உன் புன்னகை நிலவோ
அலை போல் பொங்குது மனம்
உன் புன்னகையின் மலர்ச்சியில்
வாடித் தெரிந்தன மலர்கள்
உன் புன்னகையில் தான்
எனக்கு உலகம் ஒளிர்கிறது
உன் புன்னகையின் வாசம்
எவர் மனதினையும் மயக்கும்
பூக்கள் கூட தோற்று போகும்
உன் பூ போன்ற புன்னைகையால்
கல் நெஞ்சம் கூட பஞ்சாய் மாறும்
உன் விரல்கள் தீண்டினால்
இருள் கூட ஓளி பெறும்
நீ உன் கண்களை திறந்தால்
இன்னிசை கூட சலித்து போகும்
உன் மழலை சிரிப்பை கேட்ட
சத்தம் கேட்டே ஓடிவந்தேன்
சதங்கை அறுந்து சிதறியதோ
நித்தம் உனக்கே இதேவேலை
நினைத்தால் கோபம் வந்துவிடும்
பித்தம் பிடிக்கக் கைஓங்கிப்
பின்னே உணர்ந்தேன் சத்தமெலாம்
சித்தம் குளிரும் உன்சிரிப்பே
சிந்தை குளிர வைத்ததடி