பா - 1
படம் : பார்த்தேன் ரசித்தேன்
பாடல் : எனக்கென ஏற்கெனவே
பல்லவி:
ஆண் :
ஒருமுறை என் மனதை உரசிய நிலவே
உயிருக்குள் மென்மை வந்து பரவிடும் உணர்வே
செல்லூடும் தீ துளிகள்
நெஞ்சுக்குள் பூவெளிகள்
இப்படியேன் இப்படியேன் விதவிதமாய் நிகழ்கிறதே
பெண் :
இப்படியேன் இப்படியேன் விதவிதமாய் நிகழ்கிறதே
எதன் விளைவென்று தெரியாதடி..
ஒரு நொடி நோக்கி திரும்பிய பின்னே
என்னில் ஏதோ கொள்ளை
மறுபடி நோக்க ஏங்கி துடித்தேன்
வெட்கம் விலகவில்லை
வயது பெண்ணின் மனதை கவர்ந்தாய் நீயே நீயே..
ஆ:
அழகே! அழகே! உலகின் அழகுகள்
உன்னழகின் மிச்சமடி
உன்னழகின் வெளிச்சமடி
உன்னை போல இருப்பதனால் பூ
உந்தன் ஜாதியடி
கன்னங்குழியெனும் கலங்கம் இருக்க நீ
நிலவின் பேத்தியடி
பெ :
இளயவள் இதயம் கெண்டை மீனாய்
தரையில் குதிக்கின்றது - என்
இமைகளில் துடிக்கின்றது
உன் வரவுகள் எண்ணி
வரம் பெற காதலை
தவமொன்று புரிகின்றது..
ஆ:
வாடைப்பூவே எந்தன் நெஞ்சை
வாட்டியே வைக்காதே - உன்
வாசலை அடைக்காதே
உன் கனவுகள் எல்லாம் அழிந்திடா
வண்ணம் நிலவில் சேகரித்தேன்
உன் நிமிட புன்னகை சிதைந்திடா
வகையில் கண்களில் மூடிவைப்பேன்
பெ:
இதழ்களின் நுனியில் வார்த்தைகள் எல்லாம்
வரிசையில் நிற்கின்றது - அதை
மௌனமும் தடுக்கின்றது
நாணம் ஊறிய ஒற்றை பார்வையில்
மனமும் திறக்கின்றது..