"தொண்ணுற்று ஒன்பது" ஓவியங்களுக்கு
நீங்கள் இட்ட பாமலைக்கும்.,எழுத்துகளால்
நீங்கள் செய்த அரச்சனைகளுக்கும் FTC சார்பாக
நன்றியை சொல்லி "நூறாவது" ஓவியத்திற்கு
வார்த்தை என்ற பூவெடுத்து ,எண்ணம் என்ற
நூலினால் கவிதை என்ற மாலை தொடுத்திட
எல்லா கவிப்பிரியர்களையும் கேட்டுக் கொள்கிறேன் ..!
அன்புடன்,
பொய்கை
ஓவியமே உன்னை கண்டு
உயிரூட்ட அலைந்திட்டோம் !
உயிரூட்டி உயிரூட்டி
மகிழ்ச்சியிலே திளைத்திட்டோம் !
வாரம் ஒரு ஓவியத்தை இங்கே
கொண்டு வைத்திட்டோம் !
வந்தவரை எல்லோரையும்
கவி புனைய செய்திட்டோம் !
ஓவியத்தை பார்த்ததுமே
வார்த்தை தேடி புறப்பட்டோம் !
கிடைத்தவற்றை எல்லாம்
இங்கே வந்து கொட்டி விட்டோம் !
ஒன்று முதல் நூறு வரை
இன்று நாமும் வந்து விட்டோம் !
இன்று வரை எத்தனையோ
கவிஞர் நாமும் கண்டு விட்டோம் !
ஓவியத்திற்கு உயிர் ஊட்டி
காலமெல்லாம் களித்திருப்போம் !
வாரா வாரம் உயிரூட்ட
எப்போதும் விழித்திருப்போம் !
உங்களது கவிதை எல்லாம்
உலகம் முழுதும் ஒலிக்கவைத்தே!
தமிழ் எனும் தேமதுர
ஓசை தனில் மூழ்கிடுவோம் !
ஒவ்வொரு வாரமும் சனிகிழமை
இங்கே வந்து கூடிடுவோம் !
தமிழ் உள்ளங்கள் யாவருக்கும்
கவிதையினால் விருந்தளிப்போம் !
நமக்கெல்லாம் வாய்ப்பு
அளித்த இக்குழுமத்தை,
நாளும் வளர உழைத்திடும்
நண்பர்களை இன்று
மனதார வாழ்த்திடுவோம் !