Recent Posts

Pages: 1 ... 8 9 [10]
91
History / Re: Nikola Tesla Legacy
« Last post by MysteRy on June 23, 2026, 01:27:32 PM »


Tesla has filed patents outlining a groundbreaking technology for transmitting wireless energy using the Earths natural resonance frequencies. This innovative approach could revolutionize energy distribution, offering a sustainable and efficient method for powering devices without the need for traditional wiring methods.
92
History / Re: Nikola Tesla Legacy
« Last post by MysteRy on June 23, 2026, 01:26:33 PM »


In 1901, Marconi made a significant attempt at transatlantic radio transmission. However, it is noteworthy that Nikola Teslas patents related to wireless communication were established prior to this achievement. This raises interesting questions about the origins of radio technology and the contributions of inventors throughout history.
93
History / Re: Nikola Tesla Legacy
« Last post by MysteRy on June 23, 2026, 01:25:34 PM »


Teslas innovations in the field of electrical engineering have led to significant advancements in electrical meters and measuring instruments used in laboratories. These patents not only improved accuracy but also transformed the way measurements are conducted, impacting various scientific and industrial applications.
94
பணச் சங்கிலி

விளையாடத் துடித்த பால்ய வயதில்,
விளையாட்டுப் பொருட்களைத் தேடி அலைந்தேன்!
"அப்பாவுக்கு அடுத்த சம்பளம் வரட்டும்" என,
அம்மாவின் வார்த்தைகளில் கட்டுண்டேன் பணச் சங்கிலியில்!

படிக்கும் வயதில் உயரப் பறக்க நினைத்தேன்,
விரும்பிய கல்வியை நாடி நின்றேன்!
ஆசைக்கும் இலட்சியத்துக்கும் விலை உண்டாம் அங்கே,
காசில்லாத காரணத்தால் அங்கேயும் கட்டுண்டேன் பணச் சங்கிலியில்!

முட்டி மோதி பள்ளிக் கல்வி முடித்தேன்,
முன்னேற எண்ணி நல்வேலை தேடினேன்!
தகுதியை மிஞ்சி நின்ற சிபாரிசும் இலஞ்சமும்,
தகர்க்க முடியாமல் தொழில் தெருவிலும் கட்டுண்டேன் பணச் சங்கிலியில்!

இளமைப் பருவத்தில் காதலைத் தேடினேன்,
இதயத்திற்குப் பிடித்தவள் கைபிடிக்க ஓடினேன்!
சொந்த வீடும் வங்கிச் சேமிப்பும் வேண்டுமாம் அங்கே,
சொந்தக் காதலின் தேர்வில்கூட கட்டுண்டேன் பணச் சங்கிலியில்!

இதோ நடை தளர்ந்து, வயது முதிர்ந்து,
இறுதி வாயிலை நோக்கி காத்து நிற்கிறேன்!
முதியோர் இல்ல "பேக்கேஜ்" பேரம் பேசுகிறான் மகன்;
பெற்ற பிள்ளையின் அன்பின் அளவுகோலிலும் கட்டுண்டேன் பணச் சங்கிலியில்!

உழைப்பும் நேர்மையும் இங்கே வெறும் காகிதக் கப்பலோ?
உலகை ஆட்டிப்படைக்கும் கரன்சிகளே உண்மைக் கடவுளோ?
விலங்கிடப்பட்ட கைதியாய் இந்த மாயச் சிறையில் நின்று,
விதியென நானும் கட்டுண்டேன் பணச் சங்கிலியில்!

திறமையும் இறைநம்பிக்கையும் வெறும் நிழல் வேஷமோ?
பணத்தின் பலம் மட்டுமே வாழ்வை ஆளும் தராசோ?
பிணமாய் மாறும் வரை தொடரும் இந்த மாய வித்தையைக் கண்டு,
பிறவிப் பெருங்கடலிலும் கட்டுண்டேன் பணச் சங்கிலியில்!
95
காசு.. பணம்... துட்டு... money money...

சத்தியம தவறாத உத்தமன் போல
நடிப்பான்
சந்தர்ப்பம் வந்தா சட்டப்பையில
நோட்ட திணிப்பான்.
காசுக்கு ஓட்ட வாங்குவான்
கந்துவட்டிக்கு கொடுத்து புரட்சி பேசுவான்.
ஊழல் ஒழியனும்னு மேடைல கத்துவான்
உண்மைய ஒழிக்க (ஒளிக்க) கரன்சி நோட்ட சுத்துவான்

ஐநூறு ரூவா நோட்டுக்கு எதிர்காலத்த வித்துட்டு
'ஐயோ எங்க போகுது நாடு'ன்னு தத்தளிப்பான்.
நேர்மைய மேடையில பேசுவான்
நேரம் வந்த நேர்மையயும் விலை பேசுவான்.
கொள்கைன்னு முழங்குவான்,
கொஞ்சம் பெரிய சோபா(sofa) கொடுத்தா கூட்டணியும் மாறுவான்.

