மாஸ்டர்
எப்படி இருக்கீங்கன்னு கேக்கறது வேஸ்ட். வழக்கம் போல நல்லா தான் இருப்பீங்க. கஷ்டப்பட்டு இந்த வாரம் துண்டு போட்டுட்டேன். அதனால எனக்குப்புடிச்ச பாடல் இருக்கற படத்த சொல்றேன்.
'கரகாட்டாக்காரன்'. சொன்னவுடனே எல்லோரும் செந்தில் கவுண்டமணி வாழைப்பழ காமெடி தான் ஞாபகத்துக்கு வரும். அந்த அளவுக்கு மறக்கமுடியாத படம் இசையால் வென்ற படம்னு சொன்னாலும் தப்பில்ல.
கங்கை அமரன் எழுதி இயக்கிய இந்த படத்துல ராமராஜன், கனகா, செந்தில், கவுண்டமணி ஆகியோர் நடிச்சிருக்காங்க. ராமராஜனை ஒரு நட்சத்திர நடிகரா மாத்தின படம் இது. பல தியேட்டர்ல இப்படம் ஒரு வருஷத்துக்கும் மேல ஓடியது.
இசைஞானியின் இன்னிசையில் கிராமிய பாடல்களாவே எல்லா பாடல்களும் சிறப்பம்சம். இப்படத்துல
"ஊருவிட்டு ஊருவந்து"
"இந்தமான் உந்தன்சொந்த மான்"
"குடகு மலைக்காற்று"
"முந்திமுந்தி விநாயகரே"
"மாங்குயிலே பூங்குயிலே"
"பாட்டாலே புத்தி சொன்னார்"
"மாரியம்மா மாரியம்மா"
ஆகிய பாடல்கள் மக்கள் ரசனைக்கேற்ப இசையமைக்கப்பட்டிருக்கும். இதுல எனக்கு புடிச்ச பாட்டு காதல் பாட்டு தான்.
"ஊருவிட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க".. எளிமையான வரிகள்ல காதலைப்பத்தியும் அதனால வர்ற அவஸ்தைகளையும் சொல்லியிருப்பாங்க. படம் வெளியான போது செல்போன் பரவலா இருந்திருந்தா இந்தப்பாட்டு தான் எல்லோருடைய ரிங்டோனா இருந்திருக்கும். இப்பவும் வச்சுக்கலாம். அந்த அளவுக்கு நல்ல நல்ல அறிவுரைய சொல்ற பாடல். நண்பனுக்கு இருக்கும் காதல் என்னும் போதை தெளிய நண்பர்கள் பாடும் பாட்டு இது.
இந்த பாட்டை நான் நம்ம ftc நண்பர்களை எல்லோருக்கும் டெடிகேட் பண்றேன். சீட்டு கெடச்சதுக்கு மீண்டும் நன்றி..