Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
என் இனிய தனிமையே... 🖤

என்னை விட்டு எல்லோரும் பிரிந்தபோது,
என்னை விட்டு நீ மட்டும் பிரியவில்லை.

என் மௌனத்தை புரிந்துகொண்டாய்...
என் கண்ணீரை வார்த்தைகள் இல்லாமலே வாசித்தாய்...

இன்று நான் பலமாக நிற்பதற்கு காரணம்,
என்னை விட்டு சென்றவர்கள் அல்ல...
என்னுடன் இருந்த நீ தான்.

சில நேரங்களில் தனிமை தண்டனை அல்ல...
நம்மை நாமே கண்டுபிடிக்கக் கிடைத்த மிக அழகான துணை. 🌙
12
நான் கண்டுவந்த வலிகளின் பாதைகள்...

நான் கண்டுவந்த வலிகளின் பாதைகள் ஏராளம்...
ஒவ்வொரு காயமும் ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்தது...
ஒவ்வொரு தோல்வியும் என்னை இன்னும் வலிமையாக்கியது...

இன்று நான் சிரிப்பதற்கு காரணம்...
வலி இல்லாத வாழ்க்கை அல்ல...
வலிகளை வென்று நடந்த பயணம்தான்.

வலிகள் என்னை உடைக்கவில்லை...
உருவாக்கின. 💙
13
உண்மையான அன்பு... ❤️

உண்மையான அன்பு என்பது...
எப்போதும் சிரிக்க வைப்பது மட்டும் அல்ல...

வலியில் துணையாக நிற்பது...
தவறுகளை மன்னிப்பது...
தூரத்தில் இருந்தாலும் மனதில் நெருக்கமாக இருப்பது...
எந்த சூழ்நிலையிலும் கைவிடாமல் இருப்பதுதான்
உண்மையான அன்பு.

அன்பு வார்த்தைகளில் இல்லை...
செயல்களில் வாழ்கிறது. ❤️
14
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:00:51 AM »
15
Friends Tamil Chat Team Conveys 🎁 Birthday (02-JUL- 2026) wishes 🎁 to our lovable friends⭐ Mr. VIKRAM & Ms. MINNIE  ⭐ and wishes them Good Luck.


16

உலகமே உழைப்புல தான்
உசுரோட சுத்துது...
உழைப்பால உயராதோறும் இல்லை... உழச்சவன் உறுப்படாம போனதும் இல்லை....

ஏர் புடுச்சு உழுறவன் தான்..
ஊருக்கே சோறு போடுறான்..
ஊட்டுல..... ஆத்தா உழைப்புலதான்
குடும்பமே நிம்மதியா வாழுது....

தான் ஒசரவும் உழைப்பு வேணும்
தன்ன சார்ந்தவங்க ஒசரவும் உழைப்பு வேணும்
உழைப்பால் ஒசந்தவங்க கதையெல்லாம்
காலத்துக்கும் நம்ம காதுல ஒலிச்சுட்டேதான் இருக்கும்...

உப்பில்லா பண்டம் குப்பையிலன்னு சொல்வாங்க
உழைப்பில்லா உயர்வும் அதுக்கு சமமே.. உழைக்காம
உக்காந்து சாப்பிட்டா உடம்புல ஒட்டாதாம்...
உழைச்சு அலுத்த ஒடம்ப நோய்நொடி அண்டாதாம்...

 நீ செய்யுற வேலை என்னவாவேணா இருக்கட்டும்
அடுத்தவனை ஏச்சு பொழைக்காம உழைச்சு பொழச்சா போதும்...
அரை வயிறு கஞ்சி குடிச்சாலும்
கவுரவமா இந்த உலகத்துல நடமாடலாம்...

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்...
அடுத்தவன் பசியை போக்காத காசும் நஞ்சுதான்....
உன் உழைப்பால உன் குடும்பம் தழைக்கட்டும்
அதில் எஞ்சியதைக்கொண்டு..  அடுத்தவர் குடும்பமும் பசியாரட்டும்...

தானத்தில் சிறந்தது அன்னதானம்
போதும் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுப்பது...
வயிறு நெறைஞ்சுருச்சு போதும்னும் சொல்வாங்க
பசியை போக்கின உம்மையும் உம் குடும்பத்தையும் மனசார வாழ்த்தவும் செய்வாங்க

உழைப்பால் நாமும் உயருவோம்
உழைத்து ஈன்றதை கொடுத்து
அடுத்தவர் அன்பையும் பெறுவோம்
வாழ்வோம் வாழ்விப்போம்....


