Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on May 20, 2026, 05:47:15 AM »
12
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-008

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

'சொல்லாமல் போன காதல்/அன்பு'

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

****************************************************************

IMPORTANT RULE (EFFECTIVE THIS WEEK)

🟢 This week, the first 6 posts received before the cut-off time will be selected for FM Program.

🟠 participants whose posts were selected in the previous week will not be selected again in the immediate following week for FM. This is to ensure a fair opportunity for everyone.

🔵However, this rule does not restrict anyone from posting memories or content. We strongly encourage all users to continue sharing your memories and posts every week before the cut-off time, as your participation is always valued and appreciated.
13
கனவொன்று கண்டேன் !!
பள்ளி செல்லும் எனக்கு
என் தாய் உணவு ஊட்டினாள் !! அலங்காரமாய் நான் உடையணிந்து
வாசல் வரை வந்து நின்ற
பேரூந்தில் ஏறி பள்ளி சென்றேன் !!

கனவொன்று கண்டேன் !!
என் அக்கா அவள் மதிவண்டியில்
என்னை அமர வைத்து
ஊர்த்தெருக்களில் வலம் வந்தாள் !!
என் தங்கை என் கரம் பற்றி
நடக்க பயின்றாள் !!

கனவொன்று கண்டேன் !!
பனி முடிந்து திரும்பி வந்த
என் தந்தை எனக்காக வாங்கி வந்த தின்பண்டங்களை அவர் மடியில்
அமர வைத்து ஊட்டி விட்டார் !!
நான் சோர்வாக இருந்த போதெல்லாம் எனக்கு தான் இருக்கிறேன் என்ற
பலத்தை கொடுத்தார் !!

கனவொன்று கண்டேன் !!
விடுமுறை நாட்களில் நண்பர்கள்
என் வீடேறி வந்து மைதானத்திற்கு விளையாட என்னை அழைத்து சென்றனர் !! நீர் நிரம்பிய குளத்தில் எனக்கு
நீந்த சொல்லி கொடுத்தார்கள் !!

கனவொன்று கண்டேன் !!
என்னை சுற்றி என் குடும்பமும் என் நண்பர்களும் எப்பொழுதும் வலம் வந்தனர் !! காண்பவர்களுக்கு அலங்காரமாய் உடையனிந்து மிடுக்காய்
நான் அவர்களை ஈர்க்க செய்தேன் !!

தூக்கம் கலைந்து எழுந்தேன் !!
ஆதவற்றோர் இல்லத்தில் ஓரமாய்
நான் படுத்து இருந்தேன் !!
கிழிந்த என் போர்வையால் குளிர் தாங்காமல் எழுந்திருந்தேன் !!
தூக்கம் கலைந்து எழுந்தேன்!!

கிழிந்த என் சட்டையணிந்து
மெலிந்த தேகமாய் இளைத்திருந்தேன் !! தூக்கம் கலைந்து எழுந்தேன் !!
தாயும் இன்றி தந்தையுமின்றி ஆதரவற்ற ஒருவனாய் இந்த விடுதியில்
என்னை இணைத்து கொண்டேன் !!

தூக்கம் கலைந்து எழுந்தேன் !!
மீண்டும் தூங்கி கனவால் வரும்
அந்த சிறு சந்தோஷத்தை எண்ணி
ஏங்கி இருந்தேன் !!
தூக்கம் கலைந்து எழுந்தேன் !!மற்றவர்களுக்கு நிதர்சனம் உருவமாய் கனவுகள் நிழலாய் இருக்க !!
எனக்கோ கனவு என் உருவுமாய் மாறி நிதர்சனம் என் நிழலாய் மாற பிராத்தனையுடன் நான் !! 💔🚶‍♂️
14
கவிதைகள் / Re: Poems Audio & video
« Last post by Yazhini on May 19, 2026, 07:37:24 PM »
உரையாடல் ...

15

சாபமா? இல்லை வரமா ?

அன்று ஓர் நாள்.....
கண்விழித்து பார்த்தேன்..
சூரிய ஒளி, கண்ணை பறித்தது..
மனம் பதறி ...எழுந்தேன்...,
ஐயோ! வெகு நேரம் ஆகிவிட்டதே..
எனைவிட்டு .. எல்லோரும்
விரைந்து.. சென்றிருப்பார்களே..

பல இடங்களில் கிழிந்து.. தைத்த..
ஓட்டை இல்லா என் கைப்பையை
எடுத்துக்கொண்டு..ஓட்டமும்
நடையுமாக ஓடினேன்.. .

