11
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-003 (பள்ளிவிடுமுறையும் பாட்டி வீடும்)
« Last post by Oonjal on February 20, 2026, 02:00:14 PM »பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் அம்மா சீக்கிரம் ரெடியாகி வா பஸ்க்கு நேரமாகுது என்று சொல்லவும் நானும் சந்தோசமாக ரெடியாகி வந்தேன். பஸ்சில் ஏறினாலே ஜன்னலோர சீட்டில் இருந்து வெளியே வேடிக்கை பார்ப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதுவும் பாட்டி வீட்டுக்கு போக போறேன் என்றால் நேரம் போவதே தெரியாமல் வேடிக்கை பார்ப்பேன்.
மரங்களுடன் காத்தாடியும் பின்னால் ஓடி போறதை பார்க்க கண் கொள்ளா காட்சியாய் இருக்கும்.அம்மா அடுத்து இறங்கனும் என்று சொல்லும் போது தான் அதற்குள் வந்து விட்டோமா என்று எண்ணி கொண்டு இறங்கினேன். அடுத்து டவுண் பஸ்சில் கொஞ்ச நேர பயணம். இதோ இறங்கி விட்டோம்.பஸ் stand ல் மாமா காத்திருந்தார் அவரை பார்த்தவுடன் மாமா..... என்று கத்தி கொண்டு ஓடினேன் என்னை தூக்கி அணைத்து முத்தமிட்டு கொஞ்சினார்.
பாட்டியும் தாத்தாவும் உன்னை பார்க்க ஆசையாய் காத்திருக்காங்க வாங்க போகலாம் என்று எங்களை அழைத்து சென்றார்.சிறிது தூரம் நடந்ததும் பாட்டி வீடு கண்ணுக்கு தெரிய நான் ஓட்டம் எடுத்தேன்.பாட்டி தாத்தா என்று கத்தி கொண்டே ஓடி போய் கட்டி அணைத்தேன்.வாடி ராசாத்தி என்று என்னை கொஞ்சினர்.அம்மா முதல்ல சாப்பாடு குடுங்க என்று மாமா சொல்ல பாட்டி என்னையும் அம்மாவையும் சாப்பிட அழைத்து சென்றார். எல்லோரும் சேர்ந்து சாப்பிட பாட்டி எனக்கு ஊட்டி விட்டார்.வெகு நேரம் அம்மாவும் பாட்டியும் கதை பேச நான் மாமா கூட விளையாடி கொண்டிருந்தேன்.
நேரமாச்சி தூங்க போங்க காலையில் பேசலாம் என்று பாட்டி சொல்லவும் தூங்க போனோம்.பாட்டி காலையில் சாப்பிட எனக்கு பிடித்த புட்டு பயிறு அப்பளம் ஊட்டி விட்டார்.சாப்பிட்டதும் தாத்தா கூட தோட்டத்துக்கு போனேன்.அங்கே மா மரங்களில் மாங்காய் கொத்து கொத்தாக தொங்கி கொண்டிருந்தது. தாத்தாவிடம் எனக்கு மாங்காய் வேண்டுமென சொல்ல கிளிமூக்கு மாங்காய் பறித்து கழுவி என்னிடம் நீட்டினார் .நான் அப்படியே கடித்து சாப்பிட்டு கொண்டே நடந்தேன்.கொய்யா, சக்கைபழம் முந்திரிபழம் எல்லாம் காய்த்து தொங்கி கொண்டிருந்தது.தாத்தாவிடம் எனக்கு எல்லா பழங்களும் வேண்டும் என்று கேட்டேன்.உனக்கு இல்லாத பழமா என்று கைநிறைய கொய்யாப்பழம் பறித்து தந்தார்.பழுத்த சக்கைபழம் வீட்டில் இருக்கு பாட்டி வெட்டி தருவா என்று சொன்னார் .
கை எட்டும் தூரத்தில் இருந்த தென்னை மரத்தில் இளநீர் வெட்டி கொடுத்தார் .வெயில் ஏறவும் வீட்டுக்கு திரும்பி வந்தோம்.பாட்டி மதிய சமையல் தயார் செய்து கொண்டிருந்தார். என்ன சமையல் என்று பாட்டியிடம் கேட்டேன்.நாட்டு கோழி அடிச்சி கறி வைக்கிறேன் என்று சொல்லும் போதே ஈரல் எனக்கு எனக்கு என்று குதித்தேன்.வாழை இலையில் சாப்பாடு பரிமாறி ஆசையாய் ஊட்டி விட்டார் பாட்டி.பாட்டி கைமணம் அவ்வளவு ருசியாக இருந்தது.
சாயங்காலம் பாட்டி சக்கையை வெட்டி உரிச்சி தர தர தேனாக இனித்த சக்கையை ருசித்து சாப்பிட்டேன். அப்போது மாமா இளநீர் குலையும் நொங்கு குலையும் கொண்டு வந்தார்.எல்லாம் உனக்கு தான் நல்லா சாப்பிடு செல்லம் சொன்னார். எனக்கு பிடித்த அனைத்தும் பார்த்து பார்த்து சமைத்து கொடுத்தார் பாட்டி. தாத்தா கூட தோப்புக்கு போறதும் நல்லா சாப்பிடவும் என்று பள்ளி விடுமுறை முடியும் வரை சந்தோசமாய் சுற்றி திரிந்தேன்.விடுமுறை முடிந்து வீட்டுக்கு கிளம்பும் போது அடுத்த விடுமுறைக்கும் வரணும் ராசாத்தி என்று சொல்லி வழி அனுப்பி வைத்தனர் பாட்டி தாத்தா. எங்களை கொண்டு விட மாமா வந்தார்.எங்களோடு மா ,சக்கை ,கொய்யா நொங்கு எல்லாம் பயணமாகி எங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தது.விடுமுறை என்றாலே பாட்டி வீடும் அங்கே கிடைக்கும் கவனிப்பும் மறக்க முடியாத நினைவுகள்.
