Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11


*காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல*
*வீட்டுகிளி கேட்டுக்கொள்ள*

*ஒட்டி வந்த தாளமே*
*கொட்டும் கெட்டி மேளமே*

*தொட்டணைக்க வேணுமே*
*பட்டு கிளி நாணுமே*

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள

ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே

தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே ...

*மனசுல திறந்தது மணிக்கதவு*
*மரகத பதுமையை இனி தழுவு*

இடையில விழுந்தது இள மனசு
இருக்கிற சுகமது பல தினுசு

*நாளெல்லாம் ராகம்*
*பாடுதே தேகம்*

*வாழ்வெல்லாம் யோகம்*
*வாழ்த்துதே யாவும்*

*விதவிதமா விருந்து வச்சு*
*விழிவழியே மருந்து வச்சு*

*விரல் தொட அதில் பல*
*சுகம் வரும் பொழுதாச்சு*

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள

ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே

தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ...

*விழியிலே தெரியுது புது கணக்கு*
*விடியற வரையிலும் அது எனக்கு*

தடைகளை கடந்தது மலையருவி
தனிமையை மறந்தது இளம் குருவி

*தேகமே தேனாய்*
*தேடினேன் நானா*
*மோகம்தான் வீணா*
*மூடுதே தானா*

*தொடத்தொடதான் தொடர்கதையா*
*படப் படத்தான் பல சுவையா*

*அடிக்கடி மயங்குற*
*வயசிது தெரியாதா*

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள

ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே

தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள

ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே

தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே ...

💫💕💕💕💕💕💫

படம் : *சின்ன மாப்ளே*
பாடகர் : *மனோ & சுவர்ணலதா*
பாடலாசிரியர் : *வாலி*
இசை : *இளையராஜா *
12

ஈரோடு மாவட்டம் தலையநல்லூரில் மிகவும் பழமையான பொன்காளியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

ஈரோடு மாவட்டம் தலையநல்லூரில் பொன்காளியம்மன் ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் அருளும் அம்மன், வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை கொடுத்து வளமான வாழ்க்கையை வழங்குபவளாக திகழ்கிறாள். இந்த ஆலயத்தில் சிற்ப சாஸ்த்திர முறைப்படி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், பூத மண்டபம், நிருத்த மண்டபம், ராஜ மண்டபம் அமைந்துள்ளன. மேலும் வானளாவிய விமானத்துடன் சக பரிவார தெய்வங்களாகிய விநாயகர், மாதேஸ்வரன், வண்ணார கருப்பணன் சாமி, பரிவார மூர்த்திகள், பாம்பாட்டி சித்தர் ஆகிய தெய்வங்களும் இங்கு அருளாட்சி செய்கிறார்கள்.

இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் பொன்காளி அம்மன் தன் தலையில் கிரீடமாக அக்னி ஜுவாலையையும், காதில் தோடாக ராகு-கேதுக்களையும் அணிந்திருக்கிறாள். மேலும் தன்னுடைய எட்டு கரங்களிலும் சூலம், டமருகம், கட்கம், கேடயம், பட்சி, கிண்ணம், கண்டம், அக்னியை தாங்கியிருக்கிறாள். அதோடு அசுரன் ஒருவனை காலில் மிதித்த கோலமாகவும், உதட்டில் புன்னகையுடன் அன்னையின் திருக்காட்சி இருக்கிறது. கொங்குநாட்டில் உள்ள கூறைகுல, விளையன் குல, கொங்கு வேளாளர்களின் குலதெய்வமாக இந்த பொன்காளியம்மன் திகழ்கிறாள். இந்த ஆலயத்தில் வருடந்தோறும் பங்குனி மாதம், அமாவாசை முடிந்து வரும் முதல் செவ்வாய்க்கிழமையில் பூச்சாட்டு விழா நடைபெறுகிறது. பொன்காளி அம்மனின் உற்சவரை, சிவகிரி வேலாயுத சுவாமி திருக்கோவிலில் இருந்து அழைத்து வந்து, உற்சவத் திருவிழா நடத்துவார்கள். உற்சவக் காலங்களில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், கிராமத்தை அமைதிப்படுத்துவதே ‘கிராம சாந்தி’ ஆகும். விழா யாவும் மங்களகரமாக, நிறைவுடன் நடப்பதற்காகவும், தெய்வங்கள் கிராமத்தில் இருந்து அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டியும் தெய்வங்களுக்கும், ஆச்சாரியார்களுக்கும் குலகுரு காப்பு அணிவிப்பார்.

