93
« Last post by joker on July 02, 2026, 10:41:14 PM »
ஒரு உணவு... ஒரு நினைவு அருமையான தலைப்பு
நான் சிறுவயதில் பள்ளி விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு செல்வது வாடிக்கை
அப்படி தான் என் அம்மா சைடு வீடு அப்பா சைடு வீடு ரெண்டு சைடும் உறவுகாரங்கனு வீடு எப்பவும் கலகலப்பா இருக்கும்
ஏதாச்சும் விசேஷம்னா எங்க உறவுகாரங்களுக்கே தனியா ரெண்டு BUS தேவைப்படும் .அப்படி இருக்கும்.
பள்ளி விடுமுறைல கொஞ்ச நாள் அம்மாவீட்ல,கொஞ்ச நாள் அப்பா வீட்லனு போகும் .அதுல என் அப்பாவோட அப்பா என் தாத்தா வீட்டுக்கு போயிருந்தேன், அவரை பத்தி சொல்லனும்னா காலையில வேலைக்கு போவார் , ராத்திரி தான் வருவார் , அப்போ எல்லாம் தொலைபேசி, இல்லாததால் பகலில் ஆடிய ஆட்டத்தால் சாப்பிட்டு நல்லா சீக்கிரமே தூங்கிவிடுவோம்,
என் தாத்தா பழக்கம் வரும்போது ஏதாச்சும் பலகாரம் வாங்கிட்டு வருவார், வீட்டில் உள்ள சிண்டுங்க முதல் பெரியவங்க வரை எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சம் னு பிச்சி பிச்சி கொடுப்பார் , தூங்குற எங்களையும் விட மாட்டார் ...கொஞ்சம் இனிப்பு உதட்டில் பட்டு சுவை மூளைக்கு ஏறி தூக்கம் களைந்து , கண்விழித்து கை நீட்டி பார்க்கும்போது , எல்லாருக்கும் குடுத்து அது காலி ஆயிருக்கும் . ஒரு நாள் இல்ல எல்லா நாளும் இதே கதை தான் .. இருக்குறத எல்லாருக்கும் சமமாக பங்கிட்டு குடுக்கணும்னு அவர் கிட்ட நான் கத்துகிட்ட உணர்வு அது , அது என் அப்பாகிட்டையும் இருக்கு , ஒரு பர்பி மிட்டாய் வாங்கினா கூட அதை வீட்டுக்கு கொண்டு வந்து அதை பிரிச்சி எங்களுக்கு குடுத்திட்டு தான் சாப்பிடுவார்
அதே போல உப்புமா பிடிக்காத எனக்கு என் அத்தை செய்யும் ரவை உப்புமாவின் வாசனையும் சுவையும் தட்ட கைல வெச்சிக்கிட்டு காத்திருப்போம் சாப்பிட , வருடங்கள் பல கடந்தும் அதன் மனமும் , சுவையும் இன்னும் மனசுல நிக்குதுங்க
அதே போல என் சித்தி பண்ற சிக்கன் கிரேவி சூப்பரா இருக்கும் , ஆனா இதுல என்ன சுவாரசியம்னா
அவங்க சிக்கன் சாப்பிட மாட்டாங்க , ஆனா அவ்ளோ சுவையா இருக்கும் அவங்க சமையல் .
என் பாட்டி பண்ற துவையல், அம்மா ஊட்டி விடுற பழைய சோறுல கூட அவ்ளோ சுவை ஒளிந்திருக்கும் , ஏன் தெரியுமா? அதுல அவங்க அன்பை சேர்த்து ஊட்டி விடுவாங்க அதான் . எவ்ளோ லேட்டா நான் வீட்டுக்கு போனாலும் எனக்காக காத்திருப்பாங்க சாப்பிடாம மொத்த குடும்பமும்.
அப்புறம் நம்ம socky கூட எப்பவும் சாப்பிடற பிரியாணி அது எங்களுக்கு உணர்வோடு கலந்த உணவாக மாறிடிச்சிங்க . அது இல்லாம எப்பவும் எங்க அரட்டையே முடியாதுங்க ...
தினமும் நாம நெறைய உணவை சாப்பிடறோம் ஆனா மனசுல தங்குறது ஏதோ சிலது தான்
எங்கு அன்பு என்ற உணர்வோடு சமைக்கபடுதோ அதோட சுவை அலாதி தான் எப்பவும் நம்ம நினைவுகள்ல தங்கிவிடும்
என்ன நான் சொல்றது சரி தானே ?
***Joker***