அதிகாலையில் தானே..
எல்லா வீட்டின் குப்பைகளும்
குப்பைமேட்டுக்கு வரும்..
நான் தாமதமாக போனால்..
தூக்கியெறியப்பட்ட புத்தகங்கள்..
எழுதாத வெள்ளை காகிதங்களை   
எல்லாம் எரித்து விடுவார்களே..

அப்படி மட்டும் நடந்தால்..
என் படிப்பும்.. என் கனவுகளும்
கலைந்து சுக்குசுக்காக.. சிதறி விடுமோ....
என்ற பயம் கவ்விய முகத்துடனே ..
அதிவேகமாக ஓடினேன்..
மலைபோல் கொட்டி கிடந்த
குப்பைக்கிடங்கு நோக்கி..
 
இன்று....
"என்னங்க.. எழுந்திரிங்க..
அலுவலகம் போகும் நேரமாச்சு"..
அன்புடனே முகம் மலர...
அழைத்தாள். என் மனைவி...
ஆம், இன்றோ நான் ஒரு..
பொறுப்பான வங்கிஅதிகாரி..
கடவுளின் அருளாலும்..
கடின உழைப்பாலும்..
கிடைத்த பலன்.. இது....
என் கனவுகளை சாதித்த.
பெருமையுடன்.. கிளம்பினேன்..
மனம் நிறைந்த மகிழ்வுடனே..

காரின் வெளியே யாரோ.. எனை கைநீட்டி
பேசுவதுபோல்  ஓர் உணர்வு....
நிதானித்து அவர்களை கவனித்தேன்...
"அதோ போறாரே ஒருத்தர்..
அவர்தான் ஒரு காலத்தில்.. இங்கே..
குப்பை பொறுக்கிட்டு இருந்தார்..
இன்று காரில் போகிறார்...
இது அவரின் விடாமுயற்சியும்
கடின உழைப்பின் பலன்.. .
நீயும் அதே போல.. நல்ல படிச்சு..
நல்ல நிலைமைக்கு வரணும்..
புரிஞ்சுதா மகனே...?" என்றாள் அவள்...

அந்த சிறுவனுக்கு நான் ஓர் நல்ல
உதாரணமாக இருந்தாலும்.. என்
மனம் கனத்தது... வலித்தது... என்னை
அறியாமல் கண்கள் வியர்த்தது..

அழுக்கடைந்த.. உடைகளையும்.. கிழிந்த பையுடன்..
குப்பைகளை.. சேகரிக்கும் என் அடையாளங்களை
மாற்றிவிட்டேன் என்ற மகிழ்ச்சியில் இருந்த எனக்கு...
இது சாபமா? இல்லை வரமா ?....

16
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on May 19, 2026, 06:07:44 AM »
17
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on May 19, 2026, 04:59:01 AM »
18
வேட்கை 🔥 🔥 🔥

சுற்றியிருக்கும்  கற்குவியலில் எனது
கனவுகளும் ஒளிந்து கிடக்க
என்னை தேடும் படலம்
தொடங்குகிறது புத்தக பையுடன்

முன்னோக்கி செல்ல தான்
எத்தனை தடைக்கற்கள் இடர்பாடுகள்...
தடைக்கற்களை அடுக்கிய படியே
முன்னேறுவேன் படிப்படியாக

கிழிந்து கிடப்பதும் தூசி படிந்து
காணப்படுவதும் என் வெளித்தோற்றமே
எதிர்கால சிந்தனையால் செதுக்கப்படுகிறது
பிறரறியா என் அகத்தோற்றம்...

சோர்ந்து விதியே என்று
கிடப்பதற்கல்ல இவ்வாழ்க்கை...
அறிவை ஆயுதமாக மாற்றி
மாற்றத்தைக் காண

தாங்கிக்கொள்ளும் ஒவ்வொரு அடியும்
என்னை உடைப்பதற்கல்ல மாறாக
என்னை செதுக்கும் உளியாக
வலியால் வலிமையாக மாற்ற

இன்று நான் மட்டும்
காணக்கூடிய வலிமையான என்னை
உலகறிய செய்ய ஆயத்தமானேன்
கல்வி என்னும் ஆயுதத்தால்...

ஒரு வண்ணத்துப்பூசியின் உருமாற்றம்
சிலையாகும் ஒரு கல்லில் உருமாற்றம்
சிதைந்த எனது உருமாற்றம்
வெற்றி வேட்கையால் நிகழும் உருமாற்றம்
19
நம்பிக்கை கண்ணாடி

காலம் தீட்டிய கருப்பு ஓவியம் - இவன்
கந்தை சுமக்கும் வறுமை காவியம்!
கிழிந்த சட்டையின் துவாரங்கள் வழியே
கீறிப் பார்க்கிறது... ஏழ்மையின் வலி!

