உயிருக்கு உயிரானவனே
என் உலகமாய் இருப்பவனே
உன் அன்பில் அடிமையானவளின்
உளறல்கள் ...
உன் உள்ளத்திற்கு கேட்கிறதா
உன்னை ஒரு கணமும்
மனம் கோண விடாமல்
உன் ஆணைக்கு காத்திருக்கும்
சேவகி நான்
என் மனம் உனக்கு புரிகிறதா
எல்லோரும் உன்னிடம் எதை எதையோ
எதிர் பார்க்க ...
பாசம் மட்டுமே எதிர் பார்ப்பவள் நான்
ஒரு கணம் கூட யோசிக்காமல்
என்ன வார்த்தை கூறிவிட்டாய்
நான் உன்னை மறந்தேனா?
சாத்தியமா என்னால் ?
நிலவு வானத்தை மறக்குமா?
மீன் கடலை மறக்குமா ?
பூமி மாறியை மறக்குமா ?
ராகம் தாளத்தை மறக்குமா ?
தாய் பிள்ளையை மறப்பாளோ ?
சூரியன் கிழக்கை மறப்னோ?
இதயம் துடிப்பை மறக்குமா ?
இவை அனைத்தும் ஒன்றை ஒன்று மறக்க சாத்தியமா ?
அப்படியே சாத்தியம் ஆனால் கூட
என்னால் உன்னை மறக்க இயலாதே
உன்னை மறந்தால் நான்
என் உயிரை அல்லவா மறந்துவிடுவேன்