லஞ்சம் வாங்குறான்னு கத்துவான்,
தன் வேலை ஆகனும்னா
'கொஞ்சம் பார்த்து பன்ணுங்க சார்ன்னு
கால சுத்துவான்.
பாசம் கூட விலைக்கு வரும்,
படியேறி கோர்ட்டுக்கும் போகும்,
காசிருந்தா அந்த நீதி தேவதையும் கண்ண தொறப்பா
கைமேல நோட்ட வச்சா காக்கியும்
பல்ல இளிப்பான்.

உண்மை பேசினா கூடுமா கூட்டம் ?
உண்டியலை உலுக்குனா கூடும் இந்த கூட்டம்.
கனவுக்கும் வேணும் காசு
கல்விக்கும் வேணும் காசு
கல்யாணத்துக்கும் வேணும் காசு
கடைசி பயணத்துக்கும் வேணும் காசு.
காசு இருந்தா நீ 'சார்'
காசு இல்லன்னா நீ 'யாரு'

நல்லது செஞ்சா கூட
நாலு நோட்ட வச்சே
நம்மள அளக்கும் இந்த உலகம்.
போதும்டா சாமி அந்து போச்சு உங்க ரீலுன்னு
கடவுள்கிட்ட போனா கூட
காணிக்கையா கேட்பான் காசு.
கடவுள் எங்கன்னு தேடாத
கையில இருப்பான், பையில இருப்பான்
கண்ண மூடினா கனவுலையும் வருவான்
கலர் கலரான கரன்சி நோட்டா..
96
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on June 23, 2026, 09:20:29 AM »
97
SMS & QUOTES / Re: 𝖇𝖚𝖙 𝕷𝖎𝖋𝖊 𝖌𝖔𝖊𝖘 𝖔𝖓✍
« Last post by MysteRy on June 23, 2026, 06:44:21 AM »
98

   உயிர் காட்கும் தோழன்



ஒரு செல்வந்தனின் மகன் நான். ஒரே ஒரு புதல்வனும் நானே.என்னால் எதையும் வாங்க முடியும் எதையும் அழிக்க முடியும் என்ற திமிரு என் கூடவே இருக்கும் மந்திர சொல்லு..

காலை எழுந்ததும் உழைப்பு என்றால் என்னவென்று தெரியாத எனக்கு  வீட்டில் lockerril உள்ள  பணத்தை கட்டு கட்டாக எடுத்துட்டு

வெளியே நண்பர்களுடன் ஊர் சுற்றும்  திமிரு பிடித்த வாலீபனாக வாழ்ந்தேனே..

யாரு பேச்சுக்கும் அடங்காத அரக்கணும் நானே. நானே ராஜா நானே மந்திரி என்ற கர்வம் கொண்ட ஆணவகாரனும். நானே.
வாழ்க்கை வாழ தானே . அந்த வாழ்க்கைக்கு  பணம் தானே முக்கியம் அந்த பணம் என்னிடம் நிறையாக உள்ளது..

பணம் என் கையில் இருக்கும் திமிருல. என்னை படைத்த இறைவன் மேல் பயம் இல்லாமல் ஆடிய ஆட்டம்  கணக்கிட்டு சொல்ல முடியாது..

அம்மா சொன்னாள் தலைக்கு மேல் தண்ணி போகுது மகனே என்று..
 அந்த மௌனத்தைக் கூட என்னால் விலைக்கு வாங்க முடியவில்லை என்பது அப்போது தெரியவில்லை.

நான் சொன்னேன் தண்ணியை விலைக்கு வாங்கிடலாம்மா என்று..
அப்பா மௌனமாகப் பார்த்தார்.. தன் செல்லப்பிள்ளையே   எப்படி சத்தம் போடுவது என்று..

அன்றைய தினம் இரவில் என் ஆட்டம் முடியப்போகுது என்று நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை..

வீடு வந்தேன்.. அம்மா உங்க அப்பா இன்னும் வீட்டுக்கு வரவில்லை..
Call பண்ணி பேசு என்று..
உடனே call செய்தேன் அப்பா call எடுக்கவில்லை...

