Recent Posts

Pages: 1 ... 8 9 [10]
91
A Florida Keys road trip along the Overseas Highway (US-1) is one of America’s most beautiful coastal drives — 113 miles, 42 bridges, and endless turquoise water views connecting Key Largo to Key West. Here’s everything you need for the perfect trip:

🗺️ Route Overview

Start in Miami, then drive through:
Key Largo → Islamorada → Marathon → Big Pine Key → Key West
Each island has its own vibe — from coral reefs to roadside tiki bars.

🚗 Essentials for the Drive

Time: 2–3 days minimum (more if you want to explore)
Car: Convertible or SUV — scenic views guaranteed!
Fuel up early: Long stretches have limited stations.
Playlist: Tropical beats or Jimmy Buffett vibes!
Snacks & sunscreen: The Florida sun is no joke.
Camera or drone: The bridges and sunsets are unreal.

🌅 Top Stops

John Pennekamp Coral Reef State Park – Snorkel the only coral reef in the continental U.S.
Robbie’s in Islamorada – Feed tarpon by hand!
Seven Mile Bridge – Iconic drive and sunset views.
Bahia Honda State Park – Perfect beach stop.
Key West’s Mallory Square – Sunset celebration and street performers.


92
The Great River Road is one of America’s most scenic and soulful drives, stretching nearly 3,000 miles through 10 states — from Minnesota’s Lake Itasca, where the Mississippi River begins, all the way to the Gulf of Mexico in Louisiana. This legendary byway winds through charming river towns, lush forests, and farmland, tracing the river’s story through America’s heartland.

In Minnesota, start at the river’s source in Itasca State Park, then explore Dubuque, Iowa for its historic bluffs and river museums. Cruise into Mississippi River towns like Hannibal, Missouri — Mark Twain’s boyhood home — and Memphis, Tennessee, where blues and barbecue reign supreme. Farther south, enjoy Vicksburg’s Civil War history, and finish in New Orleans, soaking up jazz, Creole flavors, and sunset views over the delta.

Every stop along the Great River Road offers a taste of small-town America, river heritage, and endless photo ops — making it a must-drive for history buffs and road trip lovers alike.


93

இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்... "உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள், கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே..."

இந்தியர் : "உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா..?"

ஆங்கிலேயர் : "அது முடியாதே..."

இந்தியர் : "ஏன் முடியாது..?"

ஆங்கிலேயர் : "அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே..."

இந்தியர் : "உங்கள் நாட்டை பொறுத்தவரை ராஜாவின் மனைவி மட்டும் தான் ராணி, ஆனால் எங்கள் நாட்டை பொறுத்தவரை அனைத்து பெண்களும் எங்களுக்கு மகாராணிகள் தான்".

இந்த பதிலை கேட்டவுடன் ஆங்கிலேயர் வாயடைத்துப் போனார். ஆங்கிலேயரிடம் உரையாடிய இந்தியர் வேறு யாருமல்ல..

94

மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - "என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டு விட்டார். முறை தவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?

நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா?

பரசுராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?

ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.

திரௌபதியின் சுயம் வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப் பட்டேன்.

குந்தி கூட இறுதியாக என் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார். இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும்" எனக் கேட்டான்.

அதற்கு கிருஷ்ணன் பதிலாக "கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன். என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன். நீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் ஆனால் . நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. நல்ல கல்வி இல்லை. இராணுவ பயிற்சி இல்லை. ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.

நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிற போது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்திபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்..

நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்து கொண்டேன்.

ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை..

துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?
கண்ணன் தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும். கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.

வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை. ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுத்தப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்ல அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.

வண்ணத்துப்பூச்சிக்கு தன் உடலில் உள்ள வண்ணங்கள் தெரிவதில்லை . அது போல மனித வாழ்வின் மகத்துவம் அவரவர் எண்ணங்களில் உள்ளது என்பது சில சமயம் நமக்கு புரிவதில்லை.

நம் வாழ்க்கை புத்தகத்தில் சில பக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்,

சில பக்கங்கள் வரையப்பட்டிருக்கும்,

சில பக்கங்கள் வண்ணம் தீட்டப்பட்டிருக்கும்,

சில பக்கங்கள் கிறுக்கப்பட்டிருக்கும்,

சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கும்,

ஆனால் இன்னும் பல பக்கங்கள் வெறுமையாகவே இருக்கும்..

அது எப்படி இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோமோ
அப்படியே அதை நாம் மாற்றுவோம்..

நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில். போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை.

எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடு முரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே".
95

காலம்தொட்டு நம் தமிழர் மரபில் கோவில் கட்டி கும்பிட்டு வருவது வழக்கம். மன்னர்களும் மாமனிதர்களும் அந்தக் காலத்திலேயே பிரம்மாண்ட கோவில்களைக் கட்டி வழிபட்டு வந்தனர். ‘அவன் சாமி கும்பிடுறதால தாண்டா அவன் உடம்பும் வாழ்க்கையும் ஆரோக்கியமா இருக்கு’ என பேசிக் கொள்வார்கள். உண்மையாகவே நாம் கோவிலுக்குப் போகும்போது நம் மனதிலும் உடலிலும் ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். அந்த புத்துணர்ச்சி எப்படி நம் உடலுக்கும் மனதிற்கும் கிடைக்கிறது… இதோ ஓர் அறிவியல் பூர்வமான அலசல்:

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் அந்தக் காலத்திலேயே கோவில்கள் கட்டியிருக்கிறார்கள். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான். இதன் குறிப்பு. கோயில்களில் ஒரு அபரிமிதமான காந்த சக்தியும், நேர்மறை ஆற்றலும் அதிகம் கொண்டிருக்கும். வட துருவமும் தென் துருவமும் இணையும் அந்த சிறிய இடத்தில் தான் கடவுளின் சிலை வீற்றிருக்கும். அதை நாம் கர்ப்ப கிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

மூலஸ்தானத்தில் சிலைக்கு கீழே செப்புத் தகடுகளை வைத்து பதிக்கப்பட்டிருக்கும். இந்த செப்புத் தகடுகள் அந்த காந்த ஆற்றலை ஈர்த்து வெளியே கொண்டு வரும் ஆற்றலை உடையது. அந்த மூலஸ்தானத்தில் மூன்று பக்கமும் சிலைக்கு நெருக்கமாக சுவரை எழுப்பி, ஒரு பக்கம் மட்டும் பக்தர்கள் உள்ளே வந்து கடவுளை வணங்கும் வண்ணமாக அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஒரு பக்கம் திறந்திருக்கும் வழியின் மூலமாகத்தான் அந்த காந்த ஆற்றல் நமக்கு கிடைக்கிறது. அது மட்டுமின்றி கோவிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த காந்த ஆற்றல் கோவில் கருவறையின் இடமிருந்து வலமாக பாய்கிறது. அந்தச் சுற்றுப் பாதையில் நாம் மூலஸ்தானத்தை சுற்றும்போது காந்த ஆற்றலும் நம் உடலை முழுமையாக வந்தடைகிறது. காந்த ஆற்றலும் நேர்மறை ஆற்றலும் நம் உடலுக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒருவித சக்தியை கொடுக்கிறது. கோவிலின் கருவறையில் எப்போதும் ஒரு விளக்கு எரிந்துகொண்டே இருக்கும். மேலும் கோவில் விக்கிரகத்திற்கு பின் புறமும் ஒரு விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். ஆனால் இப்போது விக்கிரகத்திற்கு பின்புறம் மின்சார விளக்குகளையே எரிய விடுகிறார்கள். விளக்கில் இருந்து வெளிப்படும் ஒளி, காந்த ஆற்றலை உந்தி வெளியே தள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது. அது போக மந்திரம் சொல்லும் போது மணியடிப்பதும், அங்கே செய்யப்படும் அபிஷேகம் அந்த ஆற்றலை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரி விதமான காந்த ஆற்றலை கொடுக்கிறது. அபிஷேகம், கற்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 அறையில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மட்டும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொண்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடத்தில் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது. அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த ஆற்றலை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கற்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்), கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் பாத்திரத்தில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை தொடர்ந்து உண்பவர்களுக்கு உடலில் எந்த நோயும் ஏற்படுவதில்லை என்பது அறிவியல் பூர்வமான உண்மை. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க. இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான். வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்தப் படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம். கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல ஆற்றல்களை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் சக்தியை பற்றி கொள்ளுமாம். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜியும் வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும்போது ஒரு உற்சாகம் கிடைக்கிறது. அது போக கோயிலின் கொடி மரத்திற்கும் இந்த பரிகாரத்திற்கும் ஒரு நேரடி தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் அலைகள் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது. அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி. அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளிப் பிரகாரத்தை காக்கும் இன்னொரு பாதுகாப்பான். அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால், மின்னலால் ஏற்படும் மின் அழுத்தத்தை நியூட்ரல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.
96
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on November 21, 2025, 06:13:48 AM »
97
கவிதைகள் / Re: அவளின் நட்பு !
« Last post by SweeTie on November 21, 2025, 12:13:13 AM »
நட்புக்கு எங்கே முடிவு?
பேசினாலே சண்டை வருமே!
சண்டைக்கு  தொடக்கம் எங்கே ?
மௌனத்தின் வலிகூட 
இதயத்தை தொடும் நட்பு தானே!

