Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
Thank you all for your lovely wishes.

Love you all
12
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 10:35:23 AM »
13
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 06:59:24 AM »
15
GENERAL / Re: Did you know that 🤔🤔🤔
« Last post by MysteRy on June 24, 2026, 01:21:22 PM »


Brother vs. Brother: The Family Feud That Created Adidas and Puma

Imagine a town where people don’t look you in the eye first — they look at your shoes.

For decades, that was the reality in the small German town of Herzogenaurach. The story of Adidas and Puma isn’t just a business tale. It’s the story of a family conflict so intense that it reshaped the global sports industry.

From Perfect Partnership to Bitter Rivalry

In the 1920s, the Dassler brothers were unstoppable.

Adi Dassler was the genius craftsman. He could build athletic shoes from almost anything — even scraps of military equipment.
Rudi Dassler was the master salesman. He had the charisma to convince any athlete that their shoes would bring victory.

Together, they reached global fame when athletes wearing their footwear dominated the 1936 Olympic Games.

But by 1948, the partnership collapsed.

The brothers’ relationship had deteriorated so badly that they split their factory in half. Each took part of the machines and exactly half of the employees.

From that moment, two legendary brands were born:

• Adidas — named after Adi Dassler
• Puma — Rudi’s company (which he briefly called “Ruda” before changing the name)

A Town Divided

Their rivalry didn’t just affect business — it split the entire town.

Herzogenaurach became almost like a battlefield.

• Social divisions: Employees of Adidas avoided bars where Puma workers gathered.
• Economic loyalty: Even local craftsmen had to be careful — showing up to a Puma customer wearing Adidas shoes could cost them the job.
• “The town of bent necks”: Locals developed the habit of glancing at people’s shoes first to see which side they belonged to.

The Battle for the World’s Athletes

Competition between the brands extended to the world’s biggest sporting events.

One famous example happened during the 1970 FIFA World Cup final.

Puma secured a deal with football legend Pelé. Just before kickoff, with cameras from around the world focused on him, Pelé bent down to tie his shoelaces.

Millions of viewers suddenly saw the Puma logo.

It was a brilliant marketing move — and it reportedly drove Adi Dassler furious.

Even in Death, the Distance Remained

The Dassler brothers never reconciled.

When they died, they were buried in the same cemetery — but at opposite ends, ensuring even in death there was distance between them.

Only in 2009, long after both brothers were gone, employees of Adidas and Puma played a symbolic football match to mark reconciliation.

Yet even today, in Herzogenaurach, some locals still instinctively glance at your sneakers first.

Why This Story Matters

This story reminds us that competition isn’t always about markets or numbers.

Sometimes it’s about something far more personal — the desire to prove to someone close to you that you are better.

And in this case, a family feud helped create two of the most iconic sports brands in the world.
16
GENERAL / Re: Did you know that 🤔🤔🤔
« Last post by MysteRy on June 24, 2026, 01:15:24 PM »


Sometimes a simple mistake can change the course of medical history.

Late one evening in 1956, engineer Wilson Greatbatch was working in a laboratory at the University at Buffalo on a device designed to record heart rhythms. Tired after a long day, he accidentally picked up the wrong resistor from a box. Instead of the required 10 kΩ resistor, he soldered a 1 MΩ resistor into the circuit.

When he turned the device on, something unexpected happened. The instrument didn’t record anything. Instead, it began to produce clear pulses — once every second. Exactly like the rhythm of a human heart.

In that moment, Greatbatch realized: this is how a device that stimulates the heart should work.

In the 1950s, heart disease was often a death sentence. Early pacemakers were the size of a television, powered by a wall outlet, and delivered electrical impulses through the skin. Patients were literally tethered to the wall with wires.

Greatbatch believed the device should be small enough to be placed inside the human body.

Many doctors thought the idea was unrealistic. The human body is a harsh environment that can quickly damage metal and electronics. But the engineer didn’t wait for approval. He invested his own savings — $2,000 — set up a small laboratory in a shed, and together with his wife Eleanor began building a prototype.

For two years he worked to find a way to protect the electronics from moisture.

In 1960, at a hospital in Buffalo, a 77-year-old man became the first patient to receive the device. Surgeons implanted the pacemaker, about the size of a pocket watch, and connected electrodes to his heart. When the external machine was turned off, his heart continued beating on its own.

The patient was able to leave the hospital and lived for another 18 months.

