அடிகள் நடந்த பிறகு மனசாட்சி என்னை விடவில்லை.

அவர் செய்தது தவறு. அதற்காக அவருடைய பசியும் உண்மையாக இருக்கக்கூடாதா என்ற எண்ணம் தோன்றியது.

மீண்டும் அந்த உணவகத்திற்குச் சென்று, உணவக உரிமையாளரிடம், "அவருக்கு ஒரு சாப்பாடு மட்டும் கொடுத்து அனுப்புங்கள். இதோ அதற்கான பணம்," என்று சொல்லிவிட்டு அமைதியாக அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

அன்று எனக்குப் புரிந்தது...

இரக்கம் என்பது ஏமாளித்தனம் அல்ல. அதே நேரத்தில், கோபம் என்பது மனிதநேயத்தை இழப்பதும் அல்ல. தவறைத் தட்டிக்கேட்கலாம்; ஆனால் பசியைத் தண்டிக்கக் கூடாது.
Pages: 1 [2] 3 4 ... 10