பகிர்ந்தோம்
ஆம் நாங்கள் பகிர்ந்தோம்
எங்கள் சுக துக்கங்களை,
எங்கள் துயரத்தை,
பிறர் பெற்ற சந்தோசம் ,
விளையாட்டு பொருட்களை,
விளையாடிய நேரத்தை,
நம் உடைமைகளை,
நம் உயிரை .
ஆம் நாங்கள் அனைத்தையும் பகிர்ந்தோம்.
நாங்கள் பகிர ஆரம்பித்ததோ கூட்டாஞ்சோற்றில்,
இன்று பகிர்ந்து கொண்டு இருப்பதோ அளவில்லா அன்பை.
அன்று பகிர ஆரம்பித்தது உயிர் நட்பை
என்றும் பகிர்வோம் எங்கள் உயிர்மூச்சை.
நட்பிற்காக என்றும் பகிர்வோம் உயிர் மூச்சை!
-என்றும் அன்புடன் அனானிமஸ்1989