வா! மகனே !வா !
வாழ்க்கைக் கலையை
நாம் இருவருமே
சேர்ந்து கற்கலாம்
விஞ்ஞானம் மெய்ப்பிக்கா
விஷயங்கள் பொய்யென்று
விடியலை பழிக்கின்ற விந்தை
உலகமிது.ஒன்றை நாம் உணரவேண்டும்
மரணத்தின் சந்தோசமும்
முதுமையின் மகிழ்ச்சியும்
ஆன்மீகம் மட்டும் தான் உறுதிசெய்யும்.
இது என் அப்பாவின் வழியாய்
நான் அறிந்த உண்மை
கண்களுக்கு வெளியே
நிகழ்வது எல்லாம்
நிஜமும் அல்ல.
இமைகளுக்கு பின்னல்
கனவுத் திரையில் காண்பது
எல்லாம்பொய்யும் அல்ல .
வாழ்வு பொய்யென்று
வாழும் மனிதனுக்குநாம்
வாழ்த்துப் பாடமுடியாது மகனே!
சபலம் தொடாத அன்பனை
அவலம் தொட நாம் அனுமதிக்க கூடாது
மகனே! வா! மகனே!
சிந்திக்க தெரிந்தமனிதனுக்கு வாய்த்த
சிகரம் எதுவென்றுநாம் அறியவேண்டும்.
அது இமயத்தின் முடியில் இல்லை-ஆனால்
நம் இதயத்தின் மடியில் இருக்கிறது.
ஆழ்ந்து சுவாசிப்போம் மகனே!
நீதி மொழிகள்அதிகம் வாசிப்போம்
வஞ்சகம் செய்வோரையும்வாழ்த்தி நேசிப்போம்.
எதிரி என்றாலும் புன்னகையால் வசிகரிப்போம்,
இளம் வயதினில் நீ சிறுகச்
சிறுக சேமித்த அனுபவத்தை
உன் சந்தோசத்தை என் முதுமைப்
பருவத்தில்உனக்கு பாடமாக!!!
ஆயினும் உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு நான்
கற்றுக்கொடுத்தேன் உனக்கு
வாழ்க்கை இதுதானென்று