Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
21
Wish You Happy Birthday Agalya..!





22
Friends Tamil Chat Team Conveys 🎁 Birthday (18-Mar-2026) wishes 🎁 to our lovable friend ⭐ Ms. AGALYA ⭐ and wishes her Good Luck.


23
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-004

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

“ நெஞ்சில் நின்ற திரைப்படம்
(தமிழ் ) ”

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

****************************************************************

IMPORTANT RULE (EFFECTIVE THIS WEEK)

🟢 This week, the first 6 posts received before the cut-off time will be selected for FM Program.

🟠 participants whose posts were selected in the previous week will not be selected again in the immediate following week for FM. This is to ensure a fair opportunity for everyone.

🔵However, this rule does not restrict anyone from posting memories or content. We strongly encourage all users to continue sharing your memories and posts every week before the cut-off time, as your participation is always valued and appreciated.
24

என்னுயிர் தோழி

இந்த தலைப்பு கொடுக்கப்பட்டத என்னோட பிஸி schedule ல பார்க்காம விட்டுட்டேன் .. பரவாயில்லை FMla வராட்டியும் என் வாழ்க்கையின் ஒரு முக்கியமான அத்தியாயம்ன்னு சொல்லலாம் ... அந்த பொக்கிஷமான நாட்களின் நினைவுகளை இங்க பகிர  ஒரு வாய்ப்பு கிடச்சிருக்கு ... FTCக்கும்  நெஞ்சம் மறப்பதில்லைக்கும் நன்றி ...

என்னோட carrier -- இன்னைக்கும் என் life la நான் உயிரோட இருக்க.. எனக்கும் என் பிள்ளைகளுக்கும் suportive ah இருந்தது என் job மட்டும் தான் .. அந்த JOBகான ஒரு training la first day...

Class start ஆக போகுது .. அப்போ entry குடுத்தாங்க புவனேஸ்வரி ... வந்து என் பக்கத்து சீட்ல உக்காந்தாங்க ..class முடிச்சுட்டு break time la நாங்க பேச start பண்ணினோம் ... நெறய similarities in life.. soo ரொம்ப close ah பேசி last ah அந்த batch la besties, thick friends எப்படி வேணா சொல்லலாம் அவ்ளோ close ஆகிட்டோம் ..

அவங்களுக்கு கால் கொஞ்சம் ஊனம் .. so மெதுவா தான் நடப்பாங்க .. நான் அவங்களுக்கு suportive ah இருப்பேன் break time lam canteen poga.. cab ku poga nu... இந்த point ah இங்க mention பண்ணனுமானு  நெனைப்பீங்க .. ஆனா அதுக்கும் ஒரு reason இருக்கு .. அத நான் பின்னாடி சொல்றேன் ..

Enga carrier oda first step.. சென்னைல ஓரு company la place anom... எனக்கும் 2 kids, அவங்களுக்கும் 2 kids.. kids ah பெற்றோர் கிட்ட விட்டுட்டு .. 2 பேரும் சென்னை போனோம் ... train move ஆகுறப்ப 2 per கண்ணும் கலங்குச்சு .. சொல்லாமலே reason என்னனு ரெண்டு பேரும் புருஞ்சுகிட்டோம் .. உனக்கு நாநான் ஆறுதல் எனக்கு நீ ஆறுதல் னு எங்களோட மனச தேத்திக்கிட்டோம் .. chennai போய்ட்டு ஓரு one week ரொம்ப கஷ்ட பட்டோம் ... புது place, புது அனுபவம் , kids ah விட்டு 2 பேருமே அதான் first time .. எங்கனால manage பண்ண முடில , but still 1 yr ஆச்சும் work முடிச்சுட்டா அந்த experience வச்சு native la ஏதும் job வாங்கிடலாம் அப்படினு யோசிச்சு நாட்களை ஒட்டினோம் .. ஆன 10 daysக்கு மேல எங்களால தாக்கு புடிக்க முடில .. because அந்த company எங்களுக்கு provide பண்ணின accomodation and work place ரொம்ப தூரம் .. bus la போய்ட்டு வரணும் ... bus vitu இறங்கி ரொம்ப தூரம் நடக்கணும் .. புவனேஸ்வரி னால manage பண்ண முடில .. ஆன எங்க bad time.. அந்த company la 1 yr bond sign பண்ணி இருந்தோம் .. so சொல்லாம கொள்ளாம ஊருக்கு கெளம்பிடலாம் nu நானும் புவனாவும் யோசிச்சோம் ..

இங்க தான் ஓரு comedy இருக்கு ..

ஊருக்கு போகணும் அதுவும் company la யாருக்கும் தெரியாம போய்டணும் nu plan பண்ணின நாங்க .. ena time ku train iruku nu parka railway station போனோம் .. ticket கிடைக்காதுன்னு யோசிக்கிறப்ப தான் அவங்க சொன்னாங்க , எனக்கு handicap quata இருக்கு so நாம 2 பேருக்கும் ticket easy ah கிடைக்கும்ன்னு.. ஓரு வழியா   ticket போட்டுட்டோம் .. ஆனா எங்க things எதுமே நாங்க எங்க accomodation place la இருந்து எடுத்திட்டு வரல .. sari oru cab பிடிச்சுட்டு போய் எடுத்துட்டு வந்துடலாம் train ku இன்னும் 1 hr இருக்குன்னு யோசிச்சு cab பிடிச்சோம் ..

