தாத்தாவுக்கும் பேரனுக்கும் உள்ள
பந்தம் என்றும் தெவிட்டாத இன்பம்
பிறந்து வளர்ந்து படித்து மணமுடித்து
தந்தையாகி,
பிள்ளையை வளர்த்து மணமுடித்து கொடுத்து
பேரனோ பேத்தியோ பிறக்கும் வேளையில்
மீண்டும் பிறக்கிறேன் குழந்தையாய்
பிறந்த குழந்தையை வளர்த்திடும் பொறுப்பு
என்றும் பாட்டிக்கும், தாத்தாவுக்குமானது
கொஞ்சி மழலை மொழி பேசி விளையாடி
கால்ஊன்றி யானையாகி சுமந்து நடந்து
வளர்த்தோம்
பள்ளி செல்லும் வேளை ,
காலை பள்ளியில் விட்டு வருவதும்
மாலை அழைத்து வருவதும்
தாத்தாவிற்கான எழுதாத வேலை
அழைத்து வருகையில் பேரனுடன் கதை பேசி
நடந்து வருவது வார்த்தையில் விவரிக்க முடியா ஆனந்தம்
வளர்ந்து விட்டான் அவன் ,
கீச்சுகளையும் , முகபுத்தகத்தையும்
பார்த்து பார்த்து
இன்று தாத்தாவின் முகம் மறந்திட்டான் போலும்
இதுதான் தலைமுறையின் இடைவெளியோ
இல்லை வயதானவர்களின் தலைவிதியோ
காலமோ, காலனோ பதில் சொல்ல
காத்திருக்கிறேன்!!
*****ஜோக்கர்****