98
« Last post by Yazhini on March 20, 2026, 11:48:11 PM »
என்னை அதிகமா பாதித்த மற்றும் motivate பன்ற திரைப்படங்களுள் ஒன்று "வாகை சூடவா"...
2011 இல் வெளிவந்த இந்த திரைப்படத்துல விமல், இனியா மற்றும் பாக்கியராஜ் முக்கிய கதாபாத்திரத்துல நடிச்சுருப்பாங்க.
கல்வியின் முக்கியத்துவத்த இந்த படத்துல சொல்லிருப்பாங்க. கல்வி கிடைப்பது எல்லோருக்கும் எளிது இல்லனும் ஒரு ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் பிறகு படிக்க ஏங்கும் தருணங்கள் ன்னு கதை காமெடி கலந்த சமூக சிந்தனையோடு அமைந்திருக்கும்.
இந்த படம் personal அ பல பாதிப்ப எனக்குள்ள ஏற்படுத்திற்கு. நமக்கு பிடிச்ச வேலை செய்யணும் அதுவும் பிடிச்ச மாதிரி செய்யணும் முக்கியமா மன நிறைவா செய்யணும் ன்னு இந்த படத்த பாக்கும் போது எல்லாம் தோணும்.
இப்பவும் அந்த படத்துல காட்டுற மாதிரி வேலைக்கு போய்ட்டு படிக்கிற students இருக்காக. கல் அறுக்குறது, பூ பறிக்கிறது, தறி clean பண்றது ன்னு வேலை செஞ்சுட்டே படிக்குற பசங்கள பாக்கும் போது இந்த படம் எனக்கு அடிக்கடி ஞாபகம் வரும்.
கதை: செங்கல் அறுக்கும் இனமா ஒரு ஊரே ஆண்டே என்பவருக்கு அடிமை மாதிரி வேலை செய்றாங்க. அங்க குழந்தைங்க பள்ளிக்கூடம் போய் படிக்க மாட்டாங்க, அதுக்கு விடவும் மாட்டாங்க. அந்த குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர NGO வால ஏற்பாடு பண்ணப்படுற teacher தான் விமல். விமல் படிப்போட முக்கியத்துவத்த அந்த ஊர் மக்களுக்கு எப்படி புரியவைக்கிறாங்க, அதுல ஏற்படுற இடர்பாடுகள் ன்னு படம் நகரும்...
Teaching வெறும் வேலை இல்ல அது ஒரு வித அமைதியான புரட்சி ஏற்படுத்த கூடிய கருவி... அத பயன் படுத்துற விதத்துல பயன்படுத்துனா society ல பல மாற்றங்கள ஏற்படுத்தலாம், விதைக்கலாம். இந்த கருத்த விமல் ஆசிரியரா இந்த படத்துல ஆழமா அழகா தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்திருப்பாங்க.
ஹீரோவோட எண்ணத்த புரிஞ்சுகிட்டு supportive character அ பாக்கியராஜ் அப்பாவா நடிச்சுருப்பாங்க. ஹீரோ சமையல்ல திருடி சாப்டுறது, விடுகதை கேட்டு அலற விடுறது ன்னு இனியா ஒருபக்கம் காமெடி பண்ண, படத்துல குட்டி பசங்களா வர குழந்தை நட்சத்திரங்கள் அவங்க பங்குக்கு இயல்பான நடிப்பு ல காமெடிய தெறிக்க விட்டுருப்பாங்க ...
"செங்கல் சூல காரா" மற்றும் "ஆ னா ஆவன்னா ஈனா அத அறிவிக்க வந்தவன் ஆண்டவனா" பாடல்கள கேட்கும் போது எல்லாம் மெய்சிலிர்க்கும்...
என் நெஞ்சில் மறக்க முடியாத திரைப்படங்களில் "வாகை சூடவா" என்றுமே முதலிடம் தான்...