Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 076  (Read 2060 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218360
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நிழல் படம் எண் : 076
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Dong லீஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 09:38:37 PM by MysteRy »

Offline thamilan

அன்பே
உலகம் தொட்டிராத வார்த்தையொன்று
தொண்டைக்குழி உடைத்து
உனக்காய் கவிதை புனையத் தவிக்கிறது

இதயம் உடைக்கும் பார்வையேந்தி
ஈரம் சுரக்காத உன் காதல் மனதில்
நீ காதலிக்கிறாயென
உன் இமைகள் சிமிட்டி
உன் இதயம் சொன்னபோது
எப்படி ஒப்புமென் சிறு இதயம்
கனவோ என கடற்கரை அலையில்
கால் பதித்தேன்
அலைகள் அறைந்து சொன்னது
நிஜம் தானென

காதலுக்கும் கடற்கரைக்கும்
நெருங்கிய தொடர்பு உண்டு
பலரது காதலுக்கு 
முகவுரை எழுதியதும் இந்தக் கடற்கரை தான்
அந்தக் காதலில் பலவற்றுக்கு
முடிவுரையும் எழுதியதும் இந்தக் கடற்கரை தான்
இதே கடற்கரையை
சாட்சியாக வைத்துக் கேட்கிறேன்
இதோ என் இதயம்
என்கைகளில் மலர்களாக
என் இதயத்தை காணிக்கையாக தந்து கேட்கிறேன்
ஏற்றுக் கொள்வாயா என்னை
என்னை உன் இதயத்தில் சூடிக்கொள்வாயா
« Last Edit: August 27, 2015, 11:27:28 AM by MysteRy »

Offline Dong லீ

திருக்குறள்    திருக்குறளால்   உன்
சிறு குரலுக்கு
மாலை சூடுவேன் !

சீவக சிந்தாமணி சீவக சிந்தா மணியை கோர்த்து உன்
சிவந்த கழுத்துக்கு
அணி செய்வேன் !
குண்டலகேசி குண்டலகேசியை உன்
குண்டு காதுகளுக்கு
 குண்டலமாக்குவேன்!
ஆத்திசூடி ஆத்திசூடியை உன்
நெத்தி சூடியாகச் செய்வேன் !
வளையாபதிவளையாபதியை உன்
 கை வளையாக்குவேன்!
குறுந்தொகை குறுந்தொகையை உன்
குறுகிய இடையணி எனச்  செய்வேன் !
மணிமேகலை மணிமேகலையை உன்
கொலுசின் மனியாக்குவேன் !

ஏற்றுக்கொள் கண்ணே
என் கண்ணான தமிழ் போல்
உனையும் உயிருள்ளவரை
போற்றுவேன் !!

என் பரணி எங்கும் 
உலா வரும் உன்
பிள்ளைதமிழ் பேச்சுக்கு
இந்த வெண்பாவை
பரிசளிக்கிறேன் !!

உலகத்தில் என் தமிழைப்போல் 
சிறந்த பரிசு ஏதுமில்லை
அதை உனக்கு தந்து நான்
சொல்ல முனைவதெல்லாம் இதுவே ..
நான் உன்னை காதலிக்கிறேன் !!
« Last Edit: August 27, 2015, 11:27:57 AM by MysteRy »

Offline SweeTie

வட்ட நிலாவை வானுக்கு பிடிக்கும்
பொங்கும் அலைகளை கடலுக்கு பிடிக்கும்
பஞ்சு மிட்டாய் குழந்தைக்கு பிடிக்கும்
அந்த ஆறடி அழகனை .......
பிடிக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

பேசும் பொழுதுகள் நீளாதா என ஏங்கி
தூங்காத இரவுகள் எத்தனை.....
விழிகள் நேருக்கு நேர் சந்தித்த வேளையில்
மயங்கிய சுகமான இதமான நினைவுகள் எத்தனை
பிடிக்கும்  உன்னைப் பிடிக்கும்

