21
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-005 (நெஞ்சில் நின்ற திரைப்படம் - தமிழ் )
« Last post by Madhurangi on March 19, 2026, 10:32:52 PM »என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான அதே சமயம் என்னை ரொம்ப பாதிச்ச படம்னா அது கன்னத்தில் முத்தமிட்டால் தான். இவ்வளவு வருஷம் ஆனாலும் என்னால அழாம ஒரு தடவ கூட climax பார்க்க முடிஞ்சதில்ல.
போரின் வாசனையயும் துயரத்தையும் வெறும் வடிகட்டின தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமே மட்டுமே அறிஞ்ச childhood கொண்ட ஆள் நான். ஒரு போர் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வியலை எப்டி பதிக்குதுனு எனக்குள்ள முதன்முறையா ஆழமா பதிவு செஞ்ச படம் இது.
சிம்ரன்னா glamour and modern. மாதவன்னா சாக்லேட் ஹீரோ கனவு நாயகன்ற விம்பத்தை உடைச்ச படம் அது. முக்கிய கதாபாத்திரமான அமுதா எனும் கீர்த்தனா நடிப்பை பத்தி சொல்லவே வேணாம்.
சினிமா பத்தி ஆராய்ந்து பாக்ற பக்குவம் இல்லாத அந்த பள்ளிப்பருவத்தில கூட அமுதாவோட தவிப்பை நமக்குள்ள அப்டியே இறக்குற மாதிரி நடிப்பை வழங்கின keerthana இன்னும் நிறையவே பல திரைப்படங்கள் பண்ணி சினிமா உலகில் கொண்டாடபட்டுருக்க வேண்டியவங்கனு பல முறை நினச்சுருக்கன்.
அந்த படத்தோட speciality என்னோட வாழ்கையின் ஒவ்வொரு பருவத்தில பார்க்கும்போதும் அந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தோட என்னோட ஒன்றி போக முடிஞ்சுது.
பள்ளி பருவத்துல அமுதாவோட துடிப்பு, அம்மாவை தேடுற தவிப்பு, கேள்விகள் நிறைந்த அந்த பருவத்தை புரிஞ்சுக்க முடிஞ்சுது.
கல்லூரி பருவத்துல சமூக பிரச்சினைகள், ஒரு சிலர் பண்ணும் தவறுகளுக்காக அவங்க சார்ந்த முழு இனத்தையோ மதத்தையோ குறை சொல்றது நியாயம் இல்லனு மாதவனோட சிங்கள நண்பனா வர்ற பிரகாஷ்ராஜ் மூலம் சொல்ல வந்தத உணர முடிஞ்சுது.ஏன்னா கல்லூரி காலங்களில வீட்டை விட்டு வந்து தங்கிருக்க தனிமையில எனக்கு மனதளவுல ஆதரவு தந்த நணபர்கள்ல பல சகோதர மொழி பேசுற நண்பர்கள் இருந்துருக்காங்க
இப்ப maturity வந்த அப்புறம் ஒரு குழந்தை அம்மாவோட பாசத்துக்கு ஏங்குறதுக்கு சற்றும் குறைவில்லாதது தான் வளர்த்த பொண்ணு பெற்ற தாயை பார்த்தது போய்டுவளோ அப்டின்ற தவிப்பு அப்டிங்ரத உணர்த்தும் சிம்ரனோட இந்திரா கதாபாத்திரத்தின் மூலம் உணர முடியுது. பெற்ற பாசத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாதது வளர்த்த பாசம்.
எப்ப கேட்டாலும் மனதுக்கு அமைதியை குடுக்குற “வெள்ளை பூக்கள்” பாடலும், தாய் மற்றும் தகப்பனின் அன்பின் ஒட்டுமொத்த வெளிப்பாடான “தெய்வம் தந்த பூவே” பாடலும், காதல் வரும் தருணத்தை இதுக்கு மேல அழகா சொல்ல முடியுமா அப்டினு நினைக்க வைக்குற “சட்டென நனைந்தது நெஞ்சம்” பாடலும் A. R. Rahman-இன் magical diary ல மறக்க முடியாத பக்கங்கள். ragging time ல பாட சொன்னா எனக்கிருக்கது 2 choice தான் ஒன்னு ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே இன்னொன்னு ஒரு தெய்வம் தந்த பூவே.
முடிவாக…
இந்த படம் எனக்கு ஒரு சினிமா அனுபவம்னு மட்டும் இல்ல; வாழ்க்கையை வேற கோணத்துல பார்க்க கற்றுக்கொடுத்த ஒரு பயணம். ஒவ்வொரு தடவையும் பார்க்கும்போது புதிய உணர்ச்சிகளையும் புதிய புரிதல்களையும் கொடுக்கிற ஒரு உயிரோட படைப்பு. சில படங்கள் நம்ம மனசுல நிக்காது… நம்ம வாழ்க்கையோடே கலந்து போயிடும் — எனக்காக அந்த பட்டியலின் முதல் இடத்துல நிக்குறது “கன்னத்தில் முத்தமிட்டால்” தான்.
