11
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-003 (பள்ளிவிடுமுறையும் பாட்டி வீடும்)
« Last post by Sadham on February 20, 2026, 03:49:56 AM »விடுமுறையில்பாட்டி வீடு செல்வது அளவில்லாத சந்தோஷம் தரும். பாட்டியின் அன்பு ,அரவணைப்பும் மறக்க முடியாா நாட்கள் தான் .பேரன் தனது வீட்டிற்கு வந்த சந்தோஷம் . எனக்குத் தேவையான உணவு செய்வதில் பாட்டிக்கு ஆர்வம். கேட்ட பொருள் வாங்கி தரும் தாத்தா பாட்டி.
அப்போ கோழி எனக்கு ரொம்ப பிடிக்கும் .அதை உடனே பாட்டி சமையல் செய்து ஊட்டி விட்ட நியாபகம் இன்னும் மறக்க முடியாத நினைவுகள் .தாத்தா பாட்டி பேரனை வெளியா கூப்பிட்டு போலாம் சொன்னா உடனே சரி நாளைக்கு போலாம் என்று சொன்னவுடனே எண்ணற்ற மகிழ்ச்சி. எனக்கு அவ்ளோ ஆனந்தம் ஆ இருக்கும்.
சிறு வயதில் தியேட்டர் கூட்டி போவாங்க. குடும்ப கதை படம் ஒரு இருக்கு படம் பார்த்து மகிழ்ந்த தருணங்கள் .எனக்கு தேவை ஆன ட்ரெஸ் அது first choice ஆ இருக்கும் .உனக்கு என்ன டிரஸ் வேணுமோ எடுத்துக்கோ னு சொல்லும் தாத்தா பாட்டி.. மறக்க முடியாத நினைவுகள் .விடுமுறையில் சென்ற போது திருமண விழா. நான் தாத்தா ,பாட்டி கூட போறது .அவங்க இது என் மக புள்ள பையன் சொல்றதும் பள்ளி விடுமுறையில் வந்துருக்கான் சொல்வாங்க .மற்ற சொந்தம் பந்தம் இடம் எப்படி பேசுவது என்பதை தாத்தா பாட்டி இடம் கற்று கொண்ட நினைவுகள்.
இந்த உலகில் மதிப்பும் மரியாதையுடன் பேச காரணமாக இருந்தாங்க என் தாத்தா பாட்டி தான் .பணம் பெரிது பார்க்காமல் அன்பு உள்ளங்களை மறக்க முடியாது. விடுமுறை முடிந்து பாட்டி வீட்டில் விட்டுச் செல்லும் மனதில் ஏதோ ஒரு மன கவைலை இருக்கும். இன்றும் சில நாட்கள் தங்கணும் தோணும். தாத்தா பாட்டி கூட திரும்ப என்னை ஊருக்கு வர மாடேன் னு அப்பா அம்மா தான் கூப்பிடா வருவாங்க ... ஊருக்கு கிளம்பு முன் நல்லா இருந்து இருக்கு மாமா இருப்பார் .அவர் கூட விளையாடாத நாட்கள் மறக்க முடியாது. தாத்தா பாட்டி நற்குணங்கள் யாருக்கும் வராது .தாத்தா பாட்டியை விட்டுடு செல்கின்றோம் .இனி அடுத்த எப்போ விடுமுறை வரும். எப்போடா பாட்டி வீட்டிற்கு வரும் னு மனசு ஏங்கும். இன்று தாத்தா பாட்டி இல்லை என்பது மனசு ரொம்ப கஸ்டம். என்றும் உங்கள் நினைவில் உங்கள் பேரன் பிரியமுடன் ரஹ்மத்துல்லா

Recent Posts