Today, nearly 1 million pacemakers are implanted worldwide every year.

Wilson Greatbatch, the author of more than 150 patents, passed away in 2011 at the age of 92.

His story reminds us of something powerful:
sometimes the “wrong” part turns out to be exactly the one that gives people hope… and more time. ❤️
17


1. மழை பெய்யும்போது கார் ஓட்டுவதைவிட, மழை பெய்தவுடன் கார் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மழை பெய்தோ/தூறலோ முடிந்தவுடன் தார்ச்சாலையில் மெல்லிய ஃபிலிம் போன்ற லேயராக நீர் படர்ந்திருக்கும். இது சாலையைவிட்டு வழிந்து செல்லாமல் படர்ந்திருக்கும். இதுபோன்ற சாலைகளில் நாம் வாகனத்தை ஓட்டும்போது மிகவும் ஸ்மூத்தாக ஓட்டுவது போல இருக்கும். இந்த சாலைகளில் பிரேக் போடும்போது நிதானம் தேவை. நிதானமாக ஓட்டினால்தான் நிதானமாக பிரேக் போடுவதற்கான நேரமும் நமக்கு இருக்கும்.

ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வசதியுள்ள வாகனம் என்றால் சற்று தைரியமாக பிரேக் போடலாம். ஆனால், ஏபிஎஸ் இல்லாத வாகனத்தில் பிரேக் போடும்போது கவனம் தேவை. சடர்ன் பிரேக் போடும்போது வீல்கள் ஸ்கிட் ஆகாமல் இருக்க, பிரேக்கை விட்டு விட்டு அழுத்திக்கொண்டே காரை ஸ்டீயர் செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ஏபிஎஸ் இல்லாத கார்களில், ஸ்கிட் ஆகும்போது பிரேக்கை தொடர்ந்து அழுத்திக்கொண்டே இருக்கக்கூடாது. பிரேக் அழுத்தி எடுத்ததுடன் வளைக்கும்போது கார் உங்கள் கன்ட்ரோலை விட்டு விலகுவது போன்று தோன்றினால், ஸ்டீயரிங்கை எதிர்பக்கம் திருப்பி, கன்ட்ரோல் செய்யுங்கள். காரின் டயர் தேய்மானம் இல்லாமல் இருந்தால் மட்டுமே இந்த டெக்னிக் சிறப்பாக கைகொடுக்கும்.

2. தமிழக நெடுஞ்சாலைகளில் சில இடங்களில் சாலை சாதாரணமாகவே வழுக்கலாக இருக்கும். உதாரணத்துக்கு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சில வளைவுகளில் இதுபோன்று இருந்தது. இதுபோன்ற வழுக்கலான வளைவுகளை கடக்கும்போது ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்துவிட்டு, நிதானமாகக் கடக்கவேண்டும். வளைவு முடிந்த பின்னர் ஆக்ஸிலரேஷன் கொடுத்து செல்ல ஆரம்பிக்கலாம். மழை பெய்யும்போது இந்த மாதிரியான வளைவுகளில் இன்னும் கவனம் தேவை.

3. முழுவதும் எடை ஏற்றப்பட்டுள்ள லாரி போன்ற கனரக வாகனங்களால் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சடர்ன் பிரேக் போட்டு நிறுத்த முடியாது. ஆனால், இப்போது வரும் வால்வோ இன்டர்சிட்டி கோச் பேருந்துகளில் ஹைட்ராலிக் ரிடார்டர்கள் (Retarder) இருப்பதால், திடீரென்று பிரேக் போட்டு நிறுத்தமுடியும். எனவே எந்த விதமாக கனரக வாகனங்களின் முன்னும், பின்னும் தொடர்ந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி செல்ல நேர்ந்தால் முடிந்தவரை அந்த வாகனங்களை முந்தி சென்றுவிட வேண்டும். இல்லையென்றால் அவர்களை முன்னே செல்லவிட்டு நாம் பொறுமையாக செல்லவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கனரக வாகனங்களின் பக்கவாட்டில் முந்தும்போது அதிக நேரம் எடுத்துக் கொள்ளக்கூடாது. கனரக வாகனத்தின் டிரைவர் எக்காரணத்தினாலோ உங்களுடைய லேனில் நுழைய வேண்டியிருந்தால், நீங்கள் பக்கவாட்டில் இருக்கும்போது திணறுவார். நாம் எளிதாக கியர்களைக் கூட்டியோ, குறைத்தோ வேகமெடுத்துச் சென்றுவிடலாம். ஆனால், கனரக வாகனங்களில் வேகத்தைக் குறைத்தால், பழைய வேகத்துக்கு வர அதிக நேரம் ஆகும். அதனால், முடிந்தவரை கனரக வாகனங்களை விரைவாக முந்திச் சென்றுவிட வேண்டும்.

