11
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 393
« Last post by joker on December 29, 2025, 11:54:24 PM »ஓர் அழகிய இரவு
என் மடியில் தலை சாய்த்து
நிலவை பார்க்கும் அவள்
அவள் முகத்தில்
நிலவை காணும் நான்
நிறம் ஏங்கும்
நிலவாக
நான் உன்னை நினைக்கிறேன்.
புன்னகையுடன் என்னைத் தேடி வரும்
கனவாக
நீ என்னுள் தங்குகிறாய்
நான் எழுதிவைக்கும்
ஒவ்வொரு சொல்லிலும்
நீ இருக்கிறாய்.
நான் உச்சரிக்கும்
ஒவ்வொரு வரியிலும்
உன் மூச்சு
கலந்து விடுகிறது
என் கையை
உன் விரல்கள்
அருகே தேடும் போது
ஆகாயம் இன்னும்
அருகே வந்தது போல
எனக்குத் தோன்றுகிறது…
இங்கேதான்
நான் உன்னோடு”
என்று
வானமே
மெதுவாக
மூச்சுக்குள்
கிசுகிசுப்பது போல…
என்னை குளிர்வித்த
காற்றாய் அவள்
என்னை நனைத்த
மழையாய் அவள்…
என்னை சிரிக்க வைத்த
புன்னகையாய் அவள்…
என்னைத் தழுவும்
கனவாய் அவள்…
என்னை உறங்க வைக்கும்
தாலாட்டாய் அவள்
என்னை ஏங்க வைத்த
மோகமாய் அவள்…
என்னுள் வற்றாத
ஊற்றாய் அவள்
என்னுள் சலிக்காத
தாகமாய் அவள்…
என்னை முழுதாய்
மூடிய அன்பாய் அவள்…
என்னை சிந்திக்க வைத்த
காதலாய் அவள்
என் கனவுகள்
உன் மூச்சு பட்டதும்
சத்தமில்லாமல்
விழித்துக்கொள்கின்றன.
என் சிந்தனைகள்
உன் பெயரைத் தொட்டவுடன்
அழகாகி விடுகின்றன.
நமக்கு பிடித்த ஒருவரின்
சந்தோஷத்துக்காக
எதையும் செய்யலாம் என்ற
துணிவு மட்டும்
எங்கிருந்தோ
உள்ளுக்குள் பிறக்கிறது…
நமக்கு பிடித்தது போல
இந்த வாழ்வு
ஓர் நாள்
மலரும் என்ற
நம்பிக்கை
பிறக்கிறது
வாழ்வோம் வா
அன்பே!
****Joker****
என் மடியில் தலை சாய்த்து
நிலவை பார்க்கும் அவள்
அவள் முகத்தில்
நிலவை காணும் நான்
நிறம் ஏங்கும்
நிலவாக
நான் உன்னை நினைக்கிறேன்.
புன்னகையுடன் என்னைத் தேடி வரும்
கனவாக
நீ என்னுள் தங்குகிறாய்
நான் எழுதிவைக்கும்
ஒவ்வொரு சொல்லிலும்
நீ இருக்கிறாய்.
நான் உச்சரிக்கும்
ஒவ்வொரு வரியிலும்
உன் மூச்சு
கலந்து விடுகிறது
என் கையை
உன் விரல்கள்
அருகே தேடும் போது
ஆகாயம் இன்னும்
அருகே வந்தது போல
எனக்குத் தோன்றுகிறது…
இங்கேதான்
நான் உன்னோடு”
என்று
வானமே
மெதுவாக
மூச்சுக்குள்
கிசுகிசுப்பது போல…
என்னை குளிர்வித்த
காற்றாய் அவள்
என்னை நனைத்த
மழையாய் அவள்…
என்னை சிரிக்க வைத்த
புன்னகையாய் அவள்…
என்னைத் தழுவும்
கனவாய் அவள்…
என்னை உறங்க வைக்கும்
தாலாட்டாய் அவள்
என்னை ஏங்க வைத்த
மோகமாய் அவள்…
என்னுள் வற்றாத
ஊற்றாய் அவள்
என்னுள் சலிக்காத
தாகமாய் அவள்…
என்னை முழுதாய்
மூடிய அன்பாய் அவள்…
என்னை சிந்திக்க வைத்த
காதலாய் அவள்
என் கனவுகள்
உன் மூச்சு பட்டதும்
சத்தமில்லாமல்
விழித்துக்கொள்கின்றன.
என் சிந்தனைகள்
உன் பெயரைத் தொட்டவுடன்
அழகாகி விடுகின்றன.
நமக்கு பிடித்த ஒருவரின்
சந்தோஷத்துக்காக
எதையும் செய்யலாம் என்ற
துணிவு மட்டும்
எங்கிருந்தோ
உள்ளுக்குள் பிறக்கிறது…
நமக்கு பிடித்தது போல
இந்த வாழ்வு
ஓர் நாள்
மலரும் என்ற
நம்பிக்கை
பிறக்கிறது
வாழ்வோம் வா
அன்பே!
****Joker****

Recent Posts