18
« Last post by VenMaThI on May 20, 2026, 03:48:46 PM »
என்னைப்போல் ஒருவன்
இல்லை இல்லை
என்னுள் தொலைந்த அவன்...
பாக்குறதுக்கு என்னையாட்டமே இருந்தான்
ஆனா என்ன விட ரொம்ப அழகா இருந்தான்... ராசாவாட்டம்...
தொட்டு பாக்கணும்னு ஆசை தான் - ஆனா
நான் தொட்டதும் மறைஞ்சுட்டான்னா எங்க போயி தேட..
நாம தொடரதுதான் எதுமே வெளங்காம போகுதே
"வேணாண்டா ராசா நான் உன்ன தொடல தூரமா இருந்து ரசிச்சுக்குறேன்"..
என் கந்தலும் களைந்த தலைமுடியும் எங்கே
எண்ணெய் வைத்து படியச்சீவிய உன் அழகு எங்கே..
கிழிந்ததை தைத்த என் துணிகள் எங்கே
கிழித்து கச்சிதமாய் தைத்த உன் உடை தான் எங்கே...
குப்பையே சேராத உன் பை எங்கே
குப்பை மட்டுமே நிறைந்த என் பை எங்கே..
வயிற்றுப்பசி போக்க ஒரு உணவுப்பை உன்னிடம்..என் வயிற்றுப்பசியை போக்க என்னிடமும் ஒரு பை இருக்கு
ஆனால் அதில் உணவு தான் இல்லை...
இந்தப்பையை நிரப்பினால்தான் என் வயிறு நிரம்பும்..
அதிகபட்சமாக மூணு வேளை இல்லையென்றாலும்
ஒரு வேளையாகிலும் சோறு கிடைக்கும்..என்ன....
ஒரு நாள் முழுதும் தெருத்தெருவாய் அலைந்து சலிக்கனும்....
என்னைப்போல் இருக்கும் என்னுள் உள்ளவனே
உன்னிடம் ஒன்று கேட்கிறேன் செய்வாயா???
தினமும் ஒருமுறையாகிலும் என் முன் தோன்றிவிடு
பெரிதாக வரம் எதுவும் கேட்டுவிட மாட்டேன் உன்னிடம்..
என் போன்ற குழந்தைகள் மீது...
இந்த சமுதாயம் திணிக்கும் சுமையை கொஞ்சம் இறக்கிவிட உதவி செய்....
படிப்பறிவில்லா எந்தன் தேவைகள் என்னவென்று உறைப்பேன் உன்னிடம்...
அவற்றை சரியான இடத்தில் கொண்டு சேர்ப்பாயா??
நீயே சொல்லலாமே என்று நீ கேட்பது என் செவிகளில் விழுகிறது
படித்தவன் தப்பு பண்ண மாட்டான் என்றும்
படிக்காதவன் என்றுமே முட்டாள் என்றும்
இந்த சமுதாயம் முத்திரை பதித்துள்ளது...
அந்த முத்திரையை கிழிக்க எனக்கு உதவி செய்வாயா
என்றாகிலும் ஒரு நாள் படிக்காதவனும் முயற்சியால் வெற்றி பெறலாம் என்றும்
படிப்பறிவு மட்டுமே ஒரு மனிதனின் அறிவுத்திரன் ஆகாது என்றும் இந்த புவி உணரும்...
அதுவரை நீ என் பிம்பமாக மட்டுமின்றி
என் குரலை கேட்காத செவிகளுக்கும்
கேட்கும் குரலாய் நீ விழங்கவேண்டும்...
இப்புவியை மாற்ற என்னால் இயன்றதை உன் மூலம் செய்ய ஒரு வாய்ப்பு கொடு.....
அப்படி மட்டும் நடந்துச்சுன்னா
இங்க இருக்குற எல்லாரும் ராசாதான்
உன்ன மாதிரியே அழகிலும் அறிவிலும்....