நான் போறேன் அப்பா எங்க இருக்கார் என்று பார்த்து  கூப்பிட்டு வரேன் அம்மா என்றேன்..

car la போறப்ப ஒரே மண குழப்பம் அப்பாக்கு எதுவும் ஆச்சோ என்று..
சிறிது நேரத்தில் பயம் குடுக்க ஆரம்பித்து  எங்கே தேடியும் அப்பாவை காணவில்லை..

இறைவன் வணங்காமல் இருந்த நான் அன்று டேய் அல்லாஹ் எனக்கு ரொம்ப பயமா இருக்கு..

car ஐ ஓரமாக நிறுத்தி விட்டு ஒரே அழுகை அப்பாவை காணோம் நான் எப்படி என் அம்மாவிடம் சொல்லவேன் என்று..

தூரத்தில் ஒரே கூட்டம் போல் தெரிந்தது.. அந்த நொடி ஓட்டம் பிடித்தேன்.. அந்த இடத்தில் சென்ற போது என் அப்பா தான் car விபத்தாகி  உள்ளார்.

அந்த நிமிடம் என் ஆணவம்  பண திமிரு  என் கர்வம்.. எல்லாம் தூரம் போய்விட்டது..

யாராச்சும் எங்க அப்பாவை தூக்க வாங்களேன் என்றேன்.
ஒரு ஏழை நண்பன் நான் இருக்கேன் வாங்க என்று என் அப்பாவை இருவரும் தோளில் சுமந்து hospital  க்கு போனோம்..

என் நண்பர்களுக்கு call செய்தேன் யாரும் call எடுக்கவில்லை..
 அந்த ஏழை நண்பன் உங்க அப்பாக்கு  ஒன்னும் ஆகாது.. நல்லாயிரும் என்று சொன்ன உடனே. அந்த நண்பனை கட்டி பிடித்து அழுதேன்..
பணம் மட்டும் தான் என் குறிக்கோள் ஆக இருந்தேனே தவிர  இப்படி பாசம் வைக்க ஒரு நல்ல நண்பனை நான்  தேர்ந்தெடுக்கவில்லை என்று என்னும் போது மீளா துயரம் எனக்குள்..

எனக்கு உதவியாக இருந்த அந்த நண்பனுக்கு   நான் என்ன கைமாறு செய்ய போறேன்..
 உடனே அம்மாவுக்கு call பண்ணி அப்பா நன்றாக இருக்கார்  சிறிது காயம் தான் hospital ku vanga என்று சொல்லி வரவழைத்தேன்..

இக்கட்டான சூழ்நிலையில் என் கூட நின்ற அந்த நண்பன் போல் வருமா..

இல்லை என்னிடம் பணம் பறித்து தின்ற   நண்பர்களை  எண்ணி மனம் வருந்தினேன் அன்றே  நண்பர்களை விட்டு தூரம் விலகினேன்..

டேய் நண்பா நீ பாசத்தால இந்த உலகை வென்றுவிட்டாய்..
 ஆனால் நானோ பணம் மிதக்கத்தில்    இருந்து உன் பாசத்தை கண்டு வியப்புடன் தலை கவிழ்ந்து நிற்கிறேன்..

Priyamudan
Rahmathulla
99
சொந்த பந்தங்கள்
ஆயிரம் இருந்தாலும்
பணம் இருந்தால் தான்
அந்த சொந்தம் கூட
நம்மை சொந்தம் என்று
சொல்லும் பணமே !

நீ இல்லை என்றால்
எனக்கு ஏது உணவு
எனக்கு ஏது சொந்தம்
ஒரு மனிதனின் பிரச்சனைகளுக்கு ஆரம்பமாக இருப்பது பணமே !
அந்தப் பிரச்சனையின் முடிவில் பிரச்சனைகளை தீர்ப்பது
பணமே நீதான்
இது உலக மக்கள்
அறிந்த ஒன்றல்லவா ?

என்னுடைய சிரிப்பிற்கும் சந்தோசத்திற்கும் பின்னிற்பது பணமே நீ தானே !
இதற்குத்தானே என்  வாழ்நாள் முழுவதும் தேடி திரிகிறேன் உன்னை சில நேரங்களில் அடைவதற்காக எனது தன்மானத்தை இழக்கிறேன் !

