இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
விளக்கம் : அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரால், எச்செயலை, எவ்வாறு (எக்கருவி கொண்டு, எவ்வழி முறையால்) செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து அறிந்து, அத்தகுதி உள்ளவர்களிடத்தில் அச்செயலைச் செய்து முடிக்கும் பொறுப்பினை விட்டுவிடவேண்டும். இதுவே இக்குறளின் கருத்து. முந்தைய குறள்களில் சொல்லப்பட்ட கருத்துதான் என்றாலும், “இதனால்” என்ற சொல் செய்யுங் கருவி, வழிமுறை ஆகிய இரண்டையும் ஒருங்கே குறிப்பதை உணரலாம். “அவர்கண் விடல்” என்றது ஆய்ந்து அறிந்தபின் அவர் செய்ய நம்பி ஒப்படைத்தலைக் குறிக்கும். இதில் நம்புதல் என்பது வேலையின் நேர்த்தியைப் பற்றி மட்டும்தான். செய்பவரைக் குறித்து அல்ல. முன்பு சொல்லப்பட்ட கருத்துக்கு முரணாகச் சொல்லப்படவில்லை.
.................. ஓம்பி அருளாள்வார்க்கு .............
தன்னுயிர் .................. வினை.