உலகிற்கெல்லாம் ஒரே வானம் போல்
மனித உயிர் இனங்களுக்கு எல்லாம்
இறைவன் தந்த ஒரே அன்னை....
அன்னை தெரசா ....
வறுமையான வாழ்வில் என்ன என்ன துன்பங்கள்
வயிறு நிறைக்க சோறில்லை,வருஷம் ஒன்றானால்
வயிற்றை நிரப்ப தவறியதில்லை- இருந்தும்,
வாட்டிவதைக்கும் வறுமையில் எத்தனைகஷ்டங்கள்
இருந்தாலும், குவாட்டர், இல்லாத நேரமில்லை,
பிள்ளைகளை படிக்க வைக்க பணமில்லை....
குடும்ப பாரத்தை சின்ன பிஞ்சுகளின் தலையில்
வைத்து, குப்பை பொறுக்க விட்டு,
பத்தும், இருபதுமாய் கொண்டுவரும் காசைக்கூட,
கொடுமை தகப்பன், பிடுங்கிப்போய் குடிக்க, பாடுப்படும்
இதயம், இளம்பிஞ்சின் மனதும் - எத்துனை
துயர்கொள்ளும் !!!
அ னாவும், ஆ வன்னாவும் அறியாப் பிள்ளையாய்,
பெருக்கலும், கூட்டலும் கழித்திடத் தெரியா
மழலைகளாய் - கண்களில் கண்ணீர்
வயிற்றில் பசி - பாதையோரத்தில் அமர்ந்து
சீருடை அணிந்த மற்ற குழந்தைகளை
ஏக்கத்தோடு காணும் அவலம்.....
இவ்வுலகில் அள்ள,அள்ள குறையாத
அக்ஷயப்பாத்திரமாய்,அன்னையின்
அள்ளிக்கொடுக்கும் கைகள்
தருமனின் மறுப்பிறப்போ,
பாரியின் உயிர்ச்சேர்ப்போ!!!!!