மரங்களுடன் காத்தாடியும் பின்னால் ஓடி போறதை பார்க்க கண் கொள்ளா காட்சியாய் இருக்கும்.அம்மா அடுத்து இறங்கனும் என்று சொல்லும் போது தான் அதற்குள் வந்து விட்டோமா என்று எண்ணி கொண்டு இறங்கினேன். அடுத்து டவுண் பஸ்சில் கொஞ்ச நேர பயணம். இதோ இறங்கி விட்டோம்.பஸ் stand ல் மாமா காத்திருந்தார் அவரை பார்த்தவுடன் மாமா..... என்று கத்தி கொண்டு ஓடினேன் என்னை தூக்கி அணைத்து முத்தமிட்டு கொஞ்சினார்.
பாட்டியும் தாத்தாவும் உன்னை பார்க்க ஆசையாய் காத்திருக்காங்க வாங்க போகலாம் என்று எங்களை அழைத்து சென்றார்.சிறிது தூரம் நடந்ததும் பாட்டி வீடு கண்ணுக்கு தெரிய நான் ஓட்டம் எடுத்தேன்.பாட்டி தாத்தா என்று கத்தி கொண்டே ஓடி போய் கட்டி அணைத்தேன்.வாடி ராசாத்தி என்று என்னை கொஞ்சினர்.அம்மா முதல்ல சாப்பாடு குடுங்க என்று மாமா சொல்ல பாட்டி என்னையும் அம்மாவையும் சாப்பிட அழைத்து சென்றார். எல்லோரும் சேர்ந்து சாப்பிட பாட்டி எனக்கு ஊட்டி விட்டார்.வெகு நேரம் அம்மாவும் பாட்டியும் கதை பேச நான் மாமா கூட விளையாடி கொண்டிருந்தேன்.
நேரமாச்சி தூங்க போங்க காலையில் பேசலாம் என்று பாட்டி சொல்லவும் தூங்க போனோம்.பாட்டி காலையில் சாப்பிட எனக்கு பிடித்த புட்டு பயிறு அப்பளம் ஊட்டி விட்டார்.சாப்பிட்டதும் தாத்தா கூட தோட்டத்துக்கு போனேன்.அங்கே மா மரங்களில் மாங்காய் கொத்து கொத்தாக தொங்கி கொண்டிருந்தது. தாத்தாவிடம் எனக்கு மாங்காய் வேண்டுமென சொல்ல கிளிமூக்கு மாங்காய் பறித்து கழுவி என்னிடம் நீட்டினார் .நான் அப்படியே கடித்து சாப்பிட்டு கொண்டே நடந்தேன்.கொய்யா, சக்கைபழம் முந்திரிபழம் எல்லாம் காய்த்து தொங்கி கொண்டிருந்தது.தாத்தாவிடம் எனக்கு எல்லா பழங்களும் வேண்டும் என்று கேட்டேன்.உனக்கு இல்லாத பழமா என்று கைநிறைய கொய்யாப்பழம் பறித்து தந்தார்.பழுத்த சக்கைபழம் வீட்டில் இருக்கு பாட்டி வெட்டி தருவா என்று சொன்னார் .
கை எட்டும் தூரத்தில் இருந்த தென்னை மரத்தில் இளநீர் வெட்டி கொடுத்தார் .வெயில் ஏறவும் வீட்டுக்கு திரும்பி வந்தோம்.பாட்டி மதிய சமையல் தயார் செய்து கொண்டிருந்தார். என்ன சமையல் என்று பாட்டியிடம் கேட்டேன்.நாட்டு கோழி அடிச்சி கறி வைக்கிறேன் என்று சொல்லும் போதே ஈரல் எனக்கு எனக்கு என்று குதித்தேன்.வாழை இலையில் சாப்பாடு பரிமாறி ஆசையாய் ஊட்டி விட்டார் பாட்டி.பாட்டி கைமணம் அவ்வளவு ருசியாக இருந்தது.
சாயங்காலம் பாட்டி சக்கையை வெட்டி உரிச்சி தர தர தேனாக இனித்த சக்கையை ருசித்து சாப்பிட்டேன். அப்போது மாமா இளநீர் குலையும் நொங்கு குலையும் கொண்டு வந்தார்.எல்லாம் உனக்கு தான் நல்லா சாப்பிடு செல்லம் சொன்னார். எனக்கு பிடித்த அனைத்தும் பார்த்து பார்த்து சமைத்து கொடுத்தார் பாட்டி. தாத்தா கூட தோப்புக்கு போறதும் நல்லா சாப்பிடவும் என்று பள்ளி விடுமுறை முடியும் வரை சந்தோசமாய் சுற்றி திரிந்தேன்.விடுமுறை முடிந்து வீட்டுக்கு கிளம்பும் போது அடுத்த விடுமுறைக்கும் வரணும் ராசாத்தி என்று சொல்லி வழி அனுப்பி வைத்தனர் பாட்டி தாத்தா. எங்களை கொண்டு விட மாமா வந்தார்.எங்களோடு மா ,சக்கை ,கொய்யா நொங்கு எல்லாம் பயணமாகி எங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தது.விடுமுறை என்றாலே பாட்டி வீடும் அங்கே கிடைக்கும் கவனிப்பும் மறக்க முடியாத நினைவுகள்.

Recent Posts



