திணிக்கப்பட்ட விதிகளின்
மௌனித்த பொழுதிது...
வரைந்த பொழுதில்
தனைமறந்த பிரம்மன்
தவறவிட்ட
தூரிகை எச்சங்களாய்
இவர்களோ !
வலு நொடித்தாலும்
தன்னம்பிக்கை தன் முதுகோடு
விதைத்த தைரியம்
மனதோடு,
வசைபாடும் சமூகத்தில்
பாசத்தால்
தம் வசமிழந்து
இரணங்களின் முடிவில்
தொடங்கும் மரணமென
இவர்கள் வாழ்வு,
என்றாலும்
அன்போடு
ஒரு கையணைக்கும்
வா
நீயும்....என் இனம் !!!