Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
  எனக்கு யாழ்ப்பாணத்தில் அன்பான அழகான தாத்தா பாட்டி இருந்தாங்க.நாங்கள் அவர்களுடன் தினமும் போனில் பேசுவோம்.போன் பேசினாலே பாட்டி கேட்கும் கேள்வி "எப்போ ஊருக்கு வாரீங்கன்னு".பாட்டி ஆகஸ்ட் மாதம் லீவு வருவோம் என்று சொல்லுவோம்.உடனே பாட்டி சொல்லுவாங்க நல்லூர்த் திருவிழா வருது வாங்க போகலாம் என்று.எப்போ ஆகஸ்ட் மாதம் வரும் என்று வெயிட் பண்ணிட்டு இருப்பேன்.
   யாழ்ப்பாணத்தின் கலாச்சார அடையாளம் நல்லூர் கந்தசுவாமி கோவில். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி 25 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் உச்சக்கட்டமே தேர்த் திருவிழா.யாழ்ப்பாணத்தில் எங்களுக்கு நிறைய உறவுகள் இருக்கிறார்கள்.நான் எங்கள் குடும்பத்துடனும் ,உறவுக்காரர்களுடனும் அந்த தேர் திருவிழாவை பார்க்க போயிருந்தேன்.
    அழகாக பட்டுப்பாவாடை உடுத்தி,தலைக்கு பூ வைத்து ,என்னை கண்ணாடியில் பார்க்க எனக்கு வியப்பாக இருந்தது.அனைவரும் கலாச்சார உடையில் தான் வந்தார்கள்.ஏனெனில் கலாச்சார உடையில் செல்லும் பக்தர்களைத்தான் கோயிலின் உள் நுழைய அனுமதிப்பார்கள்.
    செல்லும் வீதி எல்லாம் ஒரே பக்தர் கூட்டம்.தண்ணீர் பந்தல்கள், தெருக்கடைகள் தெரு ஓரங்களில் காட்சியளித்தன.கடைகளை வேடிக்கை பார்த்து வந்தேன்."அப்பா அங்க பாருங்க ஐஸ்கிரீம் கடை"."கோவில் கும்பிட்டு வரும் போது வாங்கி தாரேன்" என்று அப்பா கூற மனதை அடக்கி கொண்டு நடந்து சென்றேன்.
  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நல்லூரின் நான்கு வீதிகளிலும் கூடி இருந்தார்கள்.இலங்கையின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் தமிழர்களும் ,வெளிநாட்டவர்களும் அங்கே வந்திருந்தனர்.பக்தர் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தேன்.அப்பா என்னை தோளில் சுமந்து சென்றார்.இந்தத் தருணம் அப்பா தான் எனக்கு கடவுளாக தெரிந்தார்.
  அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேரில், வள்ளி-தெய்வானை சமேதராய் முருகப்பெருமான் எழுந்தருளி, நான்கு வீதிகளிலும் பவனி வந்தார்.பக்தர்கள் "அரோகரா" முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பல்லாயிரக்கணக்கான தேங்காய்கள் சிதறு தேங்காய்களாக "படார் படார்" என்று உடைக்கப்பட்டன.மேள,தாள, நாதஸ்வரங்கள் இசைக்கப்பட்டதைக் கேட்டு நான் இசையில் மெய் மறந்து விட்டேன்.ஆண்கள் அங்கபிரதட்சணம்,பெண்கள் அடி எடுத்து வைத்தல்,பாற் காவடி ,பறவை காவடி ,தூக்கு காவடி என பக்தர்கள் நேர்த்திக்கடன் தீர்த்தனர்.பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
  இரு பக்கமும் இரு வடங்கள் பிடித்து தேர் இழுக்கப்பட்டு வந்து கொண்டிருந்தது.நேரடி அஞ்சல் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது."இறுக்கமாக கையப் பிடி தொலைந்தால் இந்த ஆட்களுக்குள்ள பிடிக்க இயலாது"அம்மாவின் உரத்த தொனி. என் மனதில் பயம் ஆரம்பித்தது."ஐயோ நான் தொலைந்தால் வீட்டுக்கு போக எனக்கு வழி தெரியாதே" .அம்மாவை கேட்டேன் "தொலைந்தால் எங்கே நிற்க வேண்டும் என்று".அம்மா ஒரு மரத்தினை காண்பித்தார் அப்பாடா  என்று நிம்மதி.
    பக்தர்கள் தேரின் பின்னால் பஜனை பாடியபடி வந்தார்கள்.இந்த காட்சிகளை பார்ப்பது என் மனதுக்கு சந்தோசமாக இருந்தது.கோவில் உள்வீதி, வெளிவீதி என வலம் வந்து வணங்கினோம்.மிகப் பிரமாண்டமான கோவில்.
  இந்தக் கோவிலில் எனக்கு மிகவும் பிடித்தது சரியான குறிப்பிட்ட நேரத்தில் பூஜைகள் ஆரம்பித்து நிறைவேறும்,அர்ச்சனை டிக்கெட் ஒரு ரூபாய்,கோவிலைச் சுற்றியுள்ள மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்பட்டமை.இதனால் நிறைய பக்தர்கள் பயனடைந்தார்கள்.தேர் இருப்பிடத்தை வந்ததும் சுற்றி கும்பிட்டோம்.சாமிக்கு பச்சை சாத்துதல் இடம் பெற்று,பூஜைகள் நடைபெற்று, இனிதே தேர் திருவிழா நிறைவு பெற்றது.
     திருவிழா நிறைவுற்றது என் மனசு நிறைவாகனும் அல்லவா?ஸ்பெஷல் ஐஸ் கிரீம் ,காரச் சுண்டல்,கச்சான்,இனிப்பு வகைகள் சாப்பிட்டு இன்புற்றோம்.வந்தவர்கள் "என்ன toys வேணும் "என கேட்க நானும் கையை காட்டினேன்.கை நிறைய toys  அடுக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
   நல்லூர் திருவிழா என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல, அது ஈழத்தமிழர்களின் பக்தி, கலாசாரம் மற்றும் ஒற்றுமையின் அடையாளம்.இதுவே என்னால் என்றும் மறக்க முடியாத திருவிழா கொண்டாட்டம்.



   

 
12
எங்க குடும்ப குலதெய்வம் கண்ணகி அம்மாளாச்சி.
வருஷத்துக்கு ஒரே ஒரு தடவை, 15 நாட்கள் நடக்கிற எங்க கோவில் திருவிழா வெறும் திருவிழா மட்டும் இல்ல… அது எங்க குடும்பத்தோட reunion.