 நான் காண்பது கனவா நினைவா?
இன்று எனக்காக  எங்கும் அவன் இதயம்
நீண்ட மௌனத்தின் பிரதிபலிப்பா?
ஒற்றை ரோஜாவால் இதயத்தை நிறைத்துவிட்டான்
பிடிக்கும் எப்போதும் உனைப் பிடிக்கும்

என் மனதில் பதிந்த அவனது நினைவுகள்
நிழலாய்த் தொடர்ந்தன என் கண் முன்னே
என் இதயத்தின் துடிப்பு இரு மடங்காகி
ரக்கை கட்டி பறந்ததுபோல்  பிரமை
பிடிக்கும் உன்னை எப்போதும் பிடிக்கும்.

எனது பெண்மை விழித்துகொண்டது
கையில் ஏந்துகிறேன்  அவன் இதயத்தை
ஒற்றை சிவப்பு ரோஜா காதலுக்கு அடையாளம்
காத்திருந்த என் காலம் வீணாகவில்லை
பிடிக்கும் உன்னை மட்டுமே பிடிக்கும்

அவன் சுவாசம் உணர்ந்தேன் அந்த ரோஜாவில்
பேச்சுக்கு இனி இடமேது
இரு ஜோடி விழிகள் இன்பத்தில்
நான்கு சொட்டு கண்ணீரை சிந்தியதே
பிடிக்கும் உன்னை என்றென்றும் பிடிக்கும்.


« Last Edit: August 27, 2015, 11:28:26 AM by MysteRy »

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
முகம் காணா மலரே என் ஆருயிரே
உன்னை காண துடிக்கும் என் கண்களுக்கு
எப்போது உன்னை
காணும் வரம் கொடுப்பாய்…..
என் வாழ்க்கை என்னும் கோட்டையில்
இது என்னமாயமோ….!!!
பசி என்பதே ருசி அல்லவா 
அது என்று தீருமோ
அந்த வானும் தீர்ந்து போகலாம்
நமது வாழ்கை தீருமா!!!!
பருவங்களும் மாறலாம் நிறம் 
அனால் நம் பாசங்கள் மாறுமோ…!!!
ஒரு காட்டிலே 
நான் போகிறேன்
என்னுடைய திசையே
நீதானடி பெண்ணே…
என்னை தலைகீழாய்
செய்த அழகிய பூவே
எந்தன் எதிர்காலம்
உன் நிழலோரம் 
அன்பே நீ வா வரம் தா...
எந்தன் கரை உடைகின்றதே
மலைபோல உன் நியாபகங்கள்!!! 
என்னுடைய மனம் உரைகின்றதே
குளிராய் உந்தன் மோகனம் ….
என்னவாகுமோ
ஏதாகுமோ
எந்தன் வாழ்க்கை
புதிதாகுதே உன்னால்
எந்தன் இமை மேல்
வரைவேன் உன்னை
அதை நான் தவறாமல்
தொட்டு ரசிப்பேனே……
நீ யாரென்ற விடை
காண்பேன் பெண்ணே
நான் யாரென்ற விடை
காண்பாயா என் கண்ணே..!!!!
அடி நெஞ்சில் வரும் நினைவுகள் 
சுகமான வழியை தரும் 
சுகமான காதலும் இதுதானோ!!!!
நீயே என் சுவாசம்
உன்னில் நான்  பாதியானால்
என் வாழ்க்கை சுவர்க்கமாகும்
என் காதலை ஏற்று கொள்வாயா கண்ணே!!!!………
« Last Edit: August 27, 2015, 11:28:56 AM by MysteRy »

Offline SuBa

தூக்கமில்லாமல் என் இரவுகள்
ஓய்வில்லாமல் என் பகல்கள்
நேரம் எதுவாக இருப்பினும்
ஒவ்வொரு நொடி நேரமும்
நீ இருக்கிறாய் என் மனதில்

ஒரு நாளின் 24 மணி நேரமும்
ஒரு வாரத்தின் 7 நாட்களும்
நாம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும்
என விரும்புகிறேன்
உன்னுடன் இருக்கும் நேரங்கள்
சொர்க்கத்தில் இருப்பதாய் உணர்கிறேன்

