வேதாத்ரி மகரிஷியின் சிந்தனை துளிகள் :-
* உணர்ச்சி அறிவை வெல்வது இயல்பு. ஆனால், அறிவால் உணர்ச்சியை வென்றால் வாழ்வு உயரும்.
* திறமையின்மையும், அச்சமும் கவலையை வளர்க்கும் இருபண்புகள்.
* தீர்க்க முடியாத துன்பம் என்று எதுவும் கிடையாது. தீர்க்கும் வழியை அறியாதவர்களாகப் பலர் இருக்கிறார்கள்.
* பகைமை உணர்வு உள்ளத்தில் இருக்குமானால், ஒருவரை வாழ்த்த முடியாது.
* கற்பு என்பது ஆண், பெண் இருவரும் உயிரை விட மதிக்க வேண்டிய மேலான ஒழுக்கம்.