அதுலயும் 12-ம் நாள் திருவிழா எங்க குடும்பத்துக்கு மாத்திரம் உரித்தான  ரொம்ப ஸ்பெஷல் திருவிழா நாள் . போர் காலத்துல வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்த என் அம்மாவோட friends கூட, வருஷம் முழுக்க விடுமுறையை சேமிச்சு வச்சு இந்த ஊர் திருவிழாக்கு தான் வருவாங்க. அம்மாளாச்சியைப் பார்க்கறதுக்காக மட்டும் இல்ல… அவங்க விட்டு போன ஊருக்கும், அவங்களுக்கும் நடுவில இருக்குற உறவை மீண்டும் மீட்டி பார்த்து புதுப்பிக்கிறதுக்கும் தான். .

மஞ்சள் பூ , பட்டு சிவப்பு ரோஜா ல செஞ்ச பூ அலங்கார சாத்துப்படி சூடி  எங்க அம்மாளாச்சி பிள்ளையார் முருகன் சகிதம் வெளி வீதி உலா வரும்போது… அப்டியே உடம்பே சிலிர்த்துப் போகும்.
இப்போ எல்லாம் social media-ல noise pollution, Air pollutionன்னு பட்டாசுக்கு எதிரா எத்தனை போராட்டம் நடந்தாலும், அம்மாளாச்சி வெளில வரும்போது காதைப் பிளக்கும் வேட்டு   சத்தமும், கண்ணை பறிக்கும் வாணவேடிக்கையும் இல்லனா… அந்த திருவிழா முழுமையடையாத மாதிரி தான் தோணும்.

“ஏழு கழுதை வயசானாலும்” மாமாவையும் அண்ணாவையும் இழுத்துக்கிட்டு போய் cone ice cream gang ஆ   வாங்கி சாப்பிடுற பழக்கம் இன்னைக்கும் மாறல. வயசு கூடுது… ஆனா அந்த சந்தோஷம் மட்டும் மாறல.

எங்க திருவிழால எனக்கு ரொம்ப பிடிச்ச இன்னொரு விஷயம், மாலை பூஜை முடிஞ்சதும் நடக்கிற ஸ்பெஷல் ப்ரோக்ராம்.
குமரன் நாதஸ்வரக் கச்சேரி, செண்டை மேளக் கச்சேரி, வில்லுப்பாட்டு… பக்தியோட சேர்ந்து கலையும் கொண்டாடற அந்த நேரம் பார்ப்பதுக்கே மனசு நிறைவா இருக்கும் .

WhatsApp group-ல எத்தனையோ படங்களும் மெசேஜ்களும் பகிர்ந்தாலும், நேர்ல cousin-களை சந்திச்சா வருஷம் முழுக்க சேமிச்ச கதைகள் எல்லாம் ஒரே மூச்சில வெளிய வரும்.
“என்னதான் இப்படி ஓயாம பேசுறீங்க?”ன்னு பெரியவங்க சலிச்சாலும், அந்த பேச்சு தான் எங்களை இன்னும் நெருக்கமா கட்டி வைக்குது.

புகைப்படத்துல மட்டுமே தெரிஞ்ச பாட்டி-தாத்தாக்கள் பேர் சொல்லி, ஊர் பெரியவங்க நம்மை பார்த்து
“அந்தக் கண்ணு அப்படியே இருக்கு… அந்த மூக்கு அப்படியே இருக்கு”
ன்னு சொல்றப்போ,அப்பாடா , அண்ணா அடிக்கடி சொல்ற மாதிரி ,
நம்மை யாரோ குப்பைத் தொட்டிலிருந்து எடுத்து வந்துடலன்னு ஒரு சின்ன reassurance மனசுக்குள்ள கிடைக்கும்.

முடிவா சொன்னா,
இந்த திருவிழா எங்களுக்கு சாமி தரிசனம் மட்டும் இல்ல.
உறவுகளை மீண்டும் சேர்க்கிற விழா.
நினைவுகளை புதுப்பிக்கிற விழா.
“நம்ம வேரு எங்க இருக்குனு” ஒவ்வொரு வருஷமும் நினைவூட்டற விழா
.
13
படியளப்பவளின் வாசலில்
பால் குடம் தூக்கி வந்து,
பரிகாரம் முடித்து,
பன்னீர் அபிஷேகம் செய்து,
நேர்த்திக்கடன் சுமந்து,
நம்பிக்கையின் எடையில் சாய்ந்து,
ஐந்து பத்துகளிடையே ஐநூறு ரூபாய் தாளை தயவாக வைத்து,
குடும்ப சமேதராக ட்யூப் லைட்களின் வெளிச்சத்தில் ஏறுகின்றன
பக்திமான் பெயர்கள்,
ஒலிபெருக்கியில் ஒலிக்கின்றன
அவர்களின் பெயர்களோடு
வேண்டுதல்களின் பட்டியல்.

சித்த சக்தி ஞான மந்திரங்களை
உருவேற்றி,
காரிய சித்தியை உச்சரித்து,
உன் அனுக்கிரகத்தில்
காலத்தை வென்ற ஞானிகளாகிறர் சிலர்

பூக்கூடை நிறைய வருகின்ற கோரிக்கைகள்,
மல்லிகை மணத்தில் மறைந்திருக்கின்றன மனக்குமுறல்கள்,
கர்பகிரக சுற்றுகளில்
நச நசக்கிறது
வேண்டுதல்களின் ஈர விதைகள்.

அஞ்சு ரூபாய் டிக்கெட்டுக்கும்
அம்பது ரூபாய் டிக்கெட்டுக்கும்
உனக்கும் தான் எவ்வளவு தூரம்?
நம்பிக்கைக்கும் நோட்டுக்கும் உள்ள
தூரம் என சொல்லி சிரிக்கிறாய்.

வாசலில் கிடக்கும் செருப்புகளுக்கு உன் பாதுகாப்பையும்
வாடிக்கையாய் வந்து போகும் உன் ஸ்நேகிதர்களுக்கும்
படியளந்து முடித்துவிட்டால்
உன் வாசலில் கையேந்தி
நிற்கும்
அந்த எளியவள் தெரிகிறாளா
சற்று பார்.

வறண்டிருக்கும் கைகளில்
எந்த ரேகையில்
ஒளிந்திருக்கிறது
மிச்சமுள்ள உன் அருள் ?
செவ்வரளி சூடி,
குங்குமம் தவிழும்
உன் கருணைக் கண்களை கண்டு
நம்பிக்கை கொள்ள துணிகிறாள்.

துக்க நிவாரணி தாயே,
சிறிய கேவலுடன்
உன் எதிரே நிற்கிறாள் எளியவள்
ஒன்றுமே கேட்காமல்,
எல்லாம் கேட்டது போல,
கேட்டிருக்கும் தானே உனக்கு?
கேட்ட குரல் தானே என,
அலட்சியமாய் கடந்துவிடாதே..
14
மானிடன் வாழ உணவு அவசியம் அது தொடர்ந்து கிடைக்க உழவுதொழில் அவசியம் என்பதை உணர்ந்திருந்த இந்து சமூகத்துக்கு மாடுகளின் அவசியமும் புரிந்தது

மாடுகள் இல்லாமல் விவசாயம் இல்லை என்பதை உணர்ந்த அச்சமூகம் அதை "செல்வம்" என கொண்டாடியது, மாடு என்றால் செல்வம் என்று பொருள்

பாரதகண்டம் முழுக்க மாடுகள் போற்றி புகழபட்டன, கண்ணன் எனும்  அவதாரம் அதன் அவசியம் கருதி அக்குலத்திலே வந்து அதை உயர்த்தி நின்றான்

மாடுகள் அவ்வளவு அவசியமா?

