வியப்பாகவே உள்ளது
கணினி, சுட்டி, விசைப்பலகை
வீடியோ கேம்ஸ், கார்டூனென
சமூக வாழ்வை அறியாதக்
இக்கால குழந்தையின் உலகத்தில்
வீட்டு விலங்கினிற்கும் இடமிருப்பது
வீடியோ கேம்ஸில் இன்னொருத்தனை
ரத்தம் கொட்ட அடித்து
கோரப்பல் தெரிய வன்மத்தொடு
எக்களிக்கும் சிரிப்பிற்கும்
ஒரு வளர்ப்பு பிராணியுடன்
விளையாடி மகிழ்வதற்கும்
மிருகத்திற்கும் தெய்வதிற்கும்
உள்ள தூரமிருக்கிறது
பிற உயிரை நேசித்தலை
செல்லப்பிராணிகளின் குழைவுகள்
கற்றுத்தருகின்றன
ஒரு வீட்டுவிலங்கை பராமறிக்கும் போதும்
நம் மனசையே பராமறிக்கிறோம்
அன்பு வழங்குவதின்
அலாதியையும்
பெறுவதின் சுகத்தையும்
அதுவே நமக்கு புரிய வைக்கிறது
ஒரு பிராணியை வளர்க்கும் போது
அதுவும் பிள்ளைகளும்
நம்பத்துவங்குகிறார்கள்
இந்த உலகத்தில்
நாம் தனித்தில்லை என்று
நம் அன்பை பகிர்ந்து கொள்வதற்கும்
ஏற்றுக் கொள்வதற்கும்
இவ்வுலகத்தில் ஒரு உயிர் இருக்கிறது என்று