4. இன்னொரு வாகனத்தை முந்த ஆரம்பித்துவிட்டு, பின்னர் வேகம் பத்தவில்லையே என்று கியரைக் குறைத்து ஓட்டக்கூடாது. கியரைக் குறைத்த பின்னர்தான், ஓவர்டேக் செய்யவே ஆரம்பிக்க வேண்டும்.

5. உங்கள் வாகனத்தின் டயர் அதிக தேய்மானம் அடைந்திருந்தால் மழையில் கார் ஓட்டுவதையே தவிர்க்கலாம்.

6. அளவுக்கு அதிகமான எடையை (பயணிகளும், பொருட்களும் சேர்த்து) காரில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்கலாம். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படிச் செல்லும்போது வளைவுகளில் சடர்ன் பிரேக் செய்யக்கூடாது. அதேபோல், எடை அதிகம் இருப்பதால், பிரேக் பிடிக்கும்போது வழக்கத்தைவிட சற்று தள்ளியே கார் நிற்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதற்கு ஏற்றார்போல், முன்கூட்டியே பிரேக் செய்து கொண்டுவர வேண்டும்.

7. நான்கு வழிச்சாலைகளில் தவறான லேனில் ஓட்டுவது இந்தியாவில் மிகச் சாதாரணம். அதுவும் இரவு நேரங்களில், தவறான லேனில் வரும் வாகனத்தின் ஹெட்லைட், அந்த வாகனம் நம்முடைய லேனில் இருந்து வருகிறதா, இல்லை டிவைடருக்கு அந்தப்பக்கம் இருக்கும் லேனில் இருந்து வருகிறதா என்று குழப்பமாக இருக்கும். கவனம் தேவை.

8. இரவு நேரங்களில், முன்னே வரும் வாகனத்தின் ஹெட்லைட் வெளிச்சத்தை நேருக்கு நேர் பார்க்கவே கூடாது. இது கண்ணையும் பாதிக்கும் என்பதோடு இல்லாமல், நம்மை அறியாமல் அந்த வாகனத்தின் மீது நேராக ஓட்டிக்கொண்டு இருப்போம். இதற்குக் காரணம் நாம் செய்யும் ஒரு அனிச்சைச் செயல்தான். கார் ஓட்டும்போது நம் கண்ணுடைய 'ப்ரைமரி' பார்வை எங்கு இருக்கிறதோ, நம்மை அறியாமல் அந்தப் பக்கம் நோக்கி, காரை ஓட்டுவோம். எப்போதும் ஹெட்லைட் வெளிச்சத்தைப் பார்க்காமல், ஹெட்லைட்டுக்கு அருகில் இருக்கும் சாலையில்தான் நம்முடைய 'ப்ரைமரி' பார்வை இருக்கவேண்டும். நம்முடைய 'Peripheral' பார்வைதான் ஹெட்லைட்டை உமிழ்ந்து கொண்டு வரும் அந்த வாகனத்தின்மேல் இருக்கவேண்டும்.

9. நெடுஞ்சாலையில் தொடர்ச்சியாக அதிக வேகங்களில் செல்லும்போது, உங்களுடைய வேகம், கனரக வாகனங்களைவிட கொஞ்சம்தான் அதிகமாக இருக்கவேண்டும். தமிழக நெடுஞ்சாலைகளில் தற்போது இருக்கும் டிராஃபிக்கைப் பார்க்கும்போது மணிக்கு 100 கிமீ என்பதே அதிகம்தான்.