ஆம், மாடுகளின் தேவை மானிட குலம் இருக்கும் வரை உண்டு.  விவசாயத்துக்கு இன்று டிராக்டர்கள் வந்துவிட்டாலும் அன்று உழவு வண்டி இழுப்பு என எல்ல்லாவற்றுக்கும்  காளைகளே பயன்பட்டன, இன்று அவை அந்த தொழிலுக்கு பயன்படாவிட்டாலும் மாட்டு சந்ததி அவைகளாலே பெருக வேண்டும்

காளைகள் மிகவும் அவசியம் என்பதால் அதை சிவனின் வாகனமாக கருதி காக்க சொன்னது இந்துமதம், ரிஷபம் சிவனின் வாகனம் என்றும், நந்தி என்றும், கோவில் காளைகள் என்றும் பல வகையாக அவற்றை போற்றினார்கள்

இதனால் பலமான கன்றுகள் பிறந்து அவை காலம் காலமாக மாடுகள் பெருகி வந்தன‌

பசுக்களின் பலன் ஒன்றல்ல இரண்டல்ல, பால் என்பது ஒரு அற்புதமான உணவு, மானிட உடலுக்கு மிக மிக பலனளிக்கும் உணவு

இதனாலே தேரையர் முதலான சித்தர்கள் "பாலுண்போம், பால் பொருட்கள் உண்போம்" என அழகாக சொல்லி வைத்தார்கள்

உஷ்ண பிரதேச நாடுகளில் மானிட உடலை குளுமையாகவும், குளிர் பிரதேசங்களில் மானிட உடலை சூடாகவும் பலமாகவும் வைத்திருக்கும் ஒரு பானம் பால்

பால் என்றால் வெறும் பால் மட்டும் அல்ல, தயிர் நெய் என அதன் பலன்கள் ஏராளம். பாரதம் போன்ற உஷ்ண பிரதேசங்களில் தயிரும் நெய்யும் உடலுக்கு குளிர்ச்சி

சுத்தமான தயிரும் நெய்யும் சேர்த்து கொண்ட வரை பாரத மக்களுக்கு ஒரு நோயுமில்லை

அரிசி என்பது உடலுக்கு குளுமையூட்டும் உணவு, அதில் தயிர்கலந்து உண்டபொழுது உடலில் உஷ்ணம் கட்டுபட்டது, உஷ்ணம் கட்டுபட்ட உடலுக்கு எளிதில் நோய் வராது

இந்த ரத்த கொதிப்பு இன்னபிற நோய்களுக்கெல்லாம் மிக பெரிய காரணம் உஷ்ண கோளாறே, ஆனால் மேல்நாட்டு மருத்துவம் அப்படி ஒன்றை ஒப்புகொள்ளாது அல்லது தெரியாது

பனங்கள்ளும் தயிர்கஞ்சியும் குடித்தவரை தமிழனுக்கு ரத்தகொதிப்பு என்றால் என்னவென்றோ அதற்கான மாத்திரை என்னவென்றோ தெரியாது, அது அவசியமில்லை

நல்லெண்ணெய் குளியல் அவனை இன்னும் குளிர்ச்சியாக்கியது, நீண்ட தலைமுடியில் பூசபட்ட அந்த எண்ணெய் எல்லா வகையிலும் தலையினை குளிர்ச்சியாக்கி உடலையும் குளிர்ச்சியாக்கியது

இதனையெல்லாம் தொலைத்துவிட்டுத்தான் குருட்டு சமூகமாக மாத்திரையிலும் மருந்திலும் இச்சமூகம் தத்தளிக்கின்றது

கோதுமை உடலுக்கு சூடு என்பதால் குளிர்பிரதேச உணவாயிற்று, ஆனால் அளவுக்கு மிஞ்சிய சூடு நோயினை ஏற்படுத்தும் என்பதால் நெய் சேர்த்து உண்ண சொன்னார்கள்

வட இந்திய உணவு வழக்கம் இதுதான், அரேபியாவில் இதை வெண்ணெயும் தயிரும் பிடித்து கொள்கின்றது

இரண்டாம் உலகபோருக்கு பின்புதான் தமிழருக்கு சப்பாத்தி அறிமுகமாயிற்று, ஆனால் அதை நெய் சேர்க்காமல் உண்ண கூடாது என்பது தமிழனுக்கு தெரியவில்லை, விளைவு புது புது நோய்கள் அவனை தாக்கி பாடாய் படுத்துகின்றன, மருத்துவமனை நிரம்பி வழிகின்றது

பசுக்கள் பெருக வேண்டும் என்றால் சும்மா மானிடன் பெருக்கமாட்டான் என்பதால் அதிலும் ஒரு நுணுக்கம் செய்தது இந்துமதம்

ஆம், தெய்வங்களுக்கு பால் , தயிர், நெய் எல்லாம் அபிஷேகத்துக்கு அவசியம், நெய் விளக்கு அவசியம் என அது வலியுறுத்திற்று

பாலும்,  தயிரும், நெய்யும் தெய்வத்துக்கு கொஞ்சமும் அவசியமல்ல, ஆனால் தெய்வத்தின் பெயரை சொல்லியாவது மாடு வளர்க்க மாட்டானா அவனும் பாலும் தயிரும் நெய்யும் உண்ணமாட்டானா எனும் அக்கறை அன்றி வேறல்ல‌

பால் அபிஷேகம், தயிர் அபிஷேகம் என சொல்லி அதை குடிக்க வைத்ததும் இதனாலே

தெய்வத்துக்கு வைக்கபடும் நைவேத்தியங்களில் நெய் இருக்க வேண்டும் என்பதும் இதனாலே, உணவில் நெய் சேர்க்க வேண்டும் என்பதும் இந்த ஏற்பாடே

பசுவினை கொல்வது பஞ்சமாபாதகம் என்றதும் இதற்காகவே, ஒரு பசு கொல்லபட்டால் ஏராளமான பாலும் நெய்யும் உருவாகிவருவதை ஒருவன் தடுக்கின்றான், அது பாவத்திலெல்லாம் பெரும் பாவம் என்றது இந்துமதம்

"நெய் இல்லா உண்டி பாழ்" என ஓள்வை சொன்னாலும் ஏற்காதவன், தெய்வத்துக்கு அவசியம் என்றால் ஏற்பான் அல்லவா?