காவிரி தீர்த்தம் கொண்டு வருதல், பச்சை விரதம், அம்மனை அழைத்து வருதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். முப்பாட்டு பேழையை அலங்காரம் செய்து பச்சை மாவை விளக்காக வைத்து, பசுநெய் விட்டு திரிபோட்டு தீபம் ஏற்றுவார்கள். இத்தீபத்திற்கு ‘முப்பாட்டு மாவிளக்கு’ என்று பெயர். பேழை மூடியை சிவப்பு வண்ணத்துணி கொண்டு போர்த்தி, இதில் அம்மன் பூஜைக்குத் தேவையான தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, இளநீர், தென்னம்பாளை ஆகியவை வைத்து பூவில் அலங்காரம் செய்வார்கள். இதற்கு ‘படைக்களம்’ என்று பெயர்.

மதுரை பாளையக்காரர் ஆட்சிக்கு முன்பு இருந்தே, இத்திருக்கோவிலின் ஆகம கிரியா பாரம்பரிய மிராசுப்படி, சிவகிரி ஆதீனமாக இருப்பவர்கள் உற்சவ கிரியைகளை நடத்தி வருகிறார்கள். அம்மன் ஆலயத்தில் உள்ள இரட்டை சிம்ம வாகனத்தின் பின்புறம், இரண்டு குதிரை துள்ளல் பிடிப்பார்கள். ஒன்று கூறைகுலத்தாரும், மற்றொன்றை விளையன் குலத்தாரும் பிடிப்பார்கள். இரண்டு குதிரையும் தலை அசைத்ததும் தேர்த்திருவிழா தொடங்கும். ‘மூணே முக்கால் நாழிகையில் நாலே முக்கால் தேர்’ என்ற பழமொழியுடன் அமைந்தது தேர்த் திருவிழா. மூணே முக்கால் என்பது கால அளவையும், நாலே முக்கால் என்பது தேரின் உயர அளவையும் குறிக்கும்.

தேர் புறப்படும் முன்னர் லட்சக் கணக்கான பக்தர்கள், கையில் தீப்பந்தம் ஏந்தி தேருடன் பவனி வருவார்கள். தேரில் கூறைகுல, விளையன்குல குலகுரு சிவகிரி ஆதீனம், பொன்காளி அம்மனுடன் தேரில் அமர்ந்து வருவார். குல தெய்வத்தையும், குல குருவையும் ஒருங்கே தரிசனம் செய்யும் வாய்ப்பும் அருளாசியும் அனைத்து பக்தர்களுக்கும் கிடைக்கும். ஏந்தி செல்லும் தீப்பந்தங்கள், தேரின் முன்வடமாகவும், பின்வடமாகவும் காட்சி தரும். இந்த ஆயிரம் ஆயிரம் தீவட்டியுடன் அம்மன் செல்லும் அற்புதத்தைக் காண கண்கள் கோடி வேண்டும்.

தேர்த் திருவிழா முடிந்தவுடன், காவல்தெய்வம் வண்ணாரக் கருப் பணன் சுவாமிக்கு பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெறும். விழா யாவும் மங்கள நிறைவு பெற்றதை முன்னிட்டு பக்தர்கள் மஞ்சள் நீராடல் நடத்துவார்கள். திருவிழாவின் போது மட்டும் அம்மனுக்கு வெண்பட்டு ஆடையை அணிவிப்பார்கள். திருக்கோவிலின் முன்பு பாம்பாட்டி சித்தர் உருவம் உள்ளது. இதில் பல்லி சகுனம் சொல்லும். திருக்கோவிலில் பூச் சகுனம் பார்க்கும் வழக்கமும் இருக்கிறது. திருவிழா காலங்களில் இந்த சகுனங்கள் பார்ப்பது இல்லை.

பொன்காளியம்மனை ராகுகாலம், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் வழிபாடு செய்தால், இல்வாழ்க்கையில் எல்லாவித சிறப்பும் ஏற்படும். மேலும், திரு மணம், குழந்தைபாக்கியம் மற்றும் சகல செல்வங்களையும் வாரி வழங்குவதில் இந்த அன்னைக்கு நிகர் அவள் தான்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம், சிவகிரி அருகே அமைந்திருக்கிறது தலையநல்லூர். ஈரோட்டில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் சிவகிரி அமைந்துள்ளது.
13

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவான இறைச்சி, முட்டையில் அதிக புரதம் உள்ளது. சைவ உணவை பொறுத்தவரை பருப்பு வகைகளை தான் நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அன்றாடம் நம்முடைய உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

துவரம் பருப்பு:
இதில் புரத சத்துடன், ஃபோலிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.

பாசிப்பருப்பு:
விட்டமின் ஏ,பி,சி,ஈ, கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவும். இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைக்க உதவும்.