10. சர்வீஸ் லேன்கள் இருக்கும் நெடுஞ்சாலைகளில் இன்னும் கவனமாக செல்லவேண்டும். நான் சொல்லப்போகும் இந்தக் காட்சியை நீங்கள் நிறையப் பார்த்திருக்கலாம். ஊருக்கு வெளியே இருக்கும் நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்குள் வருவதற்கு சர்வீஸ் லேன் தொடங்கும். சில டிரைவர்கள் இந்த சர்வீஸ் லேன் துவக்கத்தை சரியாக கவனிக்காமல் கடந்துவிடுவார்கள். சரியாக அந்த சர்வீஸ் லேன் என்ட்ரியைத் தாண்டியவுடன் பிரேக் போட்டு நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு, ரிவர்ஸ் எடுத்து அந்த சர்வீஸ் லேனுக்குள் நுழைய திட்டமிடுவார்கள். நினைத்துப்பாருங்கள். நட்ட நடு நான்குவழிச்சாலையில் நம்முடைய லேனில் ரீவர்ஸில் வந்துகொண்டிருக்கும் வாகனத்தை எதிர்பார்க்கவா முடியும்? எனவே, நகரங்களுக்கு வெளியே இருக்கும் பைபாஸ் நெடுஞ்சாலைகளில் கவனம் தேவை.

11. கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் நெடுஞ்சாலைகளில் மிகுந்த எச்சரிக்கையாக ஓட்டவேண்டும். தீடீர், தீடீரென்று டிராக்டரோ, குழந்தைகளோ, மனிதர்களோ சாலையைக் கடப்பார்கள். இவர்களையும் நம்மால் குற்றம் சொல்லமுடியாது. காலம் காலமாக அவர்கள் புழங்கிய பகுதிகளில் தீடீரென்று நான்குவழிச்சாலையைப் போட்டுவிட்டு சாலையைக் கடக்காதீர்கள் என்று சொன்னால் அவர்களுக்குக் கஷ்டமாகத்தானே இருக்கும். ஒரு மாட்டுவண்டி சாலையைக் கடக்கவேண்டும் என்றால் கூட அந்த நெடுஞ்சாலையில் அடுத்த எங்கு க்ராஸ் செய்யக்கூடிய இன்டர்செக்*ஷன் இருக்கிறதோ அங்கு சென்றுதான் கடந்தாக வேண்டும். உச்சி வெயிலில் மாட்டு வண்டியை இயக்குபவர் சாலையைக் கடக்க கிலோ மீட்டர் கணக்காக சுற்றிக்கொண்டா வந்து கொண்டிருப்பார். எனவே, திடீரென்று சாலையைக் கடக்கிறார்களே என்று அவர்கள் மீது கோபப்படாமல், அவர்களுடைய நிலைமையையும் கவனத்தில் கொண்டு கார் ஓட்டுங்கள்.

12. கனரக வாகன டிரைவர்களை எப்போதும் கடுப்பேற்றும்படி கார் ஓட்டவே கூடாது. சில சமயம், ஒரு கனரக வாகனத்தை, இன்னொரு கனரக வாகனம் ஓவர்டேக் செய்துகொண்டிருக்கும். சில கார்/ வேன் டிரைவர்கள் அவர்களுக்கு அருகில் சென்று ஹாரன் அடித்துக்கொண்டே இருப்பார்கள். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் கனரக் வாகன டிரைவர்களுக்கு ஒரே ஒருவழிதான். சற்று பிரேக் செய்து உங்களுக்கு வழிவிடுவது. ஆனால், கனரக வாகனங்கள் வேகம் குறைந்தவுடன் மீண்டும் பழைய வேகத்துக்கு வர அதிக நேரமாகும், டீசலும் விரையமாகும். எனவே அவர்கள் முடிந்தவரை வேகமாக ஓவர்டேக் செய்துவிட்டுத்தான் நமக்கு வழிவிடுவார்கள். அவர்களுடைய சிரமத்தைப் புரிந்துகொண்டுதான் நாம் கார் ஓட்டவேண்டும். அப்படியும். பொறுமையில்லாமல் சாலையின் இடதுபுறம் கடைசி லேனில் இருந்து கீழிறங்கி ஓவர்டேக் செய்யும் கார் டிரைவர்களையும் நாம் பார்க்கிறோம்.

13. இது கேட்க ஒருமாதிரி இருந்தாலும், உண்மையில் சிறப்பான உத்தி. சாலையில் உங்களைத்தவிர மற்ற யாருக்குமே சரியாக வாகனம் இயக்கத் தெரியாது என நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இப்படி நினைத்துக்கொள்வதால் அடுத்து என்ன நடக்கும்? முன்னே செல்லும் வாகனத்தின் டிரைவர் அடுத்து எந்தப் பக்கம் வளைப்பார்? வளைவுகளில் எதிர்ப்பக்கத்தில் இருந்து வாகனம் வருமா? என்றெல்லாம் 'எதிர்பார்த்து' ஓட்டுவீர்கள். இதனால், உங்களை அறியாமலே, பாதுகாப்பான டிரைவராக மாறுவீர்கள்!