ஆம் இந்துக்களின் ஒவ்வொரு ஏற்பாடும் தெய்வத்துக்கானது அல்ல, முழுக்க மக்களுக்கும் அவர்கள் உடல் நலத்துக்குமானதே

பால் என்பதும் மிகசிறந்த கிருமி நாசினியும் கூட, ஆலய சிலை அபிஷேகம் முதல் அயிரை மீனை கழுவ அது பயன்படுவது அப்படியே

இன்றும் சீக்கிய சமூகம் தலைமுடியினை பாலில் கழுவும் செயலில் அதை காணலாம், ஆம் பால் என்பது சுத்தமும் சத்தும் கொடுக்கும் விஷயம்

பால் பற்றி சொல்லும் பொழுது வெண்ணெய் பற்றி சொல்லியாக வேண்டும், மானிட உணவில் மகா இன்றிமையாதது வெண்ணெய். அது மூளைக்கும் உடலுக்கும் பலம் கொடுக்கும் உணவு

கண்ணன் இதை வெண்ணெய் உண்டு நிரூபித்தான், அவன் வெண்ணையினை திருடினான் என்பது பசியியிலோ ருசியிலோ அல்ல, அது மகா அவசியமான உணவு என குறிப்பால் சொன்னான் கண்ணன்

ஐரோப்பியர் உணவு வகைகளில் வெண்ணெய்க்கு எக்காலமும் தனி இடம் உண்டு, தவிர்க்கமுடியா இடமும் உண்டு

உலகில் விஞ்ஞானம் டிராக்டரை தரலாம், இழுவை வண்டிகளை தரலாம், மாடு இழுக்கும் கமலைகளுக்கு பதிலாக மின்மோட்டார் வரலாம்

ஆனால் பசுக்கள் இல்லாமல் பாலும் தயிரும் வெண்ணையும் நெய்யும் ஒரு காலமும் வராது

மாடுகளின் மிகபெரிய கொடை சாணம், வீணாக வளரும் புல்லையும் வயலில் கழிவாகும் வைக்கோலையும் தின்று அவை சாணம் எனும் மிகபெரிய உரத்தை கொடுக்கின்றன. ஆம் வீணானதெல்லாம் தான் உண்டு மானிடனுக்கு பாலும் உரமும் கொடுக்கும் அற்புத உயிரினம் பசு.

பசுஞ்சாணமும் ஹோமியமும் கலந்த அந்த அற்புத வஸ்து உரம், கிருமி நாசினி என மானிடரை காக்கின்றது

காளைகளும் பசுக்களும் மகா முக்கியம் என்பதால் ஆலயம் எனும் பெயரை சொல்லி அதை வர

இதற்குத்தான் பசுபாதுகாப்பும் காளை பாதுகாப்பும் அவசியமாகின்றது, இதை என்றோ உணர்ந்துதான் இந்து ஆலய தேவைகளுக்கு பால் பொருட்கள் அவசியம் என ரகசியாமக பசு வளர்ப்பினை ஊக்குவித்தது

இதை நுணுக்கமாக உணர்ந்த வெள்ளையன் பசுவதையில் ஈடுபட்டான், 17ம் நூற்றாண்டில் இந்தியாவினை பிடிக்க வந்த அவனுக்கு இரு விஷயங்கள் இருக்கும் வரை இந்தியாவினை சீரழித்து வீழ்த்தமுடியாது என்பது புரிந்தது

சீனாவில் போதை மருந்தினை பரவவிட்டு அவர்களை பலவீனமாக்கி ஹாங்காங்கை கைபற்றிய அவனுக்கு இந்தியாவில் சில போதைகளை பரப்புவது எளிதானது

அதில்தான் இந்துமதம் பற்றிய மிக மோசமான விமர்சனம் அதன் ஏற்பாடெல்லாம் மூடதனமானது எனும் தவறான கற்பிதங்கள்

இந்துமதம் வீழும் பொழுது நீர்நிலைகள் வீழும், விவசாயம் வீழும், பசு அழியும்

இந்த மூன்றும் அழிந்தால் இந்தியா வீழும், பின் அதை தன்னால்தான் காக்க முடியும் என அவனால் அவன் பொருளையும் இன்னும் பலவற்றையும் விற்க முடியும்

ஆம், பசு கூட்டம் குறைந்தது பாலும் நெய்யும் தயிரும் குறைந்தது இந்தியாவில் நோயாளிகள் அதிகரித்தனர், மருந்து எனும் பெயரில் சம்பாதித்தான் வெள்ளையன்

நீர்நிலை சரிந்தது, வயல்கள் குறைந்தன. உணவு எனவும் ஒட்டுவிதை எனவும் மரபணுமாற்ற்பட்ட அதிக விளைச்சல் எனவும் சொல்லி அவனால் விதைகளும் விஷமும் இங்கு விற்க முடிந்தது, நோய்கள் அதிகரித்தன‌

கோசாலை எனும் பசுக்கள் குறைந்தன, ஆனால் பால் இந்திய பானமாக இருந்தது. அதில் தன் வருமானம் பெருக நைசாக காபி, தேயிலை என கலந்துவிற்றான் வெள்ளையன்

ஒரு கட்டத்தில் தமிழரின் பானமான பாலும் மோரும் மறைந்து காபி டீ கோலா என மாறி இன்று நோய்பட்ட பெரும் சமூகம் நிறைந்து நிற்கின்றது

கோவில் காளையும் கோசாலையும் மறைந்ததில் சாணம் குறைந்து செயற்கை உரத்துக்கு பாரதம் தத்தளிக்க ராசாயாண உரத்தை நம்மிடமே கொடுத்து நம்மை சுரண்டினான் வெள்ளையன்

ஆக இந்து ஆலயங்கள் சரிய சரிய இந்தியர் வாழ்வே சரிந்தது என்பதை ஒருகணம் நினைத்து பாருங்கள் மாபெரும் அவமானமும் குற்ற உணர்ச்சியும் உங்களை சூழ்ந்து கொள்ளும்

இங்கு இந்துமதத்தை மீட்டெடுக்காமல் எதுவும் எக்காலமும் சாத்தியமில்லை அந்த அளவு கலாச்சாரம், உணவு, வாழ்வு, மனநலம் , விவசாயம், ஆரோக்கியம் என எல்லாவற்றோடும் அது பின்னி பிணைந்து நிற்கின்றது

இதனால்தான் அன்றைய பாரதம் மாடுகளை கொண்டாடியது, அதை கோ மாதா என்றது, ரிஷ்பம் என நந்தி என வணங்கியது

வடக்கே அதை இந்துக்கள் தாய் என கொண்டாடியதன் தொடர்ச்சிதான் மாட்டு பொங்கல்

அன்று பசுக்களுக்கெலாம் அலங்காரம் செய்து பொங்கல் ஊட்டி மகிழ்வார்கள், காளைகளுக்கெல்லாம் பெரும் பூஜை நடக்கும்

