Recent Posts

Pages: 1 ... 8 9 [10]
91
ஆன்மீகம் - Spiritual / Re: BIBLE VERSE of THE Day ✝️ 🙏
« Last post by MysteRy on October 12, 2025, 08:41:02 AM »
92
ஆன்மீகம் - Spiritual / Re: THOUGHT for Today ✝️🙏
« Last post by MysteRy on October 12, 2025, 08:40:22 AM »
93
ஆன்மீகம் - Spiritual / Re: MORNING PRAYER ✝️ 🙏
« Last post by MysteRy on October 12, 2025, 08:39:20 AM »
94
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on October 12, 2025, 08:33:26 AM »
95

காலைல எழுந்ததும் சாப்பிடுங்க... இந்த பலன்களும் கிடைக்கும்...*

பூண்டு இந்திய சமையலில் மட்டுமல்ல, சீனா மற்றும் தெற்காசிய நாடுகளின் சமையலில் மிக முக்கிய இடம்பெறும் ஒரு மசாலா பொருள். இதை பொதுவாக உணவுகளில் சேர்த்து சமைத்து சாப்பிடுவோம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் பூண்டை எடுத்துக் கொள்ளும் உடலில் நிறைய அதிசயிக்கத்தக்க ஆரோக்கிய மாற்றங்கள் நிகழ்வதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வாங்க அது என்னனு தெரிஞ்சிகிட்டு நாமும் சாப்பிட ஆரம்பிப்போம்.

அல்லியம் சட்டைவம் என்பது பூண்டின் அறிவியல் பெயர். அளவில் தான் இது சிறியது. ஆனால் இதில் பயோ - ஆக்டிவ் மூலக்கூறுகள் மிக அதிகம். நிறைய ஊட்டச்சத்துக்களும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் நிறைந்தது. அதனால் பச்சையாகவே தினமும் வெறும் வயிற்றில் இரண்டு பூண்டு பற்களைச் சாப்பிடலாம். வறுத்தும் சாப்பிடலாம்.

*​நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க பூண்டு

பூண்டில் உள்ள அல்லிசின் மற்றும் சல்ஃயூரிக் உள்ளிட்ட மூலக்கூறுகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன. இந்த அமிலத்தன்மை கொஞ்சம் கடுமையான வாசனை வீசக் காரணமாக இருக்கிறது.

பூண்டில் உள்ள இந்த அல்லிசின் பண்பு ரத்த வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்து, நோய்த் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும்.

*​இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பூண்டு

பூண்டில் உள்ள சல்ஃயூரிக் அமிலம் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதோடு இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இதனால் கார்டியோ வாஸ்குலர் நோய்களின் ஆபத்தைக் குறைக்க உதவி செய்கிறது.

பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தையும் கெட்ட கொலஸ்டிராலான எல்டிஎல் கொலஸ்டிராலையும் குறைக்கச் செய்யும். குறிப்பாக நல்ல கொலஸ்டிராலான எச்டிஎல் கொலஸ்டிராலை அதிகரிக்கச் செய்ய உதவுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

*​ஜீரணத்தை மேம்படுத்தும் பூண்டு

காலையில் வெறும் வயிற்றில் பூண்டை பச்சையாகச் சாப்பிடுவதன் மூலம் ஜீரண மண்டலத்தின் செயல்பாடு மேம்படுத்தப்பட்டு ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

*​உடலை டீடாக்ஸ் செய்யும் பூண்டு

காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் உணவுகள் நம்முடைய உடலில் சேருவது தான் ஆற்றலாக மாறும்.

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி டீடாக்ஸ் செய்ய வேண்டியது மிக முக்கியம். அப்படி டீடாக்ஸ் செய்வதற்கு பூண்டு உதவி செய்யும். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டை பச்சையாகச் சாப்பிடும்போது அது ரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் கெட்ட கொலஸ்டிராலைக் கரைத்து வெளியேற்றி கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவி செய்கிறது.