புது ஊரு , route ஏதும் தெரில .. cab person கூட்டிட்டு போற வழி சரி தானான்னு 2 பேரு மனசுலயும் பயம் .. பயமா இருக்குனு நான் கண் ஜாடைல சொன்னதை புவனா புருஞ்சுட்டாங்க .. நானும் புவனாவும் எங்களுக்குள்ள ஒரு converstion build பண்ணினோம் .. சத்தமா அந்த cab driver காதுல படுற மாதிரி ..

புவனா : En husband constable post la irundhu next level promotion edhir pathutu irukaru...

naan: super pa. நாளைக்கி நாம போய் ஊருல இறங்குறப்ப pickup பண்ண வருவார் தானே ?

Bhuvana: ஆமாம் பா , அவருக்கு night shift so police uniform ஒட தான் வருவார்ன்னு  நெனைக்கிறேன்


இப்படியே sila converstion பேசி போலீஸ்காரன் ஒட பொண்டாட்டி nu cab driver ku சொல்லாம சொல்லிட்டு வந்துட்டு இருந்தோம் ... நாங்க stay panina place um வந்திருச்சு .. andah cab driver எங்க things lam car la vaika help panitu எங்கள railway station la drop பண்ணிட்டாரு .. அப்பாடான்னு ஒரு பெரு மூச்சு விட்டப்ப அவர் சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை .. "madam நீங்க 2 பேரும் ரொம்ப பயந்து இருக்கீங்க .. பயப்படாதீங்க நீங்க 2 perum safe தான் .. போய் தண்ணி குடிச்சுட்டு நிம்மதியா train la travel பண்ணுங்க" ன்னு ..

நாங்க 2 பேரும் ஒருத்தர ஒருத்தர் பாத்து கமுக்கமா சிரிச்சுட்டு எங்களோட பயணத்தை தொடங்கினோம் ..

அதுக்கு அப்புறம் சொந்த ஊர்ல job.. oree company.. ipadiya days pochu.. அப்புறம் kids பாத்துக்க வசதியா இருக்கும்ன்னு work from home எடுத்துட்டோம் 2 பேரும் ...

daily பேசிட்டு இருந்தவங்க weekly once பேசுற நெலம .. இப்படியே days pass ஆச்சு ..

one day எங்க அம்மா .. இங்க பாருன்னு newspaper குடுத்தாங்க ...

கடன் தொல்லை எதிரொலி .. குடும்பத்தின் வறுமை காரணமாக ... புவனா என்ற பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்ன்னு ..

கண்டிப்பா அவளா  இருக்காதுன்னு நெனச்சுட்டு news ah full ah படிக்க தொடங்கினேன் ... name same. area same.. 2 kids இருக்குன்னு போட்ருந்தாங்க .. என்னடா இதுன்னு இன்னும் தீவிரமா படிக்க start பண்ணேன் .. அவங்க husband constable nu போட்ருந்தாங்க ..

என்ன சொல்லன்னு தெரியல . mind total blank.. யாருக்கு call பண்றது என்ன கேக்கறது எங்க போறது ஒன்னும் புரில .. அப்புறம் அந்த newws ah அலசி ஆராயுறப்ப தான்  தெரிஞ்சது .. அவ poison குடிச்சுட்டு வீட்ல இல்ல ... வீட்ல இருந்தா காப்பாத்தீருவாங்கன்னு two wheeler எடுத்துட்டு road la கால் போன திசைன்னு சொல்லுவாங்களே அது போல போயிருக்கா .. so விஷம் plus road accident la எல்லாமே முடிஞ்சு போச்சு .

நேர்ல போய் பார்க்க தைரியம் இல்லாம ... இந்த news la இருந்து ena divert பண்ணிக்க ரொம்ப நாட்கள் ஆச்சு . காலப்போக்குல நிஜங்கள் எல்லாம் நினைவுகள் ah மாறிடுச்சு .. அவ போன கொஞ்ச days la அவளோட husband Jan 26 ku Delhi la போய்ட்டு oru award வாங்கிட்டு வந்தாரு .. அவள எவ்ளோ love பண்ணாருன்னு அதுக்கு அப்புறம் தா எனக்கு புரிஞ்சுது .. kids kum poison குடுத்துட்டு அவரும் poison எடுத்துட்டு எல்லாருமே போய்ட்டாங்க .. இப்ப அவங்க family eh no more..


