உறவுகள் ஆயிரமிருப்பினும்
உணர்வுகளில் பிறந்து,
உயிரில் கலந்து ,
உறவுகளுக்கெல்லாம் ஒரு
உறவாய் நட்பு மட்டுமே!
காதல் போல கவிழ்ப்பது அல்ல
கரைதெரியா கடலாயினும்
கரை சேர்க்க கடற்கரையில்
கலங்கரை விளக்காய்
காலூன்றும் உறவு நட்பு!
உடன் பிறப்பாயினும், உற்றார்
உறவினராயினும், பகைவனாயினும்
ஒற்றுமை ஒன்று, குருதியின் நிறம்,
குருதியைப் போல நிறம் மாறா
நினைவு மாறா உறவு நட்பு!
சிறுவினை பெரும் பிளவுகள்
ஏற்க்கும் பட்சத்தில், பிரிவை அறியா
பாசம் மாறா, சாதி மதம் பாரா,
உண்மையான உள்ளத்தைமட்டும்
பார்க்கும் உறவு நட்பு!
நம்பிக்கையின் அடையாளம்,
நல் வழிப்பாதையின் வழிகாட்டி,
அன்பின் ஆயுதம், ஆலயம்
சென்று காணா கடவுள்,
நட்பு ஒன்றே!
ஆண்டவன் படைத்த உறவுகளுள்,
தரிகெட்டுப்போகும், முறிக்கும்
உறவுகளுள், முடிவுறா உறவாய்,
முடிந்தாலும் தொடரும் உறவாய்,
நட்பு ஒன்றே!
காதலி இறந்தால் தம்மக்கள் இறந்தார்
நானுமிரந்தேன், கேள்விப்படா ஒன்று
நண்பனிரந்தான் நானுமிரந்தேன், உயிர்
கொடுப்பது நட்பு, எடுப்பதில்லை,கொன்று
வாழும் உலகில் நின்று வாழும் ஒரே உறவு நட்பு!
பிறந்தோம் வளர்ந்தோம்,
வாழ்வே வீண்தான்,
சாதிக்க வேண்டாம், சகமனிதனும்
சாகும்வரை பேசவேண்டாமா!
நல்ல மனிதன், நல்ல நண்பன் என்று,
நட்புக்கு உதாரணமாக நம்மையும்,
நாம் சேர்க்கும் உறவையும், பிறரை
கரித்துக்கொட்டும் இவ்வுலகில்!
நல்ல நட்பை சுவாசித்து வாழு,
உனக்கென உறைவிடம் உண்டாக்கு
உன் நன்பன் இதயத்தில், அவன்
ஆறுதல் சொல்கையில் உன் கண்ணீர்கூட
தேன்சுவை கூட்டும், வெற்றியின் ஆயுதமாகும்!!!
நடப்பு இரு உடலில் வாழும் ஒரு உயிர்!!!