அருமையான கவிதை  JOKER 
99

எவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள். ஒவ்வொன்றும் ஒரு விதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை, அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன. சில செடிகளின் மலர்கள் என்று நினைப்பது உண்மையில் மலர்களாக இருக்காது.சில செடிகளில் வெண்ணிற உறைகளில் இருந்து எட்டிப் பார்ப்பவை மலர்களே அல்ல. மலர் போலத் தோற்றமளிக்கும் போலிகள்! சில செடிகளின் வண்ண இலைகளே மலர்கள் போல் காட்சியளிக்கும். மலர்கள் இல்லாதவற்றை மலர்கள் என்று எண்ணுகிறோம். சில செடிகளில் மலர்களை நம்மால் அடையாளம் தெரிந்துகொள்ள முடிவதில்லை. புற்களின் நுனியில் உள்ள சிறுதுணுக்குகள் புற்களின் மலர்கள்தான்! சில தானியங்களின் இளங்கதிர்களே அவற்றின் மலர்கள். பூந்தாதையோ, விதைகளையோ அல்லது இரண்டையுமே உருவாக்கும் தொகுதியே மலர்களாகும். விதைகளை உடைய தாவரத்துக்கே மலர்கள் உள்ளன. விதைகள் உருவாக்குவதற்குக் காரணமாக உள்ள தாவரத்தின் பாகங்களே மலர்கள் என்று சொல்லலாம்.

மகரந்தச் சேர்க்கை புரிய உதவும் பூச்சியினங்களைக் கவர்ந்திழுக்க, பூக்கள் நறுமண வலையை வீசுகின்றன. பூவிதழ்களிலேயே வாசனை தரும் மிகச் சிறிய துகள்கள் உள்ளன. அவையே நறுமணத்தை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளை மகரந்தம் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டியே நறுமணம் என்கிறார்கள், தாவரவியல் நிபுணர்கள்.

சில மலர்களின் இதழ்களில் உள்ள ஒருவித எண்ணை, நறுமணத்தை உண்டு பண்ணுகிறது. அந்த எண்ணைகளைத் தாவரங்கள் தங்கள் வளர்ச்சியின்போது உற்பத்தி செய்திருக்க வேண்டும். மிகச் சிக்கலான அப்பொருள், நடைமுறையில் உருக்குலைந்தோ, சிதைந்தோ எண்ணையாக மாறி காற்றிலோ, வெயிலிலோ ஆவியாகி நறுமணத்தை வெளியிடுகிறது. எல்லா மலர்களின் நறுமணமும் ஒரேவிதமாக இருப்பதில்லை. சிலவற்றை நாம் விரும்புவோம். சில நமக்குப் பிடிக்காது. ஆனால் பூச்சியினங்களுக்கு ஒவ்வொரு நறுமணமும் நன்றாக நினைவில் இருக்கும். தங்களுக்கு விருப்பமான நறுமணத்தை அவை அறிந்திருக்கும்.
100

காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. காலிபிளவர் மூளையை போன்ற தோற்றம் உடையது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு உன்னதமான மருந்தாகிறது. புற்று நோய் உருவாவதை தடுக்குகிறது. நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் இல்லாது செய்கிறது. காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்புசக்தி அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது.
செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது.

இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் பல்வேறு நன்மைகள் விளையும்.. காலிபிளவரை பயன்படுத்தி கீழ்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, சிறிது பூண்டு, மிளகு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து குடித்தால் மூட்டுவலி, வாத ஜுரம், வீக்கம் சரியாகும். உடல் வலியும் குறையும். காலிபிளவர் இலைகளை பயன்படுத்தி அடிப்பட்ட வீக்கம், மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். விளக்கெண்ணெய்யுடன் காலிபிளவர் இலை பசையை சேர்த்து நன்றாக வதக்கி பத்தாக போட்டு துணிகட்டி வைத்தால் வலி, வீக்கம் சரியாகும். காலிபிளவரை பயன்படுத்தி சிறுநீரகம், இதயத்தை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
ஒரு ஸ்பூன் காலிபிளவர் பூ பசை, அரை ஸ்பூன் சீரகம், சிறிது மிளகுப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடிக்கவும். இது, இதயத்துக்கு பலம் கொடுக்கும் ஊட்டசத்தாகிறது. எலும்பு பலவீனம் அடையாமல் செய்கிறது. அடிபட்ட இடத்தில் ரத்தம் சேர்ந்து வீக்கம், ரத்தகசிவு இருந்தால் அவைகள் சரியாகும். சிறுநீர் பெருக்கியாக விளங்குவதுடன் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உன்னதமான இதய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. காலிபிளவரை பயன்படுத்தி புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி 50 முதல் 100 மில்லி அளவுக்கு தினமும் புற்றுநோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது, புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.
Pages: 1 ... 8 9 [10]