Moneyன்ற விஷயம் ஒரு family eh இல்லாம பண்ணீருச்சு ... யார் கிட்டையாச்சும் தன்னோட feelings ah share பண்ணிருக்கலாம் ... கொஞ்சம் யோசிச்சு முடிவு எடுத்து இருக்கலாம் .. எவ்ளோ சொன்னாலும் போன உசுரு எதுமே இனி திரும்ப வர போறது இல்ல ...

Enaku school, college, work place, yean FTC nu nerya friends irukanga.. ana enuyir thozhi ndra topic parthapa en manasula pattunu adicha ninaivu Bhuvaneshwari oda ninaivu than...

ava nenapu varapa lam.. avaloda college certificates en kita irku adha pathupen.. ava nenapa inum adha enkita vachutu iruken.

MISS YOU BHUVANA...


(English தமிழ் கலந்து எழுதியதர்க்கும்  ... எழுத்துப்பிழைக்கும் மன்னிக்கவும்...)
25
கவிதைகள் / என் மனதின் நாயகன்
« Last post by Thooriga on March 17, 2026, 03:00:56 PM »
முதல் பார்வையிலே உன்னை கண்ட அந்த நொடி
என் உலகமே மெதுவாக மாற ஆரம்பித்தது…
நீ அதிகம் எதுவும் பேசவில்லை...
ஆனால் என் இதயம் முழுவதும் உன் பெயரை எழுத ஆரம்பித்தது...

உன் கண்கள் என்னை பார்த்தாயா என்று தெரியவில்லை,
ஆனால் என் கண்கள் உன்னிலேயே தங்கிவிட்டது…
ஒரு நொடிக்குப் பார்த்த உன் முகம்
என் நினைவில் ஆயிரம் முறை மலர்ந்து விட்டது ...

உன் சிரிப்பு…
அது ஒரு சிரிப்பு மட்டும் இல்லை,
என் மனதை  அமைதியாக கொள்ளையடிக்கும்
ஒரு இனிய மழை போல.
நான் உன்னிடம் பேசவில்லை,
நீ என்னை அறியவே இல்லை,
ஆனால் என் உள்ளத்தில்
நீ மட்டும் தான் வாழ ஆரம்பித்துவிட்டாய்...

நாளுக்கு நாள்
இந்த உணர்வு அதிகமாகிறது…
மழைத்துளி போல தொடங்கியது,
இப்போது ஒரு பெருங்கடலாக மாறிவிட்டது.
உன்னை நினைத்தாலே
என் இதயம் வேகமாக துடிக்கிறது,

உன் பெயரை மெதுவாக சொல்லும்போது
என் உள்ளம் முழுவதும் பூக்கள் மலர்கிறது.
இது ஏன் இவ்வளவு அழகா இருக்கிறது?
உன்னை பார்த்த அந்த நொடியாலா?
அல்லது நீ என்னுள் உருவாக்கிய
அந்த இனிய உணர்வாலா?

நான் உன்னுடன் பேசும் நாளுக்காக காத்திருக்கிறேன்,
ஒரு சின்ன "ஹாய்" சொல்லும் நொடியை கனவாக காண்கிறேன்…
அந்த ஒரு வார்த்தைக்காக கூட
என் இதயம் ஆயிரம் முறை துடிக்கிறது.
உன் அருகில் நிற்கும் நாள் வந்தால்
என் உலகமே நின்றுவிடுமோ?

அல்லது என் இதயம்
உன்னிடம் எல்லாம் சொல்லி விடுமோ?
எனக்கு தெரியவில்லை…
ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி—
நீ வந்த பிறகு
நான் முன்பிருந்த நான் இல்லை.
உன் நினைவுகள் என்னை மாற்றிவிட்டது,..

நீ இல்லாத நேரங்களிலும் கூட
நீயே என் அருகில் இருப்பது போல.
ஒரு நாள் நீயும் உணருவாயா? இந்த அமைதியான காதலை…
நான் சொல்லாமல் வைத்திருக்கும்
இந்த ஆழமான உணர்வை…
அந்த நாள் வருமா தெரியவில்லை,
ஆனால் நான் காத்திருக்கிறேன்…

என் இதயத்தில் உனக்காக மட்டும்
ஒரு சிறிய உலகம் உருவாக்கி வைத்து.
நீ வருவாயா?
அல்லது இது என் கனவாகவே இருக்குமா?
எதுவாக இருந்தாலும் பரவாயில்லை…
ஏனெனில்
நான் உன்னை காதலித்த அந்த நொடி முதல்
என் வாழ்க்கையே
ஒரு அழகான கவிதையாக மாறிவிட்டது… ❤️
26
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on March 17, 2026, 09:49:41 AM »
27
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on March 17, 2026, 06:15:20 AM »
28
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on March 16, 2026, 09:46:06 AM »
29
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on March 16, 2026, 05:17:08 AM »
30
General Videos / Re: தமிழ் நம் அடையாளம்
« Last post by Madhurangi on March 15, 2026, 09:39:26 PM »
Ennavoru script and modulation ❤🔥 ketka ketka thevittadha tamil 😍❤
Pages: 1 2 [3] 4 5 ... 10