11
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 385
« Last post by TiNu on October 08, 2025, 10:07:57 PM »நீல நிற கடலில்.. வெண்ணிற நுரைகள்...
தங்க கரைகளில் மீது மெல்ல மெல்ல மோதிட..
என்னை சுடும்.. வெப்பம் காற்றினை..
ஆழி நீரின் குளிர் தன்மையோடு கைகோர்த்து...
என் கன்னங்களை மிதமாக தழுவி வருடிட..
நானோ! எங்கே போவது என்று அறியாது...
கால் போன போக்கில் ஜீவனற்று நடந்தேன்...
தன் வாழ்க்கையின்.. அவசிய.. அனாவசிய..
தேவைகளுக்காக ஓடிகின்றவர்களுக்கு இடையே...
நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்?..
எங்கே போகிறேன்?.. எதற்காக பிறந்தேன்?..
எப்படி வளர்ந்தேன்?.. என்னசெய்ய போகிறேன்?
என் மனதில் எண்ணற்ற வினாக்களுக்கு ...
ஓர் சிறு துளி விடைகள் கூட அறியாது..
என் முன்னே.. கிடந்தது.. உருண்டோடிய
மணலை வெறித்து பார்த்து நடந்தேன்..
அப்போது!! என் மனம் மணலை பார்த்து..
சொன்னது. நீயும் என் இனமடி..
ஓரிடத்தில்.. நில்லாது.. காற்றுக்கும் நீருக்கும்
நடுவே..தள்ளாடும்.. வாழ்க்கையடி..
உனைப்போலவே நானும்.. நல்லவர் யார்?
கெட்டவர் யார்? என்பது புரியாது அறியாது..
தவித்து தனித்து தள்ளாடி நிற்கின்றேன்.
சுட்டெரிக்கும் சூரியனும் மெதுவாக மறைய..
சூரிய ஒளியின் தாக்கமும் குறைவதுபோல் உணர்தேன்..
வாழ்வின் பொருள் அறியாது.. தனியே நிற்கின்றேனே..
என்ற என் எண்ணங்களை.. உடைக்கும் ஒரு உருவம்...
என் பின்னே! எனை தொடர்ந்தது.. கைகளில் குடையுடனே..
எனக்கோ அச்சம்.. திரும்ப பார்க்காது நின்றேன்...
மென்மையான குரலில்.. என் காதருகே..
மெல்ல மெல்ல ... பேச தொடங்கியது..
"நான் யாரென உனக்கு தெரியாது... ஆனால்
நீயாரென... நான் அறிவேன் பெண்ணே...."
"உன் சிரசினை காத்து நிற்கும் வாசுகி(குடை)..
நீ யாரிடமும் எதையும் எதிர் பாராது செய்த உதவிபலன்.."
"இந்த குடையை தாங்கி.. உன்பின்னே நடந்து வரும் நானோ..
அனைவருக்கும் நல்லது செய்யவேண்டும் என்ற..
நல்ல எண்ணங்களில்.. முழு உருவம் நானே ஆவேன் ..."
"வாழ்வின்பொருள் அறிந்தவன் நிம்மதி இழப்பான்.. "
"எந்த எதிர்ப்பார்ப்பு இன்றி நீ நீயாக வாழ்ந்திடு ...
நான் என்றும் உன் நிழல்.. என் தொடர்த்திருவேன்... "
"மன அமைதியோடும் மகிழ்வோடும் வாழ்வாயாக"