ரோஸ் கலரில் பாயசம்
இந்த பாயசம் மிகவும் சுவையாக இருக்கும். இதை எளிதில் செய்து விடலாம். இதை நீங்களும் செய்து பாருங்கள்.
தேவையான பொருள்கள்:-
பால் – 2லிட்டர்
பச்சரிசி – 1/4கப்
சர்க்கரை – 2கப்
ஏலக்காய் பொடி – சிறிதளவு
முந்திரி, கிஸ்மிஸ் – 10நம்பர்
தண்ணீர் – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
நெய் – சிறிதளவு
செய்முறை:-
முதலில் பாத்திரத்தில் பாலை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக சுண்டும் அளவிற்கு காய்ச்சி கொள்ளவும்.
பின்பு குக்கரில் காய்ச்சிய பாலுடன் அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து 1விசில் வந்தவுடன் குறைந்த தணலில் 20நிமிடம் வரை குக்கரில் வேக விடவும்.பின்பு அனைத்து விடவும்.
குக்கரில் விசில் சத்தம் அடங்கியவுடன் எடுத்து பார்த்தால் ரோஸ் நிறத்தில் மாறி இருக்கும். அதனுடன் முந்திரி, கிஸ்மஸ், ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும்.
கிளறிய பின்பு 1கொதி வந்தவுடன் அடுப்பை அனைத்து விடவும். பின்பு சிறிது நேரம் ஆறிய பிறகு எல்லோருக்கும் பரிமாறவும்.
சுவையான ரோஸ் கலரில் பாயசம் தயார்.