11
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 398
« Last post by Yazhini on March 02, 2026, 11:54:46 PM »கட்டுண்டு கிடப்பது கைகள் மட்டுமல்ல
உள்ளத்தில் எழும் உணர்வுகளும்...
தானே பூட்டிக்கொண்ட விலங்கு தான்
தன்னிலை மறக்க பூட்டிக்கொண்ட விலங்கு தான்
ஆனால் காவலுக்காக அல்ல
சில பார்வைகளுக்காக பூட்டப்பட்ட விலங்கு...
சிறுவயதில் காப்பாக இருந்தது இன்று
கருங்கல் பாரமாகி போனது..
வட்டத்தை வரைந்த பந்தமும்
இன்று காணாமல் போனது
விமர்சனம் செய்யும் சுற்றமும்
மேலும் சங்கிலியால் இறுக்கியது...
பிம்பத்தைக் காட்டும் ஆடியும்
வேறொரு தோற்றத்தைக் காட்டிடவே
தேடலை நிறுத்திய சங்கிலியே இன்று
தன் பிடியை தளர்த்திடவே...
வறண்டு கிடந்த வேர்களும்
புதிய பூக்களை சொறிந்திடவே
பாலை நிலத்தின் மணலும்
மாரியின் சாரலில் குளிர்ந்திடவே...
இறுக பற்றிய சங்கிலியில்
புதிய விடியலும் உதித்திடவே...
போலித்திரையில் அடைப்பட்ட உள்ளமும்
பூட்டிக்கிடந்த விலங்கை தானே உடைத்திடவே...
புதியவள் ஆகிறாள் புத்துயிரோடு புணருகிறாள்
உள்ளத்தில் எழும் உணர்வுகளும்...
தானே பூட்டிக்கொண்ட விலங்கு தான்
தன்னிலை மறக்க பூட்டிக்கொண்ட விலங்கு தான்
ஆனால் காவலுக்காக அல்ல
சில பார்வைகளுக்காக பூட்டப்பட்ட விலங்கு...
சிறுவயதில் காப்பாக இருந்தது இன்று
கருங்கல் பாரமாகி போனது..
வட்டத்தை வரைந்த பந்தமும்
இன்று காணாமல் போனது
விமர்சனம் செய்யும் சுற்றமும்
மேலும் சங்கிலியால் இறுக்கியது...
பிம்பத்தைக் காட்டும் ஆடியும்
வேறொரு தோற்றத்தைக் காட்டிடவே
தேடலை நிறுத்திய சங்கிலியே இன்று
தன் பிடியை தளர்த்திடவே...
வறண்டு கிடந்த வேர்களும்
புதிய பூக்களை சொறிந்திடவே
பாலை நிலத்தின் மணலும்
மாரியின் சாரலில் குளிர்ந்திடவே...
இறுக பற்றிய சங்கிலியில்
புதிய விடியலும் உதித்திடவே...
போலித்திரையில் அடைப்பட்ட உள்ளமும்
பூட்டிக்கிடந்த விலங்கை தானே உடைத்திடவே...
புதியவள் ஆகிறாள் புத்துயிரோடு புணருகிறாள்

Recent Posts