*​நீரிழிவை தடுக்க உதவும் பூண்டு

பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது உடலில் இன்சுலின் உணர்திறனைத் (insulin sensitivity) தூண்டி, ரத்தத்தின் குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்கவும் நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் உதவி செய்கிறது.

குறிப்பாக, ப்ரீ - டயாபடீஸ் மற்றும் டைப் 2 நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கும் இது மிக உதவியாக இருக்கும்.
96

இன்றைய அவசர வாழ்க்கை முறையில், காய்ச்சல் வந்தாலோ சளி பிடித்தாலோ உடனே மருந்து மாத்திரைகளை வாங்கி விழுங்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது. 60 வயதைக் கடந்த நான், என் சிறிய வயதிலிருந்து கற்றுக்கொண்ட வீட்டு மருத்துவத்தைத்தான் கடைப்பிடித்து வருகிறேன். ஒருவேளை அப்படிச் செய்து சரியாகவில்லை என்றால் மட்டுமே மருத்துவரை அணுகுவேன். கஷாயம் வைப்பது மாத்திரை போடுவதுபோல் எளிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எந்த பின்விளைவுகளும் அதில் இருக்காது. டாக்டரிடம் செல்ல பணமாவது இருக்கும். நேரம்தான் இல்லாமல் போய்விட்டது. சில எளிய பிணிகளுக்கான எளிமையான வைத்தியங்களைப் பின்பற்றி பாருங்கள்... நான் பின்பற்றி நலமானதால் அவற்றை இங்கே பகிர்கிறேன்.

முதலில் நமக்கு அடிக்கடி வரும் சளி காய்ச்சலுக்குப் பாட்டி வைத்தியம் சிலவற்றைச் சொல்கிறேன். சளி இருமல் இதனோடு காய்ச்சல் என்றால் ஒன்றரை டம்ளர் தண்ணீர் எடுத்து அதில் 2 வெற்றிலை, 1/2 தேக்கரண்டி (டீ ஸ்பூன்) சீரகம் , 2 கிராம்பு ,1 ஏலக்காய், 7 மிளகு இவற்றைப்‌போட்டு நன்கு கொதிக்கவிடுங்கள் 3/4 டம்ளர் ஆனதும் பொறுக்கும் சூட்டில் குடியுங்கள். இரண்டுநாள் காலையும் மாலையும் செய்தால், சளி வெளியேறி இருமல்போய் காய்ச்சலும் விட்டுவிடும். அப்படியும் காய்ச்சல் சரியாகவில்லையென்றால் டாக்டரிடம் செல்லுங்கள். தேவைப்படாது என்பதே உண்மை. சிறுவர்களுக்கு இதில் பாதியளவு எல்லாம் போட்டு கொதிக்க வைத்துத் தரலாம். குணமாகும்.

கண்சிவப்பியிருந்தால் அதாவது, வலது கண் சிவந்தால் இடதுகால் கட்டைவிரல் நகத்தின்மேல் வெற்றிலை சுண்ணாம்பைத் தடவி வைத்தும் இடது கண் சிவந்தால் வலது கால் கட்டைவிரல் நகத்தில் சுண்ணாம்பு தடவியும் பூசி வரக் கண்சிவப்பு போகும்.

கண்ணில் நீர் வடிந்து கலங்கி வலித்தால் கொய்யாமர இலைகளை நான்கைந்து பறித்துவந்து தோசைக்கல் அல்லது வாணலியைச் சூடாக்கி அதன்மேல் இலைகளை மாற்றி மாற்றிப் போட்டு கண்மேல் ஒத்தடம் வைக்க, ஒருநாளில் மூன்றுமுறை செய்ய கண்டிப்பாக இந்தப் பிரச்னை சரியாகிவிடும்.

பல் தேய்க்கும்போதும் மாலையில் முகம் கழுவும்போதும் தண்ணீரை கண்களில் அடித்துக் கொள்ளுங்கள். இது கண்களுக்கான சிறந்த தெரபி.

