என் அன்புத் தோழா இதோ என் கவி வரிகள்..
உனக்காக நம் நட்பின் கரங்களை இணைத்த அந்த
இனிய நினைவுகளின் சுவடுகளுக்காக..
துன்பத்தில் துவண்டு வீழ்கையில் ..
ஆறுதலாய்..!
கை கொடுத்த என் தோழனுக்காக
தடுமாறித் தலைகுனிந்த போது தாங்கித் தோள் கொடுத்த
என் தோழனுக்காக..!
என் அன்பார்ந்த நட்பின் கைகோர்த்த நினைவுகள்.,
என் கவிதைகளாய்
கண்ணீருக்கு உருவம் கொடுத்த போது.,
தோழனாய் கை நீட்டி துடைத்தவனுக்காக
என் இனிய தோழமையின்.,
நாட்களின் நினைவில்
என் நினைவின் துளிகள்..
தோழா நம்மை இணைத்த நட்பின் கரம்.,
நட்போடு நாம் இறுதி வரை இணைந்து இருக்க விடாமல்
காலம் தான் நம்மை பிரித்ததேனோ.??
வாழ்கையின் ஓட்டத்தில் இயந்திரமாய் ஓடினாலும்.,
என் தோழனே.!
உன் நினைவுகள் என்னில் ஓடாமல் இல்லை.!
நீயும் என் நினைவுகளுடனும்.,
நம் நட்பின் நினைவுகளுடனும்.,
கை கோர்த்து நடத்துக் கொண்டுதான் இருப்பாய் ..
என் தோழனே நீ எங்கே.?
இணைந்த நம் நட்பின் கரங்களை.,
காலம் விலக்கியதன் கண்ணீரின்
நினைவுச் சுவடுகளுடன்.,
தோழா உன் அன்பின் கரங்களை தேடுகிறேன்.,
என் சந்தோசத் தருணங்களில்.,
என்னை இரு மடங்கு சந்தோஷ படுத்தும் உன் நட்பிற்காக .!!
என் உயிர் தோழனுக்காக சிந்தும் கண்ணீர் துளிகள்.,
என் தோழனை பெருமைபடுத்தட்டும்.!
நான் சுவாசிக்கும் காற்றிற்கு தெரியும்.,
நம் நட்பை தான்.,
நான் சுவாசமாய் சுவாசிக்கிறேன் என்று.!!