ஏறு தழுவுதல் எனும் விளையாட்டு இன்றுதான் நடக்கும்

அதற்கு பல காரணங்கள் இருந்தன, முதலாவது மாடுகளோடு பழகும் சமூகத்துக்கு அதை அடக்கும் வித்தையும் தெரிய வேண்டும், இரண்டாவது பயமில்லாத வலுவான உடல் கொண்ட‌ வாலிபர்களை உருவாக்குவது

பயமில்லா இளையதலைமுறையே நாளை ஆபத்து என்றால் சமூகத்தை காக்க எழுந்து நிற்கும்

இதில் இன்னொரு நுணுக்கமும் இருந்தது, ஜல்லிகட்டுக்கு வளர்க்கபடும் காளைகள் மிக ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருந்தன, அந்த காளைகளால் எளிதில் சந்ததி பெருக்க முடியும் அதுவும் வலுவான சந்ததியாக பெருக்க முடியும்

காளையினை அடக்குபவனுக்கு பெண் கொடுப்பதும் இந்த மரபின் ஒரு வகையே

இங்கு மாடுகள் பாரதம் முழுக்க போற்றபட்டன, மாட்டுகறி உண்ணும் வழக்கம் இந்தியருக்கு இல்லை, வயதான இறந்த மாட்டை மட்டும் சில இனங்கள் உண்டன, மற்றபடி கழுகுதான் உண்ணும்

மாட்டுகறி என்பது ஆப்கானியரால் உணவாகவும் வெள்ளையனால் இந்தியாவின் விவசாய முதுகெலும்பினை உடைகவும் இங்கு அறிமுகமான ஒன்று

பசுக்கள் கொல்லபட கொல்லபட இத்தேசம் சீரழிந்தது, அது தடுக்கபடல் வேண்டும்

வடக்கே பசுக்களுக்கு இருக்கும் அதே மரியாதையும் வணக்கமும் தெற்கே ஜல்லிகட்டு நடக்கும்பொழுது அழகாக தெரிகின்றது

இச்சமூகம் மாடுகளை தெய்வத்துக்கு நிகராக கொண்டாடியதை புரிந்து கொள்ளமுடிகின்றது

பாரத திருநாடு நோயில் இருந்து விடுபட பால் பொருள் பெருக வேண்டும், ஆரோக்கியமான உணவு பெற இயற்கை விவசாயம் அவசியம் அதற்கு கட்டாயம் சாணம் அவசியம்

இதெல்லாம் மாட்டுகறியினை தடுத்து கோசாலைகளை பெருக்கி அவற்றை பாதுகாத்தால் நடக்கும்

அதை இந்துமதம் அழகாக செய்யும் என்பதால் அம்மதத்தை மீட்டெடுத்தல் என்பது அவசியம்

அக்காலத்தில் ஒவ்வொரு இந்துகோவிலுக்கும் தனியே நந்தவனமும், கோசாலையும்  இருந்தது, ராஜராஜ சோழனின் சாவா மூவா பேராடுகள் எனும் கல்வெட்டும், மாடு கொடுத்து நெய்யால் விளக்கேற்ற சொன்ன காட்சிகளும் அதை சொல்கின்றன‌

இந்துமதம் மீண்டெழுந்து, நந்தவனங்களும்,கோசாலைகளும் பெருகட்டும்

ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு மாட்டுபண்ணை அமையட்டும், அப்படி அமையபெற்றால் ஆலயமும் சிறக்கும் மாடுகளும் வளரும், மக்களுக்கும் எல்லாம் ஆரோக்கியமாக கிடைக்கும் நோய்கள் ஒழியும்

ஜல்லிகட்டினை பார்க்கும் பொழுது எழும் சிந்தனைகள் அதுதான் , கோ பூஜையும் ஜல்லிகட்டும் ஏற்படுத்தபட்ட காரணமும் அவைதான்

அவை இன்னும் மீட்டெடுக்கபட வேண்டும்

ஜல்லிகட்டு நடக்கும் பொழுது ஒரே ஒரு பாண்டிய மன்னனை நினைத்து பார்க்கின்றேன், ஜல்லிகட்டு நிலைத்து நிற்க அவனே காரணம்

ஆம், ஜல்லிகட்டு இந்தியா முழுக்க இருந்தது கண்ணன் ஏழு காளைகளை அடக்கித்தான் நப்பின்னையினை திருமணம் செய்தான் என்கின்றது அவன் வரலாறு, ஆண்டாளும் இதை பாடினாள்

அப்படி இந்தியா முழுக்க இருந்த ஜல்லிகட்டு புத்த சமணங்களால் அறவே அழிந்தன, அசோகன் காலத்தில் அது ஜீவகாருண்யம் என தடுக்கபட்டது

சமணம் இன்னும் அழகாக அதை செய்தது

இந்தியா முழுக்க ஆண்ட சமணம் தமிழகத்தையும் தொட்டு இவைகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்தன, பவுத்தர் காலத்தில் காஞ்சியிலும் அதை அடுத்து சோழநாட்டிலும் இந்துமதம் சரியும் பொழுது ஜல்லிகட்டும் அழிந்தது

மதுரையில் அதற்கு ஆபத்து கூன்பாண்டியன் காலத்தில் வந்தது, அவனையும் சமணர் ஆட்டி வைத்து அவனை சமணராக்கி அங்கும் சைவத்தை ஒழித்து காளை விளையாட்டை ஒழிக்கும் அளவு அவன் மனதை மாற்றினர்

அவனுக்கு முதுகில் கூன் இருந்தது, அதனால் கூன்பாண்டியன் என்றானான், அவனை வளைத்த சமண கூட்டம் மதுரை ஆலயத்தையும் பாழ்படுத்தி போட்டது

பின் மன்னனுக்கு சூலை நோய் எனும் வயிற்றுவலி நோய் தாக்கிற்று, சமணரால் அதை குணமாக்க முடியவிலை

கூன் பாண்டியனின் மனைவியான மங்கையரசி நாயனாரும், குலச்சிறை நாயனாரும் திருஞானசம்பந்த மூர்த்தியினனை அழைத்து வந்து சமணருடன் போராடி அவனை நலமாக்க முயன்றனர்

திருஞான சம்பந்தரின் மதுரை ஆதீனம் எரிக்கபட்டு அவர் மேல் கொலைமுயற்சி நடந்ததெல்லாம் அப்படித்தான்

ஆனால் அதையும் மீறி மன்னனை குணமாக்கி சமணரை விரட்டி அடித்தார் திருஞானசம்ப்ந்தர், மன்னனின் கூன் முதுகும் சம்பந்தரால் நிமிர்ந்தது

அவன் நின்றசீர் நெடுமாறன் என்றானான்.

