Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
21
Friends Tamil Chat Team Conveys 🎁 Birthday (23-Dec-2025) wishes 🎁 to our lovable friend ⭐ Mr. SAIMITHRAN ⭐ and wishes him Good Luck.


22
வண்ணத்துப்பூச்சியின் (மனிதனின்) பரிணாமம் :

செழிப்பாக பிறந்து கொழுத்து வளர்ந்து
இன்புற்று  திரியும் சிறிய ஜீவனை
வாழ தகுதியாக்கும் தயாரிப்பு.
பழைய தன்னை அடித்துநொறுக்கி
புதியதாக புத்துயிராக மாற்றும் புதுபிறப்பு...

தன்னுள் மறைந்திருக்கும் சிறகுகளை
வெளிக்கொணர செய்யும் அழகிய உருமாற்றம்
தடைக்கற்களை வெற்றி படிக்கற்களாக
மாற்ற கற்று தரும் உருமாற்றம்
பிறரறியா தன்னை மெருகேற்றும் உருமாற்றம்

ஆனால் அவ்வுருமாற்றத்திற்கு தான்
எத்துணை இடர்பாடுகளும் எத்துணை தடுமாற்றங்களும்
எதிர்பாரா புயல்காற்று புரட்டியெடுக்கும் சூழல்
மனச்சோர்வை ஏற்படுத்தும் தனிமை
இருளில் அடைக்கும் கூடு

வலி மிகுந்த மாற்றத்திற்கு
உட்படுவதா ? அல்லது ஏற்க மறுப்பதா ?
தன்னிலை அடைய துடிக்கும்
போராட்டத்திற்கு அஞ்சுவதா ?? அல்லது துணிவதா ??

மலைகளைத் தாண்டி பயணிக்க
வலிமைத் தரும் மாற்றத்தை மறுதலிப்பதா ??
வலியே வலிமை தரும்
விண்ணையளக்கும் சிறகைத் தரும்

சுதந்திர காற்றை சுவாசித்து
விண்ணில் பறப்பதற்குதான் அத்துணை போராட்டமும்...
பலவீனமான இதயத்தையும் பலமடங்கு வலிமையாக்கும்
இயற்கையின் வன்மையான அணுகுமுறை...
இது ஒரு தந்தையின் அணுகுமுறை...
23
கண்ணாடியில் மலரும் சிறகுகள்
பார்க்கும் கண்களுக்கு
சிலருக்கு அருவருப்பு,
சிலருக்கு பயம்....
மண்ணில் ஊர்ந்து செல்லும்
அந்தப் புழு.
ஆனால்
அதன் மௌனத்தின் உள்ளே
ஒளிந்து கிடப்பது
வானம் ஏங்கும்
வண்ணங்களின் கனவு.
உலகம்
அழகென்று கொண்டாடும்
பட்டாம்பூச்சி,
ஒரு நாளில்
திடீரெனப் பிறந்ததல்ல,
பொறுமை சுமந்த
புழுவின்
தீராத நம்பிக்கை அது.
மனிதனே,
ஒரு சந்தர்ப்பத்தில்
நீ தவறினால்,
உன் மீது
வெறுப்பும் ஒதுக்கலும்
மழையாய் பெய்யும்....
அது உண்மை.
அந்த மழையில்
நீ புழுவென
சுருங்கி விடாதே.
தவறு” என்ற
இருள்கூட்டை
உடைத்துவிட்டு,
உன் உள்ளத்தின்
வண்ணங்களை
சேர்த்து,
வெளியே வா
வண்ணமிகு
பட்டாம்பூச்சியாக.
திருந்திய மனம்
சிறகுகள் பெறும்.
நற்பண்புகள்
வானில்
வண்ணக்கோலமிடும்.
அப்போது
உன் மனம் மட்டும் அல்ல,
உன் வாழ்க்கையும்
சிறகடிக்கும்.
எல்லைகளைத் தாண்டி.
இறுதியில்
முகக் கண்ணாடியில்
நீயே உன்னைப் பார்க்கும்போது,
ஒரு கேள்வி
மௌனமாய் எழும்:
ஆரம்பத்தில் இருந்தது நான் தானா,
முடிவில் நிற்பது நான் தானா?”

அந்தக் கணத்தில்
பதில் சொல்லும்
உன் பிரதிபலிப்பு,
புழுவல்ல,
வண்ணமிகு
பட்டாம்பூச்சி

அனைவராலும்
விரும்பத்தக்க
உன் உண்மையான
அழகிய முகம்.