பச்சை பயறு:
புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம். பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. உணவினை எளிதில் செரிமானமடைய செய்யும். உடல் எடை மற்றும் கொழுப்பு சத்து குறைய உதவியாக இருக்கும்.

கொண்டைக்கடலை: கொண்டைக்கடலையில் ஃபோலிக் அமிலம், மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிர சத்து அதிக அளவில் உள்ளன. எனவே கொழுப்பு குறைவதுடன், இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு. மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

மைசூர் பருப்பு:
இந்த பருப்பின் முக்கிய சிறப்பு இதில் உள்ள நார்ச்சத்து. உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். உடலில் ரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்ல உதவும்.

சுண்டல்: கொண்டைக்கடலையில் ஒரு வகை தான். கருப்பு நிறத்தில் இருக்கும் இதனை பெரும்பாலும் சுண்டல் செய்வது வழக்கம். உணவில் இதனை சேர்த்துக் கொள்வதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், விட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், கருப்பைக் குழாயில் பிரச்சனை ஏற்படுவது, ரத்த சோகை பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும்.

கடலைப் பருப்பு:
ஃபோலிக் அமிலம், மாங்கனீசு, இரும்புச்சத்து, தாமிர சத்து மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் மற்ற பருப்பு வகைகளை விட இரண்டு மடங்கு புரதம் அதிகம் நிறைந்து இருப்பதால், உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் இதய நோய் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

சிவப்பு காராமணி:
பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. புற்றுநோய், கொலஸ்ட்ரால் ஏற்படுவதை தடுக்கும். இதிலுள்ள விட்டமின்கள் மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். எலும்புகளை வலுவோடு வைக்க பெரிதும் உதவுகிறது.

தட்டை பயறு:
தட்டை பயறு குழம்பின் சுவைக்கு ஈடு இணை இல்லை. இதிலுள்ள நார்ச்சத்து, இதய நோய் ஏற்படுவதை தடுக்கிறது. பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால், தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

உளுத்தம் பருப்பு: இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ளது. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த பருப்பு பெண்களின் உடல் வலுவை அதிகப்படுத்தும் தன்மையுடையது.
14
*திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்*


 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இரத்த உறைதலை கட்டுப்படுத்துகிறது, புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளன, உடல் எடை இழக்க உதவுகிறது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, கல்லீரல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, மேலும் செரிமானத்திற்கும் உதவுகிறது.
திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Eating Grapes):
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது (Increases Immunity):
திராட்சையில் வைட்டமின் சி மற்றும் பிற சத்துக்கள் உள்ளன, இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
இரத்த உறைதலைக் கட்டுப்படுத்துகிறது (Regulates Blood Clotting):
திராட்சையில் உள்ள சில பொருட்கள் இரத்த உறைதலை கட்டுப்படுத்த உதவுகின்றன.
புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (Antioxidants that fight cancer):
திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
எடை இழப்புக்கு உதவுகிறது (Helps in Weight Loss):
திராட்சையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடை இழக்க உதவுகிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது (Improves Skin Health):

15

கேசரி, பாயாசம், பொங்கல் இவற்றில் எல்லாம் நாம் தேடி தேடி முந்திரி பருப்பை சாப்பிடுவோம். அவற்றின் பழத்தைப் பற்றி கேள்விபட்டிருக்கக் கூட மாட்டோம். முந்திரிப் பருப்பு என்னவோ நம் அனைவருக்கும் பிடித்த ஒன்று தான். ஆனால், அதன் பழத்தை நம்மால் அந்த அளவுக்கு விரும்பி சாப்பிட முடியாது. ஏனெனில், அதை சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு தன்மையை ஏற்படும். ஆனாலும் அதை சாப்பிட சில வழிகள் உள்ளன. மேலும் அதில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. வாருங்கள் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்…

* ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், அதை விட 5 மடங்கு அதிகமாக வைட்டமின் சி ஒரு பழத்தில் உள்ளது என்பதை கேள்விபட்டிருக்கிறீர்களா? அதுதான் முந்திரிப் பழம். இனி 5 ஆரஞ்சு பழத்துக்கு பதில் ஒரு முந்திரிப் பழத்தை சாப்பிடலாமே.

* முந்திரிப் பழத்துக்கு நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தத்தைச் சரி செய்யும் தன்மையும் உள்ளது. இவை நகங்கள், பற்களை உறுதிப்படுத்துகின்றன. மேலும், ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாட்டை குணப்படுத்துகிறது.

* முந்திரிப் பழத்தில் புரதம், பீட்டா கரோட்டீன், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. டானின் எனும் வேதிப்பொருள் உள்ளதால் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது.