மன்னன் சமணத்தை தலைமுழுகி சைவம் ஏற்றான், அது  பொறுக்காத சமண கூட்டம் தன் வட இந்திய அரசுகளோடு சேர்ந்து சேரமன்னனின் நாடுவழியாக தெற்கில் இருந்து அவனை தாக்கியது

சிவன் அருளில் திருநெல்வேலிபக்கம் பெரும் போர் புரிந்து அவர்களை முறிய அடித்தான் அவனால் மதுரையில்
சைவம் காக்கபட்டு இந்த ஜல்லிகட்டும் தொடர்ந்தது

நின்றசீர் நெடுமாறன் நாயனார் நிலையும் அடைந்தார்

ஆம் அந்த நாயனாரால் மட்டுமே இங்கு சமணம் ஆட்டம் போட முடியவில்லை இதனாலே இந்தியரின் பெரும் தொன்மையான ஜல்லிகட்டு இங்கு மட்டும் நிலைத்தது

மதுரை எக்காலமும் சிவன் பூமி என்பது இதனாலேதான், சிவன் காத்த விளையாட்டு அது

இன்று பாரதத்தில் ஜல்லிகட்டு எனும் காளை விளையாட்டு மதுரை பக்கம் நடக்கின்றது , நாயனாரால் காக்கபட்டு பின் நாயக்க மன்னர்களால் தொடர்பட்டு இக்காலம் வரை நடக்கின்றது

அந்த நாயானாருக்கு இன்றும் மதுரை கோவிலில் சன்னதி உண்டு

அவர் காலம் பின் நாயக்கர் காலம் என தொடர்ந்த அந்த விளையாட்டு இஸ்லாமியர் கிறிஸ்தவ ஆட்சியில் சீரழிந்து, திமுக காங்கிரஸ் ஆட்சியில் அழியும் நிலைக்கே வந்தது

ஆனால் பாஜக எனும் இயக்கம் ஏற்படுத்திய எழுச்சியால் இந்து விரோத இயக்கமெல்லாம் இம்முறை அலறுகின்றன. திருகுறள் எனும் இந்து நூலை தமிழர் நூல் என மாற்ற முயல்வது போல இந்து பண்டிகையான பொங்கலையும் இந்துக்கள் விளையாட்டான ஜல்லிகட்டையும் தமிழர் விளையாட்டு என சொல்லும் அக்கும்பல் பரிதவிகின்றது

இதனால் காங்கிரஸ் தலமையும் திமுக தலமையும் அலறி அடித்து அவனியாபுரம் நோக்கி ஓடிவருகின்றது, இதனால் இந்துமக்கள் எழுச்சி பெற்றுவிட கூடாது என அஞ்சுகின்றன‌

தமிழனின் கலாச்சாரம் இந்து கலாச்சாரம் என்பதை மறைத்த அக்கூட்டம் அந்த உண்மை பரிதவிக்கும் பொழுது அலறுகின்றது

அவர்கள் அலறட்டும்

பகவான் கண்ணன் விளையாடிய ஏறுதழுவல் எப்படி இருக்கும் என்பதை அகில இந்திய பாரதமும் இப்பொழுது பார்க்க தொடங்கிவிட்டது, இனி இந்துக்களின் பெரும் பிம்பங்கள் அந்த மதுரை நோக்கி வருவார்கள்

ஜல்லிகட்டு என்பது இந்துக்களின் விளையாட்டு, இந்துமதம் மாடுகளின் அவசியத்தை சொல்லி அதை வணங்கியதை உலகுக்கு சொல்லும் விளையாட்டு

நாம் அதை ரசித்து பார்த்து கொண்டிருக்கின்றோம், அடங்க மறுத்து சீறிபாய்ந்து தன்னை அடக்க நினைப்பவனை தூக்கி எறிந்து சிலிர்த்து நிற்கும் காளைகள் புத்தம், சமணம், இஸ்லாம், கிறிஸ்தவம், போலி நாத்திகம் என எல்லாவற்றையும் தூக்கி எறிந்து சிலிர்த்து நிற்கும் சைவ மதத்தை அப்படியே குறிக்கின்றன‌

ஒவ்வொரு காளையும் துள்ளி வரும் பொழுது சைவம் மீண்டுவரும் காட்சியே தெரிகின்றது

காளை சிவனின் வாகனம் என இந்துக்கள் சொல்லி வைத்ததில் ஆயிரம் அர்த்தம் இருப்பது இப்பொழுதுதான் தெரிகின்றது, அர்த்தமுள்ள இந்துமதம் என கவியாசான் சொன்னது நிச்சயம் கண்ணனின் வாக்கு.
15
பொதுப்பகுதி / Re: குறுந்தகவல் Raj
« Last post by RajKumar on January 21, 2026, 05:10:29 PM »
நிலைமை மாறினால்,
மகிழ்ச்சியாக
இருக்கலாம்
என்பது பொய்...,

மகிழ்ச்சியாக
இருந்தாலே,
நிலைமை மாறிவிடும்
என்பதே உண்மை...!!!

16
📢 முதுமையில் தனித்து விடப்படாமல், எவருக்கும் பாரமாக இல்லாமல் இருக்க இப்போதே இதைப் புரிந்து கொள்ளுங்கள்:
🫥⚖️ 01. நிலத் தகராறுகளில் தலையிடாதீர்கள்: பக்கத்து வீட்டுக்காரனுக்கு பாடம் புகட்டுகிறேன் என்று நீதிமன்ற வாசல்களில் தவவம் கிடக்காதீர்கள். வழக்கு முடிவதற்குள் நீங்கள் மண்ணுக்குள் போயிருக்கலாம். நீங்கள் போராடி வென்ற நிலத்தில் நீங்கள் அல்ல, வழக்கறிஞர்களே குடியேறுவார்கள்.

🫥🚗 02. பழைய வாகனங்கள் என்னும் சுமை: ஐந்து லட்சம் லாபம் என்று கருதி "செகண்ட் ஹேண்ட்" வாகனங்களை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். சாலையில் ஓடுவதை விட அது கராஜில் இருக்கும் நேரம் அதிகமானால், நெஞ்சுவலி வாகனத்திற்கு அல்ல, உங்களுக்குத்தான் வரும்.

🫥🏠 03. சொத்துக்களை எழுதி வைக்க அவசரப்படாதீர்கள்: பிள்ளைகள் இப்போது "தெய்வங்கள்" போலத் தெரிந்தாலும், கடைசி சதம் வரை சொத்துக்களை எழுதித் தந்த பிறகு, அந்த வீட்டிலேயே நீங்கள் ஒரு "தேவையற்ற பொருளாக" மாறக்கூடும். பிள்ளைகள் கெட்டவர்கள் அல்ல, ஆனால் உலகம் கொடூரமானது. எதையும் கையில் வைத்துக்கொண்டே உயிர் விடுங்கள்.

🫥💰 04. கடைசி சேமிப்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள்: 30 வருடங்கள் உழைத்துச் சேர்த்த ஓய்வூதியத் தொகையை (Pension) பிள்ளைகளின் தொழிலுக்காக கொடுத்துவிடாதீர்கள். இறுதியில் மருந்து வாங்குவதற்கும் அந்த பிள்ளைகளிடமே கையேந்த வேண்டிய நிலை வரலாம்.

