Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11


✨ Charlie Chaplin passed away at the age of 88… but his words still teach us how to live.

He left behind simple yet powerful reflections worth reading again:

1️⃣ Nothing in this world is permanent…
not even our problems.

2️⃣ Sometimes, I like to walk in the rain…
so no one can see my tears.

3️⃣ The most wasted day in life
is the one in which we did not laugh.

4️⃣ The six best “doctors” in the world are:
☀️ the sun
😴 rest
🏃 exercise
🥗 healthy food
💛 self-love
👫 and true friends

And he added words that touch the soul:

🌙 Look at the moon — you will see God’s beauty.
☀️ Look at the sun — you will feel His power.
🪞 Look in the mirror — and you will see
His greatest creation: you.

Believe it.
Do not doubt it.

We are all just travelers in this world.
And God is the one who already knows our journey:
our path,
our stops,
and our final destination.

Life is a journey.

Live in the present.
Appreciate the road.
And no matter what…
never forget to laugh. 😊
12
Love & Love Only / Re: My Dreamy Love World
« Last post by MysteRy on Today at 12:09:35 PM »


Some people search their whole lives
for a place where they truly belong.
❤️

I found mine
the day your heart
made room for mine.

Since then,
every goodbye became shorter,
every hello became sweeter,
and every ordinary day
felt like a beautiful gift.

Love isn't about counting
how many times we say
"I love you."

It's about showing it
through every gentle touch,
every patient conversation,
every silent prayer,
and every promise we keep.

One day,
the flowers will bloom again,
the seasons will change again,
and the years will quietly pass...

But I hope one thing
never changes—
the way we still look at each other
like we did on the very first day.

Because the greatest love stories
don't grow old...
they simply grow deeper. ❤️

I love you ❤️
13


டாக்டர்: என்ன பிரச்சினை உங்களுக்கு ?

எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர்...

அப்படியா...!?

ஆமா டாக்டர் இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும் சின்ன வயசுல அப்பா அம்மா இல்லாமலேயே வளந்துட்டதால வயசு தெரியல...

இப்ப என்ன உங்க வயசு தெரியணும் அவ்ளோதானே..?

ஆமா டாக்டர்... ஆமா...?

சரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்... சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க...

உங்க பேரென்ன...

ராமநாதன்...

என்ன தொழில் பண்றீங்க...

பைனான்ஸ்...

நைட்டு நல்லா தூங்குவீங்களா...?

கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்...

சந்தோஷம்... தூக்கத்துல கனவுலாம் வருமா...?

நெறய டாக்டர்....

அந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா...?

ஆமா டாக்டர்...

எந்த மாதிரி நடிகைங்க...

ரேவதி, அமலா மாதிரியான நடிகைங்க....

சிஸ்டர்... 45ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்...சரி வேற எந்த நடிகைகளும் வரமாட்டாங்களா...

சிலசமயம் அம்பிகா ராதா மாதிரியான வங்களும் வருவாங்க...

சந்தோஷம்... சிஸ்டர் 48ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்... அப்புறம் வேற யாரெல்லாம் வருவாங்க...?

ஷகிலா...

ஊஹூம்... ஷகிலாலாம் எவர்கிரின்.. அதை வெச்செல்லாம் வயச கணிக்க முடியாது... வேற...வேற...?

வேற... சிலசமயம் கனவுல ராதிகா வருவாங்க... திடீர்னு ஶ்ரீபிரியா கூட வருவாங்க...

ம்ம்... சிஸ்டர் 54ன்னு நோட் பண்ணிக்குங்க.. ம்... அப்புறம் ராமநாதன்..

அப்புறம்... அப்புறம்... ம்... என்னைக்காவது நான் ரொம்ப உற்சாகமா இருந்தா அன்னைக்கு கனவுல சிம்ரன், நயன்ஸ் வருவாங்க...

சிஸ்டர் 40 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம் சொல்லுங்க ராமநாதன்...

ம்ம்... அவ்ளோதான் டாக்டர்...

அவ்ளோதானா... சரி சிஸ்டர் நான் சொன்ன நம்பரையெல்லாம் சொல்லுங்க...

45,48,54,41..

நாலு ரிசல்ட்டையும் கூட்டி நாலால வகுத்தா வர்ற ரிசல்ட் 47.. மிஸ்டர் ராமநாதன் உங்க வயசு நாற்பத்தேழு...

அட கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க டாக்டர்...
.
என்ன கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேனா...? அப்ப ஏற்கனவே உங்க வயசு தெரியுமா..?