* முந்திரிப் பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் அழுகிவிடும். இதன் காரணமாகவே இந்தியாவில் சாப்பிடுவதற்காக அதிகம் விற்பனையாவதில்லை. நசுங்கிய அல்லது அழுகிய பழங்கள் விலங்குகளுக்கு உணவுக்காக வழங்கப்படுகின்றன. ஆனால், பிரேசிலில் முந்திரிப் பழ ஜுஸ் மிக பிரபலமானது.

* முந்திரிப் பழம் சாப்பிடும் போது கரகரப்பு தன்மையை ஏற்படுத்தாமலிருக்க அதனை நீராவியில் சற்று வேக வைத்தோ அல்லது உப்பு நீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம். இத்தனை குணங்களை கொண்ட முந்திரிப் பழம், இதயத்தை தலைகீழாகப் பார்த்தால் எப்படி இருக்கும், அந்த வடிவில் இருக்கும். இனிமேல் முந்திரிப் பருப்பை மட்டும் இல்லை முந்திரிப் பழத்தையும் ருசித்து சாப்பிடலாம்.
16

இலந்தை இந்தியாவில் எங்கும் அதிகம் பரவிக் காணப்படும். இதில் இரு வகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை. சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே. இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு. இலந்தை இலை தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது.

இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது. உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.
உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றை போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.
பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.
17

உண்மையிலேயே ஆப்பிளின் தோல் விஷத்தன்மை கொண்டதா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகளை தெரிந்துகொள்ள இந்த பதிவை பார்க்கலாம்.

ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அதில் விஷத்தன்மை உள்ளது என்கிற கூற்று உலா வருகிறது. இதனாலேயே சிலர் தோலை சீவிவிட்டு சாப்பிடுகின்றனர். உண்மையிலேயே ஆப்பிளின் தோல் விஷத்தன்மை கொண்டதா..? ஆப்பிளை எப்படித்தான் சாப்பிடுவது? தெரிந்து கொள்ள மேலும் படிங்க...

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனையையே மறந்துவிடலாம் என்பார்கள். அப்படி பலவகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது ஆப்பிள். அதன் சதைப்பகுதி மட்டுமல்ல அதன் தோலிலும் பல வகையான நன்மைகள் உள்ளன. ஆப்பிளின் சத்து அதன் தோலுடன் சேர்ந்தேதான் உள்ளது. ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பசியின்மையை போக்கும். விட்டமின் சி, பொட்டாசியம், பாலிபினால்கள், ஃபிளேவனாய்டுகள் நிறைந்துள்ளன. அதோடு தோலில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானப் பிரச்னை இருக்காது. அதேசமயம் மலச்சிக்கல் பிரச்னையும் வராது. கொழுப்பு அளவு குறைந்து உடல் எடை சீராக இருக்கும். தசைகளின் ஆரோக்கியமும் உறுதியாக இருக்கும்.

ஆப்பிளில் இத்தகைய எண்ணற்ற ஆரோக்கியங்களை கொண்டுள்ளதால் சந்தையில் அதற்கான டிமாண்ட் அதிகம். இதனால் கெமிக்கல் முறையில் பழுக்க வைத்தல், அதோடு அதன் தோலை பளபளக்க வைக்க மெழுகு தேய்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த மெழுகானது வயிற்றுக்குள் சென்றால் பலவகையான உடல்நலக் கேடுகளை உண்டாக்கும் என்பதாலேயே தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும் என்கிறனர். அதாவது வயிற்றுப் போக்கு, வாயுத்தொல்லையை உண்டாக்கும். மேலும் மெழுகு செரிமானமாகாமல் உணவுக்குழாயில் படிந்து நோயை உண்டாக்கும். புற்றுநோய் , குடல் அழற்சி போன்றவையும் வர வாய்ப்புண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.இருப்பினும் அவ்வாறு மெழுகு தேய்க்கப்பட்ட ஆப்பிளை எளிதில் கண்டறிய சில டிப்ஸுகளும் உண்டு.