சாலை விபத்தில்லாத தமிழகத்தை உருவாக்குவது நம் அனைவரது 'கை'களில்தான் இருக்கிறது..
18


நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான விளையாட்டுகளில் ஒன்று கண்ணாமூச்சி. நம்மில் கண்ணாமூச்சி விளையாடாதவர்கள் கண்டிப்பாக இருக்கமாட்டார்கள். இந்த விளையாட்டு நம் குழந்தைகள் விளையாடும்போது அவர்களுக்குள் ஒற்றுமை உணர்வு உருவாக முக்கிய காரணமாக அமைகிறது.

கண்ணாமூச்சி சிறுவர்களால் விளையாடப்படும் ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். சிலர் ஒளிந்து கொள்ள ஒருவர் தேடிச்சென்று அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். இது சிறுவர், சிறுமியர் மட்டுமல்லாமல் பெரியவர்கள் கூட விளையாடுவார்கள்.

எத்தனை பேர் விளையாடலாம்?

இரண்டிற்கும் மேற்பட்டோர்.

எப்படி விளையாடுவது?

முதலில் யார் ஒளிந்து கொள்ள வேண்டும்? யார் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும்? என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும்.

விளையாடுபவரின் கண்ணை மற்றொருவர் தன் இரண்டு கைகளால் பொத்திக்கொள்வார்கள்.

கண்ணாமூச்சி ரே.... ரே....
காதறுப்பான் ரே... ரே....
நல்ல முட்டையை தின்னுப்புட்டு
கெட்ட முட்டையை கொண்டு வா...!

அல்லது

கண்ணா... கண்ணா... மூச்சி
காட்டு தல மூச்சி....
நல்ல முட்டைய தின்னுட்டு...
ஊள முட்டைய கொண்டுவா....

என பாடிக்கொண்டே மூடியிருக்கும் கண்ணை திறந்து விடுவார்கள். அதற்குள் மற்றவர்கள் எல்லோரும் ஓடி ஒளிந்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்பதை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடிப்பதற்குள், அவர்கள் கண்ணைப் பொத்தியவரை ஓடி வந்து தொட்டுவிட வேண்டும். தேடுபவரிடம் அகப்படாமல் கண்ணைப் பொத்தியவரை தொட்டுவிட்டால் பழமாவார்கள். அப்படியில்லையென்றால் கண்ணை பொத்தியிருந்தவர் ஒளிந்து இருந்தவரை தொட்டுவிட்டால் அவர்கள் அவுட். இதில் யார் அவுட் ஆகிறார்களோ அவர்கள் கண்ணை பொத்திக்கொண்டு இவ்விளையாட்டை தொடர வேண்டும்.

தற்போது உள்ள கால சூழ்நிலையில் இதுபோன்ற விளையாட்டுகளை காண்பது அரிதாகி கொண்டு வருகிறது.

பயன்கள் :

•தேடிக் கண்டறியும் திறன் மேம்படும்.

•செவிப்புலன் கூர்மையாகிறது.

•காட்டிக் கொடுக்கக்கூடாது என்னும் பண்பு வளர்கிறது.

•தளர்நடைப் பருவத்தில் குழந்தைகளை தாய்மார் கண்ணாமூச்சி விளையாடச் செய்து நடை பழக்குவர்.

•நல்ல உடற்பயிற்சியும், மனத்தெளிவும் பிறக்கும்.
19


இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு முந்திய தலைமுறையினர் அம்பாசிடர் காரில் பயணிக்காதவர்களே இருக்க முடியாது ஒரு காலத்தில் இந்தியச் சாலைகளை ஆட்சி செய்தவை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் அம்பாஸடர் கார்கள். பல ஆண்டுகளாக வீதியெங்கும் நீக்கமற நிறைந்திருந்த இதுதான்
முதல் இந்திய கார். இதைத் தயாரித்தவர்கள் என்ற பெருமை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸை சேரும். பிரதமர் முதல் சாமான்ய மனிதன் வரை அனைவருமே பயன்படுத்தும் கார் என்றால், அது அம்பாஸடர் மட்டும்தான். ஆனால், இன்று இது அரசு அதிகாரிகளும், டிராவல்ஸ் ஆப்ரேட்டர்களும் மட்டுமே பயன்படுத்தும் காராக ஆகிவிட்டது.
உறுதியான கட்டுமானம், தாராளமான இடவசதி, எத்தனை பேர் அமர்ந்தாலும் ஈடு கொடுக்கும் இன்ஜின், எப்படிப்பட்ட சாலையாக இருந்தாலும் கவலைப்படாமல் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்த கார் அம்பாஸடர்.