🫥☝️ 05. பிள்ளைகளின் வீடுகளில் ஒட்டிக்கொண்டிருக்காதீர்கள்: "நமது பிள்ளைகள்தானே" என்று அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாதீர்கள். அளவுக்கு மிஞ்சி நெருங்கினால் உங்கள் அன்பு அவர்களுக்கு "தொல்லையாக" மாறும். உங்களுக்கென ஒரு சிறு இடத்தைத் தேடிக்கொண்டு சுதந்திரமாக இருங்கள்.

🥰⛰️ 06. யாத்திரை செல்ல பிள்ளைகள் வரும் வரை காத்திருக்காதீர்கள்: "பிள்ளைகளுக்கு லீவு கிடைக்கும்போது என்னை அழைத்துச் செல்வார்கள்" என்று காத்திருக்காதீர்கள். அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது உங்களால் நடக்க முடியாமல் போகலாம். தெம்பு இருக்கும் காலத்திலேயே தனியாகவாவது பிடித்த இடங்களுக்குச் சென்று வாருங்கள்.

😋🍲 07. சாப்பிட நினைப்பதை இன்றே சாப்பிடுங்கள்: உங்கள் துணைக்கு (மனைவி/கணவன்) பிடித்தமானதை இன்றே வாங்கிக் கொடுங்கள். இறந்த பிறகு சவப்பெட்டியின் அருகே சோற்றுத் தட்டை வைத்து "அவருக்கு இது ரொம்பப் பிடிக்கும்" என்று அழுவது ஒரு கேலிக்கூத்து!

🥰🛋️ 08. ஓய்வை உருவாக்கிக் கொள்ளுங்கள்: இறக்கும் வரை வேலைகளைக் குவித்து வைத்துக் கொள்ளாதீர்கள். காலை முதல் இரவு வரை ஓடிக்கொண்டே இருந்தால் இறுதியில் நீங்கள் வென்றது எதுவுமே இருக்காது. உடலுக்குத் தேவையான ஓய்வைக் கொடுங்கள்.

☝️✨️😴 09. தூக்கத்தைப் போன்ற மருந்து வேறில்லை: தேவையற்ற தூக்கமின்மையைக் குறைத்து, நிம்மதியாகத் தூங்குங்கள். நீங்கள் நோய்வாய்ப்படும்போது உங்கள் வலியை யாரும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள், அதை நீங்கள் தனியாகவே அனுபவிக்க வேண்டும்.

🫥🌘 10. "தனியாக" வந்ததை மறக்காதீர்கள்: யாராவது ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பைக் குறைக்கப் பழகுங்கள். உங்கள் நிழல் கூட உங்களைக் கைவிடும் ஒரு நாள் வரும். இறப்பதும் தனியாகத்தான், அதனால் தனியாக மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

மகிழ்ச்சி என்பது யாரோ தருவதல்ல, அது நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டிய ஒன்று! ✨
17

 *இறைவன் செஞ்ச இந்த படைப்பு ஒரு மேஜிக்*.

பாத்து செஞ்ச  நம்ம உடம்பு ஒரு லாஜிக்!

டயரு தேயுது ரோட்டுல... ஆனா,
நம்ம பாதம் இரண்டு பாருங்க
நாடு சுற்றியும் தேய்மானம் இல்லை..
செருப்பு தான் அடிக்கடி பிஞ்சு போகுது,
ஆனா உள்ளங்கால் இன்னும் வழ வழப்பா இருக்குது!

உடம்புல முக்கால்வாசி தண்ணி இருக்கு,
ஆனா ஆயிரமாயிரம் ஓட்டை இருந்தும்
அரை சொட்டு கூட ஒழுகாம நிக்குது!

நூறு வாட்ஸ் பல்புக்கே வயரு சுவிட்ச் வாங்க வேணும்,
ஆனா பேட்டரி இல்லாமலே இதயம் துடிக்குது – அதுவும்
ரீசார்ஜ் இல்லாமலேயே ரிதமா அடிக்குது!

லட்சம் ரூபாய் கேமரா கூட மக்கர் பண்ணும்,சர்வீஸ் கேட்கும்!
நம்ம கண்ணு மட்டும் பளிச்சின்னு படத்தை பாக்க வைக்கும்.
 பாத்ததை பட்டுனு மூளைக்கு சொல்லும்

நாக்குல மைக்ரோஸ்கோப் எதுவுமே இல்லை,
சாப்பிடும் உணவுல உப்பு குறைஞ்சா – அது
சப்பு கொட்டி சண்டை போடும்
 
எப்பவோ தின்னது எல்லாம் செரிச்சு முழங்கை அளவு பிறந்த நம்மை முழுசா ஆக்கி முழங்க வைக்குது!

படிச்சதை எல்லாம் படிய வைக்குது, பட்டுனு பதில் சொல்லி பகுமானம் காட்டுது!

மிஷினுக்கு எல்லாம் சர்வீஸ் வேணும்,
நம்ம ரத்த ஓட்டத்துக்கு – எந்த
ஆயிலும் தேவையில்ல,
on off  எதுவும் தேவையில்ல!
தொடர் ஓட்ட சாதனை புரியும்!

சென்சார் இல்லாமலே தோலு உணருது,
கொசு கடிச்சா – கை
சரியான ஸ்பாட்டுக்கு தானே பாயுது

எல்லா சத்தத்தையும் காது பிரிச்சு மேயுது!
ஆனா பொண்டாட்டி கூப்பிட்டா மட்டும் – அது
ஏனோ கேட்காத மாதிரி நடிக்குது!

எண்ணி எண்ணி பார்த்தும் எண்ணி முடியல!
இறைவன் செஞ்ச மேஜிக் அளவில்லை

பார்த்து பார்த்து நாம் செய்ய முடியுமா

படைச்ச இறைவனுக்கு
நன்றி சொல்லி
பத்திரமா பாத்துக்குவோம்

தினமும் காலையில
எழுவது கூட எவ்வளவு
பெரிய மிராக்கிள்

 எல்லா படைப்பையும்
பார்த்து வியப்போம்!
பக்குவமா நடப்போம்!!
18


*குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை*
*உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க*

*ஓடியதென்ன*
*பூவிதழ் மூடியதென்ன*
*என் மனம் வாடியதென்ன*

*ஒரு மாலையிடவும்*
*சேலை தொடவும்*
*வேளை பிறந்தாலும்*

*அந்தி மாலை பொழுதில்*
*லீலை புரியும் ஆசை பிறக்காதோ*

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன

பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன ...