அதாவது முதலில் அதன் தோலை வாங்கும்போது சுரண்டிப் பாருங்கள். வீட்டிலும் கத்தியால் மேலோட்டமாக சுரண்டினால் மெழுகு மட்டும் தனியே வரும். இந்த மெழுகானது கழுவினால் போகாது. அப்படியில்லை எனில் சாப்பிடும் முன் ஆப்பிளை சுடு தண்ணீரில் சில நிமிடங்கள் போட்டுவிட்டு பார்த்தால் ஆப்பிள் மீதுள்ள மெழுகு படிவம் நன்றாகத் தெரியும். பின் கத்தியால் தோலை சுரண்ட மெழுகு எளிதில் வந்துவிடும்.
18

நாம் அடிக்கடி விசிட் செய்யும் தளங்களை பட்டியலிட்டால் ஒரு பக்கத்தில் அடங்கிவிடும். ஃபேஸ்புக், ட்விட்டர், ஃப்ளிப்கார்ட், விக்கிப்பீடியா என விரல் விட்டு எண்ணிவிடலாம். இவை எல்லாம் சாதாரணமாக தேடினாலே கிடைத்துவிடும் வகை. இவ்வகை இணையம், Surface web எனப்படுகிறது. அதாவது, எந்த வகை தடையும், மறைப்புமின்றி நீங்கள் தேடியவுடன் சர்ச் ரிசல்ட்டில் வந்து விழும் வகை. இன்னும் சில தளங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் நார்மல் ப்ரவுசரில் எவ்வளவு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. காரணம், கூகுள் போன்ற சர்ச் என்ஜின்கள் பயன்படுத்தும் அல்காரிதம்கள், க்ராலிங், இன்டெக்ஸிங் டெக்னிக்குகள் எதுவும் இந்த தளங்களிடம் செல்லுபடியாகாது. இவற்றை டார்க்வெப் அல்லது டீப்வெப் என அழைக்கிறார்கள். இந்த தளங்களை Tor போன்ற ஸ்பெஷல் ப்ரவுசர்களின் வழி மட்டுமே அக்சஸ் செய்ய முடியும்.

📱

Tor வரலாறு:

Tor சாஃப்ட்வேரை 90களின் மத்தியில் வடிவமைத்தது அமெரிக்க கடற்படையின் ஆராய்ச்சிப் பிரிவு. அமெரிக்க உளவு ரகசியங்களை, இணையத்தில் மற்றவர்களின் பார்வையில் இருந்து மறைத்து வைக்க இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தத் தொடங்கினார்கள். 2004-ல் இந்த கோடிங் பொதுவெளியில் வெளியிடப்பட்டது. அதன்பின் The Tor Project, Inc என்ற லாபநோக்கமற்ற நிறுவனம் இந்த சாஃப்ட்வேரை வைத்து ஒரு நெட்வொர்க் உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

↕️

என்ன ஸ்பெஷல் இந்த ப்ரவுசரில்?

நீங்கள் சாதாரணமாக ப்ரவுஸ் செய்யும்போது ஒரு தகவலை தேடுவது, டைரக்ட் டூ வே ட்ராபிக் எனப்படுகிறது. சிம்பிளாக சொல்லப்போனால், உங்கள் கணினியை A என வைத்துக்கொள்வோம். அதில் நீங்கள் தேடும் தகவல் சர்வர் B- ல் ரிக்வ்ஸ்ட்டாக பதிவாகிறது. பின் அதற்கான டேட்டாவை, சர்வர் உங்கள் கணினிக்கு அனுப்பும். இது முழுக்க முழுக்க A,B ஆகிய இரண்டுக்கும் இடையில் நடக்கும் நேரடித் தகவல் பரிமாற்றம். இந்த முறையில் தகவல் கேட்டது யார், எங்கிருந்து பெறப்பட்டது போன்ற தகவல்களை எளிதில் ட்ரேஸ் செய்துவிடலாம். ஆனால் டார் (Tor) போன்ற ப்ரவுசரில் இந்த டைரக்ட் செயல்முறை இருக்காது. அதே தகவலை நீங்கள் உங்கள் சிஸ்டம் A-வில் இருந்து தேடினால் அது ரேண்டமாக C,F,J,K,O என ஏகப்பட்ட சர்வர்களின் வழி சென்று B-ஐ அடைகிறது. இதனால் சர்வர் B-யில், ரிக்வஸ்ட் விடுத்த சிஸ்டமை பற்றிய தகவல்கள் எதுவும் பதிவாகாது. நம் சிஸ்டமிலும் எந்த சர்வரில் இருந்து நாம் கேட்ட தகவல் பெறப்பட்டது என்ற தகவல் பதிவாகாது. இப்படி சுத்தி விடுவதை 'virtual tunnel' எனக் கூறுகிறார்கள். இந்த ரகசியத்தன்மைதான் டார் ப்ரவுசரின் பலம்.