தெரியும் டாக்டர்... பக்கத்து பார்பர் ஷாப்புக்கு முடிவெட்டிக்க வந்தேன் அங்கே ஒரே கூட்டம் ஒரு மணி நேரமாகும்னுட்டாங்க திரும்ப வீட்டுக்கு போகவும் மனசில்ல பக்கத்துலயே மனோதத்துவ டாக்டர் நீங்க சும்மா உக்காந்திருந்நீங்களா... அதான் சும்மா ஒரு டைம்பாசுக்கு... ரொம்ப தேங்ஸ் டாக்டர்..!

😳😳😳
😡😡😡😡
14
கவிதைகள் / Re: உயிர்!
« Last post by JsB on Today at 09:52:55 AM »
ஒவ்வொரு வரியும் மனதை கனக்க வைத்தது...
கடைசி வரி கண்களை கலங்க வைத்தது.
வார்த்தைகளால் சொல்ல முடியாத வலி.
மனதைத் தொட்ட படைப்பு.
15
உங்கள் வரிகளில் மழை மட்டும் பெய்யவில்லை...
மனமும் நனைந்துவிட்டது. ஒவ்வொரு வரியும் இயற்கையை
கண்முன் நிறுத்தியது. படிக்கப் படிக்க நானும் அந்த தூறலில்
நனைந்த உணர்வு. மனதை வருடிய வரிகள் shreya!
16
காதல்...
வயதைப் பார்த்து வருவதில்லை...
இதயத்தைத் தேடி வரும்
இறைவனின் அழகிய வரம்...

இந்த உலகம்
இளமைக் காதலை மட்டுமே
கொண்டாடிக் கொண்டிருக்கிறது...

ஆனால்...நரைத்த முடிகளோடு,
சுருங்கிய கைகளோடு,
இன்னும் கை கோர்த்து நடக்கும்
இரண்டு இதயங்களின் காதல்...
அது சாதாரண காதல் அல்ல...
இறைவன் எழுதிய
நித்திய காவியம்...


ஒரு நாள்...
வானத்தின் நட்சத்திரங்கள்
நிலாவிடம் கேட்டன...

"இந்த பூமியில்
இன்னும் உயிரோடு வாழும்
உண்மையான காதல் எங்கே?"
நிலா புன்னகைத்து
ஒரே ஒரு வழியைக் காட்டியது...


அங்கே...
காலம் முகத்தில்
சுருக்கங்களை வரைந்திருந்தது...
ஆனால்,
இதயத்தில் மட்டும்
முதல் காதலின் துடிப்பு
இன்னும் புதிதாய் இருந்தது...


அவர் அவள் கையைப் பிடித்தார்...
அவள் அவரைப் பார்த்தாள்...
அந்த ஒரு பார்வையில்...
ஆயிரம் வார்த்தைகள்...
ஆயிரம் நினைவுகள்...
ஆயிரம் பிறவிகளின்
காதல் மறைந்திருந்தது...


அவர்கள் நடந்த பாதையில்
பூக்கள் மலரவில்லை...
ஏனெனில்,
பூக்களுக்கே
அவர்கள் காதலின் அழகை
மிஞ்ச முடியவில்லை...

காற்று கூட
அவர்களைத் தொந்தரவு செய்யாமல்
மெதுவாக வீசியது...
அந்தக் கைகளைப் பிரிக்க
அதற்கே மனம் வரவில்லை...


மாலை வந்தது...
நிலா அவர்களை ஆசீர்வதித்தது...
நட்சத்திரங்கள்
ஒளிப் பூக்களைப் பொழிந்தன...
நேரம் மட்டும்
அவர்களுக்காக நின்றது...


ஏனெனில்...
அது இரண்டு மனிதர்கள்
நடந்து செல்லும் பயணம் அல்ல...
ஆயிரம் பிறவிகளைக் கடந்து
மீண்டும் ஒன்றான
இரண்டு ஆன்மாக்கள்
நித்தியத்தை நோக்கி
கை கோர்த்து நடக்கும்
தெய்வீகப் பயணம்...


காதலை வெல்வது
விதி அல்ல...
அதை
ஒவ்வொரு நாளும்
ஒரே இதயமாக
காத்து வாழ்வதே
உண்மையான வெற்றி...


அந்த வெற்றியின்
அழகிய அடையாளமாக
நீங்கள் இருவரும்
என்றென்றும் வாழ வேண்டும்...

உங்கள் காதல்...
காலத்தைக் கடந்தும்
கவிதையாக வாழட்டும்...

உங்கள் புன்னகை...
ஒருவரின் உயிரில்
என்றும் வசந்தமாக மலரட்டும்...

