இந்த பூமியே அழகாய் போனது,
உன் புன்னகை தோரனத்தால்...
உண்மைதானே..நிலவும் பூமியை சுற்றுகிறது,
பூமியில் நீ இருக்கும் காரணத்தால்.
மலர் சோலையை கடந்த காற்று வந்து போகும்
போது, தேன்மலர் வாசம் சேர்ந்து வீசுவது போல
என்னருகே.நீ வந்து பேசும் போது உன் விழிகளில்
ஏதோ ஒரு பாசம் வந்து வழியுதே.
என் இதயம் துடிக்க தான் செய்கிறது
கடிகாரம் போல் ஆனால் ஒரு வித்தியாசம்
அதில் இரு முல்களியில் ஒன்று இழந்த
பின்னும் துடிக்க தான் செய்கிறது
என் மீது உள்ள காதலாள் என் இதயம்
தனிமையின் நடை பயணம்
சிரிக்காத வானம் தலை துவட்டாத மரங்கள்
பூப்படையாத பூக்கள் கண்விழிக்காத காலநிலை
கருவிற்குள் காலைநேரம் கரு பிரசவிக்க சில மணித்துளிகள்
என் கையினுள் சிறைபட்ட உன் கை எனக்கு துணை நீயாக
உனக்கு துணை நானாக நமக்கு துணையை இயற்கை
உன்னோடு நடை பயணம் தென்றலுக்கும் இடமளிக்காத நெருக்கம்
உறைய வைக்கும் பனி மழையில் இருவர் சுவாச சூட்டிலும் சுகம்
கண்கள் மட்டுமே பேசிக்கொள்ள உதடுகள் உறவாடி கொள்ள
உன்னோடு நடை பயணம் நம்மோடு நம் காதல் பயணம்
இது ஒன்று போதும் உன் மடியில் என் சுவாசம் சுருங்க
நிலைகள் தடுமாறினாலும் நெஞ்சில் நீ வேண்டும்...
உன்கண் சிமிட்டல் நேரங்களில்
கார்த்திகையும் மார்கழியும்
தானாய் கடந்துவிடாதா
பிறை பிறக்கும் முன்னே
நீ பிறந்தாயோ அதனால்தான்
பிறைகூட போட்டியிட்டு
தோற்று போய் தேய்கிறதோ
இரவு கூட பிறந்துவிடும்
எத்தனை முறை வேண்டுமானாலும்
நீ வெட்கம்கொண்ட நிமிடத்திலே
வெயிலும் மறைந்துவிடுகிறதே
கால்கொண்டு விதைக்கிறாயா
காதல்பூ விதைகளை
எத்திவைக்கும் அடிகளிலே
எப்படித்தான் காய்க்கிறதோ பூக்கிறதோ,,,
கொடைக்கானல் பருவக்காற்றும்
பொறாமைக்கொண்டு விலகிவிடாதா
உன் கோடைக்கால வரவைக்கண்டு
கொத்துக்கொத்தாய் திராட்சையும்
போதையூறி விழுந்துவிடாதா,,,
நீ எட்டிப்பார்க்கும் அழகைக்கண்டு
இருக்கின்ற நாளெல்லாம்
பொறாமைக்கொண்டு ஓடிவிடாதா
உன்பிறந்த நாளில் உன்னைக்கண்டு,,,
நீ ஜனித்தபொழுதே
தீர்மானித்துவிட்டாயா,,,
பிரம்மனை தோற்கடித்துவிட
எத்தனையோ ராமன்களுமல்லவா
இங்கே தசாவதாரம் வேண்டி மரிக்கிறார்கள்
சத்தியமாய் சொல்வதென்றால்
நீ பார்க்கும் அந்த நொடி,,,,!!
நிச்சயமாய் வேண்டுமடி