Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 408

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


12
கவிதைகள் / Re: நட்பு.. ( Paadithathil Piddithathu)
« Last post by JsB on July 05, 2026, 07:24:13 PM »
நட்பின் பல முகங்களை சில வரிகளில் அழகாக சொல்லிவிட்டீர்கள். எல்லா நட்பும் நிலைப்பதில்லை... ஆனால் உயிர் நட்பு மட்டும் காலத்தையும் சோதனைகளையும் தாண்டி நிலைத்திருக்கும். அருமையான பதிவு.
13
கவிதைகள் / Re: அழியாத நினைவுகள் !
« Last post by JsB on July 05, 2026, 07:22:15 PM »
சில எழுத்துகள் படித்து முடிந்துவிடும்... சில எழுத்துகள் மனதில் வாழத் தொடங்கும். உங்கள் வரிகள் இரண்டாவது வகை. உறவுகளின் அழகையும், பிரிவின் வலியையும், நினைவுகளின் நிலைத்த தன்மையையும் மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். மனதை நெகிழ வைத்த பதிவு. நன்றி joker.
14
கவிதைகள் / Re: தேடல்!!
« Last post by JsB on July 05, 2026, 07:19:48 PM »
வாழ்க்கையின் ஓட்டத்தை சில வரிகளில் அழகாகச் சொல்லிவிட்டீர்கள். இறுதியில் அனைவரும் தேடுவது மன அமைதிதான் என்பதே மறுக்க முடியாத உண்மை. அருமையான பதிவு.
15
கவிதைகள் / Re: பிரியாவிடை
« Last post by JsB on July 05, 2026, 07:17:53 PM »
நேசித்தவரின் பிரிவை விட, அவரிடம் சொல்ல முடியாத வார்த்தைகள்தான் அதிகம் வலிக்கும். அந்த உணர்வை அழகாக எழுதியிருக்கிறீர்கள். மனதைத் தொட்ட பதிவு.
16
கவிதைகள் / Re: யாரறிவாரோ???
« Last post by JsB on July 05, 2026, 07:16:13 PM »
வெளியே இரும்பு கவசம் இருந்தாலும், உள்ளே மெழுகு மனம் இருப்பதை உங்கள் வரிகள் உணர வைத்தது. வலியை வார்த்தைகளாக வடித்த விதம் மனதை தொட்டது. அருமையான பதிவு.
17
கவிதைகள் / Re: மெய்நிகர் நட்பு
« Last post by JsB on July 05, 2026, 07:14:45 PM »
உண்மை இருக்கும் இடத்தில் தான் நட்பு நிலைக்கும்.
உங்கள் வரிகள் சிந்திக்க வைத்தது. அருமையான பதிவு, Luminous.
18
சில பிரிவுகள்தான் ஒரு பிணைப்பின் ஆழத்தை உணர வைக்கின்றன.
உங்கள் எழுத்தில் அந்த உணர்வு முழுவதும் உயிரோடு இருந்தது.
அருமை, யாழினி sister ! ❤️
19
சில எழுத்துகள் வாசிக்கப்படுவதற்காக அல்ல... உணரப்படுவதற்காக.
உங்கள் வரிகளில் தனிமையும், நினைவுகளும், சொல்லப்படாத வலிகளும் உயிர் பெற்று நிற்கின்றன.
வாசித்து முடித்த பிறகும் மனதில் நீண்ட நேரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. அருமையான எழுத்து, Joker.
20
கவிதைகள் / Re: ஆணவப் படுகொலை
« Last post by JsB on July 05, 2026, 07:09:02 PM »
சாதி உயிரை விட உயர்ந்ததல்ல...
மனிதநேயம் தான் உயர்ந்தது.
அன்பை கொன்றால் வெற்றி இல்லை,
மனிதத்தை இழந்த தோல்விதான்.
ஆணவப் படுகொலைகள் முற்றிலும் ஒழியட்டும்.
Pages: 1 [2] 3 4 ... 10