இந்த காரை ரேஸுக்கும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா? இதன் சிறப்பம்சம் எது என்று கூறினால், குறைந்த பராமரிப்புச் செலவு, எங்கும் கிடைக்கும் உதிரி பாகங்கள், எந்த மெக்கானிக்காலும் சர்வீஸ் செய்ய முடிகிற சுலபமான மெக்கானிசம் என இதன் சிறப்புகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

இப்போது இருக்கிற அம்பாஸடர் காரின் தோற்றம், இதன் அடிப்படை மாடலில் இருந்து படிப்படியாக வளர்ந்து இந்தத் தோற்றத்தை எட்டி இருக்கிறது. இதன் பரிணாம வளர்ச்சி எப்படி?

1942
இங்கிலாந்தில் பிரபலமாக விற்பனையாகிக் கொண்டு இருந்த ‘மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்டு’ என்ற காரின் உதிரி பாகங்களை வரவழைத்து, இந்தியாவில் அதை அசெம்பிள் செய்து, விற்பனை செய்தது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்.

1954
மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்டு சீரிஸ் 2 மாடலின் அசெம்பிளி லைனையே விலைக்கு வாங்கி வந்து, மேற்கு வங்கத்தில் உள்ள உத்தர்புராவில் தொழிற்சாலையை நிறுவியது
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ். இங்குதான் முழுமையாக கார்களைத் தயாரித்தது.
இதில், மோரிஸ் ஆக்ஸ்போஃர்டு சீரிஸ் 2 மாடல் காரின் வடிவத்தில் சிறிது மாற்றங்கள் செய்து, ‘ஹிந்துஸ்தான் லேண்ட் மாஸ்டர்’ என்ற பெயரைச் சூட்டினர். இதுதான் முழுமையான முதல் இந்திய கார்.

1957
தயாரிப்பு துவங்கிய ஓர் ஆண்டிலேயே ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், லேண்ட் மாஸ்டர் மாடலை முழுமையாக இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி வடிவமைத்தது. இதில், வெளிப்புற வடிவம், ஹெட் லைட்களுக்கு கவுல், புதிய டேஷ் போர்டு, புதிய ஸ்டீயரிங் மற்றும் பின்பக்க டெயில் லைட்டுக்கு பறவையின் இறக்கை போன்ற வடிவத்தையும் கொடுத்தனர். இந்தப் புதிய காருக்குத்தான் ‘அம்பாஸடர்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

1963
காரின் முன் பக்க வடிவத்தை லேசாக மாற்றி, புதிய க்ரில் பொருத்தப்பட்டு, ‘அம்பாஸடர் மார்க் 2′ என்று புதிய மாடலை அறிமுகம் செய்தனர்.

1975
மீண்டும் முன் பக்க க்ரில் மட்டுமே மாற்றப்பட்டு, அம்பாஸடர் மார்க் 3 என்ற மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளிலேயே மீண்டும் முன்புற க்ரில் மட்டுமே மாற்றப்பட்டு, அம்பாஸடர் மார்க் 4 என்ற மாடல் அறிமுகமானது.

1990
நோவா என்ற மாடல் அறிமுகமானது. இதில் டிஸ்க் பிரேக் அறிமுகப்படுத்தப்பட்டது.

1993
ஜப்பான் இஸுஸூ நிறுவனத்துடன் இணைந்து புதிய பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை அம்பாஸடர் மற்றும் கான்டஸா கார்களுக்காகத் தயாரித்தனர். இதில் 5 ஸ்பீடு ஃப்ளோர் ஷிஃப்ட் கியர் பாக்ஸ், பக்கெட் சீட் ஆகியவை இந்தச் சமயத்தில்தான் அறிமுகமானது. இதன் 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், அப்போது இருந்த கார்களில் இதுதான் அதிக திறன் கொண்டதாக இருந்தது. இத்துடன் அறிமுகமான 2 லிட்டர் டீசல் இன்ஜின் சக்தி வாய்ந்தது என்றாலும், பெரிதாகப் பிரபலமடையவில்லை என்பதால் தயாரிப்பை நிறுத்தி விட்டனர்.