LUMINOUS 😇🦋🦋🦋💚💛🧡💜
24

Happy happy Birthday Vasee❤️
Konjam late enralum latest trend a ethachum podhuvom enru than parthen. But ethum sikkala. 🫣
Vayasu poguthu nu feel panathinga FTC password marakatha varaikkum 'All is well' oru safety kku venumna enkitta solli veiyunga FTC password a. Memory loss vanthalum naan njabagam vechu irukken. 😜
Ippolam naan chat la illama egg puff, samosa, tea etc. Ellam ennai vithuthu nimmathiya sapidhuringa la. Njabagam vechu 🧐 ellam list podhu next year return vanthu vangi sapidhuren. 🤣
Indaikku ungalukku bday program vechangala theriyala. But last days konjam happening a irunthathale maranthuthen. I am very sorry ya.🫣

Vasee, wishing you the best. This new personal year is your year, make the best out of it. And take proper care of your health 🥰
After all, the first wealth is health, illaiya?!
Always be happy, Vasee ❤️
Missing our music discussions 😖🎶

https://www.youtube.com/watch?v=5bJWUC2uCF4&list=RD5bJWUC2uCF4&start_radio=1

Music is the strongest form of magic, and u r the one who taught me this!
What people cant do, music can! 🎶🎵

https://www.youtube.com/watch?v=WxNbZLh0PaA&list=RDWxNbZLh0PaA&start_radio=1
25


(காலத்திடம் ஓர் கேள்வி..)

காலம்!
உலக உயிர்களுக்கு எல்லாமே ஓர் அளவுகோல்.
ஆனால் அந்த காலம் எங்கே தொடங்குகிறது...
எதனுடன் பயணித்து..  எங்கே தொடர்கிறது..
எதனை அடைத்த பின்..  எங்கே முடிகிறது...
இதை யார் அறிவார்கள்? நீயா? இல்லை நானா?

காலம்!
ஓர் அணுவில் தொடங்கி.. ஓர் அண்டத்தில் முடிகிறதா?
அணுவில் இருந்து தொடங்கும் செயலுக்கு பெயர் என்ன?
அண்டமாக உருமாறி பின் .. அச்செயல் முடிந்துவிடுமா ?
இல்லை.. அண்டத்தில் இருந்து மறுபடி அணுவாக உருமாறுமா?
இதன் பதில்  யார் அறிவார்கள்? நீ? இல்லை நானா?

காலமே!
உன்னை எதை கொண்டு அளவிட்டு.. கணிக்கின்றார்கள்..
பூமியில் வாழும் உயிர்களுக்கு காலத்தின் அளவுகோல் என்ன?
வெளிச்சத்தையும்.. வெப்பத்தையும் அள்ளித்தெளிக்கும் ஆதவனா?
பாலொளியையும்.. குளிச்சியையும் அள்ளிக்கொடுக்கும் அம்புலியா?
இதன் பதில்  யார் அறிவார்கள்? நீ? இல்லை நானா?

காலமே!
பூமி மேலே உலாவும் உயிர்களுக்கு மட்டும் தான் நீயா?
பூமியின் ஆழத்தில் அடங்கிவாழும் உயிர்களுக்கும்..
நீரின் அடியாழத்தில் நீந்தி திளைக்கும் ஜீவன்களுக்கு...
நீ எதனை  கருவியாக்கி.. காலத்தை அளவிடுவாய்?..
பதில்  என்ன? சொல்..  உன் பதில் தான் என்ன? சொல்..

(காலத்தின் பதில்...)

உயிரே!
உன் கேள்விகளுக்கு இப்போதே விடைசொல்கிறேன் கேள்.
நெருப்பு கோள் சூரியனையும்.. துணை கோள் சந்திரனையும்..
பூமி சுற்றும் வட்டத்தையும் அதன் விட்டத்தையும்(Radius)..
கைக்குள் அடக்கி.. எனக்கு எல்லை கோடிட்டவன்..மனிதன்..

உயிரே!
எண்களுக்குள்ளும் இலக்கத்துக்குள்ளும் எனை அடக்கி...
எல்லையில்லா எனக்கு முற்றுப்புள்ளி வைத்தான்..
அவர்களுக்கு என்னை முழுதாக தெரியவில்லை..
எங்கே நான் உருவாகி.. எங்கே அழிகின்றேன் என்று..

உயிரே!
உனக்கு புரியும் வகையில் எளிமையா..சொல்கிறேன் கேள்..
ஓர் கரு உருக்கொண்டு.. உருவமாகி..உயிராகி..
இங்கும் அங்கும் அலைந்து.. திரிந்து..  இறுதியில்
ஓரிடத்தில் மீளாத்துயில் கொள்ளும் பொழுது..
அந்த உயிரின்.. அடுத்த பயணம் புதிதாய் தொடங்கும்..

எனக்கு (காலம்)... தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை..
அதே போல தான் நீயும்.. முடிவும் முதலும் இல்லா உயிர் நீ...
உனை(உயிர்) ஏந்தும் கூடு மாறலாம்....  மறையலாம்.....
ஆனால் நாம் என்றுமே... ஒன்று தான்... உயிரே...

