கலங்கிக் கலங்கித் தெளியும் குட்டை
கல்லெறிந்தாலும் எறியாவிட்டாலும்
சில நேரம்
மரத்துக்கு மரம் தாவும்
எதிலும் திருப்தி இல்லாமல்
பல்லிளிக்கும் பல சமயம்
மந்தியாய்..........
புண்ணை சொரிந்தது சொரிந்து
புரையோட வைத்து சாகடிக்கும்..........
வண்ண வண்ணமாய்
கோர்த்த அழகு
மலர்களின் ம(ன) ணமுணராமல்
இதழ்களை குதறி
பிய்த்து பிய்த்து ரசிக்கும்
குரங்கு..........
எப்போதும் எதற்காவது
யாரையாவது பாய்ந்து கடித்துத் குதறும்
ஓநாய்..............