போரின் வாசனையயும் துயரத்தையும் வெறும் வடிகட்டின தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமே மட்டுமே அறிஞ்ச childhood கொண்ட ஆள் நான். ஒரு போர் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வியலை எப்டி பதிக்குதுனு எனக்குள்ள முதன்முறையா ஆழமா பதிவு செஞ்ச படம் இது.
சிம்ரன்னா glamour and modern. மாதவன்னா சாக்லேட் ஹீரோ கனவு நாயகன்ற விம்பத்தை உடைச்ச படம் அது. முக்கிய கதாபாத்திரமான அமுதா எனும் கீர்த்தனா நடிப்பை பத்தி சொல்லவே வேணாம்.
சினிமா பத்தி ஆராய்ந்து பாக்ற பக்குவம் இல்லாத அந்த பள்ளிப்பருவத்தில கூட அமுதாவோட தவிப்பை நமக்குள்ள அப்டியே இறக்குற மாதிரி நடிப்பை வழங்கின keerthana இன்னும் நிறையவே பல திரைப்படங்கள் பண்ணி சினிமா உலகில் கொண்டாடபட்டுருக்க வேண்டியவங்கனு பல முறை நினச்சுருக்கன்.
அந்த படத்தோட speciality என்னோட வாழ்கையின் ஒவ்வொரு பருவத்தில பார்க்கும்போதும் அந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தோட என்னோட ஒன்றி போக முடிஞ்சுது.
பள்ளி பருவத்துல அமுதாவோட துடிப்பு, அம்மாவை தேடுற தவிப்பு, கேள்விகள் நிறைந்த அந்த பருவத்தை புரிஞ்சுக்க முடிஞ்சுது.
கல்லூரி பருவத்துல சமூக பிரச்சினைகள், ஒரு சிலர் பண்ணும் தவறுகளுக்காக அவங்க சார்ந்த முழு இனத்தையோ மதத்தையோ குறை சொல்றது நியாயம் இல்லனு மாதவனோட சிங்கள நண்பனா வர்ற பிரகாஷ்ராஜ் மூலம் சொல்ல வந்தத உணர முடிஞ்சுது.ஏன்னா கல்லூரி காலங்களில வீட்டை விட்டு வந்து தங்கிருக்க தனிமையில எனக்கு மனதளவுல ஆதரவு தந்த நணபர்கள்ல பல சகோதர மொழி பேசுற நண்பர்கள் இருந்துருக்காங்க
இப்ப maturity வந்த அப்புறம் ஒரு குழந்தை அம்மாவோட பாசத்துக்கு ஏங்குறதுக்கு சற்றும் குறைவில்லாதது தான் வளர்த்த பொண்ணு பெற்ற தாயை பார்த்தது போய்டுவளோ அப்டின்ற தவிப்பு அப்டிங்ரத உணர்த்தும் சிம்ரனோட இந்திரா கதாபாத்திரத்தின் மூலம் உணர முடியுது. பெற்ற பாசத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாதது வளர்த்த பாசம்.
எப்ப கேட்டாலும் மனதுக்கு அமைதியை குடுக்குற “வெள்ளை பூக்கள்” பாடலும், தாய் மற்றும் தகப்பனின் அன்பின் ஒட்டுமொத்த வெளிப்பாடான “தெய்வம் தந்த பூவே” பாடலும், காதல் வரும் தருணத்தை இதுக்கு மேல அழகா சொல்ல முடியுமா அப்டினு நினைக்க வைக்குற “சட்டென நனைந்தது நெஞ்சம்” பாடலும் A. R. Rahman-இன் magical diary ல மறக்க முடியாத பக்கங்கள். ragging time ல பாட சொன்னா எனக்கிருக்கது 2 choice தான் ஒன்னு ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே இன்னொன்னு ஒரு தெய்வம் தந்த பூவே.
முடிவாக…
இந்த படம் எனக்கு ஒரு சினிமா அனுபவம்னு மட்டும் இல்ல; வாழ்க்கையை வேற கோணத்துல பார்க்க கற்றுக்கொடுத்த ஒரு பயணம். ஒவ்வொரு தடவையும் பார்க்கும்போது புதிய உணர்ச்சிகளையும் புதிய புரிதல்களையும் கொடுக்கிற ஒரு உயிரோட படைப்பு. சில படங்கள் நம்ம மனசுல நிக்காது… நம்ம வாழ்க்கையோடே கலந்து போயிடும் — எனக்காக அந்த பட்டியலின் முதல் இடத்துல நிக்குறது “கன்னத்தில் முத்தமிட்டால்” தான்.

Recent Posts