*மேள தாளம் முழங்கும்*
*முதல் நாள் இரவு*
*மேனி மீது எழுதும்*
*மடல் தான் உறவு*

*தலையில் இருந்து பாதம்*
*வரையில் தழுவி கொள்ளலாம்*

அதுவரையில் நான்

*அதுவரையில் நான்*
*அனலில் மெழுகோ*
*அலை கடலில்தான்*
*அலையும் படகோ*

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன
பூவிதழ் தேடியதென்ன

என்னிடம் நாடியதென்ன

ஒரு மாலையிடவும்
சேலைத் தொடவும்
வேளை பிறக்காதோ
அந்த வேளை வரையில்
காலை உனது உள்ளம் பொறுக்காதோ ...

*காற்று வந்து தொடத்தான்*
*கொடியே இருக்க*

*கடலில் வந்து விழத்தான்*
*நதியே பிறக்க*

இடையில் வந்து தடைகள்
சொல்ல எவரும் இல்லையே

பிறர் அறியாமல்

*பிறர் அறியாமல்*
*பழகும் போது*
*பயம் அறியாத இதயம் ஏது*

*வீணை மீது விரல்கள்*
*விழுந்தால் ராகம்*
*ராகம் நூறு ரகங்கள்*
*விளைந்தால் யோகம்*

உனது ராகம் உதயம் ஆகும்
இனிய வீணை நான்

*சுதி விலகாமல்*
*இணையும் நேரம்*
*சுவை குறையாமல்*
*இருக்கும் கீதம்*

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன
பூவிதழ் மூடியதென்ன

என்னிடம் நாடியதென்ன

ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும்
வேளை பிறந்தாலும்

அந்த வேளை வரையில்
காலை உனது உள்ளம் பொறுக்காதோ ....


படம் : *அழகே உன்னை ஆராதிக்கிறேன்*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்*
பாடலாசிரியர் : *வாலி*
இசை : *இளையராஜா*
19


*தலையைக் குனியும் தாமரையே*
*தலையைக் குனியும் தாமரையே*

*என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து*
*என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து*

தலையைக் குனியும் தாமரையே ...

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
ஆ ஆ ஆ ஆ

*நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்*
*பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்*

பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்

*அமுதம் வழியும் இதழைத் துடைத்து*
*விடியும் வரையில் விருந்து நடத்து*

தலையைக் குனியும் தாமரை நான்

உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

தலையைக் குனியும் தாமரையே ...

*காத்திருந்தேன் அன்பே*
*இனிக் காமனின் வீதியில் தேர் வருமோ*

*பூமகள் கன்னங்கள்*
*இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ*

ஆயிரம் நாணங்கள்
இந்த ஊமையின் வீணையில் இசை வருமா

*நீயொரு பொன் வீணை*
*அதில் நுனிவிரல் தொடுகையில் பலசுரமா*

பூவை நுகர்ந்தது முதல் முறையா
ம்ம் ம்ம் ம்ம்ம்

வேதனை வேளையில் சோதனையா
முதல் முறையா
இது சரியா

சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
ஆ ஆ ஆ ஆ

*பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து*
*உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி*

உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி

*இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்*
*புதிய அலைகள் கரையை உடைக்கும்*

தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே

உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

தலையைக் குனியும் தாமரையே ...



படம் : *ஒரு ஓடை நதியாகிறது*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ராஜேஸ்வரி*
பாடலாசிரியர் : *வைரமுத்து*
இசை : *இளையராஜா*
20
தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும்  எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவில்பட்டியில் ஒரு பாட்டி மூட்டையுடன் ஏறினார்.
கம்பார்ட்மென்டில் உட்கார்ந்திருந்த இளைஞனிடம் சொன்னாள். "பேராண்டி நான் நாளை காலை 7 மணிக்கு விழுப்புரத்தில் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக செல்கிறேன். அதிகாலை 4 .00 மணிக்கு இந்த ரயில் விழுப்புரத்தை சென்றடையுமாம். நான் தூங்கி விடுவேன் என்னை விழுப்புரத்தில் 4.00மணிக்கு எழுப்பி இறக்கி விட்டுவிடு. நான் எழுந்திருக்கவில்லை என்றாலும் குண்டுக்கட்டாக தூக்கி பிளாட்பாரத்தில் படுக்க வைத்து விடு. நான் விடிந்ததும் ஆட்டோ பிடித்து கல்யாண மண்டபத்திற்கு சென்று விடுவேன். சிரமத்திற்கு மன்னித்துக் கொள். இந்த உதவியை மட்டும் எனக்காக செய்து விடு" என்றாள்.

அவன் சொன்னான் " பாட்டி இதென்ன உதவி.. கண்டிப்பாக நான் உங்களை விழுப்புரத்தில் இறக்கி விட்டு விடுகிறேன் அதற்காக உதவி என்று பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் நிம்மதியாக தூங்குங்கள்" என்றான். பாட்டியும் அவனை நம்பி நன்றாகத் தூங்கி விட்டாள்.

காலை ஏழு மணிக்கு எக்மோர் ஸ்டேசன் வந்ததும் அந்த பாட்டி குய்யோ முறையோ என்று கத்தி அந்த இளைஞனை திட்டுகிறாள். "நீ நல்லா இருப்பியா நாசமா போயிருவ. உன்னை நம்பி தானடா நான் தூங்கி விட்டேன்... முடியாது என்று முதலிலேயே சொல்லியிருந்தால் நான் தூங்காமல் இருந்திருப்பேன் அல்லது வேறு யாரிடமாவது சொல்லி இருப்பேனே , இப்போதே மணி ஏழாகி விட்டதே இனி நான் எப்படி பஸ் பிடித்து எத்தனை மணிக்கு விழுப்புரத்துக்குப் போவேன் முகூர்த்தம் முடிந்து விடுமே" என்று திட்டிக் கொண்டே இருந்தாள். பக்கத்திலிருந்தவர்கள் விசயத்தைக் கேள்விப்பட்டு அவர்களது பங்குக்கு அவர்களும் அவனை திட்டி சாத்துசாத்து என்று சாத்தினார்கள். அவன் இந்த திட்டையும் அடியையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

எல்லோரும் கேட்டார்கள் "ஏன்டா பாட்டியும் நாங்களும் உன்னை இந்த திட்டும் இப்படி அடித்துக் கொண்டிருக்கிறோம் நீ எதையும் பொருட்படுத்தாமல் அப்படி என்னத்தையடா யோசித்துக் கொண்டிருக்கிறாய்" என்று கேட்டார்கள்.

அதற்கு அவன் சொன்னான் "இந்தப் பாட்டியே என்னை இப்படித் திட்டுகிறதே இந்தப் பாட்டி என்று நினைத்து இன்னொரு பாட்டியை சொல்லச் சொல்ல கேட்காமல் அதிகாலை 4.00மணிக்கு தரதரவென்று இழுத்து விழுப்புரம் பிளாட்பாரத்தில் படுக்க வைத்து விட்டு வந்தேனே அந்த பாட்டி எப்படி திட்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான்... :) :)
Pages: 1 [2] 3 4 ... 10