26
மாற்றம்
இளமை முதல் முதுமை வரை...

இளமையில் இருந்து முதுமை வரை வாழ்வில் வரும் மாற்றங்கள் நம்மை அடுத்த இலக்கை அடைய வைத்து வாழ்வை வெற்றி காண வைக்கிறது

மாற்றம் வாழ்க்கையின் பல ஏற்றத்தாழ்வுகளை புரிந்து கொள்ள வைத்து நம்மை வளமுடன் வாழ வைக்கிறது

புழுவாய் இருந்து கூட்டுப்புழுவாக உறங்கும் நிலை அடைந்து
வளர் சிதை மாற்றங்கள் தன்னுள் கண்டு அழகான வண்ணமிகு பட்டாம்பூச்சியாக உருமாற்றம் பெறுவது இயற்கையின் வியப்பாகும்

பள்ளிப்படிக்கும் பருவத்தில் புழுவாய் தன் பயணத்தை துவக்கி, கூட்டுப் புழுவாய் மனத்தை கட்டுக்குள் வைத்து சிந்தனை சிதறாமல் நற்கல்வி பயின்று பட்டப்படிப்பு முடித்து சிறகு அடித்து பறக்கும் பட்டாம்பூச்சி போல் வாழ்க்கை என்னும் பயணத்தில் முதற்படி எடுத்து வெற்றி காணும் இளமை பருவம்

இளமையில் கண்ட கனவுகளை முதுமையில் நிஜமாக்கிடும் பாதைகள் கண்டு, காதல் உறவுகள் கைக்கொண்டு வாழ்வின் கடமைகளை செவ்வனே செய்து வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து உடலில் வரும் மாற்றங்களை கடந்து, பட்டாம்பூச்சி போல் சிறகடித்து பறப்போம்

இளமையின் சுறுசுறுப்பும் முதுமையின் நிதானமும் வாழ்வின் பல வித்தியாசமான அனுபவங்களை கற்றுக் கொண்டு பல மாற்றங்கள் அடைந்து வெற்றி பெறுவோம்

புழுவாய் பல துன்பங்களை அனுபவித்து தன்னை தானே காத்து, தன்னை சுற்றி தனிமை என்ற கூட்டுக்குள் பல சோதனைகள் வென்று புதிய அழகும் சுதந்திரம் பெற்று வண்ண மிகு பட்டாம்பூச்சியாய் வாழ்க்கையில் பல கடினமான மாற்றங்களை கடந்து புதியதாய் புது பிறவி கண்டு வண்ண மிகுந்த வாழ்வை அடைந்து மனக்கவலைகள் மறந்து பட்டாம்பூச்சி போல் சிறகடித்து பறப்போம் வாழ்வில்.
 
27
History / Re: Srinivasa Ramanujan Biography
« Last post by MysteRy on December 22, 2025, 08:52:05 PM »

🇮🇳 Srinivasa Ramanujan was a self-taught mathematical genius from India whose extraordinary work continues to inspire mathematicians around the world. Born in 1887 in a small town in Tamil Nadu, he had little formal training in advanced mathematics but displayed remarkable talent from a young age.

📘 Ramanujan made significant contributions to number theory, infinite series, continued fractions, and modular functions. Even without access to proper mathematical education or tools, he independently developed formulas and identities that were far ahead of his time. Many of his ideas were so original that they surprised the world’s leading mathematicians.

📨 In 1913, Ramanujan wrote a letter filled with formulas to British mathematician G.H. Hardy at Cambridge University. Hardy immediately recognized Ramanujan’s brilliance and invited him to England. Their collaboration became one of the most famous in the history of mathematics. Together, they published several important papers and expanded the field of pure mathematics.

🔢 Among his many achievements, Ramanujan worked on the partition function, the Ramanujan prime, and provided deep insights into modular forms, which are now central in modern mathematics and even physics.

🩺 Unfortunately, Ramanujan’s health suffered in England’s cold climate, and he returned to India in 1919. He died the next year at just 32. Despite his short life, he left behind thousands of unpublished results, many of which are still being studied today.
28
Many More Happy returns of the day My Dear frnd Vase 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🌹🌹🌹🌹🌹🌹🌹
29
கவிதைகள் / Re: கிறுக்கல்கள்
« Last post by joker on December 22, 2025, 06:06:54 PM »

அதுதானே அப்படித்தான்…
பிடித்து அணைக்க வேண்டும்
என்ற பிடிவாதமின்றி,
அருகில் நின்றாலே போதும்
என்ற எண்ணங்கள்
மொட்டிடும் அந்த இடத்தில்தான்
ஆழமாகப் பதிந்த
வேர்கள் ஒன்றையொன்று
முத்தமிடுகின்றன
.
30
Belated happy birthday annaa.... My lovable anna... Keep smiling always 🎉💫
Pages: 1 2 [3] 4 5 ... 10