குப்பை மேட்டில் மலர்ந்த மொட்டு - இவன்
கையில் சுமப்பதோ கந்தல் மூட்டை!
தோள் வலித்தாலும் தூக்கிச் செல்கிறான்
தொலைந்து போன தன் வசந்த காலத்தை!

வெறித்த பார்வை... முன்னொரு கண்ணாடி!
அதிர்ந்து நின்றான் அழுக்குச் சிறுவன்!
பிம்பம் அங்கே புதுக்கதை சொல்ல...
வியந்து நின்றது அவனது இதயம்!

அழுக்கு படிந்த மேனி மறைந்து
அழகிய பள்ளிச் சீருடை மின்ன!
கந்தல் மூட்டை மறைந்து அங்கே
கனமான புத்தகப் பை வந்து அமர!

கண்ணாடியில் தெரிவது வெறும் நிழலா?
இல்லை... சிதைந்து கிடக்கும் சிற்பத்தின் நிஜம்!
ஏழ்மை எனும் சிறையை உடைத்து - இவன்
எழுந்து வரத் துடிக்கும் அறிவுப் பிரவாகம்!

"ஓவியம் உயிராகிறது" - ஆம்!
இந்தக் காகிதச் சித்திரம் உயிர் பெறுகிறது!
விழி ஓரம் தேங்கிய கண்ணீர்த் துளி
வெற்றித் தாகமாய் அங்கே மாறுகிறது!

"நானும் மனிதன் தானா?" என்ற கேள்விக்கு
கண்ணாடி சொன்னது... "நீ ஒரு சரித்திரம்!"
சாம்பலில் பிறக்கும் ஒரு பீனிக்ஸ் பறவையாய்
சரித்திரப் பக்கத்தில் உன் பெயர் பதியும்!

வறுமை என்பது ஒரு சாபமல்ல
கல்வி எனும் உயிர்நீர் ஊற்றினால்,
நிழலாய் இருக்கும் அந்தச் சிறுவன் - ஒரு
நிச்சயமான நாளைய சரித்திரமாவான்!

விதியே... நீ கரிக்கோட்டால் எழுதினாலும்
அவன் அறிவெனும் வைரம் கொண்டு உன்னை வெல்வான்!
அவனது கனவு நிச்சயம் நிஜமாகும் - நாளை
இந்த உலகையே ஆளப்போகும் ஒரு பேரொளியாக!

20


விதியை ஒருநாள் வெல்வேன் ...

விதியே... 
என்னை பார்த்து சிரிக்கிறியா..

நீ ஏழை, உன்னால முடியும் என்று
நெற்றியில் எழுதி வச்சிருக்கியா...

 
இந்த  School boy சொல்றேன், 
விதியை ஒருநாள் என் மதியால் வெல்வேன்..
 
இன்றைக்கு
 என் வயிறு பட்டினி 
அம்மாவிடம்  கேட்டேன் பசி ரொம்பமா னு..

அம்மா பழைய சோற்றை தண்ணி ஊத்தி இந்தா நீ சாப்பிடு தங்கம். நான் சாப்பிட்டேன் என்று பொய் சொல்லி என்னை சாப்பிட வைக்கும் அம்மா..
 
தன் வயிற்றை பட்னி போட்டு என் வயிற்றை வளர்த்த என் தெய்வம் என் அம்மா..

வீட்டு கூரை மழை பெய்தால் ஒழுகும்..

 நோட்டு புத்தகம்
 நனையும்
பரீட்சைக்கு போனால் கூட  பேனாவில் மை இல்லை..

 தினந்தோறும் காலையில் எழுந்து புறப்பட்டு என் வீட்டில் உள்ள சிறு கீரளுடன் இருக்கும் கண்ணாடியை உன்னை பார்ப்பேன்..

 என் கஷ்டத்தை இறைவனிடம் சொன்னால்
புரிய போவதில்லை..

கண்ணாடி உன் முன்னாடி நின்று பேசுகிறேன்..
எப்போ என் வாழ்க்கை மாறும் என்று தெரியாது..
ஆனால் கண்டிப்பாக மாறும்..
இன்று என் நிஜ வாழ்க்கையில்  நான் ஏழை தான்..
கண்ணாடி உன்னிடம் பேசும் போது எனக்குள் இருக்கிற  மண சுமை குறைகிறது..
 இப்போ உடுத்தி இருக்கும். இந்த ஆடை கிழிந்தள் தான்.ஆனால்
கண்ணாடி உன்னை பார்க்கும் போது மட்டும் மனதில் ஒரு புது உணர்வு..


நல்ல உடை அணிந்து ஒரு கம்பீரமான தோரணையில் school ku செல்வது போல் ஓர் ஆனந்தம்..