உங்கள் கைகள்...
இறுதி மூச்சு வரை
ஒருபோதும் பிரியாதிருக்கட்டும்...


உங்கள் காதல்...
இந்த உலகம் முழுவதும்
"உண்மையான காதல் இன்னும் உயிரோடு இருக்கிறது"
என்பதற்கான அழகிய சாட்சியாக
என்றென்றும் ஒளிரட்டும்...


வாழ்க உங்கள் அழகான காதல்...! ❤️

அன்புடன், JSB
17
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 06:04:00 AM »
18
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 03:11:19 AM »
19
வருடங்கள் ஓடின !!
வாழ்ககையே முடியும் தருணம் !!
ஏனோ இவளை கண்டால் மட்டும்
மீண்டும் குழந்தையாகிறேன் !!

யார் இவள் !!
என்னுள் எப்போது நுழைந்தாள் இவள் !!
தோழியாய் பள்ளி பருவத்தில் அறிமுகமானவள் !!
இன்றும் அதே பருவத்திற்கு என்னை அழைத்து செல்பவள்!!
காதலியாய் கல்லூரி
பருவத்தில் மாறியவள் !!

என்னை இன்றும் வாலிபனாய்
உணர வைப்பவள் !!
என் வாரிசுகளுக்கு தாயானவள் !!
என்றும் என்னை மழலலையாய் பாரமரிப்பவள்!!

என் இன்பத்தில் பங்கெடுத்தவள் !!
என்றும் என்னை மகிழ்ச்சியாக
வாழ வைப்பவள் !!
என் துன்பத்தை சுமந்தவள் !!
என்றும் தோல்விகள் என்னை
தொடமல் தடுப்பவள்!!

என் வாழ்வை தினமும் அலங்கரித்தவள் !! தினமும் தாயை போல என்
பாரங்களை சுமந்தவள் !!
இவளின்றி என் வாழ்வில்லை !!
இன்று இவளிடம் மூச்சு இல்லை!!

மரணம் எங்கள் காதலுக்கு முடிவுமில்லை !! அவள் மூச்சு நின்ற மறு நொடி
நின்றது என் மூச்சும் !!
இன்றும் அவளுடன் நான் !!
சொர்க்த்தில் இவள் கரம் பிடித்து
சுகமாய் உலா வரும் நான்!!
அழிவில்லா காதலுக்கு
அடையாளமாய் நாங்கள் !!
20
சலிக்காத காதல்
இருபதில் மலரும் ஈர்ப்பல்ல காதல்,
எழுபதைத் தாண்டியும்
இறுதி வரை தொடர்வதே பேரன்பு!

காலத்தின் கரங்கள்
உடலை மட்டுமே முதுமையாக்கும்,
கைகோர்த்து ஓடும்
இவர்களின் மனதை அல்ல!

ஆரம்பத்து வாழ்வாதாரக் கஷ்டங்கள்,
அலுவலக வேலைப் பொறுப்புகள்,
ஓயாமல் ஓடிய நாட்கள்
இவர்கள் கடந்து வந்த பாதை!

பெற்ற பிள்ளைகளை ஆளாக்கி,
இன்று பேரப்பிள்ளைகளின்
மழலைச் சிரிப்பில்
தங்கள் இளமையைத் தேடுகிறார்கள்!

சுற்றமும் சொந்தமும் சூழ்ந்திருந்தும்,
இருவர் மட்டுமே உணர்ந்த
தனிமையின் வலிகளும்
இவர்களுக்குள் உண்டு!

நரைத்த கூந்தலும் சுருக்கங்களும்
அழகைக் குறைப்பதில்லை,
வாழ்ந்து முடித்த
வாழ்க்கையின் பெருமை பேசுகிறது!

உலகமே ஓடி இளைப்பாறும்போது,
இவர்கள் மட்டும்
கவலைகள் மறந்து ஓடுவதில்
தான் எத்தனை ஆனந்தம்!

ஆனாலும்...
இந்த ஓவியத்தைப் பார்க்கும்போது
நெஞ்சுக்குள் ஒரு ஏக்கம் பிறக்கிறது,
"நமக்கெல்லாம் இந்த கொடுப்பினை கிடைக்குமா?

இறுதி வரை கைவிடாத
ஒரு ஜீவனுடன்,
இப்படியொரு முதுமை அமையுமா
என்ற தவிப்பு எழுகிறது!

வெண்மையாய் மாறிய கூந்தலிலும்
மாறாமல் மின்னுகிறது நேசம்,
வெறும் கோடுகளாய் இருந்த ஓவியம்
இன்று உயிராகிப் பேசுகிறது!



Pages: 1 [2] 3 4 ... 10