வாயுத் தொல்லையால் முதுகுவலி வந்தால் ஒரு டம்ளர் பாலில் 8 மீடியம் சைஸ் பூண்டெடுத்து மாத்திரைபோல் துண்டுகளாக்கி அது வேகும் வரை நன்கு காய்ச்சி பூண்டை சுவைத்துச் சாப்பிட முதுகுவலி போய்விடும். ரத்தத்தில் சர்க்கரை அளவும் கொலஸ்ட்ரால் அளவும் குறையும். வாயுத் தொல்லையும் குணமாகும். இதயத்துக்கும் நல்லது.

சில பேருக்குக் காலில் தொடையில் அரிப்பு ஏற்படும். சிலபேருக்கு காலில் கறுப்பு நிறத்தில் படையாக ஆரம்பித்து உடம்பு முழுவதும் நமைச்சல் ஏற்படும். இதற்கு எளிதான மருந்து குப்பைமேனி இலையை ஒரு கைப்பிடி எடுத்து மிக்ஸியிலேயே அரைக்கலாம். தண்ணீர் ஊற்றி அரைத்து அதை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் நமைச்சல் இருக்கும் இடத்தில் ஊற்றிக் கழுவிவர குணமாகும். தொடைப்புண் உடனடியாக சரியாகும்.

படிகாரத்தை 5 கிராம் எடுத்து (ஒரு சிறு துண்டு), ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு வைத்தால் கரையும். அதைக்கொண்டுகூட கழுவி வரலாம். இவையெல்லாம் செய்த பின் வேறு தண்ணீர் ஊற்றிக் கழுவாதீர்கள். மருந்து பிடிக்கட்டும்.

கறுப்பு படை நமைச்சலுக்குக் குப்பைமேனி இலையோடு வேப்பிலையும் சேர்த்தரைத்து மஞ்சள் போட்டு பாதிக்கப்பட்ட இடங்களைக் கழுவி வர குணமாகும். இதையெல்லாம் பொடியாக நாட்டு மருந்துக்கடையில் வாங்கிகூட செய்யலாம். இந்தத் தண்ணீரை நாம் ‌குளிக்கும்‌நீரில் கலந்து குளித்துவர உடல் அரிப்பு குணமாகும்.

குதிகால் வலிக்கு நான் சூடான செங்கல்போட்டு பழுத்த எருக்கு இலை போட்டு நிறைய நாள் அதன்மேல் மிதித்தேன். ஆனால், ஒரு சித்த வைத்தியர் சொன்ன யோகா தெரபியில் உடனே நலமானது. ஓரிருநாளில் வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. நம் முதுகு, சுவரில் லேசாகப்படுமாறு நின்றுகொண்டு இரு கைகளையும் மேலே உயரத்தூக்கி ( நன்கு நீட்டித் தூக்குங்கள், வளைக்காமல்) பின் நுனிவிரல்களால் நிற்க வேண்டும். முதுகை லேசாக சுவரில் வைப்பது விழாமல் இருக்கவே.

நேராக நின்று செய்யுங்கள். இதன்மூலம் நம் இரத்த ஓட்டம் கால்களில் நன்றாகப் பாய்கிறது. குதிகால் வலிபோகிறது. இதுவும் என் அனுபவமே. இப்படி நிற்பது மூன்று அல்லது ஐந்து நிமிடங்கள் நில்லுங்கள். வயதானால் சர்க்கரை நோய் வந்தால் நம் கால்விரல்கள் மரத்துப் போகும். இந்தப் பயிற்சியை தினம்தோறும் இருமுறை செய்யுங்கள். நல்லது.

குழந்தைகளுக்கோ நமக்கோ காது வலி வந்தால் தேங்காய் எண்ணெய்யில் (1 ஸ்பூன்) 1/2 பூண்டைத் தட்டிப்போட்டு சூடாக்கி ஆறிய பின் காதில் ஊற்ற (மறக்காதீர்கள், ஆறியபின்) காது வலி குணமாகும். கொஞ்சம் காதைச்சுற்றிகூட தேய்க்கலாம். இதனால் காது வலி சரியாகும். இதில் சரியாகவில்லையென்றால் பின் ஏதாவது பிரச்னையென்றால் டாக்டரிடம் போகலாம். சாதாரண காதுவலிக்கு இந்த எளிய வைத்தியம் போதுமானது.

இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். எங்காவது ஏற்படும் வலிகளுக்குத் தேங்காய் எண்ணெய்யில் கட்டிகற்பூரம் பொடித்துப் போட்டு காய்ச்சி வலியிருக்கும் இடத்தில் தேய்த்தால் வலி சரியாகும். முக்கியமாகக் குழந்தைகளுக்கு நெஞ்சில் சளியிருந்தால் நாம் விக்ஸ் தடவிவிடுகிறோம். கொஞ்சம் சோம்பேறித்தனம் பார்க்காமல் இந்தக் கற்பூர தேங்காய் எண்ணெய்யைத் தடவிப்பாருங்கள், நல்ல பலன் கிட்டும். லேசான சூட்டில் தடவுங்கள்.

பச்சைக் குழந்தைகளுக்கு வயிற்றுவலியால் அழுதால் சொல்லத் தெரியாது. தொப்ப்ளைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவ வயிற்றுவலி உடனே நின்றுவிடும். பால் கொடுக்கும் தாய்மார்களின் உணவைப் பொறுத்தே குழந்தைகளுக்கு வயிற்றுவலி ஏற்படும். அது வாயு வயிற்றுவலி என்றால் வசம்பை விளக்கில் காண்பித்து சுட்டு அதன் கரியை நீரில் இழைத்து தொப்புளைச் சுற்றிப் போட வலிபோய் குழந்தை அழுகையை நிறுத்தும். இவையெல்லாம் நிறைய பேருக்குத் தெரியாது.

நமக்கு அஜீரணம் ஏற்பட்டால் லிம்காவையும் கோக்கையும் குடிப்பதற்குப் பதிலாக நீர்மோர் ஒரு டம்ளர் எடுத்து 2 சிட்டிகை பெருங்காயம் 1/4 ஸ்பூன் மிளகு பொடி கலக்கி சாப்பிட அஜீரணம் போகும். புட் பாய்சன் லேசாக ஏற்பட்டால்கூட ஒருநாள் மூன்று முறை இதைக் குடித்து வர சரியாகும். மிகக் கடுமையானால் மட்டும் டாக்டரிடம் சென்றால் போதும்.

நாம் காலையில் வெறும் வயிற்றில் சீரகம் காய்ச்சிய நீரும் (1 டம்ளருக்கு 1/4 டீ ஸ்பூன்) மதிய உணவிவுக்குப் பின் தயிர் கலந்த வெங்காய பச்சடியும் இரவு மேலே சொன்ன பூண்டுபாலையும் சாப்பிட்டு வர இதயநோய் இல்லாமல் நலமோடு வாழலாம். இதயத்தில் பிளாக் ஏற்படாது. ஓரிரு பிளாக் கரைந்துபோகும்.

எப்போதும் புத்தகம் படித்து கணினி பார்த்து டிவி பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் கண் அயர்ச்சிக்குக் கண்ணிமைகளின் மேல் விளக்கெண்ணெய் தேய்த்து வர கண்களின் அயர்ச்சி போகும்.

ஒரு நாளைக்கு இருமுறை 1 நிமிடம் கண்சிமிட்டலாம். கண்களின் இரு ஓரங்களையும் கண்ணிதழ்களையும் லேசாகத் தடவித்தரலாம். புருவங்களைத் தடவலாம். இவையெல்லாம் கண் பயிற்சிகள்.