நல்லா படித்து.. பெரிய அதிகாரியா
வருவேன் என்று  என்னும் போது மிக்க மகிழ்ச்சி..
 திடிரென்று என்னை பார்க்கும் போது
இதுதான் உன் விதி
என்று என்று என் மனசாட்சி
 சிரிச்சுக்கிட்டே இருக்கிறான்..

இருக்கட்டும்... விதியை ஒருநாள் வெல்வேன். 

டீச்சர் அடிக்கிறாங்க  ஏன்டா மார்க் கம்மியா எடுத்திருக்க??
நான் என்ன சொல்ல முடியும்.. என் வீட்டில் light வசதி இல்லை என்று..
அப்படி சொன்னால் சக மாணவர்கள் அனைவரும் சேர்ந்து சிரிப்பார்கள்

ராத்திரி கரண்ட் இல்லாம படிக்க முடியலனா..
 
இல்லை பசி.
காத அடைக்குதுனா??
 
சொன்னா... காரணம் சொல்லாத னு 
இன்னும் ரெண்டு அடி சேர்த்து விழும்..

ஆனா அந்த அடி ஒவ்வொண்ணும் 
என் முதுகில் விழவில்லை..
என் மனதில் பதிந்தது..

ஒவ்வொரு அடிக்கும் சத்தியம் பண்றேன்: 
விதியை ஒருநாள் வெல்வேன். 
 
வழியெல்லாம் அழுதுட்டே வந்தேன்.
வானத்த பாத்து கத்தினேன்..

ஏன் டா எனக்கு மட்டும் இப்படி  நிலைமை என்று வானத்தை பார்த்து கேட்டேன்..

வானம்::
 பதில் சொல்லவில்லை
ஆனால் என் மனசு சொல்லுச்சு..
அழு... இன்னைக்கு அழு..
நாளைக்கு உலகம் உலகம் உன்னை பார்த்து வியந்து போகணும்..

ஆனால் ஒன்று மட்டும் இல்லை  பயம்..

ஏழைக்கு பயம் மட்டும் இருக்க கூடாது..

ஏன் என்றால் எனக்கு தெரியும்
விதி என்ன பின்னாடி இழுத்தா 
நான் முன்னாடி பத்து அடி போவேன் என்று..

அதுவரைக்கும் விழுவேன். எழுவேன்.
தோற்ப்பேன். ஜெயிப்பேன். அழுவேன். சிரிப்பேன்...

கேட்டுக்கோ விதியே, 
நீ பெரிய ஆளா இருக்கலாம், 
ஆனால் இந்த School boy
உன்னை விட பிடிவாதக்காரன். 
நீ என்ன கீழ இழுத்தாலும் 
நான் மேல மேல போவேன். 
நீ என்னை அழ வச்சாலும் 
நான் சிரிச்சுக்கிட்டே ஜெயிப்பேன். 

இது வெறும் வார்த்தை அல்ல
என் வேர்வை துளினால் எழுதின வாக்கியம்..

ஒரு நாள் என் வாழ்க்கை மாறும் அப்பொழுது நான் மிக பெரிய தொழில் அதிபரா இருப்பேன்..

அப்போ வரும் கண்ணீர் கஷ்டத்தில் வரும் கண்ணீர் அல்ல..
ஆனந்த கண்ணீர்..

உண்மையா உழைதால் உலகமே  வியர்ந்து பார்க்கும்..

அதுவரைக்கும் தூக்கம் இல்லை சோம்பல் இல்லை..

விதியே, உனக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்..
 நீ பேனாவால எழுதுன விதி..
 நான் என் வேர்வையால் எழுதின வரலாறு..
என் வேர்வை ஒவ்வொரு சொட்டும் சத்தியம் பண்ணும்..
 நான் தோற்க மாட்டேன்.
உழைப்பாள் உயர் வேன் என்று..

கனவு காண்பது கண்களின் வேலை...
அதை நினைவாக்குவது நெஞ்சத்தின் துணிச்சல்...

வானம் வசப்பட பறவைகளுக்கு சிறகுகள் மட்டும் போதாது... துணிச்சலும் வேணும்..

கடின உழைப்பு இருந்தால்...
நாளை உலகம் சொல்லும்..
அவன் சாதனையாளன் என்று...

வெற்றி பெற திறமை மட்டும் போதாது..
தோல்வியை தாங்கும் மண தைரியமும் வேண்டும்...

 விதியே ::
 உழைப்பால் வெல்வேன். மதியால் வெல்வேன். வென்றே தீருவேன்...

       TQ
Priyamudan
School boy
Pages: 1 [2] 3 4 ... 10