1995
சி.என்.ஜி, எல்.பி.ஜி கேஸில் ஓடக்கூடிய இன்ஜின்கள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வந்தன.

2003
அம்பாஸடர் கிராண்ட் என்ற புதிய கார் அறிமுகமானது. இதில், 137 மாற்றங்கள் செய்யப்பட்டது. இதில்தான் முதன்முதலாக அழகிய தோற்றம் கொண்ட பிளாஸ்டிக் பம்பர் பொருத்தப்பட்டது. மேலும், பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், லெதர் சீட், ஏ.ஸி என்று காலத்துக்கு ஏற்ப அம்பாஸடர் நவீனமானது.

2004
அவிகோ என்ற மாடல் அறிமுகமானது. இதில், பழைமையும் புதுமையும் கலந்த ஒரு கிளாஸிக் காரின் வடிவத்தைப் பெற்றது அம்பாஸடர். இதில், டேஷ் போர்டின் நடுவே இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், புது ஹெட் லைட், டெயில் லைட் மற்றும் பம்பர் டிசைன் இடம் பெற்றது. இதில் மிக முக்கியமாக பேனட்டின் வடிவம்… கார் தயாரிக்கத் துவங்கிய 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முற்றிலும் புதிய ஒரு பானெட் அம்பாஸடருக்குப் பொருத்தப்பட்டது.
அம்பாஸடரில் காரைத் தவிர ஸ்டேஷன் வேகன், லைட் லோட் வேகன் மற்றும் ஜீப் வடிவில் டிரக்கர் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்தில் இன்றளவும் கிளாஸிக் கார் என்ற அடைமொழியுடன் அம்பாஸடர் விற்பனை செய்யப்படுகின்றன.
20


கெட்டுப்போய்விடக் கூடாதென உணவுப்பொருள்களை ஃப்ரிட்ஜில் வைத்த காலம் மாறி, ஃப்ரிட்ஜில் வைத்ததாலேயே கெட்டுப்போகும் உணவுகளைப் பலரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் வைப்பதால் சில உணவுகளின் தன்மை மாறிப்போகும்.

ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாதது. வாழைப்பழம். ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் அதிகப்படியான குளிரும் இருளும் வாழைப்பழத்தின் சத்தைக் கெடுப்பதோடு, அழுகவும் செய்துவிடும். திறந்த, உலர்ந்த இடங்களில் வாழைப்பழத்தை வைத்திருப்பதே நல்லது.

காயாக இருக்கும் அவகேடோவை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. பழுத்த அல்லது ஏற்கெனவே வெட்டிய பழத்தை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.

ஃப்ரிட்ஜிலிருக்கும் ஈரப்பதம் வெங்காயத்தை மென்மையாக்கி, பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்திவிடும். அத்துடன் ஃப்ரிட்ஜிலிருக்கும் மற்ற உணவுப் பொருள்களிலும் இதன் வாசனை பரவிவிடும். எனவே வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைக்ககூடாது.

பூண்டை ஃப்ரிட்ஜில் வைத்தால் ரப்பர்போல மாறிவிடும். ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், இது சீக்கிரமே உலர்ந்துவிடும்.

உருளைக் கிழங்கு ஃப்ரிட்ஜில் வைத்தால், உருளைக் கிழங்கிலிருக்கும் ஸ்டார்ச், விரைவில் சர்க்கரைச்சத்தாக மாறி, சுவையைக் கெடுத்துவிடும்.

காபிக்கொட்டை, காபித்தூள் இரண்டையும் ஃப்ரிட்ஜில் வைத்தால் அவற்றின் சுவை மாறக்கூடும். மேலும், ஃப்ரிட்ஜிலிருக்கும் மற்ற பொருள்களின் வாசனையை அவை உட்கிரகித்துக்கொள்ளும்.

தேனை ப்ரிட்ஜில் வைத்தால், படிகங்களாக உறைந்துவிடும். எனவே, தேன் பாட்டிலை இறுக்கமாக மூடி அறை வெப்பநிலையில் வைத்திருப்பதே சிறந்தது.
Pages: 1 [2] 3 4 ... 10