28
« Last post by NiYa on April 03, 2026, 01:49:11 PM »
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
தொகுப்பாளருக்கும் என் வணக்கம்
நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியில் இது என் முதல் பதிவு. அருமையான நிகழ்ச்சி .. தொகுப்பாளர்கள் திறமை அருமை .....
மறக்க முடியாத ஆசிரியர் என் வாழ்க்கையில் இந்த தலைப்பை வாசிக்கும் போது என் மனதுக்குள் வந்த முகம் நான் என் வாழ்வில் பார்த்த இரண்டாம் ஆண் தேவதை. அது என் பள்ளிக்காலத்தின் 6 ஆம் தரம் முதல் முதல் ஆண் ஆசிரியர் என் வாழ்க்கையில் புது அனுபவம் அது . அதுவும் அறிவியல் பாட ஆசிரியர் அவர்.
கடும் கோவக்கார் போல உருவம் , முறுக்கு மீசை , நரைத்த முடி , பருத்த உருவம் தான் ஆனாலும் யாரும் காண கனிவான இதயம் அவருக்கு . அது மட்டுமா அவருடைய மேற்சட்டை கசங்கி நான் பார்த்ததில்லை அவ்வளவு நேர்த்தியான மனுஷன் .
படிப்பில் எல்லாம் சரியாக இருக்கவேண்டும் . எழுதும் புத்தகங்கள் கூட நேர்த்தியாக இருக்கவேண்டும் ஒரு மடிப்பு இருந்தாலும் அதுக்கு அடி தான் விழும். உன்னால் என்ன முடியுமோ அதை நீ செய்ய வேணும் எப்போதும் நீ 100 மதிப்பெண்கள் பெறவேண்டும் எண்டு சொல்லவே மாட்டார். உன்னுடைய முழு முயற்சி செய் என்பது தான் அவர் வார்த்தை.
அவரது கையொப்பம் அழகான தமிழில் இருக்கும் இன்னும் எங்கள நினைவிருக்குறது அவரை பார்த்து தான் இன்றும் என் கையொப்பம் தமிழில் இருக்கிறது. நிறைய அடிகள் வாங்கி இருக்கான் ஆனாலும் அவர் மேல் ஒரு துளி கோவம் இல்லை .
இன்னும் நினைவிருக்கு ஒரு சம்பவம் ஒரு தடவை ஆசிரியர் பெற்றோர் கலந்துரையாடல் அதுவும் மதிப்பெண்கள் சம்மந்தமாக எப்பவும் என்னோட அம்மா வந்த என்னோட குறும்புத்தனம் தான் , மதிப்பெண்கள் தான் ஒரு குறையாக என்னோட ஆசிரியர் சொல்லுவாங்க . அம்மா உடனே அழுத்துடுவா அது அவங்களோட இயல்பு ஒரு தடவை சரியான குறைவான மதிப்பெண்கள் எனக்கு அப்போ அம்மா அழுத அப்போ சார் வந்து அழவேண்டும் அம்மா அவள் நல்ல வருவாள் நீக்க யோசிக்கவேண்டும் அவள் படிப்பாள் பாருங்க எண்டு சொன்னார். யாரும் அப்படி சொல்லி என்ன ஊக்கம் குடுத்தது இல்லை. அந்த நாள் இன்னும் என் வாழ்க்கையில மறக்க முடியாது.
இப்படி அழகாக இருந்த நாட்கள் அது பிறகு 7 ஆம் தரம் மாறும் போது சார் இல்லை. நிறைய வெறுமை அப்போ அப்போ அவர் போய்பார்த்துட்டு வருவான். அது எனக்கு ஒரு வழக்கம் ஆகிட்டு . சரியாக 6 மாதத்துக்கு பிறகு ஒரு செய்தி பாடசாலையில சார் எதோ ஆகிடும் வைத்தியசாலையில அனுமதிக்க பட்டதாக அறிந்தேன் . அடுத்த நாள் அந்த துக்க செய்தி . என் வாழ் நாள்ல நான் அழுத முதல் இறுதிசடங்கு அது . இன்னும் நினைவிருக்கு எங்க பாடசாலை அரங்கு ல அவரோட உடலை வைச்சிருந்தாக தாங்க முடிய வேதனை ..
அவர் என்ன விட்டு போனாலும் அவர் சொல்லிக்கொடுத்த எல்லாம் இன்னும் இருக்கு மனசுல .
திரு . பிரான்சிஸ் சீவரத்தினம் இது தான் அவர் பேர் சொல்லும் போதே ஒரு மன நெகிழ்ச்சி எனக்கு .
அவர் மாணவி நான் எண்றதுல எனக்கு நிறைய பெருமை
உங்களோட நல்ல மனதுக்கு நீங்க சொர்க்கத்துல தான் இருப்பிங்க sir அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு ..