Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 068  (Read 2262 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 068
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Global Angelஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 09:32:45 PM by MysteRy »
                    

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
உனக்காக காத்திருக்கும் வேளையில் ..
உன் கம்பீரத்தை கவிதையாக வரைய எண்ணினேன்..
உனக்காக ஏங்கும் நாட்களில் ..
உன் நினைவுகளை மயில் இறகால் வருடினேன்..
இப்படி நான் உனக்காக எழுதிய கவிதைகளை..
உன்னிடம் தரவில்லை..
தருவதற்கு நீ இல்லை..
என் மணவாளனே நீ எங்கே இருகிறாய்..
என் மலர் கழுத்தில் மாலையிட.
நீ என்று வருவாயோ..


அன்று வரை
உன்னை பற்றிய என் கனவுகளையும்..
நீயும் நானும் சேர்ந்து வாழ போகும் தருணங்களின்..
இனிய முன் நினைவுகளையும்..
நான் எழுதி தீர்ப்பேன்..

அப்படி எழுதி தீர்த்த கனவுகளை ..
மயில் இறகால் வருடுவேன்..

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
யுக யுகமாய்
உன்னிடம் பரிமாறிக் கொள்வதற்காகவே
உள்ளக் கிடக்கைகளை
உதடு உளறிக் கொள்ளும் பல வேளைகளிலும்
மெல்ல துளிர்த்து
மேனியெங்கும் வியாபிக்கும்
உன் எண்ண அலைகளுக்குள்
சிக்கி மௌனிக்கிறது நெஞ்சம் .

உன் கனவுக் கலவியுடன்
கண் விளிக்கும் என் காலைகள்
ஏதோ களிப்புடன்தான் மிளிர்கிறது
கடந்து செல்லும் பால் கார சிறுவனிடம்
ஏதோ ஒரு பாசம்
உன் பெயரில் அவன் வாழ்வதனாலோ ?

கண் சிமிட்டும் கடிகார முட்கள்
காதலுடன் கூடும்
ஒவ்வொரு மணித் துளியும்
கனக்கும் உன் காதலை சுமந்து

உன் ஒரு புன்னகையில் பூத்த என் உலகம்
இதழ் உதிர்ந்து இருள் கவிந்து கொள்கிறது
நீ இல்லாத இந்த பொழுதுகளில் நுழைந்து

தினமும் ஒரு மடல் வரைகிறேன்
உன்னிடம் கொடுப்பதற்காய்
உமிழும் பேனாவின் குமிழ் முனைகளில்
ஒட்டிக் கொண்டு பிரிய மறுக்கிறது என் பிரியம்
தொலைந்த உன்னை தேடி தவிக்கிறது என் எழுத்தும்
எங்கோ நீ எழுதும் காவியத்துக்கு
இங்கே நான் முகவுரை எழுதுகின்றேன்
முடிவுரை எழுத முடிவுகள் கொண்டாலும்
உன் முகம் வந்து முழுவதுமாய் சிரிக்கும் பொழுது
முடிந்துவிடுகிறது என் முடிவின் ஆயுள் .

யுக யுகமாய் உன்னிடம் பரிமாறிக் கொள்வதற்கே
உருகி உமிழ்ந்து உரு மாறுகிறது என் நினைவுகள் ...

                    

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
அவள் எழுதிய கடிதம் !

அன்பென்னும் 
மழையில் நனையவைதாய் !
பாசம் என்னும் போர்வையாய்
என்னை அரவணைத்தாய் !

நீ என்னோடு அருகில் இருக்கும் வரை
நாட்கள் கழிவது தெரியவில்லை !
என்னை விட்டு உன் அலுவலக வேலைக்காக
பிரிந்து சென்ற நாள் !

ஒவ்வொரு நிமிடம் தனிமையில்
தவித்து போகிறேன்!
என்னோடு நீ வாழ்ந்த
நினைவுகளை எண்ணிய படியே !

பசி எடுத்தாலும் பக்கத்தில்
உன்னோடு அமர்ந்து உணவு சாப்பிட
ஞாபகங்கள் எண்ணையை
வந்து சூழ பசிமறந்து
உந்தன் நினைவில் வாடுகிறேன் ...

எங்கு பயணம்  சென்றாலும்
என்னோடு வழி துணையாய் வருவாய் !
என்கைகளை கோர்த்துக்கொண்டு ..

இன்று நான் தனியாய் சென்றாலும்
உன்னோடு கைகோர்த்து சென்ற ஞாபகம்
என்னை வாட்ட கலங்கிய படியே
இல்லம் வந்தடைகிறேன் ....


உன் குரலாவது கேட்கலாம்
என்று ஏங்கி தவித்து
 தொலைபேசியை பார்த்த படியே
நான் அமர்ந்து இருக்கும் போது ...

 தொலைபேசி மணி அடித்தால்
நீ தான்  என்று ஓடி எடுத்து
ஹலோ சொல்லுவேன் ஆசையாய்
எதிர் முனையில் நீயாய் இருப்பாய் என்று ...

உன் குரல் இல்லை என்றதும்
என் மனம் கலங்கிய படியே
வந்து அமர்வேன் !
அன்பே நீ வரும் நாள்காய்
காத்து இருக்கேன் விரைவில் வந்து விடு !
« Last Edit: May 02, 2013, 03:15:19 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
உன் பாசம் நான் உணர்ந்து ஓராயிரம்
முத்தங்கள் உன் வசம் வாங்க
 நான் காத்திருந்த வேலையில்
கலனின் கை பிடியில் நீ சிக்க
அதிசயம் ஏதும் நடக்காதா
தாயே உன்னை காண மாட்டேனோ
இன்று வரை ஏக்கத்தோடு காத்திருக்கிறேன் ...

இன்றோடு காண மாட்டேன் என்று
அறியாமல் உங்களை ஆரத்தழுவி
பிரியா விடை கொடுத்து அனுப்பிவைத்தேன்
வந்தது இறந்த செய்தி மட்டும் தான்
மன்னல்லி போட்டது நினைவில் இல்லை
அதனாலோ என்னவோ தந்தையே நீ
திரும்ப வருவாய் என்று காத்திருக்கிறேன் ...

என்கி ஏங்கியே கழிந்த நாட்பொழுதில்
 சந்தோஷம் நீ  என்று வாழ்க்கையில் வந்தவனே
உனக்காய் தினம் தினம்
ஆறடி கூந்தல் அள்ளி முடிந்து
அழகாய் பொட்டிட்டு  பூ சூடி
அளவாய்  அணிகள் அணிந்து
சீவி  சிங்காரித்து காத்திருக்கிறேன்  என்னவனே ....
எழுதுகோல் மை கொண்டு எழுதினால்
என் ஏக்கம் புரியாது என்றஞ்சி
என் கண்ணீருடன் கரைந்த கண்மை
ஊற்றி மயிற்பீலி கொண்டு எழுதுகிறேன்

உன் பார்வையை ஒரு முறை எதிர்கொண்டதில்
 தடுமாறி விழுந்துஎழுந்தேன்
ஆனால் உன்நினைவு ஏக்கத்தில் விழுந்தவள்
இன்னும் எழவே இல்லையட
பாசத்திற்காய்  ஏங்கியே
 என் வாழ்க்கை கண்ணீரில் மூழ்குதடா
விடியலாய் நீ வந்து என்னை தாங்கும்
நாளுக்காய் காத்திருக்கிறேன் வருவாயா ..


உன் அன்பிற்காக மெழுகாய்
 உருகுகிறேன் எப்போதும்
பல ஜென்மங்கள் உன்னகாகவே
 பிறக்க ஏங்குகிறேன்
வற்றாத ஜீவநதியாய் பாசத்தை அள்ளி தருபவனே
என் தாகத்தை தீர்க்க வருவாயா
தாயின் வருகைக்காகவும்
தந்தையின் வருகைக்காகவும்
ஏக்கத்தோடு  காத்திருந்தவள்   
 பசியை மறக்க வயிற்றில் ஈரத்துணி
சுற்றி படுக்கும் ஏழை போல
உன்னிடமிருந்து வராத கடிதத்திற்காய்
காத்திருக்கிறேன் அதே ஏக்கத்தோடு ...
appa amma pathi eluthinathu nejam meethi karpanaiye yaaraiyum kuripiduvana alla hahahaha nanga ellam evlo usharu
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
பூக்காரியின்
லாவகமான விரல்களை போல‌
மெல்லிய மயிலிறகால்
உன் நறுமணம் கமழும் சொற்களை
வெகு நேர்த்தியாய் கட்டிக் கொண்டிருக்கிறாய்

தூக்கனாங்குருவியின் கூட்டை போல‌
நுட்பமானதாகவும்
நுண்பின்னல்கள் உடையதாகவும்
வேலைப்பாடு மிகுந்தவையாகவும் இருக்கும்
உன் சொற்கோர்வை

பள்ளி குழந்தையின்
பஞ்சுக்கைகளிலிருந்து உயர்கிற‌
மலைகளையும் அதன் காட்டையும்
அதன் ரகசியங்களையும் அதனூடே
அரவமின்றி பாய்கிற நதிகளையும்
உன்னெழுத்துக்களின் இடுக்குகளில்
மிக சாமர்த்தியமாய் பதுக்கி வைப்பாய்

பெயரறியாத
பல பறவைகள் பறப்பதாகவும்
வண்ண மலர்கள் பூத்திருப்பதாகவும்
ஒரு அபூர்வ நட்சத்திரத்தினொளி படர்ந்திருப்பதாகவும்
புதிர்கள் பல நிறைந்திருப்பதாகவும் இருக்கும்
உன் எழுத்தின் காடு
அதிலொரு தேவதையாக‌
நீ நடமாடி கொண்டிருப்பாய்

அதிகப்படியான ஜாக்ரதையோடு
உன் எழுத்தின் காட்டில் உலாவ‌ ஆயத்தமாகிறேன்
அதன் ஒவ்வொரு தாழ்பாளையும் திறந்து
தேட காத்திருக்கிறேன்
ஏதேனும் ஒரு சொல்லில் எனக்கான‌
அழைப்பு இருக்க கூடுமென‌
அன்புடன் ஆதி

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உன் பார்வை என்னும் மழையில்
வாழ்ந்திருந்தேன் பெண்ணே....!!
வறண்டு கிடக்கிறது என் வாழ்க்கை
இப்போது எப்போது பொழிவாயோ
மீண்டும் உன் பார்வை மழையை

என்னும் தேடலை நோக்கி செல்கிறேன்.
என் கால சுவடுகளில்
உன் தேடல் சுவடுகளே
சுகமளிக்கின்றன....!!

சிரிப்பில் என்னை ஆயுள் கைதியாக்கி,,,
சிதைத்து எடுத்து சென்றாயே
என்னை உன்னுடனே...

பெண்ணே இறைவன் கூட
அர்த்தநாதியாய் தான் திகழ்கிறான்.
ஆனால் என்னில் நீ பாதி அல்ல
என்னுள் முழுதுமாய் நின்றவளே..
களவு செய்யாதே என் வாழ்கையை

உன்னை தேடி தேடி கண்ணாமூச்சி ஆட்டத்தினால்
இருண்டு கிடக்கிறது என் இதய வாசல்
என் தேகம் சுருங்கினும்
என் தேடல் நிற்காது பெண்ணே 
காலங்கள் கடந்து தேடும் நேரத்தில்
என் தேடலை காகிதத்தில் எழுதினேன்
என் தேடலின் முடிவில்
நீ படிப்பாய் என்று எண்ணி....!!!

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline jammu

உன் உருவின் புறவெளியும் …!
உன் மனதின் உள் வெளியும் வெறுமையாய்…!
இல்லை இல்லை வெண்மையாய் ..!

உன் மனதை பிரதிபலிக்கும் வெண்ணிறக் காகிதம் தனில் …!
மென்மையின் உருவான மயிலிறகு கொண்டு …!
அதனினும் அழகான பொன் நிற விரல்கள் ..!
எதை எழுதுகின்றன ..?..!

என்றோ ஒன்றாய் உடனிருந்து …!
இன்று எங்கோ இருக்கும் தோழிக்கு மடலா ?..!
அல்லது தங்கையின் திருமணத்திற்கென …!
தங்கம் சேர்க்க திரை கடல் ஓடிய ..!
தமையனுக்கு மடலா ..?..!

உயர் கல்விக்கென தொலைவில் …
இருக்கும் தம்பிக்கு மடலா..?..!
உன் கண்ணில் ஏக்கம் தெரிய ...!

அந்த ஏக்கத்தின் பிரதிபலிப்பாய்…!
எழுத்துக்களை ஒரு கை வரைய …

மறு கை ஏனடி உன் கன்னத்தை தாங்குகிறது..!
காற்றோ முத்தமிட முடியாமல் ஏங்குகிறது ..!

உன் ஏக்கத்தின் மர்மம் யார் அறியார் ..!
உன் எழுத்தின் வடிவம் நான் அறியேன் ..!
உன் மாமனுக்குத் தெரியட்டும் ..!
மடலின் மர்மம் ..!

மடலை மடித்து மனதோடு …
வைத்துக் கொள் ...!
அது கொண்டு சேர்க்கும் …
உன் மாமனிடம் ..!

பிறரிடம் மாட்டிக் கொண்டால் …
மனம் நோகும்..!
Jamal

Offline jagu


என்னவள் எனக்கென எழுதுகிறாள்
அவள் இதயத்தின் உணர்வுகளை விழிகளே வெளிப்படுத்திவிடும் எனும்போது
விரல்களுக்கு ஏன் இந்த வீண் வேலை

என்னை எண்ணி எழுதும்போது
எச்சரிக்கையாய் இரு
என் ஏக்கத்தால் காகிதம் எரிந்திட போகிறது

நீ எழுதும்...
இல்லை இல்லை
வரையும் கடிதத்தை வாசிக்க ஆவலாய் உள்ளேன்

காதல் சொல்ல தாமதிதாய்

கண்கள் சந்திக்க தாமதித்தாய்

கைகள் சேர தாமதித்தாய்

கடிதத்தையும் தாமதித்து விடாதே

காத்திருக்கிறேன் என் காதலை கண்களால் பருக 
« Last Edit: July 10, 2013, 08:06:34 PM by jagu »