19
« Last post by VenMaThI on Today at 09:57:20 AM »
காலையில கண் முழிச்சதுமே
அம்மாவோட கூவல்
"இஸ்கூலுக்கு லேட் ஆயிடும்
சீக்கிரம் எந்திரிடா"...
எழுந்து கெளம்பி வீட்ட விட்டு வெளிய வரப்ப
"மதியதுக்கு சோறு கட்டி கொடுத்திருக்கேன்
மிச்சம் வைக்காம சாப்பிடனும்"....
பல வருஷம் கேட்டு கேட்டு சலிச்சுப்போன அதே வாக்கியம்..
காலேஜ்க்கு போனப்பவும் மாறல
வேலைக்கு போனப்பவும் மாறல
ஒரு மெஷின் மாதிரி வாழ்க்கை
எப்போடா இதெல்லாம் மாறும்ன்னு மனசுல ஒரு ஏக்கம்
இந்த ஆண்டவன் உலகத்த எதுக்கு படைச்சானோ..
அழகான இயற்க்கைய குடுத்துட்டு
அத ரசிக்க நேரம் இல்லாம ஓடுற வாழ்க்கை
இதெல்லாம் மாறனும்ன்னு மனசுல ஒரு ஏக்கம்..
இதெல்லாம் நெனச்சு பாக்ககூட
எப்பாச்சும் தான் நேரம் கிடைக்குது
அதுவும் நம்ம கற்பனைய முழுசாக்கூட அனுபவிக்க முடியாது
ஊடான்ட யாராச்சும் பேசுறது - இல்லனா கூடவே ஒட்டிட்டு இருக்குற இந்த அலைபேசி ஒலிக்குறதுன்னு
நம்மள திசை திருப்பவா காரணம் இல்ல...
என்ன ஒரு ஆச்சர்யம்..
இன்னைக்கு இவ்ளோ அழகான எடத்துல
தன்னந்தனியா உக்காந்திருக்கேன்..
அழகான நிலா வெளிச்சம்
இசையாய் வீசும் இயற்கையான காற்று
காற்றின் இசைக்கேற்று தன்னை அசைக்கும் மரம்..
சலசலவென இரட்டைக்கிழவி போல்
வற்றாமல் ஓடும் ஓடையும்
அந்த ஓடையின் தொடுதலாம் ஸ்பரிசத்தில் புல்லரித்து நிற்கும் பசும்புல்லும்...
அடடா இதுவல்லவா வாழ்க்கை
இந்த நிமிடம் தானே இனி வரவே வராது என்று பலரும் சொன்னார்கள்
காலத்தின் பின் ஒடவே உனக்கு நேரம் சரியாக இருக்கும்
அக்கடான்னு நிம்மதியா உக்கார கூட நேரம் இருக்காதுன்னு....
அட அங்க பாருங்க
காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப
என்னை தாங்கிச்செல்லும் என் வாகனம் கூட
என்னுடன் இங்கே நிம்மதியாய் நிற்கிறது..
மாசு படிஞ்ச காத்து இங்க இல்ல
எந்நேரமும் ஓயாமல் ஒலிக்கும் ஹார்ன் ஒலிகளும்
எதிரே இருப்பவர் நாம் பேசுவதை கேட்கிறாரோ இல்லையோ என்ற கவலையின்றி
எந்நேரம் engaged ஆக இருக்கும் அலைபேசியின் ஒலிகளும்
எதுவுமே இல்லாம
நிசப்தமான ஒரு இடம்...
கண்களை மூடி
இயற்கையின் தாலாட்டில்
என்னையே நான் மறந்த நொடி.
"என்னங்க வேலைக்கு போகணும்
லேட் ஆச்சு எழுந்திரிங்க "
எழுந்து கெளம்பி வீட்ட விட்டு வெளிய வரப்ப
"மதியதுக்கு சோறு கட்டி கொடுத்திருக்கேன்
மிச்சம் வைக்காம சாப்டுருங்க"....
அம்மாவின் குரல் மாறி இன்றி
மனைவியின் குரல்...
குரல் தான் மாறுது
பேசும் வரிகளும் மாறல
என் வாழ்க்கையும் மாறல...
கனவுல கூட
நாம நெனச்ச இடமும்
நாம நெனச்ச உலகமும்
நமக்கு கிடைக்காது போல......