பணமே உன்னை பெறுவதற்காக எத்தனை எத்தனை இழப்புகள் ஊரு விட்டு ஊரு வந்து உன்னை பெறுவதற்காக என் அன்னையின் அன்பை இழந்தேன்...
என் தந்தையின்
பாசத்தை இழந்தேன்...
என் சகோதரனின் நேசத்தை இழந்தது  ஏன் உன்னை பெறுவதற்காக மட்டுமே
என் கைகளை என் மனதை கட்டிக்கொண்டு ஒரு தனி மரம் போல் அனாதையாக வாழ்கிறேன
பணமே உனக்காக ...

பணமே விவசாயிகளிடம் நீ வருவது மிக சிறிதளவு
ஆனால் உன்னை பெறுவதற்காக இரவு பகல்பாராமல்
மழை வெயில் பாராமல் விவசாயிகள் படும் பாடு
இவற்றை நான் நன்கு அறிவேன் ஏனென்றால் நானும் ஒரு விவசாயின் மகன் தானே ❤️❤️🌹
100
சின்ன ஆசையாக சிறுசேமிப்பாக பணம் இருந்தால்
நாம் சுதந்திரமாக இருக்கலாம்
பேராசையாக பண ஆசையால் சேர்க்க நினைத்தால்
அது இரும்பு சங்கிலியால் நம்மை கட்டி விடுகிறது

பணம் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றுதான்
 நம் வாழ்வை வளமாக்கும்
செழுமையாக வைத்திருக்கும்
பணமே நம் மனதில் இருந்தால்
நம் வாழ்க்கையை சிதறடிக்கும்

தேவைக்கு அதிகமான பண ஆசை
பேராசையாக பொருளை சேர்க்க நினைப்பது நமது சுதந்திரத்தை கட்டிப்போட்டு மன அமைதியை பறிக்கிறது

கையில் இருக்கும் பணத்திற்கு
அளவே இல்லை
பணத்தின் மேல் இருக்கும் ஆசையும்
தீர போவதில்லை

நாம் நாமாகவே வாழும் வரை
மன அமைதியுடனும்
உறவுகளுடனும் வாழ்கிறோம்
பிறரைப் போல் வாழ நினைக்கும் போது தான் பண ஆசை நம் மனதில் வருகிறது

பணத்தாசை அழிவுக்கு மட்டுமே
வழி வகுக்கும்
போதும் என்ற மனமே வாழ்வை நல்வழிப்படுத்தும்

நேர்மையுடன் உழைத்த பணம் நம்மை தலை நிமிர வைத்து
வாழ்வை‌ வளமாக்கும்

தீய வழியால் சேர்த்த பணம்
 தங்கத்தால் உடல் முழுவதும் அலங்கரித்துக் கொண்டாலும்
தலைகுனி உடன் நிற்பான் என்றாவது
பணம் என்ற போதையில் மாய உலகில் மன அழுத்தத்தால் தன்னைத்தானே கட்டுப்பட்டு இருப்பான்

பணத்திற்காக சொந்தம் பந்தம் உறவுகளை இழப்பவன் இறுதியில் பணம் மட்டுமே அவனிடம் இருக்கும் தனிமைப்படுத்தப்படுவான்

 போதும் என மனம் வராது
சேர்த்த பணத்தை பாதுகாப்பதிலே அவன் மனம் இருக்கும்
நிம்மதி சந்தோசம் இல்லாத வாழ்க்கையுடன் தூக்கம் இருக்காது
பண ஆசையே அவனை சங்கிலி 
மாதிரி இறுக்கிட்டு போகும்

கண்ணை மறைக்கும் பணத்தாசை
விலைமதிப்பற்ற  மனித உறவை
விலக்கி வைக்கும்.
நிலையில்லாத பணத்தாசையை
விட்டு நிலையான
மனித உறவு செல்வம் மதிப்போம்

அளவுக்கு மீறினால்  அமிர்தமும் நஞ்சு ஆசையை குறைப்போம்
ஆனந்தமாய் வாழ்வோம்
இருப்பதைக் கொண்டு
இனிமையாக வாழ்வோம்

போதும் என்ற மனமே
பொன் செய்யும் மருந்து
மனநிறைவே மனிதனின்
மகத்தான செல்வம்

பேராசை இல்லாமல் தன்னிடம் உள்ளதைக் கொண்டு திருப்தி அடைபவர்களின் வாழ்க்கை
மன ஆனந்தமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்

பணம் சேமிப்பு பழக்கம்
கெட்டது இல்லை
சேமிப்பு பணத்தை கையாளும்
விதத்தில் தான் உள்ளது
இனிய வாழ்க்கை
பணம் நாம் கையில் இருக்கனும்
நமது மனதில் பேராசையாய்
செல்ல கூடாது
Pages: 1 ... 8 9 [10]