↕️
டார்க்வெப்பின் கொள்கை:

யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் சிலர் இஷ்டப்பட்டதை இங்கே செய்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக எதையாவது செய்தால் போலீஸ் ஒவ்வொரு சர்வராய் தேடி சம்பந்தப்பட்டவரின் அடையாளத்தை கண்டுபிடிப்பதற்கு மிகுந்த சிரமமாகிவிடும். காரணம், ஒரு தகவலை நான்காயிரம் ரவ்ட்டர்களின் வழிகூட ரிலே செய்ய டார் ப்ரவுசரால் முடியும் என்பதுதான். இதனாலேயே டார்க்வெப்பை onionland எனவும் அழைக்கிறார்கள். வெங்காயத்தை போல பல அடுக்கு பாதுகாப்பு இருப்பதால் இந்தப் பெயர். இந்த ப்ரவுசரை இன்ஸ்டால் செய்வது சுலபம். பார்க்க மொஸில்லா ஸர்ச் போலதான் இருக்கும். இதை விண்டோஸில் இன்ஸ்டால் செய்வதை விட லினக்ஸில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

என்னதான் இருக்கிறது டார்க்வெப்பில்?

பொது இணையத்தில் இருப்பது போலவே இங்கும் நல்ல தளங்களும் இருக்கின்றன. தீய தளங்களும் இருக்கின்றன. குறிப்பாக Whistleblowers எனப்படும் அரசாங்கத்தின் அத்துமீறல்களை வெளிக்கொண்டுவரும் நபர்கள், பெரிதும் நம்புவது டார்க் வெப்பைதான். அமெரிக்க சி.ஐ.ஏவின் ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடென், டார்க்வெப்பின் அதி தீவிர ஆதரவாளர். பேரரசுகளின் ரகசியங்களை சாமான்யர்களும் வெளிப்படுத்த முடிவது இங்கேதான் என்பது அவரின் வாதம்.

ஜூலியன் அசாஞ்சேயும், விக்கிலீக்ஸும் பலமாக கால் பதிப்பதற்கு உதவியாய் இருந்தது Tor ப்ரவுசரும், டார்க்வெப்பும்தான். இதுபோக, தங்களை மாபெரும் அரசுகள் கண்காணிப்பதை விரும்பாத தொழில்நுட்ப வல்லுநர்களும், சமூக ஆர்வலர்களும் டார்க்நெட்டை பயன்படுத்துகிறார்கள். அதுவும் சீனா போன்ற இணையக் கட்டுபாடுகள் மிகுந்த நாடுகளில் டார்க்வெப் அரசியல் அத்துமீறல்களை வெளிக்கொண்டுவர பெரிதும் பயன்படுகிறது.



இது நாணயத்தின் ஒருபக்கம் மட்டுமே. எல்லாவற்றுக்கும் இருப்பது போல டார்க்வெப்பிற்கும் ஒரு கொடூர முகம் இருக்கிறது. ஆள்கடத்தல், போர்னோக்ராபி, போதை மருந்து வியாபாரம், ஆயுத வியாபாரம், ஹேக்டிவிசம் போன்றவையும் இங்கு எக்கச்சக்கமாக நடக்கின்றன.
டார்க்வெப்பில் இருக்கும் டேட்டாக்களில் 15 சதவீதத்திற்கும் மேல் இருப்பது போதைமருந்து வியாபாரம்தான் என்கிறார் கேரத் ஓவன் என்ற ஆராய்ச்சியாளர்.

நாம் ஆன்லைனில் ப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் பொருட்கள் வாங்குவது போல, வெளி மார்க்கெட்டில் கிடைக்காத போதை மருந்துகள், ஆயுதங்களை விற்க பிரத்யேக தளங்கள் டார்க்வெப்பில் இயங்குகின்றன. இந்த தளங்களில் ஏதாவது ஒன்றை வாங்க விரும்பினால் 'Buy Now' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். உடனே அந்த விற்பனையாளர் அவரின் வங்கிக் கணக்கு எண்ணை அனுப்புவார். அதில் அந்த பொருளுக்கான தொகையை பிட்காயின் எனப்படும் டிஜிட்டல் கரன்சி முறையில் செலுத்த வேண்டும். ( இன்றைய தேதியில் ஒரு பிட்காயினின் இந்திய மதிப்பு 42 ஆயிரம் ரூபாய். கரன்சியை பிட்காயினாக மாற்றித் தருவதற்கென்றே ஏராளமான நிறுவனங்கள் உலகளவில் செயல்படுகின்றன ). இந்த பிட்காயின்கள் Escrow எனப்படும் மூன்றாம் நபரின் அக்கவுன்ட்டில் முதலில் வரவு வைக்கப்படும். வாடிக்கையாளருக்கு பொருள் போய் சேர்ந்தவுடன் விற்றவரின் கணக்கிற்கு பிட்காயின் சென்று சேர்ந்துவிடும். இந்த பாதுகாப்பான நடைமுறை காரணமாக ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் பிட்காயின்கள் டார்க்வெப் சந்தைகளில் புழங்குகின்றன.