நம்மைப் படைத்த இறைவன் நமக்கு வேண்டியதை இயற்கையிலேயே தந்துமிருக்கிறான். மேற்சொன்ன அத்தனையும் ஆபத்தில்லாதது. இந்த எளிமையான வழிமுறைகளை நாம் சோம்பேறித்தனமில்லாது மேற் கொண்டால் டாக்டரிடம் செல்லும் நேரமும் பணமும் மிச்சமாகும்.
97


சாப்பாட்டை பெரிய தட்டில் வைக்காமல் சிறிய தட்டு, கிண்ணத்தில் போட்டுச் சாப்பிட்டால், வழக்கமாகச் சாப்பிடுவதைவிட குறைவாக எடுத்துக்கொள்வோம் என்கிறது மருத்துவ உளவியல்.
98
GENERAL / Feelings can be deceiving
« Last post by Asthika on October 12, 2025, 08:16:03 AM »
Feelings can be deceiving.

They’ll convince you to stay in bed, skip the workout, delay your responsibilities and choose short-term comfort over long-term gain. Yes, it may feel good in the moment; but that fleeting moment is quietly stealing your future. 

Discipline, on the other hand, is unwavering.
 
It doesn’t care if you’re tired, uninspired or unmotivated. It shows up regardless. And while it may be uncomfortable, that discomfort is where real growth and transformation take place. 

You don’t build the life you envision by following your moods. You build it by keeping the promises you’ve made to yourself; especially when it’s most difficult to do so. 

Every disciplined decision; a page read, a workout completed, a task finished; compounds over time, creating lasting strength and momentum. 

Feelings fade. Discipline builds. 
If you're serious about the life you dream of, remember this: Discipline wins, every time.
99

நம்மில் பலருக்கு பழங்கள் சாப்பிடுவதென்பது மிகவும் அதிகமாக பிடிக்கும். அதில் ஒரு சிலர் பழத்தில் தேன்,உப்பு போன்றவை சேர்த்து சாப்பிடுபவர்களும் உண்டு.

அதில் நாவல் பழம், நெல்லி, மாங்காய் போன்றவற்றினில் உப்பை தூவி சாப்பிடும்போது அதன் சுவையானது இன்னும் அதிகம்.

நாம் உப்பை தூவி சாப்பிட்டால் பழங்கள் பிரஷ்ஷாக, அதில் உள்ள பாக்டீரியா மேலும் வளராமல் தடுக்கிறது.அதுமட்டுமல்லாமல் உப்பு கலந்த தண்ணீரில் பழத்தைக் கழுவினால், பழங்களில் இருக்கும் பூச்சிகொல்லி மருந்துகள் தாக்கம் மற்றும் கிருமிகள் அனைத்தும் உடனடியாக அகலும்.

திராட்சை பழம், ஆரஞ்சு பழம் மற்றும் எலுமிச்சை பழம் போன்ற பழத்தில் அசிட்டிக் அமிலம் அதிகமாக இருக்கிறது. அதனால் உப்பை தடவி சாப்பிட்டால் மிகவும் நல்லது. இவற்றில் நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் அதிகமாக இருக்கிறது.

அதனால் இதனுடனே உப்பு கலந்து கொண்டால் வயிற்றினில் சுரக்கும் அமிலத்தினை சமநிலையாக்கிறது. அதேபோல் செரிமாண சம்பந்தப்பட்ட பிரச்சனையைத் தீர்க்கும் என்றும் கூறுகிறார்கள்...
100
History / Re: Nikola Tesla Legacy
« Last post by MysteRy on October 12, 2025, 08:07:09 AM »

Tesla's pioneering experiments ignited a transformative wave across the industry. Fueled by an unyielding commitment to innovation, he immersed himself in vast libraries, mastering eight languages and channeling his brilliance into trailblazing inventions. He envisioned a future where smartphones and the internet would revolutionize communication, picturing a reality where messages, maps, and videos could be held effortlessly in one’s hand. In his oratory, he vividly illustrated a world of robotic armies, guided by wireless technology, foretelling the rise of modern drones and AI in combat. Tesla’s enduring legacy serves as a powerful testament to the notion that the future is crafted by those bold enough to dream without hesitation.
Pages: 1 ... 8 9 [10]