சாமிகளா தயவு பண்ணி தமிழ்ல எழுதுங்கப்பா. நீங்க ஆங்கிலத்துல எழுதுறதை வாசிக்கவே 1 மணித்தியாலம் போகுது.
சரி நானும் களத்துல இறங்கட்டுமா? ஏஞ்சல் இங்க பேச்சி காதல பத்தி மட்டும் தான். கடலை போடுறது சைட் பிஸ்னஸ். அதை கண்டுகாதீங்க. கடலை போட்டாலும் காதலில் உண்மையா இருக்கிறவங்களை பத்தி மட்டும் பேசுவோம். சுருதி சொன்ன தலையங்கம் தாடி வளர்ப்பது, கவிதை எழுதுவது, தண்ணி அடிப்பது இதெல்லாம் உண்மையான காதல் தோல்வியின் விளைவு.
முதலில் ஒன்று
காதல் தோல்வியால் தாடி வளர்ப்பது, கவிதை எழுதுவது, தண்ணி அடிப்பது இதெல்லாம் இந்த காலத்துல மிகவும் குறைவு. அதெல்லாம் தேவதாஸ் காலத்தோடு முடிஞ்சி போச்சி.இப்போ காதல் தோல்வியா அடுத்த நாள் வேறு ஒருத்தரை காதலிப்பது தான் இன்று நடைமுறை வாழ்க்கை.
இன்றைய காதல்கள் அனேகம் விட்டில் பூச்சி வாழ்க்கை போலத்தான்.
இரண்டாவது
காதலில் ஜெயிச்சவங்கள விட தோத்தவங்க தான் அதிகம். அதுக்காக தண்ணி அடிக்கனும் கவிதை எழுதனும், தாடி வளர்க்கனும் என்று அர்த்தம் இல்லை. அந்த காதல் எதனால் தோற்றது? என சிந்தித்து அடுத்த காதலில் சரி அந்த தவறை பண்ணாம இருந்தால் அந்த காதல் சரி நிலைக்கும். JS சொன்ன மாதிரி தோற்றவர்கள் நல்ல படி வாழ்ந்து காட்டனும்.தேற்கடிக்க வைத்தவர்கள் தவறவிட்டு விட்டோம் என அந்த காதலனையோ காதலியையோ நினைத்து ஏங்கனும்.
மூன்றாவது
உண்மையான காதல் என்றும் தோற்காது. காதல் என்பது அன்பு தியாகம் என்ற ஒரு கலவை. காதலர்கள் தோற்றாலும் காதல் தோற்காது. உண்மையான காதலுக்காக நாம் எதையும் இழக்க தயாராக இருந்தால் அந்த காதல் நிச்சயம் வெற்றி பெறும். இது நான் எனது வாழ்வில் அனுபவித்து அறிந்து கொண்ட உண்மை. தேவையானால் என் கதையை பிறகு சொல்லுகிறேன்.
இப்போதைக்கு இது போதும்