17
SMS & QUOTES / Re: 𝖇𝖚𝖙 𝕷𝖎𝖋𝖊 𝖌𝖔𝖊𝖘 𝖔𝖓✍
« Last post by MysteRy on July 01, 2026, 09:41:40 PM »
18
பலரும் பல விதங்களில் உள்ளே வந்து,
பலவற்றையும் எழுதிவிட்டு,
எதுவும் சொல்லாமலே சென்றுவிடுகிறார்கள்
எந்தவிதமான பிணைப்பும் இல்லாமல்
ஒருவேளை என்னை ஒரு குறிப்பேடு போல
எண்ணியதாலோ என்னவோ

இதை படிக்கையில்  அனைவரிடமும்
எஞ்சியிருந்த சில கேள்விகள்
கடைசிப் பத்திக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தாலும்,
முதல் பத்தி போலவே அதுவும்
முதலிலேயே வாசிக்கப்படலாம்
ஆனால்

வாழ்வில்
வகுத்தல், பெருக்கல் மற்றும்
கூட்டல் போன்ற கணக்குகளுக்குச் சரியான
விடையளிக்காமல், அவற்றிற்குக் கீழே
குறியீடுகளை இடுவதற்கு முன்பே
அவர்கள் என் மீது கற்களை வீசத் தொடங்கியிருப்பார்கள்

அறியப்படாத ஒரு திரையின்
இருபுறமும் நாம் இருக்கலாம்,
நினைவுகளை அசைபோட்டபடி
நமது தவறுகளுடன் நாம் ஓடிச் சென்றிருந்தாலும்,
நமக்காகக் காத்திருக்கும் புன்னகைகளை
நாம் காணாதது போல் நடிக்கிறோமோ என்னவோ

நீங்கள் சொல்லி முடிக்காத
மீதமுள்ள வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கலாம்

மறக்க முடியாத விஷயங்களுடன்
பெரும்வெள்ளமெனத் திரும்பி வரும் நினைவுகள் கூடப்
பொய்களைச் சொல்லக்கூடும்.

ஒரு சொல்லின் கூர்மையான விளிம்பால்
சிதறிய இரத்தத்தின் வாசனையை
நுகர்ந்தபடி நான் வாசித்துக் கொண்டிருக்கையில்,
கையில் ஏதுமற்ற அந்தப் புத்தகங்கள்
என்னை ஏறிட்டுப் பார்த்து
ஏளனம் செய்துகொண்டிருக்கக்கூடும்

நான் ஓட முற்படும்போதெல்லாம்
என் பின்னால் ஆயிரம் அலறல் சத்தங்கள்
இருந்தும் வாழ்க்கை
நூலகத்தில் காத்திருக்கும்
வருகைப்பதிவேட்டை போல
காத்திருக்கும்
இன்னும் பலர் வருகைக்காக



***Joker***
19
வலிகள் இல்லாத வாழ்க்கை கிடையாது...

வலிகள் இல்லாத வாழ்க்கை யாருக்கும் இல்லை...
ஆனால் அந்த வலிகளை தாண்டி முன்னேறுபவர்கள்தான் வெற்றியை சந்திக்கிறார்கள்.

காயங்கள் மறைந்துவிடும்...
காலம் மாறிவிடும்...
ஆனால் வலியை வென்று நடந்த பயணம்,
நம் வாழ்க்கையின் மிகப்பெரிய பலமாக மாறிவிடும்.

வலி ஒரு முடிவு அல்ல...
அது ஒரு புதிய தொடக்கத்தின் அறிகுறி. 💙
20
கவிதைகள் / Re: Oh Butterfly 🦋
« Last post by joker on July 01, 2026, 06:43:25 PM »
பட்டாம்பூச்சி கவிதை அருமை
தொடர்ந்து எழுதுங்கள் சகோ

உங்கள் கவிதை படித்ததும் எனக்கு
என் கிறுக்கல் நியாபகம் வந்தது




அழகான மாலை வேளையில்
பள்ளி முடிந்து வந்து வீட்டின்
முற்றத்தில் அமர்ந்த வேளையில்
என் மடியில் வந்தமர்ந்த
அழகான உயிர் நீ

வண்ணம் பல கொண்டிருக்கிறாய்
நீ பல மனங்கள்
கொள்ளை கொண்டிருக்கிறாய்

சிறகு விரித்து  நீ பறக்கையில்
உன் பின்னே பறக்குமே  என்
இரு கண்கள்

தொட்டாலே ஒட்டிக்கொள்ளும்
என் கைகளில் உன் வண்ணங்கள்

பேசாமலே என் மனதில்
ஒட்டிக்கொண்ட சிறு கள்ளி நீ

பட்டம் போல் என் மனது உன் பின்னால்
பறப்பதால் தானோ
உன் பெயர்
பட்டாம்பூச்சி
Pages: 1 [2] 3 4 ... 10