அன்பே உன் நினைவு என் மனதில்
அலைகளை போல் ஓயாமல்
அடித்துக்கொண்டே இருக்கிறது
ரோஜாவின் மலர்களை போல்
உன் மனமும் மலர்ந்து கொண்டே இருக்குறது
கல் எறிந்த குளத்தில்
வளையங்கள் விரிவது போலே
குழி விழுந்த உன் கன்னங்களில் ,
வைரங்கள் மின்னுகிறதே !
என்னை ஒரு முறை தொடுவாயா

உயிரே ...
பிறப்பு ஒரு முறைதான் ...
நான் பிறந்து விட்டேன் ...
உலகில் மனிதனாக ...
இந்த வாழ்க்கை
வாழ்ந்து விட ஆசை
உன்னோடு சேர்ந்து ...
நீ சம்மதம் தருவாயா ....
என் காதலை ஏற்றுக்கொள்வாயா !!! ?
காதலித்து கை பிடிப்பாய்
என
காலமெல்லாம் காத்திருப்பேன்