இதுபோக, இன்னும் ஏராளமான நெட்வொர்க்குகள் இந்த பரந்த பிரதேசத்தில் இயங்குகின்றன. ஹேக்கர்கள், தங்கள் சேவைகளை குறிப்பிட்ட தொகைக்கு விற்பார்கள். சர்வதேச கூலிப்படைகள், ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் போன்றவையும் இங்கே இயங்குகின்றன. இதுபோக, Cicada 3301 போன்ற கோட்பிரேக்கர்களின் நெட்வொர்க்களும் இங்கே செயல்படுகின்றன. இங்கு நடைபெறும் வர்த்தகம் அனைத்துமே பிட்காயின்கள் கொண்டுதான்.

👥
சாமான்யனுக்குத் தடா..

டார்க்வெப்பை ஏதோ Tor இன்ஸ்டால் செய்தவுடன், ஜஸ்ட் லைக் தட் அக்சஸ் செய்ய முடியாது. சாதாரணமாக எதையாவது தேடினால் லிங்க்களின் வழி அவற்றை கண்டுபிடிக்கலாம். ஆனால் டார்க்வெப் தளங்கள் Node-களை வைத்து செயல்படுகின்றன. எனவே சும்மா தேடினால் எதுவும் கிடைக்காது. இதற்கென பிரத்யேக டைரக்டரிகள் செயல்படுகின்றன. அவற்றை தேடிக் கண்டுபிடிப்பதும் கடினம்தான். இதுபோக, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தளங்கள் ஜாகை மாறிக்கொண்டே இருக்கும். ஒரு தடவை நீங்கள் சென்ற தளம் அடுத்த தடவை காணாமல் போயிருக்கும். அதன் புது நோடை தேடி அலைய வேண்டும். எஃப்.பி.ஐ போன்ற முன்னணி துப்பறியும் நிறுவனங்கள் முடிந்தவரை போர்னோக்ராபி, போதை மருந்து வியாபாரம் போன்றவற்றை தடை செய்யப் போராடுகின்றன. அவர்களின் கையில் மாட்டினால் களிதான். மாட்டமாட்டோம் என அசட்டையாக இருந்த 'சில்க் ரோட்' என்ற பில்லியன் டாலர் நெட்வொர்க்கை 2013-ல் கண்டுபிடித்து, விலங்கு மாட்டியது எஃப்.பி.ஐ. போர்னோக்ராபியை ப்ரவுஸ் செய்தால் நீங்கள் பிளாக்லிஸ்ட் செய்யப்படும் வாய்ப்புகளும் இருக்கின்றன. எனவே சாமான்யர்கள் விலகி இருப்பதே நல்லது.

'டார்க்வெப்பில் யாரையும் நம்பக்கூடாது. வெப் கேமராவை டேப்பால் கவர் செய்துவிடவேண்டும். அங்கிருக்கும் எந்த ஃபைலையும் டவுன்லோட் செய்துவிடக்கூடாது. அதன் உள்ளே இருக்கும் மால்வேர்கள் உங்களின் டிஜிட்டல் தரவுகளை திருடிவிடலாம். கடைசியாக, அங்கிருக்கும் ஃபோரம்களில் யாரையும் தப்பித் தவறி கூட கிண்டல் செய்துவிடக்கூடாது. அவர்கள் கடுப்பில் உங்கள் சிஸ்டமை ஹேக் செய்து, அத்தனை பெர்சனல் சங்கதிகளையும் முடக்கிவிடலாம். எவ்வளவுக்கு எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆபத்தும் இருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டரைவிட டார்க்வெப் நம்மை பயங்கரமாக அடிக்ட் ஆக்கிவிடும். பின் அதிலிருந்து மீள்வது சிரமம். எனவே தேவையில்லாமல் அந்தப்பக்கம் காற்று வாங்கக் கூட போகாதீர்கள்' என எச்சரிக்கிறார் டார்க்வெப்-பை பயன்படுத்தி சலித்துப் போன நண்பர் ஒருவர்.

உண்மைதான்.. த்ரிலுக்காக அங்கே செல்லத் தொடங்கி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஏராளம். இவற்றை எல்லாம் தாண்டி டார்க்வெப் மூலம் நடக்கும் நல்ல விஷயங்களுக்காகவே உலகம் முழுவதும் அதற்கு ஆதரவு அலை வீசுகிறது. சுத்தியலை, ஆணி அறையவும் பயன்படுத்தலாம், ஆளைக் காலி செய்யவும் பயன்படுத்தலாம். டார்க்வெப்பும் சுத்தியல் மாதிரிதான். நாம் பயன்படுத்துவதை பொறுத்து நமக்கு அது எதிர்வினையாற்றும்.
19

1. தனிமையில் அமர்ந்து எதனால் உங்களுக்கு பிரச்னைகள் வருகின்றன. அதில் தீர்வு காண என்ன வழி என யோசியுங்கள்.