உன் கை கோர்த்து
மழையில் நடனம் புரிய
எந்நாளும் விரும்புகிறேன்
அந்நாளும் விரைவில் வரும்
என நம்புகிறேன்

உன்னை எண்ணும்
பொழுதெல்லாம் மெய் சிலிர்த்தேன்
இத்தனை எளிதாய்
என் இதயம் களவு போகும்
என்றறியாமல் இருந்திருந்தேன்

முன்னறியா உணர்வுகளும்
அனுபவங்களும் என்னுள்ளே..
இன்று நான் ஒத்து கொள்கிறேன்
நான் உன்னிடம் காதலில்
விழுந்து உருகி கொண்டிருக்கிறேன்
« Last Edit: August 27, 2015, 11:29:20 AM by MysteRy »
commercial photography locations

Offline NiThiLa

உணர்ந்தேன் என் உயிரில் ஒரு இனிமையை
வியந்தேன் எப்படி என் வானம் புதிதனாதென்று
தேடினேன் அந்த கள்வனின் காலடி சுவடுகளை

கண்டுகொண்டேன் என் கண்ணனை
கூறினான் நீ தான் நான் என்று
அமிழ்ந்தேன் அந்த நொடியின் இனிமையில்

தொலைந்தேன் அவன் உயிர் காதலில்
தேடுகிறேன் மீண்டும் அவன் வரவு எப்போதென்று
என்னவனே  மீண்டும் வருவாயா

 என்னை எனக்கே அறிமுகம் செய்தவனே
என் இமைகளையும் இனிமைகளையும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடு
காத்திருகிறேன் கண்கள் பூத்திருக்கிறேன்
உன் வரவுக்கு
[/color]
« Last Edit: August 27, 2015, 11:29:44 AM by MysteRy »
bhavadhi

Offline Software

  • Jr. Member
  • *
  • Posts: 60
  • Total likes: 86
  • Karma: +0/-0
  • Gender: Male
  • your Best Teacher is your last mistake :)
அன்பே உன் நினைவு என் மனதில்
அலைகளை போல் ஓயாமல் 

அடித்துக்கொண்டே இருக்கிறது
ரோஜாவின் மலர்களை போல்

உன் மனமும் மலர்ந்து கொண்டே இருக்குறது

கல் எறிந்த குளத்தில் 
வளையங்கள்  விரிவது  போலே

குழி  விழுந்த  உன்  கன்னங்களில் ,
வைரங்கள்  மின்னுகிறதே !

என்னை  ஒரு  முறை  தொடுவாயா ???

உயிரே ...

பிறப்பு  ஒரு முறைதான் ...
நான்  பிறந்து  விட்டேன் ...
உலகில்  மனிதனாக ...

இந்த  வாழ்க்கை
வாழ்ந்து  விட  ஆசை
உன்னோடு  சேர்ந்து ...

நீ  சம்மதம்  தருவாயா ....

 என்  காதலை  ஏற்றுக்கொள்வாயா !!! ?

காதலித்து  கை  பிடிப்பாய்

என

காலமெல்லாம் காத்திருப்பேன்
« Last Edit: August 27, 2015, 11:30:13 AM by MysteRy »
By

Ungal Softy

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218360
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உண்மை காதல் ஒரு புனித தீபம்
உலகம் உள்ளவரை  அது சுடர்விடும்
என்றும் அணையாமல் .
உன்னதமான அதன் ஒளியை
மறைத்திட இயலாது எவராலும் .

உண்மை காதல்
இதமான  குரல்களில் பேசும்
உண்மை காதல்
மென்மையான காதுகளில் கேட்கும்

உண்மை காதல்
இதயங்களை வெல்லும்
உண்மை காதல்
அச்சங்களை கொல்லும்

உண்மை காதல்
எதிர்பார்ப்புகள் அற்றது
அது தான் இணைக்கும்
இதயங்களை மெல்லிய கைகளில்
ஏந்திக்கொள்ளும்
« Last Edit: August 27, 2015, 11:30:35 AM by MysteRy »