2. நல்ல மனிதர்களுடனும், அனுபவம் வாய்ந்த பெரியவர்களுடனும்
ஆலோசனை கேளுங்கள்.

3. ஒருபோதும் மூடர்களின் செயல்களை பார்த்து உங்கள் மகிழ்ச்சியை இழந்துவிடாதீர்கள். நல்ல மனிதர்களின் அனுபவ அறிவு நிறைந்தவர்கள் நட்பை இழந்துவிடாதீர்கள்.

4. உங்கள் மனதை எது பாதித்தாலும் அதை தொலைவில் வையுங்கள்.
நினைவில்கொண்டு வராதீர்கள்.

5. வீட்டிலிருப்பவர்களுடனும்,
நண்பர்களுடனும் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதைப் போல, நிச்சயமாக இறைவனுடன் பேசுவதற்கு நேரம்
ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் இடையூறு செய்யும் எதுவானாலும் ஒதுக்கி தள்ளுங்கள்.

6. எக்காரணத்தை கொண்டும் பாவம் செய்யும் ஒருவரை பார்க்காதீர்கள். உங்கள் மனதில்கூட பாவஎண்ணங்கள் வர அனுமதிக்காதீர்கள். நிம்மதியை யாருக்காகவும் இழக்காதீர்கள்.

7. நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என திடமாக நம்புங்கள். ஒருவேளை மனதிற்கு
பிடிக்காத சம்பவம் வந்தால் அது உங்களிடம் நிரந்தரமாக விடைபெற்று செல்வதற்காக வந்ததாக மகிழ்ந்து நிரந்தர விடைகொடுத்து அனுப்புங்கள்.

8. வாரம் ஒருமுறை ஆதரவற்றோர் இருப்பிடம், அரசு ஆஸ்பத்திரி
முதியோர் இல்லம் சென்று
உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். உடல் ஊனமுற்றோர் வேலை செய்யும் பொழுதும். கண்பார்வையற்றோர் அகர்பத்தி விற்கும் பொழுதும் இறைவன் உங்களை பூமியில் எந்தவிதமான குறையுமின்றி படைத்ததற்காக
நன்றி கூறுங்கள்.

9. தினமும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள முற்படுங்கள். நேரத்தை
விரயம் செய்யும்எதையும் அனுமதிக்காதீர்கள். நேரத்தில்
உறங்கி, நேரத்தில் எழுங்கள்.

10. உங்களை பார்ப்பவருக்கு உற்சாகம் வரும் அளவு உங்கள் தோற்றம் இருக்கட்டும். ஒருசெயலை ஆரம்பிக்கும் முன் முடிவை தெரிந்து கொள்ளுங்கள். இதன்விளைவு எதில்கொண்டு சேர்க்கும் என ஆராயுங்கள். உங்களை புரிந்து மதிப்பவர்களுக்காக கண்டிப்பாக சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

11. எல்லாம் உலகில் உங்களுக்கு பிடித்தமாதிரி நடக்கும் என எதிர்பார்க்காதீர்கள். இவ்வுலகில்
எவ்விதத்திலும் நீங்கள் எதிர்பார்ப்பது சில நேரங்களில் உங்களஏமாற்றத்தில்
கொண்டு போய் நிம்மதியை இழக்க செய்துவிடும். செல் போனை தேவையானவற்றிற்கு மட்டுமே உபயோகம் செய்யுங்கள். வீணடிக்காதீர்கள்.

12. எதிலும் நேர்மையாக இருங்கள். தர்மத்தின் வழிப்படி நடக்க மறவாதீர்கள். இறைவனை சதா சர்வகாலமும் துணைவனாக வையுங்கள். மனம் குழம்பும் பொழுது சிறிது நேரம் எதுவும் பேசாமல் இறைவனை நினைத்து அவரிடம் மனம் விட்டு பேசிவிட்டு உங்கள் காரியத்தை துவங்குங்கள். அமைதி உங்களின் நிரந்தர நண்பனாகிவிடும்....
20
கவிதைகள் / Re: அவளின் நட்பு !
« Last post by Vethanisha on November 20, 2025, 06:30:56 AM »

நீ எங்கேயோ சிரிக்கிறாய் என்று தெரிகிறது
அது போதும்;
ஏனெனில் என் உள்ளத்தில் நீயுள்ள வரை,
இந்த நட்பு ஒருபோதும் முடிவடையாது.


Azhagiya ulunarvu.. Super poem 👏👏
Pages: 1 [2] 3 4 ... 10